இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்.. நேரலையில் உயிரைவிட்ட இளைஞன்!!

பிலாஸ்பூரில்..

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. அதிக லைக்ஸ்களை வாங்கும் ஆர்வத்தில் ஆபத்தான முறையில் வீடியோ எடுக்க முயன்று அதில் மாட்டிக்கொள்கின்றனர்.

அப்போது சிலர் உயிரிழந்துவிடும் சோகமும் நிகழ்கிறது. அந்த வகையில் மாணவர்கள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ எடுக்க முயன்றபோது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள கல்லூரியின் மேற்கூரையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்துள்ளனர். அப்போது 20 வயது மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அதாவது 20 அடி உயரமுடைய மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்தார்.

தலையில் காயமடைந்த அவரை நண்பர்கள் மருத்துவமனை தூக்கிச்சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதக மருத்துவர்கள் கூறினர். அந்த இளைஞரின் கடைசி நிமிடங்களின் வீடியோ அவரது நண்பரின் மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்டது. அந்த காட்சிகள் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் உயிரிழப்பை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி சந்தோஷ் சிங் தனது ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்து, எப்போதும் விழிப்பு உணர்வு அவசியம், என்று பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன்.. கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!!

கள்ளக்குறிச்சியில்..

உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார்.

அவரது மகன் பிரவீனுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பதே ராஜேந்திரனின் கடைசி ஆசையாக இருந்தது. அதேபோல், ஊர் மக்கள், சொந்தபந்தங்கள் முன்னிலையில் வரும் 27-ஆம் திகதி பிரவீனுக்கு சிறப்பாக திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு முன்பே ராஜேந்திரன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, உறவினர்களிடமும், மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் பேசி, தனது தந்தையின் இறப்பை அபசகுனமாக நினைக்கவேண்டாம்.

அவர் ஆசைப்பட்டபடி தனது திருமணத்தை அவரது ஆசிர்வாதத்துடன் அவரது முன்னிலையிலேயே நடந்த விருப்பப்படுவதாக பிரவீன் கேட்டுக்கொண்டார். நிலைமையை புரிந்துகொண்ட பிரவீனின் உறவினர்கள் மற்றும் நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் எந்தவித தடையும் தெரிவிக்காமல் இந்த திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, பிரவீன் தனது தந்தையை அடக்கம் செய்வதற்ககு முன், அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்று, தாலியை அவரது கையில் தொட்டு எடுத்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சொர்ணமால்யாவின் கழுத்தில் கட்டி திருமணம் செய்துகொண்டார். அவருக்கு உறவினர்கள் அனைவரும் உறுதுணையாய் நின்றுள்ளனர்.

ராஜேந்திரனின் மரணத்தை அனுசரிப்பதா, பிரவீனின் திருமணம் தடையில்லாமல் நடந்ததை நினைத்து சந்தோசப்படுவதா என இரண்டு வெவ்வேறு உணர்ச்சியுடன் அங்கிருந்தவர்கள் காணப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைலாகி வைரலாகிவருகிறது.

திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்.. குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள்!!

பீகாரில்..

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மது அருந்திவிட்டு அடுத்த நாள் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்லாமல் போதையில் படுத்து உறங்கியுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் சுயநினைவு திரும்பி மணமகன் வீட்டிற்கு வந்த போது, மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். தனது சொந்த பொறுப்புகளை கூட உணராத ஒரு மனிதனுடன் தனது வாழ்க்கையை நடத்த முடியாது என்று மணமகள் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணத்திற்கு செலவழித்த பணத்தை உடனடியாக திருப்பி தரும்படி மணமகன் வீட்டாரிடம் பெண் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் திருமணத்திற்கு மணமகன் உரிய நேரத்தில் வரவில்லை என்றதும்,

மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் உறவினர்களை சிறைப்பிடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பதுளையில் கோர விபத்து : ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!

பதுளையில்..

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20.03.2023) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல தரப்பிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்!!

டொலர்கள்..

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் திட்டத்திற்கு நேற்றிரவு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது இலங்கைக்கு ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம்ரூபவ் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி வசதியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும்.

சர்வதேச நாணய நிதியம் மேறகொண்ட தீர்மானத்தை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று காலை 8.30இற்கு ஆரம்பமாகும்.

அந்த நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூவர் வரும் இலங்கை தூதுக்குழுவின் பிரதான அதிகாரி மசஹிரோ நோசாக்கியும் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்பார்கள்.

யாழ்ப்பாணத்தில் விபரீத முடிவெடுத்த 19 வயது யுவதி!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை, 

நேற்று(20.03.2023) பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

பெண்ணின் இதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து சாப்பிட்ட நபர்.. நெஞ்சு பதைபதைக்கும் கொடூரம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் ஓகலஹோமா மாகாணத்தில், ஒரு பெண்ணைக் கொலை செய்து, அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி, தனது சொந்த குடும்பத்திற்கே சமைத்து கொடுத்து சாப்பிடுமாறு அவர்களை வற்புறுத்தியிருக்கிறார்.

44 வயதான லாரன்ஸ் பால் ஆண்டர்சன் கடந்த சில வருடங்களுக்கு முன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தான்.

2021ல் சிறையிலிருந்து வெளியே வந்த ஆண்டர்சன், ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப்பின் என்ற பெண்ணை கொலை செய்து அந்த பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.

அதனை அப்பெண்ணின் உறவினரான மாமாவின் வீட்டுக்கு சென்று உருளைக்கிழங்கு கறியுடன் சேர்த்து சமைத்துள்ளான். அதனை அப்பெண்ணின் மாமா, அத்தை மற்றும் அவர்களின் 4 வயது பேத்தியையும் அதனை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இறுதியில் தம்பதியினரையும், அவர்களது 4 வயது பேத்தியையும் கொலை செய்துவிட்டான். இதன் பிறகு ஆண்டர்சன் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தான்.

இச்சம்பவம் குறித்த விசாரணையில் ஆண்டர்சன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இதனால் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஆண்டர்சனின் அத்தை குடும்பத்தினர் ஓக்லஹோமா ஆளுநர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.


ஓக்லஹோமாவின் ஆளுநர் கெவின் ஸ்டிட் ஆண்டர்சனை விடுதலை செய்த ஒப்புதல் செய்த போது, அவர் 20 ஆண்டு சிறைத்தண்டனையை வெறும் மூன்றாண்டுகள் மட்டுமே அனுபவித்துஇருந்ததாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிய குற்றங்களை செய்தவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் இருந்தது. அந்த பட்டியலில் தவறுதலாக ஆண்டர்சன் பெயரும் இடம்பெற்று விட்டது. ஆனால் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டார் என இறுதிக்க் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த மனைவிக்கு கோயில் கட்டி தினந்தோறும் வழிபடும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவரும் திருமணம் செய்து 35 ஆண்டுகள் பெரியளவில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணி – ஈஸ்வரி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி திடீரென காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணி மிகுந்த வேதனையடைந்தார்.

அவர் உயிரிழந்த நாளன்று கணவர் சுப்பிரமணி கதறிஅழுததை பார்த்து மக்கள் பெரும் வேதனை அடைந்தனர். மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த நிலையில், அவர் உயிரிழந்தை சுப்பிரமணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், அவருக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் மனைவிக்கு கோவில் கட்ட முடிவுசெயதார். அதன்படி, 15 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவி அவருக்கு கோயில் கட்டி வணங்கி வருகிறார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

கோயிலில் உள்ள மனைவிக்கு சிலையை விவசாயி சுப்பிரமணி தினமும் வணங்கி வருகிறார். மார்ச் 31ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.

உலகின் குறைந்த உயரமுள்ள பாடிபில்டர்.. கின்னஸ் சாதனை படைத்தவருக்கு திருமணம்!!

கின்னஸ்..

உலகின் மிகக் குறைந்த உயரமுள்ள ஒருவர் பாடிபில்டராக கின்னஸ் சாதனை பெற்ற நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு உலகில் மிகக் குறைந்த உயரத்தை கொண்ட பிரதிக் மோஹிதே என்பவர் பாடிபில்டருக்கான கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். இந்த கின்னஸ் சாதனைக்காக அவர் பல ஆண்டுகள் கடுமையாக உடற்பயிற்சி செய்து உழைத்தார் என்பதும் அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் தான் கின்னஸ் சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 அடி 4 அங்குலம் உயரம் மட்டுமே இருந்த மோஹித் தனது நெருங்கிய உறவினர்களாலே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நிலையில், அவர் இந்த உலகில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அப்போதுதான் அவர் பாடிபில்டர் ஆக முடிவு செய்தார்.

தனது உடல் அமைப்பை தகுந்த பயிற்சியாளர்களின் அறிவுரையை கேட்டு மாற்ற தொடங்கினார் என்பதும் அவர் தனது உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்காகவே அதிக செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனம் தளராமல் அவர் தனது உயரத்தையே பாசிட்டிவாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்த அவர் கடுமையாக பல ஆண்டுகள் உழைத்தார். உள்ளூர் பாடிபில்டர் போட்டிகள் மற்றும் தேசிய அளவில் நடந்த பாடிபில்டர் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றார்.

அப்போது அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு ஆதரவாகவும் நிதி உதவி செய்தனர். இது குறித்து மோஹித் கூறிய போது ’என் குடும்பம் என்னை பற்றி மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் நினைத்தது.

எனது நண்பர்கள் எனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தனர். அவர்களால் தான் என்னால் இந்த கின்னஸ் சாதனையை செய்ய முடிந்தது என்று கூறினார். 2021 ஆம் ஆண்டின் உலகின் மிக குறைந்த எடையக்கூடிய பாடிபில்டர் என்ற கின்னஸ் சாதனையை அவர் பெற்ற போது அவரது ஊரில் உள்ள அனைவருமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கின்னஸ் சாதனை என்பது தனது இலக்காக இருந்தது என்றாலும் இவ்வளவு விரைவில் தனக்கு இந்த கௌரவம் கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் என் வாழ்க்கையில் இதை நான் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் விண்ண சாதனை பெற்ற அவருக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. மணமகளும் கிட்டத்தட்ட அதே உயரத்தில் இருக்கும் நிலையில் இருவருக்கும் நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கோர விபத்தில் தமிழ் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலி!!

பரணிதரன்..

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20.03.2023) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார்.

பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு இதே நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலித்த சித்தப்பா.. ஏற்காத மகள்.. வெட்டிக் கொன்றுவிட்டு தானும் விபரீத முடிவெடுத்த கொடூரம்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் மயிலாடிக்காடு கிராமத்தில், மகள் முறை கொண்ட கல்லூரி மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால் அந்த மாணவியை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி அவரது உறவினராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளவாய்பட்டி அருகே உள்ள மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான துரைக்கண்ணு என்ற 35 வயது வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். துரைக்கண்ணுவுக்கு, பவித்ராவை விட 15 வயது அதிகம். மேலும், துரைக்கண்ணுவுக்கு பவித்ரா, மகள் முறை வேண்டுமாம்.

சித்தப்பா முறை பவித்ராவிடம் துரைக்கண்ணு தனது காதலைச் சொன்ன நிலையில் அவர் ஏற்கவில்லை. சித்தப்பா முறை கொண்ட வாலிபரை காதலிக்க பவித்ரா விரும்பவில்லை. ஆனாலும், விடாமல் பலமுறை பவித்ராவிடம், தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார் துரைக்கண்ணு.

ஆனாலும், பவித்ரா முடியவே முடியாது என மறுத்துள்ளார். கழுத்தை அறுத்து கொலை தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடந்த சில நாட்களாக கடும் விரக்தியில் இருந்து வந்துள்ளார் துரைக்கண்ணு.

இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்குச் சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது வீட்டுக்குச் சென்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விசாரணை இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்.. சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி!!

பெங்களூருவில்..

படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான் பல மாணவர்களின் கனவாக இருக்கும். ஆனால், புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் வெற்றியும் பெறும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதிய பாதைகளை தேர்ந்தெடுப்பவர்கள் அதில் காத்திருக்கும் சவால்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக தங்களுடைய திறமையையும், விடா முயற்சியையும் மூலதனமாக வைத்து ரிஸ்க் எடுப்பவர்கள் நிச்சயம் வெற்றிக்கொடி கட்டியிருக்கிறார்கள்.

அப்படியானவர்களில் ஒருவர் தான் வீர் சிங் மற்றும் அவருடைய மனைவி நிதி சிங். ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் வீர் சிங். பிடெக் பிரிவில் பயோடெக்னாலஜி படிப்பை முடித்த இவர் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் லைப் சயின்சஸில் எம்டெக் படிப்பை முடித்தார்.

தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் சைன்டிஸ்ட்டாக வீர் சிங் பணியில் சேர்ந்திருக்கிறார். நல்ல ஊதியமும் கிடைத்த நிலையில் தனது நீண்ட நாள் தோழி நிதி சிங்கை கரம் பிடித்திருக்கிறார் வீர். நிதி சிங்கும் நல்ல ஊதியத்தில் பணியில் இருந்து வந்திருக்கிறார்.

வீர் சிங்கிற்கு நீண்ட நாட்களாகவே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.. இதனை தனது மனைவியிடமும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நிறைய விவாதங்கள் நடத்தி, அதுகுறித்து ஆய்வு செய்திருக்கின்றனர் இருவரும்.

அதன் பிறகு, வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக சமோசா கடை ஒன்றை திறப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களுக்கு விருப்ப உணவாக சமோசா இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருக்கிறார் வீர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டியில் சிறிய கடையில் வியாபாரத்தை துவங்கியுள்ளனர். அதன்பிறகு கடையை விரிவுபடுத்த நினைத்த இந்த தம்பதி தங்களுக்கு சொந்தமான பிளாட்டை விற்று, அதன்மூலம் தங்களது கனவை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் மாதத்திற்கு 45 கோடி ரூபாய் வரை இந்த தம்பதி சம்பாதித்து வருகின்றனர். அதாவது ஒருநாளைக்கு தோராயமாக 12 லட்ச ரூபாய் வரையிலும் கிடைக்கிறதாம். மாதம் தோறும் 30 ஆயிரம் சமோசாக்களை இந்த தம்பதியினர் விற்பனை செய்து வருகின்றனர்.

இவர்களுடைய இந்த தொழிலில் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விடாமுயற்சியும் சரியான திட்டமும் இருந்தால் நிச்சயமாக வெற்றிபெறலாம் என்பதை வீர் மற்றும் நிதி மீண்டும் இந்த உலகத்திற்கு நிரூபித்திருக்கின்றனர்.

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கொ.லை செ.ய்த திருநங்கை.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் வேலை செய்து வரும் பரமேஸ்வரியும் அஞ்சலியும் நெருங்கிய தோழிகள் ஆவர்.

இதனிடையே, பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி (22) என்ற திருநங்கை சகோதரி இருக்கிறார். பரமேஸ்வரியை பார்க்க அஞ்சலி அடிக்கடி அவரது அறைக்கு செல்லும் போது, திருநங்கை சகோதரியான மகேஸ்வரியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில், மகேஸ்வரியும், அஞ்சலியும் நெருங்கி பழக தொடங்கினர். மகேஸ்வரியுடன் இருப்பதற்காக அஞ்சலி, தான் தங்கியிருந்த விடுதியை காலி செய்துவிட்டு, பரமேஸ்வரி, மகேஸ்வரி தங்கியுள்ள வீட்டுக்கு குடியேறினார்.

ஒரே வீட்டில் தங்கியிருந்ததால் இருவருக்கும் இடையே த.கா.த உ.ற.வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக மகேஸ்வரியை விட்டு அஞ்சலி சற்று ஒதுங்கியே இருந்துள்ளார்.

இது, மகேஸ்வரிக்கு மிகுந்த கோ.ப.த்.தை ஏ.ற்படுத்தியது. அஞ்சலிக்கு வீ.ட்டில் தி.ருமண ஏ.ற்பாடு செ.ய்ததால் அ.வரை த.விர்த்ததாக கூ.றப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பரமேஸ்வரி மருத்துவமனைக்கு வே.லைக்கு செ.ன்றுள்ளார்.

மகேஸ்வரியும், அஞ்சலியும் ம.ட்டும் வீ.ட்டில் த.னியாக இ.ருந்துள்ளனர். அ.ப்போது அஞ்சலி, மகேஸ்வரி பே.சியபோது வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டது. இ.ருவரும் தி.ருமணம் செ.ய்து கொ.ள்வோம் எ.ன மகேஸ்வரி கூ.றியிருக்கிறார்.

இ.தற்கு அ.ஞ்சலி ம.றுப்பு தெ.ரிவிக்கவே இ.ருவருக்கும் இ.டையே வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்பட்டது. இ.தி.ல் இ.ரு.வ.ரு.க்.கு.ம் இ.ர.த்.த.ம் வ.ழி.ந்.த.து.

வீட்டில் இருந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த போது, இருவரும் ரத்த வெள்ளத்தில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

இ.து கு.றித்த த.கவலின் பே.ரில் போ.லீஸார் அ.ங்கு வ.ந்து இ.ருவரையும் மீ.ட்.டு ம.ருத்துவமனைக்கு கொ.ண்டு செ.ன்றனர். இ.தி.ல் ம.ருத்துவமனை செ.ல்லும் வ.ழியிலேயே அஞ்சலி உ.யி.ரி.ழந்தார். தி.ருநங்கை மகேஸ்வரி ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெ.ற்று வ.ருகிறார். அ.வரை போ.லீஸார் கை.து செ.ய்துள்ளனர்.

40 பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 19 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

வங்கதேசத்தில்..

வங்கதேசத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை வேலியை உடைத்து சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பெரிய விரைவுச் சாலையின் தண்டவாளத்தில் மோதியது.

விபத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 12 பேர் படுகாயங்களுடன் தலைநகரில் உள்ள டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரி அனோவர் ஹொசைன் வழங்கிய தகவலில், காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

பழைய மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்கள் மற்றும் சாலைகள் மற்றும் மோசமான பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் காரணமாக வங்காளதேசத்தில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்நிலையில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

காதலியைக் கொன்று விட்டு காதலனும் தற்கொலை.. திருமணத்துக்கு சம்மதிக்காததால் நடந்த பரிதாபம்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மயிலாடிக்காடு கிராமத்தை சேர்ந்த துரைக்கண்ணு (36), அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா(21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.

துரைக்கண்ணு கட்டட வேலை செய்து வந்துள்ளார், பவித்ரா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அண்ணன் – தங்கை உறவு என கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து பவித்ரா தனது காதலன் துரைக்கண்ணுவிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் துரைக்கண்ணுவால் பவித்ராவை மறக்க முடியவில்லை. அண்ணன் – தங்கை, சித்தப்பா – மகள் என்ற உறவுகளைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள்.

அதனால் வீட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று துரைக்கண்ணு அழைத்துள்ளார். இதற்கு பவித்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் பவித்ராவிற்கு உடல்நலமின்றி வீட்டில் இருந்துள்ளார்.

தன்னை சந்திக்கவில்லை, பேசவில்லை என்று மன வேதனையும் கோபமும் கொண்ட துரைக்கண்ணு, நேற்று பவித்ரா அவரது வீட்டில் தனியாக இருந்த போது துணைக்கண்ணு அங்கு சென்றுள்ளார்.

அப்போது பவித்ராவுக்கு தாலி கட்ட அதற்கு பவித்ரா மறுப்பு சொன்ன போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த அரிவாளால் பவித்ராவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

அதோடு தனது வீட்டிற்குச் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் துரைக்கண்ணு. கூலி வேலைக்குச் சென்ற பவித்ரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனால் கதறி அழுதனர்.

அங்கு விரைந்த போலீசார் பவித்ரா உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துரைக்கண்ணுவை கைது செய்ய சென்ற போது அவரும் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது.

பின்னர் அவரது உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை : 7 வயது மகனுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்..

பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி இறந்ததை தொடர்ந்து, மனமுடைந்த தாய் தனது 7 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் உப்புதராவில் உள்ள கைதபாதலில் (Kaithapathal) பிறந்து 28 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவத்தால் தாய் லிஜா (38) மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் லிஜாவையும்(Lija) பென்னையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு மற்ற குடும்ப உறுப்பினர்கள் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுள்ளனர்.

தேவாலயத்திற்கு சென்ற மற்ற உறவினர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்குள், தாய் லிஜாவும் அவரது 7 வயது மகன் பென் டாம்(Ben Tom) இருவரும் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வியாழக்கிழமை காலை லிஜாவின் குடும்பத்தினர் தேவாலயத்தில் இருந்து திரும்பி வந்த போது இருவரையும் காணவில்லை என்று தேடியுள்ளனர்.

இறுதியில் லிஜா மற்றும் மகன் பென் ஆகிய இருவரின் உடலையும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கண்டுபிடித்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து உடல்களை மீட்டனர்.

அத்துடன் பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேரள மாநிலம் இடுக்கியில் அரங்கேறியுள்ள பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த ஊர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.