6 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி.. பெற்றோர் கண் எதிரே நடந்த பரிதாபம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி அருகே உள்ள ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் மணிகண்டன். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஜஷ்வந்த் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டின் வெளியே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு பெற்றோர் வந்து பார்த்தபோது விளையாடிக் கொண்டிருந்த மகன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் தனது மகனைக் காணவில்லை என மணிகண்டன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர், வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஜஸ்வந்த் சடலமாக இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஜஷ்வந்த் விளையாடும் போது தண்ணீர் தொட்டியின் மேலே போடப்பட்டிருந்த மரப்பலகை உடைந்து உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீதியில் வெற்றிலை எச்சில் துப்பிய சாரதிக்கு இப்படி ஒரு நிலை!!

இலங்கையில்..

இலங்கையில் காணப்படும் சட்டதிட்டங்கள் மக்களால் முறையாக பின்பற்றபடுகின்றதா என்ற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

அதிலும் பாதைகளில் செல்லும் மக்கள், தமது வீட்டு குப்பைகளை கூட பாதைகளில் வீசி செல்லும் நிலைப்பாடே காணப்படுகின்றது. இதனால் வீதிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியிலே தமது பணிகளை செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு பொறுப்பற்ற தன்மையில் சாரதி ஒருவர் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதாவது லொறி ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவர் வாகனத்தை செலுத்தும் போது பாதையில் வெற்றிலை எச்சை துப்பியுள்ளார்.

இதன்போது அவ்விடத்தில் பணியில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தை நிறுத்தி வெற்றிலை எச்சில் துப்பிய சாரதியையே அந்த இடத்தை கழுவி சுத்தம் செய்ய வைத்துள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயற்பாடு வீதிகளில் இவ்வாறான அசுத்தமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கைப் பெண்.. தாயார் வெளியிட்டுள்ள தகவல்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண், தனக்கு நடந்த துன்பங்கள் அனைத்தையும் தன்னிடம் தெரிவித்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் குறி்ப்பிட்டுள்ளார்.

தனக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும், அந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாகவும், தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உயிரிழந்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று (20) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் தாயார் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுபோன்ற வன்முறை கும்பலை தான் பார்த்ததில்லை என தனது மகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மகள் பணிபுரிந்த வீட்டின் பாதுகாப்பு கமராக்களை அவதானித்து தனது பெண்ணுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தை கேட்டு அடம்பிடித்த காதலி : கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!!

கேரளாவில்..

குழந்தை கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியை கொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்துள்ள உடுமாபாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தேவிகா (34) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் இவருக்கும், போவிக்கானம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தேவிகா மற்றும் சதீஷ் இடையே இரகசிய காதல் உறவு இருந்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருப்பர். இவ்வாறே சுமார் 9 வருடங்களாக இருவரும் காதல் உறவில் இருந்துள்ளனர். இந்த சூழலில் சதீஷின் குழந்தையை தேவிகா பார்த்துள்ளார்.

குழந்தையை பார்த்ததும், தேவிகாவுக்கு சதீஷ் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். எனவே சதீஷிடம் குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் அவரது குழந்தையை தன்னிடம் கொடுக்க வேண்டும் அல்லது தனக்கு ஒரு குழந்தையை கொடு என்றும் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேவிகாவை, சதீஷ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அவர் சமாதானமாகவில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் தனியார் விடுதியில் சந்தித்து கொண்டனர். அப்போது தேவிகா மீண்டும் சதீஷிடம் குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சதீஷை தேவிகா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் நேராக அதே கத்தியை எடுத்து கொண்டு ஆவூர் காவல் நிலையத்தில் சதீஷ் சரணடைந்துள்ளார். மேலும் தான் கொலை செய்ததற்கான காரணத்தை கூறினார். இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிந்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

அதோடு தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்ட தேவிகாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

8ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. துடிதுடித்து பலியான சோகம்!!

தர்மபுரியில்..

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் அப்பகுதியில் கதிர் அடிக்கும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேத்திரெட்டிப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின், 13 வயது மகள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமி, தனது மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் தாக்கியது.

அதில் படுகாயம் அடைந்த சிறுமிக்கு அதிக ரத்தம் வெளியேறி அவர் சம்பவத்திலேயே மயங்கி விழுந்தார். சிறிறு நேரத்துக்கு பின் உறவினர்கள் சென்று பார்த்த போது சிறுமி உயிரிழந்து சடலமாக கிடந்தார். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடத்தூர் போலீசார், இறந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான கணவர்… ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி!!

சேலத்தில்..

சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35)- மணிமேகலை (27) தம்பதி வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.

ரமேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி வீட்டுக்கு மதுபோதையில் வருவதும், மனைவியுடன் தகராறு செய்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இதனிடையே, மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் கோடை விடுமுறையையொட்டி 2 குழந்தைகளும் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் ரமேஷ், மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார்.

வீட்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனைவியை தாக்கியுள்ளார். பின்னர் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசியதோடு, தாக்கியதால் மணிமேகலை ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து போதையில் இருந்த ரமேசின் தலையில் போட்டார்.

மீண்டும் அதே கல்லால் அவருடைய முகத்தில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கொலை செய்யப்பட்ட கணவரின் உடல் அருகேயே விடிய, விடிய மணிமேகலை உட்கார்ந்திருந்தார்.

பின்னர் விடிந்ததும் காலையில் நேராக காவல்நிலையம் சென்று, தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். பின்னர் ரமேஷின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக மணிமேகலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டுக்கு மது குடித்து விட்டு வரும் ரமேஷ், மனைவிக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார்.

உல்லாசத்துக்கு அழைக்கும் போது செல்லவில்லை என்றால் மனைவியை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக பேசி உள்ளார். மீண்டும் அதேபோன்று பேசியதால்தான் ஆத்திரத்தில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததாக மணிமேகலை கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை தூக்காத கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரசாத் (28) – பவானி என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. பிரசாத் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடன் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இவரும் ஊர் சுற்றிய விவகாரம் மனைவி பவானிக்கு தெரியவந்தது. இதனால் பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கணவன் – மனைவி இருவரும் ஓராண்டாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், கனவனின் கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவி பவானிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனக்கும் பிரசாத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும், தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே எங்களை ஒன்றாக வாழவிடு என்றும் பேசியுள்ளார். இதனால் மனம் உடைந்துபோன பவானி அழுதுக்கொண்டே குடும்பம் நடத்தியுள்ளார். மேலும் பவானிக்கு பிறந்த குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பின்பு பவானி அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான 3வது நாளிலேயே கணவனின் மடியில் புதுப்பெண் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்சியில்..

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (31). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரெஸ்பாகா (25) என்ற இளம்பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் பேசிமுடித்தனர்.

அதன்படி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஸ்டீபன் – ரெஸ்பாகா திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும், மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதிகள் வந்திருந்தனர்.

திருமணம் முடிந்து முதல்முறையாக பெற்றோர் வீட்டிற்கு வந்ததால் ரெஸ்பாகா உற்சாகமாக இருந்தார். விருந்து உபசரிப்பு என களைகட்டியது. இந்த விருந்திற்கு பிறகு, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல இளம் தம்பதி தயாராகினர்.

அப்போது, மகளை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுது, மகளை வழியனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர். ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் சாலையில், கார் சென்று கொண்டிருந்போது ரெஸ்பாகா திடீரென்று மயங்கி பக்கத்தில் இருந்த மாப்பிள்ளை மீது சாய்ந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக, திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரெஸ்பாகாவை அழைத்து சென்றனர். அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு புதுமாப்பிள்ளை ஸ்டீபன் பெரும் அதிர்ச்சியில் மூழ்கினார். என்ன செய்வதென்று தெரியாமல் பதறினார். பிறகு, மணப்பெண் வீட்டிற்கு தகவல் தரவும், அவர்கள் கதறிக்கொண்டே ஓடிவந்தார்கள்..

மகளை பார்த்து துடிதுடித்து அழுதனர். அவர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சென்ற போலீசார், ரெஸ்பாகாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் நடந்து 3வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விசாரணைக்கு பிறகுதான் முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.

நாட்டை வந்தடைந்தது இலங்கைப் பெண்ணின் சடலம்!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அவரது சடலம் தொடர்பில் அவசர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ்சின் பணிப்புரைக்கு அமைவாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

தங்கொடுவ – மொதெமுல்ல பிரதேசத்தில் இருந்து வெளிநாடு சென்றிருந்த 41 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தான் பணிபுரிந்த வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து வந்த பிரச்சனையால் இலங்கை செல்ல விரும்புவதாக தோழிகளிடம் ஏற்கனவே கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் கீழே விழுகின்ற காணொளி ஒன்றும் தற்போது பகிரப்பட்டு வருகின்றது

ஆசிரியரின் முகம் சுழிக்க வைக்கும் செயல் : கையும் மெய்யுமாக சிக்கினார்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு – ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றிவரும் ஆசிரியரே இவ்வாறு சிக்கியுள்ளார். அவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த தனியார் தனியார் வகுப்பில், கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் கல்வி கற்று வந்தார்.

குறித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவரை பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றபோது கையும் மெய்யுமாக அவர் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களில் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு!!

மன்னாரில்..

மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் பகுதியில் காணாமல் போன ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி, நேற்று(19.05.2023) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி நேற்று முன்தினம்(18.05.2023) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி காணாமல் போனது தொடர்பாக பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த மாணவி நேற்று(19.05.2023) மாலை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில்,புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் : சிக்கலில் பொலிஸார்!!

கொழும்பில்..

கொழும்பில் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வீடொன்றில் பணியாற்றிய நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதுக்கடை நீதிமன்றில் நடைபெற்றது. இதன் போது உயிரிழந்த பெண்ணின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டனர்.

சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் தகவல்கள் பதிவு செய்யப்படும் ஆவணத்தில் சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததா என வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

குறித்த ஆவணத்தில் சந்தேகநபரான பெண்ணின் பெயர் இருக்கவில்லை என வெலிக்கடை பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பட்டமைக்கான பதிவு இல்லையென்பதனூடாக இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தனது மனைவியின் உடலில் தாக்குதலுக்குள்ளான காயங்களே காணப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் செல்வதுரை ஜேசுராஜ் தெரிவித்துள்ளார்.

நுகேகொட பொலிஸாரினால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு பத்தாயிரம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாணவனை தாக்கி டிக்டொக்கில் காணொளி வெளியிட்டு சாகசம் காட்டிய மாணவர்கள் கைது!!

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவபுளியங்குளம் வீதியில் வைத்து ஒரு மாணவனை தலைக்கவசம், கொட்டன்தடி கொண்டு சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து ரிக்டொக்கில் சாகசம் காட்டி பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடரந்து பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் முறைப்பாடு செய்தனை தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஓர் மாணவனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதுடன், நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன் தாெடர்புடைய இன்னொரு மாணவனையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளார்கள்.

மேலும் இச் சம்பவத்தின் முக்கிய ஆதரமான காணொளியை ஆதாரமாக கொண்டு இதனுடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடும் பணியினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க இடைத் தரகர்கள் அதிகரிப்பு – 5000 ரூபாய் தொடக்கம் 25 ஆயிரம் ரூபா வரை

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க….

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

வரிசைகளில் காத்திருக்காமல் உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து 5000 ரூபாய் தொடக்கம் 25 ஆயிரம் ரூபா வரை இடைத் தரகர்கள் பெற்றுக்கின்னர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி வரிசையினை பெற்றுக்கொடுப்பதற்கு 5000 ரூபாவும் வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அறிந்திருந்தும் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படாது இருப்பது தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளமையுடன் தலமை அதிகாரிகளாவது இவ்விடயத்தில் திடீர் விஜயம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பொது மல கூடமின்மை , கடவுச்சீட்டு பெற காத்திருக்கும் இடத்தில் நிழல் தரும் வகையில் ஒரு கூடாரம் கூட இல்லை போன்ற குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

மகள் தற்கொலை செய்த நாளில் மனைவிக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ : தந்தை எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி அமல்ராஜ் (40). தச்சு தொழிலாளியான இவர், நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது சடலத்தை மீட்டு அவரது மனைவி சத்தியகலாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆண்டனி அமல்ராஜ் – சத்தியகலா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்ததாகவும், மனமுடைந்த 9-ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஸ்ரீலட்சுமி வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அன்று முதல் மன வேதனையில் இருந்து வந்த ஆண்டனி அமல்ராஜ் குடிபோதையில் தன்னிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மகள் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று கூறி வந்துள்ளார்.

தொடர்ந்து, கணவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் சத்தியகலா ஒரு வாரத்திற்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு மூத்த மகளுடன் குளச்சலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் இருந்த ஆண்டனி அமல்ராஜ், “நான் எனது மகள் சென்ற இடத்திற்கே செல்கிறேன். எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை.

எனது உடல் உறுப்புக்களை யாருக்காவது தேவைப்பட்டால் தானம் செய்யுங்கள்,” என உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்து மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

இதனால், பதறிப்போன சத்தியகலா, தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக பார்த்த போது ஆண்டனி அமல்ராஜ் வீட்டில் அறையில் உள்ள பேன் ஷூக்கில் போர்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய இரணியல் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, மனைவி சத்தியகலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆண்டனி அமல்ராஜ் மனைவிக்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதம் கழித்து அதே தேதியில் துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற பேய்… பயமுறுத்தும் காட்சி!!!

ஆவிகள்..

வேலை செய்து கொண்டிந்த பெண் ஒருவர் திடீரென இழுத்துச் செல்லும் காட்சி பார்ப்பவர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று பல இருப்பதாக கூறிவரும் நிலையில், இதனை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

இதற்கேற்ப பல காணொளிகள் இணையத்தில் உலா வருகின்றது. சினிமா காட்சிகளில் பெரும்பாலும் பேய், பிசாசு இவற்றினை காட்டுவதை பார்த்திருப்போம்.

இங்கு பெண் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த தருணத்தில் அவரை தரதரவென கண்ணுக்கு புலப்படாத அமானுஷ்யம் ஒன்று இழுத்துச் சென்றுள்ளது.

இழுத்துச் செல்லப்பட்ட அப்பெண் பயந்து நடுங்கிய நிலையில் கடகடவென ஓடி வந்துள்ளார்.