கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. கண்ணீர் விட்டழுத காட்சி!!

இலங்கையில்..

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதியினர் இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு குடும்பத்துடன் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிக்காட்டி அவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சுற்றுலா வழிகாட்டியை விட்டு பிரிய மனமில்லாத வெளிநாட்டு தம்பதியின் பிள்ளைகள் கண்ணீர் விட்டழுத காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய 25 வயது இளைஞனின் மரணம்!!

தெஹிவளையில்..

தெஹிவளையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 25 வயதான ரவிந்து சஹான் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். ரயில் பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு காத்திருந்த போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

185 ரூபாவாக குறையவுள்ள டொலர் : ஜனாதிபதி ரணிலின் முக்கிய தகவல்!!

இலங்கையில்..

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த வருடம் இலங்கை செலுத்த வேண்டிய கடனை திருப்பி செலுத்த பத்து வருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை தற்போதைய அரசாங்கத்தை சுவாசிக்க மட்டுமே அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனி திவாலான நாடாக இல்லை என்று அந்தத் தலைவர்கள் கூறுவார்கள் என்று கூறிய ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தால் கடனை மறுசீரமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வந்ததன் பின்னர் டொலரின் பெறுமதி படிப்படியாக 200 அல்லது185 ரூபாவாக குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் நிவாரணத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும், எதிர்வரும் இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை அனைவரும் காண முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கணவனை கத்தியால் குத்தி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள என்.தட்டக்கல்லை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தன் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்ததால் அடிக்கடி அவர் வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளியே செல்வது வழக்கம்.

இது ஒரு புறம் இருக்க நேற்று கந்தன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் ஒன்று இரவு நேரத்தில் திடீரென கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது கந்தன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை தூக்கிக் கொண்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி காவல் துறையினர் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையாக கந்தனின் மனைவி சந்தியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் காவல் துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. ஏனெனில் மனைவி சந்தியா அவரது கள்ளக்காதலன் சிவசக்தியுடன் சேர்ந்து கணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனை அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாக சந்தியா மற்றும் சிவசக்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கந்தன் மற்றும் சந்தியா தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் கந்தன் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விடுவார். அப்போது சந்தியா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு சிவசக்தி (23) பால் பாக்கெட் வாங்கி கொடுப்பது போல வீட்டிற்குள் நுழைந்து சந்தியாவுடன் பழகி வந்துள்ளார்.

அவர்களது இந்த பழக்கம் நாலடிவில் தவறான பழக்கமாக மாறி அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கந்தனுக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரிய வந்ததும் மனைவியை அவர் கண்டித்துள்ளார்.

ஆனாலும் அவர்களின் அந்தத் தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கந்தல் வெளியூருக்கு சரக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு செல்வதாக இருந்தது.

அதனை தன் மனைவியிடம் கூறிவிட்டு கந்தன் வெளியே சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து சந்தியாவும் சிவ சக்தியும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால் வெளியே சென்ற கந்தன் திடீரென இரவு 10 மணியளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு சந்தியா மற்றும் சிவசக்தி தனிமையில் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்த கந்தன் இருவரையும் சரமாரியாக அடித்து கண்டித்துள்ளார். அப்போது சந்தியா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கந்தன் முகத்தில் வீசியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழவே அவரை சந்தியா மற்றும் சிவசக்தி இருவரும் சேர்ந்து வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தது மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம நபர்கள் கணவனை குத்திட்டு சென்றதாக கூறி சந்தியா நாடகமாடியதும் தெரிய வந்தது. கணவனை மனைவி மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“கனவுல வந்து கழுத்துல மாலை போட்டாரு”.. குடும்பத்தினரின் ஆதரவுடன் கிருஷ்ணரை மணந்த இளம்பெண்!!

உத்தரப்பிரதேசத்தில்..

தன் மீது அதிகமாக ஒருவர் விருப்பம் கொள்ளும் சமயத்தில், அவர்கள் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அவ்வபோது இணையத்தில் வைரல் ஆவதையும் கவனித்திருப்போம்.

கடந்த ஆண்டு கூட குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து என்ற இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டிருந்தார். குடும்பத்தினர் அனைவரின் ஆதரவுடன் இந்த திருமணம் படுஜோராக நடைபெற்று இருந்தது.

இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்து தனியாக தேனிலவுக்கு ஷமா பிந்து சென்றிருந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறி இருந்தது.

இந்த நிலையில் ஏறக்குறைய அதே போல மற்றொரு நிகழ்வும் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. ஆனால் இந்த இளம் பெண், இந்துக்களின் கடவுளான கிருஷ்ணனின் சிலைக்கு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆவ்ரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷா. இவருக்கு தற்போது 30 வயதாகும் சூழலில் முதுகலை பட்டம் படித்துவிட்டு, சட்டப் படிப்புக்கான LLB படிப்பையும் படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பலருக்கும் கடவுள் மீது அதிக பிரியம் இருப்பது போல ரக்ஷாவுக்கும் சிறு வயது முதலே கிருஷ்ணன் மீது அதிகம் அன்பும், பக்தியும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வைணவ புராண கதைகளில் வரும் ஆண்டாளைப் போல கிருஷ்ணன் மீது பற்று கொண்ட ரக்ஷா அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை கடந்த ஆண்டு பெற்றோரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்ட ரக்ஷாவின் பெற்றோர், அவரை மதுராவில் உள்ள பிருந்தாவன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர் ஆகியோரின் ஏற்பாட்டின் பெயரில், உறவினர்களின் வீட்டில் வைத்து கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிந்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ரக்ஷா.

இதனைத் தொடர்ந்து, அந்த கிருஷ்ணர் சிலையுடன் தனது தாய் வீட்டிற்கும் ரக்ஷா திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இருமுறை தனது கனவில் வந்த கடவுள் கிருஷ்ணர், தனக்கு மாலை அணிவித்ததாகவும் ரக்ஷா குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அவரது குடும்பத்தினர் இதுபற்றி பேசுகையில், இந்த திருமணத்தில் அனைவரும் பங்கேற்றதாகவும் கடவுளின் பிரார்த்தனையுடன் இந்த திருமணம் நடந்தது என்றும் ரக்ஷா முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனக்கு திருமணம் நடப்பதை மறந்து தூங்கிய மணப்பெண் : தட்டி எழுப்பும் மணமகன்.. இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!!

திருமணம்..

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். பெண்ணோ மாப்பிள்ளையோ பார்த்து இரு வீட்டாரிடம் சம்மதம் கேட்டு அவர்களுக்கு நிச்சயம் செய்து இறுதியில் திருமணம் கூட்டி செல்வதே பெரும் பாடு.

இவ்வாறு பெரும்பாடுபட்டு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தால் மணவறையில் வந்து மணப்பெண் தூங்கினால் எப்படி இருக்கும். இவ்வாறு மணப்பெண் தூங்கும் வீடியோ காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த காணொளியில் திருமண மண்டபத்தில் மணமகனும் மணமகளும் அமர்ந்து சடங்கு சம்பிரதாயங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு பண்டிதரும் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்போது திருமண அசதியில் கன்னத்தில் கை வைத்தவாறு மணப்பெண் தூங்க ஆரம்பித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த பண்டிதர் மணமகனிடம் சொல்லி மணமகளை எழுப்பச் சொல்லியிருக்கிறார். அவரும் மெதுவாக சைகை காட்டி எழுப்பி இருக்கிறார்.

பிறகு மணப்பெண் கண்ணை விழித்து பார்த்ததும் சுற்றி சுற்றி பார்த்து விட்டு சிரித்திருக்கிறார். தனக்கு திருமணம் நடப்பதைக் கூட மறந்து விட்டு மணவறையில் தூங்கிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.

காதல்தோல்வியை இலாபமாக மாற்றிய இளைஞன்.. காதலி ஏமாற்றியதால் கிடைத்த ‘ஹார்ட்பிரேக் காப்பீட்டுத் தொகை’!!

ட்விட்டரில்..

காதலி ஏமாற்றிவிட்டதால் தனக்கு 25,000 ரூபாய் காப்பீட்டு தொகையாக கிடைத்ததாக இளைஞர் ஒருவர், தனது காதல் தோல்வியின் மூலம் லாபம் பார்த்த கதையை கூறி ஆச்சரியபடுத்தியுள்ளார்.

ட்விட்டரில், பிரதீக் ஆர்யன் (Prateek Aaryan) எனும் இளைஞன் தனது காதல் முறிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். காதலியை பிரிந்த பிறகு தனக்கு ரூ.25,000 கிடைத்ததாக கூறியுள்ளார்.

தனது காதலி முதலில் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தான் ‘காதல்முறிவு காப்பீட்டு நிதி’யின் கீழ் இந்தத் தொகையைப் பெற்றதாகவும் அந்த பிரதீக் கூறியுள்ளார்.

“எங்கள் உறவு தொடங்கியதும், நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டுக் கணக்கில் 500 ரூபாய் டெபாசிட் செய்ய ஆரம்பித்தோம், மேலும் யார் ஏமாற்றப்பட்டாலும் முழு பணத்தையும் எடுத்துக்கொள்வார்கள் என்று விதியை உருவாக்கினோம்.

அதற்கு ‘ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்’ (Heartbreak Insurance Fund) என்று பெயரிட்டோம்” என்று பிரதீக் தனது ட்விட்டரில் எழுதினார். பிரதீக்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானது.

8 லட்சத்துக்கும் அதிகமானோர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் மரணம் தொடர்பான உடல் பகுபாய்வு முடிவுகள் கிடைப்பதில் தாமதம்!!

பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள்..

வவுனியா, குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளின் பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் வவுனியா பொலிசார் நேற்று (18.03) தெரிவித்தனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 7 ஆம் திகதி காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை கடந்த 08 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுப்பாய்வு பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும், அது கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாகவும், குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மூன்று வீடுகளில் தொடர் திருட்டு : இருவர் மீது தாக்குதல்!!

மூன்று வீடுகளில் தொடர் திருட்டு..

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்திற்குள் நேற்று இரவு புகுந்த திருடர்கள் இன்று அதிகாலை மூன்று மணிவரையிலும் மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளிக்குளம் கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வயோதிபர் வசிக்கும் வீடு ஒன்றிற்குள் உருமறைப்புச் செய்துகொண்டு உள் நுழைந்த திருடர்கள் சிலர் காதில் அணிந்திருந்த காதணியை கழற்றித்தருமாறு அச்சுறுத்தி பறித்துக்கொண்டு,

அருகில் இருந்த வீட்டிற்குள் குறித்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு அவரின் குரலில் வீட்டில் வசித்தவர்களை அழைத்துள்ளனர். கதவைத் திறந்தபோது அவ்வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அவர்கள் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க நகைகளையும்,

பதினெட்டாயிரம் ரூபா பணம் என்பனவற்றை திருடிக்கொண்டு சற்றுத் தொலைவிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த இரு சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர்களின் வீட்டிலும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இரண்டாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது மாமடு பொலிசாருக்கு கிராம மக்களினால் அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்திற்குப் பொலிசார் வருகை தரவில்லை.

அதிகாலை மூன்றாவது வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று இரு சகோதரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றபோது கிராம மக்கள் 119 க்கு அழைப்பு ஏற்படுத்தி முறையிட்ட பின்னரே இன்று அதிகாலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் காயமடைந்த இருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகளிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின்போது,

திருடப்பட்ட தங்க நகைகளின் விபரம் சரியான மதிப்பீடு செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை!!

பெங்களூரூவில்..

பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா. இவர் ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்த்து வந்தார்.

பெற்றோருடன் வசித்து வந்தாலும், அவர்களை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால், ஆஷாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வயதானவர்கள் என்று கூட பாராமல் ஆஷா, தனது பெற்றோரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல தனது தந்தை ரமேஷுடன் சண்டையிட்டு விட்டு இரவில் தனது ரூமில் ஆஷா உறங்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர்களது பெற்றோரும் போலீஸில் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஆஷா உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஆஷாவை, இரவு தூஙகும் போது அவரது தந்தை ரமேஷ் விறகு கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அவரும் ஒப்புக்கொண்டார். பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணத்தில் புதிய திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

கண்டியில்..

கண்டி- அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்.

அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மோப்ப நாய் ´ஏகல்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார்.

இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் அம்பலம்!!

இலங்கையில்..

இலங்கையில் சுமார் 10 நாட்களாக அதிகரித்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த நாட்களாக டுபாய் சந்தையில் தங்கத்தின் விலை திடீரென குறைந்ததன் காரணமாக இலங்கையில் உள்ள வர்த்தகர்கள் அதிகப்படியான டொலர்களை டுபாய் தங்கத்தை கொள்வனவு செய்ய பயன்படுத்தியமையே அதற்கு காரணம் என கொழும்பு பரிவர்த்தனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் டொலருக்கான தேவை குறைந்ததன் காரணமாக சந்தையில் மாதாந்த டொலர்களின் இருப்பு 300 மில்லியன் டொலர்களை நெருங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் டொலருக்கான தேவை குறைந்து காணப்பட்டிருந்தது.

வீழ்ச்சியடைந்ததாலும், தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்து இந்திய சந்தையில் அதிக விலைக்கு விற்கும் வாய்ப்பு ஏற்பட்டதாலும் திடீரென டொலருக்கு மீண்டும் அதிக தேவை உருவானது. இதனால் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியுள்ளதாக பரிவர்த்தனை சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் 14 வயது சிறுமியை தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியைப் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து தனியே அழைத்துச் சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (18.03.2023) தெல்லிப்பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலைக்குச் செல்ல முற்பட்டபோது குறித்த இளைஞன், சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்குப் பகுதிக்குச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினர், சிறுமியை மீட்டுள்ளதுடன் இளைஞனைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது,

வவுனியா குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு : உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்ட பதில் நீதிபதி!!

வவுனியா குளத்தில் இருந்து..

வவுனியா, குடியிருப்பு குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த குளப்பகுதி ஊடாக இன்று (19.03) காலை பயணித்த நபரொருவர் குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில்,

வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், வவுனியா பதில் நீதவான் தி.திருவருள் மற்றும் பதில் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவித்துள்ள பொலிசார், அம்மா என பச்சை குத்தியுள்ளதுடன், கழுத்தில் சிவப்பு நூலும், கையில் ஆலய நூலும் அணிந்துள்ளதுடன்,

ஒரு கையில் நீல நிற இறப்பர் பட்டி ஒன்றும் அணிந்துள்ளார். இறந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா குளத்தில் மிதந்த சடலம் மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

குளத்தில் மிதந்த சடலம்..

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19.03.2023) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

தடம் மாறிய காதல்… நடு வீதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்.. அதிர வைத்த காதலன்!!

விழுப்புரத்தில்..

இது ஒரு தலை காதல் எல்லாம் கிடையாது சார்… ரெண்டு பேருமே தான் காதலிச்சாங்க… ஒரு தலைக் காதல்ன்னா எந்த லூசு சார் பொண்ணோட பேர உடம்புல பச்சக்குத்திப்பான்’ என்று அதிர வைக்கிறார்கள் அந்த பகுதியில் இருப்பவர்கள். தரணியும், கணேஷூம் காதலித்து வந்தனர்.

இடையில் கணேஷின் நடவடிக்கைப் பிடிக்காததாலோ வேறு காரணங்களினாலோ காதலைக் கை கழுவியிருக்கிறார் தரணி. பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம் சார். ஆனா… ஆம்பிளை மனசு அப்படி ஏத்துக்காது என்கிறார்கள் கணேஷின் நண்பர்கள்.

காதலித்தவர் திடீரென வேண்டாம் என சொல்லி விட்டாலோ, பெண்.. காதலிக்க மறுத்தாலோ உடனடியாக அதிரடி வன்முறையில் இறங்கி விடுகிறது இன்றைய இளைய சமுதாயம்.

காதலை ஏத்துக்கலைன்னா யாருக்குமே கிடைக்க கூடாது… அவளை ரயிலில் தள்ளி கொலை செய், உடலை கூறு போட்டு நாய்களுக்கு வீசி எறி, விஷம் வைத்து கொல் என கோதாவில் இறங்கி வன்மத்தை விஷமாக கக்குகிறது.

இது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும் வன்முறை கலாச்சாரம் தொடர்வதை தடுக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ராதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுகன்.

இவருடைய மகள் 19 வயது தரணி. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த போது, மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்து விட்டுத் தப்பி சென்று விட்டார்.

தரணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள், வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்ட மர்ம நபரையும் தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், 25 வயதான கணேஷ் என்ற இளைஞர் தரணியை காதலித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானதால் அவருடனான பேச்சை தரணி குறைத்துக் கொண்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கணேஷ் தரணியை கொலைசெய்து இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த கணேஷை காவல்துறை 2 மணி நேரத்தில் சுற்றி வளைத்து கைது செய்தது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.