அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக இலங்கையின் மூத்த வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புள்ளியியல் பணியகத்தின் தகவலுக்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சமூகத்தின் விவாகரத்து விகிதம் சுமார் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு வீட்டு வன்முறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவாகரத்திலிருந்து எழும் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால், அவுஸ்திரேலிய சட்டத்தின்படி, அதிக தேவை உள்ள நபருக்கு அதிக பங்களிப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Dependent விசாவில் வரும் மாணவர்களின் விவாகரத்தில் எழும் விசா பிரச்சினைகள் ஏற்பட்டால், பெரும்பாலும் Dependent நீக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் வாழ எந்த தகுதியும் இல்லாத ஒரு Dependent விசா பெறுவது மிகவும் கடினம் என வழக்கறிஞர் திலங்கா பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தொழில்முறை தகுதிகள் இருந்தால், விசா கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

விவாகரத்து மகிழ்ச்சியை தரும் முடிவு அல்ல என்பதால், தீர்வு இல்லையென்றால் மட்டுமே விவாகரத்தை நாட வேண்டும் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நுவரெலியாவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!!

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து, நேற்றையதினம்(29.07.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஊவாக்கலையிலிருந்து மெரயா பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தைகள் மீது துஷ்பிரயோகம் : இந்திய வம்சாவளி துணை விமானி கைது!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பகவாகர், மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்த டெல்டா போயிங் விமானத்தின் விமானி அறையில் இருந்து, விமானம் தரையிறங்கிய பின்னர் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க பொலிஸார் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றச்சாட்டு தொடர்பான தடையுத்தரமான ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுவதன் அடிப்படையில், அதிகாரிகள் நேரடியாக விமானத்துக்குள் சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இவ்விசாரணை மற்றும் கைது சம்பவம் குறித்து, டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பகவாகர் மீது தொடரும் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கக்கூடியவை. அவர் தற்போது பணியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் விமானியர்கள், விமானப்பயணிகள் மற்றும் விமானப் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தவறான முடிவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உயிரை மாய்த்துக்கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

வாழ்க்கையில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வு உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. எனவே, உயிரை மாய்த்துக்கொள்ள நினைப்பவர்கள் உடனடியாக மனநல வைத்தியர்களை நாடுவது அவசியமாகும்.

மன ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயலும் நபர்கள் தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மனநல நோய்க்கான விசேட வைத்திய நிபுணர் வின்தியா விஜயபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

வட்ஸ்அப் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது தொடர்பான மோசடி பரிவர்த்தனைகள் குறித்து அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக குற்றப் புலனாய்வுத் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், இந்த மோசடி செய்பவர்கள் பயனரை ஏமாற்றி அவர்களின் வாட்ஸ்அப் OTP எண்ணைப் பெறுகிறார்கள்.

பின்னர் மோசடி செய்பவர்கள் அந்தக் கணக்கைக் கைப்பற்றி, பயனரின் கணக்கில் உள்ளவர்களுக்கு போலி செய்திகளை அனுப்பி பணத்தை மோசடி செய்கின்றமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் ஆன்லைன் கணக்குகளின் OTP எண்களை வேறு யாருக்கும் வழங்க வேண்டாம் என்று பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

ஜப்பானை தாக்கிய சுனாமி : பலித்தது பாபா வாங்காவின் கணிப்பு!!

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய மங்காவில் செய்யப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் கணிப்பு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளை அடைந்த சுனாமி அலைகளைத் தூண்டியது, புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி ஜூலை 2025 இல் ஒரு பேரழிவு

குறித்து எச்சரித்ததாக மக்கள் சுட்டிக்காட்டிய சில வாரங்களுக்குப் பிறகு இன்று ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளமை அவரது கணிப்பை உண்மையாக்கியுள்ளது.

பூகம்பம் பற்றிய செய்தி பரவியதும், 1999 இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட தட்சுகியின் மங்கா வதாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) மீது கவனம் திரும்பியது.

இது கடந்த கால பேரழிவுகளை துல்லியமாக கணித்துள்ளதாக நம்புகிறார்கள். இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகள்,

கோவிட்-19 வெடிப்பு மற்றும் மிகவும் பிரபலமாக, மார்ச் 2011 நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற நிஜ வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிப்பிடுவதற்காக இந்த மங்கா அறியப்படுகிறது.

இந்த ஆண்டு, தட்சுகியின் மங்காவின் பல ரசிகர்கள் ஜூலை 2025 இல் குறிப்பிடப்பட்ட ஒரு எச்சரிக்கையை அறிவித்திருந்தனர், ஜூலை 5 அன்று பெரிய அளவில் ஏதாவது நடக்கக்கூடும் என்று பலர் ஊகித்தனர்.

எனினும் எந்த சம்பவமும் இல்லாமல் தேதி வந்து போனதால், பெரும்பாலான மக்கள் அந்த வதந்தியை நிராகரித்துவிட்டு நகர்ந்தனர்.

ஆனால் இப்போது, புதன்கிழமை ஏற்பட்ட வலுவான பூகம்பம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கைகளுக்குப் பிறகு, மங்காவைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

து தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்லரும் பதிவிட்டு வரும் நிலையில் ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில்,

“ரஷ்யாவின் கடற்கரையில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பான் கடற்கரை முழுவதும் 3 அடி சுனாமி எச்சரிக்கை,

2011 நிலநடுக்கத்தை முன்னறிவித்த ஜப்பானிய மங்கா முன்னறிவிப்பாளர் ரியோ தட்சுகியின் எதிர்காலம் நான் பார்த்தது, அவர் அதை மீண்டும் செய்தார் பாதுகாப்பாக இருங்கள், என பதிவிட்டுள்ளார்.

நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி : நால்வர் படுகாயம்!!

ரம்புக்கன – ஹதரலியத்த வீதியின் லினியா ஹெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக பாரத்தை ஏற்றிச் சென்ற லொறி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!!

போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது.

யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற விமானம் ஜூலை 25ஆம் திகதி வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து முனிக் நோக்கி புறப்பட்டபோது, இடது எஞ்சின் செயலிழந்துள்ளது.

இதையடுத்து விமானக் குழுவினர் “MAYDAY” என அவசர அழைப்பு விடுத்தனர். விமானம் 5,000 அடி உயரத்துக்குச் சென்றவுடன் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) ஒருங்கிணைந்து பாதுகாப்பான தரையிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FlightAware தரவுகளின்படி, இந்த விமானம் 2 மணி 38 நிமிடங்கள் வரை விண்ணில் இருந்தது. வோஷிங்டன் வடமேற்கே ஒரு சுற்றுப் பாதையில் (holding pattern) பறந்தபடியே பாதுகாப்பாக எரிபொருள் வெளியிடப்பட்டது.

இந்தகாலப்பகுதியில், விமானிகள் 6,000 அடி உயரத்தில் எரிபொருள் வெளியிட அனுமதி கோரி ATCயிடம் வேண்டினர். விமானத்தின் எடையை சமநிலைப்படுத்த இதன் மூலம் உதவியது.

மற்ற விமான போக்குவரத்துகளிடமிருந்து பாதுகாப்பாகப் பிரித்து எரிபொருள் வெளியிட கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழிகாட்டினர். எரிபொருள் வெளியீடு முடிந்தவுடன், விமானிகள் Runway 19 Centre வழியாக Instrument Landing System (ILS) மூலம் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும், இடது எஞ்சின் செயலிழந்ததால் அது சுயமாக நகர முடியாமல் போயுள்ளதால் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அந்த விமானம் வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்தில் நிலைபெற்று நிற்கின்றது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எஞ்சின் கோளாறு குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் தொடர்புடைய விமானபோக்குவரத்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்துகின்றனர்.

உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 12ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை என்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது.

இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை தாக்கி வரும் சுனாமி அலைகள் : பல பகுதிகளில் மின்தடை!!

ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவெரோ-குரில்ஸ்க் நகரத்தை நான்காவது சுனாமி அலை அடைந்துள்ளது.

இதன்போது, மின் இணைப்பு சேதமடைந்ததை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்பட்ட மூன்றாவது அலை மிகவும் கடுமையானதாக இருந்தது எனவும், இது நிறைய சேதத்தை ஏற்படுத்தியது எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த நான்காவது அலை பலவீனமானது தான் எனவும் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாவது அலை, துறைமுக உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதுடன் முழு சிறிய கடற்படையும் கடலுக்குள் இழுக்கப்பட்டது, அது இப்போது ஜலசந்தியில் இருந்த சில கப்பல்கள் கரை ஒதுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்வதாகவும், கம்சட்கா அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, செவெரோ-குரில்ஸ்கில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, சுனாமி அபாய மண்டலத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரஷ்யாவின் குறித்த பிரதேசங்களில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவுகள் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று கடும் வெப்பமான காலநிலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் பல பகுதிகளில் இன்று (30.07.2025) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை இன்றைய தினத்திற்கு செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரிஅம்பாள் சப்பரத் திருவிழா!( வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வர் ஆலய அம்பாள் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா 26.07.2025 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை ஐந்து  மணிக்கு யாகபூசை கும்பபூசை மூலஸ்தான பூசையை தொடர்ந்து ஆறுமணியளவில்  பாலமுருகன் குழுவினரின் விசேட தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது  அதனை தொடர்ந்து தொடர்ந்து எட்டு  மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலையில்ஒன்பது மணியளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் அழகிய முத்து சப்பரத்தில் வீதிஉலா வந்தாள்.

 

யாழில் இடம்பெற்ற கோர விபத்து!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது. விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில், இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி : நால்வர் காயம்!!

ஹொரணை – இலிம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (28.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது கெப் வாகனத்தில் பயணித்த யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞன் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சோகம்!!

யாழில் பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (27.07) இடம்பெற்றுள்ளது.

பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அன்னராசா அலெக்ஸன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வுக்கு சென்று அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த உயிரிழந்த நபர் ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று அந்த பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இதன்போது திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டன. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகமே இருளில் மூழ்கப் போகும் நாள் : 21ம் நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம்!!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் திகதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டு நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வந்து மிகச் சரியாக 6 நிமிடங்கள் 23 வினாடிகளுக்கு மறைத்தபடி நிற்குமாம்.

இதுதான், உலகிலேயே மிக நீண்ட நேர சூரிய கிரகணமாகக் கருதப்படுகிறது. இது வழக்கமான ஒரு சூரிய கிரகணமாக இருக்காது. இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும்.

அதாவது, இரு வெவ்வேறு இடங்களில் சுற்றுவட்டப் பாதைகளில் பயணிக்கும் பூமியும், நிலவும், சூரியனின் நேர்க்கோட்டில் வரும். பூமிக்கு இடையே வரும் நிலவு, சூரியனை முழுமையாக மறைக்கிறது.

இது அதிக மக்கள் தொகை நிறைந்த நாடுகளில் தெரியும். இதனை ஏராளமானோர் நேரில் காணப்போகிறார்கள். ஆனால் என்ன? 2025 அல்லது 26ஆம் ஆண்டில் ஆண்டில் நிகழப்போவதில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியாவதைப் போல வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி எந்த கிரகணமும் நிகழப்போவதில்லையாம். ஆகஸ்ட் 2ஆம் திகதி உலகமே இருளில் மூழ்கப் போவதாக நாசா அறிவித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை.

அன்றைய நாளில் உலகம் இருளில் எல்லாம் மூழ்காது. அதனை காண 2027 வரை காத்திருக்க வேண்டும். பலரும் அந்தநாளை தங்களது காலாண்டில் குறித்து வைத்துக் கொண்டு, அதனை நேரில் காண உலக நாடுகளுக்குப் பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.

யாழில் டிக்டொக் காதலனுக்காக 48 லட்சம் பெறுமதியான நகைகளை திருடிய யுவதி கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக்டொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை திருடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் டிக்டொக் சமூக வலைத்தளங்களில் தனது காணொளிகளை பதிவேற்றி பிரபலமானவராக தன்னை காட்டிக்கொண்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞனுடன் டிக் டொக் மூலம் அறிமுகமான சாவகச்சேரி பகுதியை சேர்ந்த யுவதி, அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்நிலையில் தனது காதலனுக்கு, அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காகவும், காதலன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காவும், தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகையை திருடி, அதனை காதலனிடம் கொடுத்துள்ளார்.

வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனமை தொடர்பில், யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் இருந்த நகைகளை தான் களவெடுத்து காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காதலனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் வீட்டில் நகைகளை திருடிய யுவதி, அவரது காதலன், யுவதி வீட்டில் நகைகளை திருடியமைக்கு உடந்தையாக செயற்பட்ட யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், நகைகளை வாங்கியவர்கள் என ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.