வரதட்சணை பிரச்னையில் வீட்டை விட்டு வெளியேற்றிய கணவர் குடும்பம்.. கடப்பாறையால் பதில் சொன்ன மனைவி!!

மயிலாடுதுறையில்..

மயிலாடுதுறை அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், கணவரது வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்து அவர் உள்ளே சென்றது உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம், பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா. இவருக்கும் மயிலாடுதுறை மன்னம்பந்தலைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது.

திருமணத்தின்போது 24 சவரன் நகை, இருசக்கர வாகனம் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் வரிசை உள்ளிட்டவைகளை மணமகன் வீட்டாருக்கு பிரவீனா வீட்டினர் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நடராஜன் – பிரவீனா ஆகிய இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மாமனார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தன்னை தரக்குறைவாக பேசியதுடன், தாக்கியதாகவும் இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார்.

மேலும், தான் வீடு திரும்பும் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருக்கும் பிரவீனா, அங்கிருந்த கடப்பாரை கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். இதனால் அந்த கிராமமே பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும், தனது கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்படுவதாகவும் பிரவீனா தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,”திருமணமாகி நான் இந்த வீட்டில் தான் வசித்துவந்தேன். சமீபத்தில் எனது மாமனார் மற்றும் அவரது சகோதரர் எனக்கு என்னுடைய பெற்றோர் வழங்கிய நகைகள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், என்னை தாக்கி வெளியேற்றினர்.

நான் எனது பெற்றோரிடம் இதனை தெரிவித்ததுடன், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். இந்நிலையில் கணவர் வீட்டுக்கு நான் வருவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்” என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் நடராஜன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் தன்னை சேர்த்துவைக்கும்படி போராடிய மனைவி, கணவர் வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜனவரி தொடக்கம் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான புகையிரத சேவை இடைநிறுத்தப்படும்!!

புகையிரத சேவை..

வடக்கு தொடருந்து பாதையில் அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளன.

இந்தியாவின் நிதியுதவியுடன் வடக்கு தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையான தொடருந்து சேவைகள் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.

எனினும் அனுராதபுரம் தொடருந்து நிலையத்தில் இருந்து ஓமந்தை வரை செல்லும் பயணிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. ஓமந்தை தொடருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை தொடருந்து சேவைகள் நடத்தப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

ஹெலிகாப்டரில் பறந்து சென்ற இதயம்.. 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி!!

கர்நாடகாவில்..

மூளைச்சாவு அடைந்த 16 வயது சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ரக்ஷீதா கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காகப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரக்ஷீதா மூளைச்சாவு அடைத்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பிறகு உடனே அவர்கள் தங்களது மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ரக்ஷிதாவின் உடலிலிருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் அகற்றப்பட்டது.

இதில் இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9வயது சிறுவனுக்குப் பொருத்துவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுயின் உடல் உறுப்புதானம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் உடல் உறுப்புதானத்தில் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்து கூறும் விதமாகவும் அமைந்துள்ளது.

6வது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் 7 ஆவது திருமணத்திற்கு தயாரான பெண் : இறுதியில் நடந்த விபரீதம்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த கள்ளிப்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆம் தேதி திருமணமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்த திருமணத்தை புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

திருமணத்திற்கு பிறகு தனது புது வாழ்க்கையை தொடங்கி வாழ்ந்து வந்துள்ளார் தனபால். அப்படி இருக்கையில், திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து தனபாலுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இதற்கு காரணம், புது பெண்ணான சந்தியா வீட்டில் இருந்து மாயமானது தான்.

தொடர்ந்து, மனைவியின் செல்போன் எண்ணிற்கு தனபால் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், வீட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் திருமண புடவைகள் மாயமாகி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, சந்தியாவின் உறவினர் மற்றும் புரோக்கர் உள்ளிட்டோரின் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, இது பற்றி பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் தனபால் அளித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்காக பெண் பார்த்த போது, மீண்டும் சந்தியாவின் புகைப்படம், புரோக்கர் ஒருவரிடம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தனபால், திட்டம் போட்டு மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்துள்ளார். அதன் படி, திருமணத்தை நடத்துவது போல செட் செய்து, சந்தியா உள்ளிட்டோரை திருச்செங்கோடு வர வைத்துள்ளார் தனபால்.

தொடர்ந்து, சந்தியா உள்ளிட்டோர் அங்கு திருமணத்திற்காக வந்ததும் அவர்களை சுற்றி வளைத்த தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர், அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக நடந்த போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது. புரோக்கர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளும் சந்தியா, ஒரு சில தினங்கள் மட்டுமே அவர்களுடன் இருந்து விட்டு, கடைசியில் கிடைக்கும் பணம், நகை உள்ளிட்ட பொருட்களுடன் தப்பி விடுவதை வழக்கமாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்கள் நடந்துள்ளதாகவும், 6 ஆவது திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் 7 ஆவது திருமணம் செய்ய வந்த போது வசமாக சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சந்தியா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் நெகிழ்ச்சியான செயல்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் தன் உயிரை இழந்தாலும், அடுத்தவர் வாழ்வில் ஒளியாய் மறையும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கின்றது.அந்த வகையில், குறித்த இளைஞரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரலகங்வில, கல்தலாவ பகுதியைச் சேர்ந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞரொருவர் கடந்த 19ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மூன்று நோயாளிகளுக்கு உயிர் கொடுக்க முடியும் எனவும், உறவினர் விரும்பினால் மாத்திரம் இதனை செய்ய முடியும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய நிலையில் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஏனைய விசேட வைத்தியர்களும் இணைந்து இந்த இளைஞரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பெற்று மூவருக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இதன்போது விபத்தில் உயிரிழந்த இளைஞர் அடுத்த மாதம் வெளிநாடு செல்ல தயாரான நிலையில், தனக்கு ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமென விபத்திற்கு முதல் நாள் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்ததாகவும் உயிரிழந்த இளைஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உடற்பாகங்களால் மூன்று உயிர்களை வாழ வைத்த குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன், உயிரிழந்த இளைஞருக்கு பலரும் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

விஷ ஊசியை போட்டு பரிதாபமாக இறந்த நபர் : சிக்கிய மனைவியின் காதலன்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்தவர் ஜமீல்(45). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.

அவருக்கு லிப்ட் கொடுத்ததும், சிறிது தூரம் செல்லும்போது, ஜமீல் முதுகில் அந்த நபர் ஊசி போட்டுள்ளார். அப்போது அதை உணர்ந்த அவர் உடனே வண்டியை நிறுத்த அந்த நபர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து, பதறிபோய் தனக்கு ஊசி போட்டதை மனைவியிட போன் செய்து தெரியப்படுத்தியுள்ளார். உடனே அதற்கு அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.

அதற்குள் அவருக்கு தலை சுற்றல் ஏற்பட அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார் அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆனால், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், அவர் ஷேக் ஜமால் சாயபு என்பதும் இவருக்கு ஷேக் இமாம் பீ என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளது தெரிய வந்தது.

இவர்கள் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதனிடையே, மனைவி இமாம் பீ-க்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இதனால் மனைவி இமாம் அவருடன் தனிமையில் இருந்த போது கணவர் கண்டதால் ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்துள்ளார். இருவருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என ப்ளான் போட்ட மனைவி காதலனுடன் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

இரண்டு விஷ ஊசியை மனைவி ஒன்றும், காதலன் ஒன்றும் வைத்துள்ளனர். மனைவியால் அந்த விஷ ஊசியை கணவருக்கு செலுத்த முடியாத நிலையால், தனது மகள் வீட்டிற்கு சென்று மனைவி தன்னை அழைத்து செல்ல வரும் படி கூறியுள்ளார்.

அதற்காக வாகனத்தில் வரும்போது தான், காதலனான மோகன் ராவ் நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டி காத்திருந்துள்ளனர்.

அப்போது தான் லிப்ட் கேட்டு விஷ ஊசியை போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது.

இதன் பின்னர், மனைவி காதலன் உட்பட அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் சினிமா பாணியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

“ஒழுங்கா படிக்க மாட்டியா”.. தலைக்கு ஏறிய கோபம்.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்!!

ஒடிசா..

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகனான பிஸ்வமோகன் எம்பிஏ படித்து முடித்துவிட்டு, வங்கித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார். இளைய மகனான ராஜ்மோகன், மேற்படிப்பு படிப்பதற்காக புவனேஸ்வரில் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா

இதனிடையே, ராஜ்மோகன் வீட்டைவிட்டு சென்று நண்பர்களுடன் தங்கியதில் இருந்து, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் அவர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனது தந்தைக்கு அடிக்கடி ஃபோன் செய்து தனக்கு பணம் அனுப்பிவிடுமாறும் கூறி ராஜ்மோகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்படி தராவிட்டால், வீட்டுக்கே சென்று தந்தையின் ஏடிஎம் கார்டை கொண்டு சென்று விடுவாராம்.

இதனால் தனது மூத்த மகன் பிஸ்வமோகனிடம், ராஜ்மோகனின் செயல்களை கூறி அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் தந்தை விஜய் போத்ரா. இதையடுத்து, தனது தம்பி ராஜ்மோகனை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபோனில் தொடர்புகொண்ட பிஸ்வமோகன், “ஏன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி உன் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறாய்” என அவர் கேட்டுள்ளார். மேலும், “இனி அப்பாவை தொந்தரவு செய்தால் நடப்பதே வேறு” என அவர் கூறியிருக்கிறார்.

ஆனாலும், தனது சேஷ்டைகளை ராஜ்மோகன் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து, தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டும், கல்லூரிக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டும் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிஸ்வமோகன், நேற்று மதியம் தனது தம்பி ராஜ்மோகனுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று இரவு அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, ஏன் இப்படி போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறாய் என ராஜ்மோகனிடம் அண்ணன் பிஸ்வமோகன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில், வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து தம்பி ராஜ்மோகனை பிஸ்வமோகன் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து, பிஸ்வமோகனை கைது செய்தனர்.

குழந்தையை தத்துக்கொடுக்க மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் குடும்பத்தோடு கணவர் செய்த கொடூரம்!!

மும்பையில்..

கடந்த ஆண்டு, ஜூலை மாதம் மும்பை அருகிலுள்ள கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. அதை சோதனை செய்தபோது அதில் தலை இல்லாமல் இருந்துள்ளது. இதனைக் தொடர்ந்து இதுதொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் தகவல் ஏதும் இல்லாததால் முக்கிய ரயில் நிலையங்கங்களில் இது குறித்த அறிவிப்பு பலகை வைத்தனர். எனினும் ஒரு வருடம் கடந்த பின்னரும் இந்த விவகாரத்தில் போலிஸாருக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சானியா என்ற பெண்ணைக் காணவில்லை என்று கூறி அவர் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு முன்னர் கிடைத்த சடலத்தின் புகைப்படத்தை வைத்து உறவினர்களிடம் கேள்வி எழுப்பியபோது அந்த பெண் அவரை போல இருப்பதாக கூறியுள்ளனர்.

அதன் பின்னர், போலிஸார் நடத்திய விசாரணையில், சானியாவின் கணவர் ஆசிப் தாங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகவும். சானியா யாருடனோ ஓடிப்போய்விட்டதாகவும், ஓராண்டாகக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னர் அந்த சடலத்தின் DNA-வோடு சானியாவின் மகள் DNA-வை வைத்து சோதனை நடத்தியதில் அந்த சடலம் சானியாவுடையது என்பது தெரியவந்தது. இதனால் போலிஸாருக்கு சானியாவின் கணவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளது.

விசாரணையில், கணவரே மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். தங்கள் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் இதற்கு சானியா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிப் சானியாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கை கால்களை கட்டி தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டு கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் சானியாவின் கழுத்தை அவரது மாமனார் அறுத்து போலிஸ் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக தலையில் இருந்த முடியை அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி மைத்துனர் உதவியுடன் ஆசிப் மனைவியின் உடலை சூட்கேஸில் அடைந்து கடற்கரையில் வீசி தலையை கடலில் வீசியுள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக கணவர் ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் ஆகியோரை போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோவையில்..

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் துடியலூர் போலீசார் 174 சந்தேக மரண வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எட்டு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 கேமராக்களை ஆய்வு செய்து 150 தொழிற் கூடங்களிலும், 15 மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொண்டனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பிரபு என்பவர் கடந்த 14ஆம் தேதி முதல் காணவில்லை எனவும் இது தொடர்பாக 18ஆம் தேதி கோவை மாநகர காவல் துறையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. பிரபுவின் வீட்டுக்கு சென்று ஆய்வு எடுக்கப்பட்ட 7 கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலூரில் கிடைத்த கையின் கைரேகையுடன் ஒத்துப்போனது.

தொடர்ந்து பிரபு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்ததாகவும் அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் அமுல், திவாகர், கார்த்திக், ஆகியோர் பிரபுவை காந்திமா நகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது; 8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.

சினிமா பாணியை விட தலையை கண்டுபிடிக்கும் முன்பே கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டோம். காணாமல் போனவர்களின் தகவல்களை எடுத்து கைரேகைகளை சேகரித்து இறந்தவர் விவரங்களை தேடினோம்.

காட்டூர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் புகாரில் வந்த பிரபுவின் விவரம் மற்றும் அவரின் கைரேகையை அவரது வீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்ததை சேகரித்து மர்மமாக கிடைத்த கையை வைத்து இறந்தவர் பிரபு என்பதை உறுதிப்படுத்தினோம். பிரபு வீட்டிற்கு இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்றனர். அதன் சிசிடிவி இருந்தது.

அதை வைத்து விசாரணையை தீவிர படுத்தினோம்.அதேபோல பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளிகளை தேடினோம். அப்போது, கவிதா, திவாகர் ஆகியோரது செல்போன் ஒரே நேரத்தில் காந்திமாநகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது. அதை தொடர்ந்து அவர் மீது எழுந்த சந்தேகத்தில் கைது செய்தோம்.

இறந்தவரின் 8 உறுப்புகளை கண்டெடுத்துள்ளோம். காவல்துறை சோதனை பகுதியை பார்த்து குற்றவாளிகள் கையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆகவே சோதனை என்பது காவல்துறைக்கு முக்கியமானதாக உள்ளது.

கவிதாக்கு பிரபுவுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. காந்திமாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை நடைபெற்றுள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பிரபு மிரட்டியதால் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

ஒரு வாரமாக திட்டம் தீட்டி கொலை நடைபெற்றது. தலை திருப்பூர் அருகே உள்ள கிணற்றில் இருந்தது. கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம். இந்த சம்பவத்தில் மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

இந்நிலையில் கைதான கவிதா, அமுல் திவாகர் , கார்த்திக் ஆகிய மூன்று பேரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் மூன்று பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

குளிப்பதற்கு சுடுதண்ணீர் வைத்த தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம்!!

கோவையில்..

கோவை விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா (வயது 18) என்ற மகள் இருக்கிறார். ஆனந்த்திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். மகள் அர்ச்சனா தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கம் போல அர்ச்சனா கல்லூரிக்கு செல்ல குளியல் அறைக்கு சென்று அங்கிருந்த வாளியில் தண்ணீரை நிரப்பி அதி்ல் வாட்டர் ஹீட்டர் கருவியை வைத்து சுவிட்சை ஆன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகியுள்ளது.

அதன்பின்னர் சுவிட்சை ஆப் செய்த அர்ச்சனா அவசரத்தில், வாட்டர் ஹீட்டரை எடுக்காமல் குளிக்க தண்ணீரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீது, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அர்ச்சனா அலறித்துடித்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து அவரது தாயார் கார்த்திகா ஓடி வந்து மகளை காப்பாற்ற அவரை தொட்டுள்ளார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் ஒரே இடத்தில் தாய்,மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் புதைக்கப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் திரும்பிய சம்பவம் தொடர்பான தலைசுற்றவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா (72). இவர் தனது மகன் வடிவேலு பராமரிப்பில் வசித்து வருகிறார்.

சந்திரா அடிக்கடி சிங்கப்பெருமாள் அருகே உள்ள கோவிலுக்கு செல்வார். வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில், கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்த நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மூலமாக தெரியவந்துள்ளது இதையடுத்து அங்கு வந்த வடிவேலு மற்றும் உறவினர்கள் உயிரிழந்தது சந்திரா என தெரிவித்தனர்.

ஏனெனில் இறந்த பெண்ணின் உருவம் அப்படியே சந்திரா போலவே இருந்தது. இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் சந்திராவின் உடல் ஒப்படைக்கப்பட்டது. சந்திரா உயிரிழந்தது குறித்து, அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் சந்திராவின் உடலுக்கு, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஊரெங்கும் சந்திராவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டு மாலை இறுதி மரியாதை உடன் தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் வழக்கப்படி சந்திராவிற்கு இன்று காலை படையல் போட்ட பொழுது, உயிரிழந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த நிலையில் சிலர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த பொலிசார் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

வேறொரு பெண்ணின் உடலை தனது தாயுடையது என்று மகன் தவறாக அடையாளம் காட்டியதே இவ்வளவு கூத்துக்கும் காரணம் என்று புரிந்தது. இந்த நிலையில், இறுதிச் சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் யாருடையது என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

கோதுமை மாவின் விலை குறைகிறது : புதிய விலை தொடர்பான அறிவிப்பு!!

கோதுமை மா..

அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.

எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

பல்கலைக்கழக மாணவன்..

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலைவயில் நேற்று முன்தினம் இரவு குறித்த மாணவனின் சடலம் மகாவலி ஆற்றில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மாணவன் தங்கியிருந்த அறையில் சிறிய கடிதம் ஒன்றும் அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் “தற்போது நேரம் 8 மணியாகின்றது. இடையில் குறுக்கீடு இல்லை என்றால், அரை மணி நேரத்திற்குள் நான் மகாவலி ஆற்றில் இருப்பேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் காணாமல் போன தினத்தன்று இரவு 7 மணியளவில் அவரது தாயார் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என குறிப்பிட்டதாக உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றது. நீரில் மூழ்கிய போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்தியர் சிவ சுப்ரமணியம் உறுதி செய்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி அஞ்சன குலதுங்க என்ற 23 வயதுடைய மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் மீட்கப்பட்டது அவரது சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் உளவியல் படித்த உளவியல் சங்கத்தின் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிரிச்சியளிப்பதாக அவரது நண்பர்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

காதலியுடன் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த மனைவி : வியக்க வைத்த காரணம்!!

திருப்பதியில்..

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டு அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர்கள் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், விமலா சில நாட்களாகவே கவலையுடன் இருந்து வந்துள்ளார்.

இதற்கு காரணம் என்ன என கணவர் கல்யாண் கேட்க, அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார். திருமணத்திற்கு முன்பு கல்யாணும், நித்யாஸ்ரீ என்பவரும் டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளனர்.

அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். அதன் பின் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

ஆனால், திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார்.இது குறித்து விமலாவிடம் காதல் விவரத்தை கூறி, அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள்.

அதற்கு எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். தொடர்ந்து, விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார்.

ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். இதனிடையே, கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்கத்தின் விலை : இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை.

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 603,399 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் பாரிய வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல் : ஒருவர் படுகாயம்!!

பட்டானிச்சூர் பகுதியில்..

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தகநிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (22.09) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த குறித்த இளைஞர் பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றிற்கு இன்றையதினம் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு கூடிநின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியை பறிமுதல் செய்து,மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து அப் பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததனர். குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ்தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிடச் சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன்,

அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்ப்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.