ஒரே வீட்டில் 3 மனைவிகள்.. சண்டையே போடாமல் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்!!

இணையத்தில்..

இணையத்தில் அவ்வப்போது பல நிஜ நிகழ்வுகள் தொடர்பான வினோத செய்திகள் அதிகம் ரவுண்டு அடிக்கும். அதில் சிலவற்றை நாம் கேள்விப்படும் போது நிச்சயம் நமக்கு அதிக அளவில் வியப்பை கொடுக்கும் செய்திகளும் இடம்பெற்றிருக்கும்.

அப்படி ஒரு செய்தி தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பேசு பொருளாகவும் மாறி உள்ளது. காங்கோ குடியரசு என்னும் நாட்டை சேர்ந்தவர் Ombeni. இவர் மொத்தம் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்.

இதில், இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மூன்று பெண்களும் உடன் பிறந்த சகோதரிகள் என்பது தான். கிறிஸ்டினா என்ற பெண்ணை முதலாவதாக Ombeni திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, கிறிஸ்டினாவின் சகோதரியான ஈலின் என்பவரையும் திருமணம் செய்ய Ombeni விருப்பம் கொண்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரியையே கணவர் திருமணம் செய்ய விரும்பிய போதும், கோபப்படாத மனைவி கிறிஸ்டினா, இதற்கு சம்மதமும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மூன்றாவது சகோதரியான டூமா என்பவரையும் Ombeni திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் Ombeni வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இடையே இதுவரை எந்த விஷயத்திலும் சண்டை ஏற்பட்டதே இல்லை என்பது இன்னும் சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசும் முதல் மனைவி கிறிஸ்டினா, இதை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், தங்களின் கணவர் சிறந்த முறையில் அனைவரையும் பார்த்துக் கொள்வதுடன் சமமாக அன்பை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Ombeni மற்றும் மூன்று மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 14 பேரும், Ombeni குடிசை வீட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், குடும்பத்தினர் அனைவருக்காகவும் தனியாளாக Ombeni உழைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனக்கு மூன்று மனைவிகள் இருப்பது பற்றி பேசும் Ombeni, என்னை பற்றி மக்கள் பலரும் பல விதமாக கருத்து கூறுகிறார்கள் என்றும், ஆனால் நாங்கள் அது எதையும் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம் என்பது தான் எங்களுக்கு முக்கியம் என்றும் Ombeni குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மனைவிகள் இருந்த போதிலும் எந்தவித பிரச்சனையும் இன்றி, அனைவருடனும் இணக்கமாக வாழ்ந்து வரும் கணவர் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!!

சீதாபூரில்..

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த ஆசிரியரை பழிவாங்க முடிவெடுத்துள்ளான்.

திருட்டுத்தனமாக நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தெருவில் நடந்து சென்ற ஆசிரியரை நோக்கி சுட வேகமாக ஓடினான். அப்போது இதை கண்டு தப்ப முயன்ற ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளான்.

அதில் ஆசிரியர் காயமடைந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்தனர்.இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனினும் சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது கற்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கோவையில்..

கோவை மின்தடை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஸ்வரன் – வான்மதி.

விக்னேஸ்வரன் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியான தனது மனைவி வான்மதியை கடந்த 21 ஆம் தேதி அன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவமனையில் திடீர் மின்தடை ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஜெனரேட்டரும் வேலை செய்யாததால் வான்மதிக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலாத நிலை உருவானது.

இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தாயும் சேயும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் வான்மதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அன்னூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வான்மதியின் உயிரிழப்புக்கு அன்னூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல்பாடு காரணம் என குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களிடம் அரசு தரப்பில் எவரும் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் திடீரென சுமார் 100 க்கும் மேற்பட்டோர் திடீரென அன்னூர் கோவை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்திரா, வட்டாட்சியர் சிவக்குமார்,டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் பெண் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அரசுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் விழுந்த பல கோடிகள் : ஆனால் நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனை!!

கேரளாவில்..

வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த அனூப். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப்புக்கு கடந்த வாரம் ஓணம் லொட்டரியில் ரூ. 25 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. லொட்டரியில் பரிசு விழுந்தது முதல், பலரும் கடன்கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அதனால் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் அனூப்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், லாட்டரியில் பரிசு கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் இப்பொது அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது. தினமும் உதவிகேட்டு பலபேர் வருகிறார்கள். நான் இப்போது எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலேயே இங்கு வந்திருக்கிறேன்.

ஆனால், இதையும் தெரிந்துகொண்டு இங்கேயும் ஆட்கள் வருகிறார்கள். இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டு கதவை தட்டுகிறார்கள். என்னுடைய குழந்தையை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது என இப்போது யோசிக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன். இன்னும் எனக்கு பணம் வந்துசேரவில்லை, என் நிலைமையை தயவு செய்து உணருங்கள் என கூறியுள்ளார்.

மகனின் கருவை சுமக்கும் தாய்… இப்படி ஒரு‌ முடிவுக்கு என்ன காரணம்? நெகிழ்ச்சிப் பின்னணி!!

அமெரிக்காவில்…

அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர்.

தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா. ஆனால், பிரசவத்தின்போது அவருடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. வேறுவழியின்றி கேம்பிரியாவின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஆகவே அவரால் மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் போனது.

இருப்பினும், ஜெஃப் ஹாக் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால், கேம்பிரியாவால் மீண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரது கணவர் ஜெஃப் ஹாக் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

இந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு அவருடைய தாய் ஆறுதல் கூறியிருக்கிறார். இருப்பினும், இந்த தம்பதியின் கருக்கள் சேமிப்பில் இருப்பதை அறிந்த நான்சி புதிய ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

அதன்படி, கேம்பிரியாவின் கருவை மருத்துவ உதவி மூலமாக தனது கர்ப்பப்பையில் சுமக்க முடிவெடுத்திருக்கிறார் நான்சி. ஆனால், அவருடைய வயது காரணமாக இது சாத்தியமற்றது என்றே குடும்பத்தினர் நினைத்திருக்கின்றனர்.

இருப்பினும், மருத்துவ பரிசோதனை மூலம், நான்சி அதற்கு தகுதி பெற்றவர் என்பது உறுதியானவுடன், மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டிருக்கிறார் நான்சி. வரும் நவம்பர் மாதம் நான்சிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

இதுபற்றி பேசிய அவர்,”நான் எனது மகனை சுமந்தது போலவே தற்போது என் பேத்தியையும் சுமக்கிறேன். குழந்தையை மிகவும் எனது மகன் மற்றும் மருமகள் விரும்புகின்றனர். ஆகவே அவர்களுக்கு நான் உதவ நினைத்தேன்.

முன்னெப்போதையும் விட நான் வலிமையாக உணர்கிறேன். 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை சுமப்பது பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. என் மகனிடம் அவனுடைய குழந்தையை ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, 2022 ஜனவரி முதல் நான்சி சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். குழந்தையை சுமப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் என்றும் அதுவே, தனது மகனுக்காக இதை செய்ய முடிந்தது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம் என்கிறார் நான்சி.

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை!!

யாழ்..

யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி நாடகமும், அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்கு பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை (21.09-2022) இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சாப்பிடும் உணவில் தூண்டிலுடன் சிக்கிய மீன் : அதிர்ச்சி சம்பவம்!!

ஹோட்டல் ஒன்றில்..

இலங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

ஹோட்டலில் நபரொருவர் உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது குறித்த உணவில் இருந்த மீன் தூண்டிலுடன் இருந்துள்ளது.

இதனை குறித்த நபர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். சமைத்த உணவில் தூண்டிலுடன் மீன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு : மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார்.. பின்னர் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி விம்லேஷ் என்பவர் வருமான வரி துறையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் இறப்பு சான்றிதழ் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் குடும்பத்தார் இறுதிச்சடங்குக்கு தயார் செய்தனர், சில மணி நேரம் கழித்து உயிரிழந்த விம்லேஷுக்கு உயிர் வந்துவிட்டது என தெரிவித்தனர். பின்னர் அவர் கோமாவில் உயிருடன் இருப்பதாக கருதி சடலத்தை துணியால் போர்த்தி வைத்திருக்கின்றனர்.

தற்போது இந்த விடயம் வெளியில் தெரிந்த நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றினார்கள். அப்போது விம்லேஷின் தந்தை பொலிசாரிடம், ஏப்ரல் 2021 இல், என் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, ​​அவருக்கு நாடித் துடிப்பு இருந்ததையும், இதயத் துடிப்பும் இருந்ததையும் நாங்கள் கவனித்தோம் எனவே நாங்கள் அவரை எரிக்கவில்லை.

என் மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று கூறி அதிர வைத்துள்ளார். பின்னர் பொலிசாரும், மருத்துவர்களும் விம்லேஷ் குடும்பத்தாரிடம் நிலைமையை எடுத்து கூறிய நிலையில் சடலத்தை தகனம் செய்ய ஒப்பு கொண்டுள்ளனர்.

திருமணத்தன்று பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மணப்பெண்… நெகிழவைத்த வீடியோ!!

சமூக வலைத்தளங்களில்..

இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன.

அதில் சில விஷயங்கள் அதனை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும். ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல மணி நேரம் கடந்தால் கூட, அது நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் என்பது சிறிதளவு கூட குறையாமல் அப்படியே இருக்கும்.

அப்படி வைரலாகும் விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், மிகவும் எமோஷனல் ஆகவும் பலரை உணர வைக்கும். இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது.

பொதுவாக, திருமணம் என்றாலே மிகவும் ஸ்பெஷலான ஒரு தருணமாகும். மணமக்கள் இருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்த தினம் பார்க்கப்படும் நிலையில், பலரும் இந்த நாளை இன்னும் ஸ்பெஷலாக்க அசத்தலான சில விஷயங்களை செய்து வருகின்றனர். அப்படி தனது திருமணத்திற்கு மணப்பெண் செய்த காரியம் தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் நடனமாடி கொண்டிருக்கும் போது, மணப்பெண்ணாக இருக்கும் லவுரா என்பவர், திடீரென அங்கிருந்து பதுங்கி வெளியேறி, மீண்டும் வரும் போது அவரது பாட்டி ஒரு நிமிடம் அப்படியே வாயடைத்து போகிறார்.

இதற்கு காரணம், வெளியே சென்ற மணப்பெண் லவுரா, பல ஆண்டுகளுக்கு முன் தனது பாட்டி, அவரின் திருமணத்திற்கு அணிந்திருந்த கவுனை அணிந்த படி வரவேற்பு அறையில் என்ட்ரி கொடுத்தது தான்.

இதனைக் கண்டதும் அவரது பாட்டி, அங்கிருக்கும் அனைவரிடமும் உணர்ச்சி பொங்க அது என்னுடைய கவுன் என திரும்ப திரும்ப கூறுகிறார். புதிது புதிதாக ஆடைகளை இன்றைய காலத்தில் மணமக்கள் அணிந்து கொள்ளும் வேளையில், பல ஆண்டுகளுக்கு முன் பாட்டி அணிந்த திருமண கவுனை பேத்தி அணிந்ததும், அதற்கு பாட்டி கொடுத்த ரியாக்ஷனும் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? மைனா கணவரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!!

நடிகை மைனா நந்தினி..

நடிகை மைனாவின் கணவர் யோகேஷை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி.

இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

அதன் மூலம் செம பேமஸ். மைனாவும், அவரது கணவர் யோகியும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் மிகவும் பிரபலமாகினர். தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோவால் நெட்டிசன்கள் இவரை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஏனெனில், மிகவும் ஆபத்தான ரம்மி விளையாட்டை விளையாட சொல்லி ப்ரோமோட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று நெட்டிசன்கள் கமெண்டில் கழுவி ஊற்றத் தொடங்கிவிட்டனர். யோகி நடித்த அந்த விளம்பரம் 1 வருடம் முன்னர் எடுக்கப்பட்டது.

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை : ஆரம்பிக்கும் போதே முறிந்த உறவு!!

ரக்சனா நாராயணன்குட்டி..

திருமணமாகி 19 நாட்களில் விவாகரத்து கேட்டு நீதி மன்றம் சென்ற விவகாரம் குறித்து முதல் முறை மலையாள நடிகை ரக்சனா நாராயணன்குட்டி மனம் திறந்து பேசியுள்ளார்.

அண்மையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் திருமண வாழ்க்கை குறித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரக்சனா நாராயணன்குட்டி என்பவர் மலையளத்தில் பிரபல இயக்குனராகவும், கதா நாயகியாகவும் வளம் வருகின்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘அய்ன்’ என்கிற மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரக்சனா நாராயணன்குட்டி அறிமுகமானர். கடந்த 2011 பெப்ரவரி மாதம் அருண் சதாசிவன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரியவர்களினால் நிச்சயக்கப்பட்டது.

திருமணம் ஆகி ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று நிம்மதியாக இருப்பதாக நடிகை ரக்சனா நாராயணன்குட்டி தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் வந்த முன்னாள் காதலி… கூலிப்படையால் நடந்த கொலை.. அதிர்ச்சிப் பின்னணி!!

மும்பையில்..

இந்தியாவின் மும்பை நகரில் ஆசிரியை ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங்(33) என்பவருக்கும், பன்வெல் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா ராவத்திற்கும்(30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக் மூலம் தேவர்துவின் முன்னாள் காதலியான நிகிதா (32) தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் தங்கள் பழைய காதல் குறித்து பேசி வந்துள்ளனர். நாளடைவில் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

நிகிதாவுக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், முன்னாள் காதலரை நேரில் சந்தித்து பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பிரியங்கா ராவத்திற்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும் நிகிதா ஆசிரியையாக பணியாற்றும் பள்ளிக்கு சென்ற பிரியங்கா அவருடன் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக தேவர்து மற்றும் நிகிதா பேசிக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர்.

எனினும் காதலரை மறக்க முடியாத நிகிதா, அவரது மனைவி பிரியங்காவை கொலை செய்ய திட்டமிட்டு, அதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். தேவர்துவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி பன்வெல் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பிரியங்காவை, கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், நிகிதா மற்றும் தேவர்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

காதல் கணவருடன் அடிக்கடி தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு!!

பூந்தமல்லியில்..

பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த அகரமேல், எம்.ஜி.எம் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 33 வயதான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 28 வயதான சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில் சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கருணாகரன் சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்ட சத்யா, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இதை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சத்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சத்யா இறந்து கிடந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுக்குறித்து கருணாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

முல்லைத்தீவு..

முல்லைத்தீவு தென்னியன்குளத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளமை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் நீண்டகால நோயினால் பதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதகாலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடந்த புலமை பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளை பெற்று சிறப்பாக கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு கிரமாத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

மின்வெட்டு..

நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 21 நிலக்கரிக் கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நிலக்கரி கிடைக்காவிட்டால் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் கூறியுள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாலும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரட்சியான காலநிலை நிலவுவதாலும், மின்சார விநியோகத்தில் தீவிரமான நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகை தீபாவின் ஐபோன் ஆதாரங்கள் அழிப்பு : நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்!!

ஆந்திராவில்..

நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது.

ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா (29). இவர், வாய்தா தமிழ் திரைப்படத்தில், கதா நாயகியாக நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக , விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 17ம் தேதி அன்று , வீட்டில் இருந்த தீபா தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீபாவின் ஐ போன் மாயமாகி இருந்தது. அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை கைப்பற்றியதில், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

ஐ போன் கால் ஹிஸ்ட்ரி எடுத்தபோது, தயாரிப்பாளர் சிராஜூதீனிடம் , சம்பவத்தன்று தீபா பேசியதும், பின் வாக்கு வாதம் முற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிராஜூதினை விசாரிக்க திட்டமிட்டனர். தீபா கடைசியாக எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிராய் காதலித்தேன், காதல் கை கூடவில்லை .

அதனால் தற்கொலை செய்துக்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், காரைக்குடியில் படவேலையில் இருப்பதாக கூறிய சிராஜூதின் வீடு வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இன்று வரை ஆஜராகவில்லை. அதன் மர்மம் என்ன என தெரியவில்லை.

இந்த நிலையில், மாயமான ஐ-போன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிராஜுதீன் , தீபாவுக்கு கொடுத்த காதல் பரிசு தான் அந்த ஐ-போன் , தற்போது அது போலீசார் கையில் உள்ளது. அதை ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. ஆனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆறு நாட்கள் கழித்து, அந்த ஐ-போன் , ஆண் நண்பர் பிரபாகரனிடம் இருந்து மீட்கபப்ட்டுள்ளது. இவர் தான் தீபா தற்கொலை குறித்த தகவலை கோயம்பேடு போலீசாருக்கு தெரிவித்தார். அதன் பிறகு தான் ஐ போன் மாயமானது. ஆரம்பத்தில், தீபா இரு செல்போன்கள் பயன்படுத்தியதாக கருதினர்.

ஐ போன் விவகாரம் பிரபாகரன், சிராஜூதினுக்கும் மட்டும் தெரிந்த விஷயம். தீபா தற்கொலை செய்த இடத்தில் இருந்து, பிரபாகரன் ஐ போனை எடுத்து, சிராஜூதினுக்கு ஆதரவாக ஆதாரங்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜூதின் ஆஜராகாமல் டிமிக்கி தருவதால், தீபா தற்கொலை வழக்கில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது.