நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 67 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 31 பெண்களும், 36 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஹோரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் இரவு 7.30 மணியளவில் திடீரென ஒலித்த அவசர எச்சரிக்கை மணியினால் அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.
வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் நிறைவடைந்து அனைத்து ஊழியர்களும் சென்ற பின்னர் 7.30 மணியளவில் வங்கியிலிருந்து திடீரென அவசர எச்சரிக்கை ஒலித்துள்ளது. இதனால் அவ்விடத்தில் நின்ற மக்கள் பதற்றத்துடன் நின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் சென்றதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். வங்கியில் பாதுகாப்பு தொழிநுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர எச்சரிக்கை ஒலித்திருக்காலம் என வங்கி உத்தியோகத்தர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.
கேரளாவில் பாலியல் பலாத்காரம் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பாதிரியாரை மணந்து கொள்ள அவரால் பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராபின் வடக்கும் சேரி (40). இவர் அங்குள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஆலய பிரார்த்தனைக்கு வந்த 15 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவல், அக்கம் பக்கத்தினர் மூலம் தெரியவந்தது. பின்னர் மெல்ல, மெல்ல இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் பொலிசார் ராபினை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பாதிரியார் கண்ணூர் சென்டிரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தண்டனை காலத்தை அங்கு அனுபவித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதிரியார் ராபின் திடீரென மனமாற்றம் அடைந்து சிறுமியின் சம்மதத்துடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டேன் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவருக்கு, தற்போது 20 வயதானது. இதனை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிறையில் உள்ள பாதிரியார் ராபினை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நானும் எனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோம்.
ஆதலால் ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள சேட்டேசன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரத்தா தேசாய் (17). பிளஸ் 2 மாணவியான இவர், கடந்த புதன்கிழமை செல்போனை சார்ஜ் போட்டபடி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது செல்போன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், தலை, முகம் உள்ள்ட்ட பகுதிகள் படுகாயமடைந்த மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ’செல்போனில் சார்ஜ் போட்டபடி உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, போன் பேட்டரி திடீரென்று வெடித்தது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
வட்டின் கதவு தீப்பிடித்து கருநிறத்துக்கு மாறிவிட்டது’ என்று ஷ்ரத்தாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை நடத்தாமல் அவரது உடலை குடும்பத்தினர் எரித்துவிட்டதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத வந்த மாணவி கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ப்ரியங்கா குமாரி (21). கல்லூரி மாணவியான இவர் நேற்று காலை தேர்வு எழுத பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
10.30 மணிக்கு தேர்வை முடித்த அவர் அங்குள்ள கழிப்பறையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. மதியம் 12 மணியளவில் சில மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு ப்ரியங்கா சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்போது வரை இது தற்கொலை என கூறப்பட்டாலும் இறப்புக்கான உண்மையான காரணம் வெளியாகவில்லை.
ப்ரியங்கா கூறித்து அவர் தந்தை கூறுகையில், காலையில் தேர்வு என்பதால் எதுவும் சாப்பிடாமல் அவள் கிளம்பி சென்றாள். வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை, எல்லாம் சாதாரணமாகவே சென்று கொண்டிருந்தது.
ப்ரியங்கா மரணம் எங்கள் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் மின்விசிறி விழுந்ததினால் 3 வயதுடைய சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே முஹம்மத் ரிழ்வான் என்ற குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுவனின் தாய் குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சிறுவன் படுத்து கிடந்ததாகவும் சிறுவனுக்கு மேல் வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.
சிறுவனை எழுப்பிய போது சிறுவன் எழும்பாத நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறுவனின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வவுனியா போக்குவரத்துச் சாலைக்கு சொந்தமான அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மாகாணங்களுக்கு இடையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியில் இருந்து கொழும்புநோக்கி சென்ற இரு அரச பேருந்துகள் நீர்கொழும்பு சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் அத்தியாவசிய தேவை நிமித்தம் செல்கின்றமையை உறுதிப்படுத்த தவறியுள்ளனர். இதனால் குறித்த பேருந்து நீர்கொழும்பு பகுதியில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது
வவுனியா பல்கலைக்கழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது.
அதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் (01.08.2021) ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.
தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் ஏற்படும் காய்ச்சல் தொடர்பில் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறும் நோயாளிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் வெப்பத்தை குறைத்துக் கொள்வதற்காக வேறு மருந்துகள் பயன்படுத்துவதனை தவிர்ப்பது மிகவும் முக்கியம் என டெங்கு நோய் தடுப்பு பிரவின் விசேட வைத்தியர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு வைரஸ் தொற்று, கொவிட் தொற்று வேகமாக பரவுவதனால் டெங்கு மற்றும் கொவிட் என இரண்டும் தொற்றிய நபர்கள் இருக்க கூடும்.
இதனால் காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் பெரசிட்டமோல் மாத்திரையை தவிர வேறு எந்த ஒரு மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று உள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சுதுமலை மற்றும் உரும்பிராயை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் போதனா வைத்தியசாலையில் உறவினர் ஒருவரை பார்வையிட்டு நேற்று மதியம் 1.45 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
யாழ்ப்பாணம் சிவலிங்கப் புலியடியச் சந்தியில் பயணித்த போது, அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளில் சரிந்து வீதியோரத்தில் வீழ்ந்துள்ளார்.
அவலக் குரல் எழுப்பிய அவரை அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
அவருக்கு உடனடியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
சடலம் சுகாதார விதிமுறைகளின் கீழ் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் மின்தகனம் செய்யப்படவுள்ள நிலையில் அவரது உறவினர்கள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளனர்.
யாழ். பரியோவான் கல்லூரியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் தனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டதாக தடுப்பூசியை பெற்ற வயோதிப பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே குறித்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த நிலையத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காகச் சென்றிருந்தேன்.
எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் எனக்கு தடுப்பூசியை வழங்கிய பெண் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார்.
அவரிடம் நான் இரண்டு தடவைகளுக்கு மேல் எழுந்து செல்லலாமா எனக் கேட்டேன். அவர் பதிலளிக்காமல் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபடி சென்றார்.
நான் அவ்விடத்திலேயே இருக்க மறு பக்கத்தில் இன்னொரு உத்தியோகத்தர் அம்மா கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார்.
ஊசி போட்ட சிறு நேரத்தில் எனக்கு தலை சுற்றுவது போல் உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த வைத்தியர்களிடம் சொன்னேன் நீங்கள் சற்று அமர்ந்திருந்து விட்டுச் செல்லுங்கள் என பதில் கூறினார்கள்.
எனது மகளுடன் வீடு செல்லும்போது எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன். எனது மகள் அவ்வாறு ஊசி போடக் கூடாது எனக்கூற நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தேன்.
தடுப்பூசி ஒன்றா இரண்டா ஏற்றுவது என்ற விடயம் எனக்குத் தெரியாது. மகனை அழைத்துக் கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காகச் சென்றேன்.
முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பின் வைத்தியரைச் சந்திக்க அனுமதித்தார்கள் நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார்.
எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின் போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.
எனக்கு ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறியதுடன் மறுநாள் எனது வீடு தேடி வைத்தியர் ஒருவர் வந்து எனது உடல் நலம் குறித்துப் பார்வையிட்டு சென்றார் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கை நான்கு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் நெல்லினை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக நெல் கட்டுபாட்டு சபையால் சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் பூங்கா வீதி, மாமடு, நெடுங்கேணி, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நெல் களஞ்சியசாலைகளில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ நாடு 50 ரூபாய்க்கும், சம்பா 52 ரூபாய்க்கும், கீரி சம்பா 55 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதுடன் போக்குவரத்து கூலியாக கிலோ ஒன்றுக்கு 1.50 சதம் வழங்கப்படுகின்றது.
எனவே, விவசாயிகள் உலர்ந்த நெல்லை அரசாங்கத்தின் உத்ததரவாத விலையில் நெல் களஞ்சியசாலைகளில் விற்பனை செய்ய முடியும் என நெல் கட்டுப்பாட்டு சபையினர் தெரிவித்துள்ளனர்.
கு.டிபோ.தையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமி பிரியா. இவர் நேற்று இரவு தனது காதலர் மற்றும் தோழி மற்றும் அவரது நண்பர்களுடன் போ.தையில் தள்ளாடியடி வந்துள்ளார்.
இதனை அவதானித்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி புருஷோத்தமன், லட்சுமி பிரியாவிற்கு அட்வைஸ் செய்துள்ளார். போ.தையில் இருந்த நாலு பேருக்கும் புருஷோத்தமனின் அறிவுரைகள் எரிச்சலை தந்ததுடன்,
தனது மகிழ்ச்சிக்கும் இடையூறாக இருப்பதாக நினைத்து, அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து தலையிலும், முகத்திலும் பலமாக தாக்கியுள்ளனர்.
இதில் புருசோத்தமன் மயங்கி விழுந்த பின்பு குறித்த நான்கு பேரும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். பின்பு காவலாளிக்கு மயக்கம் தெளிந்த பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த பொலிசார் வீட்டிற்கு வந்த போது அங்கு லட்சுமி பிரியாவும், காதலர் விக்னேஷும் மட்டுமே சிக்கியுள்ளனர். மற்ற இருவரும் தலைமறைவாகிய நிலையில், பொலிசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் அ.திர்ச்சிப் பின்னணி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான். திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சிந்தாமணி பிரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இ.றந்துவிட்டார்.
இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சிந்தாமணி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர் வீட்டுக்கு வந்தார்.
அப்படி இருந்தும் மணிவண்ணன், சிந்தாமணியை ஏற்று அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து குடிஅமர்த்தினார். இதற்கிடையே நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த பொலிசார் சிந்தாமணி உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிந்தாமணியின் சா.வி.ல் ச.ந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போ.ரா.ட்.ட.த்.தி.ல் ஈ.டுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு ப.ர.ப.ர.ப்.பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னார்.
அதன்பிறகே அவர்கள் சமாதானம் அடைந்து க.லைந்து சென்றனர். இதற்கிடையே சிந்தாமணியின் ம.ர.ண.ம் குறித்து பொலிசார் வி.சாரணையை து.ரிதப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன்.
லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குணா(29) மற்றும் குழந்தைகளான லித்திகா(8) மற்றும் நிதர்சன்(7) துலுக்கம்பட்டியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை மாலை குணா தன்னுடைய குழந்தைகளுடன் அப்பகுதியில் விறகு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அருகில் இருக்கும் கிணற்றில், சிறுமி லித்திகா திடீரென்று தவறி விழுந்ததால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குணா மகளை காப்பாற்றும் எண்ணத்தில், உடனடியாக கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால், உயிர் பிழைக்க கத்திய போது, அருகில் இருந்த 8 வயது சிறுவன் லோஹித், சற்றும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து லித்திகாவை காப்பாற்றியுள்ளான்.
அதே சமயம் குணாவை காப்பாற்ற முயன்ற போது, அவர் தண்ணீருக்குள் மூழ்கியதால், அவரை காப்பாற்ற முடியவில்லை. அதன் பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குணாவின் உடலை மீட்டனர்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த பொலிசார் குணாவின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடீரென்று அந்த குடியிருப்புக்குள் பு.குந்த ரகில் என்ற இளைஞர், மானசாவை வ.லுக்கட்டாயமாக ஒரு அ.றைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். உள்ளே இருவரும் க.டும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டுள்ளனர்.
இதனிடையே திடீரென்று இரண்டு முறை து.ப்.பா.க்.கி வெ.டி.க்.கு.ம் ச.த்தமும் அ.ல.ற.ல் ச.த்தமும் கே.ட்கவே, அ.றைக்கு வெளியே ப.த.ற்.ற.த்துடன் காத்திருந்த மானசாவின் தோழிகள் கூ.ச்சலிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த அ.றைக்குள் இருந்து மீண்டும் து.ப்.பா.க்.கி வெ.டி.க்.கு.ம் ச.த்தம் கேட்கவே, அறை க.த.வை உ.டை.த்.து.க் கொண்டு மானசாவின் தோழிகள் உள்ளே நு.ழைந்துள்ளனர்.
அங்கே, மானசா மற்றும் ரகில் ஆகிய இருவரும் ர.த்.த வெ.ள்ளத்தில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய.ப.டி இ.ருந்துள்ளனர். உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தும், இருவரும் ம.ர.ண.ம.டை.ந்.த.தா.க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மானசாவை மிக அருகில் நின்றே ரகில் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு.ள்.ளா.ர் எனவும், இதனால் து.ப்.பா.க்.கி கு.ண்.டு அ.வர் ம.ண்.டை ஓ.ட்டினை து.ளைத்து வெ.ளியேறியதாகவும், ஒரு கு.ண்.டு அவர் மா.ர்.பி.ல் பா.ய்ந்திருந்ததகாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரகில் சமூக ஊடகம் வாயிலாகவே மானசாவுடன் அறிமுகமாகியுள்ளார். இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஆனால் தமக்கான நபர் ரகில் இல்லை என்பதை மிக சீக்கிரத்தில் உணர்ந்து கொண்ட மானசா மனந்திறந்து ரகிலிடம் பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருந்துள்ளனர்.