சங்குப்பிட்டி பகுதியில் விபத்து : வேட்பாளர்கள் உள்ளிட்ட நால்வர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

விபத்து..

சங்குப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வேட்ப்பாளர்கள் இருவர் உட்பட நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 6.35 மனியவில் இடம்பெற்ற வாகன விபத்திலையே நால்வர் படுகாயம் அடைந்து யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

பூநகரி பகுதியில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், யாழில் இருந்து பூநகரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளானது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழுவில் போட்டியிடும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு வேட்ப்பாளர்களும், முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகன சாரதியும் காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் தடம்புரண்டமையால் சிறிது நேரம் சம்க்குப்பிட்டி ஊடான போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது. குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் 6 மாத யானைக்குட்டி மீட்பு!!

6 மாத யானைக்குட்டி..

வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் தனிமையில் திரிந்த 6மாத யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் மீட்டெடுத்துள்ளனர்

பூவரசங்குளம் வேலங்குளம் பகுதியில் நேற்றையதினம் (08.07.2020) மாலை கோவிலுக்கு சென்ற சிலர் கோவிலுக்கு அருகாமையில் பூப்பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன் போது தனிமையில் நின்ற குறித்த யானைக்குட்டி அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளது. அதனையடுத்து அயலவர்கள் யானைக்குட்டியினை பாதுகாப்பாக வைத்திருந்ததுடன் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் அவ்விடத்தில் வேறு யானை நிற்கின்றதா என ஆராய்ந்த பின்னர் தனிமையில் நின்ற குட்டியானையினை மீட்டு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஆறு மாதமாகிய குறித்த குட்டியானை மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 92 பேர் விடுவிப்பு!!

92 பேர் விடுவிப்பு..

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 92 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 25 ஆம் திகதி வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.

இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை குறித்த 92 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.

வவுனியாவில் நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

நடத்துனரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (09.07.2020) காலை 5.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காலை 8.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் நடத்துனர் கடந்த 03.07.2020 பருத்தித்துறை பகுதிக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

அவரின் இடமாற்றம் நடத்துனரை பழிவாங்கும் செயற்பாடு என தெரிவித்து இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை 5.30 மணி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக பயணிகள் சிரமத்தினை எதிர்கொண்டிருந்த போதிலும் வெளிமாவட்ட இ.போ.ச பேரூந்துகள் , தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தமையினால் பயணிகளுக்கு பெரிதளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை

அதன் பின்னர் 10 நாட்களுக்குள் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளர் ஷாகீர் உத்தரவாதம் அளித்தமையினையடுத்து இ.போ.ச வவுனியா சாலை ஊழியர்களின் போராட்டம் காலை 8.30மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இ.போ.ச வவுனியா சாலையின் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர் தென்னிலங்கையில் திடீரென மரணம் : கொரோனா என சந்தேகம்!!

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் கொண்டு சென்ற கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

டக் இயந்திரத்தில் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாய் துறைமுகத்தில் இருந்து தாய்வான் நோக்கி பயணித்த இந்த கப்பலின் மூன்றாம் அதிகாரியே இவ்வாறு திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்.

கப்பலில் இருந்த நோயாளியை காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக காலி துறைமுக பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் 52 வயதுடையவர் எனவும் கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த வெளிநாட்டவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பீசீஆர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய உயிரிழந்த நபரின் சடலம் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு செல்லப்பட்டுள்ளது.

13 வயது மாணவனை காதலித்து மணந்த ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்!!

ஆசிரியைக்கு நேர்ந்த..

அமெரிக்காவில் 13 வயது மாணவனை காதலித்து திருமணம் செய்து பெரும் ப ரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை புற்றுநோயால் உ யிரிழந்துள்ளார்.

Mary Kay Letourneau என்ற பெண் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனான Vili Fualaau உடன் தவறான தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.

அந்த சமயத்தில் ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் Mary Kay. இந்த நிலையில் சிறுவன் Vili மூலம் மீண்டும் கர்ப்பமான Mary Kay மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது இனி சிறுவன் Vili உடன் எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என நீதிமன்றம் Mary Kayக்கு உத்தரவிட்டது.

இதன்பின்னர் குழந்தையை பெற்றெடுத்த Mary Kay நீதிமன்றத்தின் உத்தரவை மீறி Vili உடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அவர் கர்ப்பமானார், இந்த முறை அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சிறையிலேயே குழந்தை பெற்றெடுத்த Mary Kay 2004ஆம் ஆண்டு விடுதலையானார். இதன் பின்னர் வாலிபனாக ஆன Vili-ஐ திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இந்த தம்பதி 12 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் Vili தனது மனைவி Mary Kayயிடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்த சூழலில் 58 வயதான Mary Kay திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய Mary Kay கடைசி காலத்தில் உடல் எடை குறைந்து, மிகவும் அவதிப்பட்டு பரிதாப நிலையில் இறந்ததாக தெரியவந்துள்ளது.

தடம் மாறி ஏரியில் விழுந்த பேருந்து : கோர விபத்தால் 21 பேர் பலி : வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!!

கோர விபத்தால்..

சீனாவில் பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 21 பேர் ப லியாகியுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருக்கும் பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று கட்டுபாட்டை இழந்தது.

இதனால், பாலத்துக்கும் குறுக்கே தாறுமாறாக சென்ற பேருந்து அங்கிருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இந்த கோர விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உ யிரிழந்ததாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்தும் எந்த விளக்கமும் இல்லை.

விபத்து நடத்த இடத்தில் தொடர் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடத்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பேருந்து விபத்துக்குள்ளான போது வைக்கப்பட்டிருந்த காட்சிகள் தற்போது வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

முகப்புத்தக காதல் : யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்!!

முகப்புத்தக காதல்..

முகப்புத்தகம் மூலம் அறிமுகமாகி காதலனாக மாறிய யாழ். இளைஞனின் பணத் தேவைக்காக தனது சொந்த வீட்டில் பல இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாக பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.

குறித்த பெண்ணுடன் அவரது நண்பியும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கம்பளையைச் சேர்ந்த 36 வயதான குறித்த பெண், தனது சகோதரியின் நகைகளைத் திருடியுள்ளதுடன் அவற்றை 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டுக் குடும்பமாக வாழும் குடும்பமொன்றின் மூத்த சகோதரனின் மனைவியான குறித்த பெண்ணுக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனுடன் முகப்புத்தகம் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது.

கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் இந்தப் பெண் இளைஞனுடன் பேசிவந்த நிலையில் நாளடைவில் ஏற்பட்ட அன்பு காதலாக மாறியுள்ளது.

இருவரும் மிக நெருக்கமாக முகப்புத்தகத்தில் பழகிவந்த நிலையில், காதல் இளைஞன் தனக்கு, அவசரமாக பணம் தேவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்பட்ட சிந்தனையில், தனது கணவனின் தம்பியின் மனைவியின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியுள்ளார் குறித்த பெண்.

அத்துடன், தனது நண்பியுடன் இணைந்து கெலிஓயாவிலுள்ள நகைக்கடை ஒன்றில் அவற்றை விற்பனை செய்து 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு நகைகள் விற்கப்பட்டன. இதில், முதற்கட்டமாக ஈஸி காஷ் (Ez Cash) மூலம் 90 ஆயிரம் ரூபாயை யாழ்ப்பாணத்து காதல் இளைஞனுக்கு இந்தப் பெண் அனுப்பியுள்ளார்.

இப்படியிருக்கும்போது, வீட்டியின் அலுமாரியில் இருந்த நகைகள் காணாமல் போயுள்ளதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண்ணின் நண்பியிடம் இருந்த நகை விற்பனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முக்கிய சந்தேகநபரான குறித்த குடும்பப் பெண் கைதாகியுள்ளார்.

இரவு முழுவதும் வீட்டிற்கு வராத மகன் : காலையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அசாருதீன்..

நாகப்பட்டினம் மாவட்டத்தில், பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கு அருகே ஒரு இளைஞரின் ச டலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த ச டலம் குறித்த வி சாரணை நடைபெற்றுவருகின்றது.

இதுகுறித்து காவல்துறையினர், ” வாஞ்சூர் பகுதியை சேர்ந்த பகுருதீன் 19 வயது மகன் அசாருதீன் என்பவர் தான் கொ லை செ ய்யப்பட்டுள்ளார். அவர் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். தினமும் நண்பர்களுடன் அவர் விளையாடச் செல்வது வழக்கம்.

அன்றும் அதுபோல தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடச் சென்றுள்ளார். ஆனால், அசாருதீன் வீட்டிற்கு திரும்பவில்லை. நண்பர்களுடன் தங்கி இருக்க கூடும் என பெற்றோர்களும் நினைத்து இருந்துவிட்டனர்.

இந்த நிலையில் அவர் ம ர்மமான மு றையில் கொ லைசெ ய்யப்பட்டு கி டந்துள்ளார். இதுகுறித்து அவரின் நண்பர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

11 மாத கு ழந்தையை தூ க்கில் தொ ங்கவி ட்டு த ற்கொ லை செய்த இளம்தாய் : சிலம்பரசனால் வந்த வி பரீதம்!!

இ ளம் தா ய்..

தமிழகத்தில் 11 மா த கு ழந்தையை கொ ன் று வி ட்டு தா யும் த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகெ கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன்.

இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மா தத்தில் கு ழந்தையொ  ன்றும் உள்ளது. இந்நிலையில் சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது கவிதாவுக்கு தெரியவந்தது.

இதனால் இரு  வருக்கும் ச ண்டை ஏற்பட்டதாக தெரிகிறது, இதில், ம னமு டைந்த கவிதா இன்று காலை க ணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆ ண் கு ழந்தைக்கு தூ க் கு மா ட் டி வி ட் டு, கவிதாவும் தூ க் கி ட்டு த ற்கொ லை செ ய்துகொ ண்டுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் கவிதா வெளியே வராததால், ச ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் கவிதா ச டலமாக கி டந்துள்ளார்.

கு ழந்தை அதிர்ஷ்டவசமாக உ யி ர் பி ழைத்தது, எனினும் கு ழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிலம்பரசனை கைது செய்த பொலிசார் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளாக மி ரட்டி வந்த சகோதரர்கள் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சி சம்பவம்!!

இளம்பெண்..

தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை து ஷ்பிர யோகம் செய்ததால் ம னமு டைந்த அப்பெ ண் த ற்கொ லை செய்த நிலையில் கைதான கு ற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த சசிகலா கடந்த 24ம் திகதி தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண் டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணையை தொடங்கிய நிலையில், தனது த ங்கையின் சா வில் ம ர்மம் உள்ளதாக சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் கொடுத்தார்.

அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சா வுக்கு காரணம், சசிகலா ச டலத்தை தோ ண்டி இன்னொரு முறை பி ரேத ப ரிசோ தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போ ராட்டத்திலும் ஈடுபட்டார்.

இது தொடர்பான விசாரணையில் தி டுக்கி டும் தகவல் வெளியானது, அதன்படி புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும் தான்.

இவர்கள் சசிகலாவை குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மி ரட்டி வந்ததோடு, 4 வருடமாக அவரை து ஷ்பிர யோகம் செய்து வந்தனர்.

மேலும் சசிகலாவுக்கு நடக்க இருக்கும் திருமணத்தை அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர். இதனால் ம னமு டைந்த சசிகலா தூ க்கு போ ட்டு தொ ங்கியதும் வி சாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சசிகலாவின் ம ரணம் தொடர்பாக புருஷோத்தமன் பொலிசில் ச ரணடைந்துள்ள நிலையில் தேவேந்திரன் த லைம றைவாக உள்ளார்.

இதனிடையில் புருஷோத்தமன் அளித்துள்ள வாக்குமூலத்தில், சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது, அவர் இ றப்பதற்கு முன்னால் கூட க ன்னத்தில் அ றைந்தேன் என கூறியுள்ளார்.

திருமணமான 7 நாளில் புதுப்பெண்ணுக்கு இரவில் வந்த போன் அழைப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

திருமணமான 7 நாளில்..

இந்தியாவில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் க ழுத்து அ றுக்கப்ப ட்டு கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கதாலி கிராமத்தை சேர்ந்தவர் ருச்சி (27). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் 28ஆம் திகதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே ஊரில் இருந்த பண்ணையில் ருச்சி இர த்த வெ ள்ளத்தில் க ழுத்து அ றுப்ப ட்ட நி லையில் ச டலமாக க ண்டெடுக்கப்ப ட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணை நடத்திய நிலையில் தி டுக்கி டும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ருச்சியும், சோஹன்வீர் என்ற இளைஞரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால் குடும்பத்தார் பார்த்த மாப்பிள்ளையை ருச்சி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ருச்சி மீது ஆ த்திரத்தில் இருந்த சோஹன்வீர் அவரை கொ லை செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து ஞாயிறு இரவு 9 மணிக்கு ருச்சிக்கு ஒரு போன் வந்தது, இதையடுத்து இதோ வந்துவிடுகிறேன் என கணவர் மற்றும் வீட்டாரிடம் கூறிவிட்டு ருச்சி வெளியில் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதையடுத்து அவரை இரவு முழுவதும் குடும்பத்தார் தே டினார்கள்.

இந்த நிலையில் அடுத்தநாளான திங்கள் அன்று பண்ணையில் ச டலமாக ருச்சி க ண்டெடுக்கப்பட்டார். அவரை அந்த கோலத்தில் பார்த்த க ணவர் மற்றும் கு டும்பத்தார் அ திர்ச்சியடைந்தனர்.

இந்த கொ லை ச ம்பவம் தொடர்பாக சோஹன்வீரை பொலிசார் கைது செய்துள்ளனர், ருச்சியை போன் செய்து அழைத்த அவர் கூரான ஆ யுதத்தை கொண்டு ருச்சி கழு த்தை அ றுத்து கொ ன்றது தெ ரியவந்துள்ளது.

இலங்கையில் 2 கோடி சொத்து : கணவனுக்கு 15 கோடி சொத்து : அசிலாவைப் பற்றி வெளிவரும் புதிய தகவல்!!

அசிலா..

தமிழகத்தில் க ணவனை கூ லிப்ப டை ஏவி கொ ன்ற இலங்கைப் பெண் சம்பவத்தில், சிறைக் காவலர் மற்றும் வழக்கறிஞர் ஒருவரின் குமாஸ்தா ஆகியோர் உதவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரில் கடந்த மாதம் 25-ஆம் திகதி பிற்பகல் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் யூசுப் என்ற பைனான்ஸ் அதிபர் சென்றுகொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த கூ லிப்ப டையினர் அவரை அ ரிவா ளால் ஓ ட ஓ ட வி ரட்டி கொ லை செ ய்தனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், யூசுப்பை கொ லை செ ய்வதற்கு அவரின் மனைவியான அசிலா கூ லிப்ப டை ஏவியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, அசிலாவை கை து செய்த பொலிசார் திருச்சி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கூ லிப்ப டையினரான சகாதேவன், பிரகாஷ், கேசவன், சந்துரு உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், குவைத்தில் வேலை பார்த்து வந்த போது, ஜோசப், இலங்கையை சேர்ந்த அசிலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜோசப் தனக்கு திருமணம் ஆகியிருந்த நிலையில், யூசப் என பெயர் மாற்றிக் கொண்டு அசிலாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

குவைத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகர் மற்றும் பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்தனர். அபார்ட்மென்ட் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர். அத்துடன் விவசாயப் பன்ணை மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளனர்.

தற்போது அசிலாவின் பெயரில் இலங்கையில் இரண்டரை கோடிக்கான சொத்தும், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் யூசுப் பெயரில் 15 கோடிக்கான சொத்தும் உள்ளது. தமிழகத்தில் அசிலா சொத்துக்களை கவனித்துக் கொள்ள, யூசப் வேலைக்காக அவ்வப்போது குவைத் சென்று வந்தார்.

அப்போது அசிலாவின் நடத்தையில் யூசப்புக்க்கு ச ந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அசிலா தனது அபார்ட்மென்டில் வாடகைக்கு குடியிருந்த திருச்சி சிறையில் காவலராக இருந்த செந்தில்குமார் என்பவரின் உதவியுடன்,

விளார் சாலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் யூசுப் வைத்திருந்த நகை, பணம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவற்றை வங்கி மேனேஜரின் உதவியுடன் உடைத்து எடுத்துவிட்டார்.

இதுதொடர்பாக, யூசுப் 2018-ஆம் ஆண்டு அசிலா, பொலிசார் செந்தில்குமார், வங்கி மேனேஜர் ஆகியோர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால், அசிலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அசிலா திருச்சிக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் இருவருக்கும் பி ரச்னை இருந்து வந்தது. யூசுப், அசிலாவுக்கு சொத்துக்களைத் தர முடியாது என்றும் கூறிவிட்டார்.

மேலும் பல பெண்களுடன் யூசுப்புக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையும் அசிலா க ண்டித்துள்ளார். இந்நிலையில்தான் கூ லிப்ப
டையை ஏவி, யூசுப்பை கொலை செய்ததாக வி சாரணையில் கூறினார்.

மேலும், அசிலாவுக்கும் மயிலாடுதுறை சிறையில் சிறைக் காவலராக இருக்கும் செந்தில்குமாருக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஒருமுறை அசிலாவை யூசுப் அ டித்துள் ளார். அப்போது செந்தில்குமார் அவர்களுடைய அபார்ட்மென்டில் குடியிருந்துள்ளார்.

ச ண்டையில் அ டி தா ங்க மு டியாமல் செந்தில்குமாரின் வீட்டில் அசிலா ஓர் இரவு த ங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது யூசுப், தனது மனைவியுடன் பழகுவது குறித்து செந்தில்குமாரைக் க ண்டித்ததுடன், பொலிசில் புகாரும் அளித்துள்ளார்.

அசிலா திருச்சிக்குச் சென்ற பிறகும் இருவருக்கும் தொடர்பு இருந்தது. அசிலாவுக்கு மேலும் சில ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே யூசுப்பை கொ லை செய்யத் திட்டம் வகுத்துள்ளார். இந்தக் கொ லைக்கு சிறைக் காவலர் செந்திகுமார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் குமாஸ்தா என இருவரும் உதவி செய்துள்ளனர்.

துவக்கத்தில், செந்தில்குமார் மற்றும் குமாஸ்தாவிடமும் பொலிசார் வி சாரணை நடத்தினர். குமாஸ்தா மன்னார்குடி அ.தி.மு.க புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.

அவர் அ ழுத்தம் கொ டுத்ததால், இருவரையுமே இந்தக் கொ லை வழக்கில் பொலிசார் சேர்க்கவில்லையாம். ஆனால், பொலிஸ் தரப்போ இதை மறுக்கிறது.

அசிலாவிடம் செந்தில்குமார் பணம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்கும்படி கடந்த மாதம் அவர் மீது தஞ்சை மாவட்ட காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாகத்தான் செந்தில்குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அவரைத் தேவையில்லாமல் இந்தக் கொ லையில் தொடர்புபடுத்தி சிலர் கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.

வேறு ஜாதி பெண்ணுடன் காதல் : பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்த காதலன் : அதன் பின் நடந்த விபரீதம்!!

வேறு ஜாதி பெண்ணுடன் காதல்..

தமிழகத்தில் கா ணாமல் போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). கொத்தனராக வேலை செய்து வரும் இவர், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் கண்டிப்பாக திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்துள்ளனர். அதே போன்று இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எ திர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 பேருமே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, கடந்த திங்கட் கிழமை மகேந்திரன் தன் காதலியை ராஜபாளையம் புது பஸ் ஸ்டேண்ட் அருகில் இருக்கும் தன் பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இதனிடையே பெண்ணை கா ணாமல், அவர்கள் வீட்டில் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில், காதலியும் நேற்று பிற்பகல் காவல்நிலையத்திற்கு சென்றார். அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு மகேந்திரன் வந்துவிட்டார்.

ஆனால் நேற்று மாலை முதல் மகேந்திரனை கா ணவில்லை. இதனால் உறவினர்கள் பதட்டமடைந்து பல இடங்களில் தேடினர். இந்நிலையில் இன்று காலை சங்கரன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள கிடங்கு அருகே மரத்தில் தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் மகேந்திரனின் உ டல் கண்டெடுக்கப்பட்டது.

பெண்ணின் உறவினர்கள்தான் ம கேந்திரனை க ட த் தி ச் சென்று கொ ன் று வி ட்டதாக அவரது உறவினர்கள் பு கார் தெரிவித்துள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மகேந்திரனின் உறவினர்கள், பெண் வீட்டில் போனில் மி ரட்டினர், அதன் பின்பு தான் மகேந்திரன் இ றந்துள்ளான், இதனால் இது கொ லை தான் என்று கூறி வருகின்றனர்.

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் பணம் வழங்கவுள்ள அரசு!!

பிரித்தானிய குடியுரிமை..

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது.

இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும், மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குடனும் அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது.

இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு வவுச்சர் வழங்கப்படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்.

வர்த்தக உரிமையாளர்களுக்கு ஐம்பதாயிரம் பவுண்டுகள் வியாபாரக்கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக வழங்கப்படவுள்ளது. ஆளும் அரசின் இந்தத் திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்கப்படமாட்டாது என தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர்களுக்கு மட்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்.

தொடுகை இல்லாமல் கையடக்க தொலைபேசி ஊடாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் இளைஞன்!!

சௌதுன் நஜ்ஜாஸ் நஜிமுல்ஹக்..

எந்தவிதமான தொடுகையும் இல்லாமல் ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக ஒலிச்சைகை வாயிலாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறைமையை இளைஞரொருவர் கண்டுபிடித்துள்ளார்.

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையை சேர்ந்த 23 வயதுடைய சௌதுன் நஜ்ஜாஸ் நஜிமுல்ஹக் எனும் இளைஞரே இவ்வாறு எந்தவிதமான தொடுகையும் இல்லாமல் ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக ஒலிச்சைகை வாயிலாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறையைக் கண்டுபிடித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் போன்ற தொடுகையினால் பரவக்கூடிய தொற்று நோய்களிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தற்கால சூழலில் அலுவலகங்கள் பாடசாலைகள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மின்சார உபகரணங்களை,

தொடுகை முறையில் செயலிழக்கச் செய்வதை தவிர்த்து ஒலியினூடாக கட்டுப்படுத்தி தொடுகை மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே இதனை வடிவமைத்துள்ளார்.

இதன் மூலம் மின் உபகரணங்களை அருகில் இருந்து மட்டுமல்லாது தொலைவிலுள்ள எப்பாகத்திலிருந்தும் குறிப்பாக இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இணைய வழியாக ஒலிச்சைகை மூலம் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

இதனை மிகக் குறைந்த செலவில் செயற்படுத்த முடியும் எனவும், தனவந்தர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வரும் பட்சத்தில் மேலும் அபிவிருத்தி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார்.