நள்ளிரவில் காதலியை பார்க்க சுவர் ஏறி குதித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

நள்ளிரவில்..

தமிழகத்தில் காதலியைப் பார்ப்பதற்கு நள்ளிரவில் காதலன் சுவர் ஏறி கு தித்ததால், அவர் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து சி க்கிக் கொண்டார்.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது கடைக்கு வரும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் கடைகள் திறக்கப்படாததால் காதலியை பார்க்க முடியாமல் ஜிலான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜிலான், திடீரென காதலியின் வீட்டருகே வந்தபோது அவருக்கு காதலியின் ஞாபகம் வந்துள்ளது.

இதனால் சுவர் ஏறி கு தித்து உள்ளே செல்ல முயற்சிசெய்தபோது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து திருடன் என நினைத்து கூச்சலிட்டுள்ளனர். இதனால் பீதியில், ஜிலான் அங்கிருந்து த ப்பித்து ஓ ட நினைத்து, இரவு நேரத்தில் கிணறு இருப்பது தெரியாமல், 75 அடி ஆழமுள்ள பராமரிக்கப்படாத கிணற்றில் வி ழுந்து வ சமாக சிக்கிக்கொண்டார்.

கிணற்றில் தண்ணீர் ஏதும் இல்லாமல் வறண்டு போயிருந்ததால் உ டலில் கா யங்கள் ஏற்பட்டுள்ளது. கிணற்றில் இருந்து த ப்பிப்பதற்காக சத்தம்போட்டு உதவி கேட்டுள்ளார்.

காதலனின் கூச்சலை கேட்ட காதலி மற்றும் அவரின் பெற்றோர் வந்து பார்க்கும்போது ஜிலான் பராமரிப்பு இல்லாத பாழுங் கிணற்றில் விழுந்து உ யிருக்கு ஆ பத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஜில்லானை கிணற்றில் இருந்து மீ ட்டனர். உடலில் அதிகமான உள்காயங்களுடன் மீட்கப்பட்ட ஜிலான் அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வெளியே பரிதாபமாக இறந்த இளைஞன் : கதறி அழும் தாய்!!

பரிதாபமாக..

இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சைக்கு மறுத்ததால், கொரோனா அறிகுறிகள் உள்ள மனிதர் சாலையில் இ றந்து கிடந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை க ண்கலங்க வைக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை 769,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21,161 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 31 வயது இளைஞர் கடந்த புதன்கிழமை பிற்பகல் தெலுங்கானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வெளியே சரிந்து இ றந்து கி டந்த வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர், மூ ச்சு தி ணறல் காரணமாக ஈ.சி.ஐ.எல் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் 10 நாட்களுக்கு முன்பு இருந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்து மருத்துவமனையில் சுமார் 10 நிமிடங்கள் ஆக்ஸின் வழங்கப்பட்ட நிலையில், அங்கிருந்த மருத்துவர்கள் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அப்போது ஆம்புலன்சும் கிடைக்கவில்லை, ஆட்டாவில் செல்வதற்காக வெளியில் காத்திருந்த போது, குறித்த இளைஞன் சரிந்து உ யிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த இளைஞருடன், சகோதரி மற்றும் தாயார் இருந்துள்ளனர். இது போன்ற அவசர நிலையில் யாரும் எங்களுக்கு உதவவில்லை என்று உ யிரிழந்த இளைஞனின் சகோதரி வே தனையுடன் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் சந்தேகிக்கப்படும் நோயாளிகள், அனைவரும் அரசு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. அப்படி தான் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளது.

அதிகாரிகளை கைக்குள் போட்டு 34 வயதில் பெண் செய்த பித்தாலாட்டம் : சிக்கியது எப்படி?

ஸ்வப்னா சுரேஷ்..

கேரளாவையே உலுக்கி வரும் தங்க க டத்தல் விவகாரத்தில், சிக்கியுள்ள ஸ்வப்னாவைப் பற்றி பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயரில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது.

மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோ தனையிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் க டத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோ தனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர்.

அதன் படி, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலை சோ தனையிட்ட போது, 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அ திர்ச்சியடைந்தனர்.

அதன் பின் விசாரித்த போது, இந்த க டத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த க டத்தல் விவகாரம் கேரளவையே உ லுக்கியுள்ள நிலையில், ஸ்வப்னா தங்க க டத்தலை எப்படி நடத்தினார்? எப்படி இது எல்லாம் நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதாகும் ஸ்வப்னா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்துள்ளார். அபுதாபி விமான நிலையத்தில் வேலை செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகியுள்ளது.

அதன் பின் 2014-ஆம் ஆண்டு திடீரென்று கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, கேரளாவிற்கு திரும்பிவிட்டார்.

பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்த போது, சக ஊழியர் மீது பொய்யான பு கார் கொடுத்ததால், அங்கே இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக வேலைக்கு சேர்ந்த போது தான், இவருக்கு தங்கம் க டத்தும் எண்ணம் தோன்றியுள்ளது.

அந்த நேரத்தில் தான் மீண்டும் ஒரு பி ரச்சனையில் சி க்கிய இவர், அந்த தூதரக பணியில் இருந்தும் வெளியேறினார்.

இதற்கு பிறகு கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் கான்ட்டிராக்ட் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னா, அந்த நேரத்தில், தன் மீதான வழக்குகளை மறைத்து வேலைக்கு சேர்ந்ததால் பொலிசில் சிக்கியுள்ளார்.

ஆனால், மேலிடத்தில் இருந்து அழுத்தம் வரவே, விசாரணையில் இருந்து பொலிசார் பின் வாங்கியுள்ளனர். கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்தால், ஏற்கனவே வேலை பார்த்த தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பிலேயே ஸ்வப்னா இருந்து வந்துள்ளார்.

அப்போதுதான், போ லி ஆவணங்கள் தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந்தஸ்தை த வறாக பயன்படுத்தி, தங்க க டத்தலையும் செய்ய ஆரம்பித்தார். வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோ தனை செய்ய முடியாது என்ற பொதுவான விதியை ஸ்வப்னா நன்கு அறிந்துள்ளார்.

அதை, ஸ்வப்னா சரியாக பயன்படுத்தி கொண்டு காய் நகர்த்தியுள்ளார். அப்படி ஒருமுறை தங்கம் க டத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம். இப்படி தான் ஸ்வப்னா அதிகாரிகளிடம் சி க்கியுள்ளார்.

தூதரக அதிகாரிகளை சரி கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஸ்வப்னா நிறைய பார்ட்டிகள் தந்திருக்கிறார்.

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, செல்வார்களாம்.. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, ஆட்டம் காட்டி உள்ளார் ஸ்வப்னா.

அத்துடன் தங்க வேட்டையையும் சேர்த்து நடத்தி உள்ளார். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, நடிகை பூர்ணாவை மி ரட்டிய கும்பலுக்கும், ஸ்வப்னாவுக்கும் தொடர்பு உள்ளதாக பொலிசாரின் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

பூர்ணாவை கடந்த சில நாட்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பல் மி ரட்டியது. அவர்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த கும்பல் தங்க க டத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.

ஆனால் இப்போதுதான், தங்கம் க டத்திய ஸ்வப்னாவுக்கும் இந்த கு ம்பலுக்கும் தொடர்பு உள்ளது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. தங்க க டத்தலுக்காக மொடல் அழகிகள் மற்றும் நடிகைகளை அவர்கள் பயன்படுத்தியதும் பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த க டத்தல் கும்பல் பற்றி பொலிசார் சுங்க துறைக்கு சொன்ன பின்பு தான், ஸ்வப்னாவுடன் தொடர்பு என்பதே அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

உண்மையை மறைத்து அரங்கேறிய திருமணம் : துடிக்க துடிக்க உ யிரிழந்த புதுப்பெண்!!

புதுப்பெண்..

திருமணமான 8 மாதங்களில் புதுப்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின் கணவர், மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக நீலவேணி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீலவேணி அ லறல் ச த்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அப்போது நீலவேணி உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்ட விவரம் தெரிய வந்தது. ஆனால் அந்த இடத்திலேயே ப ரிதாபமாக அவர் இ றந்து போ னார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விஷ்ணு ஏற்கனவே ஒரு பெண்ணை மணம் செய்த விவரம் நீலவேணிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வது திருமணம் செய்ததால் இதுகுறித்து கணவன்-மனைவிக்குள் அ டிக்க டி த கராறு ஏ ற்பட்டது. நேற்று காலையும் இதேபோல த கராறு ஏற்பட ஆ த்திரத்தில் நீலவேணி ம ண்ணெண் ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது.

நீலவேணிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருப்பதால் விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய இன்றைய தங்கம் விலை!!

இன்றைய தங்கம் விலை..

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் ரூபாவாகும். 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக காணப்படுவதுடன், செய்கூலி மற்றும் சேதாரத்துடன் 22 கரட் தங்க நகையின் இன்றைய விலை 97,000 ரூபாவாகும்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு பவுண் தங்கத்தின் பெறுமதி 70 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான சில மாதங்களிலே வீட்டில் ச டலமாக கிடந்த புதுமணத்தம்பதி : அதிர்ச்சிக் காரணம்!!

புதுமணத் தம்பதி..

கேரளாவில் திருமணமான சில மாதங்களுக்குள் புதுமணத் தம்பதியினர் த ற்கொ லை செ ய்து கொ ண்ட நி லையில், உ யிரிழந்த பெ ண்ணுக்கு கொ ரோனா பா திப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் Chennithala-வில் கடந்த செவ்வாய் கிழமை புதுமணத் தம்பதியினர் தற் கொ லை செ ய்து கொ ண்டனர். இது தொடர்பாக வி சாரணை நடைபெற்று வரும் நிலையில், உ யிரிழந்த 20 வ யது பெ ண்ணுக்கு கொ ரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Mavelikara-வில் உள்ள Thulasi Bhavan-ஐ சேர்ந்தவர் Devika Das. இவர் Pandalam-ன் Unamkotuvila-வை சேர்ந்த Jithin(30) என்பவரை திருமணம் செய்து Chennithala-வில் உள்ள மகாத்மா பள்ளி அருகே இருக்கும் வாடகை வீட்டில் ஒன்று வசித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த தம்பதி கடந்த செவ்வாய் கிழமை தூ க் கி ட் டு த ற்கொ லை செ ய்து கொண் டனர். Jithin தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில், Devika Das ப டுக்கையிலும் ச டலமாக இ றந்து கி டந்துள்ளார்.

Devika Das இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே Jithin-க்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அப்போது அவர் மை னர் என்பதால், Jithin மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனால் Devika Das அரசாங்கம் வழங்கிய இடத்தில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து இந்த தம்பதி கடந்த 6-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டதால், அதன் பின் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தான் இருவரும் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளனர்.

Jithin ஓவியர் என்பதால் போதுமான வருமானம் இல்லாததால், க டும் சி ரமங்களை சந்தித்து வந்த இந்த த ம்பதி இ ப்படி ஒரு மு டிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் உ யிரிழந்த Devika Das-க்கு கொ ரோனா இருப்பது உறுதி செய்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக வி சாரணை மேற்கொண்ட 10 பொலிசார் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்த ச ம்பவத்தை வி சாரித்த பொலிசார் கொ ரோனா ஏதும் நமக்கு பரவியிருக்குமோ என்ற பீ தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் கணவருக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்புலன்ஸ் வர வழியில்லை : கர்ப்பிணிப் பெண்ணை தோளில் சுமந்து செல்லும் சோகம் : கண்ணீர் வீடியோ!!

கர்ப்பிணிப் பெண்..

அவசர ஊர்தி வர வழியில்லாததால், பெண்மணியை தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொண்டகன் மோஹன்பேடா பகுதியை சார்ந்த பெண்மணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், இந்த கிராமத்திற்கு அவசர ஊர்தி வர சரிவர பாதை இல்லை.

இதனால் அவசர ஊர்தி விரைந்து வந்து மேற்படி வர இயலாது சிக்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் உதவி கேட்கவே, இதே பகுதியை சார்ந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் பெண்ணை கம்புகளுக்கு நடுவில் தொட்டில் போல கட்டி, பெண்ணை அமர வைத்து தூக்கி சென்றனர்.

பின்னர் பெண்மணி அங்குள்ள மருத்துவமனையில் அவசர ஊர்தி மூலமாக அனுமதி செய்யப்பட்டு, அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்த வசியம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும், அந்த கிராமத்திற்கு சாலை சேவையை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சீறிப்பாயும் வாகனங்கள் : பார்வையற்றவருக்காக பேருந்தின் பின்னால் ஓடிய பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

பார்வையற்றவருக்காக..

கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது – இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்பை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லி வைத்துள்ளார்.

அதன்படி இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் மீது வைத்திருக்கும் அன்பினாலேயே இந்த பூமி உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகையல்ல.

பல இக்கட்டான சூழ்நிலையில் நம்மில் பலருக்கு யாதொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்தவர்கள் பட்டியல் என்று இருக்கத்தான் செய்யும்.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் பார்வையற்ற நபர் ஒருவர் வாகனங்கள் பாயும் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். கணவரின் வருகைக்காக காத்திருக்கும் பெண் ஒருவர் அந்த பார்வையற்ற நபரின் உதவிக்கு ஓடிச் செல்கிறார்.

இதனிடையே, இவர்களை கவனித்த பேருந்து ஒன்று சற்று தள்ளிச் சென்று நிற்கிறது. உடனே பெருந்தின் அருகே ஓடிச் சென்ற அந்த பெண், பார்வையற்ற நபருக்காக கொஞ்சம் காத்திருங்கள் என கூறி, திரும்பவும் அந்த பார்வையற்றவரின் அருகாமைக்கு ஓடி வருகிறார்.

தொடர்ந்து அந்த பார்வையற்றவரை கையைப்பிடித்து அழைத்து வந்து பேருந்தில் ஏற்றிவிட்டு செல்கிறார். இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!!

கொரோனா..

நாட்டில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்களுள் 56 பேருக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த நபர் கடந்த மூன்று மாதக்காலமாக கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்க உட்படுத்தப்பட்ட நபராவார்.

இதேவேளை, இன்று காலை மாரவில பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இணங்காணப்பட்டுள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட உணவில் உக்காத பொலித்தின் : பேஸ்புக் பதிவால் சர்ச்சை!!

உணவில் உக்காத பொலித்தின்..

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்பட்ட Chicken Sausages பக்கட்டில் இருந்த Sausages ஒன்றுக்குள் பொலித்தின் துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அவர் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டடுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி மாலை கொள்வனவு செய்யப்பட்ட Sausages பக்கட்டில் இந்த பொலித்தின் துண்டு காணப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பெரிய நிறுவனத்தினால் இந்த Sausages தயாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நம்பி கொள்வனவு செய்யததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறியவர்களுக்கு உணவு வழங்கும் போது இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அதனை உறுதி செய்யும் வகையில் Sausages புகைப்படங்களையும் அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உ யிரிழப்பு!!

விபத்தில்..

கிளிநொச்சி – பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உ யிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு மாடுகளை மோ தியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து டிப்பர் வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக 3000 முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு!!

முகக் கவசங்கள்..

தற்போது உலக நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களையும் மற்றையவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் வவுனியா நகரில் இலவசமாக மூவாயிரம் முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சி தொலைத்தொடர்பு நிலையத்தினால் இலங்கை முழுவதும் ஒரு மில்லியன் முகக்கவசம் (மாஸ்க்) விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் இந் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 72 பேர் விடுவிப்பு!!

72 பேர் விடுவிப்பு..

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 72 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் சிக்கியிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 25 ஆம் திகதி வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.

இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை குறித்த 72 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.

Hand Sanitizer பயன்படுத்துவோருக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!!

கொழும்பில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி Hand sanitizer எனும் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மாலபே, தலாஹேன பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரி சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வகையான சுத்திகரிப்பு கிரீமில் ஒரு வகை வண்ண கலவையைப் பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த கிரீம் வகை 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலாவதியாகியுள்ளது.

இந்த கிரீம் வகையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Hand sanitizer எனும் கிருமிநாசினிகள் கடைகளுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் காணப்பட்டதென சுகாதார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தை நடத்தி சென்ற சந்தேக நபர், இன்னமும் அந்த கிரும நாசினிகளை கடைகளுக்கு விடுவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கிருமி நாசினிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தான் கொள்வனவு செய்த கீரீம் வகை காலாவதியாகிய பின்னர் கிருமி நாசினி தயாரித்து விற்பனை செய்வதற்கு தனக்கு எண்ணம் வந்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

சுற்றிவளைப்பின் போது மீட்கப்பட்ட Hand sanitizer பெறுமதி 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பித் கொள்வதற்காக அதிகளவானோர் Hand sanitizer எனும் கிருமி நாசினியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரழிக்கப்பட்ட 17 வயது பாடசாலை மா ணவி உ யிரிழப்பு!!

பாடசாலை மா ணவி..

இரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒ ருவரால் பா லியல் வ ன்புண ர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மா ணவி இன்று உ யிரிழந்துள்ளார்.

உறவினர்களின் தகவல்படி, “குறித்த மாணவி உயர் தரம் கற்பதற்கு புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட இருந்தார். இதன்படி கடந்த 5ம் திகதி புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றிருந்தார்.

எனினும், அன்று மாலை வரை மா ணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் 24 வயதுடைய நபருக்கு சொந்தமான வீட்டில் மா ணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.” என்று தெரியவருகிறது.

இதனையடுத்து பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி இன்று உ யிரிழந்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வீட்டு வளவிற்குள் புதையல் : மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்!!

வீட்டு வளவிற்குள் புதையல்..

வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அந்த வீட்டிற்கு பின்னால் புதையல் உள்ளதாகவும், உ யிரிழந்த தந்தை கனவில் வந்து அதனை கூறியதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தந்தை சொன்ன தகவலுக்கு அமைய இருவரின் உதவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வேயங்கொடை பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இரு பெண்களும் கைது செய்யபட்டுள்ளனர். மற்றைய இருவரும் தப்பி ஓடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.