சந்தேகமாக உள்ளது : தந்தை த ற்கொ லை செய்து கொண்டது குறித்து அவரால் வாழ்க்கையை இழந்த மகள் அம்ருதா!!

அம்ருதா..

தெலுங்கானாவில் மருமகனை ஆணவக் கொ லை செய்த மாருதி ராவ் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அது குறித்து அவர் மகள் அம்ருதா பேசியுள்ளார்.

அம்ருதா என்ற இளம் பெ ண்ணும், பிரணய்குமார் என்ற இ ளைஞரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரத்தை அறிந்த அம்ருதாவின் தந்தையான கோடீஸ்வர தொழிலதிபர் மாருதி ராவ் எ திர்ப்பு தெரிவித்தார்.

ஏனெனில் நாம் உயர்ந்த சாதி என்பதால், தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரணய்குமார் என் மருமகனாக வருவதற்கு ஒப்பு கொள்ள மாட்டேன் என கூறினார்.

ஆனால் தந்தையின் மி ரட்டலை மீறி அம்ருதா கா தலனை கரம் பிடித்தார். பின்னர் 2018ல் அவர் கர்ப்பமாக இருந்த போது கணவர் பிரணய்குமாருடன் மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது கூ லிப்ப டையை சேர்ந்த ஆட்கள் பிரணய்குமாரை வெ ட்டிக் கொன்றனர். இதற்காக மாருதி ராவ் கூலிப்படைக்கு 1 கோடி கொடுத்தது பொலிஸ் வி சாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாருதி ராவை பொலிசார் கைது செய்த நிலையில் பின்னர் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.

இந்த சூழலில் கடந்த 29ஆம் திகதி அவருக்கு சொந்தமான ஷெட்டில் ஒரு ச டலம் கிடந்தது, இதையடுத்து பொலிசார் மீண்டும் மாருதி ராவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மாருதி ராவ் இன்று அவரது பண்ணை வீட்டில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார், அவர் த ற்கொ லை செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய அவர் மகள் அம்ருதா, என் க ணவர் கொ ல்லப்பட்ட பின்னர் நான் என் த ந்தை மாருதி ராவுடன் தொடர்பில் இல்லை. அவருடன் நான் அதன் பின்னரே எந்த சூழலிலும் பேசவில்லை. மாருதி ராவ் விடயத்தில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு இன்னும் ச ந்தேகம் உள்ளது.

அவர் இ றந்த செய்தியை ஊடகங்கள் மூலமாக மட்டுமே நாங்கள் தெரிந்து கொண்டோம். எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பதால் நான் இதுகுறித்து மேலும் பதிலளிக்க முடியாது என கூறியுள்ளார்.

உலக சம்பியனான அவுஸ்திரேலியா : மோசமாக தோற்ற இந்தியா : கண்ணீர் விட்டு அழுத சோகம்!!

உலக சம்பியனான அவுஸ்திரேலியா..

பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்ததால், அந்தணியின் இளம் வீராங்கனை க ண்ணீர் விட்டு அ ழுத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோ துவதால், ரசிகர்களுடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அவுஸ்திரேலியா அணியின் ஹீலே 39 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன் பின் வந்த அவுஸ்திரேலியா அணியின் தலைவி மெக் லானிங் 16 ஓட்டங்களில், தீப்தி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய கார்ட்னர் 2 ஓட்டங்களுடன்,தீப்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெயன்ஸூம் 4 ஓட்டம் பூனம் யாதவ் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையும் அதிரடியாகவும் விளையாடிய மூனி 54 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்ததால், அந்தணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் ஷபாலி வர்மா வெறும் 2 ஓட்டங்களில் பெளவிலியன் திருபினார். 2 பவுண்டரிகள் விளாசி சிறிது நம்பிக்கையை கொடுத்த மந்தானாவும் 11 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணியின் நம்பிக்கை அப்படியே போனது.

இதனால் அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி இறுதியாக 99 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ஓட்டங்கள் எடுத்தார். முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்ளுக்கு போட்டியின் முடிவு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் 16 வயது இளம் வீராங்கனையும், துவக்க வீரருமான ஷபாலி வர்மா இந்திய அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளால், அப்போதே தோல்வியை நினைத்து டீ சார்ட்டால் முகத்தை மூடி அழுதார். இதே போன்று மற்ற வீராங்கனைகள் சிலரும் போட்டி முடிந்த பின் அழுதனர்.

இந்த உலகக்கோபை தொடரில் இந்திய அணிக்கு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை கொடுத்து, ரசிகர்களை ஷபாலி வர்மா பெரிதும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை : கழிவறையில் தொலைபேசியை பயன்படுத்தினால் கொரோனாவுக்கு அதிக வாய்ப்பு!!

கொரோனா வைரஸ்

மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்று நோயாக மாறி வருகிறது. மனிதர்களிடமிருந்து பரவும் இந்த நோய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், கையை சுத்தம் செய்யாமல் அந்த பொருளை தொட்டால், அது குறித்த பொருளில் பரவி, அதன் பின் அந்த பொருளை தொடும் நபருக்கும் பரவும் நிலை உள்ளது.

இதன் காரணமாக அடிக்கடி 20 நிமிடங்களுக்கு ஒருதடவை கைகளை கழுவும் படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மொபைல் போன்களை கழிப்பறையில் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்க்கெட்டிங் ஏஜென்சியான Jellybean நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் 54 சதவீதம் பேர் மொபைல் போன்களை கழிப்பறைக்கு எடுத்து செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு, பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக மொபைல் போன்கள் வைத்திருப்பர்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் அந்த மொபைல் போன்களை தொடும் போது, அந்த திரையில் சுமார் 9 மணி நேரம் கொரோனா தங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதன் காரணமாக அடுத்த முறை நீங்கள் தொலைப்பேசியை பயன்படுத்தும் போது, உங்களை தவிர வேறு யாரேனும் பயன்படுத்தியிருந்தால் நிச்சயமாக கை கழுவுவது நல்லது, இது மிகவும் கடினம். ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு இதை செய்வது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் கேவில் கூறுகையில், நீங்கள் கைகளை கழுவலாம், ஆனால் உங்கள் ஸ்மார்ட்போன் திரையைத் தொடத் தொடங்கினால், உங்கள் முகத்தைத் தொட்டால் அது தொற்று நோய்க்கான பாதையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

லிவர்பூல் Human Biology and Biological Sciences பல்கலைக்கழகத்தின் அறிவியல், விரிவுரையாளர் மருத்துவர் பெர்பூட்ட எமகை, இந்த வைரஸ் மனித கழிவில் மிக நீண்ட காலம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கழிப்பறைக்கு சென்றுவிட்டு, சுத்தப்படுத்தி விட்டு வந்தாலும், அங்கு கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா,வைரஸ் போன்றவை ஒளிந்திருக்கும்.

அப்படி நாம் அங்கு கழிப்பறையில் மொபைல் போனை பயன்படுத்தினோம் என்றால், அதில் இருந்து வெளிவரும் சில துகள்களை வெளியிடும் போது, அவை கழிவறையில் பரவி அதன் பின், வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களாக மறலாம்.

இதன் மூலம் கொரோனா பரவலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் பரவலுக்கு கழிவில் இருக்கும் துகள்களில் உண்மையான ஆபத்து இருப்பதாக கூறப்படுவதால், கொரோனா பீதி அடங்கும் வரை மொபைல் போன்களை கழிவறையில் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பழக்கங்களை உடனே விட்டு விடுங்கள் : இல்லையேல் நிச்சயம் கொரோனா தாக்குமாம்!!

கொரோனா வைரஸ்

இன்று உலக மக்களை அ ச்சுறுத்தும் வைரஸாக கொரானா வைரஸ் உருவெடுத்துள்ளது. சீனாவில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பீ தியில் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஏனெனில் இந்த வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்களைத் தான் விரைவில் தா க்குகிறது. எனவே கொரோனா வைரஸின் தா க்கத்தில் இருந்து தப்பிக்க நினைத்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் தற்போது ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பழக்கங்கள் எவையென்று பார்ப்போம்.

ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய தாக்கத்தை மன அழுத்தம் ஏற்படுத்தும் நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பது போன்று உணர்ந்தால், உடனே அதைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

மோசமான உணவுகளை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படச் செய்யும். எனவே இந்த பழக்கத்தை கைவிடுவது நல்லது.

தற்போது வைரஸ் பரவி வருவதால், முடிந்தவரை வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

உங்களுக்கு ம து பழக்கம் இருப்பின், அப்பழக்கத்தை முடிந்தவரை கைவிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஆல்கஹாலையும் அதிகமாக உட்கொண்டால், அது உடலைத் தா க்கும் கிருமிகளை அழிக்கும் இரத்த வெள்ளையணுக்களின் திறனை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும்.

போதுமான தூக்கம் ஒருவருக்கு இல்லாவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலம் மீண்டும் கட்டமைப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல், பலவீனமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே போதுமான தூக்கம் வேண்டும்.

உங்கள் உடல் எடையை எப்போதும் சரியான அளவில் பராமரித்து வர முயற்சி செய்யுங்கள். ஏனெனில் உடல் பருமன் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இந்த செயல்கள் தடைப்படும். எனவே தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

சில பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்படாத மருந்துகள், உடலில் நச்சுக்களின் அளவை அதிகரித்துவிடுவதோடு, அதிகமாக பயன்படுத்தும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனமாக்கும். ஆகவே அதிகளவு ஆன்டி-பயாடிக்குகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

போதுமான சுகாதாரமின்மை உடலைத் தா க்கும் கிருமிகளின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கிவிடும். எனவே தினமும் தவறாமல் குளிப்பது போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை தவறாமல் பின்பற்றுங்கள்.

அதிகப்படியான கெமிக்கல் வெளிபாடு, புறஊதாக் கதிர்கள் மற்றும் கதிரியக்க வெளிபாடுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து பலவீனப்படுத்திவிடும். எனவே இந்த பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள்.

ஒருவர் அதிகமாகவோ அல்லது ஒன்று இரண்டோ சி கரெட் பிடித்தாலும் அல்லது பு கைப்பிடிப்போரின் அருகில் இருந்து, அந்த புகையை சுவாசித்தாலும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். எனவே இந்த பழக்கம் இருந்தால், உடனே கைவிடுங்கள்.

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடலில் நச்சுக்கள் ஆங்காங்கு தேங்கி, கிருமிகளை எதிர்த்துப் போ ராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் முதலில் பாதிக்கும். எனவே தினமும் தவறாமல் போதுமான நீரைப் பருகும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வவுனியாவை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!!

வன்னித் தேர்தல் தொகுதி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 287013 பேர் வாக்களிக்களிப்பதற்காக 353 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 119811 பேர் வாக்களிப்பதற்காக 141 பேரும் மன்னார் மாவட்டத்தில் 88842 பேர் வாக்களிப்பதற்காக 76 வாக்களிப்பு நிலையங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 78360 வாக்களிப்பதற்காக 136 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை 3 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் வெ டிபொருள் மீட்பு!!

மரக்காரம்பளை பகுதியில்..

வவுனியா – மரக்காரம்பளை பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட செல்லொன்று விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதிக்கு அண்மித்த பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இன்று காலை ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததுடன் அந்த இடத்தில் பா துகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை இன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பகுக்கு சென்ற மடுகந்தை விசேட அதிரடிப் படையினர் செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

குறித்த இடத்திற்கு அண்மித்த பகுதியில் முன்பு இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் வாழும் 60 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!!

இத்தாலியில்..

இத்தாலியில் 11 மில்லியன் மக்கள் வாழும் Lombardy மாகாணம் முடக்கப்பட்டுள்ளமையினால் அங்கு வாழும் இலங்கையர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அங்குள்ள ஜிம்கள், குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

இத்தாலியில் சுமார் 104000 இலங்கையர்கள் வாழும் நிலையில், 60 ஆயிரம் இலங்கையர்கள் Lombardy மாத்திரம் வாழ்வதாக கூறப்படுகின்றது.

குறித்த மாகாணங்கள் முடக்கப்பட்டமையினால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் 230 பேர் உ யிரிழந்துள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 50 பேர் உ யிரிழந்துள்ளனர். 5883 பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் பெ ண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவை த்த பின் தூ க்கிட்டு த ற்கொ லை!!

கு டும்பப் பெ ண்

செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் கு டும்பப் பெ ண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு தீ வை த்த பி ன்னர் அ தே வீ ட்டினுள் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார். இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (06.03.2020) இரவு 38 வ யது ம திக்கத்தக்க அகிலேஸ்வரி என்ற கு டும்பப் பெ ண்ணே த னது வீ ட்டிற்கு தீ வை த்த பி ன்னர் அவ் வீ ட்டினுள்ளேயே தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.

இவர் கு டும்பப் பி ரச்சனை கா ரணமாக த ற்கொ லை செ ய்து கொ ண்டிருக்கலாம் என பொ லிஸார் ச ந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மே லதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து : போக்குவரத்து பாதிப்பு!!

விபத்து

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08.03.2020) விபத்துக்குள்ளானதன் காரணமாக வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்தில் காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறி காணப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விபத்தில் காரணமாக ஏ9 வீதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க உதவும் மூலிகைகள் இவை தான் : அவசியம் படியுங்கள்!!

கொரோனா வைரஸ்

உலகில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் போராடி வருகின்றன. தற்போது வரை எந்த ஒரு புதிய மருத்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை சீக்கிரம் தாக்கிவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் நம்முடைய உணவு நோய் எதிர்சக்தி அதிகம் கொண்ட காய்களை சேர்த்து கொள்ள வேண்டும். அது தவிர சில மூலிகைகளும் இருக்கின்றன.

அத்துடன் வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். குறிப்பாக சில மூலிகைகளை அதிகம் உட்கொண்டு வந்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என்று கூறப்படுவதால், அந்த மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

கற்பூரவள்ளி : புதினா குடும்பத்தைச் சேர்ந்த கற்பூரவள்ளி இலைகளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக இதில் உள்ள தாவர வகை பொருளான கார்வாக்ரோல் ஆன்டி-வைரல் பண்புகளை வழங்குகின்றன. எனவே நற்பதமான கற்பூரவள்ளி இலையை காலையில் எழுந்ததும் நீரில் கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.

துளசி : துளசியில் பல வகைகள் உள்ளன. அனைத்து வகைகளிலும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. துளசியை ஒருவர் அன்றாடம் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, கிருமி தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

சோம்பு : சமையலில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் சோம்பு குறிப்பிட்ட வகை வைரஸ்களை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆய்வு ஒன்றில், சோம்பு நோயெதிர்பபு மண்டலத்தை வலிமைப்படுத்தி, வைரஸ் தொற்றுகளால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. எனவே உடலில் ஆன்டி-வைரல் சக்தியை அதிகரிக்க, சோம்பை அடிக்கடி வாயில் போட்டு மெல்லுங்கள்.

பூண்டு : பூண்டு மிகவும் பிரபலமான, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சமையல் பொருளாகும். இந்த பூண்டு பல வகைகளில் உடலுக்கு நன்மை புரிகிறது. குறிப்பாக மற்ற பொருட்களை விட, பூண்டில் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமாக உள்ளது. மேலும் இது ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். ஆகவே உங்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்க்க தவறாதீர்கள்.

புதினா : புதினாவில் சக்தி வாய்ந்த ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இந்த புதினாவை ஒருவர் டீ போன்றோ அல்லது சமையலில் சேர்த்தோ உட்கொள்ளலாம்.

அதிமதுரம் : பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய சீன மருத்துவத்தில் அதிமதுரம் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரத்தில் கிளைசிரைசின், லிகுரிடிஜெனின் மற்றும் கிளாபிரிடின் ஆகியவை சக்திவாய்ந்த ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்ட சில பொருட்கள் உள்ளன. தற்போது கொரோனா வைரஸிற்கு கூட சீனாவில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இஞ்சி :  மருத்துவ குணம் கொண்ட மற்றொரு மூலிகைப் பொருள் தான் இஞ்சி. இதில் பல்வேறு சக்தி வாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி-வைரல் பண்புகள் ஏராளமான அளவில் உள்ளன. கூடுதலாக, இஞ்சியில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்களான ஜின்ஜெரோல் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை வைரஸ் நகலெடுப்பைத் தடுக்கின்றன மற்றும் வைரஸ்கள் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

வவுனியாவில் கொரோனா வைரஸ் மத்திய நிலையங்கள் : மக்களுக்கு ஆபத்தா?

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் தனிமைப்படுத்தி க ண்காணிப்பதற்காக இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Batticaloa Campus மற்றும் வவுனியா கந்தப்பாடு புனர்வாழ்வளிப்பு நிலையம் என்பன மத்திய நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தருவோரை க ண்காணிக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

-News First-

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டு மக்களுக்கு..

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பருவப்பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படும் காலம் வரை இந்த வானிலை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் கடும் வெயிலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வெப்ப அழுத்தம் என்று மருத்துவத்தில் கூறப்படும் இந்த வானிலையின்போது கட்டட நிர்மாணத்தொழிலாளர்கள், போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலதிக் கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

இதனை பொருட்படுத்தாது நடந்துக்கொள்வோருக்கு வழமையான விதத்தை காட்டிலும் தசைபிடிப்பு போன்ற நிலைமைகள் ஏற்படலாம்.

இறுதியில் வெப்ப பக்கவாதம் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் நிலை கூட ஏற்படலாம் என்று சுகாதார அமைச்சின் மருத்துவர் இனோகா சுரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில்லாதவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!!

கொரோனா..

கனடாவில் தனது நாட்டை விட்டு வெளியேறாத, கொரோனா நோயாளிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாத நபர் ஒருவருக்கும் கொவிட்-19 எனும் வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவல் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் பெரும் அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான நாடுகள் பட்டியலில் மேலும் சில நாடுகள் நேற்றைய தினம் இணைந்துள்ளது.

சீனாவில் தலைதூக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பிரான்ஸ், பிரித்தானிய ஆகிய நாடுகளில் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகபெரிய ஆபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து த ற்கொ லை செய்துகொண்ட இ ளைஞன்!!

யாழில்..

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒ ருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இந்த த ற்கொ லை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த 35 வயது சுரேஸ் என்பவரே இவ்வாறு த ற்கொ லை செய்துக் கொண்டுள்ளார்.

உ யிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை பஸ் நிலையத்தில் பா துகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம், ம து போ தையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், கடந்த 05ம் திகதியும் த ற்கொ லை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து கா ப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை ம து போ தையில் தண்டவாளத்தில் படுத்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளார்.

யாழ். நீதிவான் சென்று ச டலத்தைப் பார்வையிட்டதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கமாக மாறிய இலங்கைப் பெண்ணின் உடல்!!

தங்கமாக மாறிய..

தங்கத்தை க டத்த முயன்ற இலங்கை பெண் ஒருவர் சென்னை விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது உடலில் தங்கத்தை மறைத்துக் கொண்டு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கத்தின் பெறுமதி 50 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெண் கொழும்பிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை சோ தனையிட்ட போது அவரது உடலில் தங்க கட்டிகள் மீட்கப்பட்டதாக சென்னை சுங்க பிரிவு அறிவித்துள்ளது.

கோர விபத்தில் தாய் – மகள் பலி!!

கோர விபத்தில்..

நாத்தன்டிய – துன்கன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உ யிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக லொரி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மீகஹக்கிவுல – வெலிபென்னகஹமுல பிரதேசத்தை ரவலங்கே சந்திரிக்கா சேனாரத்ன மெனிக்கே என்ற 54 வயதுடைய தாயும், அஹினசா துலாஞ்சலி என்ற 21 வயதுடைய யுவதியுமே உ யிரிழந்துள்ளனர்.

உ யிரிழந்த யுவதி பிபிலாதெனிய மத்திய மஹா வித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியராக சேவை செய்து வந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை அவரே ஓட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாரவில பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.