இனி தமிழர்களுக்கு பொற்காலம்தான் : வியாழேந்திரன் எம்.பி!!

வியாழேந்திரன் எம்.பி

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளிமயமிக்க பொற்காலமாக மாற்றம் பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கான ஆணையினை மக்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் வழங்கியிருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தியில் கிழக்கு மாகாணத்தில் எதுவி தமான அபிவிருத்திகளும் நடைபெறவில்லை. மக்களை அபிவிருத்தி தொடர்பாக ஏமாற்றிய வரலாறுகளே தான்உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியானது வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியாகும். இது தேர்தலுக்கு முன்பே தெரிந்த விடயம். இதற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றமை மொட்டு மலர்வதற்கு சாதகமாக அமைந்தது. பிரசாரக் கூட்டங்களில் மக்கள் அலை அலையாக வலம் வந்தமை மூலமாக கோட்டாபய ராஜபக்‌சவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அறியாத சில அரசியல்வாதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எம்மை விமர்சித்தனர். ஆனால் இன்று மௌன நிலைக்குத் தள்ளப்பட்டு வாய்ப்பூட்டுபோடப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்திக்காக நாம் கோட்டாபய ராஜபக்‌சவை ஆதரித்து வெற்றிவாகை சூடியிருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என ஜனாதிபதி உத்தரவு போடவில்லை : வெளியான தகவல்!!

தமிழில் தேசிய கீதம்..

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டியிருந்தது.

குறித்த செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவியுள்ளார். இதற்குப் பதில் வழங்கியுள்ள வாசுதேவ,

புதிய ஜனாதிபதி தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என்று பதில் வழங்கியதாக தன்னுடைய முகப்புத்தகத்தில் மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய போட்ட உத்தரவு : உடனடியாக நிறைவேற்றும் அரசியல்வாதிகள்!!

ஜனாதிபதி கோட்டாபய போட்ட உத்தரவு

வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜாஎல பகுதிக்கு அருகிலுள்ள வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அடங்கிய பதாதைகள் மற்றும் பெயர் பலகைகளை நீக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜாஎல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரான நகர சபை உறுப்பினர் நாமல் சுரங்க தனது படங்கள் அடங்கிய பதாதைகள் நீக்கியுள்ளார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் அபிவிருத்தி செய்யப்படும் வேலைத்திட்டங்களுக்கு அரசியல்வாதிகளின் புகைப்படம் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்துவது தகுதியற்ற செயல் என நாமல் சுரங்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கமைய தான் இந்த செயலை செய்ததாக அவர் மேலும் தெரிவித்துளளார்.

வவுனியாவில் கோழிக்குஞ்சு ஏற்றும் வாகனமாக மாறிய தனியார் பேரூந்து : மக்கள் விசனம்!!

வவுனியாவில்..

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் கோழிக்குஞ்சு மற்றும் மரக்கறிகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (21.11.2019) காலை 6 மணிக்கு புறப்பட்ட தனியார் பேரூந்தின் பின்புறமாகவுள்ள ஆசனங்களில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் செல்வதினால் பயணிகள் துர்நாற்றத்தினை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

காற்றின் காரணமாக கோழிக்குஞ்சுகளின் எச்சங்கள் பேரூந்துகளில் வீசப்பட்டு கால்களில் மிதிபட்டுவதினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அத்துடன் முதியவர்கள், பொதுமக்கள் ஆசனங்கள் இன்மையினால் நின்றபடியே தங்களது பிரயாணத்தினை தொடர்ந்தனர்.

இத் தனியார் பேரூந்து பிரயாணிகள் பேரூந்தா அல்லது கோழிக்குஞ்சுமற்றும் மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனமா என பயணிகள் கேள்வியெழுப்பினார்கள் பேரூந்தின் பின்பகுதியில் உள்ள ஆறு ஆசனங்களும் பொருட்கள் ஏற்ற பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சி தைந்த நிலையில் 6 நாட்களாக மரத்தில் தொங்கிய ச டலம்!!

வீட்டிலிருந்து மா யமான் விவசாயி 6 நாட்களுக்கு பின், தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக க ண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையே ஒரு மரத்தில், முதியவர் ஒருவரின் ச டலம் சி தைந்த நிலையில் கிடப்பதாக வனத்துறை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதியவரின் உ டலை கைப்பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, தூ க்கில் தொ ங்கிய முதியவரின் பெயர் 62 வயதான துளசிராம் ஷிண்டே என்பது தெரியவந்தது. பிம்பலோலி கிராமத்தை சேர்ந்த துளசிராம், தனது வயலில் விவசாயம் செய்த சோயாபீன் பயிர் அண்மையில் பெய்த பருவகால மழையில் அ ழிந்துள்ளது.

இதனால் அவருடைய குடும்பமும் வறுமை நிலைக்கு சென்றுள்ளது. இதனை நினைத்து பெரும் க லக்கத்துடன் காணப்பட்ட துளசிராம், 13ம் திகதியன்று மா யமாகியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினமே அவர் க யிற்றால் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். ச டலம் தொ ங்கிய நிலையில் கிடந்தாலும், அவர் த ற்கொ லை செய்துகொண்ட இடம் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்ததால் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வ ன்கொ டுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அ பராதம் விதித்த ஊர் பஞ்சாயத்து!!

ஊர் பெயர் கெட்டது

இந்தியாவின் சத்திஷ்கர் மாநிலத்தில் பா லியல் வ ன்கொ டுமைக்கு இ ரையான பெ ண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதால், அவருக்கு கிராமத்து பஞ்சாயத்தில் அ பராதம் விதித்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவர் கடந்த 4 ஆம் திகதி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட த கராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு அந்த பெண் ஏற்கெனவே அறிமுகமான சந்தீப், கிஷோர் ஆகியோர் கட்டிட வேலைக்கு அழைத்ததால் அவர்களை நம்பி குறித்த பெண் சென்றுள்ளார். அப்போதுதான் தன்னை அவர்கள் ஏ மாற்றியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பெ ண்ணை கூ ட்டுப் பா லியல் வ ன்கொ டுமை செய்தனர்.

பின்னர், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொ ன்று விடுவோம் என்று மி ரட்டியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் வீட்டுக்கு சென்றதும் அம்மாவிடம் விடயத்தைக் கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு பொலிசார் நடந்தவற்றை பு காராக எழுதி தரக் கூறியதும் தயங்கிய அந்தப் பெண், ஊர்க்காரர்களிடம் வி சாரித்துவிட்டு வருவதாகவும் கூறி வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கூடிய பஞ்சாயத்து, பா லியல் வ ன்கொ டுமை செய்த சந்தீப், கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. மட்டுமின்றி ஊருக்கு அ வமரியாதையை, அந்த இளம் பெண் ஏற்படுத்தி விட்டதாக கூறி அவருக்கும் ரூ.5 ஆயிரம் அ பராதம் விதிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அழகிகள் பலரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மேகன் : எதில் தெரியுமா?

முதலிடம் பிடித்த மேகன்

செல்வாக்கான ஆடைகளை அணிபவர்கள் பட்டியலில் அழகிகள் பலரையும் பின்னுக்கு தள்ளி பிரித்தானிய இளவரசி மேகன் முதலிடம் பிடித்துள்ளார்.

நவம்பர் 2017ம் ஆண்டு பிரித்தானிய இளவரசர் ஹரியுடனான திருமண நிச்சயதார்த்தத்தை வெளியிட்ட ஒரே இரவில் மேகன் அழகு பாவையாக உருவெடுத்தார்.

அன்றிலிருந்தே அவர் அணியும் ஒவ்வொரு ஆடையும் மக்களால் உற்றுக்கவனிக்கப்பட்டு வருகின்றன. இணையத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் அவருடைய ஆடைகளை அதிகமானோர் விரும்பி பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘லிஸ்ட் இன்டெக்ஸ்’ நிறுவனம் செல்வாக்கு மிகுந்த ஆடைகளை அணிபவர்களின் 2019ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு, கைலி ஜென்னர் மற்றும் கிம் கர்தாஷியன் ஆகியோருக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் இருந்த பிரித்தானிய இளவரசி மேகன், இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல முதல் பத்து இடங்களில் இடம்பிடித்த அரச குடும்ப உறுப்பினர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டு 5வது இடம்பிடித்திருந்த கேட் மிடில்டன், இந்த முறை 11வது இடம் பிடித்துள்ளார்.

6 மாத கர்ப்பிணியை க டித்து கு தறிய நா ய்கள்!!

6 மாத கர்ப்பிணி

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் க டித்து கொ ன்றுள்ள சோ க சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது.

பாரிஸின் வடக்கே உள்ள ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி (29) என்கிற 6 மாத கர்ப்பிணி பெண், சனிக்கிழமையன்று தன்னுடைய நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சில நாய்கள் அவரை தா க்க மு ற்பட்டதால் வேகமாக கணவருக்கு போன் செய்துள்ளார். விமான நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்த அவர் 45 நிமிடங்கள் கழித்து, சம்பவ இடத்தை அடைந்துள்ளார்.

நாய்கள் க டித்து கு தறிய நிலையில் ச டலமாக மனைவி கி டப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், எலிசாவின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திங்களன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத ப ரிசோதனையில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நாய்கள் சில தாக்கியுள்ளன. பெரும்பாலும் அவருடைய தலைப்பகுதியில் நாய்கள் க டித்துள்ளன. உ யிருடன் இருந்த போது சில நாய்கள் மட்டுமே கடித்துள்ளன.

இ றந்த பின்னர் தான் அதிகமான நாய்கள் க டித்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் நடந்து சென்ற போது சொந்த நாய் தா க்கியதா அல்லது காட்டில் சுற்றித்திரியும் நாய்கள் தா க்கியதா என்பதை கண்டறிய டி.என்.ஏ மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

அக்காவின் மகள் இ றந்துவிட்டதாக நினைத்து த ற்கொ லை செய்துகொண்ட இராணுவ வீரர்!!

இராணுவ வீரர்

பஞ்சாப் மாநிலத்தில் அக்கா மகளை து ப்பாக்கியால் சு ட்டுவிட்டு இராணுவ வீரர் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்வபம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரூபீந்தர் கவுர் (30) என்கிற பெண், மொஹல்லா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சொந்தமாக அழகுநிலையம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 17ம் திகதியன்று, இவருடைய வீட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை து ப்பாக்கி சு டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்தபோது ஒரு ஆணுடன், ரூபீந்தர் இ ரத்த வெ ள்ளத்தில் கி டந்துள்ளார்.

உடனடியாக இருவரையும் மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிங் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாகவும், ரூபீந்தர் கவுர் க வலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள பொலிஸார், ரூபீந்தர் கவுர் இராணு வீரரான சிங் என்பவரின் அக்கம் மகள். சிங்கிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

சிங் 17ம் திகதி இரவு, ரூபீந்தரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த சிங் திடீரென து ப்பாக்கியை எடுத்து ரூபீந்தரை து ப்பாக்கியால் சு ட்டுள்ளார்.

இதில் ப டுகாயமடைந்த ரூபீந்தர் தரையில் சு ருண்டு வி ழுந்ததும், இ றந்துவிட்டதாக நினைத்த சிங் து ப்பாக்கியை தன்னுடைய த லையில் வைத்து சு ட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆனால் இருவரும் என்ன காரணத்திற்காக வா க்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷ கோட்டபாய அரசின் பிரதமராக நியமனம்!!

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமனம்

இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ரணில், ராஜினாமா கடிதத்தை கையளித்ததுடன், பிரமரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் வரையில் இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவிருந்த பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 12 அமைச்சுகளும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 03 அமைச்சுகளும் பதவி வழங்கப்படவுள்ளன. அத்துடன் நிதி அமைச்சு பதவியும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண் வ லியால் த வித்த முதியவர் : 12 ஆண்டுகளாக கண்ணுக்குள் இருந்த புழு : வைத்தியர்கள் அதிர்ச்சி!!

கண்ணுக்குள் இருந்த புழு

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கண்ணில் இருந்து 3 அங்குல நீளம் கொண்ட ஒட்டுண்ணி புழுவை அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த புழுவானது அந்த விவசாயின் கண்ணில் சுமார் 12 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

மும்பை மாநகரம் அருகே விரார் நகரில் குடியிருந்து வருபவர் 70 வயதான ஜஷூ பட்டேல். இவர் கடந்த 2 மாதங்களாக கண் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவர்களை நாடியும் இவரது கண் வலிக்கு நிரந்தர தீர்வு எட்டாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவர்கள் குழு ஒன்று குறித்த விவசாயியை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அதில் அந்த 70 வயது நபரின் வலப்பக்க கண்ணில் ஒட்டுண்ணி நெளிவதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சுமார் 25 நிமிட அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த புழுவை அப்புறப்படுத்தியுள்ளனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த விவசாயியை நாய் கடித்ததாகவும், அதுவே அவரது ரத்தம் மூலம் இந்த புழு அவரது உடம்பில் புகுந்தது என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காலதாமதம் ஏற்பட்டிருந்தால், குறித்த புழுவானது அவரது மூளையை பதம் பார்த்திருக்கும் எனவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் த ற்கொ லை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை : தந்தையிடம் சொன்ன கண்ணீர் காரணம்!!

புதுமாப்பிள்ளை

தமிழகத்தில் தன்னுடைய காதல் மனைவியை, அவரின் பெற்றோர் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணி புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன்பு பா ய்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கு தனுஷ்கோடி என்ற 19 வயது மகன் உள்ளார். தனுஷ்கோடிக்கும், நாமக்கல்லை சேர்ந்த பென்னி என்ற பெண்ணிற்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, கடந்த மாதம் பெண் வீட்டாரின் சம்மதத்துடன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் நாமக்கலில் தங்கியிருந்த நிலையில், இருவரும் கச்சிராப்பாளையத்திற்கு சென்றுள்ளனர், அதன் பின் பென்னியின் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த போது, பென்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தனுஷ் கோடி மட்டும் தன் ஊருக்கு திரும்பியுள்ளார். பென்னியின் பெற்றோரிடம் மகள் குறித்து கேட்ட போது, அவர் உடல்நிலை சரியானவுடன் நாங்களே அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்,

இதையடுத்து ஊர் திரும்பிய தனுஷ்கோடி தன்னுடைய தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பென்னி என்னுடன் வரவில்லை அப்பா, அவள் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள்.

பென்னியின் பெற்றோர் பேசியதை கவனிக்கும் போது, அவளையும், என்னையும் பிரித்துவிடுவார்கள் என்பது போல் தெரிகிறது, அவள் மீது நிறைய அன்பு வைத்துள்ளே, அவள் இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது, நான் த ற்கொ லை செய்ய போகிறேன் என்று கூற தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதனால் அ திர்ச்சியடைந்த தந்தை உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் மகனை தேடிய போது, கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சின்னசேலத்திலிருந்து அம்மையகரம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே இருந்து தனுஷ்கோடி ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்போது தனுஷ்கோடி திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் ரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான மணப்பெண்!!

மணப்பெண்

தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறியுள்ள நிலையில், ஒரு பாகிஸ்தான் மணமகள் தனது திருமணத்தில் தக்காளி நகைகளை அணிந்து பொருளாதாரத்தை கிண்டலடித்துள்ளார்.

பொருளாதார மந்தநிலையின் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை 320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசின் மெத்தனத்தினாலே இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் அரசின் மீது க டும் கோ பத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத் ஊடகத்தின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மணமகள் பாரம்பரிய தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளி நகைகளைத் தேர்வு செய்துள்ளதை பற்றி பேசியுள்ளார்.

நகைச்சுவை உணர்வோடு அமர்ந்திருக்கும் மணமகள், , நெக்லஸ், வளையல்கள், காதணிகள் மற்றும் நெத்திசூடி ஆகியவற்றிற்கு பதிலாக தக்காளி அணிந்துள்ளார். முதலில் மணமகளை வாழ்த்தும் அந்த செய்தி தொகுப்பாளர் அவர் ஏன் தக்காளி அணிந்திருக்கிறார் என்று கேட்கிறாள்.

அதற்கு அந்த மணமகள் தங்கத்தின் விலையை போல தக்காளியின் விலையும் கூரையை பிய்த்துக்கொண்டு செல்வதால், நான் தங்கத்திற்கு பதிலாக தக்காளி மற்றும் பைன் கொட்டைகளை அணிந்தேன் என்று பதில் கூறினார்.

தக்காளிகளுக்கு கீழ் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாததால் பைன் கொட்டைகள் எங்கே என்று செய்தி தொகுப்பாளர் விசாரிக்கும் போது, ​​அவள் ஒரு உறை ஒன்றைத் திறந்து பைன் கொட்டைகளை தனது மூத்த சகோதரரால் ‘சலாமி’ (திருமண பரிசு) என்று அனுப்பியதைக் காட்டுகிறாள். இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வித்தியாசமாக நடந்த கர்ப்பிணிப்பெண் : சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

கர்ப்பிணிப்பெண்

கர்ப்பிணிப்பெண் ஒருவர் நடக்கும்போது அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக அசைவதைக் கண்ட பொலிசார் அவரை சோதனையிட்டபோது ஒரு பெரும் அ திர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது.

அர்ஜெண்டினாவில் எல்லை சோ தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிசார், ஒரு பேருந்தை மறித்து அதிலிருந்தவர்களை சோ தனையிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ஆணிடம் ஒரு பையில் இரண்டு பொட்டலங்கள் க ஞ்சா இருப்பது தெரியவரவே, அவரையும் அவரது மனைவியையும் கீழே இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பெண் தான் கர்ப்பிணி என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் நடக்கும்போது அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக அசையவே, பொலிசார் அவரை சோ தனையிட்டிருக்கிறார்கள்.

சோ தனையில், அந்தப் பெண் கர்ப்பிணி அல்ல, அவர் தனது வயிற்றுப்பகுதியில் பொருத்தியுள்ள ஒரு பையில் 15 க ஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருதலைக் காதல் மோ கம் : 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

ஒருதலைக் காதல்

கடலூரில் காதலை ம றுத்த இளம்பெண்ணை கா தலன் க த்தியால் ச ரமாரியாக கு த்திவிட்டு த ப்பியோடிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வடமூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

18 வயது நிரம்பிய இவர், அப்பகுதியில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் பணியாற்றி வந்தார். அதே உணவகத்தில் களமருதூரை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சக்திவேல் ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சக்திவேல் பலமுறை ஷாலினியிடம் காதாலை தெரிவித்தும் ஷாலினி தொடர்ந்து ம றுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால், ஆ த்திரமடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த க த்தியால் ஷாலினியை ச ரமாரியாக க ழுத்து, கை, கால் ஆகிய இ டங்களில் ப லமுறை கு த்தியுள்ளார். இந்நிலையில், ஷாலினியின் அ லறல் ச த்தம் கேட்டு உ டனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவர, அதற்குள் சக்திவேல் அங்கிருந்து த லைமறை வாகிவிட்டார்.

இந்நிலையில், ர த்த வெ ள்ளத்தில் து டித்துக்கொண்டிருந்த ஷாலினியை அக்கம்பக்கதினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து அறிந்த பொலிசார், ஷாலினியிடம் பு காரை பெற்றுக்கொண்டு வி சாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து சி றையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது வடமூர் பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து : இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை!!

பேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து

இலங்கையில் நடத்திச் செல்லப்படும் பேஸ்புக் பக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேஸ்புக் பக்கங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இன்னமும் தேடி வருவதாக சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரையில் பயன்பாட்டிலுள்ள அனைத்து பேஸ்புக் பக்கங்களுக்கும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பேஸ்புக் பக்கங்களும் unpublish ஆக வாய்ப்புகள் உள்ளதாக பேஸ்புக் பக்கங்களுக்கு தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.