17 வயதுவரை தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை வசமாக சிக்கவைத்த பேத்தி!!

த்தாவை வசமாக சிக்கவைத்த பேத்தி

13 வயதிலிருந்து 17 வயதாகும்வரை தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை, தனக்கு 23 வயதாகும் நிலையில் வசமாக சிக்க வைத்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார் ஒரு இளம்பெண்.

பிரித்தானியாவின் லிவர்பூலைச் சேர்ந்த Jade Edwards, 13 வயதாக இருக்கும்போது, அவரது பாட்டி உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரது தாத்தா Joseph அவரை தவறாக தொட்டிருக்கிறார். தனக்கு மிகவும் பிடித்த தாத்தா ஏன் அப்படி செய்தார் என்று Jadeக்கு புரியவில்லை.

பின்னர் மீண்டும் ஒருமுறை காரில் Jadeஐ அழைத்துச் சென்ற அவரது தாத்தா Joseph ஆளரவமற்ற ஒரு இடத்தில் கொண்டு காரை நிறுத்திவிட்டு, அவரை முத்தமிட்டு மீண்டும் தவறாக தொட்டிருக்கிறார். Jade கண்ணீர் விட்டு அழுதபோது Joseph நிறுத்தவில்லை. பின்னர் பீட்ஸா வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று தொடர்ந்து Jadeஐ துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் Joseph.

17 வயதாகும் நிலையில், இதற்கு ஒரு முடிவு கட்டும் தைரியம் வர, Josephஇடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என Jade மொபைலில் செய்தி அனுப்ப, பதிலுக்கு, என்னை மன்னித்து விடு என்னால் அப்படி செய்வதை நிறுத்த முடியவில்லை, உன்னை நான் காதலிக்கிறேன், நீ ரொம்ப அழகாக இருப்பதால்தான் அப்படி செய்வதை என்னால் நிறுத்த முடியவில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் Joseph.

அந்த குறுஞ்செய்திகளை தனது பெற்றோரிடம் காட்டினால், அவர்கள் Jadeஐயே குற்றம் கூறியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட Jade, அந்த குறுஞ்செய்திகளை பொலிசாரிடம் காட்டி தனது தாத்தா மீது புகாரளித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட Josephக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அதிகம் இல்லை என்றாலும், தன்னை துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை சிறைக்கு அனுப்பியதே போதும் என்கிறார் Jade.

மகனின் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் உயிரை விட்ட தாய்!!

உயிரை விட்ட தாய்

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தனது மகனை பறிகொடுத்த தாய் அந்த இழப்பின் வலியை தாங்கிகொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15 ஆம் திகதி நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் 38 வயதான Kamel Darwish என்பரும் உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனது மகனின் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் தாய் Saud Adwan மனவேதனையில் உயிரிழந்துள்ளார்.

ஜோர்டானில் இருந்து கடந்த 6 மாதத்துக்கு முன்னர்தான் Kamel Darwish தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்ட்சர்ச் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். இவரது சகோதரர் 2007 ஆம் ஆண்டில் இருந்து அங்கு வசிப்பதால், இங்கு நன்றாக வாழலாம் என அறிவுரை வழங்கியதன் பேரில் அதனை கேட்டு Kamel Darwish அங்கு சென்றுள்ளார்.

இறந்துபோன இவரது இறுதிசடங்கு Linwood இல் நடைபெற்றது. ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது தாய் Saud Adwan, மகன் இறந்த வேதனையை தாங்கிகொள்ள முடியாமல் இறுதி சடங்கு நடந்த சில மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஜோர்டான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தெருவில் நிர்வாணமாக அலையும் பெண்களுக்கு நடுவில் என் மகனை வளர்க்க விரும்பவில்லை : ஐ.எஸ் பெண் அதிரடி!!

ஐ.எஸ் பெண் அதிரடி

அவுஸ்திரேலியா, தெருவில் பெண்கள் நிர்வாணமாக அலையும் ஒரு நாடு, அங்கு என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை என ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர் அதிரடியாக அறிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்து, நாடு திரும்ப உதவுமாறு அயர்லாந்து பெண் ஒருவர் கெஞ்சுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாணவியாக இருந்த Janai Safar (24) என்னும் இளம்பெண் இப்படி ஒரு அதிரடி அறிக்கை விடுத்துள்ளார்.

தனது உறவினரான பெண் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடி சிரியாவுக்குச் சென்று அங்கு தீவிரவாதி ஒருவரை மணந்து கொண்ட Janai, வீடு திரும்ப வேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர்.

பத்திரிகையாளர் ஒருவர் சிரியாவில் அகதிகள் முகாம் ஒன்றில் இருக்கும் Janaiயை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெருக்களில் நிர்வாணமாக பெண்கள் அலையும் ஒரு நாட்டிலிருந்து வெளியேற முடிவெடுத்தது நான்தான்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் என் மகனை வளர்க்க எனக்கு விருப்பமில்லை. சிரியாவுக்கு வந்ததிலோ, ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வாழ்வதிலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறும் Janai, தான் ஆயுதப் பயிற்சி பெறவோ, சண்டையிடவோ இல்லை என்றும், தனது ஜிகாதி கணவனுக்கு ஒரு மனைவியாக மட்டுமே இருந்ததாகவும், என்றாலும், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பினால் தான் சிறையில் அடைக்கப்படுவேன் என அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், 2017ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய விமானம் ஒன்றில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தீவிரவாதிகள் சிலருடன் Janaiக்கும் அவரது உறவினரான இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒருவரை காப்பாற்ற சென்ற 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் : நடந்தது என்ன?

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர்களை காப்பாற்ற சென்று 6 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நெமிலி செல்வபெருமாள் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி(53). இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு விட்டிருந்தார். அப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படாததால், அங்குள்ள குடியிருப்புகளில் செப்டிக் டேங்க் வசதி மூலம் கழிவு நீர் அகற்றப்படும்.

இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ள செப்டிக் டாங்கை சுத்தம் செய்யும் பணியில், தனது மகன்களான கண்ணன்(27), கார்த்தி(26) ஆகியோருடன் ஈடுபட்டிருந்தார்.

டேங்கை சுத்தம் செய்த பின்னர் அதனுள்ளே மீதியுள்ள பகுதியை சுத்தம் செய்ய கிருஷ்ணமூர்த்தி இறங்கினார். அப்போது விஷவாயு அவரை தாக்கவே, டேங்க் உள்ளேயே அவர் மயங்கி விழுந்தார்.

இதனால் அவரது மகன்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், கார்த்தி உள்ளே இறங்கினார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி உள்ளே மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து, உள்ளே இறங்கிய கண்ணனும் மயக்கியதால், அவர்களது குடும்பத்தினர் அலறினர்.

இந்த சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளான சுரதாபாய்(28) மற்றும் பரமசிவம் இருவரும் அடுத்தடுத்து உள்ளே குதித்தனர். ஆனால் அவர்களும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளாகினர்.

அவர்களது உறவினர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அவ்வழியாக சென்ற லட்சுமி காந்தன் என்ற இளைஞர் 5 பேர் உள்ளே மயங்கி விழுந்ததைக் கேட்டு சற்றும் யோசிக்காமல் அவர்களை காப்பாற்ற உள்ளே குதித்துள்ளார். அவரும் அதில் மயக்கமானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் உள்ளே இறங்கிய தீயணைப்பு வீரர்கள், 6 பேரையும் மேலே தூக்கி வந்தனர். அவர்களை சோதித்தபோது அனைவரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

பின்னர் உடனடியாக அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷவாயு உள்ள செப்டிக் டேங்கை தீயணைப்புத் துறையினர் கெமிக்கல் நுரை கொண்டு சுத்தம் செய்து சீல் வைத்தனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி!!

தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வுட் தியசிறகம பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று திடிர் என தீபற்றி ஏறிந்த சம்பவம் ஒன்று இன்று இரவு 7மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவையிலிருந்து தலவாகலை பகுதியை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ பற்றி எரிந்துள்ளதாகவும் குறித்த முச்சக்கர வணடியில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாகவும் சாரதிக்கு எவ்வித காய்ங்களும் ஏற்படவில்லை எனவும் முச்சக்கர வண்டியில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரனமாகவே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் குறித்த முச்சக்கர வண்டிக்கு முலுமையாக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் வைக்கபட்டிருந்த சில ஆவணங்களும் எரிந்து சாம்பளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

வவுனியாவில் நாளையும் கடும் வெப்பம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

கடும் வெப்பம்

வடமேல மற்றும் மேல் மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த காலநிலை தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானம் செலுத்தி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு கோரியுள்ளது.

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

மின்சார விநியோகத் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மின்சார விநியோகத் துண்டிப்பு

எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் – மின்சார உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மழை கிடைக்காவிடின் மின்சார உற்பத்தியில் பாரிய சிக்கல் ஏற்படக் கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவசர மின்சார கொள்வனவிற்கு மின்சக்தி அமைச்சினால் தற்போதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார பொறியிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

தற்போது நான்கு மணித்தியால மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சில பிரதேசங்களில் குறித்த நேரத்திற்கு அதிகமான நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மின்சார துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை நேற்று மின்சக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முன்பு செய்த பாவங்களின் காரணமாகவே தற்போது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த நேர்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலப்பகுதிவரை, கேள்விக்கு ஏற்றவாறு மின்சார உற்பத்தித்துறை அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்கு மணிநேர மின்சார விநியோகத் தடை காரணமாக, வர்த்தகத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு, இந்த மின்சார விநியோகத் தடையினால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக குளிரூட்டியை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் வர்த்தக நிலையங்களில், குளிரூட்டிகளிலிருந்து குறித்த பொருட்களை வெளியே அகற்ற வேண்டிய நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம், மின்சார விநியோகத் தடை காரணமாக பொதுமக்களும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு காலநேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தையை கொடூரமாக கொலைசெய்த மகனின் வெறிச் செயல்!!

மகனின் வெறிச் செயல்

தமிழகத்தின் கருங்கல் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்த மகன் தந்தையை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குடியிருந்து வருபவர் 60 வயதான செல்வதங்கம். இவருக்கு அனிஷா (26), அனிஷ் (23), அஜின் (21) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

இதில் அனிஷ் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்று வருகிறார். அப்போது கஞ்சா பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. தினமும் கஞ்சா போதையில் பெற்றோரிடமும், அருகில் உள்ளவர்களிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது போதையில் வந்த அனிஷ் தனது பெற்றோரிடம் சொத்தில் தமக்குள்ள பங்கை பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை வெட்டியுள்ளார். அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரம் அடங்காதவர் அருகில் உள்ள கிணற்றில் தந்தையை தூக்கி போட்டுள்ளார்.

கிணற்றுக்குள் விழுந்த செல்வதங்கம் மேலே வர முடியாமல் தவித்தார். இதை கவனித்த அனிஷ் ஒரு சேலையை கட்டி கிணற்றுக்குள் இறங்கி செல்வதங்கத்தை மேலே தூக்கி வந்துள்ளார். அதன் பிறகும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அதனால் அருகில் கிடந்த கல்லை எடுத்து செல்வதங்கத்தின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே செல்வ தங்கம் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மாயமான அனிஷை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அவளுடன் வாழ்ந்த நினைவுகள் அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை : நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!!

கணவனின் கண்ணீர்

எனது மனைவியுடன் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டை விட்டு வரப்போவதில்லை என துப்பாக்கி சூட்டில் மனைவியை இழந்த கேரள கணவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15 ஆம் திகதி நடந்த துப்பாக்கிசூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் அன்ஸி அலிபாவா. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தனது கணவர் அப்துல் நாசருடன் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.

வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்ற இவர் துரதிர்ஷ்டவசமாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தார். தன் மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரிந்து வந்துள்ளார் அப்துல்.

அன்ஸி பட்டம் பெற்றுவிட்டதால் அவர் அதிக சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடுவார். இனி இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

எங்கள் திருமணம் முடிந்த பிறகு நாங்கள் அதிக காலம் ஒன்றாகக் கழித்தது நியூசிலாந்தில்தான். எனவே அவளுடன் வாழ்ந்த அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை. அங்கேயே வசிக்க போகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதற்கிடையே இறந்துபோன அன்ஸியின் உடல் கேரளா கொண்டுவரப்பட்டு இன்று அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடந்தது.

உயிருடன் வெட்டி எடுக்கப்பட்ட சதை, நரம்புகள் : அவர்களை கல்லால் அடித்து கொல்ல முடியுமா? கதறும் தாய்!!

கதறும் தாய்

தமது மகனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தவர்களை கல்லால் அடித்து கொன்று விடுங்கள்.. அதுவே ஒரு தமக்கு செய்யும் பேருதவி எனறு தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த இச்சம்பவம் மாநிலத்தை முழுவதும் உலுக்கியிருந்தது.

கொல்லப்பட்ட அனந்து என்ற 21 வயது இளைஞரின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் திருவிழா நடந்து வந்துள்ளது. இதில் இரு குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பில் கொண்டு சேர்த்தது. அச்சம்பவத்தின்போது அனந்துவும் உடன் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று பகல் 5 மணி வேளையில் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் அனந்துவை வலுக்கட்டாயமாக அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஏன் என்று விசாரித்த அப்பகுதி நபர் ஒருவரை, அந்த கும்பல் எச்சரித்துள்ளது. மட்டுமின்றி, அச்சத்தில் அந்த நபர் எவருடனும் அந்த தகவலை தெரிவிக்கவும் இல்லை. இதனிடையே அந்த மூவர் கும்பல், அனந்துவை நகரின் புதர் மண்டிய பகுதிக்கு கொண்டு சென்று, காத்திருந்த இன்னொரு 7 கொண்ட கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது, போதை மருந்து உள்ளிட்டவைகளால் வெறியுடன் இருந்த 10 பேர் கொண்ட கும்பல் அனந்துவை கொடூரமாக தாக்கியுள்ளனர். 3 மணி நேரம் அந்த 10 பேர் கொண்ட கும்பல் அனந்துவை கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அங்கிருந்த சுவற்றில் அனந்துவின் தலையை மோதவிட்டு திரைப்பட பாணியில் பழி தீர்த்துள்ளனர்.

இதனிடையே சுயநினைவை இழந்த நிலையில் கிடந்த அனந்துவின் கைகளில் நரம்பை அந்த கும்பலில் ஒருவன் வெட்டி எடுத்துள்ளான். இதனால் மரணம் ஏற்பட்டதாகவும், மண்டை ஓடு ஏற்கெனவே பிளர்ந்திருந்ததாகவும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே, அனந்துவை காணவில்லை என பொலிசாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவக்கப்பட்டது. இருப்பினும், திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அந்த பாழடைந்த கட்டிடத்தில் பொலிசார் செல்லவில்லை.

பின்னர் அனந்துவின் சடலம் மீட்கப்பட்டது. உலகில் எந்த தந்தைக்கும் இதுபோன்ற ஒரு நிலை வரவே கூடாது என கூறும், அனந்துவின் தந்தை, ஒருமுறை மட்டுமே எனது மகனை பார்த்தேன், அந்த நொடி சுய நினைவை இழந்து விழுந்துவிட்டேன் என கண்ணீருடன் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

லொட்ரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை வேண்டாம் என கூறிய நபர்!!

வினோத் ஷெர்க்.

இந்தியாவில் லாட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான மதிப்புடைய வீட்டை ஒருவர் வேண்டாம் என திருப்பி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் வினோத் ஷெர்க். இவருக்கு கடந்தாண்டு வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தில் லாட்டரியில் இரண்டு வீடுகள் கிடைத்தன. இதில் ஒரு வீட்டின் மதிப்பு 4.99 கோடி, மற்றொரு வீட்டின் மதிப்பு ரூ.5.80 கோடி ஆகும்.

இந்நிலையில் ரூ.5.80 கோடி மதிப்புடைய வீட்டை வினோத் வாஸ்து சரியில்லை என கூறி மேம்பாட்டு ஆணையத்திடமே திரும்ப ஒப்படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், லாட்டரியில் கிடைத்த இரண்டு வீடுகளை விரிவுப்படுத்த நினைத்து வாஸ்து ஆலோசகருடன் ஆலோசித்தேன்.

அப்போது ரூ.5.80 கோடி மதிப்புடைய வீட்டில் வாஸ்து சரியில்லை எனவும், அங்கு சில மாற்றங்களைச் செய்தால் சமூக வாழ்வில் சிறப்பாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார். ஆனால், அவர் கூறிய மாற்றங்களை அந்த வீட்டில் மேற்கொள்ள முடியவில்லை.

ஆனால், 4.99 கோடி மதிப்புள்ள வீட்டில் அந்த மாற்றங்களைச் செய்ய முடிந்தது. அதனால் தான் ரூ.5.80 கோடி வீட்டை மீண்டும் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார். இதனிடையில் வினோத் திருப்பி கொடுத்த வீடு அவருக்கு அடுத்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபருக்கு கொடுக்கப்படவுள்ளது.

திருமணமான சில நாட்களில் தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த புதுமாப்பிள்ளை!!

மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த மாப்பிள்ளை

இந்தியாவில் திருமணமான சில நாட்களில் மனைவி தனது காதலனுடன் வாழ விரும்பிய நிலையில் அதற்கு எந்த எதிர்ப்பும் இன்றி கணவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பினோத் தனசேனா (28). இவருக்கும் உமா (22) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 17ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 20ஆம் திகதி பினோத் வீட்டுக்கு மூன்று இளைஞர்கள் வந்தனர். அதில் ஒருவரான சுஷில்குமார் என்பவர், தானும் உமாவும் உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறினார்.

இது குறித்து பினோத் தனது பெற்றோருக்கும், உமா பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார். பின்னர் எல்லோரும் காவல் நிலையம் சென்றனர். அங்கு பொலிசார் முன்னிலையில் காதலன் சுஷில்குமாருடன் சேர்ந்து வாழவிரும்புவதாக உமா கூறினார்.

இதையடுத்து தங்களது திருமணத்துக்கு தான் செலவு செய்த பணத்தை உமா திருப்பி கொடுக்கவேண்டும் என அவரின் கணவர் பினோத் கூறினார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என உமா கூறிய நிலையில் அதை ஏற்று கொண்ட பினோத், மனைவியை அவர் காதலனுடன் சேர அனுமதி கொடுத்தார். இதன்பின்னர் உமா, சுஷிலுடன் சென்றுவிட்டார்.

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்ட மணமகள் : மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம்!!

மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம்

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது.
இவர்களின் திருமணம் கடந்த வார இறுதியில் அநுராபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.

திருணம் முடிந்து இருவரும் தேன் நிலவுக்காக கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நடு இரவில் மணமகன் முகத்தில் இரத்ததுடன் முழு ஹோட்டலுக்கும் கேட்கும் அளவில் பலமாக சத்தமிட்டு கொண்டு வரவேற்பறைக்கு ஓடி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்பாராத விதமான சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மணமகன் மற்றும் மணமகளிடம் விசாரித்துள்ளனர். மணமகள் நித்திரையில் இருக்கும் போது குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போல் கனவு கண்டுள்ளதுடன் அந்த குள்ள மனிதனிடம் இருந்து தப்பிக்க தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அந்த தாக்குதல் நிஜமாகவே அருகில் உறங்கி கொண்டிருந்த மணமகனின் முகத்தை பதம் பார்த்துள்ளது.

இலங்கையில் பல இடங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக அண்மைய காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் குள்ள மனிதர்கள் தம்மை தாக்கி விட்டு ஓடிச் சென்றதாக சில பெண்கள் கூறியிருந்தனர். இந்த செய்திகள் குறித்த மணமகளின் கனவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

விபரீத ஆண் நண்பன் : பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!!

மாணவிக்கு நடந்த கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆண் நண்பனை சென்ற 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி நிதின் என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி மாணவியின் வீட்டிற்கு சென்ற இளைஞர், ஜாலியாக பைக்கில் ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம் என கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு மாணவியும் பைக்கில் சென்றுள்ளார். இந்நிலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தை தனது மகளை காணவில்லை என தேடியபோது, நிதின் என்பவருடன் உங்கள் மகள் பைக்கில் சென்றாள் என அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளியே சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இதுதொடர்பாக தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நிதின் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில், அங்கிருக்கும் ஒதுக்குப்புறமான வீட்டில் மாணவி அடைத்துக்வைக்கப்பட்டிருந்தார். அவருடன் நிதின் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.

விசாரணையில் மாணவி அளித்த வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பைக்கில் அழைத்து சென்றபோது நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என நிதின் கூறியுள்ளார். பின்னர், தனது நண்பர் ஓருவரின் வீட்டுக்கு சென்று முகத்தை கழுவிவிட்டு செல்லலாம் என கூறி அந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இடையில், 17 வயது கூட்டாளி சிறுவனையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு, தனி வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதனை கூட்டாளி சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.

பின்னர், அந்த வீடியோவை வைத்து சிறுவனும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு நாள் முழுவதும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உதவிய உறவினர் ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர். ஆண் நண்பர்கள் என்று நம்பி சென்றால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

நடிகர் சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் சரத்குமார்

மக்களவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் திடீரென அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சி தனியாக போட்டியிடும் என தெரிவித்தார், ஆனால் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை சரத்குமார் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய சரத்குமார், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்த பிறகு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.

அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக் கூடாது என்பதால் ஆதரவு அளிக்கிறோம் என கூறியுள்ளார்.

பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர்

தமிழகத்தில் காதலுக்கு உதவியதால் இளைஞர் பிறப்புறுப்பு அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன் உள்ளார்.

கேட்டரிங் படித்துள்ள சூர்யா பவுஞ்சூரை சேர்ந்த காயத்ரி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செங்கல்பட்டில் வாழ்ந்து வந்தார். காயத்ரி கர்ப்பமாக இருப்பதால், கடந்த வாரம் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். சூர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யாவின் வீட்டிற்கு பைக்கில் வந்த நான்கு பேர் அவரை வெளியில் அழைத்து சென்றுள்ளனர். அவர்களுடன் சென்ற சூர்யா அதன் பின் வீட்டிற்கு வரவேயில்லை.

இந்நிலையில் நேற்று காலை மேலேரிபாக்கம் ஏரி வழியாக, அப்பகுதியை சேர்ந்த சிலர் நடந்து சென்றபோது, ஒருவர் மிகவும் மோசமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்த்த போது, அந்த நபரின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சடலத்தின் அருகே பிளாஸ்டிக் டம்ளர் கிடந்தது. அனைவரும் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், மேலேரிபாக்கத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் ஹேமலதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக இது குறித்து ராமுவிடம் கூறியுள்ளனர். இதனால் அவர் உடனடியாக ஹேமாவின் கழுத்தில் பார்த்த போது தாலி இருந்துள்ளது.

இது குறித்து அவர் கேட்ட போது, தனக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடந்ததாகவும், தங்களுக்கு செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் சூர்யா தான் திருமணம் செய்து வைத்தார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு கார்த்திக்கின் அண்ணன் ஹரி உள்பட 4 பர் சூர்யா வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதன் பின் அவரை மேலேரிபாக்கம் ஏரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் காத்திருந்த ஹேமலதாவின் தாய் மாமன் அழகேசன் மற்றும் அவரது அண்ணன்கள் சந்தோஷ், விக்கி ஆகியோர் சூர்யாவின் கழுத்தை அறுத்தனர். பின்னர் ஆத்திரம் தீராமல் அவரது பிறப்புறுப்பையும் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் தப்பிச் சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.