வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த  புதன்கிழமை (20/03//2013) அன்று இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஆறு நாற்பந்தைந்து மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.


தொடர்ந்து காலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பது  மணியளவில் தேரில் ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனி காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு காலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது.

மேற்படி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.  தேர் இருப்பிடத்தை அடைந்தபின் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒன்றரை மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மூன்றுமணியளவில் பிராயசித்த  அபிசேகமும் மாலை ஐந்து மணிக்கு வசந்தமண்டப பூஜையும்  தேரடி பார்க்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் (19.03.2019)  செவ்வாய்கிழமை சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் இடம்பெற்றது.

தொடர்ந்து மாலை எட்டுமணியளவில் வசந்த் மண்டப பூசை இடம்பெற்று ஒன்பது மணியளவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.

 

 

 

 

 

 

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்து

யாழில் தனியார் பேருந்தொன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் சீரணிச் சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் பேருந்துக்குள்ளே அகப்பட்டு, நீண்ட நேர போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவேறு பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்வதற்கு முயற்சித்துள்ள வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணொருவரின் பாரிய மோசடி : ஏமாந்து போன இளைஞர்கள்!!

பாரிய மோசடி

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 50 இலட்சம் ரூபா வரையில் மோசடியாக பெற்றுள்ளார்.

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி போன்று நடித்து பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் சுமார் 3 வருடங்கள் இவ்வாறு நடித்து ஏமாற்றி வந்துள்ள நிலையில் வாடகை வீடு ஒன்றிலேயே வசித்து வந்துள்ளார். மிகவும் துணிச்சலான முறையில் இந்த மோசடி மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜப்பான் தொழிற்சாலை ஒன்றில் தொழில் பெற்றுத் தருவதாக இரண்டு இளைஞர்களிடம் 2 லட்சம் ரூபாயில் இருந்து பெருந்தொகை பணம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் : அதிபர் கவலை!!

உடுவில் மகளிர் கல்லூரி

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவி பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறியமை தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்தியை சில ஊடகங்கள் பிரசுரித்தமையையிட்டு மனம் வருந்துவதாக கல்லூரி அதிபர் பி.எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார். மகளிர் கல்லூரி தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

அதாவது எனது பாடசாலை விடுதியில் இருந்து வெளியேறிய மாணவி நேற்று பரீட்சை நடைபெறவுள்ளதால் அதனை தவிர்த்து கொள்ளும் முகமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த மாணவி மருத்துவக் காரணத்திற்காக விடுமுறையில் வீட்டில் நின்று மீண்டும் புதன்கிழமை அவரின் பெற்றோரால் விடுதிக்கு அழைத்து வரப்பட்டார். பாடசாலை நுழைவாயிலில் வரும் போதே மாணவி வீடு செல்ல எத்தனித்துள்ளார்.

ஆயினும் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு பின்னரே அவர் விடுதியை விட்டுத் தவறான முறையில் வெளியேறியிருந்தார்.

இருப்பினும் நாம் முறைப்படி அவரைப் பொறுப்பேற்று ஒழுங்கான விதிமுறைகளின்படி அவரின் தாயாரிடம் ஒரு கடிதத்தைப் பெற்று மீண்டும் தாயாரிடமே மாணவியை ஒப்படைத்தோம்.

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் அம் மாணவியின் எதிர்காலத்திற்கும் படிப்பிற்கும் பாரிய பின்னடைவாக அமையும் என்பதுடன் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கும் நன்மதிப்பிற்கும் பங்கம் விளைவிற்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

மேற்படி விடயத்தைக் கருத்திற்கொண்டு உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாயவும், கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!!

ஜனாதிபதி வேட்பாளர்கள்

கோத்தபாயவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க நிகழ்வு ஒன்றில் வைத்து கூறிய பின், அந்த நிகழ்வில் பங்கேற்ற கோத்தபாய, நவீன் திஸாநாயக்கவின் மாமனாரான கரு ஜயசூரியவும் ஜனாதிபதி வேட்பாளராக போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாரஹன்பிட்டிய ஸ்ரீகௌதம விஹாரையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இருவரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது உரையாற்றிய நவீன் திஸாநாயக்க, தனித்து சிங்கள பௌத்த வாக்குகளால் அரசாங்கத்தை அமைக்க முடியும். அல்லது அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய போட்டியிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து உரையாற்றிய கோத்தபாய, “உங்களுடைய தந்தையாரான காமினி திஸாநாயக்க எதனை செய்ய முடியவில்லையோ அதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். எனினும் உங்கள் மாமனார் கரு ஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்பதும் எனக்கு தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் கடும் பனிமூட்டம் : இயல்பு நிலை பாதிப்பு!!

பனிமூட்டம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

காலை எட்டு மணியை கடந்தும் வவுனியாவில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

அத்துடன் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனம் செல்லும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.

கூடா நட்பு… மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

அதிர்ச்சி வாக்குமூலம்

நீலகிரி மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெகநாதன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி கூடா நட்பு வைத்திருந்த காரணத்தால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஆனால், ராஜலட்சுமி தனது கூடாநட்பை கைவிடாத காரணத்தால் கணவர் ஜெகநாதன் பிரிந்து சென்றுள்ளார். இதனால், ராஜலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ராஜலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் கூடாநட்பில் இருந்த விவகாரம் எனது மகளுக்கு தெரிந்துவிட்டது. இதனை தனது பாட்டியிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டினாள்.

இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என பயந்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். ராஜலட்சுமியைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

ஆணாக மாறிய இலங்கை பெண்ணின் உடல் : அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த திருப்பம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

சவுதி அரேபியாவில் இறந்துபோன தங்களது மகனது உடலுக்கு பதிலாக சவப்பெட்டியில் இலங்கை நாட்டு பெண்ணின் உடல் வந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி ரபிக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது உடலை கேரளாவுக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்தததையடுத்து எம்பார்மிங் செய்யப்பட்ட ரபிக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தேவாலயத்தில் வைத்து பிரார்த்தனை செய்து முடிந்துவிட்டு, அடக்கம் செய்யப்போகையில் சவப்பெட்டியை திறந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில், சவப்பெட்டிக்குள் இருந்தது ஒரு பெண்ணின் உடல். இதனைத்தொடர்ந்து உடனடியாக கொன்னி பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் கொச்சி விமான நிலையம் மற்றும் சவுதி விமான நிலையத்தில் விசாரணை மேற்கொண்டதில் , அது இலங்கை பெண்ணின் உடல் என்றும், ரபிக்கின் உடல் இலங்கைக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

சவுதி விமான நிலையத்தில் வைத்து இறந்துபோன உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் மாறியுள்ளன. இதனைத்தொடர்ந்து இலங்கை பெண்ணின் உடல் கோட்டயம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மனவேதனையடைந்த ரபிக்கின் பெற்றோர், இலங்கையில் இருக்கும் எங்களது மகனது உடலை எப்படியாவது மீட்டு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ரபிக்கிற்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், தற்போது அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். எங்களது மகனின் இறப்பு எங்கள் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என தாயார் கூறியுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த மாணவன் கீழே வீழுந்து மரணம்!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் திடீரென கீழே வீழ்ந்து மரணித்துள்ளார்.

மொரட்டுவ வேல்ஸ் குமார பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை கெசல்வத்த என்னும் பகுதியைச் சேர்ந்த சமித் துல்சர டி அல்விஸ் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு இன்றைய தினம் உயிரிழந்துள்ளான்.

மாணவன் ஏனைய மாணவர்களுடன் இணைந்து கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மாணவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தலையில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மொரட்டுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் : ஆச்சர்யமான வீடியோவை வெளியிட்ட தம்பதியினர்!!

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் ஒரே பிரசவத்தில் தங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தின் சேஷையர் பகுதியை சேர்ந்த வில் அவிரி (33) – ஜெசிகா வாட்ஸ் (29) என்கிற தம்பதியினர் தங்கள் 3 குழந்தைகளான சோனி, சிட்னி மற்றும் பெட்ச்சி ஆகியோரின் முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினர்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக, குழந்தைகள் பிறந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், எனக்கு 4 வயதில் பில்லி என்கிற மகன் இருக்கிறான். நான் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது, மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்க்க சென்றோம். பில்லுக்கு ஒரு தங்கை அல்லது ஒரு சகோதரன் கிடைப்பான் என்று தான் நாங்கள் நினைத்தோம்.

ஆனால் உள்ளே மூன்று குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது எங்களுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே இருப்பது நிச்சயம் மூன்று ஆண் குழந்தைகளாக இருக்கலாம் என நினைத்து ஆடைகளையும் வாங்கிவிட்டேன். மீண்டும் ஒருமுறை சென்று ஸ்கேன் செய்து பார்த்தேன்.

அப்பொழுது உள்ளே ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

அதனை பார்த்த என்னுடைய கணவர், மூன்று பேருமே அழகாக இருக்கிறார்கள் என பெரும் மகிழ்ச்சியடைந்தார். எங்களுக்கு நடந்த நம்ப முடியாத ஒரு ஆச்சர்ய சம்பவம் அது. அன்றிலிருந்து எங்களுடைய குடும்பத்தில் அன்பும், சிரிப்பும் அதிகரித்துள்ளது. அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவினை தற்போது மீண்டும் பார்ப்பது உணர்ச்சிகளை தூண்டுகிறது என தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் குணமாக ஒரு பாட்டில் புழுக்களை சாப்பிட்ட பெண் : மருத்துவர்கள் அதிர்ச்சி!!

மருத்துவர்கள் அதிர்ச்சி

சீனாவில் புழுக்களை சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும் என்று நண்பர்கள் கூறியதால், தற்போது அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

சீனாவின் Xi’an மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு நுரையிரலில் புற்றுநோயின் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவரிடம், அந்த பெண்ணின் நண்பர்கள் புழுக்களை சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று கூறியுள்ளனர். இதனால் தனக்கு எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்பதற்காக மருத்துவர்களிடம் கூட இதைப் பற்றி கேட்காமல், ஒரு பாட்டில் புழுக்களை அப்படியே சாப்பிட்டுள்ளார். அதன் பின் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்று வலி, நெஞ்சில் வலி , சரியாக தூக்கமில்லாமல் தவித்து வந்துள்ளார்.

வலிதாங்க முடியாமல் தவித்த அவர் உடனடியாக, தான் எப்போதும் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சொன்னதைக் கேட்ட மருத்துவர்கள், புற்றுநோய் தான் உடல் முழுதும் பரவிவிட்டதோ, அதனால் தான் இவருக்கு இப்படி பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று அதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் பரிசோதனையில் புற்றுநோயின் தாக்கம் எங்கும் உடலில் பரவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் குழம்பி போய் வயிற்றை ஸ்கேன் செய்து, டிவி மானிட்டரில் பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் அவரின் வயிற்றின் உள்ளே ஏதோ ஒன்று நகர்வது போன்று இருந்துள்ளது. அதன் பின் சற்று உற்று நோக்கி கவனித்த போது, அவரின் வயிற்றின் உள்ளே 5 புழுக்கள் உயிரோடு இருந்துள்ளன.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அந்த பெண்ணிடம் கேட்ட போது, நடந்தவற்றை கூறியுள்ளார்.

அதன் பின் அங்கிருக்கும் மருத்துவர் Wang கூறுகையில், இது நோயாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி எனவும் இது போன்று செய்வதால் புற்றுநோய் குணமாகாது, அதற்கு வாய்ப்பே இல்லை, இது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள் என்று கூறியுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணிற்கு இப்போது அந்தளவிற்கு வயிற்று வலி இல்லை எனவும், நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்த பேராசிரியர் : ஆத்திரத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்!!

கத்தியால் குத்திய மாணவன்

பாகிஸ்தானில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்த மாணவன், பேராசிரியரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான்.

பாகிஸ்தானில் பஹவால்பூரில் உள்ள சாதிக் எக்டர்டன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் காலித் ஹமீட். இவர் இன்னும் 4 மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு மாணவிகளையும் அழைத்து வந்ததால், இது இஸ்லாம் சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி, Khateeb என்கிற மாணவன் காலித்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

திடீரென ஆத்திரத்தில் அங்கிருந்த கத்தி ஒன்றினை கொண்டு தலை மற்றும் வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஊழியர்கள் வேகமாக காலித்தை மீட்டு பஹாவல் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட Khateeb-ஐ கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனுக்கு எந்த பயங்கரவாத அமைப்பிலும் தொடர்பு இல்லை. ஆனால் ஏதேனும் வழக்குகளில் சிக்கியுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 155வது பொலிஸ் வீரர்கள் தினம்!!

 

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் இன்று(21.03) காலை 8 மணியளவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 155வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

 

வவுனியாவில் கவிச்சக்ரவர்த்தி கம்பரின் தினம் அனுஸ்டிப்பு!!

 

கவிச்சக்கரவர்த்தி கம்பர் கம்பராமாயணத்தை அரங்கேற்றிய நாளான இன்று கம்பரின் நினைவாக கொண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தில் அமைந்துள்ள கம்பரின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந் நிகழ்வினை வவுனியா நகரசபையும், தமிழ் மாமன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழருவி த. சிவகுமாரன் மற்றும் தமிழ் மாமணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றியிருந்ததுடன் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள்,

நகரசபையின் செயலாளர் இ.தயாபரன், உபதலைவர் சு.குமாரசுவாமி தமிழ் மாமன்றத்தின் உறுப்பினர்கள், வைத்தியர்கள் செ.மதுரகன், கிருபானந்தகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு உற்சவம்!!

தீமிதிப்பு உற்சவம்

வவுனியா இறம்பைக்குளம் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர தீமிதிப்பு உற்சவம் இன்று (21.03) வியாழக்கிழமை மாலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

பங்குனி உத்திர தினமான இன்று ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெயந்திநாத குருக்களினால் அம்மனுக்கு குளிர்ச்சி அபிசேகமும் விசேட பூசைகளும் இடம்பெற்றது.

தொடர்ந்து நாகபூசணி அம்மன் சிங்க வாகனம் ஏறி உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வீதியை சுற்றிவந்ததுடன் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்திருந்தனர்.