வவுனியா றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்று(25.10) காலை மேற்கொண்டனர்.
வவுனியா, சூடுவெந்தபுலவு, ரஹ்மத்நகர் றிசாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் முன்பாக ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் சூடுவெந்தபுலவு பள்ளிவாசல் வரை ஊர்வலமாக வந்து பின்னர் அங்கிருந்து பாடசாலையை நோக்கி சென்று பாடசாலை முன்றலில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இவ் ஊர்வலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பொலிசார், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் வீதிகளில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகள் தரித்து நிற்பதால் வாகனங்கள் பயணிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன. இவ் விடயம் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கைவிடப்பட்டுள்ள கட்டாக்காலி கால்நடைகளை உரிமையாளர்கள் தமது வீடுகளில் கட்டிவைத்து பராமரிப்பதற்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தொடர்பாக எனது கனவத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றிலிருந்து எமது பிரதேச சபையினூடாக வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மட்டுமே இது குறித்த விசாரணை கூட்டத்தில் பங்கேற்பேன் என நடிகர் அர்ஜுன் அதிரடியாக கூறியுள்ளார்.
நிபுணன் என்ற திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளில் அர்ஜுன் தன்னிடம் வரம்பு மீறியதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்திருந்தார், இதை அர்ஜுன் மறுத்தார்.
இந்நிலையில் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்த, ஸ்ருதி ஹரிஹரனிடம் விசாரணை நடத்த, கன்னட திரைப்பட வர்த்தக கவுன்சில் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அர்ஜுனையும் அழைத்து சமாதானம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், ஸ்ருதி ஹரிஹரன் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கோரி கடிதம் தந்தால் மட்டுமே இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் ஸ்ருதியும், அர்ஜுன் மீதான புகாரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30). ஜெபக்கூட்டத்தில் போதகராக இருந்து வரும் ரிச்சர்டு, அவினாசி தாரம்பாளையத்தை சேர்ந்த ஜெர்சி (28) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் வீட்டில் இருந்த ஜெர்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அவிநாசிக்கு சென்ற இடத்தில் தனிக்குடித்தனம் போகலாம் என ஜெர்சி பேச்சு கொடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரிச்சர்டு, அனைவரும் கூட்டு குடும்பமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ரிச்சர்டு, வேகமாக பெட்ரோலை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றியுள்ளார். அதனை பறிக்க முயன்ற போது ஜெர்சியின் உடலிலும் பெட்ரோல் விழுந்துள்ளது.
உடனே கையில் வைத்திருந்த தீப்பட்டியை கொண்டு ரிச்சர்டு உடலில் தீ வைத்துள்ளார். வலி தாங்கள் முடியாமல் கதறிய கணவனை காப்பாற்ற சென்ற ஜெர்சியின் மீதும் தீ பரவியுள்ளது.
இதனையடுத்து பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அடுத்தநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத் மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஹைதரபாத் மாநிலம் ஒவைசி காலணி அருகே உள்ள வீட்டில் இருந்து கருகிய வாசம் வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனியா பேகம் (25) என்பது தெரியவந்துள்ளது.
திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாடகியாக இருந்த சோனியா, பார் ஒன்றில் வேலை பார்த்து வந்த சல்மான் என்ற இளைஞரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன்பின் இருவரும் ஹைதராபாத்திற்கு குடி வந்துள்ளனர். அங்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, இளைஞர் ஒருவருடன் சோனியாவிற்கு இருந்த உறவு பற்றி சல்மான் கண்டுபிடித்து சண்டையிட்டுள்ளார். மேலும் சோனியாவை தாக்கியும் வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதியன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு சல்மான் தீ வைத்து எரித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் தம்பதியினருக்கு பிறந்த 2 வயது குழந்தையை பெற்றோரின் வீட்டில் ஒப்படைத்த சல்மான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் சம்பந்தியும், நடிகர் ஜெரால்டு மில்டனின் தாயுமான வனஜா கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு வனஜா என்ற மனைவியும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர்.
இதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். இதோடு சினிமாவில் நடிகராகவும் அவர் உள்ளார்.
கத்தி சண்டை, றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெரால்டு நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவர் மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார்.
ஜெரால்ட் மில்டனின் தங்கை ஜெனிதா, மார்டின் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜெனிதாவின் குழந்தை கெல்வின் (5)-ஐ கவனித்து கொள்ள தாய் வனஜா பெங்களூரில் உள்ள அவர் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்றுமுன்தினம் மதியம் தனது பேரன் கெல்வினை அழைத்துச் செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் வனஜா. அப்போது 4 மர்ம நபர்கள் வீட்டில் மேல் ஏறுவதை பார்த்த வனஜா திருடன் திருடன் என கத்தியுள்ளார்.
நால்வரும் அந்த வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து சத்தம் போட்ட வனஜாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் நால்வரும் தப்பியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பொலிசார் வனஜாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.
வனஜா உண்மையிலேயே நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் நாயின் செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பாணந்துறை கடற்கரையில் பூனைக் குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த நாய் அண்மையில் குட்டிகளை போட்டுள்ளது. எனினும் அதன் குட்டிகள் அனைத்து உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் தாயினை இழந்த பூனைக் குட்டிகளுக்கு தாயப் பாசத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களை மிஞ்சியதாக நாயின் தாய்ப்பாசம் அமைந்துள்ள நிலையில், கடற்கரைக்கு வருவோரின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
வவுனியாவிற்கு இன்று(25.10) காலை 9.30 மணியளவில் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் விஜயம் செய்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டபோது வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா நகரசபை, பொது அமைப்புக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்ற அமைச்சர் அதனைப்பார்வையிட்டுள்ளார்.
வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜனால் வர்த்தக நிலையங்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர் நகரசபைத் தவிசாளர் இ.கௌதமனின் அழைப்பின்பேரில் இலுப்பையடிப்பகுதியிலுள்ள தினச்சந்தைக்குச் சென்று அதனைப்பார்வையிட்டுள்ளதுடன் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் பணிகள் முடிவடைந்துள்ளது குறித்து தினச்சந்தை வியாபரிகளினால் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
பின்னர் தினச்சந்தைக்குப் பின்னாலுள்ள குளத்தினையும் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இதன்போது நகரசபை தவிசாளர், உபதவிசாளர், கட்சியின் ஆதரவாளர்கள், தினச்சந்தை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும் செயற்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.
புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை. இதில் சிலர் மதுப்பாவனையிலும் சட்விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதுடன் விடுதியாகவும் செயற்படுத்திவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனைத்திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.
இதனால் குறித்த புதிய மலசலகூடத்தில் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்துடன் பொது மலசலகூடத்தில் தொழில்புரியும் நபர்கள் மலசலகூடத்தை தவறான நடவடிக்கைக்குப் பயன்படுத்தி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியில் குடிமனைகளைச் சுற்றியுள்ளதால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை அப்பகுதிக்கு சென்றபோது அங்கு தங்கியுள்ள இருவர் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அவதானிக்க முடிந்துள்ளது.
இவ்வாறு மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தில் மது பாவணையும் சட்டவிரோத நடவடிக்கையும் இடம்பெற்று வருவதை இங்குள்ள அதிகாரிகள் கண்டுகொள்வில்லையா?
சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தலையை துண்டித்துக் கொலை செய்துவிட்டு சுடுகாட்டு முனி பலியிட்டதாக கூறி நடித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிவேல். சின்னப்பொன்னு தம்பதியினரின் இளைய மகள் மகள் ராஜலெட்சுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 22 ந்தேதி ராஜலெட்சுமி, வீட்டில் தனது தாயுடன் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வசித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் கொடுவாளுடன் வீட்டுக்குள் ஆவேசமாக புகுந்தார்.
ராஜலட்சுமியின் தலை முடியை பிடித்து இழுத்துச்சென்று வீட்டு வாசல் அருகே வைத்து அவரது தலையை துண்டித்து கொலை செய்தார். தலையை தூக்கிச்சென்று சாலையில் வீசி விட்டு உறக்க கூச்சலிட்ட படியே அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
சம்பவத்தை கண்ட அவரது தாய் அதிர்ந்து போனார். ரத்தம் தெறிக்க ஆவேசமாக காணப்பட்ட கொலையாளி தினேஷ்குமாரை காவல் நிலையத்தில் அமரவைத்து விட்டு, மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
முதலில் அகோரி போல ஆவேசமாக காணப்பட்ட தினேஷ்குமார், தன்னை சுடுகாட்டு முனி என்றும் தனக்கு மல்லிகை பூ வாடை பிடிக்காது என்றும் அதனால் அவளை முனி கொன்று விட்டது என்றும் கூறி அதிரவைத்தான். அதோடில்லாமல் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நாடகமாடி உள்ளான்.
2 நாட்களாக தினேஷ், சைக்கோ போல முரண்பாடாக பேசி, நடித்து காவல்துறையினரை ஏமாற்றி வந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவனது மனைவி சாரதாவிடம் விசாரித்த போது கொலைக்கான பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
பக்கத்து தோட்டத்தில் வசிக்கும் சாரதாவுடன் மாணவி ராஜலெட்சுமி அன்பாக பழகி வந்துள்ளார். இதனை சாதகமாக்கிக் கொண்டு தினேஷ், ராஜலட்சுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளான்.
சம்பவத்தன்று மனைவி வெளியில் சென்றிருந்த நேரம் வீட்டிற்கு வந்த மாணவி ராஜலட்சுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான் தினேஷ்.
அப்போது மனைவி சாரதா வந்துவிட்டதால் அவனிடம் இருந்து தப்பிய சிறுமி ராஜலெட்சுமி வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சாமி வந்தது போல நடந்து கொண்ட தினேஷ், தன்னுடைய லீலைகளை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி விடக்கூடாது என்பதற்காக ராஜலெட்சுமியை கொலை செய்து விட்டு முனி கொன்று விட்டதாக நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொலையாளி தினேஷை கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தியாவில் திருமணம் ஆன சில மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பதஷாயி பகுதியை சேர்ந்தவர் திலீப்நாத். இவருக்கும் பரி (18) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பரியின் பெற்றோர் மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்பூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார்.
இதையடுத்து வலியால் துடித்த அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரி உயிரிழந்தார். தற்கொலை முடிவை பரி எடுத்ததன் காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.
அந்த வெங்காயத்தை தினமும் காலையில் இரண்டாக வெட்டி அதை சிறிது நேரம் தேய்து வந்தால் பல பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..
தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது.
முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
கைகளில் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை தினமும் தேய்ப்பது மிகவும் நல்லது.
பல்வலி உள்ள இடத்தில் சிறு துண்டு வெங்காயத்தை வைத்தால் வலி குறையும். மேலும் சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.
வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.
மேலும் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தினமும் சிறிது நேரம் தேய்த்து வத்தால் முடி நன்கு வளரும்.
மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் மாதவிடாய் வலி குறையும்.
வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும்.
காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும்.
சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.
பிரித்தானியாவில் பிரிந்து செல்ல முயன்ற மனைவியை நடுத்தெருவில் வைத்து ரத்தம் சொட்டச்சொட்ட, நிர்வாண இளைஞர் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் புஷெல் (22) தன்னுடைய காதலியுடன் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு திடீரென வீட்டினுள் வைத்து ஒரு குழந்தைக்கு தாயான ஜேட் கல்லஹரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் வலிதாங்க முடியாத ஜேட், ‘ஜூலி என்னை கொலை செய்ய போகிறான்’ என கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஒடிந்த வந்த பக்கத்து வீட்டு பெண், தலை முழுவதும் ரத்தத்துடன் தெருவில் ஓடிவந்த ஜேட்டை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் வீட்டிலிருந்து நிர்வாணமாக தெருவில் ஓடிவந்த ஜாக், காதலியின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தங்கியுள்ளான். இதில் நிலைகுலைந்த ஜேட் அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜாக்கையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இளம்பெண்ணை கொலை செய்து அவருடைய சடலத்துடன் உறவு வைத்து விட்டு, உடல் பாகங்களை சாப்பிட வேண்டும் என கொடூரமான பதிவை வெளியிட்ட அமெரிக்க இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் நேதன் பார்டர், 21, என்ற இளைஞர் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, the Dark Web-ஐ பயன்படுத்தியுள்ளார்.
அதில், “எனக்கு இளம்பெண்ணை கொலை செய்து அவளுடைய சடலத்துடன் உறவு வைத்துக்கொண்டதன் பின்னர், மாமிசத்தை ருசி பார்க்க வேண்டும் என ஆசை. சம்மதம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறீர்களா?” என பதிவிட்டுள்ளார்.
இதனை கவனித்த உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என பதில் கொடுத்துள்ளார். அதற்கு நேதன், “நல்லது! நான் கிழக்கு டெக்சாஸில் இருக்கிறேன். உங்கள் மகள் எவ்வளவு வயதானவர்? நாம் அவளை கொல்லலாமா?” என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த அதிகாரி ஒப்புக்கொள்ளவே, இருவரும் ஒரு ரகசியமான மின்னஞ்சல் முகவரிகளை பரிமாறிக்கொண்டு, மகளுடன் சந்திப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தனர். அந்த திட்டத்தில், உங்களுடைய மகள் ஹோட்டலுக்கு காரை ஒட்டி வர வேண்டும். அங்கு வைத்து தாக்கி நான் கொலை செய்துவிடுவேன். அதன் பிறகு செல்போனை எரித்துவிட்டு, புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு நான் அங்கிருந்து தப்பி விடுவேன். நீங்கள், உங்களுடைய மகள் வீட்டிலிருந்து ஓடிப்போய்விட்டால் என வெளியில் கூறி சமாளித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளான்.
அதன் பின்னர் தன்னுடைய இணையத்தில், “நான் இந்த முடிவில் இருந்து மாறப்போவதில்லை. நான் நிச்சயமாக இதை செய்யத்தான் போகிறேன்” என பதிவிட்டான்.
இளைஞரின் திட்டங்களை நன்றாக கவனித்து கொண்ட அதிகாரி, மற்ற அதிகாரிகளின் உதவியுடன் இளைஞரின் இணைய முகவரியை கண்டறிந்துள்ளார்.
அதன்படி சந்திப்பு நாளான 19ம் தேதியன்று நேதனை கைது செய்த அதிகாரி, அவன் வைத்திருந்த பொருட்களை ஆய்வு செய்தார். அதில், ஒரு கத்தி மற்றும் பிளாஸ்டில் பை இருந்தது. இதனையடுத்து குற்றவாளி நேதன் மீது, மூலதன கொலை முயற்சி, சதித்திட்டம் மற்றும் குழந்தையை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, Shelby County சிறையில் அடைத்தனர்.
கட்டுநாயக்க பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
UL 405 என்ற விமானமே மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாங்கொக்கில் இருந்து வந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு தரையிற்றக்க திட்டமிட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாலை 5.50 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
135 பயணிகள் மற்றும் 9 ஊழியர்களுடன் பயணிக்கும் குறித்த விமானம் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பின்னர் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானம் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் மத்தள விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இவருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தம்புளை கெக்ரிவா பகுதியின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வேன் ஒன்றும் சிறிய லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பெண் மற்றும் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் 4 மற்றும் 6 வயதுடைய சிறியவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என குறிப்பிடப்படுகின்றது.
குறித்த குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் கட்டாரில் பணி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை பெறுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.