பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

 
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி – எருவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், கைவிடப்பட்ட காணியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இது தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கிய நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனின் அபரீத திறமையால் தாயொருவருக்கு அரசாங்கம் கொடுத்த அதிஷ்டம்!!

தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவனின் திறமை காரணமாக, அவரது தாயாருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 5ஆம் தர புலமைப்பரீசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்த மாணவனின் தாயாருக்கு தொழில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ரவினால், குறித்த தாயாருக்கு தொழில் வாய்ப்பு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை ஊருகடுவ மெதடிஸ் பாடசாலையில் கல்வி பயின்ற சிதிஜ நிரான் 2016ஆம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்தார்.

இதனையடுத்து கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி நடவடிக்கையை தொடர வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரது கல்வி நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையை தீர்த்துக் கொள்ள மாணவனின் தாயாருக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆறடி நீளமான முதலையை கைது செய்து சிறையில் அடைந்த பொலிஸார்!!

ஆறு அடி நீளமான முதலை ஒன்றை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைந்துள்ளனர். பலபிட்டிய மாது ஏரியில் இருந்த வந்த 6 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று முன்தினம் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், முதலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் அம்பலங்கொட பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரி இது தொடர்பில் வனவிங்கு அதிகாரிகள் அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிலைச்சாலையில் இருந்து நேற்று காலை பாதுகாப்பான இடத்திற்கு முதலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

70 வயதில் சர்வதேசத்தை அதிசயிக்க வைத்த இலங்கை பெண்மணி!!

இலங்கையை சேர்ந்த வயதான பெண்மணியின் விடா முயற்சி காரணமாக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 70 வயதான ரோஹினி என்ற பெண்மணி, சர்வதேச பெட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கொழும்பை சேர்ந்த ரோஹினி பம்பலப்பிட்டி பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். அந்த காலப்பகுதியில் மிகுந்த விருப்பத்துடன் பெட்மின்டன் விளையாட்டில் ரோஹினி ஈடுபட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையின் ஊடாக கிடைத்த ஓய்வு நேரங்களில் ஒஸ்ட்ரஸ் என்ற விளையாட்டு கழகத்திற்கு சென்று பெட்மின்டன் விளையாட்டு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

அதற்கமைய நியூசிலாந்து நாட்டவருடன் பெட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு அவரை தோற்கடித்த ரோஹினி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற போட்டியில் அந்த நாட்டவரை தோற்கடித்து 70 வயதில் பதக்கம் வென்றமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவுகளை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 70 வயதில் சர்வதேச வெற்றியை பெறுவதென்பது பின்வாங்காமை மற்றும் விடா முயற்சியே காரணம் என ரோஹினி மேலும் தெரிவித்துள்ளார்.

70 வயதிலும் மிகுவும் துடுப்பான முறையில் விளையாடி தங்கப் பதக்கம் வென்ற ரோஹினிக்கு சர்வதேச ரீதியாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

வவுனியாவில் வெடிகுண்டு பொலிசாரால் மீட்பு!!

 
வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டார் ரக வெடி குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், தாண்டிக்குளத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தினை பண்படுத்ததியவேளை உழவு இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

இதனை அடுத்து அந்த காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் இந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மோட்டார் ரக வெடி குண்டினை மீட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில்  (05.10.2017 வியாழக்கிழமை ) காலை தீர்த்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

காலை 8.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் தீர்தோற்சவம் இடம்பெற்றது .

2

வவுனியா தொண்டராசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

 
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று(06.10.20170 கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்கு முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணசபையினால் ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகுதியானவர்களுக்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 வருடங்களுக்கம் மேலாக தொண்டராசியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்தபோதிலும் தாம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலமாக இந் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் ஆசிரியருக்கு எதிராக பரப்புரை செய்த இரு மாணவர்கள் கைது!!

வவுனியாவில் ஆசிரியருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்பரை செய்த இரு மாணவர்களை நேற்றைய தினம் (05.10.2017) வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 17வயதுடைய இரு மாணவர்கள் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பான தகாத வர்த்தைகள் மற்றும் சித்தரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகரம், நூலக வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற பகுதிகளில் நேற்று (05.10.2017) இரவு வேளையில் விநியோகித்துக் கொண்டிருந்த சமயத்தில் வவுனியா பொலிஸார் குறித்த இரு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் மீது இருந்த தனிப்பட்ட கோபத்தினால் தாங்கள் இதை செய்தாக விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை!!

வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று (06.10) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை, வவுனியா மாவட்டத்தில், ஈறற்பெரிய குளம், ஈறற்பெரிய குளம் படை முகாம், ஈறற்பெரிய குளம் SLBC, வேரகம, கற்குண்ட மடு, அலுத்கம, அழகல்ல, பஹல அழுத்வத்த, புபுதுகம, குருந்துப்பிட்டிய, பூ- ஓயா படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

பாம்பினால் ஏற்பட்ட கோர விபத்து!!

சேலம் மாவட்டத்தில் பாம்பினை காப்பாற்றுவதற்காக பிரேக் போட்டதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஓமலூர் அருகே இரண்டு லொறிகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தன. இதில் முதலில் சென்ற லொறியை தனசேகர் என்பவர் ஓட்டிசென்றுள்ளார்.

பின்னால் வந்த லொறியை தங்கதுரை என்பவர் ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் 10 அடி நீள பாம்பு ஒன்று ரோட்டில் ஊர்ந்து சென்றதால் தனசேகர் பிரேக் போட்டதையடுத்து, பின்னால் வந்த தங்கதுரையும் பிரேக் போட்டுள்ளார்.

ஆனால் தங்கதுரையின் லொறியில் இருந்த இரும்பு கம்பிகள் முன்னோக்கி பாயந்து ஓட்டுநரான தங்கதுரை மற்றும் அவருடன் இருந்த கிளீனர் உடலில் குத்தியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான பாம்பும் லொறி சக்கரம் ஏறி உயிரிழந்தது.

வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள பின்தங்கிய தமிழ்ப் பாடசாலை!!

 
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலையான மல்வத்தை, புதுநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை இரண்டு வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளது.

அந்த வகையில் குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவி சுதர்சன் நிவானுஜா புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.

அத்துடன் வரலாற்றில் முதற் தடவையாக குறித்த பாடசாலையில் இம்முறை 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது தொடர்பில் பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் கருத்து தெரிவிக்கையில்,

சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலை மாணவி சுதர்சன் ஜிவானுஜா 187 புள்ளிகளை பெற்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றதன் மூலம் பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அத்துடன், மேலுமொரு வரலாற்று சாதனையையும் எமது பாடசாலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எமது பாடசாலையின் வரலாற்றில் 11 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாய்!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் அமெரிக்க நாணயத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 153.39 ரூபாவாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரூபாவின் பெறுமதியை நிலையாக வைத்திருப்பதில் இலங்கை மத்திய வங்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய வசதி அறிமுகம் : மகிழ்ச்சியில் வாகன சாரதிகள்!!

ஸ்ரீலங்காவில் வாகன சாரதிகளுக்கு எதிரான அபராதத் தொகையை செலுத்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஸ்ரீலங்காவில் இதுவரையில் அபராதம் செலுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படி, முதலில் அபராத தொகையை செலுத்திவிட்டு பின்னர் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் இந்த முறை கடினம் என்பதனால் அதனை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத பத்திரத்தை, தபால நிலையத்தில் ஒப்படைத்து பணத்தை செலுத்த வேண்டும். பின்னர் அதனை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் சாரதிகளின் அசளகரியங்களை தவிர்க்கும் நோக்கில், எதிர்வரும் காலங்களில் இணையத்தளம் ஊடாக அபராதம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை அறிமுகப்படுத்தி வைத்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை மீள பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்!!

தொழில்நுட்ப சந்தையில் சேதைனை முயற்சியில் இருந்த மடிக்கும் வசதியுடன் கூடிய மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

மொபைல் போன்கள் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது எனவே அவற்றை மக்கள் விரும்பும் வகையில் வடிவமைப்பதில் பல நிறுவனஙங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதில் புதிய வகையான மக்கள் வசதிக்கேற்ப மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் மொபைல் போன்களை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அப்படி மடித்து வைத்துக்கொள்ளக் கூடிய போல்டிங் மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

இந்த போல்டிங் மொபைல் போன் குறித்த அறிவிப்பொன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் வௌியிட்டிருந்தது.

தற்போது அந்த போல்டிங் மொபைல் போனை விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்த போன் 7 இன்ச் தொடு திரை வசதியுடன் இருக்கலாம் எனவும் அதனை மடிக்கும் போது கையடக்க அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

விரைவில் வௌியாகவிருக்கும் இந்த போல்டிங் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 அடி இராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்!!

 
இந்தோனேசியாவில் 25 அடி இராட்சத மலைப்பாம்பை கிராம மக்கள் கொன்று விருந்தாக உண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன, அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது 25 அடி மலைப்பாம்பு ஒன்று அங்கு இருந்துள்ளது, அதனை பிடிக்க முயன்ற போது பாம்பு அவரின் இடது கையை கடித்து இழுத்துள்ளது. உடனிருந்தவர்கள் மலைப்பாம்பை தாக்கி அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த இராட்சத பாம்பை பிடித்த கிராம மக்கள் அதனை கொன்று சமைத்து விருந்தாக்கியுள்ளனர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொதுவாக மலைப்பாம்பு 20 அடி இருக்கும். இது மிகப்பெரிய மலைப்பாம்பு என கூறியுள்ளனர்.

புதிய சாதனை படைத்த மெர்சல் டீசர்!!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் `மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது படமான `மெர்சல்’ வருகிற தீபாவளிக்கு வௌியாகவுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் புதிய சாதனையை படைத்திருந்தது என்பது நாம் அறிந்ததே.

முதல் வாரத்திலேயே 20 இலட்சம் பேரால் பார்க்கப்பட்டு இந்திய அளவில் புதிய சாதனையை படைந்திருந்த `மெர்சல்’ படத்தின் டீசர் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

அதாவது கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாகிய `மெர்சல்’ டீசரை இதுவரை (312 மணிநேரங்களில்) 2 கோடியே 50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது. அதேபோல், 9 இலட்சத்து 37 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.