குருணாகல் மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக கல்லறையில் வாழும் நபர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 75 வயதான ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற நபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார்.
கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பிரதேசத்தின் பொது கல்லறையில் அவர் வாழ்ந்து வருகிறார்.
குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகராக இலங்கையின் பல பகுதிகளில் சேவை செய்துள்ளார். அநுராதபுரம் அலுவலகத்தில் மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தன்னை கைது செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் இரண்டு சிறை தண்டனையும் அவர் அனுபவித்துள்ளார். சிறை தண்டனையின் பின்னர் அவர் தனது தொழிலையும் இழந்துள்ளார்.
தொழிலை இழந்த குறித்த நபர் நாட்டின் பல பகுதிகளில் ஆங்கில ஆசிரியராக மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தியுள்ளார்.
செய்த தவறுக்காக தண்டனையாக கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் குறித்த கல்லறையில் குடியேறியவர், அந்த பகுதி மக்கள் வழங்கும் உணவில் உயிரிழக்கும் வரை அந்த இடத்தில் வாழ்ந்து வருகின்றார்.
செய்யும் தவறுக்கு முன்னர் அதன் பின்னரான விளைவுகள் குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் செய்துக் கொள்ளாத நபர் தனது உறவினர்களை மறந்த கல்லறையில் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றார்.






























































