24 மணி நேரமும் இலவசமாக மது அருந்த இங்கு செல்லவும்!!

 
உலகில் முதன் முறையாக 24 மணி நேரமும் இலவசமாக மது வழங்கும் சேவையொன்று இத்தாலியில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் வையின் மது உற்பத்தி செய்வதில் இத்தாலி இரண்டாம் இடம் வகித்து வருகின்றது.மேலும், இத்தாலி நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல நாடுகளை சேர்ந்த சுற்றூலா பயணிகள் வருவது வாடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக, அப்ருஸ்ஸோ மாகாணத்தில் உள்ள சால்டரி டி ஓர்டோனா என்ற நகருக்கு இலட்சக்கணக்கான சுற்றூலா பயணிகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, சுற்றுலா பயணிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் வகையில் இப்பகுதியில் போன்டனா டெல் வினோ என்ற வையின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த வையின் நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு நீரூற்றில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் இந்த வையின் ஊற்றில் இருந்து 24 மணி நேரமும் வையின் வந்துக்கொண்டு இருக்கும்.

இவ்வழியாக செல்லும் சுற்றூலா பயணிகள் எவ்வித கட்டணமும் அனுமதியும் இன்றி எந்த நேரத்திலும் தரமான குறித்த வையினை சேமித்து அருந்தலாம்.இந்த வையின் ஊற்றை சுற்றூலா பயணிகளின் நன்மைக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்து நடத்தி வருகின்றது.

எனினும், கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக மது அருந்துபவர்களுக்கும், எந்நேரமும் மதுவில் மூழ்கியுள்ள நபர்களுக்கும் இங்கு வையின் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5

வடக்கு கிழக்கில் மின் தடை!!

powercut

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கோளாறு ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் 3 பிரதான மின் உற்பத்தி இயந்திரங்களும் செயல் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயல் இழந்துள்ளதால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!

 
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் , பொதுமக்கள்,பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன், புதிதாக அமைக்கப்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தினையும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார்.

இவ் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையமானது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை பொலிஸ் அரணாக காணப்பட்டது. இன்று (15.10.2016) முதல் பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப் பொலிஸ் நிலையத்தின் கீழ் 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் 11482 மக்கள் வசித்து வருகின்றனர்.

இதேவேளை இன்று 12 மணியளவில் வவுனியா போகஸ்வவையிலும் பொலிஸ்நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0155 dsc_0161 dsc_0166 dsc_0167 dsc_0172 dsc_0176 dsc_0178 dsc_0181 dsc_0185 dsc_0188 dsc_0192 dsc_0193 dsc_0197 dsc_0198 dsc_0203 dsc_0204 dsc_0206 dsc_0211 dsc_0214 dsc_0218 dsc_0222 dsc_0223 dsc_0230 dsc_0236 dsc_0248 dsc_0250 dsc_0252 dsc_0259 dsc_0260 dsc_0265 dsc_0266

பகலில் தூங்குபவரா நீங்கள் : எச்சரிக்கை!!

sleep

நிறையப் பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக சில பெண்கள் மதியம் தூங்குவதை ஒரு வேலையாகவே செய்வார்கள். அவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் 40 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தினமும் தூங்கினால் சர்க்கரை வியாதிக்கான ஆபத்து ஏற்படும் .

ஆராய்ச்சி 
தினமும் குறைந்தது 45- 1 மணி நேரம் தூங்கினால் 45 % பேருக்கு உடல் பருமன், சர்க்கரை வியாதி வரும் ஆபத்து உண்டு என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர்.

இதில் 40 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தூக்கம் சர்க்கரை வியாதி வரவில்லை. ஆனால் 45- 1 மணி நேரத்திற்கும் தூங்கியவர்கள் பெரும்பாலோனோருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்க்கரை வியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கில் என கூறலாம். கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும்.

இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத் சட்டார் கூறுகிறார்.

இந்த ஆய்வின் இறுதியில் அதிக நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி கட்டுரை பியர் ரிவியூ மருத்துவ இதழில் வெளிவர இருக்கிறது.

தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் “விடியலை நோக்கி ” செயற்றிட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு உதவி!!

 

தமிழ்த் தேசிய மாணவர் பேரவையின் “விடியலை நோக்கி ” செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பேரவையின் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பேரவையின் நிறுவனர் ஆ.யோன்சன் மற்றும் வித்தியாலயத்தின் முதல்வர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்வில் பேரவையின் முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள்.

1 14642629_155757668217216_1959318219_n 14686619_155757568217226_1578025078_n 14694637_155757594883890_1406270683_n 14741644_155757628217220_615293319_n

இலங்கையில் பிரபல்யமடைந்துவரும் KWID வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு!!

renault-kwid

இலங்கையில் பிரபல்யம் அடைந்து வரும் Renault KWID வாகனத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த குறித்த வாகன தயாரிப்பு நிறுவத்தினால் 50 ஆயிரம் வாகனங்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் நிறப்பும் பகுதியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டமையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

எனினும் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் இவ்வாறான கோளாறுகள் இல்லையென இறக்குமதி செய்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மே மாதத்திற்கு முன்னர் இந்திய சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீள கோரப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு அந்த வாகனம் ஜுன் மாதத்திற்கு பின்னரே கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட Renault KWID வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதனால் வடிக்கையாளர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விபத்தில் யாழ் இளைஞன் பரிதாபமாக பலி!!

jaffna-accident

யாழ் நெடுந்தீவில் நேற்று இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு பிரதேசப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட தர்மதுரை பகீரதன் (24 ) என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறிந்த இளைஞர் யாழ் பகுதியில் இருந்து ஏ9 பிரதான வீதியில் பயணம் செய்துள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாடு இழந்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதன் காரணமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இளைஞர் மரணமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

a a1 a3 a4

தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை!!

media

தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என ஊடக அமைச்சின் செயலாளர் நிமால் போபகே தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் துறையொன்று தொடர்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் ஊடகங்களில் செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது.

இவ்வாறு செய்தி அறிக்கையிடும் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய வகையில் செய்தி அறிக்கையிடுவதனை தவிர்க்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தைக் கூட நிர்ணயிக்கக்கூடிய இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தில் ஊடகங்களை எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பதனை புரிந்து ஒழுக்க விதிகளை மீறாது செயற்பட வேண்டிய தார்மீக கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

பிழையான அர்த்தப்படுத்தல்களின் ஊடாக பல்வேறு சிக்கல் நிலைமைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய முழு உரையின் சில வசனங்களை மட்டும் எடுத்து செய்தி அறிக்கையிட்டு பிழையான தகவல்களை அர்த்தப்படுத்தல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக தர்மத்திற்கு அழகாகாது.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் போற்றப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையான தேவையற்ற அர்த்தப்படுத்தல்களின் ஊடாக கலகம் விளைவிப்பது நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடும் என நிமால் போபகே தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்பி எடுப்பதால் ஆபத்தா?

selfi

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது நமது உயிரை பாதிக்கும் வகையிலும் சூழ்நிலைகள் அமைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

செல்பி எடுப்பதால் வரும் விளைவுகள்

சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாக செல்பி எடுத்து போடுவதினால் அதற்கு மட்டும் அடிமையாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் மன ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

வித்தியாசமான செல்பி எடுக்க வேண்டும் என்று மிகப் பெரிய கட்டிடங்கள், அருவிகள் மற்றும் மலைகள் ஆகியவற்றின் மீது எடுக்கும் போது கவனச் சிதறல் காரணமாக மரணம் கூட நிகழலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து தலையை ஒன்றாக ஒட்டிக் கொண்டு செல்பி எடுக்கும் போது, ஒருவரின் தலையில் இருக்கும் பேன் அடுத்தவர்களுக்கு பரவுகிறது.

செல்பி எடுக்கும் போது, மிகவும் அருகில் மொபைல் வைத்து எடுப்பதால், குண்டாக இருப்பதாக தெரியும். இதனால் ஒரு சிலர் உடல் பருமன் அதிகரித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு உணவுகளை குறைப்பதால் உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உங்கள் கடவுச்சொல்லை பாதுகாப்பது எவ்வாறு?

Log-in box on computer screen; Shutterstock ID 150248045; PO: aol; Job: production; Client: drone
]

உங்களது முகநூல் கணக்காக இருக்கட்டும், மின்னஞ்சல் முகவரியாக இருக்கட்டும், அதன் பாதுகாப்பு கேள்விகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கடவுச்சொல் என்பது உங்களை அடையாளப்படுத்தும் ஒரு அந்தரங்க ஆவணம். அதனை பாதுகாப்பது உங்கள் தலையாய கடமை.

உங்கள் மாற்று அடையாள குறிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். உங்கள் சாதாரண தொலைபேசி இலக்கத்தையோ மின்னஞ்சல் முகவரியையோ வழங்க வேண்டாம்.

பாதுகாப்பு தொடர்பான கேள்விகளில் எவரும் கண்டுபிடிக்க முடியாத பதில்களை பதியுங்கள்.

அதேவேளை, இத்தகைய தகவல்களை குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையேனும் மீள் பரிசோதித்து, மாற்றுவதுசாலச்சிறந்தது.

உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்றுவது சிறந்தது. அதுவும் எவரும் கிரகிக்க முடியாதபடி மாற்றுவது சிறந்தது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Members of the Sri Lankan cricket team playfully pose for a photograph during a practice session ahead of their second test match against Australia in Galle, Sri Lanka, Wednesday, Aug. 3, 2016. (AP Photo/Eranga Jayawardena)

 

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015-2016ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதில் 4 பிரிவுகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.

முதல் பிரிவில் உள்ள வீரர்களுக்கு 1,65,000 டொலர்களும், 2வது பிரிவில் 1,00,000 டொலர்களும், 3வது பிரிவில் 70,000 டொலர்களும், 4வது பிரிவில் 40,000 டொலர்களும் வழங்கப்பட்டன.

ஆனால் தற்போது இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தத்தில் முன்னதாக வழங்கப்பட்ட ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. இது 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவு வீரர்களுக்கு 1,25,000 டொலர்களும், 2வது பிரிவு 80,000 டொலர்களும், 3வது 60,000 டொலர்களும், 4வது பிரிவு 40,000 மற்றும் 5வது பிரிவு 20,000 டொலர்களும் வழங்கப்படுகிறது.

இது தவிர, அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு தனித் தனியாக பரிசுத் தொகை வழங்கப்படும்.

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 7,500 டொலர்களில் இருந்து 5,000 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொகை 10,000 டொலர்களாக உயரும்.

இது போல் ஒருநாள் போட்டிகளில் 3,000 டொலர்களும், டி20 போட்டிகளில் 2,000 டொலர்களும் வழங்கப்படுகிறது.

2015-2016ம் ஆண்டில் 16 வீரர்களுக்கு மட்டும் 684.85 மில்லியன் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாம். இது இலங்கை கிரிக்கெட் சபையின் வருவாயில் 33 சதவீதமாகும்.

அவளை உடனே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் : இளம் பெண்ணுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

asia-bibi

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம்பெண்ணை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற இளம் பெண் அந்நாட்டின் பெரும்பான்மை மதக்கடவுளை தவறாகச் சித்தரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அந்த பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ஒரு நீதிபதி விசாரிக்க மறுத்துவிட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி நீதிமன்றங்களின் முன் ஆசியா பிபியை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.

மாணவனை கொடூரமாக தாக்கிய சகமாணவர்கள் : வைரலாகும் வீடியோ!!

attack

சகோதர்கள் இருவர் சேர்ந்து தனது சகமாணவனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பீகார் மாநிலம் முஜாபர்பூரில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்ணன் தம்பிகளான விக்கி மற்றும் விஷால் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து ஒரு ரவுடி கும்பல் போல, அவர்களின் சொல்பேச்சு கேட்காத, அவனது சக மாணவனை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

அடிதாங்க முடியாமல் காப்பாற்ற அழைக்கும் அந்த மாணவன் எழுந்து நிற்க அவரை மேலும் அடித்து துவைத்ததோடு, பெல்ட் மற்றும் ஷூவால் வலுவாக அடிக்கின்றனர்.

இதை யாரோ சக மாணவன் தனது மொபைல் போனில் வீடியோ பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். வீடியோவை பார்த்த பொலிஸார், பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

புற்று நோயை குணமாக்குவதாக கூறி பெண் மீது பலாத்கார முயற்சி : மந்திரவாதிக்கு சிறை!!

pre

பீகாரில் மந்திரவாதி ஒருவர் புற்று நோய் பாதிக்கப்பட்ட பெண்ணை குணமாக்குவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கைமூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் புற்று நோயால் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் தனது கணவருடன் மந்திரவாதத்தால் நோயை குணப்படுத்த முடியுமா என கேட்டு குறித்த மந்திரவாதியை அணுகியுள்ளனர்.

குறிப்பிட்ட நாளில் வந்து பூஜையில் கலந்துகொள்ளுங்கள் என்று மந்திரவாதி தர்மராஜ் கோண்டு கூறியதை அடுத்து அந்த பெண்ணும் குறித்த நாளில் வந்து பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது திடீரென்று மந்திரவாதி தவறான நடவடிக்கையில் இறங்கியதை அறிந்த அந்த பெண், அதற்கு மறுத்துள்ளார். ஆனால் நோய் குணமாக வேண்டும் என்றால் உடலில் குடிகொண்டிருக்கும் அசுத்த ஆவியை துரத்த வேண்டும் என்று கூறிக் கொண்டே அந்த மந்திரவாதி குறிப்பிட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இச்சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் உடனடியாக கூச்சலிட்டு, பூஜை அறையின் வெளியே காத்திருக்கும் உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து பூட்டப்பட்ட அறையை உடைத்து உள்ளே புகுந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த பொலிஸார் குறித்த மந்திரவாதியை கைது செய்ததுடன் அவரது வீடு மற்றும் பூஜை அறையை சோதனையிட்டுள்ளனர்.

அங்கிருந்து 5 மனித தலையோட்டிகளும் 18,000 ரூபாய் பணமும் சில பூஜை பொருட்களும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட மந்திரவாதி கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவதும், வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறை சென்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் ஒருவர், குறிப்பிட்ட மந்திரவாதி புற்று நோயை குணமாக்குவதாக இவர்களிடம் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி சிறப்பு பூஜைக்காக ரூ.20,000 செலவாகும் என்றும் கூறியுள்ளார் மந்திரவாதி. ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் தங்களின் ஏழ்மை நிலையை விளக்கி கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15,000 ரூபாயில் பூஜை செய்ய மந்திரவாதி ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது மந்திரவாதியின் பெயரில் ஏமாற்றுதல், பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் பொலிஸாரால் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இன்ஸ்டகிராமில் 10 கோடி ரசிகர்களைப் பெற்று பாடகி செலீனா கோமஸ் சாதனை!!

selina

இன்ஸ்­ட­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் 10 கோடி (100 மில்­லி யன்) ரசி­கர்­களைக் கொண்ட முதல் நட்சத்திரம் எனும் பெரு­மையை அமெ­ரிக்கப் பாட­கியும் நடி­கை­யு­மான செலீனா கோமஸ் பெற்றுள்ளார்.

23 வய­தான செலீனா கோமஸ், உடல்­நலக் குறைவு கார­ண­ மாக தற்­போது ஓய்­வெ­டுத்து வரு­கிறார். கடந்த ஓகஸ்ட் மாதத் தின் பின்னர் அவர் இன்ஸ்­ட­கி­ராமில் எத­னையும் வெளி­யி­ட வும் இல்லை.

எனினும், அவரை பின் தொடர்­ப­வர்­களின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. கடந்த ஜூலை மாதம் அவரை இன்ஸ்­ட­கி­ராமில் 8 கோடியே 92 லட்சம் பேர் பின்­தொ­டர்ந்­தனர். தற்­போது இந்த எண்­ணிக்கை 11 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்­காவின் மற்­றொரு இளம் பாட­கியும் செலீ­னா வின் நண்­பி­யு­மான டெய்லர் ஸ்பிட்டை இன்ஸ்டகி­ராமில் 9 கோடியே 15 லட்சம் பேர் பின் தொடர்­கின்­றனர்.

பாடகி பியோன்­ஸேவை 8 கோடியே 55 லட்சம் பேரும் தொலைக்­காட்சி நட்­சத்­தி­ர­மான கிம் கர்தாஷியனை 8 கோடியே 37 லட் சம் பேரும் பின் தொடர்கின்றனர்.

81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுகிறது சந்திரன் : நாசா தகவல்!!

moon

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 குழிகள் வரை சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகின்றன.

விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும் இந்த குழிகள் காலப்போக்கில் நிலவின் தோற்றத்தையே மாற்றியமைக்கின்றன. தூசுகளும் மாசுகளும் அதன் மேற்பரப்பில் படிந்து விடுகின்றன.

இதனால், 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சந்திரன் தனது மேற்பரப்பை மாற்றியமைக்கிறது. இந்தப் பொலிவு முன்பு இருந்ததை விட 100 மடங்கு அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனைக்கொண்டு நிலவின் வயதையும், மற்ற நட்சத்திரங்களின் வயதையும் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விண்கற்கள், வால் நட்சத்திரங்களின் தாக்குதலுக்கு பூமியும் உள்ளாகின்றது, என்றாலும், பூமியைச் சுற்றியுள்ள அடர்த்தியான வளிமண்டலம் அதனைக் காக்கின்றது.

ஆனால், சந்திரனைச் சூழ்ந்து வளிமண்டலமில்லை, ஒரு கன சென்டிமீட்டர் வரையில் வெறும் 100 வாயு மூலக்கூறுகளும் தனிமங்களுமே உள்ளன.

பூமியின் கடல் மட்ட பரப்பில் 100 பில்லியன் பில்லியன் கணக்கான மூலக்கூறுகள், ஒரு கன சென்டிமீட்டர் வரையில் காணப்படுகிறது.