பேஸ்புக்கின் மெசேஞ்சர் அப்பில் (Facebook Messenger) பிடித்தவர்களுடன் உரையாடிக் கொண்டே அவர்களின் முகம் பார்த்து Video Calls பேசுவதற்கு ஒரு வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் பரவலாக பயன்படுத்தப்படும் பேஸ்புக்கின் மெசேஞ்சரில் Video Calls வசதி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் Text செய்து கொண்டே Video Calls பேச முடியாது.
இந்த நிலையில் புதிய வசதியாக “instant video” என வசதி அந்த அப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிடித்தவர்களிடம் Video Calls பேசிக் கொண்டே, மற்றவர்களிடம் Text செய்து பேசிக் கொள்ள முடியும்.
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
மேற்கு ஆரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது. இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி தங்கத்தை தோண்டி எடுத்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் வீடு வாங்கும் அளவுக்கு தங்கம் எடுத்துள்ளனர்.
ஆனால் மோரித்தானியா செல்வதற்கு பல வித ஆபத்துகள் இருப்பதாகவும், தங்கம் தோண்டி எடுப்பதற்கு அந்நாட்டு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாலைவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட அஹ்மத் என்பவர் தன் குடும்பத்துடன் இங்கு வந்து குடிபெயர்ந்துள்ளார். தங்கம் தோண்டுவதற்கான உரிமம் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளார்.
ஒரு மாதகாலமாக தங்கியிருந்த அஹ்மத் ஆறுகிராம் தங்கம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் அவர் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தங்கம் கண்டுபிடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
ஆனால் இதில் இருக்கும் பொருளாதார ஆபத்துக்களை அரசு விளக்கவேண்டும் என பலர் கோரிக்கை விடுகின்றனர். இதற்கு அதிகாரிகள் தங்கம் தோண்ட அனுமதிப்பது பலரின் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபடாமல் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
குஜராத்தின் டாமோ பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், ஒரு பெண் ரயில் வந்து கொண்டிருந்தபோது பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி தண்டாவாளத்தை கடக்க முயற்சித்தார்.
அப்போது ரயில் அதிவேகத்தில் வந்ததால் மீண்டும் பிளாட்பாரத்தின் மீது ஏற முயற்சித்தார். ஆனால் அவரால் ஏறமுடியவில்லை. நல்ல வேளையாக நூலிழையில் மற்றொருவர் அவரை தூக்கிவிட்டார்.
இதனால் அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த அதிர்ச்சி காட்சிகள் அனைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மீது பொலிசார் பாலியல் பலாத்கார வழக்கு போடுவோம் என மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லின் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவரான இவர், மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
பிரியாவும் முருகனை காதலித்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இவர்களின் காதலை பிரியாவின் பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால் பிரியாவின் பெற்றோர் அவருக்கு மற்றொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் பிரியாவோ, முருகனை மறக்க முடியாமல், அவர் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
முருகனோ வேறறோருவருடன் திருமணம் ஆனதால், அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பிரியா அருகில் உள்ள காவல் நிலையத்தில் முருகன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
பொலிசார் முருகனை அழைத்து பிரியாவை திருமணம் செய்து கொள்ளும்படியும், அவ்வாறு திருமணம் செய்ய மறுத்தால் உன் மீது பாலியல் பலாத்காரம் வழக்கு தொடர்ந்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பொலிசாரின் மிரட்டலுக்கு பயந்த முருகன் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பொலிசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிசாரின் மிரட்டல் காரணமாகவும், பிரியாவின் தொடர் தொந்தரவால் தான் முருகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஒடிசாவில் தனா மஜி என்பவர் அ ம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் மீண்டும் நடந்துள்ளது.
மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது. இவருடைய மகள் பார்ஷா (வயது 7) உடல்நலக்குறைவால் மிதாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மேலும் மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்குள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதற்காக அம்புலன்ஸ் வரவழைத்து, அவரும், அவருடைய மனைவியும் மகளை கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே அச்சிறுமி இறந்து விட்டாள். அது தெரிந்தவுடன், அம்புலன்ஸ் ஓட்டுனர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு வற்புறுத்தினார்.
தினபந்துவும், அவருடைய மனைவியும் வேறு வழியின்றி மகளின் உடலை கீழே இறக்கினர். பின்னர், உடலை தோளில் சுமந்து கொண்டு தங்கள் கிராமத்தை நோக்கி சுமார் 6 கி.மீ தூரம் நடந்தனர்.
பல மைல் தூரம் நடந்த நிலையில், அக்காட்சியை கண்ட சிலர் வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து டிரைவர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பொலிசில் புகார் செய்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்லும் நபர்கள் அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக தப்பிச்சென்றால், மீண்டும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது 4 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டி ஏற்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அது, சவூதி அரேபியாவில் இம்மாதம் தொடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ள புதிய தொழிற் சட்டத்திற்கு அமைவாகவாகும்.
சவூதி உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்ட குறித்த சட்டம் அந்நாட்டில் தொழில் புரியும் அனைத்து வௌிநாட்டு தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் , வௌிநாட்டு தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில் இருந்து தப்பிச் சென்றால் , அது தொடர்பில் அதன் உரிமையாளர் முறைபாட்டொன்றை மேற்கொண்டிருந்தால் , குறித்த நபர் மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக சவூதி ரியால் 10 ஆயிரத்தினை அபராத தொகையாக செலுத்த வேண்டும். அது , இலங்கை பெறுமதி படி மூன்று இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதன் காரணமாக , தொழில் புரியும் இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு தப்பிச்செல்ல வேண்டாம் என்றும் , வீசா காலம் நிறைவடைந்த நிலையில் அந்நாட்டில் தங்கியிருக்க வேண்டாம் என்றும் மற்றும் சுற்றுலா வீசாவில் சென்று அங்கு தொழிலில் ஈடுபட வேண்டாம் என்றும் இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காலி – அஹங்கம பிரதேசத்தில் உணவகம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் விலங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகள் குறித்த உணவகத்தை கடந்த 30ஆம் திகதி சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது , கிளிகள் , நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட விலங்குகள் மீட்கப்பட்டன. மேலும் , சந்தேகநபர் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிவருவதற்கு முன்பே 6 சர்வதேச விருதுகளை தமிழ் படம் ஒன்று வாங்கிக் குவித்துள்ளது.
அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் ‘கனவு வாரியம்’. இவர் ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ.சிதம்பரம் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகராக இருந்தவர்.
அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்) பணிபுரிந்தார். அருண் சிதம்பரம், இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவரும், கார்த்திக் சிதம்பரமும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையமாக கொண்டு குழந்தைகள் கொண்டாடும் வகையில் படமாக்கப்பட்ட கமர்ஷியல் திரைப்படம் ‘கனவு வாரியம்’, ஜுன் 11 முதல் 19 வரை சீனாவில் நடைபெற்ற 19 ஆவது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் பேராதரவுடன் 4 அரங்கு நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டது.
பின்னர், ஜூலை 26 முதல் 30 வரை கொரியாவின் பூசான் சினிமா ஹோலில் நடைபெற்ற ‘ஏசியன் நியூ மீடியா’ திரைப்பட விழாவிற்கு தெரி வானது. விழா குழுவினரால் இயக்குநர் அருண் சிதம்பரம் தென் கொரியா அழைக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஓகஸ்ட் 24 முதல் 28 வரை ரஷ்யாவில் நடைபெறும் ‘இண்டர் நெஷனல் மோட்டிவேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் BRIDGE OF ARTS’ திரைப்பட விழாவில் திரையிட தெரிவாகியிருந்தது. இத்திரைப்பட விழாவில் பங்கேற்க இயக்குநர் அருண் சிதம்பரம் ரஷ்யா சென்றுள்ளார்.
மேலும் ‘கனவு வாரியம்’ திரைப்படம் செப்டெம்பர் 16 முதல் 23 வரை வட கொரியாவில் நடைபெறும் ’15 ஆவது பியாங்யாங் சர்வதேச திரைப்பட விழாவிலும்’, செப்டெம்பர் 21 முதல் 24 வரை உக்ரைனில் நடைபெறும் ‘சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிலும்’, ஒக்டோபர் 6 முதல் 9 வரை இத்தாலியில் நடைபெறும் ’67 ஆவது மோண்டிகேட்டினி திரைப்பட விழாவிலும்’, டிசம்பர் மாதம் கென்யாவில் நடைபெறும் ’11ஆவது லோலா கென்யா திரைப்பட விழாவிலும்’ திரையிட தெரிவாகியுள்ளது.
‘கனவு வாரியம்’ திரைப்படம் வென்ற விருதுகள் வருமாறு,
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49 ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’ விருது
இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் சிறந்த குழந்தைகள் பாடலுக்கான ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருது
49வது வேர்ல்ட் பெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த படத்திற்கான விருது
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ‘17 ஆவது பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’வில் விருது
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லொஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட விழா’வில் விருது
மத்திய அரசால் நடத்தப்படும் ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’வில் (National Science Film Festival) சிறப்பு விருது
திரையிடப்பட்ட மேலை நாடுகளில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் குழந்தைகளின் பாராட்டையும் பெற்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.
ரியோ டி ஜெனெய்ரோவில் நடந்தேறிய ஒலிம்பிக் விளையாட்டு விழாவைத் தொடர்ந்து இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பராலிம்பிக் விளயைாட்டு விழா வில் இலங்கையைச் சேர்ந்த 9 போட்டியாளர்கள் பங்குபற்ற வுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய 9 இலங்கையர்களில் ஒருவரைத் தவிர்ந்த மற்றைய எண்மரினதும் பெறுபேறுகள் தரம் குன்றிக் காணப்பட்ட நிலையில் பராலிம்பிக் போட்டியாளர்கள் சாதிக்கும் முனைப்புடனும் நம்பிக்கையுடனும் ரியோ நோக்கி நாளை புறப்படுகின்றனர்.
இலங்கை அணியில் எட்டு ஆண் போட்டியாளர்களும் ஒரு பெண் போட்டியாளரும் இடம்பெறுகின்றனர். பராலிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியம் அனில் பிரசன்ன ஜயலத்துக்கு கிடைத்துள்ளது.
இவர் ரீ 42 பிரிவில் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் நீளம் பாய்தலிலும் பங்குபற்றவுள்ளார். காமினி ஏக்கநாயக்க, தினேஷ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியிலும் சம் பத் ஹெட்டிஆராச்சி எவ் 46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்குபற்றுகின்றனர்.
அஜித் ஹெட்டிஆராச்சி ரி 44 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளிலும் இந்திக்க சூலதாச ரி 42 பிரிவு 100 மீற்றர், 200 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளிலும் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.
அணியில் இடம்பெறும் ஒரே ஒரு வீராங்கனையான அமரா இந்துமதி ரி 47 பிரிவு 200 மீற்றர், 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்றார். இவர்களைவிட சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் உபாலி ராஜகருணவும் வில்லாளர் போட்டியில் சம்பத் பண்டாரவும் பங்கேற்கின்றனர்.
ரியோ பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கையர்கள் பதக்கங்கள் வென்று வருவார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களை வாழ்த்தினார்.
இலங்கை பராலிம்பிக் அணியினருக்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.
தனுஷுடன் ‘தொடரி’, சிவகார்த்திகேயனுடன் ‘ரெமோ’, பாபிசிம்ஹாவுடன் ‘பாம்புச்சட்டை’…இவை எல்லாவற்றையும் விட விஜய் படத்தின் அடுத்த நாயகி என்று இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷின் ஆண்டு. குஷியாக, பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் பேசியபோது,
எப்படி ஃபீல் பண்ணுறீங்க?
“இதென்ன கேள்வி? ஐ ஆம் த ஹேப்பியஸ்ட் வுமன் ஆன் எர்த். சின்ன வயசுலேயே ஹீரோயின் ஆகணுங்கிறதுதான் ஆசை, இலட்சியம் எல்லாம். அப்பா சுரேஷ்குமார், மலையாளத்தில் நிறையப் படங்கள் தயாரிச்சவர்.
அம்மா மேனகாவை உங்களுக்கே தெரியும். எண்பதுகளில் தமிழிலும் மிகவும் பிரபலமான நடிகை.
என்னோட அப்பா தயாரிச்ச ‘பைலட்ஸ்’, ‘அச்சனயானு எனிக்கு இஷ்டம்’, ‘குபேரன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சேன். ஹீரோயினா என்னோட முதல் படமே மிகவும் பிரம்மாண்டமான என்ட்ரி தெரியுமா?
அப்படியா? அப்படியென்ன படம்?
ஹீரோயினா நான் நடிச்ச முதல் படத்திலேயே ரெட்டை வேடம்தான். படம் பேரு ‘கீதாஞ்சலி’. பிரியர்தர்ஷன் டைரக்ஷன். மோகன்லால் ‘மணிசித்திரத்தாள்’ படத்தில் நடிச்ச அதே கெரக்டரில் இந்தப் படத்தில் வந்து கலக்கினாரு.
2013 இல் ரிலீஸ் ஆச்சி. அகதா கிறிஸ்டியோட நாவல் இன்ஸ்பிரேஷனில் உருவான படம் அது.
நீங்க சிவகார்த்திகேயனோட ரசிகையா?
என்ன அர்த்தத்துல கேட்குறீங்கன்னு தெரியலை. நானும், சிவாவும் தமிழ் சினிமாவில் ராசியான ஜோடியாயிட்டோம். எக்சுவலா எங்கம்மாதான் சிவகார்த்திகேயனுடைய தீவிர ரசிகை.
‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’ன்னு அடுத்தடுத்து அவரோட நான் நடிக்கிறது எங்கம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். ஷூட்டிங்கில் நான் எப்படி வேர்க் பண்ணினேன்னு கேட்குறதைவிட, “சிவா எப்படி பண்ணுறாரு? அடுத்து என்னவெல்லாம் படம் செய்யப் போறாரு?”ன்னு அவரைப் பத்தியேதான் ஆர்வத்தோட விசாரிச்சிக்கிட்டிருப்பாங்க.
விஜய்யோட நடிக்கறீங்க…
சத்தியமா இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘போக்கிரி’ வெற்றிவிழாவுக்காக அவரு திருவனந்தபுரம் வந்தப்போ கூட்டத்தோட கூட்டமா நின்னு ‘இளைய தளபதி வாழ்க’ன்னு கோஷம் போட்டுக்கிட்டிருந்தேன்.
அவரோட சேர்ந்து நடிக்கப் போறோம்னு அப்போ நினைச்சிருப்பேனா என்ன? ‘விஜய் 60’ படத்தோட பூஜையில் அவரை நெருக்கமா பார்த்தப்போ எனக்கு பேச்சே வரலை. “ரஜினி முருகன் பார்த்தேன்.
‘உம்மேல ஒரு கண்ணு’ பாட்டுலே கலக்கி யிருக்கீங்க”ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் அவரோடு சகஜமா பேசி நடிக்க முடிஞ்சது.
பெரிய ஹீரோக்களோடு பெரிய படங்களில் நடிக்கிறீங்க. இத்தனை படம் ஒரே நேரத்தில் நடிப்பதால் கால்ஷீட் பிரச்னை வரலையா?
தமிழில் ஒரே நேரத்தில் நாலு பெரிய படத்தில் நடிக்கிறேன் என்பது உண்மைதான்.
கதை கேட்குறது, சம்பளம் பேசுறதுலாம் என் மெனேஜர் பர்ஃபெக்டா பார்த்துக்கறாரு.
ஒரு படத்தோட இன்னொரு படத்துக்கு டேட்ஸ் கிளாஷ் ஆகாமே மிகவும் கவனமா இருக்கேன். அதனாலேதான் இதுவரை என் மேலே கால்ஷீட் புகார் எதுவுமில்லை.
உங்க அம்மா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறதில்லையா?
நோ நோ. அவங்க எந்த விஷயத்திலும் தலையிடறதில்லை. நானாதான் எல்லாத்தையும் அவங்ககிட்டே சொல்லிக்கிட்டே இருப்பேன்.
ரொம்ப எக்ஸ்பீரியன்ஸான நடிகை என்பதால் சினிமாவை அவங்க நல்லா புரிஞ்சி வெச்சிருக்காங்க.
அவங்களால எனக்கு எங்கேயும் தர்மசங்கடம் வந்துடக்கூடாதுன்னு மிக தெளிவா இருக்காங்க. என்னோட அக்காவும் கூட பொலிவூட் சினிமாவில் பெரிய ஆளுதான். ஷாருக்கானோட ‘ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தில் வேலை பார்த்தவங்க. அவங்களும்கூட.
விமானங்கள் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். தினமும் 14 நிமிடங்கள் காரை செலுத்திக் கொண்டு தனது வேலைத்தளத்துக்கு செல்வது நேர விரயம் என அவர் கருதினார். இந்நிலையில் தான் வேலைத்தளத்துக்குச் செல்வதற்காக தனது சொந்த விமானமொன்றை அவரே உருவாக்கியுள்ளார்.
திறந்த கொக்பிட் (விமானி அறை) கொண்ட இந்த விமானத்தை நிர்மாணிப்பத்றகு 3,700 யூரோ (சுமார் 6 லட்சம் ரூபா) செலவாகியதாம். அதிகபட்சமாக மணித்தியாலத்துக்கு 146 கிலோமீற்றர் (91 மைல்) வேகத்தில் இவ்விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
இவ்விமானத்தின் மூலம் வீட்டிலிருந்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு 4,5 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படுவதாக பிரான்டிசெக் ஹத்ரவா தெரிவித்துள்ளார்.
விற்பனை செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களிலும் விபத்தொன்றின் போது பாதிக்கப்படக் கூடிய இடங்கள் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதான கீழ் காட்டப்பட்டுள்ள படத்தில் போன்ற விஞ்ஞான ரீதியான படவிளக்கத்தைக் காட்சிப்படுத்தல், நேற்று முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க விடுத்த அறிக்கையொன்றில், கொள்வனவு செய்யும் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தில் பாதுகாப்பற்ற பகுதிகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விற்பனையாளர்கள் தலைக் கவசத்தை விற்பனை செய்யும் போது, தலைக்கவசம் உரிய தரத்தில் இருத்தல், இளம் வர்ண தலைக்கவசங்களை அணிவதன் முக்கியத்துவம், பாரிய விபத்தொன்றின் பின்னர் தலைகவசத்தின் பாதுகாப்பு தன்மையில் ஏற்படும் குறைபாடு, தலைக்கவசத்தின் நீண்டகால பாவனையின் பின்னர் தளர்வு ஏற்படுமாயின் அதனை அணிவதை தவிர்த்தல், தலைக்கவசத்திலுள்ள பாதுகாப்பு பட்டியினை தாடையுடன் இணைத்து அணிவதனால், தாடைக்கு ஏற்பட கூடிய பாதுகாப்பு என்பன தொடர்பில் கொள்வனவாளர்களுக்கு கட்டாயம் தெளிவூட்டவும் அறிவூட்டவும் வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் விபத்தினால் முகத்தில் ஏற்படக் கூடிய காயங்களுக்கு நீண்டகாலம் சிகிச்சை பெற்று வருவதுடன் அதற்காக பெருந்தொகையான பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் இலங்கை மோட்டார் சைக்கிளோட்டிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட Dropbox நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென Dropbox பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
68 மில்லியன் பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன இதை Dropbox நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2012 ஆம் ஆண்டில் திருடப்பட்டிருக்கலாம் என Dropbox சந்தேகிக்கிறது, எனவே, அதன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை புதுப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
68 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை திருடியது யார் என்ற விபரம் இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருந்தாலும், இதுவரை கணக்குகளுக்குள் ஊடுருவி எவ்வித தகவல்களும் மாற்றம் செய்யப்படவில்லை என Dropbox நிம்மதி தெரிவித்துள்ளது.
2012 இற்கு பிறகு Dropbox சேவையில் புதிதாக இணைந்து கொண்டவர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எனினும், கணக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது மாற்றிக் கொள்வது நல்லது என Dropbox குறிப்பிட்டுள்ளது.
குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது.
எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே சில சாதனங்களும், முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வரிசையில் தற்போது Snore Circle எனும் புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது காதில் அணியக்கூடிய புளூடூத் ஹெட்செட் போன்ற வடிவத்தைக் கொண்டதாக காணப்படுகின்றது.
இச் சாதனமானது குறட்டை விட ஆரம்பிக்கும்போது சிறிய அதிர்வை உண்டாக்குகின்றது. குறித்த அதிர்வானது காது எலும்புகளின் ஊடாக பயணித்து மண்டையோட்டை அடைகின்றது பின்னர் அங்கு உணர்ச்சி நரம்புகளை தூண்டி குரல் வளைக்கு சமிக்ஞையை அனுப்புகின்றது.
இந்த சமிக்ஞையானது குரல் வளையிலுள்ள தசைகளை விரிவடையச் செய்து குறட்டை சத்தத்தின் அளவை வெகுவாக குறைவடையச் செய்கின்றது.
இச் சாதனம் 2012ம் ஆண்டளவில் உருவாக்கப்பட ஆரம்பித்த போதும் தற்போதே முழுமை பெற்றுள்ளது. இதன் விலையானது 129 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது. சமீபத்தில் இந்த உணவை சாப்பிட்ட பிரித்தானியா இளைஞர் ஒருவர் தற்காலிகமாக காது கேட்கும் சக்தியை இழந்தார்.
மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கும், Bird’s eye மிளகாய்யை விட 100 மடங்கும் அதிகக் காரம் கொண்ட Mampus என்ற மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.
Mampus என்றால் மரணம் என்று அர்த்தமாகும். இந்நிலையில் மேற்கத்திய நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தோனேசியருடன் டெத் நூடுல்ஸ் போட்டியில் மோதி உள்ளார்.
இருவருக்கும் ஒரு தட்டில் டெத் நூடுல்ஸ் பரிமாறப்பட்டது. மேற்கத்தியர் சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது, நாவில் இருந்து நீர் வடிந்தது, கண்ணீர் பெருகியது.
இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி உணவை மீதி வைத்துவிட்டார்.
ஆனால், உள்ளுரை சேர்ந்தவரோ நிதானமாக பரிமாறப்பட்ட நூடுல்ஸ் அனைத்தையும் உண்டு போட்டியில் வெற்றிப்பெற்றார்.