நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி ஆவியாக அலைவதாக இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அண்மையில் வடமாநில இளைஞர் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஆவி ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளியானது.
அதை ஆராய்ந்து பார்க்க நான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றேன். அப்போது பயணிக்ள அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தார்.
நான் அருகில் செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண் காணவில்லை. பயந்து போய் வந்த வழியே நான் திரும்பி சென்றேன். அப்போது, திடீரென்று அந்த பெண் சிரித்து கொண்டு முன்னே தோன்றினார்.
நான் பயந்து அங்கிருந்து ஒடி வந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் பகிர சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் ஜேர்மனிய இளைஞர் ஒருவர் கலிபோர்னியா மாநிலத்தில் பல்வேறு வாகனங்கள், வீடுகளை தீக்கிரையாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
தனது தாயாரை அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் நாடு கடத்தியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக தீ வைக்கும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
29 வயதான ஹரி பர்க்ஹார்ட் எனும் இந்த இளைஞர் 2011 டிமெசம்பர் 30 ஆம் திகதிக்கும் 2012 ஜனவரி 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் கலிபோர்னியாவின் சான் பெர்னாண்டோ, மேற்கு ஹொலிவூட் பகுதிகளில் இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
தனது தாயார் டொரத்தி பர்க்ஹார்ட்டை அதிகாரிகள் நாடு கடத்தியதால், அமெரிக்காவை தீயில் வாட்டியெடுக்கப் போவதாக இவர் அச்சுறுத்தினார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வாகனங்களுக்கு வைத்த தீ பல வீடுகளுக்கும் பரவியது. இச் சம்பவங்களில் எவரும் காயமடையாத போதிலும் சொத்துகளுக்கு 30 இலட்சம் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் குப்பைத் தொட்டி யொன்றுக்குள் உறங்கியபோது, குப்பை களுடன் சேர்த்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும் ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
ஓர்கன் மாநிலத்தின் அல்பெனி நகரைச் சேர்ந்த 23 வயதான ஐவன் ரொசாலியோ மெண்டிஸ் பெரெஸ் எனும் மேற்படி இளைஞர் வீதியோரத்திலிருந்த குப்பைத் தொட்டி ஒன்றுக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
அப்போது, குப்பை ஏற்றிச்செல்லும் வாகனமொன்றுக்குள் குப்பைகளுடன் சேர்த்து மேற்படி இளைஞரும் கொட்டப்பட்டார். அக் குப்பைகளை அரைத்து மீள்சுழற்சிக்குட்படுத்தப்படவிருந்த வேளையில், விழித்தெழுந்த அவர், தனது நிலையை உணர்ந்து திடுக்கிட்டார்.
உரத்த சத்தம் எழுப்பி சாரதியின் கவனத்தை ஈர்க்க அவர் முயன்றார். எனி னும், சாரதிக்கு அவரின் குரல் கேட்கவில்லை. அதையடுத்து குப்பை வண்டியிலிருந்த கார்ட்போட்களை வெளியே வீசி எறிந்தார் ஐவன்.
அதை அவதானித்த குப்பை வண்டியின் சாரதி, அவ் வாகனத்தின் பின்புறம் சென்றபோது ஒருவர் உள்ளே இருப்பதை உணர்ந்து அவசர சேவைப் பிரிவு க்கு தகவல் கொடுத்தார். அதன்பின் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் குப்பை வண்டியிலிருந்து ஐவன் மீட்கப்பட்டார்.
அவர் பல தடவைகள் குப்பைகளுடன் சேர்த்து அழுத்தப்பட்டிருந்ததாக தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐவனின் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தனது கடையை பறித்துக் கொண்டதாகவும், வாழ வழியில்லாமல் தவிப்பதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் விக்னேஷ். அவரது மனைவி பெயர் பிரனீதா. திருமணமாகி 12 வருடங்களாகின்றன. விக்னேஷ் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
12 வருட வாழ்க்கையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆரம்பத்தில் இது சாதாரணமாகத் தோன்ற பின்னர் இருவரும் சண்டைபிடித்துள்ளனர். இதனிடையே அவர்களின் கடையின் வருமானமும் போதவில்லை.
இதனால் கணவருடன் எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாறாம் பிரனீதா. இவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பெரியவர்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நின்று அவர்களும் சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்த சண்டை நாளுக்கு நாள் முற்றவே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர் தம்பதியினர். அது இன்னும் முடியாமல் உள்ளதாம். இந்த நிலையில் மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் விக்னேஷ்.
அதில், எனக்கும், எனது மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதைக் காரணமாக வைத்து எனது மனைவியும், அவரது உறவினர்களும் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர். தொல்லை தருகின்றனர்.
எனது ஒரே வாழ்வாதாரம் தையல் கடைதான். அதையும் பறித்துக் கொண்டனர். இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். என்னால் வாழ முடியவில்லை. இவர்களிடம் சிக்கி தினந்தோறும் சாகிறேன்.
இவர்களிடம் சிக்கி தவிப்பதற்குப் பேசாமல் எனது உயிரை மாய்த்துக் கொள்வதே நல்லது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். சட்டப்படி தற்கொலை தவறு என்பதால் என்னால் அதை செய்ய முடியவும் இல்லை.
நான் கருணைக் கொலை செய்து கொள்ள எனக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும். அப்போதுதான் எனக்கு விமோச்சனம் கிடைக்கும். இல்லாவிட்டால் எனக்கு எனது மனைவி குடும்பத்தாரிடமிருந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்தில் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பாக தகவல்களை தந்துதவுமாறு யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பிரிவினர் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
மேற்குறித்த நபர் நீதிமன்ற அனுமதியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சையின் பின்னர் அந்நபர் வைத்தியசாலையினால் விடுவிக்கப்பட்டார்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ள குறித்த நபர் தன்னை பற்றி எந்த விபரங்களையும் தெரிவிக்காததன் காரணமாக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 077-4035013 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு..
ஆனந்த விகடன் வார இதழில் விஷால், நமது தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ளார். அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்.
தவறும்பட்சத்தில் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ள கத்திச்சண்டை திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தீர்மானிக்கப்படுகிறது. என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது.
வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின் காட்சியைக் காண முடியும். எனவே, அழைப்பை ஏற்பதா வேண்டாமா என நீங்கள் தீர்மானிக்கலாம்.
Duo வின் இந்த வசதிக்கு “ நொக்- நொக்’ (Knock Knock) என்று பெயரிட்டுள்ளனர்.
அன்ட்ரொய்ட் மற்றும் அப்பிளின் iOS செல்பேசிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.
இதற்கென பிரத்தியேகக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டிய தொல்லை இருக்காது. செல்பேசி எண்ணுடனேயே இந்த சேவையில் இணையலாம்.
WiFi யிலும் செல்பேசியின் இணையத் தொடர்பிலும் தானாக மாறி மாறிச் செயற்படும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், அழைப்புத் துண்டிப்பு இல்லாமல் பேச முடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இன்னும் ஒரு சில நாட்களில் Google Duo பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 30 வருடங்களாக விமானப்படையினர் வசமிருந்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் மீண்டும் பாடசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் வவுனியா விமானப்படை முகாமிற்கென சுவீகரிக்கப்பட்டிருந்தது.
இந்த மைதானம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு பாடசாலையின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியா பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பாடசாலையின் அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும், இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 3-0 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியை 3-0 என்று டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ள நிலையில் இலங்கையின் 19 வயதிற்குட்பட்டோர் அணியும் இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடியுள்ளமை பாராட்டதக்கதே.
ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றிய நிலையில், அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
இதன் படி முதலில் ஆடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 49.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக 2வது போட்டியில் சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியிலும் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார்.
அவிஷ்க பெர்னாண்டோ 138 ஓட்டங்களையும், டிலான் ஜயலத் 67 ஓட்டங்களையும், தலைவர் சரித் அசலன்க 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
301 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை மட்டுமே பெற்று 24 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசரங்க டி சில்வா 3 விக்கட்டுகளையும், தமித் சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றி இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போது முன்னாள் போராளி ஒருவர் தனது ஆதகங்களை பின்வருமாறு வெளியிட்டார்..
அரசியல்வாதிகள் தங்களது சுய லாபநோக்குடன் தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதைத் தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை .
முன்னாள் போராளிகள் 107 பேர் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன.
நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை, தடுப்பூசிகளை பரிசளித்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.
அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகள் அல்லது புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளுக்கே தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மனதளவில் பாதிப்படைந்துள்ளோம்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம், எமக்கு தீர்வுத் திட்டம் வேண்டுமேன பேசும் அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.
முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைக்கப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளியிடப்படவில்லை. முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.
நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக. இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் எமது போராட்டம். நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும். நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காகவே.
முன்னாள் போராளிகள் எங்களுக்கு தனிநாடு, எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள். அவர்களை நாங்கள் நினைவுகூறுவதற்குக் கூட தற்போது எதுவும் இல்லை.
என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140 போராளிகளில் நாங்கள் 4 பேர்தான் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூற முடியாதா?
யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே?
உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.
முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்குச் சென்றால்கூட புலனாய்வுப் பிரிவினர் எம்மை பின் தொடர்கின்றனர்.
அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து மூலம் இவ்வாறு பயணித்தது இந்த இளைஞனுக்கு இதுவே முதல் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் 18 வயதான Lachlan Smart என்பவர் கடந்த ஜூலை 4 ம் திகதி அவரது பயணத்தை அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இவர் ஏழு வாரங்களாக 24 ஆயிரம் மைல்கள் உட்பட 5 கண்டங்களில் உள்ள 20 நாடுகளை கடந்து வருகை தந்துள்ளார்.
ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகை வலம் வர முயன்ற முதல் அவுஸ்திரேலிய இளம் சிறுவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Ryan Campbell(19) என்பவரே உலகை வலம் வர முதலில் முயற்சி செய்த அவுஸ்திரேலிய பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ryan Campbell தனது பயணத்தை 2013ம் ஆண்டு 7 மாதங்கள் மற்றும் 25 நாட்களில் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Lachlan Smart அவரது சாகசத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
உலக சாதனையை பெறுவதற்காக முயற்சித்த இளம் இளைஞனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson கூறியுள்ளார்.
அத்துடன் இது உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்கான எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். அதுவரையில் இலங்கை பெரிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பல்களை வழங்கும் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson குறிப்பிட்டுள்ளார்.
எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு வருடத்திற்கு இவர் ஆக்கக்குறி தூதுவராக பணியாற்றுவார் என அமைச்சு கூறியுள்ளது.
ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த பதவி வழங்கப்பட உள்ளது.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை அவர் ஆக்கக்குறி தூதுவராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக ரஷ்ய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 14 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் மறுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ரஷ்யா வீராங்கனை யூலியா செர்மோஷன்ஸ்க்கயாவிடம் நடத்திய மறு பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி தர வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒலிம்பிக்கில் அவர் நிகழ்த்திய முந்தைய சாதனையும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.