தாயின் கரங்களில் சாய்ந்தபடியே உயிரை விட்ட ஹேய்லே ஓகினெஸ்!!

OSA

தெற்கு இங்கிலாந்தின் கிழக்கு சஸ்ஸெக்ஸ் நகரின் அருகேயுள்ள பெக்ஸ்ஹில் பகுதியைச் சேர்ந்தவர், ஹேய்லே ஓகினெஸ்.

17 வயது பெண்ணான இவர், கொடிய நோயான ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பிறவியில் இருந்தே பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரி மனிதர்களைவிட 8 மடங்கு அதிகமாக வயது மூப்பை அடைந்து விடுவர். அதாவது, இவர்களுக்கு 10 வயதாகும்போதே 80 வயதை அடைந்தவர்களுக்குரிய உடல் தளர்ச்சியையும், முதுமையையும் இவர்கள் அடைந்து விடுவர். இவர்கள் சராசரியாக 13 வயது வரை மட்டுமே உயிர்வாழ முடியும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை ஹேய்லே ஓகினெஸ்க்கு அளித்து இவரை ஒரு ஆய்வுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.

இதுதவிர, ´காலத்தை கடந்த எனது மூப்பு´ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் புத்தகமாகவும் எழுதியிருந்தார். இந்த புத்தகத்தின் மூலம் ஹேய்லே ஓகினெஸ் மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமின்றி, உலகளாவிய அளவில் ´ப்ரோகேரியா´ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லெண்ண தூதராகவும் ஹேய்லே ஓகினெஸ் செயல்பட்டு வந்தார்.

இவரது மருத்துவ சிகிச்சைக்கு கருணை மனமும், ஈகை குணமும் கொண்ட பலர் நிதியுதவி அளித்து வந்தனர்.

இந்நிலையில், தனது 17 வயதில் ஹேய்லே ஓகினெஸ் இயற்கையோடு இணைந்து விட்டதாக இவரது தாயார் அறிவித்துள்ளார்.

´என் குழந்தை வேறொரு நல்ல இடம்தேடி சென்றுவிட்டாள். இரவு (நேற்று முன்தினம்) 9.39 அளவில் எனது கரங்களில் சாய்ந்தபடி தனது இறுதி மூச்சை ஹேய்லே ஓகினெஸ் நிறுத்திக் கொண்டாள்´ என இவரது தாயார் கெர்ரி மரண அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் இலட்சக்கணக்கான மக்கள் ஹேய்லே ஓகினெஸ்-ன் ஆன்மா சாந்தியடைய அனுதாப செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

சிரியாவில் மீண்டும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் : கமராவை துப்பாக்கி என நினைத்து சரணடையும் சிறுமி!!

Sriya

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில், மீண்டும் அது போன்ற மற்றொரு புகைப்படம் வெளியாகிள்ளது.

இம்முறை பெண் குழந்தை ஒன்று புகைப்படம் எடுப்பதை துப்பாக்கியாக நினைத்து சரண்டர் ஆக அழுதவாறு கைகளை மேலே தூக்கும் புகைப்படத்தை செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது. இது போன்ற நிகிழ்வுகள், அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

சிரியாவில் உள்ள ஜோர்டான் அகதி முகாமில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கு சேவை செய்து வந்தார். அவர் அங்குள்ள பெண் குழந்தையை படம் பிடிப்பதற்காக தனது கமராவை எடுத்த போது அதை துப்பாக்கி என நினைத்த அக்குழந்தை தனது கைகளை மேலே தூக்கி சரண் அடையும் எண்ணத்துடன் அழுகையை கூட்டியது. மீண்டும் இக்காட்சிகளை காணும் போது நமது நெஞ்சங்களை இப்புகைப்படம் ரணத்தில் ஆழ்த்துகிறது.

கடந்த 4 வருடங்களாக சிரியாவில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 17000 பேரில் அக்குழந்தையின் குடும்பமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு நிகழ்வு!(படங்கள், வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று 03.04.2015 வெள்ளிகிழமை மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது.

காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட பவனியாக கோரவபோத்தான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தனர். பிற்பகல் அபிசேகம் வீதி உலா என்பன இடம்பெற்று மாலை ஐந்து மணியளவில் தீமிதிப்பு உற்சவம் இடம் பெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதிக்கும் உற்சவத்தில் பங்கு பற்றியிருந்தனர்.

 அம்பாள் வசந்த மண்டப பூஜையின் பின் உள்வீதி வெளிவீதி சிம்ம வாகனத்தில் வலம்வந்து  ஆலயத்துக்கு முன்புறம் தீமிதிப்புக்ககாக தயார் செய்யபட்ட பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி  வழங்க தயாரான நிலையில் அம்பாளின் பக்தர்கள் கடும் நெருப்பு கொண்ட குழியை தமது நேர்த்திகளை நிறைவேற்ற அருள்புரியுமாறு அம்பாளை வேண்டிபாடி  தீமிதித்து  சென்றனர் .

வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் காப்பு கட்டி விரதமிருந்த அடியார்களே தீமிதிப்புக்கு அனுமதி வழங்கபடுவது வழமையாகும் .

20150403_174453 20150403_174506 20150403_174546 20150403_174558 20150403_174632 20150403_174648 20150403_174718 20150403_174801 20150403_174828

மனைவி தற்கொலை : கேள்விப்பட்ட கணவனும் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி : யாழில் சம்பவம்!!

Sucide

மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை கேள்விப்பட்டதும் பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை குத்தி தானும் தற்கொலை முயற்சியில ஈடுபட்ட சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

கடந்த எட்டுமாதங்களுக்க முன்னர் இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்தவருக்கும் இடையில் திருமணம் நடை பெற்று இருவரும் இளவாலைப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் மனைவியின் நகையை அடகு வைத்தமை சம்பந்தமாக மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து மாமியார் இளவாலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் பொலிசாரினால் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் மனைவி இன்று காலையில் தூக்கிட்டு மரணம் அடைந்துள்ளார். இதனை மாமியார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மருமகனுக்கு தெரிவித்ததும் இவர் தன்னைத்தானே போத்தலை உடைத்தக் குத்தி ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுபவர் சுபாகரன் சுமதி வயது 24 என்பவராகும். இவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவருடைய கணவரான சிவபாதம் சுபாகரன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளவாலைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது!!

Mahapola

மஹாபொல கொடுப்பனவுத் தொகை இந்த மாதம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நூறு நாள் வாக்குறுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு கொடுப்பனவு தொகையை உயர்த்த முடியாது.

இந்த மாதம் முதல் கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த கொடுப்பனவு தொகை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் மீறவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஹாபொல கொடுப்பனவு தொகை உயர்த்தப்படாமைக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை சந்திர கிரகணம்!!

Kirakanam

சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமி நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது.

சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது. இத்தகைய முழு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. கிரகணம் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.31க்கு ஆரம்பமாகவுள்ளதோடு, இரவு 08.29க்கு நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை சந்திர கிரகணத்தின் பெரும் பகுதி பகல்வேளையில் நிகழும் எனினும், பகுதியளவிலான சந்திர கிரகணத்தை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.

இதே​வேளை, முழுமையான கிரகணம், வட அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆசியா பகுதியிலுள்ள மக்களுக்கு காணக்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்கள் இல்லாமல் பிறந்த அதிசயக் குழந்தையை குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்!!

பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஒரு அங்கமான வேல்ஸ் நாட்டில் உள்ள Cwmbran நகரத்தில் டானில்லி டேவிஸ்-ஆண்ட்ரூ ஸ்மித் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சமீபத்தில் கண்களே இல்லாமல் பெண் குழந்தை ஒன்று பிறந்ததால், அவர்கள் பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்துள்ளனர்.

டானில்லி கர்ப்பமாக இருந்தபோது மருத்துவமனையில் தனது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையின் மூளையில் நீர்க்கட்டி வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

குழந்தைக்கு Anopthalmia என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் கருகலைப்பு செய்ய மனமில்லாததால், குழந்தையை பெற்றுக்கொள்ளவே டானில்லி விரும்பியுள்ளார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் டானில்லி பிரசவித்தபோது, கண்களே இல்லாமல் பெண் குழந்தை பிறந்ததை பார்த்து பெற்றோர்களும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு கண்கள் உள்ள பகுதிகள் மூடியே இருந்ததால், ஒரு வேளை அங்கே வீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர்.

ஆனால், தற்போது குழந்தைக்கு 8 வாரங்கள் ஆனபோதும் கண்கள் பகுதிகள் மூடியவாறே உள்ளதால், குழந்தையை Anopthalmia நோய் கடுமையாக தாக்கி இருப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் குழந்தையால் பார்க்க முடியாது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மிக அரிதாக தோன்றும் இந்த நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது குழந்தைக்கு Daisy பெயர் சூட்டியுள்ள தாயார் இதுகுறித்து பேசியதாவது, குழந்தை பிறந்த பிறது அதனால் பார்க்கவே முடியாது என்ற உண்மையை மருத்துவர்களில் ஒருவர் கூட என்னிடம் கூறவில்லை.

குழந்தையால் பார்க்க முடியாவிட்டாலும், எங்கள் குடும்பத்தில் பிறந்துள்ள இந்த தேவதையை பிற குழந்தைகள் போலவே வளர்ப்போம் எனவும் பேசியுள்ளார்.

இதற்கிடையே குழந்தையின் கண்கள் உள்ள பகுதியில் செயற்கையான கண்ணாடி கண்களை பொருத்துவதால், அங்கே கண்கள் உள்ளது போல் மற்றவர்களுக்கு காட்சி தரும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

மேலும் குழந்தைக்கு 18 மாதங்கள் நிறைவடையும்போது Great Ormond Street மருத்துவமனையில், இந்த சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

B1 B2

கென்யா பல்கலைக்கழக தாக்குதலில் 150 பேர் பலி!!!

கென்யா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

கென்யாவின் கரிசா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நுழைந்த அல்ஷபாப் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70 மாணவர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது 150 மாணவர்கள் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சில மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாய் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 2 3

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!!

Siva

கொலிவுட்டில் நேற்று முன்தினம் பெரும் சர்ச்சை ஒன்று வேகமாக பரவி வந்தது. அது வேறு ஒன்றும் இல்லை ரைஸிங் ஸ்டார் சிவகார்த்திகேயனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது என்று தான்.

பின்னர் இந்தச் செய்தி உண்மையில்லை, ஏப்ரல் 1ம் திகதி என்பதால் ஏமாற்றுகிறார்கள் என சிலர் கூறினார்கள், இருந்தாலும் பலர் இதை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.இதை தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நான் நலமாக இருக்கிறேன் என டுவிட் செய்திருந்தார்.

நயன்தாராவை தோளில் தூக்கிய பிரபல நடிகர்!!

Nayanthara

நயன்தாரா மாஸ், தனி ஒருவன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் சிறிய வாய்க்கால் ஒன்றை தாண்டுவது போல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நயன்தாரா தாண்ட தடுமாறுவது போல் காட்சியாம்.

அப்போது மம்முட்டி அவரை தன் தோளில் தூக்கிக்கொண்டு அந்த சிறிய வாய்க்காலை தாண்டுவாராம். இப்படத்தில் இவர்களின் காதல் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாம்.

திறமையான இலங்கை வீரர்களை தெரிவுசெய்யும் புதிய முயற்சியில் களமிறங்கிய மகேல ஜெயவர்த்தன!!

Mahela

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவில் ஒரு கௌரவ பதவியை ஏற்றுக்கொள்ள முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விளையாட்டுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளில் ஒரு தரத்திலான கிரிக்கெட்டிற்கு ஜெயவர்த்தன உதவுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக பாடசாலை சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க தவறி வருவதால், தற்போது பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள T20 போட்டிகளுக்கு ஜெயவர்த்தன சிறந்த பங்களிப்பு வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாலந்த கல்லூரியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த ஜெயவர்த்தன இலங்கை தேசிய அணிக்குள் அணிக்குள் 1997 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டார்.

பின்னர் இலங்கை அணியில் அசத்திய அவர், நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண போட்டித் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்குமாறு இங்கிலாந்து பரிந்துரை!!

ECB

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அப்போது டெஸ்ட் போட்டியை 4 நாட்களில் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கொலின் கிரேவஸ் பரிந்துரைத்துள்ளார்.

4 நாட்களாக நடத்த திட்டமிட்டு இருக்கும் டெஸ்டில் தினசரி 110 ஓவர் வீச பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4 தினங்களில் 440 ஓவர் வீசப்பட்டு விடும்.

தற்போது தினசரி 90 ஓவர் வீசப்படுகிறது. 5 தினங்களில் 450 ஓவர் வீசப்படும். இதனால் 10 ஓவர் தான் குறைந்த நிலையில் இருக்கும்.

இங்கிலாந்தின் இந்த திட்டத்தை இந்திய கிரிக்கெட் சபை ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி 1876 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒருநாள் போட்டி 1971ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. T20 போட்டி 2005இல் கொண்டு வரப்பட்டது.

டி20 போட்டியின் தாக்கம் காரணமாக டெஸ்ட் போட்டி பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது வருகிறது.

இதனால் டெஸ்ட் போட்டியை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகல்-இரவாக டெஸ்டை நடத்தலாம் என்ற யோசனையும் இருந்து வருகிறது.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அதிசய நாகம்!!

Paampu

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு, அம்மன் அயற் கிராமங்களில் 11 நாட்கள் உலாவந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பது வழமையானதொன்றாகும்.

இந்நிலையில் அண்மைய நாட்களாக அம்மன் அயற் கிராமங்களுக்கு உலா சென்ற வேளை அவ்வாலயத்தினுள் ஏழு அடி நீளமான நாகபாம்பு ஒன்று ஆலயத்தினுள் உள் நுழைந்து வலம் வந்து அடியார்களுக்கு தன்னை காண்பித்து விட்டு திடீரென மறைந்துள்ளது.

இதனையடுத்து ஆலயத்தினுள் நின்ற பக்தர்கள் மத்தியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டதுடன் அம்மன் வீதி உலா சென்ற சமயம் பார்த்து உள்நுழைந்த மையானது அதிசயிக்கத்தக்க தொன்றாகும் என தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இம்முறை முதல்முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரதோற்சவத்தின் முத்தேர் பவனி (படங்கள் வீடியோ)!!

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா  நேற்று  வியாழக்கிழமை(02/04/2015) இடம்பெற்றது.

அதிகாலை ஐந்து மணிக்கு மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜா ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசெகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறரைமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை தொடந்து காலை ஏழு மணிக்கு தம்ப பூஜை இடம்பெற்றது.

தொடர்ந்து காலை எட்டு மணிக்கு வசந்த மண்டபூஜை ஆரம்பமாகி ஒன்பதுமணிளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்விநாயகர்  வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள்வீதி வலம் வந்து  ஒன்பதரை மணியளவில் தமக்குரிய தேர்களில்  ஆரோகணிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் மூன்று தேர்கள் ஓடுவது  வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில்  என்பது குறிப்பிடத்தக்கது.

 வவுனியா மாவட்டத்திலேயே மிக பெரிய சிவன்கோவிலான வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர்பவனிக்கு இலங்கையின் முதற்தர வானொலி சக்தி FM மற்றும் வவுனியா நெற் இணையம் என்பன ஊடக அனுசரணை வழங்கியிருந்தனர் .

 காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகி  இருப்புக்கு காலை பதினோரு மணியளவில் வந்து சேர்ந்தது. மேற்படி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் வருகை தந்து இருந்தனர்.

பின்னர் அர்ச்சனைகள் இடம்பெற்று பிற்பகல்  ஒரு மணியளவில் பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து மதியம் இரண்டரை மணியளவில் பிராயசித்த  அபிசேகமும்  இடம்பெற்றது .


20150402_082544 20150402_091243 20150402_082632 20150402_093250 20150402_093151 20150402_093141 20150402_093040 20150402_091740

20150402_093420 20150402_095957 20150402_094453 20150402_094409 20150402_094308

20150402_100318 20150402_101633 20150402_100801 20150402_100658 20150402_100552

20150402_102523 20150402_104420 20150402_104216 20150402_102912 20150402_102739

20150402_104722 20150402_104742 20150402_105347 20150402_135501 20150402_135759  20150402_104216

கைத்தொலைபேசி திருடனை கண்டுபிடிக்க தகவல் வழங்குமாறு பொலிஸ் வேண்டுகோள்!!(படங்கள்)

கண்டி – அலிமூடுக்குவ பகுதியிலுள்ள தொலைபேசி கடையொன்றில் நபரொருவர் கையடக்கதொலைபேசி ஒன்றை கொள்ளையிட்டு தனது பைக்குள் வைப்பது அங்கிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் கடந்த 24.03.2015 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்க தொலைபேசி வாங்க வந்த நபர் ஒருவர், 29,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை வாங்கியதன் பின் அவ்விடத்திலிருந்த 30,000 ரூபா பெறுமதியான மற்றொரு கைபேசியை யாருக்கும் தெரியாமல் திருடி தனது பைக்குள் வைத்துள்ளார்.

தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த கடையில் இருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேகநபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

1 2 3 4

இம்முறையும் இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை!!

Mathews

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதும் லீக் ஆட்டம் 9ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், ஈழத்த தமிழர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசாங்கம் அனைத்து இலங்கை வீரர்களுக்கும் தமிழகத்தில் விளையாட கடந்த இரண்டு சீசன்களிலும் தடைவிதித்திருந்தது.

மேலும் இம்முறையும் இலங்கை வீரர்கள் எவரும் தமிழகத்தில் விளையாட முடியாது என, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் காசி விஸ்வனாதன் உறுதி செய்துள்ளார். இந்த தகவலை ஐபிஎல் நிர்வாக குழுவுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் மத்தியூஸ் சென்னையில் விளையாடும் போட்டியில் அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து இன்னும் ஐபில் நிர்வாகத் தரப்பினரிடம் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறவில்லை என டெல்லி டெயாடேவில்ஸ் அணி குறிப்பிட்டுள்ளது.

இதனால் டெல்லி அணியில் விளையாடும் முக்கிய வீரரான இலங்கை அணித் தலைவர் மத்யூஸ் இந்த ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.