தாய்மையடைவதற்கான முழுத்தகுதி பெற்ற ஆண் : மருத்துவ உலகில் அதிசயம்!!

Male

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு தாய்மையடைவதற்குத் தேவையான கர்பப்பையின் அனைத்து உடற்கூறுகளும் அமைந்திருப்பது மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியாகியுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மருத்துவனைக்குச் பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர்ப்பையில் புற்று நோய் இருக்கலாம் என்று சந்தேகித்து பரிசோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் தெரியாததால் குழப்பமடைந்த மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. கருவி மூலம் அவரது உடலை முழுமையாக ஸ்கேனிங் செய்து பரிசோதித்தனர்.

ஸ்கேன் செய்யப்பட்ட படங்களைப் பார்க்கும்போது அவருக்கு கர்பப்பை இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், கர்பப்பை மட்டுமல்லாமல் கர்ப்பப்பை வாய், சினைப்பை, கருமுட்டை, பெலோபியன் குழாய் என்று ஒரு தாய்மை அடையக் கூடிய பெண்ணிற்குத் தேவையான அனைத்தும் அவருக்கு இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் அவரிடம் சிறுநீரில் ரத்தம் வந்ததற்கு மாதவிடாய் தான் காரணம் என கூறிய மருத்துவர்கள் விடலை பருவத்திலிருந்தே அவருக்கு விந்து மற்றும் சிறுநீரிலிருந்து ரத்தம் வெளியாகியுள்ளதை விளக்கியுள்ளனர்.

இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து அலிசன் ஸ்மித் ஸ்கொயர் என்ற பத்திரிகையாளரிடம் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், சிறுவனாக இருந்த போது எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.

ஆனால் என்னுடைய இருபதுகளில் உடலுறவின் போதும், உடலுறவுக்கு பின்பும் மந்தமான வலியை உணர்ந்தேன்.

தற்போது பரிசோதனை முடிவுகள் நான் ஆண் மற்றும் பெண் தன்மையோடு இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் நான் ஒரு ஆணாக தான் வாழ்ந்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அந்த நபருக்கு விரைவில் மான்செஸ்டர் பல்கலைக் கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், அதனை அகற்றிய பின் ’மெனோபஸ்’ எனப்படும் மாதவிடாய் சுழற்சி நின்ற நிலையை அவர் அடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

Vaal

சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செல்வராசா உதயராசா (34) என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் அழைத்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அவர் மீது திடீரென வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தலையிலும் கையிலும் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாடல் கேட்டபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர் ரயில் மோதி பரிதாபமாக பலி!!

Train

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவர்கள் மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கையடக்க தொலைபேசியில் பாடலை இரசித்தபடி தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் 17 வயதுடைய செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த சரவணபவன் சங்கீதன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 15 வயதுடைய இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக பெயர் மாற்றம்!!

Nelum

நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் பட்ரானியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி 2011ம் ஆண்டு 15ம் திகதி நெலும் பொக்குன மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இலங்கையில் பிறந்த கலை வரலாற்று ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமியின் பெயரை நீக்கி விட்டு நெலும் பொக்குன மாவத்தை என மாற்றி வைத்தமையினால் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஆனந்த குமாரசுவாமி ஒரு சிறந்த தத்துவவாதி, காட்சி கலை மற்றும் அழகியற்கலை எழுத்தாளர், இலக்கியம், மற்றும் மொழி துறைகளில் இலங்கைக்கு புகழ் தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் காணாமல்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவரின் தாயாரான புஸ்பாம்பாள் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ,வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன், சிவமோகன், நாங்கள் அமைப்பைச் சேர்ந்த சஜீவன், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக அந்தோணி மார்க் மற்றும் சகாயம் , முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு சார்பாக நவரட்ணம் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிக்கும் பொருட்டும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கான பிரதியையும் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.

1 2 3 4 5 6

வரவுசெலவுத் திட்டம் 163 வாக்குகளால் நிறைவேற்றம்!!

Parliment

இலங்கை புதிய தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பின்போது வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 164 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் செலுத்தப்பட்டன. சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.

கடந்த வாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விவாதங்களும் இடம்பெற்றன

வவுனியா படைத்தளத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!!

VV

வன்னிப் படைத்தளம் அமைந்துள்ள வவுனியாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இன்றய தினம்(07.02) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்ட அவர் இன்று பிற்பகல் 2.15 அளவில் வன்னி ஜோசப் விமானப்படை தளத்திற்கு விசேட கெலி மூலம் வருகைதந்திருந்தார்.

வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொலிபஸ் பெரேராவினால் விமானப்படைத்தளத்தில் வைத்து வரவேற்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வன்னி இராணுவ தலைமையகத்தில் இராணுவ மாியாதையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இராணுவ அதிகாரிகளுடன் கூட்டமொன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து வன்னி இராணுவத்தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உணவக கட்டிடமொன்றினையும் உத்தியோகபூர்வமாக அவர் திறந்து வைத்தாா்.

வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் காயம்!!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இன்று(07.02) நடந்த விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது முச்சக்கர வண்டி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்ததுடன் முச்சக்கர வண்டியும் பலத்த சேதத்திற்கு உள்ளானது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

-படங்கள் விஜிதரன்-

20150207_100345_resized 20150207_100351_resized 20150207_100812_resized

 

இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றால் அதிரடி பரிசுத் தொகை அறிவிப்பு!!

SL

உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் 6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் சிறப்பாக செயற்பட்டு வரலாறு படைக்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வெற்றி பெற்றால்130 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறது தானாக தீப் பிடித்து எரியும் குழந்தை!!

Baby

விழுப்புரம் மாவட்டத்தில் தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனது உடலில், தானாகவே அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.

இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, காயமும் குணமடைந்து விட்டது. இன்னும் ஒருவாரத்தில் குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மருத்துவர்கள் ஒருவர் கூறுகையில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை அதன் உடலில் தீப்பிடிக்கவில்லை.

குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது நலமுடன் இருக்கிறான்.

இன்னும் ஒரு வாரத்தில் சுகாதாரத்துறையிடம் குழந்தைக்கு எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை தெரிவித்துவிட்டு, குழந்தையை அதன் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்ப உள்ளோம் என்று கூறியுள்ளார்.

இணையத்தை மறப்பதற்காக கையை வெட்டிக் கொண்ட மாணவன்!!

Hand

சீனாவில் மாணவர் ஒருவர் இணையத்தை மறக்க வேண்டும் என்பதற்காக தன் கையை வெட்டிக் கொண்டுள்ளனர்.

சீனாவின் ஜீயாங்சூ மாகாணத்தின் நான்டங் நகரைச் சேர்ந்த ஜியா வாங்(19) என்ற மாணவன் 24 மணிநேரமும் இணையத்தில் பொழுதை கழிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

இந்நிலையில் இவரால் இந்த பழக்கத்திலிருந்த மீளமுடியாததால் கை இருந்தால் தானே இணையத்தை பார்க்க முடியும் என எண்ணி தனிமையின் ஓரிடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்பின் அங்கிருந்த ஒரு கருங்கல் மீது தன் இடதுகை மணிக்கட்டை வைத்து, கத்தியால் ஓங்கி வெட்டி, அதை துண்டித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பயங்கரமான வலியை தாங்க முடியாத ஜியா வாங், ரத்தம் சொட்டச் சொட்ட டாக்சி ஒன்றை பிடித்து, நான்டங் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று, அதன் வாசலில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். மேலும் இவர் கண்விழித்த பின் விசாரணை நடத்திய பொலிசார், மணிக்கட்டை தேடி அலைந்து, ஒருவழியாக அதை கண்டுபிடித்து மருத்துவர்களிடம் கொடுத்துள்ளனர்.

சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை பெற்ற ஜியா வாங்கிற்கு அவரது மணிக்கட்டு பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,

அந்த மணிக்கட்டை ஏதாவது நாய் கவ்விச் சென்றிருந்தால் சாத்தியமாகியிருக்காது என்றும் சில நாட்கள் கழித்தே, ஜியா வாங்கின் கைவிரல்கள் பழையபடி இயங்குமா என்பது தெரிய வரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் அது இயங்காமல் இருக்க வேண்டும் என மனதை அடக்கத் தெரியாத ஜியா வாங் நினைப்பதாக கூறப்படுகிறது.

9 வயதானால் கட்டாயம் கல்யாணம் திருமணம் செய்யவேண்டும் என மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

Iisis

ஐ.எஸ்.ஐ.எஸ் விவரிக்கும் ஆவணம் ஒன்றில் 9 வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிர்ப்பு தொடர்பான பிரிட்டிஷ் ஆய்வு மைப்பு ஒன்று இந்த ஆவணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பெண்களுக்கு கல்வி குறிப்பாக மதம் தொடர்பிலான கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் 7 முதல் 15 வயது வரை மட்டுமே உள்ள சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்றும், 9 வயதிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு, வெளி ஆடவர்களின் பார்வையில் இருந்து அவர்கள் மறைத்து வைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடை அலகங்கார கடைகள், அழகு நிலையங்கள் எல்லாம் சாத்தானின் வேலை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து பெண்கள், போராளிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு!!

Nazeer_ahamed

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக அஹமட் நசீர், ஆளுநர் ஒஸ்டின் பெர்னேண்டோ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான அஹமட் நசீர், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கட்சியை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

-அத தெரன-

இலங்கையில் 5000 போலி வைத்தியர்கள்!!

Doctors

இலங்கையில் ஐயாயிரத்து 26 போலி வைத்தியர்கள் இருப்பதாக 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

வடக்கு, மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மாகாண ரீதியாக நோக்கும்போது, வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஐந்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள போலி வைத்தியர்களில் 32.5 வீதம் வட மாகாணத்தில் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக ஐந்து வைத்தியர்களில் ஒருவர் போலியானவர் என்ற தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

போலி வைத்தியர்களை கைதுசெய்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத்தண்டனையாவது விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்!!

Singapore

14 வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 500 க்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் வருகை தர உள்ளனர்.

´உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்´ என்ற அமைப்பு உலகின் பல நாடுகளில் அரசுடனும் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து இந்த தமிழ் இணைய மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க் கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பிக்கின்றனர்.

சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள், இணையம், கையடக்க தொலைபேசி கருவிகளில் தமிழின் பயன்பாடு பற்றி சிறப்பு கருத்தரங்குகள் நடத்த உள்ளனர்.

-தினத்தந்தி-

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

Accident

வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று(06.02) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, குருமன்காடு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற தபால் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை அதே வீதி வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரும் மோட்டர் சைக்கிள் சாரதியும் காயமடைந்தனர்.

இதில் தபால் ஊழியரான கே.சுரேஸ்குமார் (34) ,மோட்டார் சைக்கிளில் சென்றவரான எஸ்.பசான் (19) ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.