இலங்கையில் போலி முக நூல் கணக்குகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இணைய மோசடிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப சிரேஸ்ட பொறியியலாளர் ரோஹான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
போலியான முக நூல் கணக்குகளே அதிகளவான மோசடிகளுக்கான காரணமாக அமைந்துள்ளது. மிரட்டல்கள் பண மோசடி ஏமாற்றல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற செயற்பாடுகளின் போது பயனர்கள் மிகுந்த கவனத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது.
குறிப்பாக தங்களது அடையாளத்தை மிகச் சரியான முறையில் உறுதி செய்யக் கூடிய அதாவது போலி கணக்குகள் உருவாக்கப்பட முடியாத வகையில் கணக்குகளை ஆரம்பிக்க வேண்டுமென சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருந்த போதும் புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் பைஷர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உலகில் சிறந்த கல்வித் திட்டம் நடைமுறையில் உள்ள நாடாக இலங்கையை மாற்றி அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்வித் துறையில் செய்யப்பட வேண்டிய அனைத்து மாற்றங்கள் மற்றும் சீர்த்திருத்தங்களை செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை ரோயல் கல்லூரி பொன்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மாணவர்களிடம் ஒப்படைத்தார்.
நாட்டின் அனைத்து பிள்ளைகளையும் தனது பிள்ளைகள் போல கவனித்து பொறுப்புக்களை நிறைவேற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சவால்களை எதிர்கொண்டு சிறு வயதில் இருந்தே பிரச்சினைகளுக்கு தீர்வுபெறும் வகையில் பிள்ளைகளை பழக்கிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அண்மையில் யாழ்பாணம் செல்வதற்காக பரந்தன் பூநகரி ஊடாக பயணித்த அந்த வீதியில் கண்ட காட்சி ஒருகணம் எம்மை திகைக்க வைத்தது . அதாவது மேற்படி வீதியின் ஒரு புறத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யபட்ட நெல்லை வீதி முழுவதும் பரவி காயவிடப்பட்டிருந்தது.
சுமார் 10km நீளத்துக்கு அறுவடை செய்யபட்ட நெல் வெயிலில் உலர வைக்கபட்டிருந்தது. அதாவது வெறும் வீதியில் இவ்வாறு நெல் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் காணப்பட்டது . மூன்று வருட மனித மற்றும் இயந்திர உழைப்பில் போடப்பட்ட இந்த பிரதான வீதிக்கு பெருமளவிலான மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது . மேற்படி பிரதேச விவசாயிகள் அதனை நெல் உலர வைக்கும் களங்களாக பயன்படுத்தி வருகின்றமை மிகவும் வேதனைக்குரிய விடயம் .
வவுனியாவில் மீண்டும் இன்று பிற்பகல் முதல் நல்ல மழை பெய்ய தொடங்கியுள்ளது .வானம் இருட்டிய வண்ணம் பிற்பகல் மூன்றுமணி முதல் தொடர்சியாக மழை பெய்து வருகின்றது . கடந்த தைப்பூச (03/02/2015) தினத்தன்று தொடங்கிய மழையானது இரண்டு நாட்கள் பெய்து ஓய்ந்த பின்பு மீண்டும் இன்றுமுதல் பெய்ய தொடங்கியுள்ளது.இதன் காரணமாகஅறுவடைக்கு தயாரான விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வவுனியாவின் பல பகுதிகளிலும் நெல் அறுவடை நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. தொடரும் மழை காரணமாக விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு முகம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன . அறுவடை காலத்தில் இவ்வாறு மழை பெய்வதனால் இம்முறையும் விளைச்சலில் எதிர்பார்த்த அளவு சாகுபடி கிடைக்கும் என்பதில் ஐயம் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .
இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைகள் இடம்பெறாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். எனினும் சோதனைச் சாவடி அகற்றப்படாதெனவும் தேவையேற்பட்டால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அது அகற்றப்படாதிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், நேற்று சனிக்கிழமை(0702.2015) கொழும்பு திரும்ப முன்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் இங்கு மேலும் கூறுகையில் ; வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையிலுள்ளனர். இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண்போம். இதேவேளை கடந்த தேர்தலில் வடக்கில் 80 வீதமானவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். அவர்கள் மாற்றம் வேண்டுமென்பதற்காக வாக்களித்தனர். எனவே மக்களின் எதிர்ப்பினை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அவதானத்துக்கு கொண்டு சென்று வட பகுதி பிரச்சினைகளை தீர்ப்பேன் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட இராஜாங்க அமைச்சர் நேற்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட பிரதான படைத் தலைமையகங்களின் உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.
வவுனியாவிலும் டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். இருந்த போதும் கடந்த காலங்களில் பெய்தா மழையின் பின்னர் வவுனியாவின் பல பகுதிகளிலும் டெங்கின் தாக்கம் உணரப்பட்டிருப்பதும் அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதும் அறிந்தவையே . இருந்த போதும் பொதுமக்கள் மத்தியில் இன்னமும் டெங்கின் தாக்கம் தொடர்பான போதிய தெளிவின்மையே காணப்படுகிறது . பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்கட்டுரை வவுனியா நெற் வாசகர்களின் பார்வைக்காக தொகுக்கப்ட்டுள்ளது .
டெங்குப் பரவல்
இவ்வருட தை மாசி மாதங்களில் பல உயிர்களைப் பலி கொண்ட டெங்கு அதன் பின் சற்றுத் தணிந்திருந்தது. ஆயினும் மறையவில்லை. கடும் மழை கொட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெங்கு சற்றுக் குறையும். நுளம்புக் கூம்பிகள் ஓடும் நீரில் அள்ளுப்பட்டுச் சென்றுவிடும். மழை சற்றுக் குறைந்து வெயிலும் சேரும்போது தேங்கி நிற்றும் நீர்நிலைகளில் நுளம்பு பெருகும். அப்போதுதான் டெங்கு தன் கோர முகத்தைக் காட்டும்.
இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் டெங்கு எனச் சந்தேகிக்கப்பட்ட 16526 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.
தரவுகளை ஆயும்போது கொழும்பு மாவட்டத்தில்தான் மிக அதிகமான அளவில் (மொத்தத்தில் சுமார் 25 சதவிகிதம்) நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அடுத்து குருநாகல் மாவட்டம், மூன்றாவது இடத்தை கம்பஹா மாவட்டம் பிடித்தது.
யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 400 ற்று மேற்பட்டிருக்க, கிளிநொச்சியில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 32 மட்டும் இனங் காணப்பட்டனர். வவுனியா 47, மன்னார் 56, முல்லைத்தீவு 83, திருகோணமலை 149. கிளிநொச்சி டெங்கு நோயாளர் மாவட்டத்தில் குறைவாக இருப்பதற்கு சன அடர்த்தி குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஏனெனில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti)நுளம்பினால் நீண்ட தூரம் பறக்க முடியாது. மொத்த டெங்கு நோயாளர்களில் 43.4 சதவிகிதம் மேல் மாகாணத்தில் இருப்பதற்கு சன நெருக்கடியே காரணமாகிறது.
டெங்கு அறிகுறிகள்
பிள்ளைகளுக்கு காய்ச்சல் என்று கண்டவுடன் பெற்றோர்கள் பயந்தடித்துக் கொண்டு மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள். அவர்களது பயம் அர்த்தம் அற்றது அல்ல. பத்திரிகைகளில் வரும் செய்திகளும் பாடசாலை மாணவர்களில் ஏற்படும் மரணங்களும் பீதியை ஏற்படுத்தவே செய்யும். ஆயினும் பல வருடங்களாக டெங்குவுடன் வாழ்ந்த நாம் இது டெங்குவா இல்லையா என அனுமானிக்கப் பழக வேண்டும்.
பெரும்பாலான ஏனைய காய்ச்சல்கள் தடிமன், மூக்கடைப்பு, தும்மல் தலையிடி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். காய்சலும் 100 – 101 றைப் பெரும்பாலும் தாண்டாது. வேறு சில வாந்தி வயிற்றோட்டத்துடன் வரும். இன்னும் சில சிறுநீர் கழிக்கும்போது எரிவைக் கொடுக்கும். இத்தகைய அறிகுறிகள் கடுமையாக இல்லாவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டியதில்லை
ஆனாலும் டெங்கு காய்ச்;சலில் முற்கூறிய அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் ஆரம்பத்திலேயே காய்ச்சல் மிகக் கடுமை 104 – 105 எனக் கடுமையாக இருக்கும். பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகள் இருக்கும். கண்ணுக்குப் பின் குத்துவது போன்ற தலையிடியும் இருக்கும்.
உங்கள் குழந்தை இவ்வாறு கடுமையான காய்ச்சலுடன் துடியாட்டம் இன்றிப் சோர்ந்து படுத்துவிட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரைக் காண்பது அவசியம்.
குழந்தைகள் உள்ளவர்கள் வீட்டில் ஒரு டிஜிட்டல் தேர்மாமீற்றர் வைத்திருப்பது நல்லது. மேர்கியூரி தேர்மோமீற்றர் போல இது விரைவில் உடையாது. மேர்கியூரியின் நச்சுத் தன்மையும் கிடையாது. எனவே விலை சற்று அதிகமானாலும் குழந்தைகள் உள்ளவர்கள் இதை வைத்திருப்பது உசிதமானது.
மருத்துவர் வேறு அறிகுறிகளும் இருக்கிறதா என பார்ப்பார். கண்கள் சிவந்திருக்கிறதா, தோல் செம்மை பூத்திருக்கிறதா, நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது போன்றவற்றை அவதானிப்பார்.
டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் Full blood count, Dengue antigen ஆகிய பரிசோதனைகளையும் மருத்துவர் மேற் கொள்ளக் கூடும். இருந்தபோதும் Dengue antigen பரிசோதனை விலை கூடியதும் எல்லா இடங்களிலும் செய்வது இயலாததும் ஆகும்.
எவ்வாறாயினும் 3ம் நாள் Full blood count (FBC) பரிசோதனையை செய்வது அவசியம். இவை குருதியில் வெண் கலங்களின் எண்ணிக்கை அளவு, வெண்குருதி சிறுதுணிக்கை அளவு மற்றும் Pஊஏ போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஊடாக நோயின் நிலையைக் கணிக்க அவசியமாகும்.
டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் அது டெங்குக் காய்ச்சல் என்பது உறுதிதான். ஆனாலும் அது ஆபத்தாகுமா. நிச்சயம் சொல்ல முடியாது.
டெங்குவின் வகைகள்
ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.
சாதாரண டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். 50 சதவிகிதமானவர்களுக்கு இப்படித்தான் நடக்கும். எந்தவித சிகிச்சைகளும் தேவைப்படாது.
மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். இது சாதாரண சிகிச்சைகளுடன் குணமாகும். பரசிட்டமோல், கொத்தமல்லி, பப்பாசிச் சாறு போன்ற எதைக் கொடு;த்தாலும் மாறிவிடும். கொடுக்காவி;ட்டாலும் மாறும். ஏனெனில் அது மாறுவது மருந்தால் அல்ல. அந்த நோயின் இயல்பாக தன்மையால்தான்.
மிகவும் ஆபத்தானது போன்று பயமுறுத்தும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலானது அவர்களில் சுமார் 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே வரும். கண்களில் இரத்தக் கசிவு, மூக்கால் இரத்தம் வடிதல், வாந்தியுடன் இரத்தம் போன்ற பயங்கரமான அறிகுறிகள் இருந்தாலும் இவர்களில் 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். தப்பிவிடுவார்கள்
மிக ஆபத்தானது டெங்கு அதிர்ச்சி நிலையாகும். இவர்கள் மிகக் குறைந்த 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வரும். இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.
நவீன சிகிச்சையில் உடலின் திரவ நிலையை சரியான அளவில் பேணுவதே முக்கியமானது. வெளியேறும் சிறுநீரின் அளவைக் கண்காணித்து அதற்கேற்பவே நீராகாரம் முதல் நாளம் ஊடான திரவம் கொடுப்பது வரை கொடுப்பார்கள்.
இந்த அதிர்ச்சி நிலையானது காய்ச்சல் தணியும் நிலையிலேயே வெளிவரும். எனவே காய்ச்சல் தணிந்த போதும் நோயாளியின் பொதுவான உடல் நிலை திருப்தியாக இல்லாவிடின் மருத்துவரைக் காண வேண்டும்.
கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை, கடுமையான வயிற்று வலி, வாந்தி, கடுமையான சோர்வு, உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல், சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த பின்னரும் இருந்தால் அது ஆபத்தாகலாம்.
நீங்கள் செய்யக் கூடியவை எவை?
சாதாரண காய்ச்சல் வந்த உடனேயே மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை. மேலே கூறிய அறிகுறிகளை வைத்து இது டெங்குவாக இருக்குமோ எனச் சந்தேகித்தால் மட்டும் மருத்துவரைக் காணுங்கள்.
காய்ச்சல் மற்றும் உடல் வலியைத் தணிக்க பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது. அளவிற்கு மீறிய பரசிற்றமோல் ஈரலைப் பாதிக்கும்.
பரசிற்றமோல் மருந்தைச் சரியான அளவில் கொடுத்தும் காய்ச்சல் தணியவில்லை எனில் Dengue antigen பரிசோதனை செய்வது உதவக் கூடும். இப் பரிசோதனையானது காய்ச்சல் ஆரம்பித்த முதல் 24 மணிநேரத்திற்குள் மட்டுமே சரியான முடிவைக் கொடுக்கும்.
புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.காய்ச்சல் கடுமையாக இருந்தால் இளம் சூட்டு நீரால் ஸ்பொன்ஞ் பண்ணுவது குழந்தைக்கு இதமாக இருக்கும்.
ஓய்வு மிக முக்கியமானது. பரீட்சை வருகிறது, டான்ஸ் பயிற்சி, வெளியூர்ப் பயணம் என்றெல்லாம் சொல்லி கடுமையான மருந்துகளைக் கொடுத்து வேலைக்கோ பாடசாலைக்கோ அனுப்ப முயற்சிக்க வேண்டாம்.
போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.
சிறுநீர் வழமைபோலப் போகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். மிகக் குறைவாக வெளியேறுவதுடன் கடுமையான தாகம் இருந்தால் அதை மருத்துவருக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் FBC இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். முதல் நாளிலிலேயே செய்ய வேண்டியது ஏன், எப்போது என்பது பற்றி ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அதன் பின்னர் தேவை ஏற்படுமாயின் தினமும் ஒரு தடவையோ இரு தடவைகளோ செய்ய வேண்டி நேரலாம்.
டெங்கு ஏற்படுத்தும் வைரஸ் கிருமியானது நோயளியின் உடலில் சுமார் 5 நாட்களுக்கு. ஆனால் கடுமையான தாக்கம் 4வது அல்லது 5வது நாளிலேயே உச்ச நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அந்நேரத்தில் நோயாளியின் இரத்தக் குழாய்கள் பாதிப்புற்று இரத்தம் அல்லது இரத்தப் பாயம் (plasma) குழாய்களை விட்டு வெளியேறுவதாலேயே ஆபத்து ஏற்படுகிறது.
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்கள், கொழுப்பான உடல் வாகை உடையவர்கள், கர்ப்பணிகள் ஆகியோரில் இது ஆபத்தாக மாறும் சாத்தியம் அதிகம். அவர்களது காய்ச்சலானது டெங்குவாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால் சற்றும் தாமதப்படுத்தாது தீவிர கவனிப்பிற்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும்.
டெங்கு பரவாது இருக்க நுளம்பு பரவுவதைத் தடுக்க வேண்டும். அரசு செய்யும், மாநகரசபை செய்யும் என நாம் வாளாதிருக்க முடியாது. எமது வீட்டை, எமது சுற்றுச் சூழலை, எமது பாடசாலைகளை, எமது தொழிலகங்களை நுளம்பு இல்லாத இடங்களாக மாற்றுவதில் எமது பங்கு பெரிது என்பதை மறக்க வேண்டாம்.
அவ்வாறு நுளம்பு பெருகுவதைத் தடுத்தால் டெங்கு தனது கோர முகத்தைக் காட்ட முடியாது முடங்கி அடங்கிவிடும்.
இம்மாதம் 28 மற்றும் மார்ச் 01ம் திகதி வரை இடம்பெறவுள்ள கச்சதீவு புனிதஅந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று 06.02,2015. அன்று இடம்பெற்றது.யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திரு.சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் கச்சதீவு திருவிழாவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக வடமாகாண சிரேஷ்ட பிரதிபொலிஸ்மாஅதிபர்லலித்ஜயசிங்கமற்றும்அந்தந்ததுறைசார்ந்தவர்களுடன்கலந்துரையாடப்பட்டது.
யாத்திரிகர்களின்உணவு,சுகாதாரம்,குடிநீர்மற்றும்போக்குவரத்துஏற்பாடுகள்தொடர்பாகஇங்குகவனம்செலுத்தப்பட்டது.மேலும் யாழ்.குறிகட்டுவனில்இருந்து கச்சதீவு வரை படகு போக்குவரத்தில் ஈடுபடவுள்ள தனியார் படகுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதற்கானஅனுமதிகளை வழங்குமாறும் ஒவ்வொரு படகுகளிலும்உயிர்காப்புஅங்கிகளை பயன்படுத்துமாறும் தனியார் படகுஉரிமையாளர் சங்கத்தினரிற்கு அரசாங்கஅதிபர் கோரிக்கை விடுத்தார். மேலும் இக்காலப்பகுதியில் ஒருவருக்கான படகுச்சேவைகட்டணமாக ஒருவழிப்பயணத்திற்கு ரூபா 225 அறவிடப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்.நகரிலிருந்து குறிகட்டுவான் வரை எதிர்வரும் 28ம் திகதி காலை 6 மணியிலிருந்து நண்பகல் 2 மணிவரை தனியார் மற்றும்அரச பேருந்துகள் தொடர்ச்சியாக சேவையில்ஈடுபடவுள்ளன. இதேவேளை இந்தியாவிலிருந்து பக்தர்கள் வருகை தரவுள்ளதால் அவர்களின் வசதிகளுக்காக இந்திய நாணயங்களை இலங்கை நாணயமாக மாற்றக்கூடிய ஏற்பாடுகளுடன் கச்சதீவில் ஒரு உற்சவகால கிளையினை இலங்கை வங்கி அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்களின்பாதுகாப்பிற்கென நூற்றிற்கும்மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தினர் நேற்றைய தின கலந்துரையாடலின் போது தெரிவித்தனர். மேலும் இம்முறை கச்சதீவு பெருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3500ற்கு மேற்பட்ட யாத்திரிகர்களும் இலங்கையிலிருந்து 3500ற்கு மேற்பட்ட மொத்தமாக 7000ற்கு மேற்பட்டயாத்திரிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அடிலைடில் நடந்த இப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.
இந்தியப் பந்து வீச்சை வழக்கம் போல அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பொறித்து எடுத்து விட்டனர். அவுஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வோர்னர் 83 பந்துகளில் 104 ஓட்டங்களையும், கிளன் மேக்ஸ்வெல் 57 பந்துகளில் 122 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்திரேலிய அணி 48.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து மிகப் பெரிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 45.1 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி சார்பாக சிகர் தவான் 59 ஓட்டங்களையும், ரஹானே 66 ஓட்டங்களையும் அம்பட்டி ராயுடு 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் இருப்பது தெரிந்ததே.
இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட iOS 8 இயங்குதளத்தில் காணப்படும் குறைபாடுகளால் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை சரியான முறையில் பயன்படுத்த முடியாது நிலை காணப்படுகின்றது.
இதனால் மொபைல் சாதனங்களின் ஊடாக மாதாந்தம் 292 மில்லியன் பயனர்களை டுவிட்டர் நிறுவனம் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது 288 மில்லியன் பயனர்களையே பெற முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மில்லியன் பயனர்களை இழப்பதற்கு iOS 8 இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் லட்சுமி மேனன். இவரை பற்றி ஏதாவது கிசுகிசு வருவது சாதரணம் தான். இந்த முறை இவர் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது.
இது குறித்து லட்சுமி மேனனும் பேசாத நிலையில் அனைவரும் இது உண்மை என்று நம்ப ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது இவர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இதில் ‘நான் எப்போது சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன், நீங்களாக அப்படி நினைத்து கொண்டால் நான் பொறுப்பாக முடியாது. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
என்னை அறிந்தால் படத்தின் மூலம் பலருக்கு ரீ என்ட்ரி தான் போல, அந்த வகையில் கௌதம் மேனன், ஹரிஸ், விவேக் என அனைவரும் இப்படத்தில் ஒரு கலக்கு கலக்கி விட்டனர்.
அஜித் ரசிகர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் தலயை புதிய வடிவத்தில் பார்க்கிறோம் என்றார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விட அனைவரையும் கவர்ந்தவர் அருண் விஜய் தான்.
இப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டதவர்கள் யாரும் இல்லை, இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்த படத்தை பார்த்த பிறகு அருண் விஜய்யை கட்டி பிடித்து முத்தமிட்டு பாராட்டினார்.
25 அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹன்சிகா கூறினார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுக்கிறார். அவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது..
நான் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். 25 அனாதை குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சினிமாவில் பிசியாக நடிக்கிறேன். நிறைய மன உளைச்சல்களும் உள்ளன.
இதையெல்லாம் அந்த குழந்தைகளின் முகத்தை பார்த்து மறக்கிறேன். வாரம் ஒரு நாள் குழந்தைகளுக்காக ஒதுக்குகிறேன். அன்று குழந்தைகளுடனேயே இருக்கிறேன். அவர்களுடன் விளையாடுகிறேன். அவர்களுடனேயே சாப்பிடுகிறேன். சூட்டிங் கஷ்டங்களையெல்லாம் அவர்களுடன் இருக்கும் போது மறந்து விடுகிறேன்.
நிறைய பொம்மைகள் வாங்கி கொடுப்பேன். அந்த பொம்மைகளை பார்த்து குழந்தைகள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் மெய்மறந்து போகிறேன்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் இல்லம் கட்ட வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக மும்பை புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட்டுள்ளேன். விரைவில் அந்த இல்லத்தை கட்டி குழந்தைகளை அங்கு தங்க வைப்பேன் என்று ஹன்சிகா கூறினார்.
குழந்தைகளின் பாதுகாப்பை வீட்டில் இருந்தபடியே கண்காணிப்பதற்காக புதிய கருவி விரைவில் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளி பாதுகாப்பை அறிந்து கொள்வதற்காகவும், அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும் புதிய கருவி வந்துள்ளது.
குழந்தைகளின் பள்ளி ஐ.டி கார்டுகளில் எளிதில் பொருத்தி கொள்ளும் இந்த கருவியை ரித்தீஸ் பாண்டியா என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.
இதில் 2 அவசர உதவி எண்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்று பெற்றோர், மற்றொன்று வேறு யாருடைய தொலைபேசி எண்களையாவது பதிவு செய்து வைக்கலாம். இதற்கு கணிணியின் உதவியும் மிகவும் அவசியம் தேவை.
இதுபற்றி அவர் கூறுகையில், நானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்பதால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களில் இருந்து அவர்களை மீட்பதற்காக இந்த கருவியை கண்டு பிடித்தேன்.
இது குறித்து 400க்கும் அதிகமான பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் இதன் மூலம் எப்படி எங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியபோது நான் அவர்களிடம் இந்த கருவி பற்றிய பயன்பாட்டை எடுத்து கூறினேன்.
குழந்தைகள் கழுத்தில் அணியும், ஐ.டிகார்டுகளில் இந்தக் கருவியை பொருத்தலாம். ஆபத்து நேரத்தில் பட்டனை குழந்தை அழுத்தினால் போதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் கிடைத்துவிடும்.
இந்த கருவி மூலம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்தும், இந்த கருவி குழந்தையை தற்காத்து கொள்ளும் வசதி கொண்டது.
மேலும், வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து இந்த கருவியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒவியர் ஒருவர் வரைந்த ஒவியம் ஒன்று உலகிலேயே அதிகம் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோகென் என்பவர் 1892ம் ஆண்டு, தகிதி தீவை சேர்ந்த 2 பழங்குடி பெண்கள் உட்கார்ந்திருப்பது போல ஓவியத்தை வரைந்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த ஓவியத்தை வைத்திருந்தார். அவர் ஏலம் மூலம் இந்த ஓவியத்தை விற்றதில், கத்தார் நாட்டை சேர்ந்த அருங்காட்சியகம் ஒன்று 1800 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஓவியத்தை வாங்கி உள்ளது.
உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் என்ற பெயரை இது பெற்றுள்ளது.