பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக சேர்க்கும் போதும், அதன் பின்னரும் பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இந்த முறைமை ஏற்படுத்தப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளின் தேவைக்காக பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடை செய்யப்படுள்ளதாகவும் காரிய வம்சம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வசதிக்கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் உளரீதியில் பாதிப்புக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு மேலாக நிதி சேகரிக்கப்படும் போது, அது தொடர்பில் கல்வி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் சுட்டியுள்ளார்.
யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் காணி தொடர்பான வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மூவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகுலன் சுஜாதா (25), சதீஸ் உசாந்தினி (22), திருச்செல்வம்(26) ஆகியவர்களே படுகாயம் அடைந்துள்ளனர். வாள்வெட்டின் சந்தேக நபரை கைது செய்ய பருத்திதுறை பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையில் இன்றையதினம் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கான பரிசிப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் இன்றைய தினம் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு ந.நிமலன் அவர்களிடம் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
கழகத்தின் ஸ்தாபகரின் 54 ஆவது பிறந்த தினத்தையொட்டி தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் இப் பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், விளையாட்டு மற்றும் பன்முக வெளிக்கள செயற்பாடுகளுக்கு பொறுப்பான திரு ம.சஞ்சீவன், ஊடகப் பிரிவைச் சேர்ந்த திரு செ.சுகந்தன் இவர்களுடன் வவுனியா இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு நிரஞ்சன், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏழு வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயதுடைய மீனவர் ஒருவரைக் கல்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியாக சிறுமி வீட்டில் இருந்த போது அங்கு வந்த சந்தேகநபர் இந்த குற்றத்தை இழைத்துவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனக்கு நேர்ந்த கொடுமையை தனது மூத்த சகோதரி வீட்டுக்கு வந்ததும் சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து தாய்க்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் சிறுமியின் அயல்வீட்டுக்காரர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்தார்.
வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது மக்கள் அவரிடம் தமது இன்னல்களை எடுத்துக்கூறியதுடன் தாம் தற்போது வசிக்கும் நலன்புரி நிலையம் அமைத்துள்ள அரச காணிகளில் இருந்து வெளியேறுமாறு அரச அதிகாரிகளால் பலவந்தப்படுவதாக தெரிவித்ததுடன் தமக்கு இக்காணிகளையே வழங்கி குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அம் மக்களின் நிலைப்பாடுகளை வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.
இச் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சிதம்பரபுரம் நலன்புரி நிலையம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும் அரசாங்க அதிபர் இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இந் நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சர் அரசாங்க அதிபருக்கு 3 தடவைகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஞாபகமூட்டல்கள் வழங்கப்பட்டபோதிலும் மக்களுக்கு காணி வழங்குவது செயற்படுத்தப்படவில்லை.
இங்குள்ள மக்கள் இங்கேயே வசிக்வும் விரும்புகின்றர். இவர்களின் இரண்டாவது தலைமுறையும் இங்கு வந்துள்ளது. அத்துடன் இவர்களுக்கான தொழில்வாய்ப்புகளும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் இங்கிருந்த வேறு இடத்திற்கு செல்ல முடியாது.
இந்த காணிகளை இங்குள்ள மக்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. போதுமான காணி காணப்படுகின்றது. அரை ஏக்கர் வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்க முடியும் என ஆணித்தரமாக முதலமைச்சருக்கு அவ்விடத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் முகாம் பற்றியும் அம் மக்கள் அவ்விடத்திலேயே குடியமர்த்தப்பட வேண்டிய தேவை பற்றியும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன்போது முகாமில் உள்ளவர்கள் தாம் படும் இன்னல்கைள முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இவற்றை செவிமடுத்த முதலமைச்சர் இவ் விடயம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஒருங்கணைப்பு குழு கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவோம் என அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த மக்களிடம் இவ் விடயத்தை நானாக செய்ய முடியுமாக இருந்தால் நான் செய்துவிடுவேன். அதனால் நாங்கள் தருவதாக கூறவில்லை. பார்க்கின்றோம் என்றே கூறியுள்ளோம். எனினும் இந்த முறை உரிய நடவடிக்கை எடுப்போம்.
இந் நிலையில் நீங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருப்பதற்கு பாருங்கள். அதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். நீங்கள் வேறு இடங்களில் காணி தருவதாக கூறி யாராவது அழைத்து செல்ல முற்பட்டால் எங்கும் செல்லாதீர்கள். இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு உடன் அறிவியுங்கள். வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் அவருக்கு உடன் அறிவியுங்கள்.
நாங்கள் தற்போது மத்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றோம் எனவே விரைவில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு இறுதியில் அவரை விலக்குமாறு உரிய பரிந்துரையை செய்யவில்லை. எனவே அன்று இடம்பெற்ற. தவறு காரணமாக ஷிராணி பண்டாரநாயக்க கடந்த வியாழக்கிழமை தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இந்நிலையில் ஷிராணி பண்டாரநாயக்கவும் பதவி விலகிவிட்டார். தற்போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதியரசர் ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்குவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழு இறுதியில் அவரை விலக்குமாறு உரிய பரிந்துரையை செய்யவில்லை. மீண்டும் ஒரு குழுவை நியமிக்குமாறே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே அன்று இடம்பெற்ற தவறு காரணமாக ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்கியமை சட்டபூர்வமாக கருதப்பட முடியாது. எனவேதான் அவர் கடந்த வியாழக்கிழமை தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார். எனவே அவரை பதவி விலக்கியமை சட்டபூர்வமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2013 ஆம் ஆண்டு செய்யப்பட்ட புதிய பிரதம நீதியரசர் நியமனமும் சட்டபூர்வமானதல்ல.
எவ்வாறெனினும் ஷிராணி பண்டாரநாயக்கவும் பதவி விலகிவிட்டார். தற்போது அடுத்த சிரேஷ்ட தரத்தில் இருக்கும் நீதியரசர் ஸ்ரீபவன் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார். அன்று முன்னாள் ஜனாதிபதியிடம் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமிக்கவேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் அந்த நியமனம் செய்யப்பட்டது.
இதேவேளை, மொ ஹான் பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவை தொடர்பு கொண்டு தான் புதிய நிலைக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தன்னை பதவி விலக்
கவேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.
அதனை கேட்ட ஜனாதிபதியும் பிரதமரும் சிரித்துள்ளனர். இதுதான் உண்மை நிலை மையாகும் என்றார்.
இலங்கை உரிய ஒழுங்கு செயற்பாடுகளை எடுக்குமானால் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்கமுடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளது.
மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
வவுனியா, கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டார்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோதாரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன், தர்மபால செனவிரட்ன,
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் ஆகிய மூன்று இல்லங்களையும் சேர்ந்த மாணவர்கள் தமது விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் எல்லாளன் இல்லம் முதலிடத்தையும் சங்கிலியன் இல்லம் இரண்டாம் இடத்தையும் பண்டாரவன்னியன் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12.50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால் 450 கிராம் பாணின் விலை ஒரு ராத்தலுக்கு 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை 30ம் திகதி நள்ளிரவு தொடக்கம் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வருவதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் 13இன் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்தார். அதன் விபரம் வருமாறு
சீனி 10 ரூபாவால் குறைப்பு
400 கிராம் பால் மா 325 ரூபா
சஸ்டஜன் பால் மா – 100 ரூபாவால் குறைப்பு
பயறு – 40 ரூபாவால் குறைப்பு
கோதுமை மா – 12.50 ரூபாவால் குறைப்பு
பாண் விலையும் 6 ரூபாவால் குறையும்
டின் மீன் – 50 ரூபா வரை குறைப்பு
மாலைத்தீவு மீன் இறக்குமதி வரி – 200 ரூபா அதிகரிப்பு
கொத்தமல்லி – 60 ரூபா
நெத்தலி – சந்தை வரி குறைப்பு
மாசி – வரி குறைப்பு
கேஸ் – 300 ரூபா புதிய விலை 1595 ரூபா மிளகாய் தூள் – 25 ரூபாவால் குறைப்பு
ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த காலச் செலவுகள் பின்வருமாறு..
2009 – 634 கோடி ரூபாய்
2010 – 756 கோடி ரூபாய்
2011 – 5063 கோடி ரூபாய்
2012 – 5936 கோடி ரூபாய்
2013 – 8244 கோடி ரூபாய்
2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபாவாகவும் காணப்பட்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், பின் மைத்திரிபால சிறிசேன அரசால் அது 256 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது.
முன்னதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டிகளில், இரண்டிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் முன்னதாக இடம்பெற்ற ஆறு போட்டிகளில் ஒன்று கைவிடப்பட்ட நிலையில், நான்கில் நியூஸிலாந்தும் ஒன்றில் இலங்கையும் வெற்றி பெற்றிருந்தன.
இதன்படி 4-1 என நியூஸிலாந்து ஒருநாள் தொடரையும் வசப்படுத்தியுள்ள நிலையில் 7வதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 287 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இலங்கை சார்பாக அதிரடியாக ஆடிய குமார் சங்கக்கார 113 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் டில்ஷான் 81 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இதன்படி 288 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 45.2 ஓவர்களில் 253 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து 34 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
அவ் அணி சார்பாக வில்லியம்சன் 54 ஓட்டங்களையும், ராஞ்சி 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர, சமிந்த எரங்க, சமீர ஆகியோர் தலா இரு விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இன்றைய போட்டியின் நாயகனாக குமார் சங்ககாரவும் தொடரின் நாயகனாக வில்லியம்சனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக இலங்கை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.
குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், திலகரட்ன டில்சான் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தப் போட்டியில் குமார் சங்கக்கார மற்றுமொரு சாதனையை பதிவு செய்தார்.
ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர் என்ற பெருமையை இன்று பதிவு செய்தார். 396 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்கார 13580 ஓட்டங்களை குவித்துள்ளார்.
முன்னதாக இந்த சாதனையை சனத் ஜெயசூரியா(445 போட்டிகளில் 13430 ஓட்டங்கள்) தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் சம்பிரதாயபூர்வமான வைபவம் இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த அரசாங்கத்தினால் சட்டவிரோதமான முறையில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்க நேற்று மீண்டும் தனது கடமைகளை பொறுபேற்றதுடன் இன்று ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பண்டாரநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாது அவரை பதவியில் இருந்து நீக்கியது.
இந்த நிலையில் கடந்த அரசாங்கம் பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ்சை நியமித்தது. அவரது நியமனம் சட்டவிரோமானது என அறிவிக்கப்பட்டுள்ளதால், மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்புகளின் செல்லுப்படி தன்மை குறித்து தற்போது பெரும் கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளார்.