இந்தியாவின் வேகத்தில் சுருண்ட நியூசிலாந்து அணி!!

India

இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், சோதி ஆகியோருக்கு பதில் டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றனர்.

தனது முதல் இனிங்சிற்காக களமிறங்கிய நியூசிலாந்து அணி துவக்கம் முதல் இஷாந்த் சர்மா வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆட்டம் கண்டது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 192 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 6 விக்கெட் சாய்த்தார். முகமது ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.

 

மகாவலி கங்கையில் குதித்து இளம் பெண் தற்கொலை!!

suicide-logoபலகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் மகாவெலி கங்கையில் குதித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

27 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

 

ராகுல், நரேந்திர மோடிக்காக ஆடை களைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைகள்!!

Rahulஇந்திய பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் போஸ் கொடுத்தார்.

தாமரை மலர்கள் மேல் படுத்தும் நரேந்திர மோடி படத்தால் நிர்வாண உடலை மறைத்தும் பாரதீய ஜனதாவுக்கு வாக்கு போடுங்கள் என்று கேட்டார். இந்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாமல் இருந்த அவர் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்தன் காரணமாக ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.

நரேந்திர மோடிக்கு நூதன முறையில் ஒட்டு கேட்ட மேக்னாவின் படங்களை பார்க்க அவரது இணைய தளத்தில் ஆயிரக்கணக்கானோர் புகுந்தனர். இதனால் அவரது இணைய தளம் செயல்படாமல் நேற்று இரவு முடங்கியது.

இதுகுறித்து மேக்னா கூறும்போது, என் இணைய தளத்திற்கு ஏராளமானோர் வந்ததால் அது கிராஷாகி விட்டது. அவர்கள் மோடியின் ஆதரவாளர்கள். மோடியால்தான் நிலையான அரசை அளிக்க முடியும். அவரை பிரதமராக்க ஒட்டளியுங்கள் என்றார்.

இதற்கு போட்டியாக ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகையும் மொடலிங் அழகியுமான தனிஷாசிங்கும் போஸ் கொடுத்துள்ளார். ஆடைகளை துறந்து காங்கிரஸ் கொடியையும் கை சின்னத்தையும் மட்டும் உடலில் போர்த்தி கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் ஆட்டு இறைச்சியை ஆடையாக உடுத்தி போஸ் தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து மேலும் பல நடிகைகள் ஆடையை துறந்து போஸ் கொடக்க தயாராகி வருகிறார்களாம்.

 

 

காதலர் தினம் – புதிர்களின் புகலிடம்!!

Valantine day

காதலர் தினம் காதலைப் புனிதப்படுத்துகிறது, உள்ளத்துக்குள் ஒளிந்து கிடக்கும் நேசத்தைப் பிரதிபலிக்க நாள்காட்டியில் தங்கத் தகடுகளால் நிரப்பப்பட்டிருக்கும் தினமே காதலர் தினம் என காதலர்கள் குதூகலிக்கின்றனர்.

காதலர் தினம் கலாச்சாரச் சீரழிவின் உச்சம். இது காதலைப் புனிதப்படுத்தி வந்த தேசத்தின் வேர்களில் விழுந்திருந்த போலித்தனமான மேலை நாட்டுக் கலாச்சார விஷம் என எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர்.

உணவகங்களில் உணவருந்தச் சென்றால் கூட பெப்ரவரி பதினான்காம் திகதி உங்களுக்குக் கிடைக்கும் “வேலண்டைன் ஸ்பெஷல் உணவுகள்”.

மின்னஞ்சல்களும், எஸ்.எம்.எஸ் களும் காதலர்களின் காதல் அலைவரிசையாய் மாறியிருக்கும் இன்றைய சூழலிலும் காதலர் தினத்தில் மட்டும் வாழ்த்து அட்டைகளையும், கூடவே ரோஜாப்பூக்களையும் வழங்க இளைஞர்கள் பிரியப்படுகின்றனர்.

உண்மையில் காதலர் தினம் காதலர்களுக்கானதா? அல்லது நமது கலாச்சாரத்தைச் சீரழிக்க வேண்டும் என யாரேனும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்களா ? இன்னும் கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால் இதன் பின்னணியில் உறைந்து கிடக்கும் உண்மைகள் முகம் காட்டுகின்றன.

வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக முதலாளிகளால் உருவாக்கப்பட்டவை அல்லது பிரபலப் படுத்தப் பட்டவை தான் இந்த தினங்கள் என்பதே முதன்மையான உண்மை. அதற்காகவே இவர்கள் ஊடகங்களைக் கவர்ச்சிகரமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர் தினம், மனைவியர் தினம், எதிர் வீட்டுக்காரன் தினம் என்று ஏதேதோ தினங்களை வர்த்தக வளர்ச்சிக்காக உருவாக்கி அந்தந்த தினங்களில் அந்தந்த நபர்களுக்குப் பரிசுகள் வழங்காவிடில் அது பாவம் போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் வழியாக பரப்பி மக்களை உசுப்பேற்றி விட்டு அதன் வெப்பத்தில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் தந்திர சாலிகள் அவர்கள்.

முதலாளிகளின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் கரன்சிகளை வாழ்த்து அட்டைகளிலும், பூங்கொத்துகளிலும், சொக்லேட் பக்கெட்களிலும் செலவிடுகையில் சத்தமில்லாமல் மில்லியன் கணக்கில் லாபம் பார்க்கிறார்கள் முதலாளிகள்.

நூறு ரூபாய் மதிப்புள்ள சொக்லேட்களை இதய வடிவப் பெட்டியில் வைத்து ஒரு சிவப்பு நிற ரிபனைக் கட்டி காதலர் தின சிறப்புச் சொக்லேட் எனும் பெயரில் விற்கின்றன நவீனக் கடைகள். இவற்றின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல்.

பழைய சில காதல் பாடல்களை கவர்ச்சிகரமான காதலர் தின ஸ்பெஷல் சிடி என கடைகளில் விற்கின்றனர் நான்கு மடங்கு அதிக விலையில். நகைக்கடை, துணிக்கடைகள் எல்லாம் கேட்கவே வேண்டாம். இந்த வைர மாலையைப் போட்டால் காதல் வளரும் என்றெல்லாம் விளம்பரங்கள் சிலிர்க்க வைக்கும்.

என்னென்ன உத்திகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமோ அத்தனை யுத்திகளும் காதலர் தினத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. நோக்கம் வியாபாரம், வியாபாரம், வியாபாரம்…

காதலர் தினம் என்னும் கொண்டாட்டங்கள் காதலர்களை ஏதேனும் வாங்கியே ஆகவேண்டுமென்று பலவந்தப் படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதுமையாய், ஏதேனும் அதிகமாய், ஏதேனும் கவர்ச்சிகரமாய் செய்ய காதலர்கள் வணிகர்களால் பலவந்தப் படுத்தப்படுகிறார்கள்.

நிகழ்பவையெல்லாம் நம்முடைய முழுவிருப்பத்தின் படி நிகழ்வது போல ஒரு மாயை நமக்கு ஏற்படுகிறது ஆனால் முதலாளிகள் நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம். இந்த தினங்களின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த நிஜம் பளீரென புலப்படும்.

அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டொலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர்விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹால்மார்க் நிறுவனம் மட்டுமே 180 மில்லியன் வாழ்த்து அட்டைகளை காதலர் தினத்துக்காகத் தயாரிக்கிறது. வாழ்த்து அட்டைகள் காதலர் தினத்துக்கும் ஒரு வாரத்துக்கும் முன்னால் தான் பெரும்பாலும் வாங்கப்படுவதாகவும் அதே நிறுவனம் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் காதலர் தினம் எத்தனை ஆழமாய் வேர் விட்டு விரிவாய் கிளை பரப்பியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோறு பதம் மட்டுமே.

காதலர் தினத்தன்று தனக்கு ஒரு காதலனோ காதலியோ இல்லை என்று மற்றவர்கள் அறிந்து கொள்வதே அவமானம் என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரு இணையைப் பிடித்து வாழ்த்துத் தெரிவிப்பதே மரியாதைக்குரியது எனும் எண்ணத்தை ஊக்குவிக்கவே ஊடகங்களும், காதலர் தினம் போன்ற விழாக்களும் உதவுகின்றன.

காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்வதை சிறப்பான காதலின் அடையாளமாகப் பார்க்கும் போக்கும் இன்று பரவி வருகிறது. தாய்லாந்தில் காதலர் தினத்தன்று திருமணப் பதிவு அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. காதலர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

காதல் என்பது நதியைப் போல ஒரு பயணம். உணர்வுகளை மனதில் வழிய விடும் பயணம். காதலர் தினம் கொண்டாடாவிடில் காதல் மலராது என்று அர்த்தமில்லை. பொது இடங்களில் ஸ்பரிசங்களைப் பரிமாறிக் கொள்ளவில்லையெனில் காதல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அர்த்தமில்லை.

நேசத்தின் வளர்ச்சியாய் காதலைப் பார்க்காமல், மெய்யின் கிளர்ச்சியாய்ப் பார்ப்பதால் இன்று பல காதல்கள் கண்களில் ஆரம்பித்து கனவுகளில் பயணித்து விடியலில் முடிந்து விடுகிறது. இன்றைய திரைப்படங்கள் சித்தரிக்கும் கவர்ச்சிப் பணியே காதலென்று கற்றுக் கொள்ளும் இளவயதினர் ஆழமான திருமண உறவுகளின் மீதான கலாச்சார வேர்களை கத்தரிக்கவும் துணிந்து விடுவது தான் வேதனை.

டிஸ்கோதே, இரவு உணவக விடுதிகள், கடற்கரைகள் இவையெல்லாம் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு குத்தகைக்கு விட்டது போலாகி விடுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உண்மையான காதலர்கள் இல்லை என்பதும், பெரும்பாலான காதல்கள் காளான்கள் போல சடுதியில் தோன்றி மறைவனவாக உள்ளன என்பதும் காதலை இளைய சமூகத்தினர் இன்னும் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

காதல் தவறென்று எந்த தமிழ் இலக்கியமும், தலைவர்களும் சொல்லவில்லை. “பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து “ கம்ப ராமாயணத்தில் கம்பரின் கவித்துவம் கவியும் இந்தக் கவிதை இன்றும் காதலுக்கு அழகூட்டுவதாய் விளங்குகிறது. காதல் என்பது தமிழர்களின் கலாச்சார வேர்களில் கலந்த உணர்வு தான் என்பதனை சங்க இலக்கியமும் நமக்கு தெளிவாக்குகிறது.

அகத்திணையில் இல்லாத காதலா, அகநாநூறில் இல்லாத காதல் ரசமா, காமத்துப் பால் சொல்லாத சங்கதியா என்பது இலக்கியவாதிகளின் காதல் குறித்த கேள்வியாய் மலர்கிறது. உண்மை தான். காதல் தவறென்று இலக்கியங்கள் சொல்லவில்லை. எனில் இன்றைய வணிக மயமாக்கப்பட்டு விட்ட வசீகரத்தை எந்த இலக்கியமும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

தனக்குக் காதலி இருப்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவும், பழைய காதலர்கள் தங்கள் உடைந்து போன காதலை நினைத்து மதுபானக் கடைகளில் தாடி தடவவும், மற்றவர்கள் ஐயோ நமக்கு யாரும் இல்லையே என நினைத்து தனிமையில் புலம்பவும் ஒரு நாள் தேவை தானா என்பதை இளைஞர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

வாழ்த்து அட்டைகள், பரிசுகள், பூங்கொத்துகள் என வர்த்தக வளாகத்தைச் சூடுபிடிக்கச் செய்யும் இந்த காதலர் தினம் உண்மையில் எதைத் தான் தருகிறது ?. காதலை வெளிப்படுத்தவும் கொண்டாடவும் 364 நாட்கள் வலுவற்றவையாகி ஒரே ஒரு நாள் பட்டுமே பலமுடையதாகிறதா ? காதல் என்பது மைல் கல்லா ? பயணமா ? சிந்திப்பவர்கள் கண்டடைகிறார்கள் எது தேவையானது என்பதை.

 

காதலர் தினம் தேவைதானா?

Kaathalar thinam

கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரங்களில் கலந்துவிட்ட பண்டிகைகள் கொண்டாடப்படும் விதங்கள் குறைந்து வருகிற நிலையில் நம் கலாசாரத்துக்கு ஒவ்வாத காதலர் தின விழா கொண்டாட்டங்கள் ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்து வருகின்றன.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்ட நம் நிலப்பரப்பில் காதல் என்பது இலைமறை காயாகத்தான் பயன்படுத்தப்பட்டது. வீரம், விவேகம், அறிவு, அன்பு, பாசம், இன்பம், துன்பம் ஆகியன கலந்த கலவையாகத்தான் தமிழர்களின் வாழ்க்கைத்தரம் அமைந்துள்ளதே தவிர, இன்றைய இளைஞர்களைப் போல் காதல் ஒன்றுதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்று நமது முன்னோர்கள் கருதவில்லை.

அனுபவத்தின் வாயிலாகத்தான் தங்களின் காதலை நம் முன்னோர்கள் வளர்த்தார்களே தவிர, தற்போதைய காதலர்களைப் போல பார்க், பீச், ஹோட்டல், திரை அரங்குகள் போன்றவற்றில் தங்களின் காதலை வளர்க்கவில்லை. இக் காதலர் தினம் அதோடு நிற்காமல் ஆபாச உடையணிந்து பொது இடங்களில் ஆடிப்பாடித் திரிந்துகொண்டு வெட்கம் என்ற ஒன்றை மறந்துவிட்டு முத்தமிட்டு கொண்டாடுகின்றனர்.

இதனால் காதலிப்பவர்களுக்கும் அக் காதலை எதிர்ப்பவர்களுக்கும் காதலர் தினத்தன்று வன்முறையும் கலவரமும் ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட காதலர்களின் பெற்றோர்கள் தலைகுனிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைகளுக்காக காவல்நிலையங்களில் கையொப்பம் இடும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

காதலர் தின கொண்டாட்டங்களை ஆதரிப்பவர்களும் காதலர்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான், “நீங்களெல்லாம் காதலிக்கவில்லையா? உங்களின் காதல் ஆசை நிறைவேறாத காரணத்தால்தான் எங்களின் காதலைத் தடுக்க முயற்சி செய்கிறீர்கள்” என்பதாகும். இன்றைய இளைஞர், யுவதிகள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய பெற்றோகளின் பெரும்பாலானோர் நேற்றைய காதலர்களே என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

ஆனால் காதலர் தினத்தன்று கும்மாளம் போடும் இன்றைய காதலர்கள் நாளைய பெற்றோர்கள் என்பதை மனதில் நிலைநிறுத்த வேண்டும். ஆகவே, காதலர் தினம் தேவையா? தேவையற்றதா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டிய அவசியமில்லை. அயல்நாட்டு கலாசாரத்தை அடிபிறழாமல் அப்படியே பின்பற்றத் துடிக்கும் நம் நாட்டு இளைஞர்கள் காதல் என்ற வலையில் கன்னியர்களைச் சிக்க வைக்க அவர்களுக்குத் தகுந்தவாறு வேடமிட்டு நடித்து அதில் வெற்றியும் காண்கின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்களான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களே.

காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்ட பெரும்பாலான காதலர்கள் இப்போது தங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக்காக விண்ணப்பம் செய்கின்றனர் என்பது நடைமுறை உண்மை.

20 ஆண்டுகளுக்கு முன் தங்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனோ அல்லது எதிர்ப்புடனோ காதல் திருமணம் செய்துகொண்ட இன்றைய காதலர்களின் பெற்றோர், காதலர் தின கொண்டாட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பார்களா என்று கணக்கெடுப்பு மூலம் ஆய்வு செய்தால், பெரும்பாலான பெற்றோர்கள் காதலர் தின கொண்டாட்டத்துக்கும், காதல் திருமணத்துக்கும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நம் இளைஞர்களும் இளம்பெண்களும் காதலர்தினத்தைக் கொண்டாடாமல் இருப்பதும் அதற்காக ஆடம்பர வீண் செலவுகள் செய்யாமல் இருப்பதுமே, அவர்கள் தங்களின் உண்மையான காதலுக்கும் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்.
தற்கால காதல் அழகு, கவர்ச்சி, ஏழை, பணக்காரன், பதவி, பணம் ஆகிய அளவீடுகளை வைத்துத்தான் நிர்ணயம் செய்யப்படுகிறதே தவிர, சங்ககால காதலைப் போல மனதால் ஒன்றுபட்டு வாழ்க்கையில் இணையும் காதல் தற்கால காதல் அல்ல என்பதை உணர வேண்டும்.

 

நயன்தாராவின் காதலர் தின விருந்து!!

Nayanthara

பில்லாவில் நீச்சல் உடையணிந்து இளம் ரசிகர்களை துவம்சம் செய்த நயன்தாரா தற்போது குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து, பாராட்டுகளை அள்ளுகிறார்.

இந்தியில் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தின் ரீ-மேக்கான, அனாமிகா படம் இப்போது தமிழுக்கு ரீ-மேக்காகியுள்ளது. வித்யா பாலன் ரோலில் நயன்தாரா நடித்துள்ள இந்த படம், காதலர் தினத்தன்று (இன்று) திரைக்கு வருகிறது. மேலும், இது கதிர்வேலன் காதல் படமும், இதே நாளில் திரைக்கு வருகிறது.

இதையடுத்து காதலர் தினத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் வருகின்றன. காதலர்களுக்கு இந்த படங்கள் விருந்தாக இருக்கும் என பெருமையுடன் கூறுகிறார் நயன்தாரா.

 

இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து!!

Cinemaபாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர் கேயார், இயக்குநர் சங்க தலைவர் விகரமன் அறிவித்துள்ளார்.

இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பெப்சி தலைவர் அமீரும் அறிவித்துள்ளார்.

 

 

உன்னதமான சினிமா படைப்பாளியை இழந்துவிட்டோம் : கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை இரங்கல்!!

Balumahendraதமிழ்ச் சினிமாவின் உன்னத படைப்பாளியான இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவ்விரங்கல் செய்தியில்,

தமிழ் உணர்வாளர்களை, தியாகிகள் பலரை இந்த மண்ணுக்கு தந்த பெருமை மிகு எமது மண்ணின் மட்டக்களப்பின் கிராமமான அமிர்தகழி தந்த தனித்துவமான இந்திய திரை உலகால் முதல்நிலையில் மதிக்கப்பட்ட அல்லது இந்திய திரை உலகை வேறு திரை ஊடகங்கள் திரும்பி பார்க்கவைத்த திரை உலக மேதை இயக்குனர் பாலுமகேந்திராவின் மரணச் செய்திகேட்டு அதிர்ந்தோம்.

ஒரு ஒளிப்பதிவு கலைஞனாக தன் கலை வாழ்க்கையை தொடக்கிய இந்த கலைச்சிற்பி, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்கம் என துறைசார் நிபுணத்துவத்துடன் விரிந்து அந்த துறைமூன்றிலும் இந்திய தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டார் என்பதிலிருந்து அவர் சினிமாவின் பிறவி என்பதை எவரும் உணர்வார்கள்.

மட்டக்களப்பில் பிறந்த பாலுமகேந்திரா 1974ம் ஆண்டு மலையாளபடமான நெல்லு படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இது தமிழன் ஆற்றலின் பெருமை. பாலுமகேந்திரா செதுக்கிய என்றும் அழகுகெடாத சினிமா சிற்பங்களான கோகிலா, அழியாதகோலங்கள், மூடுபனி, வீடு, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை எப்போதும் இரசிக நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் சினிமாவுக்கான வரங்கள்.

புதிய சினிமாக்காரன் படிக்கவேண்டிய புத்தகங்கள். பாலுமகேந்திரா என்ற ஈழத்து படைப்பாளியூடா பார்க்கின்றபோது அவன் வேரில் வேறுதளிர்கள் வீரியத்துடன் முளைக்காதா என்ற ஏக்கமும் எங்கள் நெஞ்சில் இருக்கின்றது.

இந்திய கலைத்தாய் யாதும் ஊரெ யாவரும் கேளீர் என்ற பண்புடன் வாரி அணைத்துக் கொண்டதற்கு இயக்குநர் பெருமை பாலுமகேந்திரா மிகச்சிறந்த உதாரணம்.

வாழ்வுக்கும் படைப்புக்கும் இடைவெளியற்று ஒரு இயற்கையான சினிமா பிறவியாக பாலுமகேந்திரா நம்மிடையே வாழ்ந்து சாதித்து மரணித்திருக்கிறார். அத்தகு நம் பெருமைக்கு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்மைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகமான அறிவகமும் அதன் நிர்வாகிகளும் மற்றும் தமிழ் மக்களும் தமது இதய அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

சமூக வலைத்தள நண்பர்களிடம் கவனமாக இருங்கள் : ஜனாதிபதி!!

Mahindaசமூக வலைத்தளங்கள் ஊடக அறிமுகமாகும் நண்பர்கள் மீது கடுமையான நம்பிக்கை வைப்பது துரதிஷ்டவசமான சம்பவங்களுக்கு காரணமாகக் கூடும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிள்ளைகள் தமது பெற்றோர் மீது அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் புதிய கட்டிடம் ஒன்றை நேற்று மாலை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்காக அரசாங்கத்தினால் கொடுக்க முடிந்த மிகப் பெரிய சொத்து கல்வியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

காதலனின் மருத்துவப் படிப்புக்காக நகை திருடிய பெண் கைது!!

arrestedகாதலனின் மருத்துவப் படிப்புக்காக நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 10ம் திகதி இவரது வீட்டில் வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சவுமியா உட்பட, பலரிடம், பொலிசார் தனித்தனியாக விசாரித்தனர்.

அப்போது சவுமியா மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து சவுமியாவை பார்க்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து பொலிசார் விசாரித்தனர்.

இதற்கிடையில் கடந்த 11ம் திகதி மாலை முதல் 12ம் திகதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, பொலிசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம் இரவு 10 மணி வரை, பொலிசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன்,(26) பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்தோம். அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால் நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர் இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை பாஸ் செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால் ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம்.

சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த 10ம் திகதி காலையில் ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5 மணிக்கு, வழக்கம் போல் ஜெயகுமாரும் நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார்.

அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை 6.10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.

கதவை திறந்தே வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன் என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட பொலிசார், காதலர்களை கைது செய்தனர்.

 

ரயில் ஓட்டுனர்கள் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிப்பு!!

Trainரயில் ஓட்டுனர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பால் ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு சில ரயிலிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று போயா விடுமுறை தினம் என்பதால் தூர இடங்களுக்குச் செல்லவென பயணிகள் கொழும்பு ரயில் நிலையத்தில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் பஸ் நிலையங்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. சில சமயம் ரயில் தாமதமானதால் பயணிகள் அதிகாரிகளுடன் முரண்பட்ட சம்பவங்களும் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகின்ரது.

மாத்தறை சென்ற ரயிலின் உதவி நேரக்கணிப்பீட்டாளர் மீது மொரட்டுவ ரயில் நிலையத்தில் வைத்து பயணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

விஜயகாந்தின் கேப்டன் பட்டத்திற்கு ஆபத்து!!

Vijayakanthவிஜயகாந்தின் அடைமொழியான கேப்டன் என்ற பெயருக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது தேமுதிக என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர் விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம், நடிகர் விஜயகாந்துக்கு, அவரின் திரைஉலக வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதனால் விஜயகாந்தின் ரசிகர்கள் அவரை கேப்டன் என்ற, அடைமொழியுடன் அழைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க தலைவராக, விஜயகாந்த் பொறுப்பேற்ற போது மரியாதை அடிப்படையில், நடிகர்களும், அவரை கேப்டன் என்றே அழைக்கத் துவங்கினர்.

நாளடைவில் விஜயகாந்த் என்பதை விட கேப்டன் என்ற அடைமொழியைச் சொன்னாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் நிலைமை உருவானது. அதனால் போஸ்டர்கள், கட்சி பேனர்கள், அறிக்கைகள் என அனைத்திலும் கேப்டன் என்ற பெயரே, மேலோங்கியது.

தேமுதிகவின் இணையதளம், விஜயகாந்தின் பேஸ்புக் போன்றவற்றிலும் கேப்டன் என்ற, அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கேப்டன் பதவி பெயரை அரசியல்வாதியான, விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ் தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.

இதுகுறித்து கண்ணன் கோவிந்தராஜ் கூறுகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது அரசியல் சட்டத்துக்கு முரணானது.

1950ல் இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி ராணுவ அதிகாரிகளே, கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்த் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவது, சட்டத்துக்கு முரணானது. எனவே, விஜயகாந்த் கேப்டன் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அதே போல், விஜயகாந்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்.

என் கடிதத்திற்கு விஜயகாந்திடம்இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் இன்னும் ஒரு மாதத்துக்குள் கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

 

காதலர் தினத்தில் இராணுவத்தின் வித்தியாசமான காதல் பரிசு!!

Valantineஉலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

2008 ஜுலை 25 ஆம் திகதி மாங்குளம் பகுதியிலுள்ள புலிகளின் பங்கரொன்றை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நளின் குமார எனும் இராணுவ வீரர் காயமடைந்ததோடு இவரின் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னர் நளின் குமாரவுக்கு பெண் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நேரில் காணாமல் தொலைபேசியிலே காதல் செய்துள்ளனர்.

இருவருக்கும் நேரில் சந்திக்க அவகாசம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் தன் பார்வையை இழந்து அங்கவீனமுற்ற போதும் அவரின் காதலி அவரை கைவிடவில்லை.

இருவரும் திருமணம் செய்துகொண்டதோடு இவர்கள் நளினின் சிறிய வீட்டிலே வாழ்ந்து வந்தனர். இது குறித்து அறிந்த இராணுவ சமிக்ஞை படைப் பிரிவு தளபதி ஜெனரல் அபேசேகர இவர்களுக்கு தலாவ பகுதியில் வீடொன்றை கட்டியுள்ளதோடு காதலர் தினமான இன்று அதனை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்!!

Courtகுடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது. திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேச வர்த்தகர் ஒருவரே இவ்வாறு நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்ள உள்ளார். குறித்த வர்த்தகரின் மனைவியுடன், விமானப் பொறியாளர் தகாத உறவைப் பேணியதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப ஐக்கியத்தை சீர்குலைத்தமை, திருமண வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அநாகரீகமாக செயற்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த விமானப் பொறியியலாளருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.

வர்த்தகரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஒன்றைப் பேணிய விமானப் பொறியியலாளர், ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்த போது அங்கு சென்ற வர்த்தகர் அவரைத் தாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தமது குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்ததாகத் தெரிவித்து வர்த்தகர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன்படி குறித்த விமானப் பொறியியலாளர், குறித்த வர்த்தகருக்கு 150 லட்ச ரூபா நட்ட ஈடாக வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

 

முதல் மனைவி மிரட்டல் : பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த மீரா ஜாஸ்மின் திருமணம்!!(படங்கள்)

திருவனந்தபுரத்தில் மீரா ஜாஸ்மினின் திருமணம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுள்ளது.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். கடந்த 9ம் திகதி கொச்சியிலுள்ள மீரா ஜாஸ்மினின் வீட்டில் இருவருக்கும் சார்பதிவாளர் முன்னிலையில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் அனில் ஜான் நேற்று பரபரப்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நானும், பெங்களூரை சேர்ந்த இந்து மத பெண்ணும் திருப்பதியில் மாலை மாற்றிக் கொண்டோம்.

ஆனால் அது சட்டப்படி நடந்த திருமணமல்ல. பின்னர், அந்த பெண்ணிடம் இருந்து விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்தது. நடிகை மீரா ஜாஸ்மினுடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதை அறிந்த அந்த பெண், திருமணத்தை தடுத்து நிறுத்த போவதாக கூறி மிரட்டி வருகிறார்.

எனவே, எனது திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதையடுத்து திருமணத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, திருவனந்தபுரம் பாளையத்திலுள்ள எல்.எம்.எஸ். தேவாலயத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் நடந்தது.

இதில் நடிகர்கள் ஜெயராம், திலீப், நடிகை காவ்யா மாதவன், அரசு தலைமை கொறடா ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 2 மணிக்கு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

m1 m2 m3 m4 m5

 

 

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மௌனிகாவால் பரபரப்பு!!

Mounika

பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மௌனிகா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மௌனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மௌனிகாவே அதில் பிரதான நாயகியாக நடித்தார். மேலும் மௌனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மௌனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா அங்கு ஒரு பெரும் பிரச்சினையே செய்துவிட்டார்.

மௌனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில் மௌனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை.