வவுனியாவில், வடக்கு இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி!!

USAஅமெரிக்க பசும்பிக் படையினரின் 4ஆம் மனிதாபிமான கண்ணிபவடி பெயற்குழு (Humanitarian Mine Action Team) இரண்டு வார பயிற்சி ஒன்றை இன்று வவுனியாவில் நிறைவிற்கு கொண்டுவந்தது.

பூ ஒய இராணுவ முகாமில் நடைபெற்ற இப்பயிற்சியின் போது இலங்கையின் இராணுவ கண்ணி வெடி அகற்றும் பிரிவிற்கு, அமெரிக்க HMA குழுவின் மருத்துவ, கால்நடை மருத்துவ மற்றும் வெடிக்கும் தளபாடங்கள் குறித்த நிபுணர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

இதன்போது இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்களின் படத்தொகுப்புக்கு அமைய தற்பொழுது உள்ள கண்ணிவெடி அகற்றுபவர்களுக்கு மறு சான்றிழலும் வழங்கப்பட்டது.

2003 முதல் 2013ஆம் ஆண்டு வரை அமெரிக்க அரசாங்கம் 4.64 பில்லியன் ரூபா இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்ற வழங்கியுள்ளது.

இந்த வருடத்தில் கண்ணி வெடி அகற்றும் கருவிகள் மற்றும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக 353 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

 

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் : வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

Sathiyalingamவடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் ஒன்றியத்துடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் வவுனியா உப அலுவலகத்தில் புதன்கிழமை (05) நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் வலுவிழந்தோர் தொடர்பாக சுகாதார அமைச்சினால் எடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இதற்குக் காரணம் 03 தசாப்த யுத்தமாகும். இந்த நிலையில், இவர்களுக்கான விசேட தேவைகளை இனங்கண்டு அவற்றை பூர்த்தி செய்யவேண்டிய பாரிய பொறுப்பு இந்த மாகாணசபைக்குள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது ஒன்றியத்தின் சார்பில் பின்வரும் கோரிக்கைகள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
அவையாவன,

வடமாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். அத்துடன், அவர்களுக்கான விசேட மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசேட அடையாள அட்டை வழங்கப்படல் வேண்டும்.

சகல வைத்தியசாலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்
மாற்றுதிறனாளிகளுக்கான விசேட அணுகும் வசதிகள் வைத்தியசாலைகளில் மேம்படுத்த படல் வேண்டும்.

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள் சத்துணவுவழங்கப்படல் வேண்டும்.

இச்சந்திப்பில் வட மாகாணத்தில் பணியாற்றும் பத்திற்கும் மேற்ப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான நிறுவனங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்

 

விபச்சார ரகசியங்கள் பாதுகாப்பதற்கு ஓர் அருங்காட்சியகம்!!

Proஅரிய வகை பொருட்கள் மற்றும் பொக்கிஷங்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் டென்மார்க்கில் விபச்சார ரகசியங்கள் குறித்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் ரெட்லைட் மாவட்டத்தில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபச்சார அழகிகளின் வேதனையான வாழ்க்கை அனுபவங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இது தொடங்கபபட்டதாக அதன் நிறுவனர் மேல்சர்டி வின்ட் தெரிவித்தார்.

தற்போது இந்த விபச்சார அருங்காட்சியகம் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு அதிசய இடமாக மாறிவிட்டது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

 

யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது!!

Cameraயுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

லண்டன் பக்கிங்ஹேம் பகுதியில் வசித்துவரும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பர்மிங்ஹேமில் கடைத் தொகுதியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமை தொடர்பில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கண்காணிக்கப்பட்டதை அடுத்து. இந்த கைது இடம்பெற்றுள்ளது.

63 வயதான சம்பந்தப்பட்ட வைத்தியர் மிகவும் சிறிய ரக கெமராவினால் யுவதியொருவரின் கால்கலை ஒளிப்பதிவு செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொது ஒழுக்க விழுமியங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான வைத்தியர், பர்மிங்ஹேம் நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது செயற்பாடுகளால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதால், அதனை குற்றமாக தாம் கருதவில்லை என்றும் வைத்தியர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் யுவதியின் அந்தரங்கத்தை அனுமதியின்றி ஒளிப்பதிவு செய்தமை குற்றம் என நீதவான் அறிவித்துள்ளார். குற்றவாளியாகக் காணப்பட்ட வைத்தியருக்கு மூன்று மாத பணி நிறுத்தத்துடன், 240 ஸ்ரேலிங் பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதவிர மறு அறிவித்தல் வரை பெண் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் குற்றவாளியான வைத்தியருக்கு பர்மிங்ஹேம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

2015ம் ஆண்டு முதல் க.பொ.த (சா.த) ஆங்கில பாடத்தில் மாற்றம் : பந்துல குணவர்தன!!

OL2015ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களுக்கு மேலதிகமாக செவிமடுத்தல் மற்றும் பேச்சு ஆகிய இரண்டு விடயங்களுக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.

இதற்காக 20 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மாணவியை பலாத்காரம் செய்து கொன்று பிணத்துடன் சுற்றிய தம்பதிகள்!!

Abuse1இத்தாலியில் ஈரானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இந்திய தம்பதியர், அந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்திய தம்பதிகள் ராஜேஷ்வர் சிங் (29) மற்றும் கங்காதீப் கவுர் (30) . இத்தாலியின் மிலன் நகரில் வசித்துவரும் இவர்கள் ஆடை வடிவமைப்பாளர்களாக உள்ளனர்.

இவர்களிடம் ஆடை வடிவமைப்பாளராக பயிற்சி பெற வந்த ஈரானை சேர்ந்த மெஹ்பாப் அஹட்சவோஜி (29). இந்தப் பெண்ணும் அவர்களுடனே ஒன்றாக தங்கியிருந்திருக்கிறார்.

அப்போது மெஹ்பாப்பை தங்களுடன் செக்ஸில் ஈடுபடும்படி அந்தத் தம்பதி வற்புறுத்தவே இதற்கு மெஹ்பாப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்டாயமாக பலாத்காரம் செய்த அந்த தம்பதியர் இருவரும் மெஹ்பாப்பின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவரது நிர்வாண உடலை ஒரு சூட்கேசில் அடைத்து லெக்கோ நகரில் உள்ள ஏரியில் வீச ரயிலில் எடுத்து சென்றுள்ளனர். கால்வாயில் சடலம் ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் வெனிஸ் நகருக்கு ரயிலில் எடுத்துச் செல்ல தீர்மானித்தனர்.

பிறகு அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு திரும்பிவிட்டனர். ஒரு வாரம் கடந்த நிலையில் மெஹ்பாப்பின் சடலமானது லிடோ தீவு அருகே பொலிசார் கண்டெடுத்தனர்.

கைரேகை நிபுணர்கள் அவரது சடலத்தை சோதனை நடத்தினர். இதில் கொலையாளிகளின் கைரேகை பற்றிய விவரம் தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் ராஜேஷ்வர் சிங் மற்றும் கங்காதீப் கவுர் ஆகிய இருவரும் சூட்கேசுடன் வந்தது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள் பிறகு செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இணையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!

Chattingகனடாவில் வசிக்கும் இந்தியர் இணையத்தளத்தில் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கனடாவின் சஷ்கட்செவான் மாகாணத்தின் ரெஜினா பகுதியில் வசிப்பவர் யஷ்ஹன்தீப் திலான். இவர் கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவில் குடியேறினார்.

இன்டர்நெட்டில் சட் செய்வதை வழக்கமாக கொண்ட அவர், கனடாவில் எட்மான்டர் லோக்கல்ஸ் என்ற இன்டர்நெட் சென்டரில் சட்டிங்கில் இருந்த போது 13 வயது சிறுமி என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்ட ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.

அது முதல் தொடர்ந்து இருவரும் சட் செய்ய ஆரம்பித்தனர். இதில் நெருக்கம் அதிகரித்தது. செக்ஸ் பற்றி சட்டிங் செய்ய ஆரம்பித்த திலான் வரம்பு மீறி அந்த சிறுமியிடம் சட்டிங்கில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் திலான் அந்த சிறுமியை சந்திக்க விரும்பி அதற்காக ஏற்பாடு செய்தார். 2010ம் ஆண்டு டிசம்பர் 17ம் திகதி சிறுமியை சந்திக்க அவர் ரெஜினா பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார்.

அங்கு பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திலானுக்கு 3 மாத சிறை தண்டனையும் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்துவது குறித்து 3 ஆண்டு பயிற்சியும் எடுத்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியாசமான இந்த தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இவர் தண்டனை காலத்துக்கு பிறகு திலான் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை செய்தவர்கள் கைது!!

Arrestநைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா பொலிசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே ஹோட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

 

பேஸ்புக்கில் விபச்சாரத்திற்கு ஆள் தேடிய பெண் கைது!!

Fbஇங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த பெண் மிச்செலி சாப்பேன். இவர் பேஸ்புக் இணைய தளத்தில் தனது தந்தை ராய் ஷாக்சன், மாற்றாந்தாய் லூசி ஆகியோர் பெயரில் கணக்கு தொடங்கினார்.

அவர்கள் பெயரில் தனக்காக விபசாரத்துக்கு ஆள் தேடினார். அதற்காக நூற்றுக்கணக்கானவர்களுக்கு செக்ஸ் வார்த்தைகளால் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பினார்.

இதுகுறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் நடத்திய விசாரணையில் மிச்செலி சாப்மேன்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

எனவே அவரை கைது செய்தனர். விசாரணையில் தனது தந்தை தன்னை 21 வருடங்களாக கண்டு கொள்ளவில்லை என்றும், அவரையும் தனது மாற்றாந்தாயையும் பழி வாங்கவே இது போன்று நடந்து கொண்டதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்ட மிச்செல் சாப்மேன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 20 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.

இங்கிலாந்து வரலாற்றிலேயே இதுபோன்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எனக்கு எதிராக தமிழக கட்சிகள் செயற்படுகின்றன : ரணில் குற்றச்சாட்டு!!

Ranilதமிழகத்தில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழகம் வரத் தயங்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் எனக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆகையால் தமிழகம் வரவே எனக்கு தயக்கமாக இருக்கிறது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அச்சுறுத்தல்!!

Mobileவடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும், வெளிநாட்டு தொலைபேசி இலக்கமொன்றிலிருந்தும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறித்த தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் எனினும் தான் அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் சத்தியசீலன் தெரிவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

48 மணி நேரத்தில் பெயரை மாற்ற வேண்டும் : பிரவுதேவாவுக்கு எச்சரிக்கை!!

Prabhu Deva48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.

பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் திகதி படம் வெளியாக உள்ளது.

இந்தப் பெயர் – ஆக்ஷன் ஜாக்சன் – நாங்கள் 1988 ல் எடுத்த ஹொலிவுட் படத்தின் பெயர். அதனை நாங்கள்தான் பதிவு செய்திருக்கிறோம். அதனை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம். 48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் நடவடிக்கைதான் என ஹொலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

பிரபுதேவாவின் முந்தைய படமான ராம்போ ராஜ்குமாருக்கும் இதேபோல் எச்சரிக்கை விடப்பட்டது. ராம்போ நாங்கள் எடுத்தப் படம், அந்தப் பெயரை நீங்கள் எப்படி வைக்கலாம் என கேள்வி எழுப்பியதால் ராம்போ ராஜ்குமாரை ரா..ராஜ்குமார் என்று மாற்றினர். ஆனால் இந்தமுறை அப்படி பணிந்து போகும் எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை.

வார்னர் பிரதர்ஸின் படம் ஆங்கிலம். எங்களுடையது ஹிந்தி. இந்தியாவில் இதனை முறைப்படி பதிவு செய்து நோ அப்ஜெக்ஷன் சான்றிதழும் வாங்கியுள்ளோம். படத்தின் பெயரை மாற்றுவதாக இல்லை, பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.

 

15 வயது சிறுமியை வல்லுறவு புரிந்த இராணுவ சிப்பாய் கைது!!

Abuse15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கினிமிட்டிய எச்1 ஏ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 20 வயதான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியுடன் இராணுவ சிப்பாய் காதல் தொடர்பு பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

 

விஜயை அதிற வைத்த தீபிகா : கைகொடுத்த ப்ரியங்கா!!

Deepika

தன் முதல் நாயகனான விஜய்க்கு மீண்டும் ஜோடியாகிறார் பாலிவுட்டின் டாப் நடிகையான ப்ரியங்கா சோப்ரா. நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தீவிரமாகத் தேடி வந்தனர்.

புதுமுகமாக இல்லாமல் முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆரம்பத்தில் தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

தற்போது கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில் அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர்.

படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்த படுகோனே அதற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டார். ஆனால் படத்திற்கான பட்ஜெட்டை விட இது அதிகம் என்பதால் முயற்சியைக் கைவிட்டனர். அடுத்து நடிகை பிரியங்கா சோப்ராவை படத்தில் நடிப்பதற்கு கேட்டனர்.

படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் தமிழில் நடிக்க ஆர்வமானார் பிரியங்கா சோப்ரா. அவரது சம்பள தொகையும் நிம்மதியைத் தருவதாக இருந்தது.

பிரியங்கா சோப்ரா தமிழன் என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். விஜய்தான் அவரது முதல் ஹீரோ. அதுமட்டுமல்ல, இருவரும் இணைந்து ஒரு பாடலையும் சொந்தக் குரலில் பாடினர் அந்தப் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

உண்மையிலேயே அஜித்துக்கு ரொம்ப பெரிய மனசு!!

ajithசூர்யாவைக்கொண்டு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற படங்களை கெளதம்மேனன் இயக்கி வந்தபோது அவரும் அஜித்தும் இணைவதற்கான ஒரு சூழுலும் உருவானது.

ஆனால் அதையடுத்து ஏற்பட்ட சில எதிர்பாராத பிரச்னைகளால் அஜித் எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு அந்த புராஜக்டையே கிடப்பில் போட்டார் கெளதம். இதனால் அவருக்கும் அஜித்துக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

ஆனால் ஆரம்பம் படத்தை முடித்து விட்டு வீரம் படத்தில் அஜித் ஈடுபட்டிருந்த நேரம் கெளதம்மேனனை சூர்யா கழட்டி விட்டார். இதனால் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டு நின்றார் கெளதம்.

அப்போது பழைய மனஸ்தாபத்தை தள்ளி வைத்து விட்டு, தானாக முன்வந்து கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்தார் அஜித்.

அதனால் அப்படத்தில் அஜித்துடன் சிம்புவையும் இணைத்து மல்டி ஹீரோ ஸ்கிரிப்டாக பண்ணியுள்ளார் கெளதம். தற்போது படப்பிடிப்பும் தொடங்கப்போகிறார்கள். இந்த நிலையில், அஜித் தனக்கு செய்த உதவியை சொல்லி உணர்ச்சிவசப்படுகிறாராம் கெளதம்.

எனக்கு தொடர்ந்து பல தோல்வி படங்கள். அவருக்கோ தொடர்ச்சியாக ஹிட் படங்கள். அதுவும் அஜித்தை வைத்து அடுத்தடுத்து படம் இயக்க பல முன்னணி டைரக்டர்களே அலைந்து கொண்டிருந்தார்கள்.

ஆனபோதும் எனது நிலையை அறிந்து கைகொடுத்தார் அஜித். வீரம் படத்திற்கு பிறகு கெளதம் படத்தில்தான் நடிக்கிறேன் என்று அடித்து சொன்னவர், ஏ.எம்.ரத்னத்திடம் என்னை கூட்டிச்சென்று தயாரிப்பாளரையும் அவரே கொடுத்தார்.

அதன்பிறகு பலமுறை சந்தித்தபோதும் பழைய விசயங்கள் எதையும் இப்போதுவரை பேசியதில்லை. புதிய விசயங்களையும், புதிய படத்தை பற்றி மட்டுமே புதுசு புதுசாக பேசுகிறார். உண்மையிலேயே அஜித்துக்கு ரொம்ப பெரிய மனசுதான் என்கிறாராம் கெளதம்.

 

மூன்று கிலோ தங்கம் கடத்த முயன்றவர் கைது!!

GOldசட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் தங்கம் கொண்டு வர முயற்சித்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை, இலங்கை சுங்கப் பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

31 தங்க பிஸ்கட்டுக்களை குறித்த நபர் நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில்கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இந்த தங்கத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

40 வயதான கொம்பனித்தெருவை வசிப்பிடமாக்க் கொண்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தங்க பிஸ்கட்டுக்களின் எடை மூன்று கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எயார் அரேபிய விமானத்தின் மூலம் சாஜாவிலிருந்து குறித்த நபர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.