குடிகார கணவனை வெட்டிக் கொன்ற இளம் மனைவி!!

bloody-knife

தமிழகத்தின் சிவகங்கை அருகே குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த கணவனை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ள கல்வெட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சோணைமுத்து. இவரது மகன் பாரிமன்னன் (28) முச்சக்கர வண்டி சாரதியாக உள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் உள்ளன.

அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும் பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.

பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி சிறைக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர். இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும் பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர்.

நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை பிரவீனா கீழே தள்ளினார்.

பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார். இதில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார்.

இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் பொலிஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகர் சங்கம் உருவாக வேண்டும் : இயக்குனர் பாரதிராஜா வலியுறுத்தல்!!

bharathiraja

தெலுங்கு– கன்னட நடிகர்களுக்கு தனி சங்கங்கள் இருப்பதுபோல் தமிழ் நடிகர்களுக்கு சங்கம் உருவாக வேண்டும் என்று இயக்குனர் பாரதி ராஜா வற்புறுத்தினார்.

இளைய தேவன் இயக்கிய ஞான கிறுக்கன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர். விழாவில் பார்த்திபன் பேசும்போது, சினிமாவில் ஞான கிறுக்கன் போல் இருப்பவர் பாரதிராஜா.

அவருக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. சினிமா மேல் பித்து பிடித்த கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் மலை.

அப்படிப்பட்ட இவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கௌரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் அவரை கௌரவிப்போம் என்றார். பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து பாரதிராஜா பேசும்போது..

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே.செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கௌரவித்தார். தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.

சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில் இருந்தார்கள்.

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.

கன்னட– தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடித்தது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.

ஞான கிறுக்கன் படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப்போல் ஒப்பனை, பூச்சு எதுவும் இன்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக எடுத்துள்ளார்.
பாடல்கள் சிறப்பாக உள்ளன. என் பாதையில் அவர் வருகிறார். என்று பாரதிராஜா பேசினார்.

விழாவில் இயக்குனர் எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, ஞானவேல் ராஜா, நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஜெகா, நடிகைள் அர்ச்சனாகவி, சுஷ்மிதா, இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் பங்கேற்றனர்.

மீண்டும் தன் திறமையை நிரூபித்தார் யுவராஜ் சிங்!!

Yuvaraj Singh

யுவராஜ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா ரெட் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ப்ளூ அணி சலஞ்சர்ஸ் கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

என்கேபி சலஞ்சர் கிண்ண தொடர் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் யூசுஃப் பதான் தலைமையிலான இந்தியா ரெட் அணியும் யுவராஜ் தலைமையிலான இந்தியா ப்ளூ அணியும் வெள்ளிக்கிழமை மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரெட் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அந்த அணியின் பாண்டே 70 ஓட்டங்களும், அபிஷேக் 75 ஓட்டங்களும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் அக்ஷத் மற்றும் யுவராஜ் தலா 84 ஓட்டங்களை எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

குறிப்பாக யுவராஜின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 53 பந்துகளில் 84 ஓட்டங்களை எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியா ரெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 83 ஓட்டங்களும் சமித் படேல் 68 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் வெற்றிக்கான இலக்கை அந்த அணியால் எடுக்க முடியவில்லை. இதனால், அந்த அணி 49.5 ஓவர்களில் 334 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த வெற்றி மூலம் இந்தியா ப்ளூ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ரெட் மற்றும் டில்லி அணிகள் இடையே நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

பொங்கல் போட்டியில் களமிறங்கும் விஜய், அஜித்!!

vijay

விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு வருகின்றன. இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜில்லா படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். ஆர்.டி.நேசன் இயக்குகிறார். ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்டுடன் கூடிய ஆக்சன் படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது.

வீரம் படத்தில் அஜித் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சந்தானம், விதார்த், அப்புக்குட்டி போன்றோரும் உள்ளனர். சிவா இயக்குகிறார். இதன்படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

காதலித்ததால் கௌரவக் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!!

murder

இந்தியாவின் பஞ்சாபில் ஒரு இளம்பெண்ணை கௌரவ கொலை செய்த குடும்பத்தினர் சடலத்தை எரிக்க முயன்றுள்ளனர். இதன்போது பாதி எரிந்த நிலையில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மௌர் குராத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஹர்ஜிண்டர் கவுர் இவர் ஜக்சிர் சிங் என்னும் நபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

தனது காதலி குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் ஜக்சிர் சிங் பொலிசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அவர்கள் அப்பெண்ணை கொலை செய்ததும் அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரித்துவிட சென்றுள்ளதும் தெரியவந்தது.

உடனடியாக இளம்பெண்ணின் சடலத்தை மீட்க சென்ற பொலிசாரால் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை மட்டுமே விசாரணைக்காக மீட்கமுடிந்தது.

இவ்வழக்கு தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் 5 பேரை கைது செய்துள்ள பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிம்பாவேயில் நடந்த கொடூரம்!!

zimbabwe_elephant_killed_004

சிம்பாவேயில் நடந்த மனிதர்களின் இரக்கமற்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பாவேயின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான வாங்கே தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் இருக்கின்றன.
இந்த சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் இறந்து கிடந்ததும் அவற்றின் தந்ததங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் அண்மையில் தெரியவந்தது.

யானைகள் தாகம் தீர்க்க வரும் குட்டைகளில் சயனைட் விஷத்தைக் கலந்து கொலை செய்திருக்கின்றனர். இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிம்பாவே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வேட்டை கும்பலுக்கு 9 ஆண்டு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டும் அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வெடிச் சம்பவத்தில் சிறுவனின் விரல்கள் துண்டிப்பு !!

hand

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் நேற்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுளூர் வெடியொன்றை வீட்டில் இருந்து (வெங்காய வெடி) சிறுவன் விளையாடியபோது இவ் வெடி விபத்து ஏற்பட்டதனால் திலக்சன் எனும் 3 வயது சிறுவன் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு வெடிபொருள் தயாரித்தவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியாபொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம் – சம்பந்தன்..!

samஇலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார்.

வடகிழக்கில் நிலவக் கூடிய இன விகிதாச்சாரத்தை மாற்றக் கூடிய வகையில் அரச காணிகள் பகிர்ந்து அளிப்பதை தடுப்பதற்காகத்தான் தமிழ்-சிங்களத் தரப்பிடையே பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன எனவும் சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுவது தொடர்பாக, நாட்டின் அரசியல் அமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் பல விதிகள் இருக்கின்றன என்றும், மாகாணசபைகளுக்கும் காணி அதிகாரம் உண்டு என்பதை இதுவரை உச்சநீதிமன்றம் ஏற்று தனது தீர்மானங்களை வழங்கியுள்ளது என்றும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

இப்படியான சூழலில், தற்போது தலைமை நீதிபதியாகவுள்ள மொஹான் பீரீஸ் முரண்பட்ட ஒரு முடிவை மற்ற இரண்டு நீதிபதிகளுடன் சேர்ந்து எடுத்திருப்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விஷயம் எனவும் சம்பந்தர் கூறினார்.

இந்த விஷயம் குறித்து கூட்டமைப்பினர் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள வெவ்வேறு மக்களிடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்படவேண்டுமாயின் மாகாண சபைகளிடம் காணி அதிகாரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் கூறும் அவர், அப்படி இல்லாவிட்டால் அதன் விளைவுகள் பாரதூரமாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை அறிமுகம்!!

manjalவவுனியாவில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வவுனியா விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

விவசாய திணைக்களத்தினால் பரீட்சார்த்த முறையில் மஞ்சள் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியளித்துள்ளது.
இப்பயிர் செய்கை தொடர்பாக ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் உட்பட 25 விவசாயிகள் இப்பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

இப்பயிர் செய்கை பம்பை மடு, மாந்தை, பாலமோட்டை, நெடுங்கேணி முதலான இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இப்பயிர் செய்கைக்கு ஏற்றுமதி அதிகாரசபையின் உதவியும் நாடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அவசர உதவி அழைப்பால் சிக்கித் தவிக்கும் பொலிஸார்!!

helpline

பொதுமக்கள் அவசர உதவி பெறுவதற்காக பொலிஸ் துறையில் சிறப்பு தொலைபேசி அழைப்பு வசதி இருக்கிறது. ஆனால் இதை சிலர் துஷ்பிரயோகம் செய்து பொலிஸ் அதிகாரிகளை அலைக்கழிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இங்கிலாந்து நாட்டிலும் பொலிசார் இந்த தொல்லையில் சிக்கி தவிக்கிறார்கள்.

சமீபத்தில் மன்செஸ்டர் நகரில் ஒரு நபர் அவசர பொலிஸ் உதவியை நாடினார். அதிகாரிகள் உடனடியாக அவர் அழைத்த மதுபான விடுதிக்கு விரைந்தனர். அங்கு நடந்த தகராறு என்ன என்று விசாரித்த போது பியர் போத்தல் அடைப்பான் சரியில்லை. எனவே பணத்தை திரும்ப கேட்டால் தர மறுக்கிறார்கள் என்று அந்த நபர் பொலிசாரிடம் புகார் தெரிவித்தார்.

அவரை பொலிசார் கடுமையாக கண்டித்ததுடன் எச்சரிக்கை வழங்கி விட்டு திரும்பினார்கள். இந்த நிகழ்வு பற்றி பொலிஸ் அதிகாரி பிலிப் குறிப்பிடுகையில்..

இது போன்று ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் சராசரி 3 571 தேவையற்ற அழைப்புகள் வந்தன. ஒரு பெண் வீட்டு தொட்டியில் புழுக்கள் இருக்கிறது என்கிறார், இன்னொருவர் போன் செய்து என்னுடைய கார் நிறுத்து இடம் திருட்டு போய் விட்டது என்கிறார்.
இந்த சர்வசாதாரண விஷயத்துக்கு எல்லாம் பொலிசாரை அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார்.

கள்ளக் காதலில் ஈடுபட்ட சிறுமி சவுக்கால் அடித்துக் கொலை!!

Lashing

வங்காள தேசத்தில் உள்ள ஷரியத்பூரை சேர்ந்த 14வயது சிறுமி ஹீனா அக்தர். 7வது வகுப்பு படித்து வந்தார். இவர் திருமணமான தனது உறவினர் மக்பூப்கான் என்பவருடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஷரியத் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் அவர்கள் இருவரையும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து பொது மக்கள் முன்னிலையில் ஹீனா அக்தருக்கு 101 சவுக்கடியும், மக்பூப்கானுக்கு 201 சவுக்கடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது 70 சவுக்கடி வாங்கிய ஹீனா மயங்கி விழுந்து இறந்தார். அந்த நேரத்தில் தனது பெற்றாரிடம் நான் ஒன்றும் அறியாத அப்பாவி என கூறினாள். மரணம் அடைந்த ஹீனாவின் உடல் புதைக்கப்பட்டது. ஆனால் தனது மகள் மீது அபாண்டமாக குற்றம் சாட்டி கொன்று விட்டதாக அவளது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

மகபூப் நான் மலேசியாவில் வேலை பார்த்தார். அங்கிருந்து திரும்பிய அவர் தனது மகனின் வயது உறவினர் மகளான ஹீனா அக்தரின் மீது காமப் பார்வையை வீசினார். ஒரு நாள் அவளை பலவந்தமாக கற்பழித்தார்.

தனது இந்த தவறை மறைக்கவே ஹீனா அக்தரின் மீது கள்ளக்காதல் குற்றச்சாட்டை சுமத்தியதாக அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனவே, தனது மகளின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளருக்கு 15 வருட சிறைத் தண்டணை வழங்க கோரிக்கை!!

USA-tamil

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவருக்கு குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையச் சேர்ந்த கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அமெரிக்க சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புகொண்டிருந்தார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கான தண்டனையே தற்போது சர்ச்சையில் உள்ளது.

தண்டனைக் காலத்தை குறைக்குமாறு சுரேஸின் சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச சட்டத்தரணிகள் கோரி வருகின்றனர். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி சுரேஸிற்கான தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இவர் 2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர் தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்களால் துன்புறுத்தப்படும் பெண்கள்!!

charls

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கும் நிறுவனங்கள் பெண்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் தனியாக வாழும் பெண்களின் வீதம் அதிகரித்துள்ள நிலையில் அது மாவட்டத்தின் வறுமை நிலையை உயர்த்துவதாக அமைந்து வருகின்றது.

இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு உதவி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உதவித்திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் பெண்களினால் பல்வேறு பொருட்கள் உற்பத்திசெய்யப்பட்டுவருவதுடன் அவை மாவட்டத்துக்கு வரும் உல்லாசப்பயணிகளை பெரிதும் கவர்வதாகவும் உள்ளது.

இந்த நிலையில் கிராம மட்டத்தில் இவ்வாறான உற்பத்தி பொருட்களை அவற்றினை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையில் பலர் தமது உற்பத்தி நடவடிக்கைகளை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

உற்பத்திப்பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய இந்த உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவகம் ஆகியவை இணைந்து மாபெரும் “புதுவாழ்வு மட்டு.மகளிர் உற்பத்திச் சந்தை” ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு நகரின் லொயிஸ் அவனியுவில் இந்த சந்தை நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ரதி அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் குணரெட்னம், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் ரஞ்சித மூர்த்தி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கை பிரிவு பணிப்பாளர் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் தவராசா, வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பொருளாதார பங்களிப்பினை மேம்படுத்தி அவர்களது பங்கேற்பு, சிந்தனை,செயற்றிறன் மற்றும் உழைப்பு, முயற்சிகளை வெளிக்கொணர்வதனூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சமூக பிரச்சினைகளை ஒழித்தல், மட்டக்களப்பின் வளங்களை பயன்படுத்தி தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் பாரம்பரிய கைப்பணி பொருட்கள், தானியம், மா வகைகள், பனம் பொருள் உற்பத்திகள், பலகார தின்பண்ட வகைகள், பன் உற்பத்தி பொருட்கள், பிரம்பு மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் உள்ள உற்பத்தியாளர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தும் வகையில் எதிர் காலத்தில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ரதி அஜித்குமார் தெரிவித்தார்.

இந்த குரங்கு செய்யும் வித்தைகளை பாருங்கள்(வீடியோ)

இந்தோனேசியாவில் வீதியோரத்தில் பலர் வாழ்கின்றார்கள். இவர்கள் தமது வருமானத்திற்காக குரங்குகளை வைத்து வித்தை காட்டுகின்றார்கள்.அப்படிப்பட்ட ஒரு குரங்கு செய்யும் வித்தைகளை இங்கே பாருங்கள்.

 

புதிய தீவுக்கு செல்ல வேண்டாம் : பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை!!

island

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய தீவிலிருந்து தீப்பற்றக் கூடிய வாயு வெளியேறத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலர் பலியாகினர்.

இதனால் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 2 கி.மீ தூரத்துக்கு 18 மீட்டர் உயரத்தில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது. இதைக் காண, ஏராளமான மக்கள் அங்கு திரண்ட வண்ணம் உள்ளனர். கடலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சாதாரணமானதே என புவியியல் வல்லுனர் தெரிவித்து உள்ளனர்.

எனினும் திடீர் தீவில் தீப்பற்றி எரியக் கூடிய வாயு வெளியேறத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவை காண சென்ற பொதுமக்கள் சிலர் அங்கு வாயுக் கசிவு ஏற்படுவதாக கூறியதை அடுத்து நிருபர்களும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளும் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது தீவில் வாயுக் கசிவு ஏற்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து ஒருவர் குறிப்பிடுகையில் தீவை காணச் சென்றபோது ஏதோ வாயுக் கசிவு ஏற்படுவதை உணர்ந்தேன். தீக்குச்சியை உரசியபோது தீப்பற்றி எரிந்தது. நான் பயந்து போய் தீக்குச்சியை கடல் நீரில் வீசினேன். நீரில் விழுந்தும் தீக்குச்சி தொடர்ந்து எரிந்தது´ என்றார்.

தீவில் விசேஷ வாயுக் கசிவு ஏற்படுவதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் தீவை சுற்றிய கடல் பகுதியில் அதிக அளவிலான மீன்கள் இறந்து கிடப்பதாக கூறியுள்ளனர். இதனால் அந்த தீவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தையும் தற்கொலை!!

sucide1

தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து தானும் விஷம் அருந்தி உயிரிழந்த தந்தை பற்றிய செய்தி கல்கிஸ்ஸை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கல்கிஸ்ஸை வடரஸ்பல வீதி பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தனது எட்டு வயதான மகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தனது மகள் இறந்ததன் பின்னர் தானும் விஷம் குடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த தந்தை 43 வயதானவர் எனவும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் தனது மனைவி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்துள்ளார்.