செப்டம்பரில் பிரியாணி விருந்து!

Karthi’s-Biriyani

கார்த்தி – ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது யுவனுக்கு 100வது படம்.

இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.

படத்தில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் மற்றும் கொஞ்ச வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். அந்த வேலைகளையும் முடித்துவிட்டு செப்டம்பர் 6-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம் வெங்கட்பிரபு.

வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!

robberyவவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று காலை இக்கொள்ளைச் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கடையினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்களால்  கடையில் பொருத்தப்பட்டிருந்தபாதுகாப்பு கமெராவும் (CCTV) கொள்ளையர்களால் சேதப்படுத்தப் பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இக்கொள்ளைச் சம்பவத்தினால் பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் சூரையாடப்பட்டிருக்காலாமென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அண்மைகாலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(சந்தோஷ்)

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்களுக்கு தான் முதலிடமாம்!!

images

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் இரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம். கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, இரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது.

பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

தானியங்கி ஹெலிகொப்டரை கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று நோக்கி அசைந்து பொருந்தி கொள்கின்றன. இதனையடுத்து இவை அனைத்தும் ஒன்றாகவே சேர்ந்து இயங்குகின்றன. இதனாலேயே Multi Rotor ஹெலிகொப்டர் என அழைக்கப்படுகின்றது.

1 2 3

சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்?

MINOLTA DIGITAL CAMERA

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோ அவர் தான்.

சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இந்தப் பாட்டைப் பற்றித்தான் பேச்சாகக் கிடக்கிறது. சூட்டோடு சூடாக சில விஷயங்களைச் செய்வதில் கோடம்பாக்கத்துக்காரர்கள் தான் கெட்டியாச்சே. வேறு சில நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம்.

ஆனால், இது சரிப்பட்டு வருமா என அவர் யோசிக்கிறாராம். முதல் பாட்டு பாடுறதுக்கு முன்னாடியும் இப்படித்தான் சொன்னீங்க. இப்போ பாட்டு பயங்கர ஹிட். துணிஞ்சி இறங்குங்க என தைரியம் கொடுத்திருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா ஹீரோக்களுக்கும் பாடுகிறார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகிறார்கள். எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான் – டக்ளஸ்!!

daglous

இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் இந்தக் கருத்தினைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்துகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட-இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

மலேஷிய மாணவர்கள் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?(படங்கள் )

மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த புகைப்படங்களை தமது முகநூலில் வெளியிட்டவர் அந்த பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் குளியலறையை ஒட்டிய உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேசைகளைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

இவற்றில் கணிசமானவர்கள் மலேஷிய இந்திய வம்சாவளியினரைப் போல தோன்றுகின்றனர். இது ரமதான் மாதம் என்பதால் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளியின் சிற்றுண்டிச்சாலை ரமதான் மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டிருப்பதால் பள்ளியின் கழிப்பறை/குளியலறைகளுக்கு அடுத்து உள்ள உடைமாற்றும் இடத்தில் மேஜைகள் போடப்பட்டு அங்கே பள்ளி மாணவர்களை சாப்பிடுமாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி.கமலநாதன். அவருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பள்ளிக்கூடத்தின் கேண்டீனில் மராமத்து பணிகள் நடப்பதால் அது கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டதாகவும், ரமலான் நோன்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதே தமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல் என்றும் தெரிவித்தார் கமலநாதன்.

அனாலும் தற்காலிகமாக குளியலறையை ஒட்டிய இடத்தில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளை சாப்பிடவைத்தது தவறு என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக தாம் நேரடியாக அந்த பள்ளிக்கு நாளை செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

-BBC தமிழ்-

4 3 1

 

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு 20 ஆசனங்கள்!!

EPDP flag

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈபிடிபி கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது கட்சி போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது: பலர் பலி (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவில் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் நேற்று மாலை அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 200ற்கும் அதிகமான அகதிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில் 150 பேர்வரை இலங்கை அகதிகள் என கூறப்பட்டுள்ளது.

படகில் பயணித்த 25ற்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் 30ற்கும் மேற்பட்ட இந்தோனேசிய மீனவர்களது படகுகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மூழ்கிய படகு பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்பு பணிகள் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகு விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையின் சடலம் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படகில் இருந்த 61 ஈரானியர்களில் சொஹேல் என்ற நபர் மாத்திரம் நீந்தி கரையை எட்டியுள்ளார்.

படகின் மோட்டார் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் படகு கவிழ்ந்ததாக உயிர்தப்பிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

கடலின் சீற்றம் அதிகரித்தமையினால் இந்நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

படகின் கெப்டன் சிறிய படகொன்றில் ஏறி தப்பித்து விட்டதாக சொஹேரெல் குறிப்பிட்டுள்ளார்.

கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

wavesதொடரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருசில தினங்களுக்கு இதே காலநிலை நீடிப்பதுடன், தென் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் கடல் அலையில் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல்ரோந்து பணியில் ஈடுபடும் கடற்படையினர் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (23) இரவு 8 மணிக்கு வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

நேற்றைய தினம் மத்திய மாகாணத்திலும் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லக்சபான, கென்னியன், காசல்ரீ, மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து, அவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டிருப்பதுடன், மகாவலி மற்றும் களனி ஆற்றை அண்டிய பகுதிகளில் வாழ்வோர் நீர் நிலைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மீண்டும் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா..!

saதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.

இந்தநிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி இலங்கை அணி 49.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, சமிந்த எரங்க 7 ஓட்டங்களுடனும் மலிங்க ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வத் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணிக்கு 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியால் 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேஸ் சநதிமால் தெரிவானார்.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை 2 -0 என முன்னிலையில் உள்ளது.

ஆசை நாய்குட்டி!!

dog

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான்.ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.

வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், “இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்” என்றார்.

உடனே அந்தப் பையன் “நீங்க என்ன என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?” என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை.

குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

வவுனியா மாவட்டத்திற்கான முதலாவது சாரணர் பேடன் பவல் விருது!!

vav

இலங்கை சாரண தலைமைக்கரியலயத்தினால் வழங்கப்படும் திரிசாரண பிரிவின் உயர் விருதான பேடன் பவல் விருதினை வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவனும் களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவனுமாகிய திரு. சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் இவ் விருதினை பெற்று கொண்டுள்ளதுடன்,வவுனியா மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை தேடிதந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் 2007 ஆம் ஆண்டு சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றார். இது கல்லூரியின் சார்பில் முதல் ஜனாதிபதி விருது என்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற சாரண சார்க் நட்புறவு பாசறையிலும் எமது நாட்டை பிரதிநிதித்துவபடுத்தி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விபுலானந்த கல்லூரியின் உதவி சாரண தலைவராகவும், வவுனியா மாவட்ட ஜானதிபதி சாரணர் மன்றத்தின் தலைவராகவும், திரிசாரண உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தின் முதலாவது பேடன் பவல் விருதினை பெற்று கொண்ட திரு.சு.காண்டீபனுக்கு மாவட்ட சாரணர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக மாவட்ட ஆணையாளர் திரு M.S.பத்மநாதன் தெரிவித்தார்.

மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் – வவுனியாவில் சுவரொட்டியால் பரபரப்பு..

2

வவுனியாவில் தமிழரசு கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவும் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி என்ற பெயரில் இச் சுவரொட்டிகள் ஓட்டப் பட்டிருந்தன.

உண்ணா விரதம் மறியலுக்கு மாவை அண்ணன், மகுடம் சூடுவது விக்னேஸ்வரனா?

சகுனி தொடங்கியது பாஞ்சாலியை வைத்து சம்பந்தர் தொடங்குவது விக்னேஸ்வரனை வைத்தா?

மாவை அண்ணன் ஆணையிட்டால் புரட்சி வெடிக்கும் போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன.

தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலைமையில் இந்த சுவரொட்டிகள் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவதற்கு விசமிகள் செய்த செயல் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிதக்கும் கல்லை பார்த்ததுண்டா? (வீடியோ)

கற்கள் பொதுவாக நீரிலுள் அடர்த்தி கூடியவை ஆகையால் நீரில் மிதப்பதில்லை. ஆனாலும் இந்தியாவில் கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் அதனை பார்வையிடுவதற்கு ஏராளமான பக்தர்களும் கூடி வருகின்றனர்.

அந்த ஆச்சர்யத்தை நீங்களும் இங்கு பாருங்கள்..

இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை என கவலைப்படும் கிளார்க்!!

clark

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2வது டெஸ்ட் போட்டியை தோற்றதற்கு தங்கள் அணியின் துடுப்பாட்டமே காரணம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

துடுப்பாட்ட வீரர்கள் ஆட்டம் ஏற்றுக் கொள்ள முடியாதது. பிட்ச் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது. நல்ல வாய்ப்பைத் தவறவிட்டோம். முதல் 7 பேரிடம் நல்ல அனுபவம் உள்ளது. இங்கிலாந்தின் பந்து வீச்சை ஏற்கனவே திறம்பட ஆடியுள்ளோம். ஷாட் தேர்வு படுமோசம், இங்கிலாந்திடம் உள்ள ஒழுக்கம் நம் அணியில் இல்லை.

அவர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாட விரும்புகின்றனர். கடினமான கட்டத்திலும் விக்கெட்டை விடாமல் நிற்கின்றனர். ஆனால் முதல் இன்னிங்ஸிலேயே தோல்வி ஆரம்பமாகியது. ஆட்டத்தின் சில தருணங்களில் துடுப்பெடுத்தாட சௌகரியமாக இருக்கும் ஷாட்களை விளையாடலாம் ஆனால் பிற சமயங்கள் கடினமாக இருக்கும். அப்போது தற்காப்பு ஆட்டமே கை கொடுக்கும் இவ்வாறு கூறியுள்ளார் கிளார்க்