அண்ட்ரியாவுக்கு முத்தம் கொடுத்த படத்தை வெளியிட்டது அனிருத்தா?

aniruth

லிப் டு லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியானதற்கு அண்ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத். தனுஷ் நடித்த 3 பட இசை அமைப்பாளர் அனிரூத், பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அண்ட்ரியா.

இருவரும் லிப் டு லிப் முத்தம் பரிமாறிக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கருத்து தெரிவித்த அண்ட்ரியா போட்டோ தொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இது மிகவும் பழைய படம் என்று மட்டும் பதில் அளித்தார்.

ஆனால் இதுகுறித்து அனிருத் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். தற்போது அவர் அண்ட்ரியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது நடந்த சம்பவத்துக்கு நான் அண்ட்ரியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுடன் போட்டோ சம்பந்தமாக அவர் வெளியிட்ட கருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

விளம்பரத்துக்காக அந்த புகைப்படத்தை அனிருத்தான் வெளியிட்டிருக்கிறார். அதனால்தான் அவர் இப்போது மன்னிப்பு கேட்கிறார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மந்திரவாதியை வற்புறுத்தி மனித மலத்தை உண்ண வைத்த மக்கள்!!

UP-1

இந்தியாவில் மந்திரவாதி ஒருவரை ஊர் மக்கள் கட்டாயப்படுத்தி மனித மலத்தை உண்ண வைத்துள்ளனர். மேகாலயா மாநிலம் கிழக்கு காசி மலை மாவட்டம், மாவ்ரிங்காங் கிராமத்தில் வசித்து வருபவர் நோபிங் நாங்சிட். இவரும் இவரது குடும்பத்தினரும் மாந்திரீக வேலைகள் செய்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த கிராமத்தில் உள்ள நான்கு சிறுமிகள் திடீரென மர்ம நோயால் பாதிக்கப்பட்டனர். தூக்கத்தில் அவர்களுக்கு கெட்ட கெட்ட கனவுகள் வந்துள்ளன. அத்துடன் தூக்கத்தில் மந்திரவாதி நாங்சிட் பெயரை முணுமுணுத்ததாகவும் தெரிகிறது. எனவே, மந்திரவாதி சூனியம் வைத்ததால்தான் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக கடந்த 20-ம் திகதி ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி பெரியவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது சூனியம் செய்த மந்திரவாதிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். அதுவும் மனித மலத்தை அவரை சாப்பிட வைத்தால்தான் சூனியம் விலகும் என்று தெரிவித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவரும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, மந்திரவாதியை கட்டாயப்படுத்தி மலத்தை தின்ன வைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிறுமிகள் 4 பேரின் உடல்நிலை தேறியதாக பஞ்சாயத்து துணைத் தலைவர் தெரிவித்தார். முதியவர் ஒருவரை மலம் தின்ன வைத்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அந்த கிராமத்திற்கு நீதவான் மற்றும் துணைக்கோட்ட பொலிஸ் அதிகாரி சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் அறிக்கை அளித்தபிறகு, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பொலிஸ் அதிகாரி கூறினார்.

யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர்!!

girl

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். பஸ் நிலையத்தில் இன்று காலை பேருந்துக்காக காத்து இருந்த இளம் பெண்ணின் நெஞ்சுப் பகுதியை வருடியதுடன் அப்பெண்ணை முத்தமிடுவதற்கு முயற்சித்துள்ளார். இந்த முதியவரின் செயற்பாட்டால் நிலை குலைந்த இளம் பெண் கூக்குரல் எழுப்பியுள்ளார்.

இதனால் அருகில் நின்ற நின்றவர்கள் முதியவருக்கு அடி உதை கொடுத்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். குறித்த பெண் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவிப்பதற்கு வெட்கப்பட்டதுடன் அங்கு நின்ற மூச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார்.

இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. குறித்த முதியவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாண சபை தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!

TNA-logo

 

 

 

 

 

 

 

 

 

 

 

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நியமனக்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்:

யாழ். மாவட்டம்

தமிழரசு கட்சி – 7 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 4 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
புளொட் – 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம்

தமிழரசு கட்சி – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 1 ஆசனம்
டெலோ – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலே – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

வவுனியா மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலோ – 2 ஆசனங்கள்
புளொட்- 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

மன்னார் மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்

இந்த அடிப்படையில் ஐந்து மாவட்டங்களுக்கும் ஆசனப் பங்கீடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பில் மினி சூறாவளி பல வீடுகள், வாகனங்கள் சேதம் – ஒருவர் பலி!!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. டி.சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீதிகளின் குறுக்கே விழுந்துள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி

கொழும்பு, நாரஹென்பிட்ட தனியார் வைத்தியசாலைக்கு முன்னால் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அதற்குள் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 39 வயதான நபர் ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

c0

c1

கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நோர்வே பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கியது துபாய் நீதிமன்றம்!!

norway

சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நோர்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம்.

துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நோர்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா.

அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நோர்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது.

தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும் தான் மீண்டும் நோர்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது .

கிழங்குக்குப் பதிலாக குழந்தையின் கை – வவுனியாவில் அதிசயம்..!

வவுனியா கற்பகபுரம் கிராமத்திலுள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தில் முளைத்த முள்ளங்கி, குழந்தையின் கைபோன்ற அமைப்பில் உள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள பெருந்திரளான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

mullanki

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப முடிவுத் திகதி இன்று..!

uniஇவ்வாண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது.

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

எந்தவொரு காரணத்திற்காகவும் இன்றை நாளின் பின்னர் விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வருட கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

ஜஸ்வர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்..!

aishwaryaஅர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவுக்கு முதல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த படத்திற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அர்ஜீன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகும் படம் பட்டத்து யானை. இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து நல்ல கருத்துகள் பரவியிருப்பதால், முதல் படத்திலேயே எதிர்ப்பார்ப்புக்குரிய நாயகியாகிவிட்டார் ஐஸ்வர்யா.

இதில் படத்தின் ப்ளஸ் பாய்ண்டாக ஐஸ்வர்யாவின் அழகும் நடிப்பும் முக்கியமானவை என்று கூறப்படுவதால் அவரை ஒப்பந்தம் செய்ய இரு நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

ஆனால் அர்ஜீனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அர்ஜீனின் நெருக்கமான நண்பர்கள் உள்ள தெலுங்குப் பட உலகிலும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ள இந்த முக்கியத்துவமானது கொலிவுட்டின் மற்ற நாயகிகளுக்கு கொஞ்சம் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஐஸ்வர்யா நடித்துள்ள பட்டத்து யானை வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகின்றது.

தாய்லாந்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து 19 பேர் கருகி சாவு

thailandதாய்லாந்தில் லொறி  மீது மோதிய வேகத்தில் 2 அடுக்கு பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாங்காக் நகரில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் ராய் எட் நோக்கி புறப்பட்ட 2 அடுக்கு பஸ் இன்று அதிகாலை மத்திய சரபுரி மாகாண நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

எதிர்முனையில் படுவேகமாக வந்த சீமெந்து லொறி  கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்குள் பாய்ந்தது. லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் எஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது. மளமளவென்று பரவிய தீ பஸ் முழுவதும் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் அரை தூக்கத்தில் இருந்த பயணிகள், என்ன நடக்கிறது? என்பதை யூகிப்பதற்குள் வேகமாக பரவிய தீயில் சிலர் சிக்கிக் கொண்டனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சினுள் இருந்து 18 பிணங்களை மீட்டனர். பலத்த தீக்காயமடைந்த 20 பயணிகளை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போகும் வழியில் ஒரு பயணி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் சிக்கிய பஸ் முழுமையாக எரிந்து அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்துவிட்டது.

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம்..!

mandelaநெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதல் கருப்பினத்தலைவரும், நிறவெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும் ஆவார். இவர் சென்ற மாதம்8-ம் திகதி கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக பிரிட்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவின் கவனிப்பில் இருந்துவரும் இவர், சென்ற வாரம் தனது 95ஆவது பிறந்தநாளை மருத்துவமனையிலேயே கொண்டாடினார்.

மக்களின் அன்பிற்குரிய தலைவனாக இருக்கும் மண்டேலாவை அவரது மனைவி அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கின்றார். தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவும் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று மண்டேலாவின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றார்.

ஜனாதிபதி ஜுமா நேற்றும் மண்டேலாவை பார்வையிட்டு வந்தார். மண்டேலா தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும், உடல்நிலையில் நீடித்த முன்னேற்றம் காணப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க மக்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் மண்டேலாவிற்கு இருக்கும் என்றும் அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அனல் காற்று வீசலாம் – சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை..!

swissசுவிட்சர்லாந்தின் பிரதான நகரங்களான சூரிச், பாசல் மற்றும் ஸ்காஃப்ஹூசென் போன்ற பகுதிகளில் அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்நகரங்களின் வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸை எட்டியுள்ள நிலையில், இது மேலும் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனவும், அதனால் அனல் காற்று வீசலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சியோன் பகுதியில் கடந்த 19ம் திகதி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 20ம் திகதி 37 டகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டுள்ளது.

ஜெனீவாவின் வெப்பநிலையானது தற்போது 30 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்துவரும் தினங்களில் முதியவர்கள், குழந்தைகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டிலில் இருந்து விழுந்த நடிகை மஞ்சுளா காலமானார்..!

manjulaநடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

நடிகை மஞ்சுளா தனது கணவரும், நடிகருமான விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார்.

அவர் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் இருந்து திடீர் என்று கீழே விழுந்தார். கீழே விழுகையில் கட்டில் கால் அவறுடைய வயிற்றில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் கவலை அடைந்துள்ளனர்.

இணைய விளம்பரங்க​ள் மூலம் கணனிக்குள் ஊடுருவும் வைரஸ்களை தடுப்பதற்கு..!

Computer-Virus

தற்காலத்தில் அதிகரித்துள்ள இணையப் பாவனை காரணமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் கணனிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆய்வொன்றின்படி நாள்தோறும் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்களில் ஆயிரத்தில் 10 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையத்தளங்களில் காணப்படும் பாதுகாப்பற்ற விளம்பரங்களை கிளிக் செய்வதினூடாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இணையத் தளங்களை பயன்படுத்தும்போது தேவையற்ற விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தடுப்பது சிறந்ததாகும்.

இதற்கு Anvi Ad Blocker எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. Anvisoft நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த மென்பொருளானது இணைய இணைப்பு உள்ள வேளைகளின் கணனிகளை பாதுகாப்பதற்கு மிகவும் உறுதுணையாகக் காணப்படுகின்றது.

தரவிறக்கம் செய்வதற்கு இங்கு கிளிக் செய்க.

 

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று..!

slஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.

இதன்படி இன்று இரண்டாவது போட்டியில் இரு அணிகளிலும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இன்றைய போட்டியிலும் இலங்கை அணையை சந்திமல் தலைமை தாங்குகிறார். கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாது இருந்த தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா இன்றைய போட்டியில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சிலதினங்களாக கொழும்பில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இன்றும் கூட அதிகாலை முதல் மழை பெய்து வருவதினால் இன்றைய போட்டிக்கு மழை சவால் விடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனை கண்டுபிடிப்பு..!

thaveethuபைபிளில் குறிப்பிட்டுள்ள தாவீது மன்னரின் அரண்மனையை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமின் மேற்கில் உள்ள கிர்பெட் குயாபா என்ற இடத்தில் அகழ்வு ஆராய்ச்சி பணி நடந்தது. ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வு நிபுணர்கள் மற்றும் இஸ்ரேலின் பழங்கால நினைவு சின்னங்களின் நிபுணர்கள் அடங்கிய குழு இங்கு ஏழு ஆண்டுகள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அங்கு பழங்கால கட்டிடம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது அதிசயிக்கதக்க வகையில் உள்ளது. இந்த கட்டிடம் பைபிளில் இடம் பெற்றுள்ள தாவீது மன்னரின் அரண்மனை என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிர்பெட் குயாபா நகரம் தாவீது மன்னர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட பலம் வாய்ந்த நகரமாகும்.

எனவே, இங்கு தாவீது மன்னர் தனது அரண்மனையை நிறுவியிருக்க வேண்டும் என அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கட்டிடத்தில் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய பொருட்களான முள்கரண்டிகள், கையுறைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவை தாவீது மன்னர் உபயோகித்த பொருட்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆனால் இந்த கட்டிடம் தாவீது மன்னரின் அரண்மனை அல்ல என எதிர்ப்பாளர்கள் விவாதிக்கின்றனர். இது தாவீது மன்னருக்கு பின் வந்த மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.