விஜய் நடித்த தலைவா படம் திரையிடப்படுவதில் நீடித்துவந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்குவந்த நிலையில் இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி அவரை வந்தடைந்துள்ளது.
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஜில்லா படக்குழுவினர்களுக்கு மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு வந்துள்ளதாம்.
ஜில்லா படத்தை உடனடியாக நிறுத்தும்படியும், மீறி படம் எடுக்கப்பட்டால் அதை ரிலீஸ் செய்வதிலும் தடை ஏற்படும் என மிரட்டல் வந்துள்ளதால் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 30 சதவிகித படம் முடிந்துவிட்டதால் படத்தை கைவிடுவதா? அல்லது விஜய்க்கு பதில் வேறு நடிகரை புக் செய்வதா? என்ற குழப்பத்தில் உள்ளனர் படக்குழுவினர்.
படத்தின் ஹீரோயினுக்கும் தனிப்பட்ட முறையில் மிரட்டல் வந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டம் தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுமின்றி அமைதியாக இருக்கிறது, இதுவரை எதுவிதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறவில்லை என்று வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சி.டி.கே.சன்ன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் ஆகக் கூடுதலாக 1700 பொலிஸாரைத் தன்னகத்தே கொண்டு இயங்கும் வவுனியா பொலிஸ் நிர்வாகப் பிரிவில் இதுவரை தேர்தல் தொடர்பான வன்முறைகள் எதுவும் எந்தத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தனது பதவிக் காலத்தில் தான் உள்ளூராட்சி, மாகாண சபை, பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட 13 தேர்தல்களை நாட்டின் பல்வேறு பாகங்களில் சந்தித்திருப்பதாகவும் அவற்றைச் பாரிய தேர்தல் வன்முறைகளின்றி சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு தான் சட்டமும் ஒழுங்கையும் கடுமையாக அமுல்படுத்தி அர்ப்பணிப்போடு கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியா நகரத்தில் அபேட்சகர்கள் கட்அவுட்கள் எதனையும் பொருத்துவதற்கு தான் அனுமதியளிக்கவில்லை. ஏற்கெனவே வவுனியா நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரால் பொருத்தப்பட்டிருந்த கட்அவுட் ஒன்று தனது உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னார்.
வடமாகாண மக்கள் சந்திக்கும் முதலாவது மாகாண சபைத் தேர்தல் இதுவென்பதால் தான் மிகவும் கடமைப் பொறுப்புடன் தேர்தல் சட்ட விதிமுறைகளையும், நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்துவதற்கும் தான் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏற்படக் கூடிய எந்தக் கட்சியினரின் குறைநிறைகளையும் செவிசாய்த்துக் கேட்பதற்கும் அதற்குரிய பரிகாரங்களைக் காண்பதற்கும் தான் எந்நேரமும் தயாராக இருப்பதாகவும் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் சொன்னார்.
கனடாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் அறையில் 40 மலைப் பாம்புகள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ட்போர்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு தம்பதியர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு திரும்பாத காரணத்தால் அவர்களின் அறையை சோதனையிட்ட விடுதி ஊழியர்கள் பெரிய பிளாஸ்டிக் பெட்டிகளில் சுமார் 40 மலைப் பாம்புகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இதை தொடர்ந்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து விடுதிக்கு வனவிலங்கு காப்பக ஊழியர்களுடன் விரைந்த பொலிசார் 40 மலைப் பாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் 30 செ.மீ. முதல் 1.4 மீட்டர் நீளம் கொண்டவையாக இருந்தன. ஆரோக்கியமற்ற நிலையில் இருந்த அவற்றை விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மலைப் பாம்புகளை வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது தலைமறைவாகி இருக்கும் அந்த தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் ஆபாச படம், வன்முறை தகவல்கள் இடம்பெற்றுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தொடக்க, நடுநிலை பாடசாலை மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிவியல், பொது அறிவு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு புத்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக புத்தக கடைகளில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆபாச படங்கள், வன்முறை தகவல்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன என்று புகார் எழுந்துள்ளது.
சீனாவில் பீஜிங், குவாங்ஜி உள்பட பல முக்கிய நகரங்களில் விற்கப்படும் புத்தகத்தில் வன்முறையை தூண்டும் விதத்திலும், ஆபாசமான செய்தி, படங்களும் இடம்பெற்றுள்ளன.
அவற்றை தடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சாகச புத்தகங்கள் என்ற பெயரில் வன்முறையை தூண்டும் கதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து பீஜிங் பல்கலை சமூகவியல் துறை பேராசிரியர் ஜியா ஜூயுலுயன் கூறுகையில், சீனாவில் உள்ள புத்தக கடைகளில் குழந்தைகளுக்காக வாங்க கூடிய புத்தங்கள் ஒழுக்கமற்ற கீழ்த்தரமான நிலையில் உள்ளன. அவற்றை தடை செய்ய வேண்டும் என்றார்.
தலைவா டிசைன்களில் இடம்பெற்றிருந்த “Time to Lead” என்ற வாசகத்தை இப்போது நீக்கிவிட்டனர் வெளியீட்டாளர்கள். தலைவா படம் நாளை மறுநாள் (20)வெளியாகும் என்று நேற்று இரவு திடீரென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தகவல் வேந்தர் மூவிசின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு வெளியானது. 300 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான விளம்பரங்களும் இப்போது வெளியாகி வருகின்றன.
ஆரம்பத்திலிருந்து தலைவா பட விளம்பரங்களில் டைம் டூ லீட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் இப்போது இந்த வாசகங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இன்றைய விளம்பரங்கள் அனைத்திலும் வெறுமனே தலைவா என்று மட்டும் உள்ளது! டைம் டு லீட் வாசகங்கள் நீக்கப்பட்டது குறித்து விஜய் தரப்போ, தயாரிப்பாளர் தரப்போ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
விபசார கும்பலிடம் சிக்கி போதை ஊசி போட்டு சித்ரவதை செய்யப்பட்ட சென்னை சிறுமி திருப்பதியில் மீட்கப்பட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலிச்சாமியார் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி கோவில் வளாகத்தில் 14 வயது சிறுமி மாங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த சிறுமி இரவு நேரத்தில் கோவில் வளாகத்திலேயே தங்கினார்.
இந்த சிறுமி யார் எப்படி வந்தார் என்பது தெரியாததால் இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
சென்னையை சேர்ந்த அந்த சிறுமியை ஒரு கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி கொடுமை செய்ததால், அந்த சிறுமி திருப்பதி கோவிலுக்கு வந்து மாங்காய் வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த சிறுமியை ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஆந்திரா பொலிசார் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த சிறுமியை சென்னையிலுள்ள நிர்வாகிகள் மூலம், பொலிஸ் டி.ஜி.பி. ராமானுஜத்திடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் சோக கதையை கேட்டறிந்த டி.ஜி.பி., இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம், அந்த சிறுமி கொடுத்த பரிதாபமான வாக்குமூலத்தின் விவரம் வருமாறு,
என் வயது 14. நான் குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். என் அம்மா என்னை வளர்த்தார். கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி பெரம்பூர், பி.பி. காலனியில் ஆசிரமம் அமைத்து குறிசொல்லும் அறவழி சித்தர் (வயது48) என்பவரிடம் என் அம்மா அழைத்துச் சென்றார்.
அவர் எனக்கு விசேஷ இரவு பூஜை செய்யவேண்டும் என்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய்வதாக கூறி, தனி அறையில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூதியை தடவி, தீர்த்தம் கொடுத்தார்.
நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த கொடூர சம்பவம் நடந்தபோது, என் அம்மா வீட்டுக்கு வெளியில் காத்திருந்தார்.
நான் அழுது கொண்டே வெளியில் வந்து, நடந்த சம்பவத்தை என் அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், ‘சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார்’ என்று அறிவுரை கூறினார்.
இதன்பின்னர், அடிக்கடி என்னை அறவழி சித்தரிடம் என் அம்மா அழைத்துச் சென்றுவிடுவார். அவரும் என்னை அடித்து மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரத் செய்தார்.
பின்னர், அவரது நண்பர்கள் என்று கூறி மத்திய ரயில் நிலையம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும், குமார் என்பவரிடம் ஒப்படைத்தார்.
அவரும் என்னை அடித்து கொடுமை செய்து பலமுறை பலாத்காரம் செய்தார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்படைத்தார். செல்வம் குடிபோதையில் என்னை பலமுறை பலாத்காரத்திற்கு உட்படுத்தினார்.
பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து விபசாரம் செய்ய தொடங்கினார்கள். நான் சுயநினைவில் இருக்கும்போது, விபசாரத்துக்கு செல்ல மறுத்தேன்.
இதனால் நான் மயங்கி விழும் அளவுக்கு என்னை 3 பேரும் அடிப்பார்கள். நான் மயங்கிய நிலையில் இருக்கும்போது, போதை ஊசியை போடுவார்கள். சில நேரம் போதை மாத்திரை கொடுத்தனர்.
நான் போதையில் இருக்கும்போது, பலருக்கு என்னை விருந்தாக்கினார்கள். ஒருமுறை செல்வம், தன் நண்பர்கள் 6 பேருடன் குடிபோதையில் என்னை மெரினா கடற்கரைக்கு அழைத்துச்சென்றார்.
நடுஇரவில் கடல் அலை அடிக்கும் இடத்துக்கு தூக்கிச்சென்று 6 பேரும் குடிபோதை வெறியில் விடியும் வரை என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுபோல் மத்திய ரயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் நபர்கள் பலருக்கு என்னை இந்த கும்பல் விருந்தாக்கினார்கள். தினமும் குறைந்தது 10 பேருடன் என்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய, இந்த கும்பல் பெரும் தொகையை சம்பாத்தியம் செய்தது.
இதில் சிறு தொகையை என் அம்மா சிறுமலருக்கு அந்த கும்பல் கொடுத்தது. எனக்கு அடிக்கடி போதை ஊசி போட்டதால், நான் போதையிலேயே இருந்தேன். எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன்.
ஆனால், அவர் என் நிலையை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் செல்வம், அவரது வீட்டில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார்.
அதிகாலையில் நான் கண்விழித்து பார்த்தபோது, என்னை வைத்து விபசாரம் செய்யும் செல்வம் உட்பட அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
நான் ஓசைப்படாமல் எழுந்து, செல்வம் சட்டைப்பையில் இருந்து 300 ரூபாயை எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன். வெங்கடாசலபதி முன்பு கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தேன். எனக்கு இந்த அசிங்கமான வாழ்க்கை வேண்டாம். உழைத்து சம்பாத்தியம் செய்யக்கூடிய கௌரவமான வாழ்க்கை கொடு என்று அழுதேன்.
பின்னர், கீழ் திருப்பதி வந்து கையில் வைத்திருந்த ரூபாய் மூலம் மாங்காய் வாங்கி, அதை துண்டு துண்டாக வெட்டி, திருப்பதி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன்.
நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை சம்பாத்தியம் செய்தேன். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில் சென்று, அங்கேயே தூங்கிவிடுவேன்.
தினமும் சாமி தரிசனத்துக்கு இரவில் வரிசையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந்தேகப்பட்டு என்னை பொலிசில் பிடித்து கொடுத்துவிட்டனர்.
அவர்கள் மூலம் ‘சைல்டு ஹெல்ப் லைன்’ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்துவரப்பட்டேன். என்னை என் அம்மாவிடம் ஒப்படைக்காதீர்கள். அவர் என்னை மீண்டும் விபசார கும்பலிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு சிறுமி தனது வாக்குமூலத்தில் கூறி, கதறி அழுதார்.
இதையடுத்து, வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விபசார தடுப்பு பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று முன்தினம், சிறுமியின் அம்மாவையும், சிறுமியைக் பலாத்காரம் செய்து, விபசார கும்பலிடம் ஒப்படைத்த அறவழி சித்தரையும் பொலிசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், கைது செய்யப்பட்ட சிறுமலர், அறவழி சித்தர் ஆகியோரை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு பொலிசார் ஆஜர்படுத்தினார்கள்.
அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆர்.சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய லதா, ஜெயா, செல்வம், குமார் ஆகியோரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி அபர்ணா தன்னை மெரினா கடற்கரையில் வைத்து கற்பழித்த 6 பேரை அடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளதால், அவர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
மேரி மார்க்கரெட் வில்லியம்ஸ். இவரது மகள் கேப்பி வில்லியம்ஸ்.
தற்போது இவளுக்கு 8 வயது ஆகிறது. ஆனால் அதற்குரிய வளர்ச்சி இன்றி குழந்தையாகவே இருக்கிறாள். உடலின் தோலும் குழந்தைக்கு இருப்பது போன்றே மிகவும் மென்மையாக உள்ளது.
தற்போது அவர் சுமார் 5 கிலோ எடையே இருக்கிறாள். அவளது உடல் வளர்ச்சி அடையாததன் மர்மம் தெரியவில்லை.
இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்பால்கர் தனது குழுவினருடன் கேப்பி வில்லியம்சின் உடல் வளர்ச்சி பற்றி கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஒருவழியாக தலைவா பிரச்னை தீர்ந்து நிபந்தனை அடிப்படையில் வருகிற 20ம் திகதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது.
விஜய், அமலா பால் நடிப்பில் உருவான தலைவா படத்தினை தமிழகத்தில் வெளியிடுவதற்கு பல சிக்கல்கள் இருந்து வந்தது.
இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிகர் விஜய்யும் இயக்குனர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சொல்லவே இல்லை.
இந்தப் படத்தின் வெளியிட்டிற்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொலிசார் கூறிவிட்டனர்.
ஆனால் படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை.
இதனால் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர். ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யாமல் இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார்.
இந்நிலையில், தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் 300 திரையரங்குகளில் வெளியிட்டுக் காட்டுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன்.
இதனைத் தொடர்ந்து படத்தை வெளியிட விஜய்யும், வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.
தலைவா படமானது வருகின்னற ஒகஸ்ட் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும் இன்று முதல் முன்பதிவு தொடங்கும் எனவும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது.
ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும் சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.
சிட்னியில் முன்னாள் காதலருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பலமுறை கத்தியால் குத்தி கொன்ற குற்றத்திற்காக இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி நகரில், 30 வயது இந்திய பெண்ணான மனிஷா பட்டேல் வசித்து வந்தார். இவரும் ஒரு இளைஞரும் காதலித்து வந்தனர்.
நாளடைவில் இந்த காதல் கசந்துவிடவே, சிட்னியின் பெஸ்டிக் பகுதியில் வசிக்கும் இந்திய பெண்ணான புர்வி ஜோஷியை இந்த இளைஞருக்கு திருமணம் செய்ய நிச்சயித்தனர்.
இந்த செய்தியை அறிந்த மனிஷா பட்டேல் கடந்த மாதம் 30ம் திகதி புர்வி ஜோஷியின் வீட்டிற்கு சென்று அவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜோஷி, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு தொடர்பு செய்த பொலிசார் மனிஷா பட்டேலை விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மனிஷாதான் ஜோஷியை கொலை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்க நீதிபதி மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவபுரத்தில் பெண்ணொருவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கும்பலை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வவுனியா சிவபுரத்தில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பிரதான வீதிக்கு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது முச்சக்கர வண்டியில் வந்து வழிமறித்த மூவரடங்கிய கும்பல் பெண்ணின் கழுத்திலிருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
உடனடியாக அப்பெண் தனக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசியூடாக இது பற்றித் தெரிவித்துள்ளார்.
மேற்படி முச்சக்கர வண்டியைத் துரத்திச் சென்று இளைஞர்கள் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய மூவரரையும் பிடித்துள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சிவில் சமூக அமைப்புக்களின் மன்றங்களைக் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா ஸ்வர்க்கா விடுதியில் ஆரம்பமான இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்டத்தில் வட மாகாண சபைத் தேர்தலுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சிவில் நிறுவனங்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்பும் (இந்த கலந்துரையாடலில் ‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், இணைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, கபே கபே வவுனியா மாவட்ட இணைப்பாளர் ராஜ்மோஹன் சர்மா, கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் கொழும்புப் பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் பகுதி நேர விரிவுரையாளருமான என்.எல். அப்துல் கலாம் வவுனியா மாவட்ட பெண்கள் தொழில் முயற்சியாளர் சங்க செயலாளர் எஸ். ஜிப்ரியா பேகம் ஆகியோர் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தினர்.
சமகால சூழலில் சிவில் சமூக அமைப்புக்களைப் பலப்படுத்தி, அனைத்து சிவில் சமூக அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டி எழுப்புதலின் முக்கியத்துவம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்புப் பற்றியும் இக்கலந்துரையாடலில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
கடும் கோடையிலும், வியர்வை வெளியேறாமல் இருக்கவும் குளுமையை உணரும் வகையிலும் ஏசி ஜாக்கெட் எனப்படும் குளிர்வூட்டும் சட்டையை அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வாளர் வடிவமைத்துள்ளார்.
கோடை காலங்களில் நிலவும் கடும் வெப்பத்தால், மக்கள் வெளியில் செல்ல தயங்குகின்றனர். மீறிச் செல்பவர்கள், வியர்வையில் நனைந்து அவதிக்குள்ளாகின்றனர். வெப்பம் தாங்காமல் அலுவலகம் அல்லது வீட்டிலேயே பெரும்பாலும் முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவுகிறது.
இதற்கு தீர்வு காண எண்ணிய, அவுஸ்திரேலிய ஆய்வாளர், வில்லியம் ஸ்ட்ரோக், தன் நீண்ட நாள் ஆய்விற்குப் பின், “ஏசி´ உடையை வடிவமைத்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட், 200 கிராம் எடை கொண்டது. மிகவும் குறைந்த எடை உடையதாக இருப்பதால், இதை அணிவது சுமையாக இருக்காது. குண்டு துளைக்காது, மிக மெல்லிய இழைகளால், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட், காற்றை மறு சுழற்சி செய்து, உடலில் வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்காமல் தடுக்கிறது.
வெப்பநிலையை குறைத்து, அதை நிலைநாட்டுகிறது. இதனுடன், கைக்கடிகாரம் போன்ற, சிறிய அளவிலான கருவி ஒன்றும் தரப்படும். இது, ஜாக்கெட்டின் செயல்பாட்டை, கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது.
மெல்லியதாக இருந்தாலும், குண்டு பாயாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வெயில் நேரங்களில் தெருக்களிலும், எல்லைப் பகுதியில் காவல் புரியும், பொலிசார் மற்றும் ராணுவ வீரர்களும் இந்த உடையை அணியலாம். இதன் மூலம், அவர்கள் விரைவில் சோர்வடைவது தவிர்க்கப்படும்.
சுறுசுறுப்புடன் நீண்ட நேரம் பணி புரியவும் இந்த உடைகள் உதவி புரியும். இந்த “ஏசி´ சட்டைக்கு, “க்ளிமா ஜாக்´ என, பெயரிடப்பட்டு உள்ளது. இந்த ஜாக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ள கைக்கடிகாரம் போன்ற கருவி, இதை அணிபவரின், இதயத் துடிப்பு, சுவாசம் மற்றும் உடல் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றையும் கண்காணிக்கிறது. இவ்வாறு, வில்லியம் கூறினார்.
சீனர்களுக்கு விலங்குகளை உயிருடன் சமைத்து உண்பது மிகவும் பிடிக்குமாம். இந்த வீடியோவைப் பாருங்கள், சமைத்து தட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவு துடித்துக் கொண்டிருக்கிறது.