ஈராக் நாட்டின் சிறைக்கைதிகளில் 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக நேற்று அந்நாட்டின் அரசு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச மனித உரிமைக் கழகங்களின் தொடர் வேண்டுதலையும் ஒதுக்கிவிட்டு ஈராக் இந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
அரசு இணையதளத்தில் நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈராக் நாட்டவர் 15 பேருக்கும், எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மக்களுக்கு எதிரான தீவிரவாதக் குற்றங்களுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு குற்றவாளியும் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக தூக்கு தண்டனையைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருவர் பெண்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த செய்தியில் தண்டனை நிறைவேற்றப்பட்ட காலத்தினைப் பற்றிய தகவல் தரப்படவில்லை. இந்தத் தீர்ப்பினையும் சேர்த்து இதுவரை, இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 67 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003 ஆம் ஆண்டில்,ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படைகளின் உதவியுடன் பதவி இறக்கம் செய்யப்பட்டபின், அந்நாட்டில் மரணதண்டனைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால், 2004ஆம் ஆண்டு மாற்று அரசாங்கம் அமைந்ததிலிருந்து மீண்டும் இத்தகைய தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் ஈராக் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பொது மன்னிப்பு சபையின் கருத்துப்படி, மரண தண்டனைகளை நிறைவேற்றுவதில் ஈராக் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. சீனா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. குற்றவாளிகளுக்கு நியாமான தீர்ப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து அமெரிக்காவின் மனித உரிமைக் கழகமும் கேள்வி எழுப்பியுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹாக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.
நான் பேட்மின்டனின் தீவிர ரசிகை என்கிறார் நடிகை டாப்ஸி.
பாலிவுட்டில் புகழ் பரவியதால் அளவிட முடியாத மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை அமலாபால்.
ஏ.ஆர்.முருகதாஸ், ஃபோக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கும் ராஜா ராணி படத்தின் விளம்பர ஸ்டண்டுகள் நயன்தாரா, ஆர்யா திருமணம் பற்றியதாகவே தொடர்ந்து இருக்கிறது.
ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 27ம் திகதி வருகைதரவுள்ள நிலையில் ஐ.நாடுகள் சபையின் யாழ்.அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக காணாமல்போனவர்களின் உறவுகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு சுதந்திரமாக நாட்டின் எப்பிரதேசத்திற்கும் சென்றுவர வாய்ப்பளிக்கப்படும்.
தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான். சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்த விஜய் சேதுபதி அதை தொடர்ந்து தொடர்ச்சியாக 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விரோத மனப்பான்மையுடன் பேசுவதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஹோமாகம பிரதேசத்தில் தாயற்ற இரண்டு பிள்ளைகளை, காவல்துறை நிலையத்திற்கு அருகாமையில் கைவிட்டுச் சென்ற பிள்ளைகளின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பாண் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மீது இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார்.
மலேசியாவில் பல இடங்களில் துப்பாக்கி சூடு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வந்ததால் குற்றவாளிகளை பிடிக்க மலேசிய பொலீசார் தீவிர வேட்டை நடத்தினார்கள்.
சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள லிங்ஷு நகரை சேர்ந்தவர் குயோ ஷென்ஸி. பொலீஸ்காரராக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இவர் கரோகி பகுதியில் உள்ள பாரில் தனது நண்பர்களுடன் மது குடித்தார்.
கொழும்பு பங்குச்சந்தை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொழும்பு பங்குச்சந்தை பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல், பங்குத்தரகர் நிறுவனங்கள் மற்றும் அலகுப்பொறுப்பாட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்தல் தொடர்பான விபரங்களை பொது மக்களுக்கு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் தினம் 2013 நிகழ்வு வவுனியா நகரில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.