
ஜோன்ஆபிரகாம் நடித்த மெட்ராஸ் கபே படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23ம் திகதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதில் ஜோன் ஆபிரகாம் இந்திய “ரோ” அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர்.
இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜோன் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடித்ததற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் விடுதலை போராட்ட வீரன். தமிழர்களின் அடையாளம். அப்பாவி சிங்களர்களை பிரபாகரன் கொன்றது இல்லை. பிரபாகரனை தீவிரவாதியாக்கி மெட்ராஸ் கபே படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தில் பிரபாகரன் வேடத்தில் அஜய்ரத்னம் நடிக்க ஒப்புக்கொண்டது கண்டிக்கத்தக்கது.
இதில் நடிக்க மாட்டேன் என்ற அவர் மறுத்து இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. அஜய்ரத்னம் படங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இயக்குனர்கள் புதுப்படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்.




மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைக்கால் அமில வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.




நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மலேசிய அரசு சாரா தமிழ் இயக்கங்களின் முடிவின்படி தயாரிக்கப்பட்ட “மெட்ராஸ் கபே” படத்தை மலேசியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதம் இன்று மலேசிய உள்துறை அமைச்சுக்கும், மலேசிய திரைப்படத் தணிக்கை வாரியத்திற்கும் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஐபோன்கள் குளிர்சாதனப்பெட்டிகளை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்வது தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.