இந்தாண்டே வெளியாகும் கோச்சடையான்!!

Rajini Kochadaiyaan First Look Posters

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. கோச்சடையான் படம் டிராப்பாகி விட்டதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் உலவின.

சென்ற வாரத்தில் கூட ஷங்கர் ரஜினியை சந்தித்து படம் குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்திகள் அத்தனையும் பொய்யாக்கி இருக்கிறது கோச்சடையான் படக்குழு.

கோச்சடையான் படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறியிருப்பது ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார், ஸ்பீல்பெர்க் இயக்கிய டின் டின் ஆகிய படவரிசையில் கோச்சடையான் படம் மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. அவதார், டின் டின் ஆகிய இரண்டு ஹாலிவுட் படங்களும் தலா ரூ.2 ஆயிரம் கோடி செலவில், நான்கு வருடங்களில் தயாரானவை.

கோச்சடையான் படத்தை நாங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 125 கோடி செலவில் இரண்டு வருடங்களில் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் கிராபிக்ஸ் வேலைகளும் நவீன தொழில்நுட்பங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோச்சடையான் படம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய முயற்சி. நிச்சயமாக இந்த படத்தை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து பாராட்டுவார்கள். இளமையான தோற்றத்தில் ரஜினிகாந்த் செய்திருக்கும் சாகசங்கள் பரபரப்பாக பேசப்படும்.

கோச்சடையான் படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு அசந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமே பார்க்காதவர்கள்கூட இந்த படத்தை இரண்டு முறை பார்ப்பார்கள் என்று கூறினார். இயக்குனர் சவுந்தர்யா மிகத்திறமையாக ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு, எடிட்டிங் பணிகள் முடிவடைந்தன. பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஸ்பெஷல் எபக்ட்ஸ் வேலைகளும் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் எல்லா வேலைகளும் முடிவடைந்துவிடும்.

படம் திரைக்கு வரும் தேதி பற்றி ஒக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும். கோச்சடையான் படம் இந்த ஆண்டில் கண்டிப்பாக திரைக்கு வரும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் தனிமையில் இருந்த தங்கை!!

dead

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் ஐந்து நாட்கள் தனிமையில் இருந்துள்ளார் தங்கை ஒருவர்.
இந்தநிலையில் குறித்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பியுள்ளனர்.

போபால் நகரின் புது மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான ராதா அகர்வால், அவரது சகோதரி 42 வயதான சரஸ்வதி ஆகியோர் அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கிருந்து யாரிடம் இருந்து வருகின்றது என்பதும் புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆண் துணை ஏதுமின்றி தனிமையில் வசித்த இவர்கள் அக்கம் பக்கத்தினருடன் அதிகமாக தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இவர்களின் வீட்டில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதை சகித்துக்கொள்ள முடியாத அந்த குடியிருப்புவாசிகள் பொலிசில் தெரிவித்தனர்.

பொலிசார் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது உள்ள ராதா அகர்வால் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். சகோதரியின் சடலத்தின் அருகே தன்நிலை மறந்த நிலையில் அமர்ந்திருந்த சரஸ்வதியை தேற்றிய பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராதா அகர்வால் 5 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று கூறிய பொலிசார், அவர் எப்படி இறந்தார் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.

ராதா அகர்வாலின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக அக்கம்பக்கத்தினர் கருதுவதால் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதையும் தெளிவாக கூற முடியும் என கூறியுள்ளனர். பொலிசார் அளித்த தகவலையடுத்து இந்தூரில் இருந்து வந்த அவர்களின் சகோதரர் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

pak

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

ஐந்தாவது போட்டியில் கடும் சவால்களுக்கு மத்தியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை தன்வசப்படுத்தியது.

க்ரோஸ் ஐஸ்லெட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஹமட் ஷெஷாட் 64 ஓட்டங்களையும் மிஸ்பா உல்ஹக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவானார்.

கைத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

sim

கைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் அட்டைகளை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டு வரும் சிம் அட்டைகளின் தொழில்நுட்பம் பழமை வாய்ந்தவையாகக் காணப்படுவதுடன், அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும் போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு மென்பொருள் பொருளியலாளர் கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில்,

என்னிடம் ஏதாவது ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள் நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் அட்டையினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கைப்பேசி சேவை வழங்குனர்கள் சிம் அட்டைகள் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஸ்பெயினில் ரயில் தடம்புரண்டு 70 பேர் உயிரிழப்பு!!(படங்கள்)

ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் எழுபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மட்ரிட் நகரத்துக்கும் ஃபெர்ரோல் நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த ரயில்சந்தியானோ த கொம்போஸ்தலா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திலிருந்து தடம் மாறியது.

விபத்துக்குள்ளான நேரத்தில் அந்த ரயிலில் 220 பேர் பயணம் செய்தனர்.
ஸ்பெயினைப் பொறுத்தவரை பல தசாப்தங்களில் இல்லாத மிகப் பெரிய ரயில் விபத்து இது.

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் சம்பவ இடத்தைச் சென்று பார்வையிடவுள்ளார். அவர் சந்தியாகோத கொம்போஸ்தலாவில் பிறந்தவர்.

அந்த ஊரில் இன்று வியாழனன்று வருடாந்த கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை முன்னிட்டு கத்தோலிக்க யாத்ரீகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த விபத்தினால் வைபவ நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

train crash  3 4 Injured ictims are helped from the scene of the crash outside Santiago de Compostela.

26

அஜித்தின் 53வது படத்தின் பெயர் வெளியானது..!

ajithகொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஆரம்பம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க கதையின் கருவுக்கு ஏற்றவாறு தற்போது ‘ஆரம்பம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எங்கள் ரத்தத்தைக் உறிஞ்ச வந்த புதிய அட்டை வில்லியமின் குழந்தை – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!!

russia

ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை நான் பார்க்கிறேன். இந்தக் குழந்தையை நான் வெறுக்கிறேன் என்று கடுமையாக பேசியுள்ளார் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் விலாடிமிர் ஜிரினோவ்ஸ்கி.

ரஷ்யர்களின் ரத்தத்தை மேலும் உறிஞ்சுவதற்காகத்தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் அவர் வர்ணித்துள்ளார். ரஷ்ய அரசியலில் கரடு முரடான அரசியல்வாதியாக வலம் வரும் ஜிரினோவ்ஸ்கி இப்படிப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜிரினோவ்ஸ்கி கூறுகையில் 21ம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் குழந்தையாக இது இருக்கப் போகிறது. எனவே இதன் பிறப்பை ரஷ்யர்கள் கொண்டாடக் கூடாது, வரவேற்கக் கூடாது.

இந்தக் குழந்தை பிறப்பு குறித்து நான் கவலைப்படவே இல்லை. இது ரஷ்யர்களை அழிக்க வந்துள்ள குழந்தை. ரஷ்யாவை அழித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். எனவேதான் இந்தக் குழந்தையின் பிறப்பை எங்களால் கொண்டாட முடியவில்லை. எங்களது ரத்தத்தைக் குடிக்க வந்திருக்கும் புதிய அட்டையாகத்தான் இந்தக் குழந்தையை நான் பார்க்கிறேன் என்றார் அவர்.

ஆனால் வில்லியமுக்குப் பிறந்த குழந்தையை வரவேற்றுள்ளது ரஷ்ய அரசு. இதுதொடர்பாக வில்லியமின் பாட்டியான ராணி எலிசபெத்துக்கு ரஷ்ய அரசு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ராஜ குடும்பங்களுக்கு இடையே முன்பு உறவு இருந்தது. இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் மூலமாக வந்த உறவு இது. இவர் இரண்டாம் ஜோர் மன்னன் நிக்லஸின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார்.

1917ம் ஆண்டு ரஷ்யாவில் ரோமனோவ் வம்சம் அழிந்ததற்குக் காரணமே ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர்தான் என்பது பல ரஷ்யர்களின் குற்றச்சாட்டாகும். 2ம் ஜோர் மன்னன் நிக்லஸ் அந்த சமயத்தில் ரமனோவ் வம்சத்தின் ஆட்சியை எடுத்து நடத்த முடியாத நிலையில் இருந்தார்.

இதையடுத்து தனது சகோதரரான இங்கிலாந்தின் இளவரசர் மிக்கேல் அலெக்சாண்ட்ரோவிச்சிடம் ஆட்சியை ஒப்படைத்தார். அதன் பிறகு ஆளுநரை நியமித்தார் மிக்கேல். அத்தோடு ரோமனோவ் வம்த்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது என்பது வரலாறு.

ராஞ்ஜனா 100 கோடி வசூல் – முதல் படத்திலேயே தனுஷ் சாதனை!

ranjana

தனுஷ் – சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்ஜனா 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது.

தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் இந்த ராஞ்ஜனா. ஆனந்த் எல்ராய் இயக்கியிருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்தார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஓராண்டாக தயாரிப்பிலிருந்த ராஞ்சனா கடந்த மாதம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. காதல் – அரசியல் கலந்த இந்தப் படத்து நல்ல ஆரம்பம் கிடைத்தது.

படத்தை வட இந்திய மீடியாக்கள் கொண்டாடின என்றால் மிகையல்ல. குறிப்பாக தனுஷ் நடிப்பை பாராட்டின. இந்த ஆண்டும் அவருக்குத்தான் தேசிய விருது என்றெல்லாம் எழுதின. அதற்கு தான் தகுதியானவர்தான் என தனுஷும் படத்தில் நிரூபித்திருந்தார்.

தமிழில் இந்தப் படம் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்துக்கும் சிறப்பான ஆரம்பம் கிடைத்தது தமிழகத்தில். முதல் மூன்று நாட்களில் 2 கோடி வரை இந்த டப்பிங் படம் வசூலித்தது.

ராஞ்ஜனா படம் உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் ஓரளவு திரையரங்குகள் பிடித்திருந்தனர். படத்தின் வெற்றி கூடுதல் அரங்குகளில் படத்தை வெளியிட வைத்தது. இந்தியாவில் உபி, டெல்லி, பீகார் பகுதிகளில் படம் சூப்பர் ஹிட்.

ஒரு படத்தின் வசூலை நிர்ணயிக்கும் பெரிய ஏரியாக்கள் இவை. மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேஷிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. வட மேற்கு இந்தியாவில் இந்தப் படம் அதிக அரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இதன் விளைவு வெளியான மூன்று வாரங்களில் ரூ 100 கோடியை குவித்துள்ளது ராஞ்ஜனா.

படத்தின் இந்த பிரமாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்கிறார்கள் நடிகர் தனுஷ். அவரைப் பொறுத்தவரை, கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பெரிய வெற்றி இந்த 100 கோடி!

அவுஸ்திரேலியா சென்ற படகு விபத்து – மூன்று இலங்கையர்கள் உட்பட 9 பேர் பலி..!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதில் இரு பெண்கள் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மரணமானவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.

இந்தப் படகில் பயணம் செய்த 204 பேரில், 189 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை, ஈரான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த மேலும் ஆறு அகதிகள் காணாமற்போயுள்ளனர்.

மேற்கு ஜாவாவில் உள்ள சிடான் நகருக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் மாலை இந்தப் படகு கடலில் மூழ்கியது.

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால், பயணத்தை ஆரம்பித்த 9 மணி நேரத்தில் இந்தப் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது.

இதையடுத்து சில அகதிகள் உயிர்காப்பு படகில் ஏறித்தப்பினர்.

பலர் கடலில் குதித்து நீந்திய போது, மீனவர்களாலும், இந்தோனேசிய பாதுகாப்பு துறையினராலும் காப்பாற்றப்பட்டனர்.

அதேவேளை இந்தப் படகில் பயணம் செய்த 44 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

மீட்கப்பட்ட ஒருவர் தகவல் வெளியிடுகையில், உயிர்தப்பிய அகதிகள் அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் தப்பியிருக்கலாம் என்பதால், காணாமற்போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஈரான் பெண் ஒருவரும் மரணமானதாகவும், சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் குடிவரவு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Aussie1

Aussie2Aussie3Aussie4Aussie5

 

வவுனியா புளியங்குளம் வாகனவிபத்தில் இறந்தவர் அடையாளம் காணப்படவில்லை..!

bodyவவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த புளியங்குளம் பிரதேச போலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜமால் அவர்கள்,

மரணமடைந்தவர் சும்மார் 50 வயதுகள் மதிக்கத்தக்கவர் என்றும் இவர் 5 அடி 8 அங்குலம் உயரமுடையவர் என்றும் தெரிவித்தார். இவரது சடலம் வவுனியா பொது வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

17 வயது மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை – வவுனியா கூமாங்குளத்தில் சம்பவம் ..!

suicideவவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த  வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், கிணற்றுக்குள் குதித்தமையால் நீரில் முழ்கி இம் மரணம் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாண சபை வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்..!

votingவடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

இன்று முதல் எதிர்வரும் முதலாம் திகதி 12 மணி வரை அரசியல் கட்சிகள் தமது மனுக்களை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி மதியம் 12 மணிவரை சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தினை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தேர்தல்கள் செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்படும்.

இதேவேளை, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு சகல தேர்தல் செயலகங்களை அண்டிய பகுதிகளிலும் கடும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்து ஓவியக் கண்காட்சியில் இந்தியப் பெண் விஞ்ஞானியின் ஓவியம்

ind

இங்கிலாந்தில் உள்ள பெருமை வாய்ந்த ராயல் சொசைட்டி நிறுவனம் கோடைக்கால அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வருகின்றது. இதில் சமூகம் மற்றும் அறிவியல் தொடர்பான பல்வேறு வகைப்பட்ட செயல்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் செயல்பாடுகளையும், அறிவியல் விஞ்ஞானிகளின் ஓவியங்களையும் கண்காட்சியில் வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி அந்நாட்டில் உள்ள உடா பிரித் என்ற மனவியல் நிபுணர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஓவியக் கண்காட்சியில் கொல்கத்தாவில் பிறந்த சுனேத்ரா குப்தா என்ற விஞ்ஞானியின் ஓவியமும் இடம் பெற்றுள்ளது. இவர் பௌதிகம் மற்றும் ரசாயனத் துறைகளில் தேர்ச்சி பெற்று, தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.

விலங்கியல் துறையில் பணிபுரியும் இவர், ராயல் சொசைட்டி நிறுவனம் மூலம் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். மலேரியா, இன்ப்ளுயன்சா மற்றும் மூளைக் காய்ச்சல் போன்றவை பரவுவதில் தொற்றுநோய்க் கிருமிகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிகளில் தற்போது இவர் ஆய்வு நடத்தி வருகின்றார்.

மேரி கியூரி போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் தனது ஓவியமும் இடம்பெறுவது பற்றி இவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். விஞ்ஞானமுறைகளைப் புரிந்து மேம்படுத்தும் அறிவியல் திட்டங்களில் பெண்களின் பங்கு வளர்ந்து வருகின்றது. இதன் அடிப்படையில் தானும் பங்காற்றுவது குறித்து மிகவும் பெருமை அடைவதாக சுனேத்ரா தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி சுனேத்ரா ஐந்து சிறந்த நாவல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

சுற்றுலா சென்று திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

canada woman

அப்பிள் நிறுவனத்தின் ஐடியூன் சேவைக்கு சுமார் 3000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளின் தாயான பவுலா மார்னர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அத்துடன் அயலவர்களை பிரமிப்படையச் செய்துள்ளார்.

கனடாவை சேர்ந்த இவர் எந்தவொரு கணனி அப்பிளிக்கேஷன்களையும் பணம் கொடுத்து வாங்கக்கூடாது என்று தனது பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தெரிவித்துள்ளதுடன் அயலவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துள்ளாராம்.

இங்கிலாந்திற்கு சுற்றுலா ஒன்றிற்கு சென்ற வேளையில் தனது மகன்மார் இருவரையும் ஐபொட், ஐபேட் என்பவற்றினை பயன்படுத்தி இலவசமாக கிடைக்கும் ஹேம்களை விளையாட அனுமதித்துள்ளார்.

இதேவேளை 7 வயதான குழந்தைகள் இருவரும் தம்மை அறியாமலேயே சில அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்வதற்கு பணம் செலுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

சுற்றுலாவை முடித்துக்கொண்டு மீண்டும் கனடாவிற்கு திரும்பிய பவுலாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, ஐடியூனில் அப்பிளிக்கேஷன்களை 3000 டொலர் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்தமைக்கான பற்றுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது.

ரயில் பெட்டியின் அடியில் சிக்கி கொண்ட பெண் அதிஷ்டவசமாக உயிருடன் மீட்பு!!

ஜப்பானில் ரயில் பெட்டியில் இருந்து இறங்கும் போது ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்தும் இடையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே விரைந்து வந்த ரயில் நிலைய அதிகாரிகள் சக பயணிகளின் உதவியுடன் குறித்த பெண்ணை உயிருடன் மீட்டனர். 32 டன் எடையுள்ள ரயில் பெட்டியை 40 பயணிகளும், சக ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து சாய்த்து குறித்த பெண்ணை ரயில் அடியில் இருந்து பிளாட்பாரத்துக்கு இழுத்தனர்.

கடுமையான போராட்டத்திற்கு பின் பெண் எவ்வித பாதிப்புமின்றி மீட்கப்பட்டார்.இதனால் 8 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

r1 r2

நயன்தாராவைப் பயமுறுத்தும் நஸ்ரியா!

nayantharaதன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் – இந்த மூன்று கொள்கைகளையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.

இருந்தாலும் நயனின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தபடி தான் இருக்கிறது. ஹீரோ சரியில்லை, கதை சரியில்லை என பல படங்களைத் தவிர்த்து விடுகிறார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நயன்தாரா போலவே இருக்கும் நஸ்ரியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

போதாக்குறைக்கு அடுத்த நயன்தாரா நஸ்ரியா தான் எனவும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக வெளியில் சொல்லி வருகின்றனர். ஏற்கெனவே நயன்தாரா போலவே இருக்கிறார் என நஸ்ரியா அறிமுகமானபோது வந்த விமர்சனங்களைப் பார்த்து கடுப்பானார் நயன்.

இப்போது ஆர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளதால், எங்கே தனக்கு வரும் வாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக பறித்து விடுவாரோ என பயத்தில் இருக்கிறாராம் நயன்.