
அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார். தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை.
காரணம் பல மாடிப் படிகளை ஏறிக் கடக்க முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். நடந்து நடந்து காலெல்லாம் புண்ணாகி பார்க்கவே படு பரிதாபமாக இருக்கிறது இவரது நிலை. அந்த பரிதாபத்துக்குரியவரின் பெயர் ரிட்சி டோயில். 44 வயதாகும் இவர் பான்ட்ரி என்ற ஊரில் வசித்து வருகிறார்.
தனக்கு கீழ்த்தளத்தில் ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்குமாறும் அவர் நகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். படியே இல்லாத வீடாக இருந்தால் ரொம்பப் புண்ணியமாகப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கூட இவரால் நடக்க முடியாதாம். அப்படியே நடந்தாலும் உடனே ஒட்சிசன் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமாம். கடந்த ஒரு வருடமாக மாடியில் உள்ள வீட்டுக்குப் போக முடியாமல் படியிலேயே கழித்து வருகிறார் இவர்
தனது நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறும் டோயில் தனக்கு கீழ்த்தளத்தி்ல இருப்பது போல வீடு கிடைத்தால் நல்லது என்று அதற்காக விண்ணப்பித்து போராடி வருகிறார். மாடிப் படியிலேயே தங்கியிருப்பதால் சாலையில் போகும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு வேறு இவரை சிரமப்படுத்தி வருகிறதாம்.
தனது உடலில் கார்பன் மோனாக்சைட் விஷம் ஏறி வருவதாக வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் சொல்கிறார் டோயில். கீ்ழ்த்தளத்தில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே அவர் நடந்து போகிறார். மற்றபடி மறுபடியும் படியிலேயே வந்து செட்டிலாகி விடுகிறார்.
தற்போது அயர்லாந்தில் பயங்கர வெயில் காலம். எனவே காற்று இல்லாமல் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறாராம் ரிட்சி. அது வேறு இவரை கஷ்டப்படுத்துகிறதாம்.














நான் ஈ நாயகன் நானிக்கு, தன் ஆதர்ச நடிகர் கமல்ஹாஸனைச் சந்திக்க வேண்டும் என்று சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே ஆசையாம். ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை.
கொலிவுட்டில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நவ்யா நாயர் தனது தம்பி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் சொன்னா புரியாது நடித்துவரும் சிவா, தனக்கு போட்டி ஷாருக்கான் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு223 ஓட்டங்கள் எடுத்தது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகரான தனுஷ், தற்போது தமிழிலும் இந்தியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.
சுமார் பத்தாயிரம் இலங்கை பணியாளர்கள் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.