ஜப்பான் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி அபாரம்!!

srilankan

மகளிருக்கான உலக 20-20 தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் மகளிர் அணிக்கெதிராக இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டப்ளினில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் மகளிர் அணி 18.1 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

முதலாவது பந்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த ஜப்பான் மகளிர் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 11 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 8ஆவது விக்கெட்டுக்காக 8 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் ஜப்பான் மகளிர் அணி சார்பாக அயாகோ நாகாயமா 37 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீராங்கனையும் 2 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சண்டிமா குணரத்ன 4 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஸ்ரீபாலி வீரக்கொடி 3 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை இலங்கை மகளிர் அணி 1.4 ஓவர்களில் இலகுவாக அடைந்தது. இலங்கை சார்பாக யசோதா மென்டிஸ் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும், சாமரி அத்தப்பத்து 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகியாக இலங்கை சார்பாக 2 விக்கெட்டுக்களையும், 2 ரண் அவுட் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திய இஷானி கௌஷல்யா தெரிவானார். இப்போட்டியின் முடிவையடுத்து இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தகுதிபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவையான ஆந்திரா பாகற்காய் குழம்பு!!

bittergourdcurry

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள கசப்புத் தன்மையால் உடலில் தங்கியுள்ள பூச்சிகள் அனைத்து வெளியேறி சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

அதிலும் இந்த பாகற்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அந்த வகையில் இப்போது ஆந்திரா ஸ்டைலில் எப்படி பாகற்காய் குழம்பு வைப்பது என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 4-5 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 மேசைகரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
எள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பசை – 2 தேக்கரண்டி
உள்ளி பசை – 2 தேக்கரண்டி
தக்காளி சாறு – 1/4 கோப்பை
சீனி – 2 மேசைக்கரண்டி
புளிச்சாறு – 2 மேசைகரண்டி

செய்முறை..

முதலில் பாகற்காயை நீரில் கழுவி விட்டு அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு வேண்டிய அளவில் நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து கிளறி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து தீயை குறைத்து வைத்து, பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மெதுவாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு 4-5 நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி மற்றும் உள்ளி பசையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, சீனி , புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து 1 கோப்பை தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி.

அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா!!

cinema

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார்.

அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார். இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன், டி.கே.ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கை எய்தி இசை உலகில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.

50 படங்களை இயக்கிய மணிவண்ணன் மரணத்தை முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ராசுமதுரவன் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு பலியானார். ஜெமினி லேப் ஆனந்த் சினி சர்வீஸ் நிர்வாகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டது சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து 50 வருடங்கள் தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்த காவியக் கவிஞர் வாலி நம்மை விட்டுச் சென்றது சினிமாவில் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த துக்கம் முடிவதற்குள்ளாகவே மஞ்சுளாவை சினிமா இழந்தது. இப்படி அடுத்தடுத்து சினிமா ஜாம்பவான்கள் மறைந்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மரணம் கடவுளின் கையில் என்றாலும் அடுத்தடுத்து அதை சந்திப்பதால் அது கலைஞர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடையை குறைக்க ஹன்சிகா தீவிரம்!!

Hansika

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குபின் ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹன்சிகாவுக்கு மள மளவென்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தன.

சில இயக்குனர்கள் ஹன்சிகாவின் குண்டான உடம்பை குறைக்குமாறு அறிவுறுத்தினர். அதனால், மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தும், மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சேட்டை படத்தில் காட்சியளித்தார்.

அதையடுத்து உடற்பயிற்சியை நிறுத்தியதால் இப்போது மீண்டும் உடல் குண்டாகி விட்டதாம். இதனால், மறுபடியும் தீவிர பயிற்சி மூலம் 10 கிலோ வரை எடை குறைந்துள்ள அவர் உடம்பை சீராக வைத்திருக்க தினமும் நீச்சல் பயிற்சி எடுக்கிறாராம். மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள யோகா பயிற்சியும் செய்கிறாராம்.

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை பல மாதங்களாக கற்பழித்த 2 ஆசிரியர்கள்!!

glrl

இந்திய ஹரியானா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் துத்வா கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை அவர் படிக்கும் அரசு பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் பல மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர்கள் யாருக்கும் தெரியாமல் 2 மருத்துவ தாதிகளின் உதவியுடன் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். கருகலைப்பு செய்த பிறகு சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தான் அவரது குடும்பத்தாருக்கு நடந்த விவரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரும் கிராமத்தினரும் அவர் படித்த பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக்குள் சில ஆசிரியர்களை பூட்டி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த 2 ஆசிரியர்களில் ஒருவர் விளையாட்டு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் ஆசையில்லை இயக்குனர் ஆகப் போகின்றேன் : கீர்த்தனா பார்த்திபன்!!

keerthana

சினிமாவில் மிகச்சிறந்த இயக்குநராக உருவாவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபனின் மகளும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான கீர்த்தனா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை கதாநாயகியாக அறிமுகமானவர் பார்த்திபன்-சீதா நட்சத்திர தம்பதிகளின் மகள் கீர்த்தனா. விரைவில் கதாநாயகியாக வலம் வருவார் என சினிமா வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க இயக்குநராவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார் கீர்த்தனா.

என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும் அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன். 5வது வகுப்பு படிக்கும்போது மணிரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப்பாவும் சம்மதித்தார்.

இப்போது கதாநாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்ததற்காக பாராட்டுகள் கிடைத்தன.
அதன் பிறகு எனக்கு நடிக்க விருப்பம் இல்லை.

இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளேன் என இவ்வாறு கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வெற்றிப் பயணம் தொடருமா??

sl

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே தென்னாப்பிரிக்கா 180 மற்றும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது. தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிப்பதற்கு இந்த மோதலில் தென்னாப்பிரிக்கா கட்டாயம் வென்றாக வேண்டும். ஆனால் இலங்கை மண்ணில் அந்த அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் நிலை படுமோசமாக இருக்கிறது.

1993ம் ஆண்டில் இருந்து இங்கு தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் தென்னாஆப்பிரிக்கா தோற்று இருக்கிறது. இந்த நீண்ட கால சோகத்துக்கு இந்த போட்டியிலாவது தென்னாப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பார்க்கலாம். முந்தைய போட்டியில் காயமடைந்த அம்லா இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக குயின்டான் டி காக் இடம் பெற வாய்ப்புள்ளது.

இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியமல்ல. முத்தரப்பு தொடரின் போது மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி 2 போட்டிக்கு தடை விதிக்கப்பட்ட இலங்கை அணியின் தலைவர் மத்யூஸ் இந்த போட்டிக்கு திரும்புகிறார். அவரது வருகை இலங்கை அணிக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.

அதே நேரத்தில் கடந்த போட்டியின் போது விரலில் காயமடைந்த திரிமான விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இந்த போட்டியுடன் தொடரை முடித்து விட வேண்டும் என்பதில் இலங்கை அணி தீவிரமாக இருக்கிறது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடலாம் எனவும் எனவே 2வது சுழற்பந்து வீச்சாளராக அஜந்த மென்டிஸ் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் மத்யூஸ் தெரிவித்தார்.

காதலை கைவிட மறுத்த தங்கையைச் சுட்டுக் கொன்ற அண்ணன்!!

dead

உத்திரப்பிரதேசத்தில் காதலைக் கைவிட மறுத்ததால் குடும்ப கௌரவம் கருதி தங்கையை சுட்டுக் கொன்று ரகசியமாக புதைத்த அண்ணனை போலீசார் தேடி வருகின்ரனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கங்கேரு கிராமத்தை சேர்ந்த சய்மா என்ற 17 வயது பெண் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். சங்மாவின் காதல் விவகாரம் அறிந்த அவரது குடும்பத்தினர் காதலர்களை எச்சரித்து வந்துள்ளனர்.

ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாத காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்மாவின் அண்ணன் ராசாகான், நேற்று இது குறித்து தங்கையோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

குடும்ப கௌரவத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் காதலித்து வரும் சங்மாவை, ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளான் ராசாகான். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் சங்மா. ஊருக்கு தெரியா வண்ணம் சங்மாவின் பிணத்தை, வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளனர் குடும்பத்தினர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து புதைக்கப்பட்ட சங்மாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ராசாகானை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

jail

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின் படகில், இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த உஷா என்ற 32 வயது பெண்ணும் அவரது 6 வயது மகள் நீராவும் கள்ளத்தனமாக ஏறி ராமேஸ்வரம் சென்றனர்.

இருவரையும் கடவுச்சீட்டு சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதமாக மண்டபம் முகாமில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று ராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உஷாவிற்கு 50 ரூபாய் அபராதம் விதித்தும், விடுதலை செய்தும் நீதவான் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து இருவரும், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை மிரட்ட காத்திருக்கும் இந்திய அணி- ரோட்ஸ் எச்சரிக்கை!!

jonty

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேகப் பந்து வீச்சை சந்திக்க பயப்படுவதே இல்லை என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான ஜொன்டி ரோட்ஸ். களத்தடுப்பில் பிரபலமானவர் ரோட்ஸ்.

இந்த நிலையில் அவர் இந்திய வீரர்களின் துடுப்பாட்ட திறமையை புகழ்ந்து பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ள நிலையில் வேகப் பந்து வீச்சுக்கு பிரபலமான தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் இந்தியர்கள் திறமையாக விளையாடுவார்கள் என்றும் கணித்துள்ளார் ரோட்ஸ். இதுகுறித்து தெரிவித்த அவர்..

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சை திறம்பட சமாளிக்கும் திறமையுடன் உள்ளனர். குறிப்பாக டேல் ஸ்டெயின் பந்து வீச்சை அவர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.
ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களுடன் இணைந்தும் எதிராகவும் விளையாடியது நல்ல அனுபவம் கொடுக்கும்.

இந்திய வீரர்கள் இப்போதெல்லாம் வேகப் பந்து வீச்சைக் கண்டு பயப்படுவதாக தெரியவில்லை. அவர்களுக்குள் அதிக அளவில் நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.

ஸ்டெயின் நல்ல வேகமான பந்து வீச்சாளர்தான். ஆனால் அவரால் இந்திய வீரர்களை பெரிய அளவில் மிரட்ட முடியாது என்பது எனது கருத்து. பிலன்டரும் அதிவேகமாகவே பந்து வீசுகிறார். ஆனாலும் அவரையும் இந்திய வீரர்களால் சமாளிக்க முடியும். மோர்னி மோர்க்கலுக்கு நன்றாக பவுன்ஸ் வரும். ஆனால் இந்த வித்தியாசமான பந்து வீச்சாளர்களை இந்திய வீரர்கள் எளிதாக சமாளிப்பார்கள்.

தற்போதைய இந்திய வீரர்களைப் பார்க்கும்போது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை தவிடுபொடியாக்கி விடுவார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது என்றார் ரோட்ஸ்.

டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை 3 டெஸ்ட் போட்டிகளில் டேபன், கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க் ஆகிய நகரங்களில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடவுள்ளன.

ரோட்ஸ் மேலும் கூறுகையில் விராத் கோஹ்லி இந்திய வீரர்களிலேயே மிகவும் அபாயகரமானவராக தெரிகிறார். அதேபோல தலைவர் டோணியும் அபாயகரமானவர்தான். இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்களை தூங்க விடாமல் செய்யப் போகிறார்கள்.

குறிப்பாக விராத் கோஹ்லி துரிதமாக ரன் சேர்க்கிறார். ரன் எடுப்பதில் வேகம் காட்டுகிறார். அதேபோல தலைவர் டோணியும் ஆட்டத்தை முடித்து வைப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். ஆட ஆரம்பித்து விட்டால் அவரை நிறுத்துவது மிகக் கடினம். எந்தப் பந்து வந்தாலும் அடித்து ஆடுகிறார்.

இவர்கள் மட்டுமா ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சிறப்பான நிலையில் உள்ளவர்கள் என்றார் ரோட்ஸ்.

ரோட்ஸ் சொன்னவை பலிக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

அதிவேகமாக 15 சதங்கள் எடுத்து விராத் கோஹ்லி சாதனை!!

virat-kohli

சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக தலைவர் விராட் கோலிக்கு இது 15வது சதமாகும்.

இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் தனது 15வது சதத்தை 106வது ஆட்டத்தில் பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்பு பாகிஸ்தானின் சயீத் அன்வர் தனது 143வது போட்டியில் 15வது சதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. சவுரவ் கங்குலி 144வது ஆட்டத்திலும், கிறிஸ் கெய்ல் 147வது ஆட்டத்திலும் இந்த இலக்கை எட்டினார்கள்.

சச்சின் டெண்டுல்கர் 15வது சதத்தை தனது 182வது ஆட்டத்தில் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா – திருகோணமலை பேருந்தில் மோதுண்டு ஒருவர் பலி..!

ACCIDENT_logoவவுனியாவில் இருந்து திருகோணமலை சென்ற பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா டிப்போக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தே இவ்வாறு மோதியுள்ளது.

நேற்று முற்பகல் கெப்பட்டிகொல்லாவ பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில்காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளார். 48அகவையுடைய ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலையில் இரும்புப் பொருள் தாக்கியதாலும் இளவரசன் இறந்திருக்கலாம்- பிரேதப் பரிசோதனை அறிக்கை!!

ilavarasan

தலையில் பலமான இரும்புப் பொருள் தாக்கியதாலும் கூட தர்மபுரி இளவரசன் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக மறு பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த டாக்டர்கள் குழு மறு பிரேதப் பரிசோதனையை நடத்தியது.

இதன் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இளவரசனின் தந்தையிடமும் அந்த அறிக்கை வழங்கப்பட்டது. அதில், இளவரசனின் தலையில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கிறது.

ரயில் மோதியதால் இந்த காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. கனமான இரும்பு பொருள் தாக்கியதாலும் இறந்திருக்கலாம். அதேசமயம் உடலில் வேறு எந்த காயமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பாரதிபுரத்தில் நடைபெறும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!(படங்கள்)

பாரதிபுரம் Jolly Boys விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 21ம் திகதி பாரதிபுரம் பாரதி வித்தியாலய மைதானத்தில் மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பம்மானது.

இபோட்டியானது பாரதிபுரம் பாரதி வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.ரமேஸ்கந்தா மற்றும் Jolly Boys அணியின் முன்னாள் வீரர் அமரர் திரு.சசிகுமார் அவர்களின் ஞாபகார்த்த போட்டியாக நடாத்தப்படுகின்றது.

முதல் நாள் போட்டியில் New Sun மற்றும் MCC அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் New Sun அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் Jolly Boys மற்றும் Supper Star அணிகள் மோதின இதில் Jolly Boys அணி வெற்றி பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள 10 ற்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 8 ஓவர்கள் கொண்ட இப்போட்டியானது ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும்.போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கேடயமும் சிறப்பு பரிசில்களும் வழங்கப்படும்.

-கலைதேவன்-

5 4 3 2 1-கலைதேவன்-

மரணத்தின் விளிம்பில் இருந்து அதிசயமாய் உயிர் தப்பிய மனிதர்கள் (வீடியோ இணைப்பு)!!

மரணத்தின் விளிம்பில் இருந்து அதிசயமாய் உயிர் தப்பிய சில மனிதர்கள் பற்றிய சில வினோத வீடியோக்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்!!(படங்கள்)

அலசான்டோ டிட்டி என்ற கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்…

11 10 9 8 4 5 6 7 3 2 1 12