அவுஸ்திரேலியாவிலிருந்து 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!

sri-lankan-deported-from-australia

2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை கண்டறிய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் சொன்யா கோப் தெரிவித்துள்ளார். உரிய வீசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளும் இவ்வாறு நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணத்தை வழங்குவது பயனற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா??

Free-Download-Manager

உங்கள் Internet speed குறைவாக உள்ளதா? ஏதாவது இணையதளத்தில் தரவிறக்கம் செய்யும்போது மிக குறைந்த வேகத்தில் இணையம் செயல்படுகிறதா? ஒரு மென்பொருளையோ அல்லது நீங்கள் விரும்பும் விடியோ படங்கள் தரவிறக்கம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறதா? அப்படியெனில் இந்த மென்பொருள் உங்களுக்குப் பயன்படும்.

FDM எனும் இம்மென்பொருளைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய கோப்புகள் எதுவாயினும் இணையத்தில் விரைவாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தரவிறங்கும் வேகம் அதிகரிக்கும்.
FDM என்பதன் விரிவாக்கம் Free Download Manager என்பதாகும்.

Free Download Manager Software-ன் பயன்கள்:

இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்யும்போது கிடைக்கும் வேகம் எவ்வளவு தெரியுமா? 600% சதவிகிதம் தரவிறங்கும் வேகம் அதிகரிக்கிறது.

ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போது, பாதியில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மீண்டும் அம்மென்பொருளை புதியதாக தரவிறக்கம் செய்ய தேவையில்லை. எதுவரைக்கும் தரவிறங்கியிருக்கிறதோ, அதிலிருந்து தொடர்ந்து தரவிறங்குகிறது. இதனால் உங்கள் நேரமும், இணைய நேரமும் மிச்சமாகிறது.

YouTube, Flash Video க்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதி,
Http, FTB, Bit Torrent ஆகியவற்றிலிருந்து எளிதாக, விரைவில் தரவிறக்கும் வசதி..

இந்த FDM மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்க..

வவுனியா மாவட்டத்தல் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு!!

vote

வவுனியா மாவட்டத்தில் 94,367 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படடுள்ளனர் என வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என். கருணாநிதி தெரிவித்துள்ளார். வட மாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்ட வாக்குப் பதிவாளர்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

தற்போதுள்ள வாக்காளர்களுடன் மேலதிகமாக பதிவு செய்யப்படவுள்ளவர்களின் விபரங்களும் இத் தொகையுடன் சேர்க்கப்படவுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக 81 வாக்களிப்பு நிலையங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியதன் அடிப்படையில் அவை தற்போது கிடைத்த வண்ணமுள்ளன.

அந்த வகையில் தபால் மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு முன் எமக்கு கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.

அதேபோல் இடம்பெயர்ந்தவர்கள் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து வெவ்வேறு காரணங்களுக்காக வேறு மாவட்டங்களில் வசிக்கும் பட்சத்தில் இவர்கள் இடம்பெயர்ந்த பிரதேசத்திலேயே வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு விண்ணப்பிக்க வேண்டியவர்கள் நேரடியாக விண்ணப்பப் படிவங்களை தேர்தல் ஆணையாளருக்கோ அல்லது எம்மிடமோ சமர்ப்பிக்க முடியும். இதேவேளை வட மாகாண தேர்தலுக்காக வவனியா மாவட்டத்தல் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.

ஓகஸ்டுக்காகக் காத்திருக்கும் 20 படங்கள்!

thalaivaaகாத்திருத்தலின் வலி, வேதனைகளோடும், தங்க மீன்கள் படத்தோடும் மூன்று வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.

படம் எடுக்கணும் கோடம்பாக்கத்தில் கால் பதிக்கணும் கண்கள் முழுக்கக் கனவுகளோடு வலம் வருகிறார்கள் பல இளைஞர்கள். படம் எடுப்பதற்கு முன் படுகிற அதே அவஸ்தையை வலியை படம் ரிலீஸ் பண்ணுவதற்காகவும் அனுபவிக்க வேண்டியிருப்பதுதான் வேதனை.

மரியான், பட்டத்து யானை படங்களை அடுத்து தலைவா படத்தின் ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கும், சினிமா உலகம் எதிர்பார்ப்பதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக 20 தமிழ்ப் படங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் 20 படங்களும் ஓகஸ்டு மாதத்திலேயே வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

555, ஆதலால் காதல் செய்வீர், அடித்தளம், நேற்று இன்று, தங்கமீன்கள், கோப்பெருந்தேவி, மூடர் கூடம், மாதவனும் மலர்விழியும், விடியும் வரை பேசு, நெடுஞ்சாலை, சுட்டகதை, சும்மா நச்சுனு இருக்கு, சுவடுகள், ஓசூர் ஆன்லைன்.காம், மத்தாப்பு, முத்துநகரம், அச்சம்தவிர், கலவரம், வெண்ணிலா வீடு, மேகா படங்கள் தான் அவை.

சின்னதும் பெரியதுமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படங்களின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே சென்றால் இதுதான் வாழ்க்கை என நம்பி காத்துக்கொண்டிருப்பவர்களின் கதி என்னாகும்.

தனியறையில் சிறுவர்களை பூட்டிய ஆசிரியர்: கதவை உடைத்து மாணவர்களை மீட்ட பொதுமக்கள்!!

Junior school children sitting on ground with books in shade in rural village for lesson out of doors Sania Madhya Pradesh India. Image shot 11/2005. Exact date unknown.

தவறு செய்த மாணவர்களை தண்டிக்கும் விதமாக தனியறையில் வைத்து பூட்டிய ஆசிரியர், சிறுவர்களை திறந்து விடாமல் மறதியில் வீடு சென்ற சம்பவத்தால் உத்திரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள கோஜ்வா பகுதியில் சரை சுர்ஜன் பிரிவில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளிய்யில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவர்களான ஆயுஷ் மற்றும் ரதி ஆகியோர் மிகுந்த பசியின் காரணமாக, மதிய உணவை வகுப்புகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது ஆசிரியருக்கு தெரியாமல் சாப்பிட்டுள்ளனர்.

அதனைக் கண்டறிந்த ஆசிரியர், மாணவர்களைத் தண்டிக்கும் விதமாக, அவர்களாஇ ஒரு தனியறையில் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் ஞாபக மறதியில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்று விட்டார். அடைத்து வைக்கப் பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் திறந்து விடாததால் பயத்தில் அழத் தொடங்கியுள்ளனர் அச்சிறுவர்கள்.

பூட்டிய அறைக்குள் குழந்தைகளின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து சிறுவர்களை காப்பாற்றியுள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆவேசமாக அப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளனர். பின்னர், காவல் துறையினரின் தலையீட்டால் அவர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர்.

சமந்தாவின் பெரிய மனசு!!

samantha

பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ் பேச்சு.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா பவுண்டேஷனை ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதில் மஞ்சுளா, பமீலா, சிரிஷ் ஆகிய மூன்று டாக்டர்கள் சேவை செய்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சையை டாக்டர் மஞ்சுளா கவனித்துக் கொள்கிறார்.

ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர் பமீலா சிகிச்சை அளிக்கிறார். குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் புற்றுநோய் குறித்த சிகிச்சைகளை டாக்டர் சிரிஷ் கவனித்துக் கொள்கிறார்.

இதற்காக எங்கும் நன்கொடைகளைப் பெறுவதில்லை. தன்னுடைய பொருளாதாரத்தில் இருந்தே செலவு செய்கிறேன் என்று சொல்கிறார் சமந்தா.சமந்தாவின் இந்த உதவும் உள்ளத்தை கோலிவுட், டோலிவுட் பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

2வது ஒருநாள் போட்டியிலும் சிம்பாவேயை வீழ்த்திய இந்தியா!!

indian team

சிம்பாவே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனத்கத் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிம்பாவே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணித்தலைவர் பிரண்டன் டெய்லர் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த அணித்தலைவர் கோஹ்லி 14 ஓட்டங்களில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இரண்டு முறை தப்பிய ஷிகர் தவான் ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.

இவருடன் கார்த்திக் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் சேர்த்த போது, தினேஷ் கார்த்திக் 69 ஓட்டங்களில் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் சதம் கடந்து 116 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய வினய் குமார் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்கள் எடுத்தது. வினய் குமார் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிம்பாவே சார்பில் பிரையன் விடோரி 2 விக்கெட் வீழ்த்தினார்.

295 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சிபாண்டா அரைசதம் கடந்து 55 ஓட்டங்களும், ஹாமில்டன் மசகட்சா 34 ஓட்டங்களும், சிகும்பரா 46 ஓட்டங்களும்,உட்சே 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் உனத்கத் 4 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நாளை ஹராரேயில் நடைபெறவுள்ளது.

எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்!!

aids

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் எய்ட்ஸ் நோயால் பெற்றோரை இழந்த 5 குழந்தைகள் மயானத்தில் வாழ்ந்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர்.

இதையடுத்து எங்கே தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில் கிராமத்தினர் சேர்ந்து அந்த தம்பதியின் ஒரு பெண், 4 ஆண் குழந்தைகளை ஊரை விட்டே விரட்டினர். 7 முதல் 17 வயது வரை உள்ள அந்த 5 குழந்தைகளும் போகும் இடம் தெரியாமல் தங்கள் பெற்றோர் புதைக்கப்பட்ட மயானத்தில் வசித்து வருகின்றனர்.

மயானத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தார்பாலின் பாய் போட்டு 2 உடைந்த கட்டிலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மயானத்தில் குழந்தைகள் தங்கியிருந்தால் அங்கு அடக்கம் செய்யப்பட்ட தங்கள் உறவினர்களின் கல்லறைகளின் தூய்மை கெட்டுவிடும் என்று கிராமத்தினர் கருதுகின்றனர். அதனால் அந்த குழந்தைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட அரசு அந்த குழந்தைகளுக்கு இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கியுள்ளது.

20 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் இலங்கையை தோற்கடித்த தென்னாபிரிக்க அணி!!

southafrica

கண்டி பல்லேகல மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 56 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்கா சார்பில் டேவிட் மில்லர் 85 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் 3, திசாரா பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 224 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதல் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறி வந்தது.

எனினும் மத்திய வரிசையில் களம் புகுந்த திசார பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இலங்கையின் பக்கம் வெற்றிவாய்ப்பு திரும்பியது. திசார பெரேரா பீட்டர்சன் வீசிய ஒரு ஒவரில் 34(5 ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம்) ஓட்டங்களை விளாசினார். இந்த ஓவரில் பீட்டர்சன் 35 ஓட்டங்களை வழங்கினர். இதுவே ஒருநாள் போட்டி ஒன்றில் வழங்கப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசார பெரேராவை ஆட்டமிழக்கச் செய்து தென்னாபிரிக்கா இலங்கை இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இறுதியில் இலங்கை அணி 43.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் திசார பெரேரா அதிரடியாக ஆடி 65 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் ட்சொட்சொபே 4 விக்கெட்களையும் பெஹர்தீன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நான்காவது போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பாக நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக கலாசார விழா!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்று (25.7) கோலாகலமாக பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. “இயல் இசை நாடகத்தால் இன்பத்தமிழ் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந் நிகழ்வில் தமிழ் வளர்த்த பெரியார்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்தியுடன் தமிழர் பாரம்பரிய கலைகள் காவடி கலப்பை பூட்டிய எருதுகளுடன் பண்பாட்டு பேரணி நெடுங்கேணி மாகவித்தியாலயத்தில் ஆரம்பித்து பிரதேச செயலகத்தை வந்தடைந்திருந்தது.

இதனையடுத்து பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உட்பட கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் ரி.தணிகாசலம் வவனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதன் சேவா லங்காவின் நிகழ்சி திட்ட பிரதி பணிப்பாளர் திருமதி அனட்ரோய் பிரேமலதாவும் பொஸ்டோ நிறுவன நிகழ்சி திட்ட முகாமையாளர் பி. செந்தில் குமரனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிகழ்ச்சி திட்ட அலுவலர் சா. சயந்தனும் அழைத்து வரப்பட்டு மங்களவிளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

இதனையடுத்து நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளால் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன் புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண் கலைக்கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே.ஆயகுலனின் வரவேற்புரையும் இடம்பெற்றது.

தலைமையுரையினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் ஆற்ற “காலம் தோறும் தமிழ்” எனும் இலக்கிய சொற்பொழிவினை இலக்கிய சுடர் ஐ.கதிர்காமசேகரமும் நெடுங்கெணி நாவலர் முன்பள்ளி மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்வும் கவிக்கதிர் தம்பித்துரை ஐங்கரனின் தலைமையில் கவிஞர் மாணிக்கம் ஜெகன் வன்னியூர் நிசான் நந்தா மருதோடை நிலா ஆகியோரின் பங்கேற்புடன் நல்லதோர் விணை செய்வோம் எனும் தலைப்பில் கவியரங்கமும் கண்ணீந்த கண்ணப்பன் எனும் தலைப்பில் திருக்காலத்தி வில்லிசைக்குழுவினரின் வில்லிசையும் “மருதமுகில்” நூல் வெளியீடும் இடம்பெற்றிருந்தது.

இதன் தொடர்ச்சியாக நூலின் வெளியீட்டுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் மி.சூசைதாசனும் ஏற்புரையினை மலராசிரியர் ஜெ.கோபிநாத்தும் ஆற்றியதுடன் நெடுங்கேணி செம்மொழிக்கலாமன்றத்தை சேர்ந்த இராஜேந்திரம் தவபாலன் ஆகியோரின் மதுரக்குரலிசையும் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரம் தலைமையில் இன்றைய உலகில் தமிழர் பாரம்பரியம் பெரிதும் பின்பற்றப்படுகின்றதா? பின்தள்ளப்படுகின்றதா? எனும் தலைப்பில் இன் தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாசன் இளங்கலைச்சுடர் ஜெ.கோபிநாத் க.தவபாலசிங்கம் ஜெ.திருவரங்கன் பா.ரஜீவன் த.தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் பட்டிமன்றமும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் செம்பு நடனமும் நடைபெற்றது.

தொடர்ந்து புளியங்குளத்தை சேர்ந்த நிருத்திய கலாசேஸ்திர நுண்கலைக்கல்லூரி மாணவிகளின் கீதாஞ்சலியும் நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளின் சுளகு நடனமும் கனகராஜன்குளம் மாவித்தியாலய மாணவர்களின் “அர்ச்சந்திர மயான காண்டம்” இசை நாடகமும் மதியாமடு விவேகாநந்தா வித்தியாலய மாணவாகளின் சுமைதாங்கி எனும் சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்திhயலய மாணவிகளிள் “சத்தியவான் சாவித்திரி” இசை நாடகமும் சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவாகளின் “காணல் நீர்” சமூக நாடகமும் நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசிரியாகள் மற்றும்; மாணவாகள் இணைந்து வழங்கும் ‘ஸ்ரீவள்ளி’ எனும் இசை நாடகமும் நடைபெற்றது.

தொடர்ந்து சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் “காலங்கள் மாறினாலும்” எனும் தலைப்பில் சமூக நாடகமும் மாறாவிலுப்பை அ.த.க. பாடசாலையின் “ஏழு பிள்ளை நல்ல தங்காள்” எனும் இசை நாடகமும் கலை வேந்தன் இசை நாடக வள்ளல் ம.தைரியநாதன் குழுவினரின் “பூதத்தம்பி” இசை நாடகமும் கற்சிலை மடு பரந்தாமன் நாடக கலாமன்றத்தினரின் பண்டாரம் வன்னியனார் எனும் வரலாற்று நடகமும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பல்துறையிலும் கலை வளர்ச்சிக்கு உழைத்த கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். எனினும் வவுனியா வடக்கில் பல்வேறு நெருக்கடியான காலத்திலும் இப் பிரதேசத்தின் கலைச் செயற்பாடுகளை வெளியுலகிற்கு காட்டியிருந்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படாமை தொடர்பில் அப் பிரதேச ஊடகவியலாளாகளின் விசனம் காணப்பட்டபோதிலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் தம் இயல்பு வாழ்வுக்கு திரும்பிய நிலையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இந் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் காலையில் இருந்து இரவு 9 மணிவரை காத்திருந்து தம் பிரதேச கலை கலாசார நிகழ்வுகளை கண்டு களித்து பெருமை சேர்த்திருந்தனர்.

தவிர்க்க முடியாத காரணங்களால் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வவுனியா வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் “இனியாகினும் திருந்துவோம்” எனும் தாளலயம் நிகழ்வு இடம்பெறாமை பலருக்கும் மன ஆதங்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் கூட கலாசார நிகழ்வில் சிறப்பான நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டிருந்தமை வரவேற்பான விடயமாக இருந்ததையிட்டு பலரும் மெய்சிலிர்த்திருந்தனர்.

vavuniya1 vavuniya2 vavuniya3 vavuniya4 vavuniya5 vavuniya6

அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

 

vavuniya1 vavuniya2 vavuniya3

வவுனியா குருமண்காட்டில் வழிப்பறி – பொதுமக்களால் திருடன் மடக்கிப்பிடிப்பு..!

arrest1வவுனியா குருமண்காடு சந்தியில் இளம் யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை நபர் ஒருவர் அறுத்துச் செல்ல முற்பட்ட சம்பவம் இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குருமண்காடு சந்தியில் சனநடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் யுவதியொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியினை நபர் ஒருவர் அறுத்து எடுத்ததுடன் சம்பவ இடத்தை விட்டு தப்பியோட முற்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற யுவதி இட்ட சத்தத்தினால் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி திருடனை மடக்கிப்பித்ததுடன் அவரை நையப்புடைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்டு கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(சந்தோஷ்)

எப்படித்தான் எப்படி எல்லாம் யோசிப்பாங்களோ!!! (வீடியோ)

மனிதனின் வித்தியசமான சிந்தனைக்கு ஒரு அளவே இல்லை. இந்த வித்தியாசமான கற்பனையை கொஞ்சம் பாருங்கள்..

24 மாடி ஜன்னலில் தலை சிக்கி தவித்த 5 வயது சிறுமியின் கடைசி நிமிடங்கள்!!(படங்கள்)

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக 24 வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்ட 5 வயது சிறுமி பெரும் போராட்டத்திற்குப் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில் உள்ளது பிரபல அடுக்குமாடி குடியிருப்பு. அதன் 24வது மாடியில் 5 வயது மகளுடன் வசித்து வருகின்றனர் ஒரு தம்பதி. தந்தை பணிக்கு சென்று விட தாயும் முக்கிய வேலையாக வெளியில் சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமி தவறுதலாக ஜன்னல் கம்பிகளின் இடைவெளியில் வெளியில் வந்து விட்டார். மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்த போது தலை கம்பிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. பயத்தில் அலறி இருக்கிறார் சிறுமி.

வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண்ணின் காதில் சிறுமியின் அழுகுரல் சத்தம் விழுந்திருக்கிறது. ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என அஞ்சிய படியே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த அவர் அப்படியே உறைந்து விட்டார்.

காரணம் 79ன் அடி உயரத்தில் 5 வயது பக்கத்துவீட்டு சிறுமி ஜன்னல் கம்பிகளுக்குள் மாட்டியபடி கதறிக் கொண்டிருந்தது தான். உடனடியாக போலீசுக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தார் அப்பெண்.

அதற்குள் கீழே கூட்டம் கூடி விட தீயணைப்புத் துறையினர் உட்புறமாக தாளிடப்பட்டிருந்த சிறுமியின் வீட்டுக் கதவை திறக்க ஒருபுறமும், மறுபுறம் பக்கத்து வீட்டு ஜன்னல் கம்பிகளை உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இரண்டு முயற்சிகளுமே வெற்றி பெற பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக இடுப்பில் கயிறு கட்டிய படி ஒருவர் சிறுமியை நெறுங்கினார். அதற்குள் வீட்டிற்குள் சென்ற தீயணைப்பு வீரர்கள் சிறுமி கீழே விழுந்து விடாத வண்ணம் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டனர்.

ஒரு வழியாக பெரும் போராட்டத்திற்குப் பின் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். தகவலறிந்து ஓடி வந்த சிறுமியின் பெற்றோருக்கு அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

மரணத்தின் வாசல் வரை போய் பார்த்து விட்டு வந்த அச்சத்தில் அச்சிறுமி மிரண்டு காணப்பட்டார். சிறு குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுச் செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஓர் உதாரணம்.

c1 c2 c3 c4 c5

சூர்யாவின் கதையை மாற்றிய லிங்குசாமி!!

surya

சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் அவர் அடுத்த நடிக்க இருக்கும் படம் குறித்து விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் அப்படியே.

சூர்யா முதலில் கெளதம் மேனன், லிங்குசாமி ஆகிய இருவரின் படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். முதலில் துப்பறியும் ஆனந்த் படத்திற்கே ஒரு வருட காலம் உடலமைப்புக்காக சூர்யா நிறைய உழைக்க வேண்டியது இருந்ததால் கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தினைத் தொடங்கினார்.

ஆனால், அவரோ முழுமையான திரைக்கதை வடிவத்தினை சூர்யாவிடம் கொடுக்கவில்லை. ஆகையால் சூர்யாவோ துருவ நட்சத்திரம் படத்தில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி லிங்குசாமி தனது கதைக்கு வேகமாக திரைக்கதை வடிவம் கொடுக்க ஆரம்பித்தார். அதற்குள் சீமான் வடிவத்தில் சிக்கல் வந்தது.

கட்சிப் பணிகளுக்கு இடையே சீமான் தனது பகலவன் கதையினை விஜய், ஜீவா, ஜெயம் ரவி என அனைவரிடம் கூறி வந்தார். ஜுன் 2014-ல் தான் எனது தேதிகள் இருக்கிறது. அதுவரை காத்து இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக நான் நடிக்கத் தயார் என்று கூறிவிட்டாராம் ஜெயம் ரவி.

பகலவன் கதையினைத் தான் அப்படியே லிங்குசாமி தயார் செய்திருந்தாராம். இதனைக் கேள்விப்பட்ட சீமான் இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்க, மீண்டும் பிரச்னை வெடித்தது. இருவரும் தங்களது கதையினைக் கூறவே பிரதி எடுத்தது போல அப்படியே இருந்ததாம்.

இதனால் நான் இந்தக் கதையினை சூர்யாவை வைத்து இயக்கவில்லை. வேறு ஒரு கதை வைத்திருக்கிறேன். அதனை இயக்கிக் கொள்கிறேன் என்று கூறி விட்டாராம் லிங்குசாமி.

தற்போது கதைக்கு, திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபடுகின்றது லிங்குசாமி அலுவலகம். கதையும் சூர்யாவிற்குப் பிடித்து விட்டதால் அடுத்த மாதம் 27ம் தேதியில் இருந்து திகதிகள் ஒதுக்கி கொடுத்து விட்டார்.

தற்போதைய நிலவரப்படி கெளதம் மேனன், ராஜேஷ், சூது கவ்வும் நலன் குமாரசாமி, சுராஜ் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சூர்யாவை இயக்க இருப்பது லிங்குசாமி மட்டுமே!

ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் காரித்துப்பியபடி வெளியேறிய கொஹ்லி!!

kohli

ஆட்டமிழந்தார் என்று நடுவர்கள் அறிவித்ததால் கோபமடைந்த இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி காரி உமிழ்ந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்தியா சிம்பாப்வே இடையிலான 2வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வீராட் கோஹ்லி அவுட் செய்யப்பட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தான் அதிருப்தியை வெளிப்படுத்தியபடி வெளியேறினார் கோஹ்லி.

இந்தியாவின் துடுப்பாட்டத்தின் போது 7வது ஓவரை கைல் ஜார்விஸ் வீசினார். அதில் 2வது பந்தை தூக்கி அடித்தார் கோஹ்லி. பந்து மிட்ஒனில் போனது. அதை மால்கம் வாலர் டைவ் அடித்துப் பிடித்தார். ஆனால் தான் ஆட்டமிழந்ததை ஏற்கவில்லை கோஹ்லி.

இதையடுத்து 3வது நடுவரான ருஸ்ஸல் டிபினின் முடிவுக்கு விட்டார் கள நடுவரான அஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட்.
இதையடுத்து டிவி ரீப்ளேக்களை 3வது நடுவர் டிபின் திரும்பத் திரும்பப் பார்த்தார். ஆனால் முடிவை அறிவிக்க முடியாமல் தடுமாறினார்.

இதனால் கோஹ்லி அதிர்ச்சி அடைந்தார். மறுபடியும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நின்று கொண்டிருந்தார். மேலும் இது ஆட்டமிழப்பா, இல்லையா என்ற முடிவு கள நடுவரிடமே விடப்பட்டது.
இதையடுத்து கள நடுவர் ஆக்ஸன்போர்டிடம் பேசினார் கோஹ்லி. அவரோ அவுட்தான் என்று கூறி விட்டார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த கோஹ்லி, கோபத்துடனும், அதிருப்தியுடனும் வெளியேறினார். போகும் போது காரித் துப்பியபடி அவர் போனதால் சலசலப்பும் ஏற்பட்டது.

கோஹ்லியின் செயல் தவறு என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியின் முடிவில் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், கோஹ்லிக்கு அபராதம் அல்லது தடை போன்ற ஏதாவது தண்டனை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிறிஸ் பிராடின் மகன் ஸ்டூவர்ட் பிராடும் கூட இப்படித்தான் கோபத்தைக் காட்டியிருந்தார். ஆசஷ் தொடரின்போது பிராட் அடித்த பந்தை அவுஸ்திரேலிய களத்தடுப்பாளர் பிடித்தார்.
அது பிடியா இல்லையா என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிராட் மைதானத்தை விட்டு போகாமல் அடம் பிடித்தபடி நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.