வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கபடிப் போட்டி முடிவுகள்..!

kabadi

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பெரு விளையாட்டுப்போட்டிகளின் மூன்றாம் கட்டப் போட்டிகள் வருகையில், 15, 19 வயது ஆண்கள் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

15 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வடமராட்சி கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்றது. இரண்டாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன.

15 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் முதலிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உhய்தரப் பாடசாலை அணி பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை மன்னார் கருங்கண்டல றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு ஆண்கள் போட்டியில் வவுனியா பரக்குளம் மகா வித்தியாலய அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை கிளநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்கள் போட்டியில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய அணி முதலிடத்தினையும், இரண்டாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் பெற்றுக்கொண்டன.

வவுனியாவில் குருசேத்திரம்..!

guru

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாட்டிய பேராசான் கலைஞர் வேல் ஆனந்தனின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட ஆடல் அணியினர் வழங்கும் குருசேத்திரம் கீழைத்தேய ஆடற்கதை வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி .சத்தியசீலன் தலைமையில் நடை பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் திருமதி .ர.விஜயலட்சுமி அவர்களும் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

மீண்டும் இருபதுக்கு -20 உலகக் கிண்ணம் இலங்கையில்??

ICC-World-Twenty20

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் மீண்டும் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பார்க்கப் படுகின்றது.

பங்களாதேஷில் மைதானப்புனரமைப்பு பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி.யின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 16 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை தொடர் நடைபெறவுள்ள நிலையில் அங்கு இரு மைதானங்கள் இன்னமும் பூர்த்தியாக்கப்படாமல் காணப்படுவதோடு, அதன் பூர்த்தி மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே பங்களாதேஷ் உலகக் கிண்ணத்தொடரை நடத்துவதற்குரிய வாய்ப்பை இழக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. வருடாந்தக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே பங்களாதேஷின் உரிமை பறிக்கப்படுமாயின் இலங்கை அல்லது தென்னாபிரிக்காவில் இப்போட்டிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்ததாண்டு இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் விசா புதிய விதிக்கு கடுமையான எதிர்ப்பு..

UK

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 4500 ஸ்டேர்லிங் பவுண்கள் ”பாண்ட்” பணமாக கட்ட வேண்டும் என்று பிரிட்டனால் அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இப்படியான அறிவித்தலை கடந்த வார இறுதியில் பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கையை கண்டித்திருந்த நைஜீரியாவின் செனட் சபை, இதற்கு பதிலடியாக தாமும் இப்படியான நிபந்தனையை விதிக்க நேரிடும் என்று கூறியுள்ளது.

இது ஒரு பக்கசார்பான நடவடிக்கை என்று இந்திய தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வர 6 மாத விசாவைப் பெறவேண்டுமானால் அதற்காக அவர்கள் 4500 ஸ்டேர்லிங் பவுண்களுக்கும் அதிகமான பணத்தை பாண்டாக கட்ட வேண்டும்.

அந்த விசாக் காலம் முடிந்த பின்னரும் அவர்கள் பிரிட்டனில் தங்கினால், அந்தப் பணத்தை பிரிட்டன் பிடித்துக்கொள்ளும்.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகவும் அதிகமாக குடிவரவு விதிகளை துஷ்பிரயோகம் செய்வதாக பிரிட்டன் கூறுகிறது.

-BBC தமிழ்-

வசூல் மழையில் தனுஷின் ராஞ்சனா..

ranjana
இந்தியில் வெளியிடப்பட்ட ராஞ்சனா திரைப்படமானது நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவிக்கின்றது.தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்சனா திரைப்படமானது கடந்த யூன் 21ந் திகதி வெளியிடப்பட்டத

ராஞ்சனா வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.11 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. வசூலானது முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகமாகவும், இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் எண்ணற்ற மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.

இப்படமானது தனுஷ் நடித்துள்ள முதல் இந்திப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்து அருகில் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக் மனிதனால் பரபரப்பு.(வீடியோ இணைப்பு)

fly

லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகிலேயே அந்தரத்தில் பறந்து வந்தார் மேஜிக்மேன் Dynamo என்பவர். இவர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பஸ்ஸின் மேற்பகுதியில் வலது கையை மட்டும் தொட்டுக்கொண்டு, ஒரு பறவையை போல பறந்து வந்ததைக்கண்டு, லண்டன் மக்கள் அதிசயித்துடன் பார்த்தனர்.

 

413 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார் ..

biscuit
அமெரிக்காவில் நடந்த ஒரு பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் பங்குபெற்ற ஒருவர் 413 பிஸ்கட் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 415 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டு சாதனை புரிய இருப்பதாக சவால் விட்ட Kevin Shalin என்பவர் 413 பிஸ்கட்டுகள் சாப்பிட்டவுடன் திடீரென மயங்கி விழுந்தார்.

கோமா நிலைக்கு சென்ற அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அளவுக்கு அதிகமான வெண்ணெய் அவருடைய உடலில் கலந்ததால், மூளைக்கு ரத்தம் செல்லும் பாதை அடைபட்டதாகவும் எனவே அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.

இரண்டே பிஸ்கட்டுகள் சாப்பிட்டிருந்தால் அவர் ஒரு புதிய சாதனையை புரிந்திருப்பார். ஆனால் அதற்குள் அவர் கோமா நிலைக்கு சென்றதால் போட்டி கைவிடப்பட்டது.
அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

நாயை கடித்துக் குதறிய இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி..!

யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்தவேளை இளைஞனை நாய் துரத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கிச் சென்று நாயைக் கடித்துக் குதறியுள்ளார்.

இதனால் நாய்க்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த இளைஞரும் காயமடைந்துள்ளார்.

இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார்.

அவ் இளைஞன் பிரதேசவாசிகளின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

26 வயதான குறித்த இளைஞன் யாழ். திருநகர் இராஜேந்திரா வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நாடு திரும்புவோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் -அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்..

gl_peiris

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே அவர்கள் அவுஸ்திரேலியாவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா மட்டும் தனியாக இவ்வாறு திருப்பி அனுப்பவில்லையெனவும் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்குத் திரும்பி வருவோரின் பாதுகாப்புக்கு தன்னால் உத்தரவாதம் வழங்க முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையர்கள் பலர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் புகலிடம் கோரி வந்துள்ளனர்.

கடந்த வருடம் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா கடற்பரப்பை வந்தடைந்திருந்தனர். ஆயினும் நேர்முகப்பரீட்சையொன்றின் பின்னர் 1200க்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருவதாகக்கூறும் இத்தகைய விண்ணப்பதாரர்களுள் கணிசமானோர் தமிழர்களாவர். ஆயினும் குறித்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதை அடுத்து நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பீரிஸ் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் பூரண அமைதி நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடானது இலங்கை எட்டியுள்ள சாதனைகளைக் காண்பிக்கும் வாய்ப்பொன்றை நாட்டிற்கு வழங்கவுள்ளதாகவும் எதனையும் நேரில் கண்டு தெளிவதே அதி சிறந்ததெனவும் அந்த வகையில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அனைத்து பொதுநலவாய நாடுகளினதும் பிரதி நிதிகள் அபிவிருத்தி சாதனைகடள நேரில் கண்ணாரக்கண்டு தெளியத்தான் போகின்றதெனவும் மேலும் தெரிவித்தார்.

 

மனைவிக்காக முதியவர் கட்டும் மற்றுமொரு குட்டி தாஜ்மஹால்..!

ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை போலவே ஒரு சிறிய தாஜ்மஹாலை முதியவர் ஒருவர் அவரது மனைவி நினைவாக கட்டி வருகிறார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பைசுல் ஹசன் காதிரி (77), இவரது மனைவி பேகம் டாஜ்முல்லி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.மனைவியின் மறைவிற்கு பின்பு அவரது நினைவாக ஒரு சிறிய தாஜ்மஹாலை கட்ட தொடங்கியுள்ள பைசுல்,

அவருக்கு சொந்தமான 5000 சதுர அடி நிலத்தில், ஆக்ராவில் உள்ள நிஜ தாஜ்மஹாலை போலவே சிறிய தாஜ்மஹாலை கட்டிவருகிறார்.இதுவரை இந்த குட்டி தாஜ்மகாலுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

அவரது மனைவியின் நினைவகம் இந்த குட்டி தாஜ்மகாலின் மையப்பகுதியில் அமையுமாறு வடிவமைத்துள்ளார்.மனைவி மீது கொண்ட அதீத அன்பால், குட்டி தாஜ்மகாலை கட்டி வரும் பைசுல், தான் இறந்த பின்பு தன்னையும் மனைவியின் அருகில் அடக்கம் செய்யவேண்டுமென உயில் எழுதிவைத்த்துள்ளராம்.

என்னே இந்த இல்லரத்தம்பதிகளின் இணக்கப்பாடு! திருமணம் -இல்லறரம  போன்றவற்றை வெறும் பொழுது போக்காக கருதும் இன்றைய இன்றைய இளசுகளுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

tajmahal_002.w540tajmahal_003.w540

உலகின் பிரபலமான நாய்க்குட்டி- பேஸ்புக்கில் 20 லட்சம் ரசிகர்கள்!!!

 

பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய விஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா.

இது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இதன் உரிமையாளரின் பெயர் ஜஸ்டின் பைபர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஃபூமனியா உலகின் மிகப் பிரபலமான நாயாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஃபூ வுக்கு தற்போது ஏழு வயதாகிறது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ செல்லப்பிராணி தொடர்பாளராக பணி புரிகிறது இந்த அழகி.

2009ல் ஃபூவிற்கென தனி பேஸ்புக் கணக்கு தொடங்கப் பட்டது. அதில், ஃபூ அழகாக சிரிக்கும் படங்களும், அது செய்யும் சேட்டைகளின் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அன்றிலிருந்து ஃபூ விற்கு லைக்குகளும், ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனராம். தற்போது கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு உலகின் மிகப் பிரபலமான நாய் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது ஃபூ.

அழகான மேனி , குட்டிக் கண்கள் என ஃபூவை பார்த்தாலே கவிதைப்பாடத் தோன்றும் . அவ்வளவு அழகான் ஃபூ முதன் முதலில் கலந்து கொண்டது அவலட்சணமான நாய்களுக்கான அழகுப் போட்டியில் தானாம்.

ஜஸ்டின் பைபர் முயற்சியால் அழகு தேவதையாக மாறியதாம் ஃபூ. விளையாட்டாகத் தான் ஃபூவிற்கு பேஸ்புக் பக்கம் ஆரம்பித்தாராம். ஆனால், ஃபூ இன்று இவ்வளவு பிரபலமாகி விட்டது என ஆச்சர்யம் தெரிவிக்கிறார் ஜஸ்டின்.

கடந்த ஏப்ரலில் சில நலம் விரும்பிகள் ஃபூ இறந்து விட்டதாக டுவிட்டரில் செய்தியை பரப்பி விட்டனர். ஆதாரமாக ஃபூ உறங்கும் படம் ஒன்றையும் வெளியிட்டனர். இச்செய்தியைப் படித்த அதன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜஸ்டின் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபூவின் படமொன்றை வெளியிட்டார். அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஃபூ ரசிகர்கள்.

உலகின் மிக அழகான, பிரபலமான நாய் -ஃபூ என்ற பெயரில் லீ என்பவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தனியார் விமானம் ஒன்றின் விளம்பர தூதராகவும் சில காலம் ஃபூ இருந்தது.

அழகழகான் உடைகளை போட்டு ஃபூவை விதவிதமாக படம் பிடித்து தான் ரசித்ததோடு அதன் ரசிகர்களும் ரசிக்க செய்கிறார் ஜஸ்டின்.

1 2 3 4 5 6 7 8

பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் பலி..!

பிரேசிலில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பவேலா நகரில் அமைதிப்பேரணி நடந்தது.

இதில் கலந்து சென்ற திருட்டு – போதைப்பொருள் கும்பல் ஒன்று இறுதியில் வழியில் இருந்த கடைகள், வழிப்போக்கர்கள், போராட்டக்காரர்களிடம் வன்முறையில் ஈடுபட்டு கொள்ளையடித்தது.

செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவேலா பொலிசார் கொள்ளை கும்பலை துரத்தியது. அப்போது, வழியில் தடையை ஏற்படுத்திய அந்த கும்பல் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் ஒரு பொலிசார், ஒரு வழிப்போக்கர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 7 பேர் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பாவேலா நகரில் போதைப்பொருள் கும்பல் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லையா?

tamil-fonts

உங்கள் கையடக்க தொலைபேசியில்  தமிழ் இணையத் தளங்களை பார்க்க முடியவில்லை என்றால் கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்.

1.உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள GPRS வசதியை செயற்படுத்தி http://www.opera.com/mini இணையதளத்திற்கு சென்று ஒபேரா மினியை தரவிறக்கி கையடக்க தொலைபேசியில் நிறுவி கொள்ளுங்கள்.

2. கையடக்க தொலைபேசியில் நிறுவிய ஒபேரா மினி உலாவியை திறந்து கொள்ளுங்கள். பின்பு அட்ரஸ் பாரில் opera:con fig என்று கொடுத்து OK கொடுக்கவும்.

3. தோன்றும் பக்கத்தில் Use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.

4. ஒபேரா மினி உலாவியை மூடி விட்டு மீண்டும் திறக்கவும்.

இனி உங்கள் கையடக்க தொலைபேசியில் நீங்கள் தமிழ் இணைய தளங்களை எந்த தடை இன்றியும் பார்க்கலாம்.

 

சுவையான காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு…

mushroom curry

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு  செய்வது எப்படி என்று படித்துப் பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்..

காளான் – 250 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மல்லி தூள் – 1 கரண்டி
கரம் மசாலா – 3/4 கரண்டி
கடுகு – 3/4 கரண்டி
சீரகம் – 1 கரண்டி
வெந்தயம் – 1/4 கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை..

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி பச்சை பட்டாணியைப் போட்டு நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.

 

16 வயதில் முதுமை தோற்றம் பெற்ற சிறுமி!

 

16 வயதான இளம் பெண் ஒருவர், அரியவகை மரபணு பிரச்சினையால், 60 வயது பெண் போல காட்சி தருகிறார். இங்கிலாந்தின் ரோதர்ஹாம் நகரை சேர்ந்தவர் ஸாரா ஹார்ட்ஷார்ன்.

இவருக்கு 16 வயதே ஆகிறது. ஆனால் அரிய வகை மரபணு பிரச்சினையால் இவரது தோல் சுருங்கி 60 வயதான நபர் போன்று காட்சி தருகிறார்.

இந்தநிலையில் ஸாராவின் பிரச்சினை குறித்து அறிந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளார்.

இதனால் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று இவரது தாய் டிரேசி ஜிப்சனுக்கும் பிரச்சினை உள்ளதால் இது ஒரு பரம்பரை வியாதி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1

2 3

யார் இறைவன்..

 

கொண்டவன் மீளாதுயிலினில்
அவள் மீளா துயர்தனில்
அவன் கொடுத்தவன் ஆறாப்பசிதன்னில்..

அடுப்பேறும் அயல் பாத்திரங்கள்
அவள் தொட்டு பளபளக்கும்
அவள் வீட்டு பாத்திரங்கள்
எப்பொதும் மினுமினுக்கும்..

தேய்த்திடும் பாத்திரத்தில்
தேடுவாள் ஒரு வாய் உணவு
எதிர் வீட்டு வளவினில்
நிலத்தினுள் சோறு..

கடைத்தெரு அவளும் சென்றால்
காளையர் துன்பக்கேடு
வந்திடு இரண்டு நாட்கள்
தந்திடுவேன் தங்கம் என்பார்..

மானத்தமிழன் மனைவியவள்
கற்பு தனை காக்க
உயிர் போக்கிடும் குலமகள்..

அவன் இருந்த போது
ஊருக்குள் நல்லதென்றால்
உதவிடும் முதல் மனிதன்
பிறர் வாழ்வுக்கு
பாடுபட்ட கறையில்லா
துாய நெஞ்சன்..

கறை நீக்கும் அவள்
மனக்குறை தனை நீக்கிட
யார் வருவார்..

மறு வாழ்வு அவளிற்கு
அளித்தால்
உனைவிட யார் இறைவன்…

-திசா.ஞானசந்திரன்-