செவ்வாய் கிரகத்துக்கு முதலில் செல்லப் போகும் மனிதர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

space-shuttle-endeavor

2021–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் எண்டீவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு தரை இறங்கிய விண்கலம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது எண்டீவர் விண்கலத்தில் ஆய்வுகூடம் மட்டுமே உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் கருவிகள் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, தட்ப வெப்பநிலை உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் 2033ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் நாசா மையம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது.

ஆனால் நாசாவின் இந்த தீவிர முயற்சியை முறியடிக்கும் வகையில் இங்கிலாந்து வருகிற 2021ம் ஆண்டிலேயே செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புகிறது. அதற்காக 3 பேர் குழு பயணம் செய்யும் விண்கலத்தை வடிவமைத்து வருகிறது.

லண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இந்த குழுவின் தலைவர் பேராசிரியர் டொம் பைக் கூறும்போது, செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்புவதுதான் அடுத்த மிகப்பெரிய இலக்காக கருதுகிறோம்.
அதன் மூலம் சந்திரனின் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ரோங் புஷ் அல்ட்ரினின் சாதனையை 21ம் நூற்றாண்டில் நிகழ்த்த போகிறோம்.

மனிதர்களை அனுப்பும் அதே நேரத்தில் மற்றொரு ரொக்கட்டில் செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதிக்கு ரோபோக்களை அனுப்ப இருக்கிறோம். அவை அங்குள்ள ஐஸ் படிவங்களை வெட்டியெடுத்து ஆய்வு மேற்கொள்ளும்.

அதே நேரத்தில் அங்கு செல்லும் 3 பேர் கொண்ட குழு 9 மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள். புவியீர்ப்பு சக்தி கிடைக்காத காரணத்தால் அவர்களின் உடல் எடை மற்றும் தசை மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படும்.

எனவே, அவர்களின் உடல் நிலை பாதிக்காத வகையில் பயணம் செய்யும் விண்கலம் அதிநவீன முறையில் விசேஷமாக வடிவமைக்கப்பட உள்ளது என்றும் விஞ்ஞானி பைக் தெரிவித்துள்ளார்.

பாலியல் கொடுமை அவமானம் தாங்கமுடியாமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

hangமேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது மாணவி ஒருவர் அவமானம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நைஹாட்டி என்ற இடத்தில் ஒரு வீட்டில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள்.

பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் தனியாக வீட்டிலிருந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த கவுதம் பஸ்வான் என்ற நபரும், மேலும் இரண்டு பேரும் தகாத முறையில் நடந்துக்கொண்டனர்.
மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், மாணவியை தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம் பக்கத்தினரை பார்த்தவுடன் கவுதம் பஸ்வானும், அவனது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

மாணவியை மீட்ட பொதுமக்கள், அவரது வீட்டில் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி தனக்கு நேர்ந்த அவலத்தால் மனம் உடைந்து மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளான். அவனையும் அவனது நண்பர்களையும் தேடும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கல்யாணம் ஆனாலும் ரசிக்கின்ரார்கள் : வித்தியாசமான வித்யாபாலன்!!

vithya

கேரள மாநிலம் பாலக்காட்டில் தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் வித்யாபாலன். தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள அவர், தனக்கென ஒரு ஸ்டைல் வைத்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட “தி டேட்டி பிக்சர்” படமும் கஹானி படமும் வித்யாபாலனுக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளது.

இந்தியாவின் பெரிய நடிகைகள் அனைவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் திரையிலும், வெளியிலும் சுதந்திரம் பெற்றவர்களாக உள்ளார்கள். கேமரா முன் வந்ததுமே ஸ்ரீதேவிக்கு என்ன தான் நடக்கிறது என்று வித்யா வியந்துள்ளார்.

மேலும், ஸ்ரீதேவி நடிக்கும் படத்தில் சிறு உதவியாளராகக் கூட வேலை பார்க்கத் தயாராக இருக்கிறேன். தி டேட்டி பிக்சர் படத்திற்குப்பிறகு பூசினாற் போன்ற எனது தோற்றத்தை நானே ரசிக்க ஆரம்பித்தேன். ஒல்லியான பெண்கள் தசை தூக்கலாக, ஆண்மைத்தனமாக தெரிவார்கள். அவ்வாறு ஆண்மைத்தனமாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.

முன்பு ரசிகர்கள் அடுத்தவர்களின் மனைவியை ரசிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் அதிகரித்து வரும் நிலையில் திருமணமான பெண்ணை ஆசையோடு பார்க்க பலர் தயங்குவதில்லை என்கிறார் வித்யா.

கூகுள் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்!!

google

பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது காலத்திற்கு காலம் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது Chromecast எனும் புத்தம் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சாதனமானது மொபைல் சாதனங்களிலோ அல்லது இணையத்தளங்கள் மூலமாகவோ பார்த்து ரசிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிளிலும் பார்த்து மகிழக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தருகின்றது.

இதனை Netflix, YouTube, Google Play உள்ள வீடியோக்களை தொலைக்காட்சியில் இயக்குவதற்கும் செய்தவற்கும் பயன்படுத்த முடியும். இவற்றுடன் கூகுள் குரோம் உலாவி மூலம் பார்வையிடும் விடயங்களை தொலைக்காட்சியிலும் பார்வையிடுதவற்கு விசேட நீட்சி ஒன்றும் காணப்படுகின்றது.

35 டொலர்களே பெறுமதியான இச்சாதனத்தை கூகுள் பிளே மற்றும் அமேசான் தளங்களிலிருந்து கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!!

2head

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு தலை மற்றும் இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் அமைப்புகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சாதத் மருத்துவமனையில் கடந்த 24ம் திகதி இந்த குழந்தை பிறந்துள்ளது. இது மிகவும் அபூர்வமான விஷயமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இக்குழந்தை மற்றும் அதன் தாய் ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குழந்தையை எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் இக்குழந்தைக்கு இரண்டு தலையுடன், இரண்டு முதுகெலும்பு, இரண்டு நரம்பியல் மண்டலம், இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரே ஒரு இடுப்பு எலும்பு உள்ளது. குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

25 விரல்களுடன் பிறந்த அதிசய ஆண் குழந்தை!!

baby

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதியினருக்கு 25 விரல்களுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ராவிற்கும்(25) மன்னார்குடி அடுத்த கோவில் கலப்பால் கிராமத்தை சேர்ந்த பகத்(33) ஆகியோருக்கு கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி திருமணம் நடந்தள்ளது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் சித்ராவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் பல கோயில்களின் வேண்டுதலுக்கு பின்பு கடந்த ஆண்டு சித்ரா கர்ப்பமானார்.

இதனைத் தொடர்ந்து கடந்தத 16ம் திகதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 17ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. நல்ல சிகப்பு நிறத்தில் பிறந்த குழந்தையின் வலது கையில் 7 விரலும், இடது கையில் 6 விரலும், இரு கால்களிலும் தலா 6 விரலும் ஆக மொத்தம் 25 விரல்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை பகத் கூறுகையில், எனது குழந்தையின் அதிசியத்தை கண்டு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றோம். எனது சகோதரர் மோகனின் மகனுக்கும் தலா ஆறு விரல்கள் வீதம் 24 விரல்கள் உள்ளன என்றார்.

மேலும் இந்த அதிசிய குழந்தை எங்கள் கிராமத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இதனால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பகத் மற்றும் சித்ரா தம்பதியினரின் திருமண திகதி 17 இந்த அதிசிய குழந்தை பிறந்த திகதியும் 17 என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் அடுத்த படம் : தொடரும் குழப்பம்!!

Suryaசிங்கம் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சிங்கம் 2வை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் மற்றும் லிங்குசாமி இயக்கும் படம் என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து இரண்டு படங்களுக்கும் சிக்கல் மேல் சிக்கல். கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த துருவ நட்சத்திரம் படம் கைவிடப்பட்டு விட்டது என்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்திலேயோ சூர்யாவும் நானும் இணைந்து ஒரு நல்ல படத்தைத் தர திட்டமிட்டுள்ளோம்.அதுகுறித்து யோசித்து வருகிறோம். என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லிங்குசாமி படத்திற்கும் பிரச்சனை தான். இயக்குனர் சங்கத்தில் சீமான் தனது பகலவன் கதையும், லிங்குசாமி சூர்யாவுக்காக தயார் செய்த கதையும் ஒன்றே என்று புகார் செய்து இருக்கிறாராம். இதனால் இப்படமும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

லிங்குசாமி தரப்போ ஒகஸ்ட் 21ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்து வருகிறது. ஆனால் சூர்யா தரப்பில் இருந்து அடுத்த படம் இது தான் என்கிற அறிவிப்பு வரவில்லை.

அதற்குள் கார்த்தி நடித்து வரும் “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்தினைத் தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் ராஜேஷ் என்கிற தகவல் தான் இன்றைய பேச்சு.

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் கெளதம் மேனன், லிங்குசாமி, ராஜேஷ் ஆகியோரை தொடர்ந்து இப்பட்டியலில் இணையப் போவது யாரோ தெரியவில்லை.

கடலில் தத்தளித்த 73 இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!

aus

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மிரிஸ்ஸ கடற்பரப்பில் ஊடாக இவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணனியின் வரலாறு..

கூகுளின் தற்போதைய புதிய மென்பொருள் என்ன தெரியுமா “கூகுள் லப்டப் கஃபே”. இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து மடிக்கணனிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மடிக்கணனியின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. சரி அது இருக்கட்டும் இந்த மடிக்கணனிகளை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா?

வரலாற்றை கீழே பாருங்கள்..

முதன் முதலில் மடிக்கணணியை கண்டுபிடித்தவர் அப்பிளின் நிறுவனரான ஸ்டீவ் ஜொப்ஸ் தான். முதல் மடிக்கணனி 1987 ல் வெளிவந்தது இது லினக்ஸ் இல் செயல்பட்டது.

l1

 

இரண்டாவது மடிக்கணனி 1989 ல் MS DOS ல் வெளிவந்தது. அப்போது இதன் விலை மிக அதிகமாக இருந்தது.

2

அப்பிளின் முதல் மடிக்கணனி 1993 ல் தான் வெளிவந்தது.

3

1999 ல் பாம் நிறுவனத்தின் PDA மடிக்கணனி வெளிவந்தது.

4

2000 ல் தான் மைக்ரோ சொப்டின் முதல் மடிக்கணனி வெளியிடப்பட்டது.

5

2002 ல் அதில் சில மாற்றங்களை செய்து டப்லட் பி.சி. என்ற பெயரில் மைக்ரோ சொப்ட் வெளியிட்டது.

6

“மோஷன் கம்பியூட்டர்” நிறுவனத்தின் மடிக்கணனி 2000 ல் வெளிவந்தது ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

7

2010 அப்பிளின் ஐபேட் தான் மடிக்கணனியின் பெருமையை உலகறிய செய்தது.

8

அதன் பின்பு தான் சம்சுங்கும் களத்தில் இறங்கியது.

9

பின்பு 200 டொலருக்கே “அமெசன்” மடிக்கணனி வெளிவந்தது.

10

சொனி 2011 ல் தனது S2 மடிக்கணனி வெளியிட்டது.

9

2012 ல் மைக்ரோ சொப்ட் புதிய மடிக்கணனியை வெளியிட்டு தோல்வி கண்டது.

12

தற்போது அசுஸ் புது வகையான மடிக்கணனியை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது.

13

விஜயை பழிக்குப் பழி வாங்கும் வெங்கட்பிரபு!!

vijay

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படம் பிரியாணி. இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. இது அவருக்கு 100வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

பிரியாணி படத்தை வரும் செப்டம்பர் 6ம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளனர். பிரியாணி படத்தின் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றதை தொடர்ந்து பிரியாணி படமும் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியாணி படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு முதலில் படத்தின் ஹீரோவாக விஜயை நடிக்க வைக்க திட்டமிட்டுயிருந்தார். ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அவருக்கு அடுத்து, கார்த்திக்கு தான் ஹீரோ கதாபாத்திரம் சரியாக பொருந்தும் என முடிவெடுத்த வெங்கட் பிரபு கார்த்தியை படத்தின் ஹீரோவாக்கினார். இதனால், விஜய்க்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது.

விஜய்யிடம் இருந்து கால்ஷீட் கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் வெங்கட்பிரபு விஜய் நடிக்கும் தலைவா ரிலீஸ் தினத்தன்றே தனது பிரியாணி படத்தையும் வெளியிட்டு போட்டி போட முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரியாணி படத்தின் வெற்றியை பார்த்து, இந்த மாதிரி அருமையான படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என விஜய் வருத்தப்படும் அளவிற்கு வெற்றி பெறவேண்டும் என்ற வெறியோடு உழைத்திருக்கிறாராம் வெங்கட்பிரபு.

சச்சின் அளித்த ஊக்கமே என் விரக்தியை போக்கியது: அம்பாதி ராயுடு!!

Royal Challengers Bangalore v Mumbai Indians - IPL

சிம்பாவே அணியுடன் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பெற்ற அம்பாதி ராயுடு ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு உதவினார். 80 முதல்தர போட்டிகளில் விளையாடி 5183 ஓட்டங்கள் குவித்த பிறகே, இந்திய அணியில் அவரால் இடம் பிடிக்க முடிந்துள்ளது.

இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தபோது சச்சின் அளித்த ஊக்கமே தொடர்ந்து விளையாடி சாதிக்க உதவியது என்று அம்பாதி ராயுடு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

திறமையான இளம் வீரரான ராயுடு இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐசிஎல்) தொடரில் விளையாடியதால் கிரிக்கெட் வாரியத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, ரஞ்சி மற்றும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வந்தார்.

இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்தபோது சச்சின் டெண்டுல்கர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ரொபின் சிங் மற்றும் உதவியாளர்கள் அளித்த ஆதரவும் ஊக்கமுமே சிறப்பாக விளையாட உதவியதாக ராயுடு கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் சச்சின் மற்றும் ரொபின்சிங் இருவரும் எனக்கு பல வகையில் உதவி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் அளித்த ஊக்கம் தான் சிறப்பாக விளையாட உறுதுணையாக இருந்தது. இருவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றாவது ஒருநாள் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கும் என உறுதியாக நம்பினேன். கால தாமதம் ஆனாலும் தற்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கோஹ்லியுடன் இணைந்து விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட கடுமையாக உழைப்பேன். இவ்வாறு ராயுடு கூறியுள்ளார்.

ஜப்பான் அணிக்கு எதிராக இலங்கை மகளிர் அணி அபாரம்!!

srilankan

மகளிருக்கான உலக 20-20 தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் மகளிர் அணிக்கெதிராக இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

டப்ளினில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் மகளிர் அணி 18.1 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

முதலாவது பந்திலேயே தனது முதலாவது விக்கெட்டை இழந்த ஜப்பான் மகளிர் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 11 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 8ஆவது விக்கெட்டுக்காக 8 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் ஜப்பான் மகளிர் அணி சார்பாக அயாகோ நாகாயமா 37 பந்துகளில் 12 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்த வீராங்கனையும் 2 ஓட்டங்களுக்கு அதிகமாகப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சண்டிமா குணரத்ன 4 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஸ்ரீபாலி வீரக்கொடி 3 ஓவர்களில் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், இஷானி கௌஷல்யா 4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், ஷஷிகலா சிரிவர்தன, சாமனி செனவிரத்ன இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை இலங்கை மகளிர் அணி 1.4 ஓவர்களில் இலகுவாக அடைந்தது. இலங்கை சார்பாக யசோதா மென்டிஸ் 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 18 ஓட்டங்களையும், சாமரி அத்தப்பத்து 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகியாக இலங்கை சார்பாக 2 விக்கெட்டுக்களையும், 2 ரண் அவுட் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திய இஷானி கௌஷல்யா தெரிவானார். இப்போட்டியின் முடிவையடுத்து இலங்கை அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இத்தொடரில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தகுதிபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவையான ஆந்திரா பாகற்காய் குழம்பு!!

bittergourdcurry

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள கசப்புத் தன்மையால் உடலில் தங்கியுள்ள பூச்சிகள் அனைத்து வெளியேறி சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

அதிலும் இந்த பாகற்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அந்த வகையில் இப்போது ஆந்திரா ஸ்டைலில் எப்படி பாகற்காய் குழம்பு வைப்பது என்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 4-5 (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 1 மேசைகரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
எள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பசை – 2 தேக்கரண்டி
உள்ளி பசை – 2 தேக்கரண்டி
தக்காளி சாறு – 1/4 கோப்பை
சீனி – 2 மேசைக்கரண்டி
புளிச்சாறு – 2 மேசைகரண்டி

செய்முறை..

முதலில் பாகற்காயை நீரில் கழுவி விட்டு அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு வேண்டிய அளவில் நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து கிளறி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து தீயை குறைத்து வைத்து, பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மெதுவாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு 4-5 நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி மற்றும் உள்ளி பசையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, சீனி , புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து 1 கோப்பை தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி.

அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா!!

cinema

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார்.

அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார். இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன், டி.கே.ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கை எய்தி இசை உலகில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.

50 படங்களை இயக்கிய மணிவண்ணன் மரணத்தை முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ராசுமதுரவன் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு பலியானார். ஜெமினி லேப் ஆனந்த் சினி சர்வீஸ் நிர்வாகத்தின் தலைவரும் தயாரிப்பாளருமான ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டது சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து 50 வருடங்கள் தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்த காவியக் கவிஞர் வாலி நம்மை விட்டுச் சென்றது சினிமாவில் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த துக்கம் முடிவதற்குள்ளாகவே மஞ்சுளாவை சினிமா இழந்தது. இப்படி அடுத்தடுத்து சினிமா ஜாம்பவான்கள் மறைந்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மரணம் கடவுளின் கையில் என்றாலும் அடுத்தடுத்து அதை சந்திப்பதால் அது கலைஞர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எடையை குறைக்க ஹன்சிகா தீவிரம்!!

Hansika

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குபின் ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஹன்சிகாவுக்கு மள மளவென்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்தன.

சில இயக்குனர்கள் ஹன்சிகாவின் குண்டான உடம்பை குறைக்குமாறு அறிவுறுத்தினர். அதனால், மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்தும், உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தும், மற்றவர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு சேட்டை படத்தில் காட்சியளித்தார்.

அதையடுத்து உடற்பயிற்சியை நிறுத்தியதால் இப்போது மீண்டும் உடல் குண்டாகி விட்டதாம். இதனால், மறுபடியும் தீவிர பயிற்சி மூலம் 10 கிலோ வரை எடை குறைந்துள்ள அவர் உடம்பை சீராக வைத்திருக்க தினமும் நீச்சல் பயிற்சி எடுக்கிறாராம். மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள யோகா பயிற்சியும் செய்கிறாராம்.

மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை பல மாதங்களாக கற்பழித்த 2 ஆசிரியர்கள்!!

glrl

இந்திய ஹரியானா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் துத்வா கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவியை அவர் படிக்கும் அரசு பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் பல மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து அவர்கள் யாருக்கும் தெரியாமல் 2 மருத்துவ தாதிகளின் உதவியுடன் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். கருகலைப்பு செய்த பிறகு சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தான் அவரது குடும்பத்தாருக்கு நடந்த விவரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரும் கிராமத்தினரும் அவர் படித்த பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பள்ளிக்குள் சில ஆசிரியர்களை பூட்டி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த ஆசிரியர்களை தேடி வருகின்றனர். அந்த 2 ஆசிரியர்களில் ஒருவர் விளையாட்டு ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.