லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகிலேயே அந்தரத்தில் பறந்து வந்தார் மேஜிக்மேன் Dynamo என்பவர். இவர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் பஸ்ஸின் மேற்பகுதியில் வலது கையை மட்டும் தொட்டுக்கொண்டு, ஒரு பறவையை போல பறந்து வந்ததைக்கண்டு, லண்டன் மக்கள் அதிசயித்துடன் பார்த்தனர்.
அமெரிக்காவில் நடந்த ஒரு பிஸ்கட் சாப்பிடும் போட்டியில் பங்குபெற்ற ஒருவர் 413 பிஸ்கட் சாப்பிட்டவுடன் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 415 பிஸ்கட்டுக்கள் சாப்பிட்டு சாதனை புரிய இருப்பதாக சவால் விட்ட Kevin Shalin என்பவர் 413 பிஸ்கட்டுகள் சாப்பிட்டவுடன் திடீரென மயங்கி விழுந்தார்.
கோமா நிலைக்கு சென்ற அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அளவுக்கு அதிகமான வெண்ணெய் அவருடைய உடலில் கலந்ததால், மூளைக்கு ரத்தம் செல்லும் பாதை அடைபட்டதாகவும் எனவே அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
இரண்டே பிஸ்கட்டுகள் சாப்பிட்டிருந்தால் அவர் ஒரு புதிய சாதனையை புரிந்திருப்பார். ஆனால் அதற்குள் அவர் கோமா நிலைக்கு சென்றதால் போட்டி கைவிடப்பட்டது.
அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம், திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மதுபோதையில் தன்னைக் கடிக்க வந்த நாயைக் கடித்து குதறியதால் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று (26) காலை மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரி வீதியூடாக சென்று கொண்டிருந்தவேளை இளைஞனை நாய் துரத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த இளைஞன் துவிச்சக்கர வண்டியை விட்டு இறங்கிச் சென்று நாயைக் கடித்துக் குதறியுள்ளார்.
இதனால் நாய்க்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதோடு குறித்த இளைஞரும் காயமடைந்துள்ளார்.
இரத்தப் போக்கு கரணமாக நாயைக் கடித்த இளைஞன் மயக்கமடைந்துள்ளார்.
அவ் இளைஞன் பிரதேசவாசிகளின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
26 வயதான குறித்த இளைஞன் யாழ். திருநகர் இராஜேந்திரா வீதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் புகலிடக் கோரிக்கைகளின் உண்மைத்தன்மை குறித்து தனக்கு உடன்பாடில்லையென அவுஸ்திரேலிய வலையமைப்பில் உள்ள நியூஸ்லைன் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ் அவர்கள் இலங்கையில் ஆபத்து எதனையும் எதிர்நோக்கவில்லையென்பதில் அவுஸ்திரேலியா நம்பிக்கை கொண்டிருந்ததாலேயே அவர்கள் அவுஸ்திரேலியாவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலியா மட்டும் தனியாக இவ்வாறு திருப்பி அனுப்பவில்லையெனவும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்குத் திரும்பி வருவோரின் பாதுகாப்புக்கு தன்னால் உத்தரவாதம் வழங்க முடியுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையர்கள் பலர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் புகலிடம் கோரி வந்துள்ளனர்.
கடந்த வருடம் குறிப்பிடத்தக்க அளவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா கடற்பரப்பை வந்தடைந்திருந்தனர். ஆயினும் நேர்முகப்பரீட்சையொன்றின் பின்னர் 1200க்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாத நிலையில் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் தாங்கள் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருவதாகக்கூறும் இத்தகைய விண்ணப்பதாரர்களுள் கணிசமானோர் தமிழர்களாவர். ஆயினும் குறித்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதை அடுத்து நாடு ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் பீரிஸ் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் பூரண அமைதி நிலவி வருவதாகவும் எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடானது இலங்கை எட்டியுள்ள சாதனைகளைக் காண்பிக்கும் வாய்ப்பொன்றை நாட்டிற்கு வழங்கவுள்ளதாகவும் எதனையும் நேரில் கண்டு தெளிவதே அதி சிறந்ததெனவும் அந்த வகையில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அனைத்து பொதுநலவாய நாடுகளினதும் பிரதி நிதிகள் அபிவிருத்தி சாதனைகடள நேரில் கண்ணாரக்கண்டு தெளியத்தான் போகின்றதெனவும் மேலும் தெரிவித்தார்.
ஷாஜகான் அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மஹாலை போலவே ஒரு சிறிய தாஜ்மஹாலை முதியவர் ஒருவர் அவரது மனைவி நினைவாக கட்டி வருகிறார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பைசுல் ஹசன் காதிரி (77), இவரது மனைவி பேகம் டாஜ்முல்லி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.மனைவியின் மறைவிற்கு பின்பு அவரது நினைவாக ஒரு சிறிய தாஜ்மஹாலை கட்ட தொடங்கியுள்ள பைசுல்,
அவருக்கு சொந்தமான 5000 சதுர அடி நிலத்தில், ஆக்ராவில் உள்ள நிஜ தாஜ்மஹாலை போலவே சிறிய தாஜ்மஹாலை கட்டிவருகிறார்.இதுவரை இந்த குட்டி தாஜ்மகாலுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
அவரது மனைவியின் நினைவகம் இந்த குட்டி தாஜ்மகாலின் மையப்பகுதியில் அமையுமாறு வடிவமைத்துள்ளார்.மனைவி மீது கொண்ட அதீத அன்பால், குட்டி தாஜ்மகாலை கட்டி வரும் பைசுல், தான் இறந்த பின்பு தன்னையும் மனைவியின் அருகில் அடக்கம் செய்யவேண்டுமென உயில் எழுதிவைத்த்துள்ளராம்.
என்னே இந்த இல்லரத்தம்பதிகளின் இணக்கப்பாடு! திருமணம் -இல்லறரம போன்றவற்றை வெறும் பொழுது போக்காக கருதும் இன்றைய இன்றைய இளசுகளுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கட்டும்.
பேஸ்புக்கில் ஒருவருக்கு 20 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரிய விஐபியாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விஐபி ஒரு அழகான நாய்க்குட்டி. பெயர் ஃபூ மனியா.
இது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இதன் உரிமையாளரின் பெயர் ஜஸ்டின் பைபர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஃபூமனியா உலகின் மிகப் பிரபலமான நாயாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஃபூ வுக்கு தற்போது ஏழு வயதாகிறது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ செல்லப்பிராணி தொடர்பாளராக பணி புரிகிறது இந்த அழகி.
2009ல் ஃபூவிற்கென தனி பேஸ்புக் கணக்கு தொடங்கப் பட்டது. அதில், ஃபூ அழகாக சிரிக்கும் படங்களும், அது செய்யும் சேட்டைகளின் வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அன்றிலிருந்து ஃபூ விற்கு லைக்குகளும், ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனராம். தற்போது கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு உலகின் மிகப் பிரபலமான நாய் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளது ஃபூ.
அழகான மேனி , குட்டிக் கண்கள் என ஃபூவை பார்த்தாலே கவிதைப்பாடத் தோன்றும் . அவ்வளவு அழகான் ஃபூ முதன் முதலில் கலந்து கொண்டது அவலட்சணமான நாய்களுக்கான அழகுப் போட்டியில் தானாம்.
ஜஸ்டின் பைபர் முயற்சியால் அழகு தேவதையாக மாறியதாம் ஃபூ. விளையாட்டாகத் தான் ஃபூவிற்கு பேஸ்புக் பக்கம் ஆரம்பித்தாராம். ஆனால், ஃபூ இன்று இவ்வளவு பிரபலமாகி விட்டது என ஆச்சர்யம் தெரிவிக்கிறார் ஜஸ்டின்.
கடந்த ஏப்ரலில் சில நலம் விரும்பிகள் ஃபூ இறந்து விட்டதாக டுவிட்டரில் செய்தியை பரப்பி விட்டனர். ஆதாரமாக ஃபூ உறங்கும் படம் ஒன்றையும் வெளியிட்டனர். இச்செய்தியைப் படித்த அதன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே ஜஸ்டின் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபூவின் படமொன்றை வெளியிட்டார். அதன் பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர் ஃபூ ரசிகர்கள்.
உலகின் மிக அழகான, பிரபலமான நாய் -ஃபூ என்ற பெயரில் லீ என்பவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். தனியார் விமானம் ஒன்றின் விளம்பர தூதராகவும் சில காலம் ஃபூ இருந்தது.
அழகழகான் உடைகளை போட்டு ஃபூவை விதவிதமாக படம் பிடித்து தான் ரசித்ததோடு அதன் ரசிகர்களும் ரசிக்க செய்கிறார் ஜஸ்டின்.
பிரேசிலில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை பவேலா நகரில் அமைதிப்பேரணி நடந்தது.
இதில் கலந்து சென்ற திருட்டு – போதைப்பொருள் கும்பல் ஒன்று இறுதியில் வழியில் இருந்த கடைகள், வழிப்போக்கர்கள், போராட்டக்காரர்களிடம் வன்முறையில் ஈடுபட்டு கொள்ளையடித்தது.
செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவேலா பொலிசார் கொள்ளை கும்பலை துரத்தியது. அப்போது, வழியில் தடையை ஏற்படுத்திய அந்த கும்பல் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஒரு பொலிசார், ஒரு வழிப்போக்கர் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 7 பேர் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பாவேலா நகரில் போதைப்பொருள் கும்பல் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற காளான் மற்றும் பச்சை பட்டாணி குழம்பு செய்வது எப்படி என்று படித்துப் பார்த்து நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்..
காளான் – 250 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/2 கப்
மிளகாய் தூள் – 3/4 கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 கரண்டி
மல்லி தூள் – 1 கரண்டி
கரம் மசாலா – 3/4 கரண்டி
கடுகு – 3/4 கரண்டி
சீரகம் – 1 கரண்டி
வெந்தயம் – 1/4 கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை..
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி பச்சை பட்டாணியைப் போட்டு நன்கு 10-15 நிமிடம் பட்டாணி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் முந்திரி மற்றும் தேங்காய் சேர்த்து, வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு நைஸாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாக்களானது நன்கு ஒன்று சேர்ந்ததும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கலவையும், எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியில் காளான் மற்றும் பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான காளான் பச்சை பட்டாணி குழம்பு ரெடி.
எல்லோருக்கும் தலையினுள் தான் மூளை உள்ளது. ஆனால் இந்த அதிசயக்குழந்தைக்கோ மூக்கின் மேலே மூளை .இதனால் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த குழந்தையை இக்குழந்தையின் பெற்றோர் பெருங்கவலையடைந்தனர்.
குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதே அவதானிக்க முடிந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்தப் பெற்றோர் குழந்தை பிறந்ததும் மருத்துவர்களின் உதவியை நாடினர் . பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு சத்திர சிகிச்சை மூலம் மூக்கில் இருந்த மூளையை , குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில் பொருத்தி விட்டனர்
மிகவும் நுணுக்கமாக நடந்த இந்த சிகிச்சையில் டாக்டர்கள் வெற்றியும் கண்டனர் .இந்தக் குழந்தையும் தற்சமயம் ஆரோக்கியமாக இருக்கிறதாம்..இதனால் இப்போது தான் இக்குழந்தையின் பெற்றோர் நிம்மதியாக மூச்சு விடுகின்றனராம்.
வட மாகாணத்தில், 1000 இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வடமாகாண சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சம்மேளனமும் தொழிற் பயிற்சி அதிகார சபையும் இந்த பயிற்சிகளை வழங்கவுள்ளன.
நான்கு மாதங்கள் கொண்ட இந்த பயிற்சி நெறியில் வீட்டு மின் இணைப்பு, மேசன் பயிற்சி, தச்சுவேலை, குழாய்பொருத்துதல் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றுள்ளது.இப்பயிற்சி நெறிக்காக வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் யாழ்.மாவட்டத்தில் இருந்து 225 பேர் இப்பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.
மருதங்கேணி, காரைநகர், கைதடி ஆகிய இடங்களில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளதுடன் மருதங்கேணியில் 75 பேருக்கும், கரைநகரில் 50 பேருக்கும், கைதடியில் 100 பேருக்கும் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இப்பயிற்சி நெறியினைப் பெறுபவர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் 7000 ஆயிரம் ரூபாவும் வடமாகாண சபை 3000 ஆயிரம் ரூபாவும் வழங்க இணங்கியுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளைத் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி நெறி எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும்; இதில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்த இந்திய மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளின் காரணமாக இலங்கையுடனான உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் யஸ்வந்த் சிங் சுட்டிக் காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்கான அச்சுறுத்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹல்லால் நேருவின் எல்லை தொடர்பான கொள்கைகளினால் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் முறுகல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் கிடைக்கப் பெற்று 66 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தியா எல்லை நிர்ணயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழுவினரும், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி குழுவினரும் சந்தித்து தீவிர கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தெஹிவளையில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தலைவர் இரா. சம்பந்தன், பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சுமந்திரன் எம்பி, கே. சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் தலைவர் மனோ கணேசன், உதவி பொதுசெயலாளர் சண். குகவரதன், ஊடக செயலாளர் பாஸ்கரா சின்னத்தம்பி, நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தம், வட மாகாணசபை தேர்தல் ஆகியவை தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டன.
அதேபோல் சிங்கள முற்போக்கு மற்றும் ஜனநாயக கட்சிகளுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வருவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
வவுனியா பசார் வீதி, பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை (25) வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் இருந்து பசார் வீதியை நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோட்டர் சைக்கிளை செலுத்திவந்த கணவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
பின்னால் வந்து மோதிய மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர் மது போதையில் வந்ததாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.
மது போதையில் வந்த இளைஞனை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.