வெளிநாடு செல்ல முயன்ற இனைஞனின் விபரீத முடிவு!!

புத்தளத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தல் பகுதியை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் வெளியில் சென்ற நிலையில் தந்தை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றுக்குள் உயிரை மாய்த்துள்ளார்.

உடனடியாக அவரை முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார். இதற்காக வீட்டில் பணம் கேட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பணம் இல்லை எனவும் அதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக தந்தை தெரிவித்திருந்த போதும் இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் (18) ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சிறுவனது வீட்டிற்கு விரைந்து சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் இளைஞனை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞன் : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடனேயே தென்னிலங்கை இளைஞர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த தென்னிலங்கை இளைஞர் கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார் இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு இரவல் கேட்டுள்ளார்.

தென்னிலங்கையருடன் நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 Black Color பெறுமதி ரூபா 700,000 , வகை மோட்டார் சைக்கிளை கரணவாய் சோழங்கன் இளைஞர் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான தென்னிலங்கை இளைஞரின் தொலைபேசியும் இயங்கவில்லை என்பதுடன் , அவர் பணிபுரிந்த பூ கடைக்கும் குறித்த இளைஞர் வருவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யாழ் இளைஞர் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸாரிடச்ம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நடுரோட்டில் மனைவியை தீவைத்து எரித்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி 19ம் தேதி காலை, ஸ்கூட்டியில் ஆரத்தி தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அவரது கணவர் அவரை வழிமறித்து ஆரத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

ஆரத்தியின் அலறல் சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு வந்து , எரிந்துக் கொண்டிருந்த ஆரத்தியை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு, உடனடியாக சேர்த்தலாவில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் ஆரத்தி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஷியாம்ஜித் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆரத்தியுடன் தீயில் சிக்கிய ஷியாம்ஜித்துக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடம் புரியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் : கதறும் பெற்றோர்!!

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் கணித பாடம் புரியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரியின் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் (19).
இவர் நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய்யின் அறை கதவை அவரது தாய் தட்டியுள்ளார். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அஜய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் சன்னல் வழியாக உள்ளே சென்று அஜயை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், அஜய்க்கு கணித பாடம் புரியாததால் குழப்பத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் தனது சித்தியிடம் கூறி கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த விடயம் வெளிநாட்டில் இருக்கும் தந்தைக்கு தெரிந்தால் கோபப்படுவார் என்று பயந்து அஜய் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தெரியவந்ததும் கடையின் உரிமையாளர் கல்லஞ்சியாகமவில் உள்ள வீட்டு மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த பனிஸை அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரே கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும், இருவரும் பனிஸ் பாக்கெட்டை சேவை நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதை சாப்பிடுவதற்காக ஒரு துண்டை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது, அதில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து இப்பலோகம பொது சுகாதார அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்தலில், தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இயங்கி வரும் இந்த பேக்கரியிலேயே பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டி பொலிஸாரை அச்சுறுத்திய பெண்கள்!!

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் புதையல் தேடுவதற்காக நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு சென்ற மதவாச்சி பொலிஸாரை வீட்டினுள் நுழையவிடாது மூன்று பெண்கள் கைகளை அறுத்து அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியை சேர்ந்த தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உளவு பார்த்த தாய், மகள் மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமான மக்கள் அவரது மரணம் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்!!

யாழ்ப்பாணம் காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிக்கப்பட்ட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலின் பரீட்சார்த்த பயணம் யாழ்ப்பணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து இன்றைய தினம் (19.02) முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதேவெளை யாழில் தயாரிக்கப்பட்ட இந்த சொகுசு கப்பல் சூரிய மின் சக்தி வசதியை கொண்டதாகும்.

இந்நிலையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் – காரைநகரில் இவ்வாறான ஓர் கப்பல் கட்டும் தொழில்சாலை உள்ளமை யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

தாய் மற்றும் மகள் கொலையில் சந்தேக நபருக்கு மரண தண்டனை!!

கொட்டகெத்தனவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (19.02) தீர்ப்பளித்தது.

கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு குறித்த கொலச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், 12 ஆண்டுகளின் பின்னர் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்த 4 மாதக் கைக்குழந்தை!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம்கேட்ட மகனை கொலை செய்த தந்தை : இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை , தந்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் தெரீலங்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கும்புக்கெட்டிய, வெல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் நேற்று (18.02) வழமைப்போல போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் தந்தை , தனது மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு : தவிக்கும் குடும்பம்!!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.

திருமணமாகி 90 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கணவன் : தவிக்கும் மனைவி!!

கொழும்பின் புறநகர் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ – பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

டிப் சுவிட்ச் செயலிழந்த மின் விநியோகத்தில் இருந்து பாதுகாப்பற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஷ்க விஜயதுங்க என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவர்!!

வெலிமடை டயரபாவத்தை, மேல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெண்ணின் கணவரே கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

36 வயதான டயரபாவத்தை மேல் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை கொடூரமாக தாக்கி பின்னர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய இரண்டு யுவதிகள் : பிரான்ஸிலிருந்து நடக்கும் கடத்தல்!!

பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின் கும்பலுடன் தொடர்புடைய 2 யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​போதைப்பொருள் உட்கொள்ள வந்த மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுடன், 250 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 15 போதை மாத்திரைகள், இலத்திரனியல் தராசு, சுருட்டு சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் காகிதம், 8 கையடக்கத் தொலைபேசிகள், 2 லைட்டர்கள் மற்றும் போதைப்பொருள் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் பொலத்தீன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.