கல்விக்கட்டணம் செலுத்தாததால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

நெல்லையில்..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனியார் நிறுவனங்களில் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன், சுர்ஜித். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதில் நரேன் 9ம் வகுப்பு படித்து வந்தார் டிசம்பர் 4 ம் தேதி காலையில் நரேன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சுர்ஜித் மட்டும் பள்ளிக்கு சென்று இருந்தார்.

பள்ளி முடிந்ததும் மாரியம்மாள் மாலையில் சுர்ஜித்தை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.மாரியம்மாள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் நரேன் திறக்கவில்லை. உடனே அங்கு வந்த நாகராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது நரேன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த நரேனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நரேனின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள், பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மாணவன் நரேனின் பெற்றோர் “பொருளாதார சூழ்நிலையால் நரேனுக்கு டிசம்பரில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதுகுறித்து நாங்கள் பள்ளி ஆசிரியர், முதல்வரிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள் தொடர்ந்து கட்டணத்தை செலுத்துமாறு வலியுறுத்தினர்.

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவர் 2ம் தேதி பள்ளிக்கு சென்ற நரேனிடம், கல்வி கட்டணத்தை செலுத்தும் படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நரேன் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவன் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம். பள்ளி ஆசிரியர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி நிர்வாகத்திடம், நரேனின் பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

50 சவரன் நகை கொடுத்தும் போதாது போதாது என காதல் மனைவியை காரில் இழுத்துச் சென்ற கொடூர கணவன்!!

கன்னியாகுமரியில்..

வரதட்சணை கேட்டு காதல் மனைவியை காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள அமந்தகரை பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முடார் பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், குடும்பத்தை சமாதானம் செய்த அபிஷா, 2021ல் பெர்லினில் திருமணம் செய்து கொண்டார்.

அபிஷாவின் தந்தை, மகளின் திருமணத்தின் போது, ​​மகளுக்கு ரூ.50 சவரன் நகை மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஓவியராக இருக்கும் பெர்லின் முழு நேர வேலை இல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, நண்பர்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார்.

மேலும், அபிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இந்நிலையில், அபிஷா கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​அவ்வழியாக காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்து தாக்கினார். மேலும், அவர் தனது மனைவியை காரில் இழுத்துச் சென்றார். இதனால் அபிஷா அலறி துடித்தார். இதை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சில வாலிபர்கள் காரை துரத்திச் சென்றனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு ஓடினார். இதில் அபிஷா கீழே விழுந்து சிறு காயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீலகிரியில்..

கல்லூரி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி-மல்லிகா தம்பதி. கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா (25), ஸ்ரீநிதி (21) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கோவையில் ஸ்ரீநிதி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை ஸ்ரீநிதியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஸ்ரீநிதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மதியம் ஸ்ரீநிதியின் தந்தை கணேசமூர்த்தி ஸ்ரீநிதிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக போன் செய்தும் பதில் வராததால், மகள் வீட்டில் இருக்கிறாரா என அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ​​நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் ஜன்னல் வழியாக அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.

அப்போது, ​​ஸ்ரீநிதி வீட்டின் அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய லொட்டரி!!

துபாயில்..

பல ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவருக்கு மிகப்பாரிய ஜாக்பாட் அடித்துள்ளது.துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது.

Dubai Duty Free (DDF) Millennium Millionaireல் கோபால் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 32,28,85,000 ஆகும்.59 வயதான கோபால் தற்போது மும்பையில் இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் திகதி DDFன் 40வது ஆண்டு விழாவில் டிக்கெட் எண் 3082 ஆன்லைனில் வாங்கியதாக அவர் கூறினார்.

23 வருடமாக ஒவ்வொரு வருடமும் DDF டிக்கெட் வாங்குவது என்னுடைய தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. இந்த வருடமும் டிக்கட் வாங்கினேன், இம்முறை டிக்கெட் எண் 3082 என்னை கோடீஸ்வரனாக்கியது. விரைவில் துபாய் சென்று பரிசுத்தொகையை வாங்க உள்ளதாக கோபால் கூறியுள்ளார்.

23 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருவதாக கூறும் கோபால்,1999-ல் DDF தனது முதல் டிராவை நடத்தியபோது அவர் அங்கு இருந்ததாக கூறினார். அப்போது ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது, டிக்கெட் வாங்க வரிசையில் பொறுமையாக நிற்க வேண்டும் என்றார்.

DDF டிக்கெட்டுகளை முதலில் வாங்கியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றோம், முதல் டிராவில் எனக்கு முன்னால் இருந்தவர் வெற்றி பெற்றார்.அடுத்ததாக அந்த அதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று உணர்ந்தேன். அதனால் ஒவ்வொரு வருடமும் டிக்கெட் வாங்கிட்டு இருந்தேன். இப்போது பரிசு விழுந்துவிட்டது.

நவம்பர் 1999-ல் Dubai Duty Free லொட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து 1 மில்லியன் டொலர் பரிசை வென்ற 222வது இந்திய நாட்டவர் கோபால் ஆனார்.2015-க்குப் பிறகு துபாய்க்குப் போகவே இல்லை என்றும் ஆனால் துபாயுடனான தனது தொடர்பு முறிக்கப்படவில்லை என்றும் கோபால் கூறுகிறார்.

மும்பை வந்த பிறகும் ஆண்டுதோறும் DDF டிக்கெட் வாங்கத் தவறவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தோல்வியால் தான் ஏமாற்றமடையவில்லை என்று கோபால் கூறினார்.தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளதால், நிலுவையில் உள்ள பல பணிகளை செய்து முடிப்பதோடு, தொண்டு செய்வதாகவும் கூறியுள்ளார்.

நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : அதிர்ச்சி வீடியோ!!

அமெரிக்காவில்..

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம், 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் உள்ள போர்ட்லேண்டில் தரையிறங்கியது. அப்போது திடீரென வெளியேறும் கதவு மற்றும் அருகிலுள்ள ஆளில்லாத இருக்கை ஆகியவை நடுவானில் பறந்தன. யாரேனும் காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் விமானத்தின் பின்புற மிட் கேபின் வெளியேறும் கதவு சுவர் காணாமல் போனதைக் காட்டியது. இந்த கதவு முதலில் வெளியேற்றும் நோக்கத்திற்காக இருந்தது, ஆனால் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் செயல்படுத்தப்படவில்லை மற்றும் நிரந்தரமாக “பிளக்” செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் போயிங் 737-9 MAX மூலம் இயக்கப்பட்டது, இது ஒன்ராறியோவுக்குச் சென்றது, புறப்பட்ட உடனேயே சம்பவத்தை அனுபவித்து, மாலை 5:26 மணிக்கு (உள்ளூர் நேரம்) போர்ட்லேண்டில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் பறக்கும் போது 16,000 அடி உயரத்திற்கு உயர்ந்தது, பின்னர் திடீரென கீழே இறங்கத் தொடங்கியது என்று விமான ஆய்வாளர்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பயணிகள் தங்களின் வேதனையான அனுபவத்தை, இது ஒரு கனவு என்று கூறினர். 22 வயதான பயணி ஒருவர் நியூயார்க் டைம்ஸிடம், “நான் கண்களைத் திறக்கிறேன், முதலில் நான் பார்ப்பது எனக்கு முன்னால் உள்ள ஆக்ஸிஜன் முகமூடியைத்தான். நான் இடது பக்கம் பார்க்கிறேன், விமானத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் போய்விட்டது. நான் முதலில் நினைத்தது, ‘நான் இறக்கப் போகிறேன்’.

தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட விபரீதம்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேந்தவர் தம்மையா. இவர் பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் லைசென்சுடன் துப்பாக்கி வைத்துள்ளார்.

இவரது மகன் விஷ்ணு உத்தப்பா, முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில், படிப்பு தொடர்பாக விஷ்ணுவுக்கும், அவரது தாயாருக்கும் இடையே கடந்த 3ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவை, தாய் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று தம்மையா, அவரது மனைவி இருவரும் வெளியே சென்றதாக தெரிகிறது. வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு, தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு இறந்தார். இன்று பிற்பகல் வீடு திரும்பிய தம்மையாவும், அவரது மனைவியும் மகன் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து பெங்களூரு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்ற இளம்பெண்.. மூன்று நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் மக்கட்டா அருகே உள்ள மரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி விமலேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பிரியங்கா (23) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலை கோபமாக வீட்டில் இருந்து வெளியே வந்த பிரியங்கா வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது பிரியங்காவின் காலணிகள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயி கிணறு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் சந்தேகமடைந்த பிரியங்காவின் பெற்றோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் தேடியும் பிரியங்காவை காணாததால் தீயணைப்பு துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரியங்காவின் உறவினர்களும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.பிரியங்கா காணாமல் போன மூன்றாவது நாளான இன்று, விடியற்காலையில் பிரியங்காவின் தாத்தா கிணற்றைப் பார்த்துள்ளார்.

அப்போது பிரியங்காவின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபல பணக்காரர் மனைவி, மகளை சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா கமல் (54). இந்த தம்பதிக்கு அரினா கமல் (18) என்ற மகள் இருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில் பெரும் பணக்காரராக உள்ளார். ராகேஷ் கமல், குடும்பத்துடன் டொவர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, டிசம்பர் 28-ம் தேதி பண்ணை வீட்டில் ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா கமல், மகள் அரினா கமல் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்துகொண்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ராகேஷ் கமல் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ராகேஷ் அருகே கைத்துப்பாக்கி கிடந்துள்ளது.

அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தடயவியல் சோதனை மேற்கொண்டனர். மேலும், 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் ராகேஷ் கமல், மனைவி டீனா கமல், மகள் அரினாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ராகேஷ் கமலுக்கு சொந்தமானது அல்ல என்பதும், துப்பாக்கி வைத்துக்கொள்ள ராகேஷுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இந்தியவம்சாவளி பணக்காரர் ராகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பாணியில் பரபரப்பாக நடந்த திருமணம்.. காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

கர்நாடகாவில்..

அம்ரிதா [23] கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர். பல்லாரி சிறுகுப்ப தெக்கலக்கோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் [25]. இருவரும் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறி காதலாக மாறியது.

இந்நிலையில் சிவபிரசாத் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு அம்ரிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அம்ரிதாவை வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தா, வீட்டை விட்டு வெளியேறி சிறுகுப்பா சென்றார். அங்கு காத்திருந்த சிவபிரசாத், அமிர்தா ஆகியோரும் காரில் புறப்பட்டனர். வாகனம் ஓட்டும்போது இருவரும் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பின்னர் அமிர்தாவின் கழுத்தில் சிவபிரசாத் தாலி கட்டினார்.

இதையடுத்து காதல் கொடி பாதுகாப்பு கேட்டு நள்ளிரவில் தேகலகோட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரவு நேரம் என்பதால் போலீசார் அமிர்தாவை மகளிர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையறிந்த அமிர்தாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதனம் செய்ய முயன்றனர். ஆனால் போலீசார் முன்னிலையில் அமிர்தாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.

ஆனால் அமிர்தா பெற்றோருடன் செல்ல மறுத்தார். காதல் கணவனுடன் வாழ்வேன் என அம்ரிதா தெரிவிக்கையில் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை பார்த்த காதல் ஜோடி திகைத்து நின்றனர்.

காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்.. பதறிய பொதுமக்கள்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும், விடாமல் வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா கடந்த 2021ம் ஆண்டு பெர்லினை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின் தந்தை தனது மகளுக்குச் சீதனமாகக் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓவியரான பெர்லினுக்கு முழு நேர வேலை என்ற ஒன்று இல்லாமல் இருந்துள்ளது. அதோடு, நண்பர்களுடன் ஊர் சுற்றி பொழுதைக் கழித்து வந்துள்ளார். மேலும், அவர் அபிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை பொறுக்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. அதேபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், உதவிப் பேராசிரியையாக பணிக்குச் சேர்ந்து சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து அபிஷா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்துத் தாக்கினார்.

மேலும், மனைவியை தரதரவென காரில் இருந்தபடியே இழுத்துச் சென்றார். இதில் அபிஷா அலறி கூச்சல் போட்டார். இதைப் பார்த்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்திச் சென்றனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றார். கீழே விழுந்த அபிஷாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்!!

கோவில்பட்டியில்..

கோவில்பட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர், பொதுமக்கள் பிடியில் இருந்து இன்று தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).

இந்த நிலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் இன்னாசிமுத்து வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட கிராம மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அத்துடன் அக்கம் பக்கத்தினர், இன்னாசிமுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த இன்னாசிமுத்து அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மனைவியைக் கொலை செய்து இன்னாசிமுத்து வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகமடைந்தனர். இந்த நிலையில், விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், மருதம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருதம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரைக் கொலை செய்த இன்னாசிமுத்து எங்கே என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ ஷூட்டுக்கு மறுத்த பெற்றோர்… விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, புது வருஷத்தில் மால் ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி படித்து வரும் மகளிடம், புது வருட கூட்டத்தில் வேண்டாம்… பிறகொரு நாளில் எடுத்துக் கொள் என்று பெற்றோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததால் கல்லூரி மாணவி வர்ஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சுதாமா நகரில் வசித்து வருபவர் வர்ஷினி (21). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வரும் வர்ஷினி, போட்டோக்ராஃபி படிப்பும் படித்துள்ளார். இந்த சூழலில் போட்டோஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி இப்படி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை புத்தாண்டுக்காக மாலில் இருந்து போட்டோஷூட் எடுக்க எண்ணியுள்ளார். இதனை தனது பெற்றோரிடம் ஞாயிற்றுகிழமை காலையில் கூறவே, அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். அப்படியும் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாணவியின் செல்போனை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் அழகி சுட்டுக்கொலை : ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய போலீஸாருக்கு உதவியதால் ஆத்திரம்!!

மும்பையில்..

மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 7-ம் தேதி, ரவுடி சந்தீப் கடோலி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை ஓட்டலில் கடோலியை குறிவைத்துப் பிடிக்க, அவரது தோழியும் மாடல் அழகியுமான 27 வயதான திவ்யா பஹுஜா பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், காவல் துறையினருடனான போலி என்கவுன்டரில் கடோலி கொல்லப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சந்தீப் கடோலியை சுட்டுக் கொன்றதாக திவ்யா பஹுஜா, இவரது தாயார் மற்றும் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக திவ்யா பஹுஜா சிறையில் இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் திவ்யா பஹுஜாவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர், திவ்யா பஹுஜாவை, குருகிராமில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு திடீரென அந்த கும்பல் அவரை தலையில் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது சடலத்தை ஓட்டல் அறையில் இருந்து இருவர் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஹரியாணா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திவ்யா பஹுஜா, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள பல்தேவ் நகரைச் சேர்ந்தவர். கடோலி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடன் ஓட்டல் அறையில் அவர் இருந்துள்ளார். சந்தீப் கடோலி கொலை விவகாரத்தில், போலீஸார் மற்றும் ரவுடிக் கும்பல் ஆகிய தரப்புக்கும் மாடல் அழகி திவ்யா பஹுஜா பலிகடாவாகியுள்ளார்.

வவுனியாவில் கடும் பனி : ஒளியைப் பாய்ச்சியபடி செல்லும் வாகனங்கள்!!

வவுனியாவில் இன்று (07.01.2024) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரணொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் நேற்று இரவு கனரக வாகனங்கள் சகிதம் வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் நிரந்தரமாக பாரியளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10 இல் 5 : யாழில் ஜனாதிபதி!!

யாழில் ..

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதாக சொன்ன 10′ 000 ரூபாவில் , 5’000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் , இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.