இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையில்..

கடையொன்றில் டின் மீன் கொள்வனவு செய்த நபரொருவர், ரின் மீனில் தூண்டிகொக்கி இருந்ததைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.வாங்கிய டின் மீனை வீட்டிற்கு திறந்து பார்த்தபோது அதனுள் தூண்டில் கொக்கி ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

இந்நிலையில் ரின் மீனில் தூண்டில் கொக்கி இருப்பதை புகைப்படம் எடுத்த நபர் அதனை முகநூலில் பதிவிட்டுள்ள நிலையில் , சமூகவலைத்தளவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உணவு பொதியிடுவோரின் அசண்டை காரணமாக இவ்வாறான சம்பங்கள் இடம்பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும் பொருட்கள்!!

யாழில்..

சமீப காலமாக யாழ். வடமராட்சி – கிழக்கில் தொடர்ச்சியாக சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.அந்தவகையில், இன்று (06.01.2024) அதிகாலையில் யாழ். வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் காணப்படும் கடற்றொழில் திணைக்களத்தின் பதிவு இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதால் அந்த படகை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை, வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும் நாகர்கோவில் பகுதியில் மரத்தினாலான மிதப்பு மற்றும் மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நண்பரால் போதைப்பொருள் பாவிக்க பழகிய மாணவனின் பரிதாப நிலை!!

மாத்தறையில்..

மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவன் கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் 6 மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை தேடுவதற்காக புகைப்படக் கலைஞரான தனது தந்தையின் கமராவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் சுற்றித் திரியும் காதலர்கள் மற்றும் மக்களைப் படம்பிடித்து விற்பனை செய்வதாக குறித்த மாணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் யுவதி!!

நோர்வேயில்..

நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி உயிரிழந்த யுவதியின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 ஆம் திகதி நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் முன்னாள் காதலனால் , பல் மருத்துவரான குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக நோர்வே பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரான இளைஞரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காருக்குள்ளிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ,அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவெளை கொலை சந்தேக நபரான இளைஞர் தொடர்பில் யுவதி, பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து, அவரை தொடர்பு கொள்ள இளைஞருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பு அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து : இருவர் பலி!!

கொழும்பில்..

திருகோணமலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி – திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் பேருந்துடன் மோதிய மற்றுமொரு வேன் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது வேனில் வெளிநாட்டு பயணிகள் குழுவொன்று இருந்ததாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொன்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் ஐனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் ஐனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்குநேற்று (05.01.2024) காலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டபோது தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இக் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்ற 10 வயதுச் சிறுமி!!

இந்தியாவில்…

ஐயப்பசாமியை தரிசனம் செய்ய இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் ஐயப்ப சாமிகள் சென்றுவருகின்றனர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல தயாராகிவிடுவார்கள். அந்தவகையில், இலங்கையில் இருந்த் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்து பல்லரும் ஐயப்பசாமியை தரிசிக்க இந்தியா செல்வது வழமை.

ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது முதல் தரிசனம்
இந்த நிலையில் 10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு தனது தந்தையுடன் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

குறித்த சிறுமி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளார் எனவும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மலையகப் பெண்!!

மலையகத்தில்..

உலக சாதனைப்புத்தகத்தில் தனது கவித்திறனால் இடம்பிடித்து இலங்கைகக்கு பெருமைசேர்த்துள்ளார் மலையகப் பெண்னான ஷாருலதா பாலகிருஷ்ணன் என்பவர்.

இந்தியாவின் தமிழ் தொண்டன் பைந்தமிழ் சங்கம் மற்றும் நிலாவட்டம் இலக்கிய அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த 100 கவிஞர்களின் தலா 100 கவிதைகள் கொண்ட “பத்தாயிரம் கவிதைகள்” அடங்கிய “கவித்தேனருவி” எனும் கவிதை தொகுப்பு நூலானது உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்நிகழ்வானது கடந்த (2023.11.23) ஆம் திகதி வட சென்னையில் இடம்பெற்றுள்ளது.பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்கள் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.குறித்த கவிதை நூலில் மலையகத்தைச் சேர்ந்த பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்களின் “எண்ணத்தின் கிறுக்கல்கள்’ எனும் கவிதை நூலும் இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!

புத்தளத்தில்…

புத்தளம் பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது இன்று(05.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அனுர மங்கள குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத விரிவுரையாளரினால் ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்!!

திம்புலாகலையில்..

மத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் மற்றும் அவரது மனைவி விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாகவும் நுவரகலைச் சேர்ந்த சுமார் ஐந்து பேரும் கலந்து கொண்ட நிலையில் பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் விரிவுரைகளில் பங்கேற்றாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெண் பலருக்கு விரிவுரைகளை வழங்கியதுடன் மத தத்துவத்தை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விரிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான வீட்டில் சுமார் ஆறு வருடங்களாக வாடகைக்கு தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 28ஆம் திகதி ருவன் பிரசன்ன ஒரு வகை விஷத்தை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் அதே முறையில் உயிரை மாய்த்துக் கொண்டனர்.சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகளில் கலந்து கொண்ட பலர் பொலன்னறுவையின் பல பிரதேசங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம் வெளியானது!!

கொழும்பில்..

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த தாய், மகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை வங்கியின் பெரகம கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய 30 வயதான உமேஷிகா மதுமி மற்றும் 56 வயதான அவரின் தாய் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இவர்கள் அம்பலாந்தோட்டை பெரகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மகள் கொழும்பில் இருந்து இலங்கை வங்கியின் நலன்புரி வேனில் தனது தாயை வைத்தியரிடம் அழைத்து சென்று பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை : வெளியானது சுற்றறிக்கை!!

இலங்கையில்..

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக் காரணத்திற்காகவும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் தகவலையும் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வாரியத்தின் இரகசிய தகவல்களை வெளியிடுவது, தவறான அல்லது அரசியல் அவதூறு விஷயங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது ஆகியவை ஒழுங்கு விதிகளின்படி கடுமையான குற்றமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த சுழற்சிக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விமானப்படை தளத்தினை காணொளி எடுத்த 18 வயது இளைஞன் கைது!!

வடக்கிற்கு விஐயம் மேற்கொண்ட ஐனாதிபதி வவுனியாவிற்கு இன்று (05.01.2024) விஐயம் மேற்கொண்ட நிலையில் வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி ஏற்பாடுகளை கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமையினை அவதானித்த விமானப்படைத்தள பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த 18வயதுடையவராவர். இவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : இருவர் கைது!!

வவுனியாவிற்கு இன்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் மாநகரசபை கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதி வருகைதந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காறர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இக் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யாழில் தம்பதியின் மோசமான செயல் : பொறி வைத்துப்பிடித்த பொலிஸார்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 15 லீற்றர் கசிப்பினைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இலங்கை இளைஞன் ஒருவர் படும் துயரம் : குப்பை மேட்டில் வாழும் அவலம்!!

வெளிநாட்டில்..

இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அந்த இளைஞன் உட்பட பெருமளவிலான இளைஞர்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேவேளை கடத்தல்காரர்களிடம் சிக்கிய ஏனைய இலங்கை இளைஞர்கள் ஓமானில் பல்வேறு இடங்களில் அவதிப்பட்டு வருவதாக புலஸ்தி சானக தெரிவித்தார்.

ஓமன் நாட்டில் பல இடங்களில் தங்கி இருந்தும், 6 மாதங்களாக குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்ட உடைந்த லொரியில் தான் வாழ்ந்து வருவதாகவும், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள் தான் தன்னை காப்பாற்றி வருவதாகவும் மிகுந்த வேதனையுடன் கூறினார்.

எனினும் இது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், பல மாதங்களாக வயிற்றில் ஒரு சோறு கூட இல்லாமல் தவிப்பதாகவும் முடிந்தவரை ஓமானில் உள்ள யாராவது தமக்கு உதவுமாறும் புலசத்தி கோருவதுடன், தன்னை இலங்கைக்கு இதிப்பி அழைத்து வர யாராவது உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.