வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் 1மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி வயது 31 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது 0770780766.
வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலையத்தில் உள்ள சுவரொன்று நேற்று காலை இடிந்து வீழ்ந்ததில் 6 வயது மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள சுவர் இவ்வாறாக இடிந்து வீழ்ந்ததில் மேலும் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய, வேரகொட வித்தியாலையத்தில் உள்ள சுவரொன்று இடிந்து வீழ்ந்ததில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 6 சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷெஹான்சா நெத்சரணி எனும் 6 வயது மாணவி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த மாணவியின் ஆறாவது பிறந்தநாள் நேற்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் மரணத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள பெற்றோர் மற்றும் மக்கள், பாடசாலையிலுள்ள ஆசிரியர் மற்றும் அதிபரை தாக்க முற்பட்டுள்ளனர்.
இலங்கையில் தொடர்ந்து வரும் சீரற்ற வானிலை காரணமாக 5 வருட பழைமையான இந்த சுவார் இடிந்து வீழ்ந்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வேரகொட வித்தியாலையத்தில் இன்று இடம்பெற்ற விபத்துக்கு, பாடாசாலையின் கவனயீனமே காரணமென பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொல்கசோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த காஞ்சனா சுபாசினி லொகுஹேவகே என்ற 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தேசிய பயிலுனர் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபையில் முகாமைத்துவ உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிய,
பாஷினி, குழந்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.அவர் மூன்று வயது மகளின் தாய் எனவும் எதிர்பாராத நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லபட்ட மாடுகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (16.11) காலை 5 மணியளவில் மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றினை வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் அதில் சோதனையினை முன்னெடுத்தனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடுகள் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது. இதனையடுத்து, குறித்த வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த விசேட அதிரடிபடையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அத்துடன் வாகனத்தில் இருந்து 8 பசு மாடுகள் உட்பட 14 மாடுகள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அவற்றை கடத்திச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பமாக, மனைவியே தனது ஆண் நண்பர் மூலம் திட்டமிட்டு படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 12-ம் தேதி தீபாவளியன்று, குடும்பத்துடன் டூவீலரில் வெளியேவந்த பேக்கரி உரிமையாளர் சிவக்குமார் (வயது 42) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்டதாக அவரின் மனைவி காளீஸ்வரி அளித்த சாட்சியத்தின்படி, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்திவந்தனர்.
இந்நிலையில், போலீஸாரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, சிவகுமாரின் மனைவி காளீஸ்வரியே தனது ஆண் நண்பருடன் இணைந்து இந்தக் கொலையை அரங்கேற்றியிருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “ராஜபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
முதல் மனைவியுடனான திருமண உறவு விவாகரத்தான நிலையில், பேக்கரிக் கடையில் பணியாற்றிய காளீஸ்வரி (வயது 23) என்ற பெண்ணையே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவரை நிர்வாகியாகக்கொண்டு அறக்கட்டளை ஒன்றையும் சிவக்குமார் நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையில் ஒத்தப்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் உறுப்பினராக உள்ளார். ஐயப்பன் யோகா மற்றும் தற்காப்பு கலை பயிற்சியாளர் ஆவார்.
பணவசதி கொண்ட சிவக்குமார், பல பெரிய மனிதர்களுடன் தொடர்புடையவர் போல தன்னை காட்டிக்கொண்டதை நம்பிய ஐயப்பன், தனக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கடந்த ஆண்டு ரூ.6 லட்சம் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை வாங்கித்தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த ஐயப்பன் தான் கொடுத்த பணத்தையாவது திருப்பித்தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால், பணம் தராமலும் சிவக்குமார் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், சென்னைக்கு சென்ற சிவக்குமாரை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அவரின் மனைவி காளீஸ்வரியிடம் பணத்தை திருப்பித்தருமாறு ஐயப்பன் கேட்டுள்ளார். தொடர்ந்து, காளீஸ்வரி மூலமாக சிவக்குமாரை தொடர்பு கொண்டுபேசியபோது, தான் பணத்தை திருப்பிக்கொடுக்கும் வரை தனது வீட்டின் கீழே உள்ள அறையில் தங்கிக்கொள்ளுமாறு ஐயப்பனிடம் அவர் சொன்னதாக கூறப்படுகிறது’.
ஏற்கெனவே தனது 5 வயது மகனுடன் வீட்டில் தனியே வசித்துவந்த காளீஸ்வரி, திருமணத்தை மீறிய உறவில் ஐயப்பனுடன் நெருங்கி பழகியுள்ளார். தொடர்ந்து, ஐயப்பனுடன் இணைந்து வாழ விரும்பிய அவர், அதற்கு இடையூறாக இருக்கும் தனது கணவர் சிவக்குமாரை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார்.
இதற்காக, தனது ஆண் நண்பர் ஐயப்பனுடன் இணைந்து தீட்டிய திட்டத்தின்படி, தீபாவளி பண்டிகையன்று ஊருக்கு வந்த சிவக்குமாரை, தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதிக்கு காளீஸ்வரி அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சொந்த நிலத்தை பார்வையிட்டுவிட்டு திரும்பி வந்த போது தான், ஐயப்பன் தனது உதவியாளர்களான மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அழகாபுரியை சேர்ந்த மருதுபாண்டி ஆகியோரை அனுப்பி சிவக்குமாரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.
கணவர் கொலை செய்யப்பட்டதை ஐயப்பனுக்கு செல்போன் மூலம் தெரிவித்த காளிஸ்வரி, அதன்பின் போனில் இருந்து ஐயப்பனின் எண்ணை அழித்துள்ளார். தகவல் அறிந்துவந்த ஐயப்பன், தனக்கு எதுவும் தெரியாததுபோல, அரசு மருத்துவமனையில் சிவக்குமார் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, இறுதிச்சடங்கு முடியும் வரையிலும் உடன் இருந்துள்ளார்.
கொலை சம்பவம் குறித்த விசாரணையின்போது காளீஸ்வரி முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியதால், காளீஸ்வரி மீது போலீஸூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, காளீஸ்வரி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை ஆய்வுக்குட்படுத்தியதில் காளீஸ்வரியும், ஐயப்பனும் கொலை சம்பவம் நடந்த அன்று மட்டும் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவனை தனது ஆண் நண்பர் ஐயப்பனுடன் சேர்ந்து ஆள் வைத்து கொலை செய்ததை காளீஸ்வரி ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து காளீஸ்வரி, ஐயப்பன் உள்பட கொலையில் தொடர்புடைய விக்னேஸ்வரன் மற்றும் மருதுபாண்டியை ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருமணம் மீறிய உறவில் தனக்கு இடையூறாக நினைத்த கணவனை, மனைவியே ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் தீபாவளி இரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆரோன் கிஷன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சீமா ரத்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்கள் இவர்கள். இவர்கள் லண்டனில் வசித்து வந்தாலும் இவர்கள் ஒவ்வொரு தீபாவளியையும் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில், தீபாவளியன்று இரவு 10.20 மணியளவில் ஆரோன் கிஷோன் வசிக்கும் குடியிருப்பில் பெரும் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு கீழே வந்துள்ளனர்.
மேலும், அங்குள்ள தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கோர தீ விபத்தில் ஆரோன் கிஷன் அவருடைய குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
இந்த தீ விபத்தில் சீமா ரத்ரா மற்றும் அவர்களின் 3 குழந்தைகளும் தீ விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய ஆரோன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
மேலும், இந்த சம்பவத்தில் மற்றொரு நபரும் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் ஆரோனின் உறவினரா? யார் அவர்? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து கூறிய ஆரோனின் பக்கத்து வீட்டு பெண் பெலிசியா, ஆரோன் தன்னுடைய குழந்தைகள், தன்னுடைய குழந்தைகள் என்று அலறிய சத்தம் கேட்டதாக கூறியது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. தகவல் அறிந்ததும் ஏராளமான தீயணைப்பு வாகனங:களும், ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பின்னர், தீ அணைக்கப்பட்டது. படுகாயமடைந்த ஆரோன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீபாவளி கொண்டாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலைக்காதலால், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை கொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலம், கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவருக்கு அஃப்னான்(23), அய்னாஸ்(23), அசெம்(12) என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவருடைய கணவர் துபாயில் பணிபுரிந்து வருவதால் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் உறவினர் ஹாஜிரா(70) என்பவருடன் குடாச்சியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12 -ம் திகதி ஹசீனாவின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் புகுந்து, அவரது குடும்பத்தினரை கத்தியால் சரமாரி தாக்கினார்.
இதில் ஹசீனா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். உறவினரான ஹாஜிரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது இந்த கொலைக்கான காரணமானவர், ஏர் இந்தியாவின் கேபின் க்ரூவாக பணியாற்றிய பிரவீன் அருண் கௌகுலே(35) என்று கண்டுபிடித்தனர். இதில் பிரவீன் அருண் கௌகுலே ஒருதலையாக அய்னாஸை காதலித்து தெரியவந்தது.
ஆனால், இவர் காதலுக்காக கொலைசெய்தாரா அல்லது வேறு காரணத்திற்க்காக கொலை செய்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் அவரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து, குடாச்சியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பிரவீனை பொலிஸார் இன்று கைது செய்தனர். மேலும், அவரை உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
பாலக்கோடு அருகே சரக்கு வாகனம் ஏறி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்காடு அருகே ஜர்க்கசமுத்திரம் பகுதியில் தனது வீட்டின் அருகே குழந்தை விளையாடி கொண்டிருந்தது.
அப்பொழுது அந்த வழியாக வந்து சரக்கு வாகனம் வந்துள்ளது. இதனையடுத்து வாகனத்தின் குறுக்கே குழந்தை சென்றுள்ளது. அப்பொழுது குழந்தையின் மீது சரக்கு வாகனம் ஏறி இறங்கியது.
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. இதனையடுத்து சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தப்பியோடினார். இதுக்குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடட்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் காதல் விவகாரத்தில் 19 வயது இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே லட்சுமி நகரில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல்(19). அப்பகுதியைச் சார்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திக் என்னும் நபரும் சுகேஷ், காதலிக்கும் பெண்ணை காதலித்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. இதில் நடந்த கைகலப்பில் சுகேஷ் தாக்கியதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இந்த முக்கோண காதல் விவகாரம், கார்த்திக்கின் தந்தை செல்வத்துக்குத் தெரியவர, தந்தை செல்வம் – மகன் கார்த்திக் இருவர் உட்பட ஐந்து பேர் சேர்ந்து சென்று, சுகேஷை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் திருப்பத்தூரிலும், அதைத் தொடர்ந்து பெங்களூருவிலும் சிகிச்சைப் பெற்று வந்த சுகேஷ், இன்று அதிகாலை சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதனால் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், தந்தை செல்வம், மகன் கார்த்திக் மற்றும் அவரது கடையில் பணி செய்யும் பாலாஜி, முத்து ஆகியோர் உட்பட ஐந்துபேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த கண்ணன் மகள் திவ்யதர்ஷினி(12).இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்றுமுன்தினம் இரவு தனது தாய்மாமன் பாண்டியராஜன்(38) என்பவருடன், பரமக்குடி ஐந்து முனை சாலை அருகேயுள்ள முருகன் கோயிலுக்கு நடந்து சென்றார்.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியதில் திவ்யதர்ஷினியும், பாண்டியராஜனும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். தகவல் அறிந்துவிரைந்து வந்த போலீஸார் காரைஓட்டி வந்த பரமக்குடி வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் (42) என்பவரைக் கைது செய்தனர்.
அவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. உயிரிழந்த இருவரின் உடல்கள்உடற்கூறு ஆய்வுக்குப் பின் உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் என்றால் வெறும் 22 நிமிடங்களில் நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் பல உடல்நல அபாயங்களை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வேலை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.
இதில் சிலர் அலைந்து செய்யும் வேலையாகவும், சிலர் அமர்ந்த இடத்தில் செய்யும் வேலையாகவும் இருக்கும். அவ்வாறு அமர்ந்த இடத்தில் 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் நபர்கள் பல உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும்.
அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வர்கள் டிமென்ஷியா, உடல் பருமன், இதய நோய் போன்ற பாதிப்புகளை சந்திப்பதாகவும், இவர்களால் தனது பணி நிமிர்த்தம் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்ய முடிவதில்லை என்றும் இவர்கள் எவ்வளவு நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
50 வயதுடடைய ஸ்வீடன், நார்வே, மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், அதிக நேரம் வேலை பார்த்தவர்கள் அதிகமாக உயிரிழப்பது தெரியவந்துள்ளது.நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சாகெல்வ் என்ற ஆய்வு ஆசிரியர் கருத்தின்படி, வேலை பளுவினால் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் ஒரு 20 நிமிடம் கட்டாயம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமாம்.
இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு சென்று கஷ்டப்படாமல் நடக்கும் தொலையில் இருக்கும் வேலையை நடந்தே சென்று உடலுக்கு வேலை கொடுக்க வேண்டுமாம்.பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இந்த உடற்பயிற்சியினை மேற்கொண்டால் உடல் நலம் பாதுகாக்கப்படுவதுடன், இறப்பு விகிதமும் குறைவதாக தெரியவந்துள்ளது.
தான் அழகாக இல்லை என்றும், தன்னுடைய உடல் அதிகளவில் பருமனாக இருக்கிறது என்றும் மன அழுத்தத்தில், மருத்துவ கல்லூரி மாணவி பிரக்ருதி, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கல்லூரி விடுதியின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவக் கல்லூரி எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில், பிரக்ருதி ஷெட்டி (20) என்ற மாணவி, கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தபடியே மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மாணவி பிரக்ருதி ஷெட்டி திடீரென கல்லூரி விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டார்.
6 வது மாடியில் இருந்து குதித்ததில், மாணவி பிரக்ருதி தலை சிதறி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாணவி பிரக்ருதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து பிரக்ருதி ஷெட்டி எழுதிய கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அந்த கடிதத்தில், தனது உடல் மிகவும் பருமனாக உள்ளது என்றும், உடல் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தனது கடுமையான பயிற்சிகளினாலும் எதுவும் பலன் அளிக்காமல், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் அழகாக இல்லை எனும் கவலை அதிகரித்து, விரக்தி காரணமாக தற்கொலை முடிவை தேடிக் கொள்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று கடிதத்தில் எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமன் பிரச்சினையால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் மகள் வேறொருவரைக் காதலித்து திருமணம் செய்ததற்காக, அவரது பெற்றோர் இறுதிச்சடங்கு செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் மஹாங்காவின் உமர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜித் மொஹபத்ரா. இவருடைய மகள் பாயல்.
இவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.இவர், தனது ஆசிரியரான பெஹெரா மீது காதல் கொண்டார். அவரும் பாயல் மீது காதல் கொண்டிருந்தார். இருவரின் காதலும் வீட்டுக்கு மெல்லமெல்ல தெரிய வந்தது.
இதையடுத்து, பாயல் குடும்பத்தினர் காதலர் பெஹெரா மீது பத்ரேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட காதலர் பெஹெராவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
காதலருக்காக 6 மாதம் காத்திருந்த பாயல், பின்னர் பெஹெரா விடுதலையானவுடன், தன் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளூர் கோயில் ஒன்றில், அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு பாயல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பதறிப்போன பாயலின் பெற்றோர், மகளைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர். அவர்கள் விசாரணையைத் தொடங்கிய சமயத்தில், காவல் துறைக்கு பாயல், வீடியோ ஒன்றை அனுப்பி, அதிர்ச்சியளித்தார்.
அந்த வீடியோவில், ’எனக்கு 18 வயதாகிறது. என் விருப்பப்படி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன். வீட்டில் உள்ளவர்கள் எனக்கு தொல்லை கொடுக்கின்றனர். என்னை யாரும் கடத்தவில்லை. என் விருப்பப்படியே திருமணம் செய்துள்ளேன்’ எனவும் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுப்பிய மற்றொரு வீடியோவில், ‘எனக்கோ அல்லது என் கணவரின் குடும்பத்திற்கோ ஏதேனும் விபரீதம் நடந்தால், அதற்கு என் குடும்பத்தில் உள்ள பெற்றோர்களே காரணம்’ எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தங்களது விருப்பத்திற்கு மாறாக, பாயல் திருமணம் செய்துகொண்டதை அறிந்த அவரது பெற்றோர், அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்திருப்பது ஒடிசாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாயலின் தந்தை பிஸ்வஜித் மொஹபத்ரா, ”எனது மகளை, 18 வயதுவரை மிக ஒழுக்கமாய் வளர்த்தேன். ஆனால், அவள் ஓடிப்போய், எங்கள் சம்மதம் இல்லாமல் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதை எங்களால் ஏற்க முடியவில்லை.
ஆதலால், மிக கனத்த இதயத்துடன், அவள் இறந்துவிட்டதாக நினைத்து, அவளது மரணத்திற்குப் பிந்தைய இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளோம். ஒரு மகள், குடும்பத்திற்கு பக்கபலமாக இல்லை என்றால், அவரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
என் மகள் செய்த தவறை பிற குடும்பத்தைச் சேர்ந்த மகன்களோ அல்லது மகள்களோ செய்யக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தேன். இது பொதுமக்களுக்கான ஒரு செய்தி” எனத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் பாயலின் காதலை, அவரது மாமனார் குடும்பத்தினர் ஏற்றுள்ளனர். இதுகுறித்து பாயலின் மாமனார் காஷிநாத் பெஹெரா, “என் மருமகளுக்கு இப்போதுதான் 18 வயதுக்கு மேல் ஆகிறது.
இந்த வயதில் அவருக்கு தன் வாழ்க்கைத் துணையைப் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு. என் மகன், பாயலை மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய முடிவில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ளது பணவடலிசத்திரம். இங்குள்ள வண்ணான் பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கனகராஜ் (35). கனகராஜின் மனைவி சகுந்தலா (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஏழு வருடம் ஆன நிலையில் ப்ரவின் (6) மற்றும் ஹர்சிகா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கனகராஜ் பணவடலிசத்திரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியை கொண்டாடிய நிலையில் நேற்று மாலை கனகராஜ் மற்றும் அவரது மனைவி சகுந்தலா (26) இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
குறிப்பாக ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே இருவருக்குமிடையே அவ்வப்போது பிரச்சினைகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று மாலை இவர்களது இளைய மகள் வீட்டுக்கு வெளியே நின்று கதவை தட்டியபடி அம்மாவை கூப்பிட்டுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத நிலையில் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தாய், தந்தை இருவரும் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு மகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். கனகராஜ் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட காயங்களுடன் தரையிலும், மனைவி சகுந்தலா தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர்.
மேலும் இது குறித்து உடனடியாக பணவடலிசத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த பனவடலிசத்திரம் காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை கொண்டாடிய மறுநாளே கணவன் – மனைவி இருவரும் ஒரே வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாக மிகச்சிறு வயதிலேயே திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி, கல்லூரி மாணவி பலி நடனம் ஆடிய போது பலி , உடற்பயிற்சி செய்யும் போது பலி மணமேடையில் சரிந்து விழுந்து பலி என அதிர்ச்சி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிலும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயங்கி சரிந்து பலியாவது பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு முறை மாறி வரும் வாழ்க்கை முறை , உடற்பயிற்சியின்மை என என்னதான் காரணங்கள் கூறினாலும் வாழவேண்டிய சின்னஞ்சிறு வயதில் திடீர் மரணங்கள் காண்பவர்களை கலங்கடித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று நவம்பர் 14ம் தேதி இந்தியா முழுவதுமே குழந்தைகள் தினம் பள்ளிகள், அரசு விழாக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன.
குதூகலத்துடன் குழந்தைகள் சுற்றி திரிந்த நிலையில்பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாணவர் ஒருவர் பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெருங்காடு உயர்நிலைப் பள்ளியில் மாரிமுத்து 9ம் வகுப்பு மாணவர். இவர் நேற்று பள்ளி நேரம் முடிந்ததும் தன்னுடைய சக நண்பருடன் பேசியபடியே பள்ளி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இவரது மரணம் குறித்து கேள்விப்பட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர் கதறிதுடித்த காட்சி காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.
சக மாணவ மாணவிகள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.
பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார்.
மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of City பல்கலைக்கழகத்தில் உளவியல் இளங்கலை படித்து வந்த மாணவி சபிதா தன்வாணி (19), கடந்த 2022ஆம் ஆண்டு காதலர் மாரூஃப்பினால் (Maaroufe) படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மஹர் மாரூஃப்பிடம் Old Baileyயில் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கஞ்சா புகைக்கும் பழக்கத்தால் மாரூஃப் சித்தப்பிரமை பிடித்தவராக மாறியதாகவும், Hallucination எனும் மாயத்தோற்றத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அத்துடன் அவரது காதலில் தன்வாணி தனது கண்களுக்கு முன்பாக ஒரு ஆண் பிசாசாக மாறியதாக மாரூஃப் நம்பியதால் அவரை கொலை செய்ததாக கூறினார். மேலும், மாரூஃப்பிற்கு சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவரான கிறிஸ்டியன் பிரவுன், வன்முறை செயலை செய்த நேரத்தில் மாரூஃப் என்ன செய்தார் என்பது குறித்து அவருக்கே தெரியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிசாசாக மாறிய ஒரு ஆண் உருவத்தைதான் மாரூஃப் கொலை செய்தார் என அவர் விவரித்தார். இதனைத் தொடர்ந்து மாரூஃப் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார். அவர் டிசம்பர் 8ஆம் திகதி அன்று Old Baileyயில் தண்டனைக்காக திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பூர்வமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த மாரூஃப்புக்கு, 2019ஆம் ஆண்டு ஆகத்து 14ஆம் திகதி அன்று நாடுகடத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனால் அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்த நிலையில், பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.