உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் நிர்வாணமாக ஓடுவேன் : பிரபல நடிகை அதிரடி!!

உலகக்கோப்பை..

பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.அதாவது அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.

அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

இந்தநிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார். நடிகை ரேகா போஜ் கருத்தை பார்த்த ரசிகர்கள், சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என விமர்சித்துள்ளனர்.ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, ‘இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே அமைதியாகி போனார் என்பதும், ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது

இளைஞனின் உயிரைப்பறித்த புட்டு : யாழில் பெரும் சோகம்!!

யாழில்..

யாழில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15.11) பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். எனினும் சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்துள்ள நிலையில், இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மேலும் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனையில் , சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து , சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண் கைது!!

தமிழகத்தில்..

சுற்றுலா விசாவில் காதல் கணவருடன் வாழ்வதற்காக தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இலங்கை பெண்ணை தமிழ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்த போது இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்ற பெண் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.இதனால், புஷபலீலாவை பொலிஸ் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது, அவர் சுற்றுலா விசாவில் தமிழகத்தில் வசித்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

999

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துபாயில் புஷ்பலீலா வேலை செய்தபோது, டி.வி.புத்தூா் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு, இருவரும் துபாய் சென்று வாழ்ந்துள்ளனர்.

இதில், விசா காலம் முடிந்ததும் செந்தில்குமார் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால், கணவரை பிரிந்து இருக்க முடியாத புஷ்பலீலா 2019ஆம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், புஷ்பலீலாவை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி : சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!!

பொதி..

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று மதியம் ஒருகொடவத்தை வருமான கண்காணிப்பு பிரிவு ஆய்வு கூடத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

குறித்த போதைப்பொருள் பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் ஒருவரும் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதி கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். சோதனையின் போது, ​​கொள்கலனில் பொதி போன்று கவனமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதென சுங்கப் பேச்சாளர் சீவாலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க காத்திருந்த தாய்க்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலையில்..

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவர் இன்று (16.11.2023) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

இதன்பின் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் தற்போது தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர். தாய் மற்றும் சிசுவின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (17.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 651,059.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 652,186 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,968 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,746 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 153,767 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,221 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,347 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 146,778 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது. எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் வைத்து தமிழரை காதலித்த இலங்கைப் பெண்.. சுற்றுலா விசாவில் தமிழகத்தில் தஞ்சம்!!

கடலூரில்..

காதல் கணவருடன் வாழ்வதற்காக சுற்றுலா விசாவில் தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இலங்கை பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் வசித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பின்னர், கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு சென்ற போது இலங்கையைச் சேர்ந்த புஷ்பலீலா(37) என்ற பெண் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதனால், புஷபலீலாவை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். அப்போது, சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து இங்கேயே தங்கிவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தது.

துபாயில் புஷ்பலீலா வேலை செய்தபோது, டி.வி.புத்தூா் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் 2013 -ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்பு, இருவரும் துபாய் சென்று வாழ்ந்துள்ளனர்.

இதில், விசா காலம் முடிந்ததும் செந்தில்குமார் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால், கணவரை பிரிந்து இருக்க முடியாத புஷ்பலீலா 2019 -ம் ஆண்டு சுற்றுலா விசா மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், புஷ்பலீலாவை பொலிஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

முல்லைத்தீவில் 13 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு : தாய், தாயின் 2ம் கணவன், மருந்தக உரிமையாளர் கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் 13 வயதான சிறுமியை சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,கடந்த வருட இறுதியில் தாயின் 2வது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் தரித்ததாக் கூறப்படுகின்றது. இந் நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் வைத்து சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தற்போது சிறுமியின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமியின் தாய், அவருடைய 2வது கணவன் மற்றும் மருந்தக உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் முதல் இடத்தில் இரு மாணவர்கள்!!

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இதன்படி வவுனியா மாவட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரு மாணவர்கள் முதல் நிலை பெற்றுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. குறித்த பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் இரு மாணவர்கள் 184 புள்ளிகள் பெற்று முதல் நிலை பெற்றுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா தெற்கு வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான ஆசிகுளம் அ.த.க பாடசாலை மாணவன் ரவீந்திரதாசன் சரோன் மற்றும் அதே வலயத்தைச் சேர்ந்த தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் நவரட்ணம் சகானன் ஆகியோர் 184 புள்ளிகளைப் பெற்று முதல் நிலை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : முதல் இடத்தில் ஐவர்!!

புலமைப்பரிசில்..

2023ஆம் ஆண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் ஐந்து மாணவர்கள் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்கள் 198 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வருடம் 15.22 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக மதிப்பெண்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம், இது 14.64 சதவீதமாக பதிவாகியிருந்தது.

மேலும், இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், இவர்களுள் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு அதிகமாக மதிப்பெண்களைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை!!

யாழில்..

யாழ். மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்று யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவியே இவ்வாறு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி 2023 ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தெரிவிக்கையில், தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியானது!!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், மொத்தமாக 337,956 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் அன்று பாடசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம் : தாய் வெளிநாட்டில்!!

வெல்லம்பிட்டியில்..

வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ஆறு வயது மாணவியின் தாயார் வெளிநாட்டில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றையதினம், குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்ததாகக் கூறப்படும், ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி புரிந்து வரும் நிலையில், பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளார்.

அவரது தாயார் தினமும் தொலைபேசியின் ஊடாக அழைப்பெடுத்து சிறுமியுடன் கதைத்து வந்ததாக உயிரிழந்த சிறுமியின் சித்தி தெரிவித்துள்ளார்.உயிரிழந்த சிறுமியின் பிறந்ததினமும் நேற்றுதான் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹமாஸினால் பணயக் கைதியாக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனை மரணம்!!

இஸ்ரேல்..

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதலினால் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்தவர் நோவா மர்சியானோவை (வயது 19) கடந்த அக்டோபர் 7ஆம் திகதி கிபுட்ஜ் நஹால் பகுதியில், பணய கைதியாக ஹமாஸ்அமைப்பினர் பிடித்து சென்றனர்.

கடந்த திங்கட்கிழமை இரவில், பணய கைதியாக நோவா இருக்கும் காணொளி ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டதோடு கடத்தப்பட்ட 5 வாரங்களுக்கு பின்னர் நோவா மரணம் அடைந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட காணொளி அடிப்படையில் நோவாவின் மரணம், உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் உளவு அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டே அவருடைய மரணம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு பின், மற்ற 3 பணய கைதிகளுடன் நோவா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து, நோவா கடத்தல் பற்றிய தகவலை அவருடைய குடும்பத்தினரிடம் இஸ்ரேல் அறிவித்தது.

நோவா, அவருடைய தாயாரிடம் கடைசியாக கடந்த அக்டோபர் 7ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பேசியுள்ளதோடு அப்போது அவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறேன் என்றும் ஊடுருவல் ஒன்று நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அரைமணி நேரத்திற்கு பின்பு, நோவாவுக்கு தாயார் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பதில் வராத நிலையில் நோவாவின் மரணம் பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல்!!

கனடாவில்..

கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.சமீப காலமாக இலங்கையில் உள்ளவர்கள் கனடா, பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் குடியேறுவதற்கு முயற்சி செய்துவருகின்றனர்.

எனினும் மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள், தமது வாழ்க்கை இயந்திரத்தை போன்றது என கூறினாலும் பலர் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.அண்மைய நாட்களாக கனடாவிற்கு செல்வதில் தமிழர் தாயகம் மாத்திரமல்லாமல் இலங்கை முழுவதும் உள்ளவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்த வகையில் கனடாவில் கடந்த ஆண்டு சுமார் 70 இலட்சம் கனேடியர்கள் பட்டினியுடன் போராடியதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டில் 18 வீதமான குடும்பங்கள், உணவுப் பாதுகாப்பின்மையை அனுபவித்துள்ளன என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பின்மை என்பது தரமான உணவு அல்லது போதுமான அளவு உணவின் பற்றாக்குறை என திணைக்களம் வரையறுத்துள்ளது.சிலர் அதிகரித்த பணவீக்கத்தின் மத்தியில் பல நாட்கள் உணவு இல்லாமல் இருந்தார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வீதமான கனேடிய குடும்பங்களே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரமான பிரச்சினையாகும் உணவுப் பாதுகாப்பின்மை
உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.ஏனெனில் இது பல்வேறு நோய் நிலைமைகள், மனநலப் பிரச்சினைகள், ஏனைய நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார கட்டமைப்புகள் மீது அதிகரிக்கும் அழுத்தம் உணவுப் பாதுகாப்பின்மையானது, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுடன், முன்கூட்டிய இறப்பிற்கும் வழி வகுக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.அத்துடன் இந்த நிலைமைகள் நாட்டின் சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு மீதான அழுத்தங்களை அதிகரிக்க செய்கின்றது எனவும் திணைக்களத்தின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு பயணம் : விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்!!

விமான நிலையத்தில்..

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற மட்டக்களப்பு ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மட்டக்களப்பு நபர் டுபாய் செல்லும் EK-653 – எமிரேட்ஸ் விமானதில் செல்லவிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அனுமதிக்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே , அவரிடம் இருந்தது போலி விசா என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை அண்மைகாலமாக இலங்கை தமிழர்கள் பலரும் கனடா வழங்கியுள்ள சலுகையை பயன்படுத்தி அங்குப் செல்வது அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் போலி விசாவில் கனடா செல்ல முயன்ற மட்டக்களப்பு நபர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.