இலங்கையில் மிகவும் ஆபத்தான நபர் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் மிகவும் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ தனது அடியாட்களை பயன்படுத்தி 39 கொலைகளை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில காலம் சிறையில் இருந்த கணேமுல்ல சஞ்சீவ 2021ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்து இரகசியமாக வெளிநாடு சென்றதாகவும், வெளிநாடு சென்று 2 வருடங்களில் 17 கொலைகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மனிதக் கொலைகள் மட்டுமின்றி பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல், கொள்ளை மற்றும் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாதாள உலக தலைவரின் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ போலி வெளிநாட்டு கடவுச்சீட்டில் இலங்கைக்குள் நுழைய முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

-தமிழ்வின்-

பேருந்து விபத்து.. 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

பாதுக்கவில்..

பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன்,

பின்னால் வந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பில் சிகிச்சைக்கு சென்ற மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

க.பொ. த சாதாரண பரீட்சையில் தோற்றிய மாணவி பெறு பேறுக்காக காத்திருந்த நிலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார். வைத்திய சாலையில் வழங்கிய மாத்திரைகளை பாவித்து வந்த போது கடந்த புதன் கிழமை காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து தாயார் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாணவியை அழைத்துச் அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் (15/09/23)ஆம் திகதி அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு மருத்துவமனையே காரணம் என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளது.

கடன் செயலியின் கொடுமையால் தம்பதி எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்..

கேரள மாநிலம், கொச்சி அருகே வசித்துவந்தவர் நிஜோ(39). இவருக்கு சில்பா (29) என்ற மனைவியும், ஏபேல் (7), ஆரோன் (5) என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்துவந்த நிலையில், இவரின் சகோதரர் கீழ் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நிஜோ போனை எடுக்கவில்லை என அவரின் சகோதரருக்கு தொடர்ந்து அழைப்பு வந்த நிலையில்,அவர் மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது உள்ளே நிஜோ மற்றும் அவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனே உள்ளே சென்றுபார்த்தபோது நிஜோவின் குழந்தைகள் படுக்கையில் இறந்த நிலையில், கிடந்துள்ளனர். உடனடியான இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரணை நடத்திவந்தபோது, நிஜோவின் உறவினர்கள் சிலருக்கு நிஜோவின் மனைவி சில்பாவின் மார்பின் செய்யப்பட்ட புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அதில், கடன்பெற்ற தொகையான 9,000 ரூபாயை உடனடியாகச் செலுத்தவிலை என்றால் இண்டிகா புகைப்படங்கள் மூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் அனுப்பப்படும் என்றும் ஒரு குறும்செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.

தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன்பெற்றதும், அதை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில்,ஆன்லைன் கடன் செயலி கும்பல் சில்பாவின் புகைப்படத்தை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி தன்னை ‘கிராமத்தான்’ என விமர்சித்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெட்ரோ பொறியாளர் ஒருவர், மனைவி தன்னை விமர்சித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் துமக்குர் மாவட்டம் குந்தூரி பாளையா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38).

மெட்ரோ பொறியாளரான இவர் பிரியங்கா என்ற பெண்ணை 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், மஞ்சுநாத் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் மஞ்சுநாத் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மஞ்சுநாத்தின் மனைவி பிரியங்கா ‘கிராமத்தான்’ என அடிக்கடி கூறி கணவரை விமர்சித்து வந்துள்ளார். அத்துடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மஞ்சுநாத், தன் சகோதரருக்கு மனைவியின் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக குறுந்தகவல் அனுப்பிவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி கழிவறையை மாணவர்களை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்!!

சிவகாசியில்..

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அரசு உதவிபெறும் சிஎஸ்ஐ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்ம நாயகம் நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினார்.

இதில் இடைநிலை ஆசிரியர் இமானுவேல், தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்து, மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

காதலியை கொலை செய்த காதலன்… உடலை சூட்கேஸில் அடைத்து விசிய கொடூரம்!!

குஜராத்தில்..

மும்பை, நைகாவ் பகுதியில் வசித்தவர் நயனா மகந்த் (28). மேக்கப் கலைஞராக இருந்தார். இவர் மனோகர் சுக்லா (43) என்பவருடன் லிவ்-இன் டுகெதர் முறையில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்தார்.

கடந்த சில நாள்களாக நயனா மகந்த்தைக் காணவில்லை. இது தொடர்பாக நயனாவின் சகோதரி போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவந்தனர்.

விசாரணையில் மனோகருக்கு நயனாவுடன் தொடர்பு இருப்பது தெரியவந்து மனோகரைப் பிடித்து விசாரித்தபோது அவர்தான் நயனாவைக் கொலைசெய்து உடலை சூட்கேஸில் அடைத்து குஜராத் கடற்கரைப் பகுதியில் தூக்கிப் போட்டது தெரியவந்தது.

 உடனே அவரை போலீஸார் கைதுசெய்தனர். குஜராத் மாநிலம் வல்சாட் கடற்கரையில் சூட்கேஸ் ஒன்று மர்மமான முறையில் கிடந்தது. அதை போலீஸார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது உள்ளே நயனாவின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் பூர்ணிமா, “ நயனாவைக் கொலைசெய்த மனோகரிடம் விசாரித்தபோது, நயனா, மனோகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் செய்திருந்தார்.

அந்தப் புகாரை திரும்பப் பெறும்படி மனோகர் கேட்டுக்கொண்டார். ஆனால், நயனா புகாரைத் திரும்பப்பெற மறுத்துவிட்டார். அந்தக் கோபத்தில் நயனாவைக் கொலைசெய்து உடலை சூட்கேஸில் வைத்து குஜராத் கடலில் போட்டிருக்கிறார். மனோகருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறது.

அவர்களுக்குள் இருந்த தொடர்பு மனோகர் மனைவிக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் மனோகர், நயனாவுடனான உறவைத் துண்டித்துக்கொண்டார். ஆனாலும் நயனா தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கூறி மனோகருக்கு நிர்பந்தம் கொடுத்துவந்தார்.

திருமணத்துக்கு மறுத்ததால் அவர்மீது நயனா பாலியல் வன்கொடுமைப் புகார் கொடுத்திருக்கிறார். கண்காணிப்பு கேமரா பதிவில் மனோகரும், அவரின் மனைவி பூர்ணிமாவும் சேர்ந்து சூட்கேஸை எடுத்துச் செல்வது போன்று பதிவாகியிருந்தது.

உடனே அவரின் மனைவியையும் பிடித்து விசாரித்தபோது இருவரும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்திருக்கின்றனர். நயனாவை மனோகர் தண்ணீர் இருந்த பக்கெட்டில் தலையை மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார்.

அவரது உடலை சூட்கேஸில் அடைக்க மனோகருக்கு பூர்ணிமா உதவி செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. பின்னர் சூட்கேஸை ஸ்கூட்டரில் வைத்து 180 கிலோமீட்டர் எடுத்துச் சென்று கடற்கரைப் பகுதியில் போட்டிருக்கின்றனர். உடலை எடுத்துச் செல்லும்போது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக தங்களின் மகளையும் வண்டியில் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

நயனாவும், மனோகரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். நயனா தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். அந்நேரம் நயனாவுடன் மனோகருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

2018-ம் ஆண்டு மனோகர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் நயனாவுடன் தனது உறவைத் தொடர்ந்தார். இருவரும் லிவ்-இன் டுகெதர் முறையில் வாழ்ந்திருக்கின்றனர்.

இது குறித்து மனோகர் மனைவி பூர்ணிமாவுக்குத் தெரியவந்திருக்கிறது. உடனே கணவருடன் பூர்ணிமா சண்டையிட்டிருக்கிறார். இதனால் பூர்ணிமா மனோகர் மீது பாலியல் வன்கொடுமை, தாக்குதல் ஆகிய பிரிவுகளில் போலீஸில் புகார் செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார். பூர்ணிமா அடிக்கடி மனோகரை மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மனோகரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

பெண் நடனக்கலைஞர் விபரீத முடிவு.. போலீசார் தீவிர விசாரணை!!

ஆந்திராவில்..

ஆந்திராவில் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் ரோடு பகுதியில் வசித்து வருபவர் நரசிம்ம ரெட்டி. இவரது மகள் ஹிமா . ஹிமாவுக்கு வயது 25. நடன கலைஞரான இவர், திருமணமாகி கடந்த 6 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் அகனதீபிகா என்கிற மகள் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடனம் ஆடும் கணேசுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். செப்டம்பர் 10ம் தேதி பெங்களூருவில் நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதனை முடித்து விட்டு ஹிமா தனது நண்பர்களான நடன கலைஞர்களுடன் செப்டம்பர்12ம் தேதி திருப்பத்தூர் ஏலகிரிக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் 8 பெண்கள் 2 ஆண்கள் என 10 பேர் தங்கினர்.

இந்நிலையில் நேற்று காலை ஹிமா விடுதி அறையில், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனை அறையில் இருந்த மற்றொரு பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்து மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீசார் விரைந்து சென்று தங்கும் விடுதி மற்றும் ஹிமாவுடன் வந்திருந்த நடன கலைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து அவரது தந்தை நரசிம்ம ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கணவன் கொலை.. மலசலகூட கிடங்கில் உடல்.. 9 ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிய மனைவி!!

சிவகங்கையில்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொலை செய்துவிட்டு உடலை செப்டிக் டேங்கில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த வீட்டில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பேருந்து டிரைவரான பாண்டியன், அவரது மனைவி, மகள், மகனுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அப்போது பாண்டியன் குடிபோதையில் வந்து மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி கணவரை தள்ளிய போது தலை சுவற்றில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து பாண்டியனின் உடலை சுகந்தி யாருக்கும் தெரியாமல் செப்டிக் டேங்கில் போட்டுள்ளார்.

பின்னர், கணவர் வெளியூர் சென்று விட்டதாக கூறி குடும்பத்தினர் வீட்டை காலி செய்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு சுகந்தியை கைது செய்த போலீசார் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

குழந்தையை நடுவீதியில் விட்டுச்சென்ற தாய் : ஒரு மாதமாக தேடி அலையும் போலீஸ்!!

காஞ்சிபுரத்தில்..

சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் நகரங்களில், காஞ்சிபுரம் மிக்க முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகரத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம், ரெயில்வே சாலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி இளம்பெண் ஒருவர் 2 பெண் குழந்தைகளுடன் ரெயில்வே சாலை, பகதூர் கான் பேட்டை தெருவழியாக நடந்து சென்றார்.

திடீரென அந்த இளம்பெண் 2 குழந்தைகளையும் நடுரோட்டில் விட்டு மாயமானார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகள் இருவரும் தவித்தனர். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் சாலையோரம் நீண்ட நேரமாக நின்று அழத்தொடங்கினர்.

இதனை கண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் விசாரித்த போது தங்களது தாய் தண்ணீர் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார் என்று தெரிவித்தனர். குழந்தைகளுடன் வந்த தாய் அவர்களை தவிக்க விட்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவகாஞ்சி போலீசார், 2 சிறுமிகளையும் மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் தங்களது பெயர் தீக்ஷிகா ( 4), ஏரிகா ( 2) என்றும் தாய் ரம்யா, தந்தை சதீஷ் எனவும் தெரிவித்தனர்.

மேலும் தங்களது தாத்தா ஆறுமுகம், பாட்டி அமுதா எனவும் அவர்கள் வேலூரில் வசிப்பதாகவும் தெரிவித்தனர். தங்களுடைய அம்மா ரம்யாவுடன் வந்தபோது, தண்ணீர் வாங்கிவருவதாக கூறி சென்றதாக சிறுமிகள் அழுகையுடன் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணையை துவங்கினர். காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, வேலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்பு கொண்டு, குழந்தை காணாமல் போனது குறித்து புகார் ஏதாவது வந்துள்ளதா என கேட்டனர்.

ஆனால் வேலூரில் சிறுமிகள் மற்றும் தாய் மாயமானது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்பது தெரிந்தது. மேலும் சிறுமிகள் தங்களது தகவல் குறித்து மாறி, மாறி கூறுவதால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.

சிறுமிகளை அழைத்து வந்தது அவருடைய தாய் ரம்யாதானா அல்லது வேறு யாராவது என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 700 இடங்களில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி விசாரித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சிறுமிகள் 2 பேரும் சென்னை பரங்கிமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிகின்றதாவது : குழந்தை மற்றும் தாய் புகைப்படங்களை சமூக வலைதளத்தில், மற்றும் ஊடக வாயிலாகவும் விவரம் தெரிந்தால் அணுகுமாறு கேட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

மரணத்தின் வாயிலை தொட்டுவிட்டு வந்த சிறுமியின் அதிர்ச்சி அனுபவம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவி, தாம் இறக்கப் போகிறோம் என ஒரு நொடி எண்ணியதாக குறிப்பிட்டுள்ளார். பர்மிங்காம் பகுதியில் இனிப்பு வாங்க தெருமுனை கடைக்கு தனியாக சென்ற 11 வயது சிறுமி XL bully நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Ana Paun என்ற அந்த சிறுமி தமக்கு ஏற்பட்ட பகீர் அனுபவத்தை முதன்முறையாக பகிர்ந்துகொண்டுள்ளார். தம் மீது பாய்ந்த அந்த நாய், கீழ் இடது கையை கவ்விக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நொடி, அது என் முகத்தையும் கழுத்தையும் தாக்கப் போகிறது, நான் இறந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயத்தில் வாய்விட்டு அலறியதாக கூறும் Ana Paun ஒருவழியாக காப்பாற்றப்பட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவளது மார்பு, தோள்பட்டை, கைகள் மற்றும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது என்னைக் கொல்லும் என்று நினைத்தேன் என குறிப்பிட்டுள்ள சிறுமி, இப்படியான நாய் வகைகளை தடை செய்ய வேண்டும் என்றார்.

இந்த வகை நாய்கள் ஆபத்தானது மட்டுமின்றி கட்டுப்பாட்டை மீறும் குணம் கொண்டது என்றார். மேலும் சம்பவத்தின் போது உரிமையாளர் அதை தெருவில் தனியாக விட்டுவிட்டார் எனவும் Ana Paun குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், ஆபத்தான XL bully நாய்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உறுதி அளித்துள்ளதை Ana Paun வரவேற்றுள்ளார்.

தம்மை தாக்கிய நாயின் உரிமையாளர் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள Ana Paun, அவர் அந்த நாயை கட்டுப்படுத்த தவறினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சிறுமி Ana Paun-ஐ காப்பாற்ற நாயுடன் போராடிய இருவர் தற்போதும் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்த ராணுவ வீரர்.. நடுரோட்டில் வீசியெறியப்பட்ட சடலம்!!

உத்தர காண்ட்டில்..

உத்தர காண்ட் மாநிலம் டேராடூன் அருகே இருந்த சாலை பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அந்த சடலத்தை மீட்டு அது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனை நடத்தியபோது, ராணுவ வீரரான ரமேந்து உபாத்யாய் (40 ) என்பவர்தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தது.

ராணுவ வீரர் ரமேந்து உபாத்யாய் மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பணிபுரிந்துவந்த போது அங்கு ஸ்ரேயா ஷர்மா (30) என்ற பெண்ணை அங்குள்ள பார் ஒன்றில் சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவரும் நெருக்கமாகி பழகி வந்துள்ளனர்.

இதனிடையே ரமேந்து உபாத்யாய்க்கு டேராடூனின் பணிமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், அவருடன் ஸ்ரேயா ஷர்மாவும் டேராடூன் வந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ரமேந்து உபாத்யாய்க்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஸ்ரேயா ஷர்மா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயா ஷர்மாவை கொலை செய்யநினைத்த ரமேந்து உபாத்யாய் அவரை வெளியே அழைத்துச்சென்று யாரும் இல்லாத இடத்தில் வைத்து தான் கொண்டுவந்த சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உனக்கு 54 எனக்கு 24 : காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் : போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!!

சேலத்தில்..

காதலுக்கு வயது ஒரு தடையில்லை மனது மட்டும் போதும் என்ற வகையில் சேலத்தில் ஒரு காதல் திருமணம் நடந்துள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பால் அது காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய இளசுகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதும், அதனால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து அவர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என்பது போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஒமலூர் அருகேவுள்ள மாட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதாகும் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும், ஊரிலேயே விசைத்தறி தொழிலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டிற்கு அதே ஊரைச் சேர்ந்த 24 வயதான பட்டதாரி பெண் விமலா என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

இருவருக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், இந்த விஷயம் விமலா வீட்டிற்கு தெரியவர காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், தனது வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார் விமலா. அங்கிருந்து இருவரும் திருவண்ணாமலையிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக கிருஷ்ணன் மீது தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  போலீஸ் தங்களைத் தேடும் தகவலறிந்த இருவரும் தாராமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இருவரையும் நேரில் பார்த்து வயது வித்தியாசம் அறிந்த போலீசாரே சிறிது நேரம் திகைத்து நின்றனர். காவல் நிலையத்தில் விமலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணனின் வயதைக் காரணம் காட்டி வேறு இடத்தில் திருமணம் செய்துவைப்பதாகக் கூறி உருக்கமாக பேசி அழைத்துள்ளனர். ஆனால், தான் கிருஷ்ணனுடன் தான் வாழ்வேன் என விமலா திட்டவட்டமாக கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.

விமலா மேஜர் என்பதால் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு சட்டப்படி உள்ளது என அவரது பெற்றோருக்கு காவல் துறை தரப்பில் அறிவுறுத்தினர். மேலும், விமலாவின் விருப்பப்படி அவரை கணவர் கிருஷ்ணனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வவுனியாவைச் நேர்ந்த 2 வயதுச் சிறுமி நல்லூர் திருவிழாவில் காணாமல்போன சோகம் : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

நல்லூரில்..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய திருவிழாவில் வவுனியாவை நேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பிருத்தி அஸ்விகா எனும் இரண்டு வயது சிறுமியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் கந்தனின் தீர்த்த திருவிழாவான நேற்றையதினமே குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாகவும் சிறுமியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கண்டவர்கள் உடனடியாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

44 வயது பெண்ணுடன் வட்ஸ்அப் காதலால் பரிதாபமாக பறிபோன 22 வயது இளைஞனின் உயிர்!!

வட்ஸ் அப்..

சுமார் 5 மாதங்களாக சுயநினைவின்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வட்ஸ் அப் காதல் தொடர்பை அடிப்படையாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹகுரன்கெத பல்லே போவல, பம்பரகம கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இந்துனில் சாமர காரியப்பெரும என்ற இளைஞன் , கொரிய மொழி பாடத்தை பயில சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்துள்ளார்.

கொரிய மொழி படிக்க வட்ஸ் அப் குழுவில் இணைந்த இந்துனில், அங்கிருந்த பெண் ஒருவருடன் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் குரல்பதிவுகளை பரிமாறிக்கொண்டார். ஆனால் இந்துனில் உண்மையில் 44 வயது பெண் ஒருவருடன் வட்ஸ்எப் மூலம் தொடர்பில் இருந்தது அவருக்குத் தெரியாது.

இருவருக்குமிடையிலான உறவை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டையில் கொரிய மொழி இறுதிப் பரீட்சைக்கு சென்ற இந்துனிலை கடத்திச் சென்று காரில் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட இந்துனில் சப்புகஸ்கந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இறுதியில், கொலன்னாவ மயானத்திற்கு அருகில் வந்த குழுவினர் காரில் இருந்து இறங்கி, இந்துனிலின் ஆடைகளை கழற்றி மீண்டும் தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று கிடைத்துள்ளது. பின்னர், தாக்குதல் நடத்திய கும்பல் அந்த இளைஞனை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றது.

இதனையடுத்து பிரதேசவாசிகளால் ஆபத்தான நிலையில் இருந்த இந்துனில் ஏப்ரல் 19ஆம் திகதி சபுகஸ்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், படுகாயமடைந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இந்துனில் கடந்த 12ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார். வட்ஸ் அப் இல் ஏற்பட்ட கதல் வாழ்வேண்டிய இளைஞரின் உயிரி பறித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி : பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

யாழில்..

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ மாதான 53 வயதான பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதி விடுதியினுள் திருகோணமலையை சேர்ந்த (12) வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலத்தை மீட்பதற்கு பொலிஸார் விடுதிக்கு சென்ற வேளையில் சிறுமியின் பாட்டியும் அங்கிருந்த கட்டிலில் மயக்கமான நிலையில் கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

குறித்த சிறுமியும் அவரின் பாட்டியும் திருகோணமலை கடற்கரை பகுதியை சேர்ந்த (12) வயதான கேமா எனும் சிறுமியும் (53) வயதுடைய நாகபூசனி சிவநாதன் என்பவருமாவார்.

சிறுமிக்கு சுகயீனம் காரணமாகத்தான் யாழ்ப்பாணத்தில் வைத்திய சிகிச்சைகாக வருகை தந்து விடுதியில் தங்கியிருந்துள்ளதாக விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். விடுதியில் அறையை வாடகைக்கு பெற்றதன் பின்னர் ஒரேயொரு தடவை மாத்திரமே அறையைவிட்டு வெளியே வந்ததாக விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இருவரும் தங்கியிருந்த அறையில் நீண்ட நேரமாக வெளியேறாததால் துரு நாற்றம் வீசியதால் விடுதியின் சேவையாளர்கள் அறையின் கதவை தட்டிய போதும், எந்த பதிலும் கிடைக்காததால் பணியாளர்கள் யன்னல் வழியாக பார்த்தபோது சிறுமி மயக்கமான நிலையில் கிடந்ததையடுத்து சிறுமி நஞ்சருந்தி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இறந்தவரின் பாட்டி எழுதிய கடிதமும் அறையில் கண்டெடுக்கப்பட்டது, அதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் , அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாக சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே உயிரிழந்து கிடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.