இலங்கை செய்திகள்

வடக்கில் அதிரடி மாற்றம் : முதல்வராக சீ.வி.கே.சிவஞானம்?

வடமாகாண சபையில் நான்கு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் வடமாகாண முதலமைச்சர் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நியாயம் கேட்காமல் தன்னிச்சையாக...

இலங்கையை மீண்டும் அச்சுறுத்த வரும் அடைமழை!!

இலங்கையின் தென்மேற்கு பிரதேசங்களிலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டையிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதிகளில் பெய்யும் மழையில் சற்று அதிகரிப்பு தன்மையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,...

புகையிரதப் பாதைகளில் இனி செல்பி எடுக்கத்தடை!!

இலங்கையில் புகையிரதப்பாதையை அண்டிய பகுதி மற்றும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை இலங்கை புகையிரத திணைக்களம் எடுத்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்பி எடுப்பதால் 22 பேர் புகையிரதத்தில்...

பேஸ்புக்கில் கவிதை பதிவிட்ட ஆசிரியருக்கு இடமாற்றம்!!

தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் கவிதை பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் இளம் ஆசிரியர் ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவசியத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இது...

யாழைச் சேர்ந்த தந்தையும் மகனும் கனடாவில் கொலை : விசாரணைகள் தீவிரம்!!

கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு(வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன்(வயது...

வட மாகாண சபை நிர்வாகம் ஊழலின்றி செயற்பட வேண்டும் : காதர் மஸ்தான்!!

  பாரிய எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை ஊழலின்றி மக்களுக்களுக்காக செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின்...

மகனின் இறப்பை தாங்காத தாயின் உயிரும் பிரிந்தது : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

பெற்ற மகனின் இறப்பை தாங்கிக் கொள்ளமுடியாத தாயொருவர் சோகத்தினால் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை அலுத்நுவர பிரதேசத்தில் வசித்து வந்த 79 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 54 வயதுடைய ஜயந்த பிரேமகுமார என்பவர்...

கர்ப்பிணியான மருமகளை தீயினால் சுட்டு மாமியார் கொடுமை?

பொகவந்தலாவையில், நான்கு மாத கர்ப்பிணியான மருமகளை தீக் கட்டையினால் சுட்டு மாமியார் ஒருவர் கொடுமை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு...

150 பேரின் உயிரைக் காவு கொண்ட டெங்கு நோய்!!

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவுகின்ற வேகம் உக்கிரமடைந்துள்ளது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு நோய்...

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிகை எடுத்துள்ளது. நேற்று (13.06) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர்...

எனது பேரப்பிள்ளை செல்பி எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கியபோது நாம் அதனை விரும்பவில்லை!!

எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி...

படிக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்!!

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கற்கை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டே குறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரக்காபொல, ஒன்னாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு...

முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் : மஸ்தான் எம்.பி வேண்டுகோள்!!

நாட்டில் முஸ்லிம்களுடைய மதஸ்த் தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு...

மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை : காட்டிக் கொடுத்த நாய்!!

மஹியங்கனை, பூஜாநகர பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. சந்தேகநபரான பெண்ணின்...

வட மாகாண சபை நிதி மோசடி தொடர்பில் ஆராய விசேட ஆணைக்குழு!!

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்திய...

யாழ் ரயில் மோதுண்ட தம்பதி : திருமணமாகி இரு மாதங்களில் நடந்த விபரீதம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயிலில் தம்பதி ஒன்று மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக 26 வயதான கணவன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட -...