வவுனியா நகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு நேரத்தில் வீதி மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இச் சமயத்தில் வவுனியா நகரசபைக்குட்பட்ட சில இடஙக்ளில் பகல் நேரங்களிலும் வீதி விளக்குகள் ஒளிர்வதினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் ஒளிரவிடப்படும் மின் விளக்குகள் பகல் வேளைகளில் அணைக்கப்படாமல் தொடர்ந்து 24மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக இன்று (12.07.2020) பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா நகரின் வைரவர் கோவில் வீதி , வைரவர் கோவில் வீதி மூன்றாம் ஒழுங்கை , நகரசபை பூங்கா வீதி போன்ற பகுதிகளில் மின் விளக்குகளும் ஒளிர்ந்து இருப்பதை அவதானிக்க கூடியதாகவிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,
வீதி மின்விளக்குகளை பகல் நேரங்களில் அணைப்பது வவுனியா நகரசபையினரே, இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையினரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
வீதி மின்விளக்குகள் குறித்து வவுனியா நகரசபையினர் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லையென கவலை தெரிவிக்கும் மக்கள் மின்சாரம் வீணாகுவது குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஐஸ்வர்யாராயின் மாமனார் அமிதாப் மற்றும் கணவன் அபிஷேக் ஆகியோர் கொவிட் -19 க்கு சாதகமாக சோ தனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பின்னர் அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும், ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமியார் ஜெயா பச்சன் இருவரும் கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படடனர். அதில் அவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக அறிவிக்கப்பட்டனர்.
எனினும் இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை இன்று முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் தேவாலயங்களை காணொளி, புகைப்படம் எடுப்பதற்கும் இராணுவத்தினர் தடைவிதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா, ஓமந்தை, சேமமடு ப குதியில் உ ள்ள கா ணி ஒ ன்றில் ப ல மா தங்களாக கு விக்கப்பட்டி ருந்த மா ட்டு சா ணத்தினை பா ரவூர்த் தி ஒ ன்றில் சி லர் ஏ ற்றியுள் ளனர்.
இ தன்போ து சா ணத்தை ஏ ற்றிய இ ளைஞர் ஒ ருவர் இ ளைப்பாறுவத ற்காக கு றித்த சா ணிக் கு ம்பத்தின் மே ல் இ ருந்து ள்ளார்.
இ தன்போ து மா ட்டுக் க ழிவில் இ ருந்த வி சவா யு பா திப்பினா ல் மூ ச்சு தி ணறல் ஏ ற்பட்ட நி லையில் ஓ மந்தை வை த்தியசா லைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு ள்ளார்.
அ வசர சி கிச்சையளிக்க ப்பட்டு நோ யாளர் கா வு வ ண்டி மூ லம் மே லதிக சி கிச்சைக்காக கு றித்த இ ளைஞன் வவுனியா வை த்தியசாலை க்கு அ னுப்பி வை க்கப்பட்ட போ தும் கு றித்த இ ளைஞன் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்படுவ தற்கு மு ன்னரே ம ரணமடைந்துள் ளதாக வை த்தியசாலையில் தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.
கு றித்த ச ம்பவத்தில் எஸ்.ரஞ்சிதகுமார் (வயது 28) எ ன்ற இ ளைஞனே ம ரணமடைந்த வராவார். கு றித்த ச ம்பவம் தொ டர்பில் ஓ மந்தைப் பொலிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்துள் ளனர்.
நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சு தீவிர அவதானத்தில் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிந்த தமிழர் அங்கே த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மனைவி க ண்ணீருடன் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தின் அணைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வன் (38). இவருக்கு திருமணமாகி கவிதா (29) என்கிற மனைவியும், யோசிகா (9) என்கிற மகளும், அபிஷேக்(7) என்கிற மகனும் உள்ளனர்.
முத்தமிழ்ச்செல்வன் கடந்த 5 ஆண்டுகளாக ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள சார்ஜா மகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முத்தமிழ்ச்செல்வன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பினார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாம்.
இதனால் ம னமுடைந்த அவர் கடந்த 3ம் திகதி தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். க ணவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் குறித்து தனியார் நிறுவனம் மூலம் மனைவி கவிதாவுக்கு தகவல் தெரியவந்த நிலையில் அவர் அ திர்ச்சியடைந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வெளிநாட்டில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா கண்ணீர் மல்க நேற்று தனது 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஆண் வேடமிட்டு வாழ்ந்து வந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் சமீபத்தில் வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து பொலிசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததோடு தீவிர வி சாரணையும் மேற்கொண்டனர். அப்போது 35 வயது பெண் ஒருவருடன் அந்த 20 வயது பெண் கிளம்பி ஹைதராபாத்துக்கு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர்களை காரில் அழைத்து சென்ற ஓட்டுனரை பிடித்து வி சாரித்த போது அவர் ஹைதராபாத் முகவரியை கொடுத்தார்.
பின்னர் பொலிசார் அங்கு சென்ற போது அ திர்ச்சியடைந்தனர்.
காரணம் இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்தது, மேலும் 35 வயது பெண் ஆண் வேடத்தில் இருந்ததும் தெரிந்தது.
இருவரும் சொந்த ஊருக்கு வர முடியாது என கூறியதோடு தாங்கள் கணவன், மனைவியாக வாழ்வதை பிரிக்க முடியாது என கூறிவிட்டனர்.
இதனால் ஏமாற்றத்துடன் சத்திஷ்கர் பொலிசார் சொந்த ஊர் வந்தனர்.
அவர்கள் கூறுகையில், கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 35 வயது பெண்ணும், 20 வயது பெண்ணும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நட்பானார்கள். இதன்பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஹைதராபாத் வந்தனர்.
அங்கு திருமணம் செய்து கொண்ட பின்னர் 35 வயது பெண் ஆண் போல தலைமுடியை மாற்றி கொண்டு ஒட்டு மீசையை ஒட்டி கொண்டு ஆண் போலவே வேடமிட்டுள்ளார்.
பின்னர் 20 வயது பெண் தனது மனைவி என கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறியுள்ளனர். அவர்களின் குடும்பத்தார் எவ்வளவோ கூறியும் இருவரும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டனர் என கூறியுள்ளனர்.
தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சி றுமியின் கழுத்தில், வ லுக்கட்டா யமாக தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி, கர்ணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த 17 வயது மாணவி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஆகிய 4 சிறுமிகளுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.
இது குறித்து ரகசிய தகவல் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.
மீ ட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் அரசு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற பெற்றோரிடம் சமூக நலத்துறை மற்றும் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 15-வயது சிறுமிக்கு வ லுக்கட்டா யமாக இரவில் திருமணம் நடத்தியதாக, விடிந்தவுடன் நேரடியாக விருதம்பட்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து சிறுமி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எனக்கு குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
அதை நான் மறுத்தபோதும் கூட, நேற்று இரவு என் பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னுடைய கைகளை க ட்டி வி ட்டு வ லுக்கட்டா யமாக இரவு சுமார் 11.30 மணியளவில் கழுத்தில் தாலி கட்டி விட்டனர்.
நான் விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்துவிட்டேன். எங்கு புகார் அளிப்பது என்று தெரியாத நிலையில், பள்ளியில் இருந்து ஒருமுறை விருத்தம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் அதனால் அங்கு புகார் அளிக்கலாம் என்று வந்ததாகவும் கூறினார்.
அதன் பிறகு சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சிறுமியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே கு ழந்தை உ யிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த தம்பதி Philippa Atkins(34)-James Atkins(35). இந்த தம்பதிக்கு சமீபத்தில் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு Luna Atkins என்று பெற்றோர் பெயர் வைத்திருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், குழந்தைக்கு Philippa Atkins தாய்ப்பால் கொடுத்துள்ளார். அதன் பின் சில மணி நேரங்களிலே குழந்தை உ யிரிழந்துள்ளது.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Philippa Atkins ஆட்சேர்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று இவர் குழந்தையான Luna Atkins-க்கு இரவு 9.30 மணிக்கு தாய்ப்பால் கொடுக்க துவங்கிய நிலையில், இவர் மற்றும் கணவர் ஆழ்ந்து உறங்கியுள்ளனர்.
அதன் பின் சில மணி நேரங்கள் கழித்து Philippa Atkins கண் விழித்து பார்த்த போது, Luna Atkins-யிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் அ திர்ச்சியடைந்த தம்பதி, உடனடியாக மருத்துவர்களிடம் கொண்டு செல்லப்பட, அவர் 50 நிமிடங்கள் கழித்து உ யிரிழந்தார்.
கடந்த மே மாதம் 9-ஆம் திகதி 37 வாரங்களில் அவசர சிகிச்சை பிரிவில் Luna Atkins பிறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை 5 மணியளவில் கார்டிப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன் பின்னரே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 9.30 மணியளவில் Luna Atkins-வுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட போது பெற்றோர் இருவரும் தூங்கிவிட்டார்கள். மே 12-ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தாயார் கணவிழித்துள்ளார். ஆனால் குழந்தையிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.
அதன் பின் 2.20 மணிக்கு கு ழந்தை இ றந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. பி ரேத ப ரிசோ தனையில், ம ரணத்திற்கான காரணம் நிச்சயமற்றது என்று பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான இறுதி விசாரணை, அடுத்த ஆண்டு ஜுலை 27-ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் இழப்பால் தவிக்கும் தாய் Philippa Atkins, மற்ற குழந்தைகளுக்கு உதவ நிதி திரட்டி வருகிறார்.
எங்களுடைய மகள் எனக்கு கற்றுக் கொடுத்தது வாழ்க்கை மிகவும் குறுகியது, மிகவும் விலைமதிப்பற்றது. உலகத்தை அதிக இசையுடனும், மகிழ்ச்சியுடனும் நிரப்ப நாம் அவளுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
உங்களால் முடியாது என்று நீங்கள் எப்போதாவது நினைத்தால், சந்திரனைப் பாருங்கள். உலகம் நன்றாக இருப்பது தெரியும்.
நான் என் குழந்தையை ஒன்பது மாதங்களுக்கு சுமந்து செல்ல வேண்டியிருந்தது, அவளை கிட்டத்தட்ட மூன்று நாட்கள் வைத்திருந்தேன்.
என் மகளை நான் அறிந்தேன், அவள் நல்லவள். என்னை நம்புவதற்கும், உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கும் அவள் எனக்கு பலம் அளித்துள்ளாள் என்று தெரிவித்துள்ளார்.
இவர் வீரசிங்கம் பொன்னு அவர்களின் பாசமிகு மகளும் வரதராசா அவர்களின் பாசமிகு மனைவியும் தவராசா(வசந்தன்), தமிழ்செல்வி, தர்சினி , தமிழ்வாணி ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயரும் ஆவார்
மற்றும் யோகநாதன், குலேந்திரன், ஜெகந்திவாசன், சிவநந்தினி ஆகியோரின் மாமியாரும் பாணுஜன், வாணுஜா, வீபூசனன், பிரமிசா , துசாரா , சுதாங்கி , வேணுயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்
அன்னாரின் பூதவுடன் 12.07.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்
தொடர்புகளிற்கு :
மகன் வசந்தன் – 04917634318493.
மகள்- வாணி – 00447990438129.
கணவர் – வரதராசா- 0773950169.
ராஜாங்கன பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பிரதேசத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ அதிகாரி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வீட்டுக்கு சென்ற பின்னர், அங்கு நடந்த மரணச் சடங்கு மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.
இதன் காரணமாக குறித்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்ட 230க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த இராணுவ அதிகாரியின் 11 வயதான மகன் கடந்த சில தினங்கள் பகுதி நேர வகுப்புகளும் சென்று வந்துள்ளார்.
இந்த பகுதி நேர வகுப்புகளில் கலந்துகொண்ட 70 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இராணுவ அதிகாரி, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து வீட்டுக்கு செல்லும் முன்னர்,
அனுராதபுரம் திஸாவெவ பிரதேசத்தில் உள்ள தனது இராணுவ முகாமுக்கு சென்றுள்ள போதிலும் முகாமுக்குள் செல்லவில்லை என இராணுவ தளபதி கூறியுள்ளார். இதனால், இராணுவ முகாமில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ம னைவியை கொ லை செ ய்துவிட்டு க ணவன் த ற் கொ லை செ ய்துகொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவிபிரசாத் (45). கார் ஓட்டுநராக உள்ளார்.
இவர் மனைவி சரஸ்வதி (37) பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு போதுமான வருமானம் இல்லாமல் இருவருக்கும் அ டிக்க டி கு டும்ப த கராறு ஏ ற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிகுந்த ம ன அ ழுத்தத்தில் இருந்த தேவிபிரசாத் தனது மனைவி சரஸ்வதியை வெள்ளிக்கிழமை இரவு கை கா ல்களை க ட்டிப் போ ட்டுவிட்டு சு த் தி ய லா ல் அ டி த் து கொ லை செய்துவிட்டு பி ன்னர் தானும் தூ க் கி ல் தொ ங் கி த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.
இ ருவரது உ டல்களையும் பொலிசார் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் திருமணமான 41 வயது நபர் உண்மையை மறைத்து 24 வயது பெண்ணை காதலித்து, அவருடன் இருந்த புகைபடங்கை காண்பித்து மி ரட்டி வந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. 41 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
திருமணமான இவர் மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான சென்னிமலையில் விட்டுவிட்டு, திருப்பூர் எம்.எஸ்.நகரில் தங்கிய படி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பனியன் கம்பெனியில் அவருடன் வேலை பார்த்து வந்த 24 வயதுப் பெண் ஒருவர் மீது மாதுவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது மாது அந்த பெண்ணிடம் எனக்கு திருமணம் ஆகிவிட்டது, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
மாது வீசிய காதல் வலையில் வீழ்ந்த அந்த பெண், அவருடன் ஒன்றாக இருந்துள்ளார். இதை எல்லாம் மாது ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மாதுவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த பெண், இவருடன் ச ண்டை போட்டு பிரிய முற்பட்டுள்ளார். அப்போது மாது, தான் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளான். இதைக் கண்டு அ திர்ச்சியடைந்த அப்பெண் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
இதற்கிடையில் தான், குறித்த பெண்ணுக்கு வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறி க தறி அழ, உடனே பெண் வீட்டார், மாது வீட்டிற்குச் சென்று, அவர் போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழித்துள்ளனர்.
இருப்பினும் எப்படியோ, மாது அந்த ஆ பாச வீடியோக்கள், புகைப்படங்களை மணமகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் அதைப் பதிவேற்றியிருக்கிறார்.
திருமணத்திற்கு ஒருவாரம் மட்டுமே இருந்த சூழலில், இந்த விவகாரத்தால் திருமணம் நின்று போனது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண் வீட்டார் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் மாதுவை கைது செய்த பொலிசார், அவரிடமிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் ப றிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், மாதுவை நேரில் சந்தித்து அவருடைய போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெண்ணின் பெற்றோர்கள் அழித்திருக்கின்றனர்.
ஆனால், அந்தப் படங்கள், வீடியோக்களை மாது கூகுள் டிரைவில் சேமித்து வைத்திருக்கிறார். தன்னைவிட்டு அந்தப் பெண் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த வீடியோவை மணமகனுக்கு அனுப்பியிருக்கிறார்.
மாதுவின் மெயில், சமூக வலைதள பக்கங்களை முடக்கி, அதிலிருந்த தகவல்களை சைபர் கிரைம் பொலிசார் அழித்திருக்கின்றனர். அவருடைய போனில் வேறு பெண்களுடன் இருந்தது மாதிரியான வீடியோக்கள் எதுவுமில்லை. வி சாரணையில்தான் வேறு எந்தப் பெண்களாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் கா ணாமல் போயிருந்த 17 வயது சி றுமி ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை Montgomery நகர பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Lesley Luna Pantaleon கடந்த 24ஆம் திகதி காரை ஓட்டி சென்ற நிலையில் கா ணாமல் போனார். காணாமல் போன அன்று கருப்பு சட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்திருந்தார்.
இது குறித்து Lesley Luna Pantaleon-ன் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து பொலிசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீர்நிலைகள் நிறைந்த பகுதியில் Lesley Luna Pantaleon சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தண்ணீரில் ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அது Lesley Luna Pantaleon-ன் உடல் என தெரிந்தது.
அவரது ம ரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத இலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இது தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நள்ளிரவில் இளம் திருநங்கை த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (19). திருநங்கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் தவறான தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சபினா தனது தோழியான மற்றொரு திருநங்கை ஷெபிக்கா என்பவருடன் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கத்துக்கு சென்றார்.
வள்ளுவர் கோட்டம் அருகில் வந்த போது அவர்களை இரவு ரோந்து பொலிசார் மடக்கி வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் இருவரும் பொலிசாரிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து அபராதம் செலுத்திய பின்னர் வாகனத்தை திரும்பத்தருவதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து திருநங்கை சபினா தனது கைகளில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தெறிந்தபடி ர களையில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அவர் நேராக தான் வசிக்கும் வசிக்கும் வீட்டிற்கு சென்று கோ பத்தில் மாடிப்படிக்கட்டு ஓரத்தில் தனக்குத்தானே தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சபினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து அதிர்ச்சி தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் கூறுகையில், திருநங்கை சபினா உள்ளிட்ட ஏராளமான திருநங்கைகள் வள்ளுவர் கோட்டம் அருகில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை இரவு ரோந்து வந்த பொலிசார் பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அப்போது சபினாவின் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவரிடம் அபராதம் பெறப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர் அந்த வாகனத்தில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வழியில் சபினா தனது ஆண் நண்பர்கள் 3 பேரை சந்தித்துள்ளார்.
அவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு சென்று த ற்கொ லை முடிவை மேற்கொண்டுள்ளார். இந்த விடயத்தை சபினாவின் தோழி ஷெபிக்கா எங்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். சபினா சந்தித்த ஆண் நண்பர்கள் யார் என்பது குறித்து வி சாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.