வவுனியா வடக்கின் 55 காணிப்பிணக்குகளுக்கு விரைவில் தீர்வு!!

காணிப்பிணக்குகள்

வவுனியா வடக்கு காணிப்பிணக்குகள் தொடர்பான 55 முறைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், 25 புதிய முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுக்கு விரைவில் தீர்வு கணப்படும் எனவும் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, வவுனியா வடக்கு பகுதியில் உள்ள காணி உரிமம் மற்றும் உரிமை, காணி ஆவணம், காணி எல்லைப் பிரச்சளை உள்ளிட்ட காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்து வைக்கும் முகமாக 55 முறைப்பாடுகள் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடப்பட்டுள்ளது.

சன்னாசிபரந்தன், குறிசுட்டகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை வனவள திணைக்களத்திற்கு எதிரானவையாகும். குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா வடக்கு வனவள திணைக்கள அதிகாரிகள், வவுனியா வடக்கு காணி உத்தியோகத்தர் ஆகியோர் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். இவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் முதன் முதலாக இடம்பெற்ற காணி மத்தியஸ்தர் சபை அமர்வை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா, வனவள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுதவிர, காணிப்பிணக்குகள் தொடர்பாக வவுனியா வடக்கின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜீலை 13 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும்.

அப்பகுதியைச் சேர்ந்தோர் புதிதாக முறைப்பாடுகள் எதுவும் செய்யில் அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து 1 மணிவரை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபையிடம் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையில் இன்று முதல் கடுமையாக அமுலாகும் சட்ட நடைமுறை!!

சட்ட நடைமுறை

இலங்கையின் பிரதான நகரங்களில் இன்று முதல் கடுமையான போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வலது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

என் மகளை நடிகை வனிதா விஜயகுமார் கடத்தி சென்றுவிட்டார் : கதறும் கணவன்!!

வனிதா விஜயகுமார்

மகளை பராமரிப்பது தொடர்பான வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில் அது தொடர்பில் பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தொடர்ந்து எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.

ஆனந்தராஜ் மகளை தன்னுடன் ஐதராபாத்திற்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஐதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார்.

இதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்தி சென்று விட்டதாக ஐதராபாத் பொலிசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான்தான் பாதுகாப்பு அளிப்பதாக கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.

விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழு பராமரிப்பில் வைத்து கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

குடிபோதையில் குழந்தையின் மீது படுத்து உறங்கிய தாய் : இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை!!

இரத்தம் கக்கி உயிரிழந்த குழந்தை

பிறந்து நான்கு வாரங்களே ஆன குழந்தை ஒன்றை இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றதோடு, குடிபோதையில் அந்த குழந்தையின் மீதே படுத்து உறங்கிய ஒரு தாய்க்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Marina Tilby (26) தனது மகன் Darianஐ வேல்ஸிலுள்ள ஒரு இரவு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அளவுக்கு மீறி குடித்தபின் இரவு விடுதியில் தான் சந்தித்த இரண்டு ஆண்களை அழைத்துக் கொண்டு தனது கேரவனுக்கு திரும்பியுள்ளார் Marina. அதே கேரவனின் இன்னொரு பகுதியில் Marinaவின் சகோதரியும் இருந்துள்ளார்.

அதிகாலையில் Marina படுத்திருந்த அவரது படுக்கையறைக்கு அவரது சகோதரி வந்து பார்த்தபோது, குடிபோதையில் Darian மீதே Marina படுத்திருப்பதைக் கண்டு அவரை எழுப்பியிருக்கிறார். ஆனால் அளவுக்கதிகமான போதையில் இருந்ததால் Marinaவை எழுப்ப முடியாததால் குழந்தையை இழுத்து எடுத்திருக்கிறார் அவரது சகோதரி.

அப்போது குழந்தையின் வாயிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றிருக்கிறார் அவர். ஆனால் குழந்தை மாரடைப்பு காரணமாக இறந்து விட்டிருக்கிறது. Marinaவைக் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

விசாரணைக்குப்பின், மருத்துவ அறிக்கையால் குழந்தையின் மரணத்துக்கு Marina அதன் மீது படுத்ததுதான் காரணம் என்பதை நிரூபிக்க இயலாததால், கொலைக்குற்றம் சாட்டப்படாமல், குழந்தையை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததாக மட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே Marinaவுக்கு இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு விவரத்தை வாசித்த நீதிபதி, Marina ஒரு தாயாக தனது கடமையை செய்யத் தவறி விட்டதாகவும், குழந்தையின் மீதே படுத்துக் கொள்ளும் அளவுக்கு குடித்திருந்ததாகவும், அவன் வாயிலிருந்து இரத்தம் வடிந்ததைக் கூட கவனிக்க முடியாத அளவுக்கு போதையிலிருந்ததாகவும், சரியான நேரத்திற்கு அதை கவனித்திருந்தால் குழந்தையை ஒரு வேளை காப்பாற்றியிருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நடந்த தவறுக்காக குழந்தையின் தந்தையிடமும், நீதிமன்றத்திடமும், தனது சொந்தக் குடும்பத்திடமும் வருத்தம் தெரிவித்துக் கொண்டுள்ள Marina, தனது தவறால் தான் இழந்த தனது குழந்தையின் இழப்பு தனது வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்தப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

10 வயதில் போராட்டம் நடத்திய சிறுவனுக்கு சவுதியில் மரண தண்டனை!!

சிறுவனுக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக 18 வயது சிறுவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவுதியை சேர்ந்த முர்டரா குரேரிஸ் என்கிற 18 வயது சிறுவன், கடந்த 2011ம் ஆண்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்துள்ளான்.

அதன் பிறகு 2011ம் ஆண்டு, பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து போராட்டம் நடத்தியபோது கொல்லப்பட்ட அவனுடைய சகோதரன் அலி குரேரிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளான் என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் பஹ்ரைன் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, முர்டரா குரேரிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்ட முர்டரா விசாரணை என்கிற பெயரில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். அந்த சமயத்தில் குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டால் விடுவிப்பதாக முர்டராவிடம் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னர் மே மாதம் 2017 ஆம் ஆண்டில் 16 வயது நடந்துகொண்டிருந்த போதே அல்-தபாமில் உள்ள அல்-மாபாத் சிறைக்கு மாற்றப்பட்டான். இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் 37 பேருடன் சேர்ந்து, முர்டராவிற்கும் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான முதல் தமிழ்ப்பெண்!!

பிரமிளா ஜெயபால்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த பிரமிளா 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே படித்து பட்டம் பெற்ற பிரமிளா சிவில் உரிமை ஆர்வலராக விளங்கி வந்தார்.

மேலும், குடியுரிமை ஆலோசனை மையம் ஒன்றினை துவங்கி பல்வேறு சேவைகள் செய்து வந்தார். அதன்பின்னர் 2015ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆனார். இதன்மூலம் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்கிற சாதனை படைத்தார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியினரிடம் செல்வாக்கு பெற்றிருந்த பிரமிளா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன்.

இதன்மூலம் முதல் தெற்காசிய பெண் என்கிற பெருமை பெற்றுள்ளேன். நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் மதிப்புக்குரிய இந்த பொறுப்பை ஏற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

வட்ஸ் அப்பிலேயே மூழ்கிய மனைவி : உரையாடல்களை பார்த்து அதிர்ந்து போன கணவன் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

நேர்ந்த விபரீதம்

தமிழகத்தில் மனைவியின் வட்ஸ் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவன் தனது மகனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9 ஆம் வகுப்பு படிக்கிற வயதில் மகன் இருக்கும் நிலையில் அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் புதன்கிழமை அலமேலு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டுக்குள் அர்ஜுனனும், அவரது 13 வயது மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்பவுடர் மற்றும் அர்ஜுனன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போன்றவற்றை கைப்பற்றினர்.

முதலில் தனது மகனுக்கு சாணிப்பவுடரை தேனில் கலந்து சாப்பிடக்கொடுத்து விட்டு, உயிர் பிழைத்துக் கொள்ளக்கூடாது என்று இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர். மேலும் அந்த கடிதத்தில் எழுதியிருந்த வரிகள் தந்தை மகன் தற்கொலைக்காண காரணத்தை விவரிப்பதாக இருந்தது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வரும் மனைவி அலமேலுவுக்கு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்ததை கண்டு அர்ஜுனன் கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று இரவு அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்து பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தடம் மாறி பயணித்த தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் விரக்தி அடைந்து அர்ஜுனன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்ந்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நண்பனின் உடலுடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வந்த இளைஞர்கள்!!

இறந்த நண்பனின் உடலுடன்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலை, அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கண்ணீருடன் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிவந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அழகப்பன் (27) கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அரண்மனை அருகே உள்ள பீட்டர் பள்ளி மைதானத்தில் தினமும், காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் விளையாடும் பழக்கம் கொண்டவர்.

அதோடு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்று அதிக கிண்ணங்களை வென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய காதல் தோல்வியில் முடிந்ததால், சில நாட்களாகவே சோகமாக இருந்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென அழகப்பன் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து வேகமாக மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். அவருடைய உடலை ஆம்புலன்சில் கொண்டு வரும்போதே ஏராளமான இளைஞர் பட்டாளம் முன்னும், பின்னுமாக இருசக்கர வாகனங்களில் வந்துகொண்டிருந்துள்ளனர்.

கிரிக்கெட் மைதானம் அருகே அம்புலன்ஸ் வந்ததும், மைதானத்திற்குள் விடுமாறு கூறியுள்ளனர். மைதானத்தை மூன்று முறை சுற்றியதும், நடுப்பகுதியில் சிறிது நேரம் நிறுத்தி வைத்து அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

பின்னர் உடலை ஊர்வலமாக தூக்கிக்கொண்டு இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், இளைஞர்களின் செயல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தோற்றுப் போனதால் கிண்டல் செய்த தோழிகள்… பெற்றோரின் செயலால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

மாணவி எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பறை பகுதியை சேர்ந்த விவசாயின் மகள் தனபிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் 9ஆம் வகுப்பு தற்போது முடிந்ததாக எண்ணிய மாணவி இந்த ஆண்டு துவங்கியதும் 10ஆம் வகுப்பில் சென்று அமர்ந்துள்ளார்.

பின்னர் ஆசிரியர்கள் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று 9ஆம் வகுப்பிலேயே போகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனை பார்த்த சகமாணவிகள் தனபிரியாவை கிண்டல் செய்ததாக கூறப்படுகின்றது. இதில் மாணவி மிக வருத்தத்துடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் பண்டிகை தின விடுமுறை என்பதால் ஒருநாள் வீட்டில் இருந்த மாணவி அடுத்தநாள் பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பெற்றோர் அவரை வற்புறுத்தவே மனம்முடைந்து வருதத்துடன் காணப்பட்ட மாணவி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை வழக்கு கொடுத்துள்ள நிலையில், மாணவியின் தற்கொலைக்கு வேறு என்ன காரணம் இருக்கும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இலங்கைத் தமிழர் கொடூர கொலை!!

இலங்கைத் தமிழர் கொடூர கொலை

தமிழகத்தில் இலங்கை தமிழரை 3 பேர் கொலை சேர்ந்து எரித்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பழையாற்றையொட்டியில் உள்ள மயானத்தில் தகனமேடையில் நேற்று முன்தினம் காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், இறந்தவர் பெயர் ரெசி (40) என்பதும் அவர் புகைப்படக்காரர் என்பதும் தெரியவந்தது. இலங்கை தமிழரான ரெசி கடந்த 5ம் திகதி மாலை கன்னியாகுமரி இலங்கை அகதிகள் முகாமில் உறவினர் கேத்தீஸ்வரன் (26) என்பவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது தான் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் கேத்தீஸ்வரனை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ரெசி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்துள்ளார். புகைப்படக்காரரான ரெசி, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கேத்தீஸ்வரனும் புகைப்படக்காரர் என்பதாலும், இருவரும் உறவினர்கள் என்பதாலும் ரெசி, கேத்தீஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது கேத்தீஸ்வரனின் உறவுக்கார பெண்ணுக்கும், ரெசிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது.

ரெசியுடன் பழகிய பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவரை கேத்தீஸ்வரன் கண்டித்தார். ஆனாலும் ரெசி அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. இதையடுத்து ரெசியை கொல்ல முடிவு செய்த கேத்தீஸ்வரன் அவரை கன்னியாகுமரிக்கு வரவழைத்த நிலையில் இருவரும் காரில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது கேத்தீஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் ரெசியின் உடலில் சரமாரியாக குத்தியதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே ரெசி ரத்த வெள்ளத்தில் பிணமானதாகவும் கூறப்படுகிறது. பின்னர் கேத்தீஸ்வரன், தன்னுடைய நண்பர்களான பழனி (26), பைசல் (25) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.

பின்னர் 3 பேரும் ரெசி உடலை சுடுகாட்டுக்கு கொண்டு வந்து தகனமேடை குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து பொலிசார் கேத்தீஸ்வரன் பழனி, முகமது பைசல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

3 வயது சிறுமி கொலையில் வெளியான அதிர்ச்சித் தகவல் : கொலையாளியின் அதிர வைக்கும் பின்னணி!!

3 வயது சிறுமி கொலை

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடன் வாங்கிய தகராறில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விவகாரம் தொடர்பில் ஜாகித் மற்றும் அஸ்லாம் என்பவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

குழந்தையை கொன்று மூன்று நாட்கள் அஸ்லாமும் ஜாகீத்தும் உடலை வீட்டிலேயை மறைத்து வைத்துள்ளனர். கொளுத்தும் வெயிலால் உடல் அழுக தொடங்கியதும் உடலை மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அஸ்லாம் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 4 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக டாப்பல் நகர் காவல் நிலையத்தில் அஸ்லாம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, சொந்த மகளையே அஸ்லாம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத தம்பதியின் 3 வயது மகளை கடத்திய ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவரும், ஆத்திரத்தில் அந்த சிறுமியை கொலை செய்துள்ளனர். குழந்தை மாயமானதை அடுத்து பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடந்த விசாரணையிலேயே நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் அம்பலமானது.

மனைவி குறித்த ரகசியத்தை கண்டுபிடித்து வெறுப்படைந்த கணவன் : பின்னர் நடந்த சம்பவம்

வெறுப்படைந்த கணவன்

தமிழகத்தில் திருமணமான சத்துணவு ஊழியர் வேறு ஆணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியுள்ள்து. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி கலையரசி (33).

தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்த கலையரசிக்கு வடிவேல் (28) என்ற இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்த நிலையில் இதை கலையரசியின் கணவர் ஜெயக்குமார் கண்டுபிடித்தார்.

பின்னர் மனைவியை அவர் கண்டித்தும் அவர் காது கொடுத்து கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்த ஜெயக்குமார் கலையரசியை விவாகரத்து செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கலையரசியும், வடிவேலும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் அங்குள்ள வயலில் வி‌ஷம் குடித்து வடிவேல் இறந்துகிடந்த நிலையில் அருகில் கலையரசி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அக்கம் பக்கத்தினர் கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட கலையரசியின் கையில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது. அதில் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதியிருந்தது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

குறித்த நேரத்தில் புறப்பாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வந்து சேருதல் ஆகிவற்றின் அடிப்படையில் உலகளாவிய அளவில் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயணிகள் விமானச் சேவைகளை flightstats.com என்னும் அமைப்பு ஒவ்வொரு வினாடியும் கண்காணித்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் ஓரிடத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மறுமுனைக்கு எப்போது சென்று சேருகின்றது?

அங்கிருந்து எப்போது புறப்பட்டு மற்றோர் இடத்தை சென்றடைகிறது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த அமைப்பு தொடர்ச்சியாக பதிவு செய்கிறது. அவ்வகையில், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பிரபல பயணிகள் விமானச் சேவைகள் நான்கு மாதிரியாக பட்டியலிடப்படுகின்றன.

உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள், மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள், பிராந்திய விமானச் சேவை நிறுவனங்கள், மலிவு கட்டண விமானச் சேவை நிறுவனங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலில் உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள் ஆகிய பட்டியலின்கீழ் நேரம் தவறாமையில் முதலிடம் பிடித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது.

உலகளாவிய விமானச் சேவை நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிரேசில் நாட்டின் லாட்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் ஆகிய விமான சேவை நிறுவனங்கள் பிடித்துள்ளன.

மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனங்கள் பட்டியலில் ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் இரண்டாவது இடத்தையும் இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டுள்ள கோஏர் நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 91.37 சதவீதம் நேரம் தவறாமையை கடைபிடித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டின் மே மாத நிலவரப்படி 90.75 சதவீதம் நேரம் தவறாமையை பின்பற்றியுள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர் தாக்குதலுக்கு பின்னர் இங்குள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையம் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்த சாதனையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிகழ்த்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி மற்றும் 2019 ஆம் ஆண்டின் முற்பகுதி ஆகியவற்றை இணைத்து கணக்கிடப்பட்ட கடந்த 12 மாத காலத்தில் கொழும்புவில் இருந்து விமானங்களின் புறப்பாடு என்ற வகையில் 86 சதவீதம் அளவுக்கும், வந்து சேரும் விமானங்கள் என்ற வகையில் 85 சதவீதம் அளவுக்கும் நேரம் தவறாமயை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடைபிடித்துள்ளதாக ‘பிலைட்ஸ்டாட்ஸ்.காம்’ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியாவில் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமுர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்டு 4.40 மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு விமானத்தில் வந்திறங்கிய அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக பசார் வீதி சென்று இலுப்பையடி, வைத்தியசாலைச்சுற்றுவட்டம் ஊடாக நகரசபை மைதானத்தினை வந்தடைந்தார்.

4.40 மணியளவில் போராட்டத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது பிள்ளைகளின் விடுதலைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் தமக்கு வாய்க்கரசி போடவருகின்றாயா என்று கோசமெழுப்பியவாறு தமது போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதியை வழிமறிக்கச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை பொலிசார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியிளித்துவிட்டு தற்போது ஆட்சிக்காலம் நிறைவுறும் தருணத்திற்குச் சென்றுள்ள நிலையில் அரசாங்க அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

போராட்ட களத்தினைச் சுற்றி பொலிசார் பாதுகாப்புக்கடமையை மேற்கொண்டனர். முன்னோக்கிச் சென்ற உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்திய பொலிசார் போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராட்சி போராட்டத்தின் காரணத்தைக் கேட்டறிந்தபோது ஜனாதிபதியுடன் நிற்கும் தமது பிள்ளைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கும் தீர்வு எங்கே என்று கோசமெழுப்பியிருந்தனர்.

இன்றுடன் 841ஆவது நாட்களாக வவுனியாவில் போராட்ட களத்தில் சுழற்சி முறையான போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்றைய சமுர்த்தி நிகழ்வு திட்டமிடப்பட்டவாறு எளிமையான முறையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பம்பைமடுவில் நீரில் மூழ்கி இரு பாடசாலை மாணவர்கள் மரணம்!!

பாடசாலை மாணவர்கள் இருவர் மரணம்

வவுனியா பம்பைமடு கல்வெளி பகுதியில் கற்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் இன்று (09.06.2019) மதியம் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பம்பைமடு இராணுவ முகாமுக்குப் பின்புறமாகவுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல்லுடைக்கும் குவாரி காணப்பட்டிருந்தது. எனினும் குறித்த நீர்த்தேக்க கிடங்கு மூடப்படாமையால் அதில் நீர் தேங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த பாடசாலை மாணவர்கள் அதில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

இதன் போது அவர்களில் நால்வர் குளிப்பதற்காக நீரில் இறங்கிய சமயத்தில் நால்வரும் நீரில் முழ்கியுள்ளனர். அவர்களில் சத்தம் கேட்டு அவர்களுடன் சென்ற நண்பர்கள் நீரில் முழ்கியவர்களை காப்பாற்றுவதற்கு முயன்றுள்ளனர். எனினும் இருவரை மாத்திரமே காப்பாற்ற முடிந்துள்ளது.

பின்னர் அவரது நண்பர்கள் அருகேயுள்ள இராணுவ முகாம் மற்றும் அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அயல் கிராம இளைஞர்கள் நீரினுள் குதித்து பல மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த இரு மாணவர்களையும் சடலமாக மீட்டெடுத்துள்ளனர்.

வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவனாக சந்திரகுமார் யூட் (வயது 18) மற்றும் பன்றிகெய்தகுளம் அ.த.க பாடசாலையினை சேர்ந்த முத்துராசா சுரேஸ் (வயது 15) ஆகிய இரு பாடசாலை மாணவர்களே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் பிரதேச பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் பலி!!

விபத்தில் இளைஞரொருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலுமொருவர் காயமடைந்துள்ளார்.

மாங்குளத்திலிருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் ஒலுமடு பகுதியில் உள்ள வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 17ஆம் கட்டை நெடுங்கேணியை சேர்ந்த காத்தலிங்கம் துஷ்யன் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு முள்ளியவளை பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பாஸ்கரன் (வயது 57) என்பவரே காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.