பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் சாலையில் நடைபெற்ற பயங்கர வித்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 3 கார்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது, இதில், இறந்துபோன Imtiaz Mohammed என்ற கார் ஓட்டுநருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.
இவர் Castle Cars இல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சிரமப்பட்டு தனது குடும்பத்தை நடத்தியுள்ளார். தற்போது, ஓரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள நிலையில் இப்படி உயிரிழந்துவிட்டாரே என இவரது அண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.
இறந்துபோவதற்கு முன்னர் தனது மனைவிக்கு போன் செய்து, நான் சிறிது நேரத்தில் இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று போன் செய்த சில நிமிடத்தில் விபத்து நடந்து உயிரிழந்துள்ளார்.
இவரது குழந்தைக்கு இன்று 4 வயது ஆரம்பித்துள்ளது, கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த இவரது வாழ்வில் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டது. இவரது இழப்பால் இவரது குடும்பத்தார் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்த தொழிலை கூடிய சீக்கிரத்தில் விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தார், ஆனால் அதற்குள் இவ்வாறு நடந்துவிட்டது என கண்ணீருடன் கூறியுள்ளார்.