சாப்பிட வருகின்றேன் என்று கூறிய சில நிமிடங்களில் உயிரிழந்த நபர்!!

பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் சாலையில் நடைபெற்ற பயங்கர வித்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். 3 கார்கள் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நடந்துள்ளது, இதில், இறந்துபோன Imtiaz Mohammed என்ற கார் ஓட்டுநருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

இவர் Castle Cars இல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர், மிகவும் சிரமப்பட்டு தனது குடும்பத்தை நடத்தியுள்ளார். தற்போது, ஓரளவுக்கு முன்னுக்கு வந்துள்ள நிலையில் இப்படி உயிரிழந்துவிட்டாரே என இவரது அண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

இறந்துபோவதற்கு முன்னர் தனது மனைவிக்கு போன் செய்து, நான் சிறிது நேரத்தில் இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று போன் செய்த சில நிமிடத்தில் விபத்து நடந்து உயிரிழந்துள்ளார்.

இவரது குழந்தைக்கு இன்று 4 வயது ஆரம்பித்துள்ளது, கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த இவரது வாழ்வில் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டது. இவரது இழப்பால் இவரது குடும்பத்தார் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்த தொழிலை கூடிய சீக்கிரத்தில் விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாம் என்ற முடிவில் இருந்தார், ஆனால் அதற்குள் இவ்வாறு நடந்துவிட்டது என கண்ணீருடன் கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள 27 வயது யுவதி!!

களுத்துறையில் 27 வயது யுவதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியின் சடலம் நேற்றைய தினம், அவரது வீட்டின் அறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

சாந்தனி மகேஷிக்கா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த நபர் மீண்டும் வந்த அதிசயம் : மகிழ்ச்சியில் உறவினர்கள்!!

உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

மன்னார் பேசாலை பிரதேசத்தில் கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், 10 நாட்களின் பின்னர் இந்திய மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு ராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்தோனி மரியதாஸ் என்ற 37 வயதுடைய இந்த மீனவர் கடந்த 7ஆம் திகதி மேலும் மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கடல் அலையில் சிக்கி காணாமல் போனார்.

மரியதாஸ் கடலில் மூழ்கியமை தொடர்பில் சக மீனவர்களால் அவரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் அறிந்த நாளில் இருந்து மரியதாஸின் சடலம் கரை ஒதுங்கும் என குடும்பத்தினர் பேசாலை கடற்கரையில் காத்திருந்துள்ளனர்.

சூறாவளியில் சிக்கில் கடலில் விழுந்த மரியதாஸ் கடலில் மிதந்து தென் இந்தியாவுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்திய மீனவர்கள் அவரை காப்பாற்றி டேலர் இயந்திரம் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.

அதன் பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக குடும்பத்தினரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் இறுதி எச்சரிக்கை!!

சேதமடைந்த நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இறுதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சேதமடைந்த, கிறுக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்டுள்ள நாணயத்தாளை மாற்றிக் கொள்வதற்காக இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அனுமதி பத்திரம் கொண்ட வர்த்தக வங்கிகளில் நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
நாணயத்தாள்களை சேதப்படுத்தல் அல்லது மாற்றுதல் 1949 இலக்க 58 ஆம் நிதி சட்டத்தின் கீழ் குற்றம் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரண்டு தண்டனைகளும் வழங்கப்படலாம் என அந்த வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரு சிறுவர்களை காணவில்லை : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

மட்டக்களப்பு – புதூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவர்கள் இருவரையும் அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளதாக கடந்த மாதம் 22ஆம் திகதி மட்டக்களப்பு சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

எனினும் இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தம்மால் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக மட்டக்களப்பு சிறுவர், பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறுவர்களை அவர்களது தந்தை யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு மாற்றி மாற்றி கொண்டு செல்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த சிறுவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் எனவும், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்!!

 
20 ஆவது சர்வதேச சித்திரப் போட்டியில் இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட சர்வதேச சமாதான ஆதாரங்களுக்கான அமைப்பானது வருடாந்தம் உலகளாவிய ரீதியில் நடாத்தி வருகிறது.

இவ்வாண்டு ‘ பூமியில் சமாதானம் நிலவும்’ எனும் தலைப்பில் சித்திரப் போட்டி நடைபெற்றது. இதில் 5 வயது தொடக்கம் 7 வயதுப்பிரிவில் முதலாவது இடம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வன் நகுலேஸ்வரன் கேமலக்ஷன் எனும் மாணவனே முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.

உலகளாவிய ரீதியில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான சித்திரங்களுக்குள் இவரது சித்திரம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளமை இலங்கைக்கும் குறிப்பாக மட்டக்களப்புக்கும் பெருமையை தேடித் தந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பங்குபற்றிய செல்வி ந.சஞ்சனா- கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், செல்வி ச.தம்மிக்கா -கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், செல்வி ந. தருணிக்ஷ – புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, செல்வி சி.சஷ்ஷினி ஆகிய நான்கு மாணவியருக்கு பங்குபற்றுதலுக்கான சான்றிதழ்களும் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோயில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!!

 
தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற ஒருவர், தம்புள்ளை -கண்டலம வீதியில் விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை – கண்டலம வீதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபரே காயமடைந்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸார் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதில் உரப் பை ஒன்றில் சில்லறை காசுகள் மற்றும் ரூபா நாணயத்தாள்கள் இருந்துள்ளன.

இது குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து வந்ததாக முதலில் கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி விசாரித்துள்ளனர். அப்போது அது பொய் என தெரியவந்துள்ளது.

மறுபடியும் விசாரணை நடத்திய போது கலேவலை பிரதேசத்தில் தனது தந்தை ஆலயம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அங்கிருந்த பணத்தை தனக்கு கொடுத்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பொலிஸார் பிரதேசத்தில் உள்ள விகாரைகள் மற்றும் ஆலயங்களின் நிலைமைகள் தொடர்பாக தேடியுள்ளனர்.

அப்போது கண்டலம குளத்துக்கு அருகில் இருக்கும் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், சந்தேக நபர், பொலிஸாரிடம் உண்மையை கூறியுள்ளார்.

வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள வடிகானுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஷிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இன்று காலை வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் வடிகானில் கிடந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றமிழைத்த கணவரை பொலிசில் காட்டிக் கொடுத்த மனைவியின் பரிசுப்பொருள்!!

மும்பையில் மருத்துவர் ஒருவர் செய்த தவறை, அவரின் மனைவி பரிசாக அவருக்கு கொடுத்த கைப்பேசி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அஜய் சிங் gynaecologist மருத்துவராக உள்ளார். இவரின் மனைவி சுவேதாவும் dermatologist மருத்துவர் ஆவார். தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணிடம் தவறான உறவு இருக்குமோ என்று சந்தேகித்த சுவேதா, ஒட்டுக்கேட்கும் தொழில்நுட்பம் பொருத்திய கைப்பேசியை, தன் கணவருக்கு பரிசாக அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் திகதி, அஜய் ஒரு பெண்ணுடன் Marine Drive என்னும் இடத்திற்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை அவள் வசிக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

அதன் பின்னர், தானும் அந்த பெண்ணின் வீட்டில் இரவு மட்டும் தங்கி கொள்வதாக கோரியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் தயக்கத்துடன், படுக்கையறைக்கு வெளியே இருக்கும் சோபாவில் தூங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார்.

அடுத்த சில நேரத்தில் அந்த பெண்ணின் படுக்கையறைக்கு சென்ற அஜய் சிங், மது போதையில் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்த அப்பெண், தன்னை யாரோ பாலியல் வன்புணர்வு செய்துள்ளதை உணர்ந்துள்ளார். மேலும், அங்கு அஜய் இல்லாததால் அவருக்கு போன் செய்து இது பற்றி கேட்டுள்ளார்.

ஆனால், அன்றிரவு நடந்த சம்பவத்தை தான் கைப்பேசியில் வீடியோவாக எடுத்துள்ளதாக கூறி அஜய் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இவர்களது உரையாடலை, ஒட்டுக்கேட்கும் கருவி மூலமாக அஜய்யின் மனைவி சுவேதா கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணை தொடர்பு கொண்ட சுவேதா, தன் கணவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனைக் கொண்டு அப்பெண்ணிற்கு உதவுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவரை நம்ப மறுத்த அந்த பெண், நடந்த விடயங்களை தனது தாயாரிடம் கூறி, பொலிசில் அஜய் மற்றும் சுவேதா ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார்.

இந்நிலையில், அஜய் சிங் கைது செய்யப்பட்டார். சுவேதா, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அனைத்தையும் விளக்கினார்.

19 வயதில் கோடீஸ்வர இளைஞன் எடுத்த அதிரடி முடிவு!!

கோவையை சேர்ந்த தொழிலதிபரின் 19 வயது கோடீஸ்வர மகன் துறவறம் பூண்டுள்ளார்.

மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ் (19) குருகுல கல்வி பட்டம் பெற்றுள்ளார். இவர் துறவம் பூண்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிமிட்ஸ் ஊர்வலமாக தேரில் அழைத்து வரப்பட்டார். அப்போது ஜெயின் சமூக பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி தெருக்களில் சென்றன. ஊர்வலம் சென்ற பாதையில் உள்ள தெருக்களை ஜெயின் சமூக பெண்கள் சுத்தம் செய்த வண்ணம் சென்றனர். மேலும் ஊர்வல பாதையில் பால், தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

கோவையில் இருந்து சூரத் செல்லும் நிமிட்ஸ் வருகிற 27 ஆம் திகதி அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் துறவறம் மேற்கொண்ட பின்னர் மீண்டும் கோவை திரும்புகிறார்.

துறவறம் பூண்ட பின்னர் சொகுசு வாழ்க்கை வாழக்கூடாது, வீட்டில் தங்ககூடாது, கோவிலில் தான் தங்க வேண்டும். தானே தான் சமைத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தர்மம் எடுத்து சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய பெண் : கொலை செய்யப்பட்டதாக புகார்!!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், கணவரின் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான விஜய் ஆனந்த் என்பவருக்கும், ரம்யா என்பவருக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 125 சவரன் நகை, கார் ஆகியவை விஜய் ஆனந்துக்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தான் மக்கள் செய்தி தொடர்பாளர் பணியில் சேர 50 லட்சம் தேவை என்றும், அதை உன் வீட்டில் வாங்கி வா என்றும் ரம்யாவை விஜய் அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தனது வீட்டில் பேசிய ரம்யாவிடம், சிறிது நாளில் பணம் தருவதாக அவரது பெற்றோர் கூறி உள்ளனர். ஆனாலும் கணவர் வீட்டில் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி பெற்றோரிடம் ரம்யா குமுறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ரம்யாவின் பெற்றோரிடம், விஜய் ஆனந்த் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.இதை கேட்டு அதிச்சியடைந்த பெற்றோர், விஜய் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் தங்களது மகளை கொலை செய்து விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் திணறிய மலைப்பாம்பு!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழியை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தததை பார்த்த பொதுமக்கள் அதிர்சியடைந்துள்ளனர்.

திருமயம் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோழி ஒன்றை விழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்த அந்த மலைப்பாம்பை கிராம மக்களே பத்திரமாக பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு அந்த பாம்பை வனத்துறையினர், மிதிலைப்பட்டி காட்டுக்குள் விட்டனர். புதுக்கோட்யை சுற்றியுள்ள கிராமங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ரயில் கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து : இளைஞர் படுகாயம்!!

 
வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள புகையிரதக் கம்பத்துடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரப்பெரியகுளம், அவுசப்பிட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகையிரத பாதையில் இருந்த கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது, தூக்கி வீசப்பட்ட மோட்டர் சைக்கிள் இரண்டாக உடைவுற்ற நிலையில் முன்னே சென்ற காருடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும், விபத்தின் போது காயமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

வங்கி அட்டைகளை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

இலங்கையில் போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற பணம் மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோசடி சம்பவம் தொடர்பில் மூவர் குற்ற விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மோசடியாளர்கள் வாடகைக்கு பெற்றுக் கொண்ட வேனில் சென்று கடன் அட்டைகளை பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் வங்கி அதிகாரிகள் போல் சென்றே இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர்.
வங்கிகளுக்கு வெளியே இருக்கும் மோசடியாளர்கள் பணம் பெற்றுக் கொள்ள வரும் வாடிக்கையாளர்களை தவறான வழியில் அனுப்பி அவர்களிடம் உள்ள கடன் அட்டைகளை சோதனையிட வேண்டும் என கூறி பெற்றுக் கொள்கின்றார்கள். குறித்த வங்கி ATM இயந்திரத்தில் சில வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும், ஸ்கிமர் டிவைஸ் என்ற சிறிய இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி கடன் அட்டைகளின் தகவல்களை பெற்றுக் கொள்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை பயன்படுத்தி போலி கடன் அட்டைகள் தயாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி நடவடிக்கையின் மூலம் 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
யாராவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வங்கி கடன் அட்டையை வழங்குமாறு கோரினால் வழங்க வேண்டாம் என பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை வைத்தியசாலைக்குள் மரநாய் : மனித உடலை கடித்து சாப்பிட்ட கொடூரம்!!

வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சாப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிலாபம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் இவ்வாறு மரநாயினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலமே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சடலத்தின் முகம் உட்பட பல பகுதிகள் மரநாயினால் கடித்து சாப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் உயிரிழந்த நபரின் உறவினர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலையின் வைத்தியர் சிராஜிடம் வினவிய போது, சடலத்தை பொறுப்பேற்கும் போது சடலத்தை பரிசோதித்தே பெற்றிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வைத்தியசாலையின் பிணவறையில் இடம்பெற்றிருந்தால், உறவினர்கள் அல்லது வேறு இடத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்வதாக வைத்தியர் சிராஜ் தெரிவித்துள்ளார்.

ஆணாக மாறி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நபர்!!

இங்­கி­லாந்தில் 4 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண் அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தை­யொன்றை பெற்­றெ­டுத்­துள்ளார்.

இங்­கி­லாந்­தி­லுள்ள பியோனிஸ் நகரை சேர்ந்த கச்சி சுல்லிவான் பெண்­ணாக பிறந்து வளர்ந்­தவள். ஒரு ஆணுடன் இவ­ருக்கு திரு­மணம் நடந்­தது. அவர்­க­ளுக்கு ஒரு குழந்­தையும் பிறந்­தது.

அதன் பின்னர் 4 ஆண்­டு­க­ளுக்கு பிறகு இவர் ஹோர்மோன் சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். இதை­ய­டுத்து, ஸ்டீவென் என்­ப­வரை திரு­மணம் செய்து கொண்டார். அவ­ருடன் வாழ்ந்த அவர் கடந்த பெப்­ர­வரி மாதம் மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

அவ­ருக்கு சமீ­பத்தில் குழந்தை பிறந்­தது. பிர­சவ வலி ஏற்­பட்­ட­வுடன் அவரை வைத்­தி­ய­சா­லையில் சேர்த்­தனர். அங்கு அவ­ருக்கு சுகப்­பி­ர­சவம் ஆக­வில்லை. எனவே, ஒரு வாரம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அழ­கான குழந்­தையைப் பெற்­றெ­டுத்தார்.

அதன்­மூலம் பெண்­ணா­கவும், ஆணா­கவும் இருந்து குழந்தை பெற்ற முதல் நபர் என்ற பெரு­மையை பெற்றார். இவர் வர்த்தகவியல் பட்டம் படித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.