நுவரெலியாவில் ஆளில்லாமல் முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்தும் அதிசயம்!!

 
நுவரெலியாவில் இளைஞர் ஒருவர் தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார்.

நுவரெலியா – களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு தானியக்க முச்சக்கரவண்டியை கண்டுபிடித்துள்ளார்.

இவர் (ரிமோட் கொன்ரோல்) ஊடாக இயங்கக்கூடிய வகையில் 5 நாட்களில் முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளார்.

இயந்திரவியல் தொழிலில்ஈடுபட்டுவரும் குறித்த நபர், எரிபொருள் ஊடாக இயக்க வைக்கும் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொன்ரோல்) ஊடாக இயங்க வைப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பார்வையாளர்களுக்கு மத்தியில் இயங்க வைத்தமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது சொந்த செலவில் தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியை போல எதிர்காலத்தில் இன்னும் பல (ரிமோட் கொன்ரோல்) மூலம் கட்டுப்படுத்தக்கூடிய இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் சமிந்தருவான் குமார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதற்கான பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

வவுனியா சுகாதாரப் பணிமனையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை : மக்கள் விசனம்!!

 
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த சில தினங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றப்பட்டாது குவிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பாக சுகாதாரப்பணிமனையில் வைத்திய அதிகாரி குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வாயிலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அப்பகுதியில் காணப்படுகின்றதுடன் நகரசபையினர் இதை அகற்றுவதில் தாமதித்து வருவதாகவும் அதன் காரணமாகவே குப்பைகள் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகள், கடையோரங்களில் குப்பைகள், கழிவுகள் காணப்படின் அதற்கு தண்டப்பணம் அறவிடப்படும் சுகாதார தொண்டர்கள் தங்கள் பணிமனையிலே கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

 
தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றன.

வவுனியா விபுலானந்த கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (28.07.2017) காலை 7.30 மணிமுதல் 9.30 மணி வரை  பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தில் பங்கேற்றிருந்தனர்.

டெங்கை கட்டுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டு வரும் இச் சிரமதானப்பணி 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் வட பகுதி பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை இடம்பெற்றுவரும் நிலையில் இச் சிரமதானம் மேற்கொள்ளப்படுவதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தண்ணீர் தாங்கிகள்!!

 
வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தண்ணீர்த் தாங்கிகளை கையளிக்கும் நிகழ்வுகள் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இதனடிப்படையில் 24507 குடும்பங்களைச் சேர்ந்த 85771 உறுப்பினர்களுக்கு 3 தண்ணீர் கொண்டு செல்லும் உழவு இயந்திரம் 50 தண்ணீர் தாங்கிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.

தற்போது வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தண்ணீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்துக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய மைல்கல்லை எட்டியது வட்ஸ் அப் சேவை!!

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் வட்ஸ் அப் சேவையானது பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது செயற்பாட்டு நிலையில் உள்ள நாளாந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.3 பில்லியனை கடந்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இதன் காரணமாக நாள்தோறும் சுமார் 4.5 பில்லியன் புகைப்படங்கள் பகிரப்படுவதுடன் ஒரு பில்லியன் வரையான வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றது.

இவை தவிர 55 பில்லியன் குறுஞ்செய்திகளும் நாளாந்தம் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் உலகெங்கிலும் ஒரு பில்லியன் பயனர்களை எட்டிய வட்ஸ் அப் ஆனது இந்த வருடம் நாளாந்த செயற்பாட்டு நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை ஒரு பில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.

உலகெங்கிலும் சுமார் 60 வரையான மொழிகளில் வட்ஸ் அப் சேவை கிடைக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அழகான பெண்களின் பட்டியல் வெளியீடு : இடம் பிடித்த முக்கிய பிரபலங்கள்!!

Hill பத்திரிக்கை வெளியிட்டுள்ள வாஷிங்டனில் உள்ள அழகான பெண்கள் பட்டியலில் மெலேனியா மற்றும் இவாங்கா இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல Hill பத்திரிக்கை வாஷிங்டனில் வசிக்கும் அழகான 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது 2017-க்கான பட்டியலாகும். இந்த பட்டியலானது தரவரிசை படி வெளியிடப்படாமல், அகவரிசை படி வெளியிடப்பட்டுள்ளது.

50 அழகான பெண்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவியும், அந்நாட்டின் முதல் பெண்மணியுமான மெலேனியா டிரம்ப் இடம் பிடித்துள்ளார்.

அதே போல டிரம்பின் மகள் இவாங்காவின் பெயரும் பட்டியலில் உள்ளது. வெள்ளை மாளிகையின் உள்நாட்டு கொள்கை உறுப்பினர் Zina Bash, வெள்ளை மாளிகையின் தொடர்பு துறை இணைப்பாளர் Leah Levell மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் Reince Priebusக்கு உதவியாளராக இருக்கும் Mallory Hunter ஆகிய மூன்று பேரும் அழகான பெண்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த 2015ல் Hill பத்திரிக்கை வெளியிட்ட அழகான பெண்கள் பட்டியலில் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் படகு : கொத்துக் கொத்தாக கிடந்த சடலங்கள்!!

ஐரோப்பியா நோக்கி Mediterranean கடலில் சென்று கொண்டிருந்த ரப்பர் படகில் பயணித்த 13 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து அதிகளவிலான அகதிகள் சட்ட விரோதமாக Mediterranean கடல் வழியாக ஐரோப்பாவை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி இரு தினங்களுக்கு முன்னர் Mediterranean கடல் வழியாக ரப்பர் படகில் அதிகளவிலான அகதிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

லிபியா வழியாக படகு வந்து கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் படகிலிருந்த கர்ப்பிணி பெண், குழந்தைகள் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

இறந்தவர்களின் சடலங்கள் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டு அகதிகள் பயணித்த படகிலேயே மீண்டும் வைக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிய 167 அகதிகளை பத்திரமாக மீட்டார்கள்.

இதனிடையில், இந்த வருடத்தில் இதுவரை 2200 அகதிகள் Mediterranean கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியின் போது உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரயிலில் வழங்கப்பட்ட பிரியாணியில் கிடந்த பல்லி!!

ரயிலில் பயணி ஒருவருக்கு தரப்பட்ட வெஜிடபிள் பிரியாணியில் பல்லி இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவ்லியில் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது ஐ.ஆர்.சி.டி.சியால் தயாரிக்கப்பட்ட வெஜிடபிள் பிரியாணியை அவர் வாங்கியுள்ளார்.

பிரியாணி பாக்கெட்டை திறந்து பார்த்த போது அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு பெண் பயணி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், இது குறித்து அவர் இந்தியாவின் ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்தார்.

இதையடுத்து, உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.

 

மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி?

 
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி. இவருக்கும் உடையார்பளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கனகவள்ளி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில் கனகவள்ளி மற்றும் அருணுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கனகவள்ளி தனது குழந்தையுடன் சென்னையில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதன் பின் கனகவள்ளியை சமாதானப்படுத்தி அருண் தன் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். ஊருக்கு அழைத்து வந்த பின்பு மனைவியை காணவில்லை என்று அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக அருண் மற்றும் அவரது தந்தை தங்கமணி,மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கனகவள்ளியை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

புதைத்த இடம் குறித்து அருண் தகவல் கூறியுள்ளார். பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, உடல் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் சென்றும் உடல் கிடைக்காததால், அருணை மீண்டும் விசாரித்துள்ளனர்.

அப்போது கொங்கனருரில் உள்ள முந்திரிகாட்டில் புதைத்ததாக கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற பொலிசார் புதைத்த இடத்தை தோண்டி பார்த்த போது உடல் உறுப்புகளின் எலும்புகள், பெண்ணின் தலைமுடி, தாலி, போன்றவை கிடைத்துள்ளது. கிடைத்த உறுப்புகளை பொலிசார் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

 

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண்!!

இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நிதிஷ்- ஷில்பி டெல்லியில் சிறிய வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் மேற்குவங்கத்தில் நிதிஷின் பெற்றோரால் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

32 வயதான ஷில்பி அதிகாரி டெல்லியில் தனியார் வங்கி ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிதிஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அவரின் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஷில்பி வேறுவழியில்லாமல் நிதிஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி இரவு கணவருக்கு மதுவை கொடுத்து அவரை போதையில் மூழ்கடித்த ஷில்பி தலையணையால் கணவரின் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு கணவரின் உடலை என்ன செய்வது என தெரியாததால் கணவரின் இறந்த சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, தன் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது அக்கம்பக்கத்தினரை நம்பவைத்துள்ளார்.

சந்தேகம் அடையாத அக்கம்பக்கத்தினர் நிதிஷ் இயற்கையான முறையில் மரணமடைந்துவிட்டதாகவே நினைத்து அவருடைய உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

நிதிஷின் உடலைக் கண்ட ஒருவர் நிதிஷின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், அவரின் உடலில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வருவதையும் உணர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பின்னர் அதன் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ஷில்பியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது : பரிசாக நான்கு லட்சம்!!

 
கிளிநொச்சி, செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

2016ல் தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய சிறந்த பணியினை பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை கிளிநொச்சி, செல்வாநகரைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனம் இராஜகோபால்(59) என்பவருக்கு கிடைத்துள்ளது.

இதில் முதலாம் இடத்தினை களுத்துறையைச் சேர்ந்து விவசாயிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தினை பெற்ற இவருக்கு சான்றிதழ் விருது உட்பட நான்கு லட்சம் ரூபா பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தனியே பயிர்ச்செய்கை மட்டுமன்றி மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதோடு, இயற்கை முறை பசளை பயன்பாட்டினை அதிகமாக பயன்படுத்துகின்ற விவசாய நடவடிக்கைகளை அதிகம் மேற்கொள்கின்றார்.

இதற்கு முன்னரும் இராஜகோபால் விவசாயத்திற்காக நான்கு தடவைகள் பல சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தற்போது மிகவும் வறட்சியான காலநிலை தொடர்கின்ற போது இராஜகோபாலின் காணி பசுமையாக காணப்படுகிறது. மரக்கறிகள், பழவகைள், உள்ளிட்ட பல்வேறு விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றார்.

தனதும் தனது குடும்ப அங்கத்தவா்களின் உழைப்பின் மூலம் மாத்திரமே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற இராஜகோபால் தான் சந்திக்கும் நெருக்கடியாக சந்தையில் விவசாயிகள் எந்த உற்பத்தி பொருட்களை கொண்டு சென்றாலும் பத்துக்கு ஒன்று கழிவு எடுப்பதை மிகவும் மனவருத்ததுடன் கூறுகின்றார்.

அதிகளவு உடல் உழைப்பை செலுத்தி பல மாதங்கள் விவசாய நடவடிக்கைளில் ஈடுப்பட்டு உற்பத்தி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்கின்ற போது வியாபாரிகள் இடைத்தரகர்கள் பத்து கிலோவுக்கு ஒரு கிலோ கழிவாக எடுக்கின்றனா்.

இது விவசாயிகளுக்கு ஒரு சாபக்கேடு என சுட்டிக்காட்டும் அவா் உதாரணமாக தரமான பச்சை மிளகாய், நூறு கிலோ கிராம் சந்தைக்கு கொண்டு சென்றால் அங்கு பத்து கிலோ கழிவாக பெறப்படுகிறது. இதன்போது தங்களின் மனம் வெதும்புகிறது எனவும் இது மிகவும் அநீதியானது என்றும் குறிப்பிடுகின்றார்.

எனவேதான் அவா் விவசாயிகள் சார்பாக பத்துக்கு ஒன்று என்ற கழிவு முறையை நடைமுறையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கின்றார்.

வறட்சியால் நாடுமுழுவதும் 10 இலட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் வறட்சியால் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 10இலட்சத்து 88 ஆயிரத்து 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் ஊவா முதலான ஏழு மாகாணங்களில் 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணமே வரட்சியால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அங்கு ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த, 4 இலட்சத்து 62 ஆயிரத்து 815 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து206 பேரும், முல்லைத்தீவில் 35 ஆயிரத்து 730 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 308 பேரும், கிளிநொச்சி 24 ஆயிரத்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து378 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் 24 ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 771பேரும், மன்னாரில் 15 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 152 பேரும்பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆலயத்தின் நான்கு திசைகளிலும் உள்ள வீதிகளில் பக்தர்களின் நன்மை கருதி அலங்காரப் பந்தல்களும், தண்ணீர்ப் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆலயத்தின் முன்பக்கமாகக் கிழக்குத் திசையிலுள்ள பருத்தித் துறை வீதியில் இரு பிரமாண்டமான அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஆலயத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளிலும் விசேட அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. குறித்த வீதித் தடைகளில் யாழ்ப்பாணம் பொலிஸாருடன் இணைந்து யாழ். மாநகர சபையின் உத்தியோகஸ்தர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துச் சாரதிகள் மாற்று வீதியில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லைக்கந்தன் வருடாந்தப் பெருவிழாவையையொட்டி ஆலயத்தைச் சூழவுள்ள அனைத்து அன்னதான மடங்களும், மண்டபங்களும் வர்ணம் பூசப்பட்டுள்ளன.

மேலும், அந்த மடங்களிலும், மண்டபங்களிலும் ஆலய மஹோற்சவ காலங்களில் அன்னதானம்வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அபகலிப்டோ பாணியில் உருவாகும் புதிய படம் ஆறாம் வேற்றுமை!!

அபோகலிப்டோ (Apocalypto) பாணியில் தமிழில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இப்படத்தை ஹரி கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.

செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் வித்தியாசமான படம் ஆறாம் வேற்றுமை.

இந்த படத்தில் அஜய் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கோபிகா என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார்.
யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப்படம் இன்றைய காலகட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம், என இயக்குனர் ஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஓர் இடம், ஓர் இனம் என வாழத்தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை. மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் தான் இது எனவும் இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த படத்திற்கு ரேணிகுண்டா பட புகழ் கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார்.

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் மஞ்சள்: ஆய்வில் தகவல்!!

நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதாக அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தமாரா கண்டுபிடித்துள்ளார்.

நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோயாக மாறுகிறது.இதைக் குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது.

இந்த நிலையில், நரம்புக் கட்டி புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளதென ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவுள்ள தமாரா, புற்றுநோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

தங்க விற்பனை நிலையத்தில் குடும்பமாக திருடிய குழுவினர்!!

கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நகை விற்­பனை நிலையம் ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான 13 பவுண் தங்க நகை­களை கொள்­வ­னவு செய்வது போன்று அங்கு வருகை தந்த நால்வர் அடங்­கிய குழு திருடிச் சென்­றுள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற அன்று குறித்த நகைக் கடைக்கு ஆண் ஒரு­வரும் மூன்று பெண்­களும் நகைகள் வாங்­கு­வது போன்று வந்­துள்­ளனர். அவர்­களில் 13 மற்றும் 18 வய­தான இரு பெண்கள் அடங்­கி­யி­ருந்­தனர்.

இவர்­க­ளுடன் வருகை தந்த ஆண் கடையில் இருந்த நகைப் பெட்­டியை திருடி தான் அணிந்­தி­ருந்த சாரத்­துக்குள் மறைத்து வைக்கும் காட்சி அங்கு பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்பு கெம­ராவில் தெளி­வாக பதி­வா­கி­யுள்­ளது.

சம்­பவம் இடம்­பெற்ற வெள்­ளிக்­கி­ழமை இரவு கடை­யி­லி­ருந்த நகை­களின் இருப்பை உரி­மை­யாளர் பார்த்த போதே நகைகள் திரு­டப்­பட்ட விடயம் தெரிய வந்­துள்­ளது.

இவர்கள் அனை­வரும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் போன்றே காணப்­பட்­டனர். அவர்­களில் பெண் நகை­களை வாங்­கு­வது போன்று அவற்றைப் பார்­வை­யிட்­டுள்ளார். அவர்­க­ளுடன் வந்த ஆண் இதன்­போது நகைகள் அடங்­கிய பெட்­டியைத் திருடி தான் அணிந்து வந்த சாரத்­துக்குள் மறைத்து வைத்­துள்ளார்.

அவர்­க­ளுடன் கூட வந்த இரு சிறு­மி­யர்­களும் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்­காக திரு­டு­வதை காணாமல் இருக்கும் வகையில் சூழ்ந்து நின்­றுள்­ளனர்.

பின்னர் அவர்கள் எந்­த­வித நகை­க­ளையும் கொள்­வ­னவு செய்­யாமல் மாலை 5.12 மணி­ய­ளவில் கடை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளனர். இவைகள் கடையில் பொருத்­தப்­பட்­டுள்ள சி.சி.­ரி.வி. கம­ராவில் தெளி­வாக பதி­வா­கி­யுள்­ளது.

இந்தச் சம்­பவம் தொடர்­பாக கொச்­சிக்­கடை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார். சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.