இப்படியும் மரணம் நிகழுமா? சுற்றுலா சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!!

bhutan_girl_dead_torsa_river_jaigaon
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் கார் விபத்தில் உயிர் தப்பிய பிறகும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவீடன் நாட்டை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆண் என மூவரும் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு வேளையில் மூவரும் தெற்கு பிரான்ஸில் உள்ள Sainte Maxime என்ற நகர் சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர்.இரு பெண்களும் பின் இருக்கையில் அமர்ந்திருக்க ஆண் காரை ஓட்டியுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றுக்கொண்டு இருந்த இவர்களின் கார் எதிரே மற்றொரு கார் மோதுவது போல் வந்துள்ளது.ஆபத்தை உணர்ந்த ஓட்டுனர் காரை வேகமாக பக்கவாட்டு பகுதியில் திருப்பியதும் எதிரே வந்த கார் மீது மோதாமல் தப்பியுள்ளது.

ஆனால், கார் திரும்பிய வேகத்தில் அது சாலையில் பலமுறை உருண்டுள்ளது.இறுதியில் கார் ஒரு பாலத்தின் விளிம்பில் சென்று நின்றுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மூவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

கார் நின்றுருந்த இடத்தில் வெளிச்சம் இல்லாததால் மூவரும் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியவில்லை.அதே சமயம், விபத்தில் இருந்து தப்பிய அதிர்ச்சியில் இருந்து மீளாத இரு பெண்களும் காரின் கதவை திறந்துக்கொண்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

ஆனால், கார் கதவிற்கு வெளியே பல மீற்றர்கள் ஆழத்தில் பள்ளம் இருந்ததை அறியாத இரு பெண்களும் வெளியேறிய அதே சமயம் அந்த அதாள பள்ளத்தில் விழுந்துள்ளனர்.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் 22 வயதான பெண் பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் புல்வெளி நிறைந்த இடத்தில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தை தொடர்ந்து பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என் மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்: கதறும் கணவர்!!

File written by Adobe Photoshop¨ 5.0

கர்நாடகா ஆளுநருக்கு நபர் ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் பீதர் மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவருக்கு பிரனீதா என்ற மனைவி உள்ளார்.

விக்னேஷ் அங்குள்ள பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினாலும், திருமணம் முடிந்து 12 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினாலும் அடிக்கடி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் மனைவியை விவாகரத்து செய்ய முயன்றும், அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனால் பிரச்சனை அதிகமாகியுள்ளதால் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், என் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும் தான் நடத்திவந்த டெய்லர் கடையையும் பறித்து விட்டனர், என்னுடைய வாழ்வாதாரமே அது தான்.

எனவே தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளேன், அது சட்டப்படி தவறு என்பதால் கருணை கொலை செய்ய அனுமதி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கவரிங் நகைகளை அணிய வேண்டும்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

IN11_C_V__WIGNESWA_2337718f
நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பெண்கள் களவுகளை தவிர்க்கும் முகமாக கவரிங் நகைகளை அணிய முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கந்தனை தரிசிக்கச் செல்லும் சில பெண்கள் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களைப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு போகின்றார்கள்.இவர்களை மையமாக வைத்தே களவில் ஈடுபடும் கும்பல்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் போலி கவரிங் நகைகளைப் போட்டுக்கொள்ள அவர்கள் முன்வருவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அவசரமாக சந்தித்த மைத்திரி,ரணில்!!

Maithri-and-Ranil-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எடேரி கவின்டார்டிஸை நேற்று அவரசமாக சந்தித்துள்ளனர்.ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதிக்கு தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றென சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்!!

p-bandaranaike-international-airport-katunayake

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏர்-Arabia G9501 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் போலி கடவுச்சீட்டு மூலம் வருகை தந்துள்ளதாகவும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி ஆர்.டீ.எஸ் குணரட்ணவிற்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன் நாட்டு கடவுச்சீட்டு இருந்துள்ளது. சந்தேகத்தின் காரணமாக அவர்களின் ஆவணங்களை பரிசோதித்த போது, அவர்களிடம் இரண்டு அகதி கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.எச் காரியவசம் தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்த இவர்கள் எதிர்வரும் 14ம் திகதி திரும்பிச் செல்ல இருந்ததாகவும், உண்மைத் தகவல்களை மறைத்ததன் காரணமாக அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்காக சவுதியில் இருப்பது சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதனால் ஆரம்பத் தகவல்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதாகவும், இறுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவுப்படி அவர்களை நாடு கடத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொந்தரவு தரமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு!

1 (44)

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன வயோதிபர் ஒருவர், திருகோணமலை,கந்தளாய் நீதிமன்றத்துக்குப் பின்புறமாகவுள்ள காணியில் இன்று வெள்ளிக்கிழமை(12) காலை, சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.கந்தளாய்-பியந்த மாவத்தையில் வசித்து வந்த எச்.ஏ.தோமஸ் சிங்ஹ (வயது 87)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே, உயிரிழந்தவரின் மகளினால் தந்தை காணாமல் போயுள்ளதாகவும்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கு றித்த முறைப்பாட்டில் குடும்பத்தாருடன்முரண்பட்டுக்கொண்டு இனிமேல் உங்களுக்குத் தொந்தரவு தரமாட்டேன் என்று தந்தைகூறிவிட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போதே வயோதிபர் சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.சடலத்தை, நீதவான் பார்வையிட்ட பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய்பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ  நாகபூசணி அம்பாள்  ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள்  சிவஸ்ரீ .முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும்   நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள்   இந்த பூஜை  நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

13880143_638847656270152_5757278892537058697_n 13886317_638857129602538_9216510746883013131_n 13887123_638856972935887_41600445044434031_n 13895497_638847719603479_7811353988625044349_n 13900094_638847882936796_871449401056832058_n 13900094_638848012936783_7123767834920361508_n 13902829_638847822936802_9177506897132237481_n 13912514_638856809602570_5494297464977723777_n 13912698_638857432935841_7633321512886281602_n 13925262_638848269603424_1409493058758949481_n 13932773_638848219603429_6954630816213211876_n 13934574_638847762936808_2383874714942575726_n 13934683_638847939603457_9173468805698309400_n 13962531_638848162936768_4541993695501024050_n

 

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை!!(படங்கள்)

 
வவுனியா  பண்டாரிக்குளம்  அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள்  சிவஸ்ரீ .சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும்   நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள்   இந்த பூஜை  நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

13938376_1857853987768909_5827320723192463351_n (1) 13938376_1857853987768909_5827320723192463351_n 13939391_1857854027768905_8798483654640218716_n

13886900_1857853897768918_281947604249325392_n (1) 13886900_1857853897768918_281947604249325392_n 13901455_1857854044435570_2672400522515064463_n 13906817_1857853961102245_3355801922358510201_n (1) 13906817_1857853961102245_3355801922358510201_n 13907167_1857854177768890_751124435101522170_n

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை நிகழ்வு!(படங்கள்)

 
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி சமேத நரசிங்கர் ஆலயத்தில் இன்று(12.08.2016) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டியும்   நூற்றுகணக்கான சுமங்கலிப் பெண்கள்   இந்த பூஜை  நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

13957511_980384448736944_1103880018_n 13957566_980384395403616_2111384499_n 13988853_980379552070767_2091236471_n 13988903_980384885403567_1964222502_n 13989543_980384472070275_1059412909_n 14009934_980379518737437_827421782_n 14010069_980385042070218_817554320_n 14011802_980379488737440_1224937384_n 14012024_980384512070271_1287664004_n 14012077_980379535404102_1521495269_n 14012214_980384442070278_2138239623_n 14017691_980384412070281_1229497588_n 14017888_980379562070766_1735755544_n13873143_1500763136616152_4606939454150738096_n (1) 13873143_1500763136616152_4606939454150738096_n 13879424_1500764029949396_4544860939917914246_n (1) 13879424_1500764029949396_4544860939917914246_n 13912796_1500763326616133_9172056280064208780_n (1) 13912796_1500763326616133_9172056280064208780_n 13920754_1500763986616067_8442913526549311665_n (1) 13920754_1500763986616067_8442913526549311665_n 13921143_1500785419947257_6469197595089848069_n 13934665_1500785359947263_7237081169859942219_n

வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : குப்பைகளால் நிறைந்து துர்நாற்றம் வீசும் வவுனியா நகரம்!!

 
கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக வவுனியா பேரூந்து நிலையம், மீன் சந்தை, கோழி இறைச்சி நிலையங்களில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமையினால் பாரிய துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபை ஊழியர்களின் இவ்வாறான பணிபுறக்கணிப்பினால் பாதிக்கப்படுவது மக்களாகிய நாங்கள் தான். இறைச்சி விற்பனை நிலையத்திற்கு செல்ல முடியவில்லை பாரிய துர்நாற்றம் வீசுகின்றது. உரிய அதிகாரிகளே உரிய நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்தார்.

1 IMG_1672 IMG_1673 IMG_1675 IMG_1676 IMG_1677 IMG_1678

வவுனியா நகரசபை ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் : பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா நகரசபை ஊழியர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (12.08.2016) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபை வாயில் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இன்று காலை 9.00 மணியளவில் வவுனியா நகரசபை வாகனங்களை வெளியே செல்லவிடாது வவுனியா நகரசபை வாயிலில் ஊழியர்களாகிய எமக்கு அரசாங்கம் நிர்ணயித்த சம்பளத்ததை வழங்க வேண்டும் என பல்வேறு பாதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

கோல்டன் சித்திரன் என்பவருடைய இடைநிறுத்திய சம்பளமானது வழங்கப்பட வேண்டும், பணித்தடை செய்யப்பட்ட நான்கு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும், நகரசபைச் செயலாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நகரசபை ஊழியர்கள் மற்றும் நகரசபை செயலாளருடன் கலந்துரையாடி இரண்டு வாரத்தில் ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தமையையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

1 DSC_0156 DSC_0157 DSC_0158 DSC_0159 DSC_0160 DSC_0161 DSC_0171 DSC_0172 DSC_0173 DSC_0174 DSC_0175 DSC_0177 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0181 DSC_0182 DSC_0183 DSC_0187 DSC_0188 DSC_0193 DSC_0194 DSC_0195 DSC_0210 DSC_0211 DSC_0212 DSC_0214 DSC_0215 DSC_0216 DSC_0219 DSC_0222 DSC_0223 DSC_0224 DSC_0225 DSC_0226

வவுனியா ஒமந்தையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக தொடர்கின்றது!!

 
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்குமாறு தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்து.

எனினும் இத்தெரிவு தொடர்பாக இடம்பெற்ற இழுபறிக்கு பின்னர் மாங்குளம், மதவுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக அமைக்க உத்தேசித்துள்ளனர்.

ஆனால் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் புதன்கிழமை (10.08.2016) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அமைச்சர்களே விவசாயி வீதியில் உணவின்றி நீங்கள் சொகுசு அறைகளிலா! , நீதி கேட்டு உங்கள் வாக்காளன் நடு வீதியில் சுகாதார அமைச்சரே நீ மார்க்கத்தின் சொகுசு பாதையில் இன்று கனடாவிற்கு புறப்பட்டு செல்கிறீர் என பல்வேறு வாசங்களை ஏந்திய பாதாகைகள் ஒமந்தை மக்களால் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஓமந்தை பிரதேசசபைக்கு முன்னால் தொடர்ந்தும் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளவரின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தை வைத்தியசாலை வைத்திய அதிகாரி வருகைத்தந்து பார்வையிட்டார்.

DSC_0053 DSC_0054 DSC_0056 DSC_0057 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0061 DSC_0062 DSC_0063 DSC_0064 DSC_0067 DSC_0069 DSC_0070

வவுனியாவில் A9 வீதியில் அமைந்துள்ள வீதி சமிச்சைகள் விஷமிகளால் உடைப்பு!!

 
வவுனியா A9 வீதி தாண்டிக்குளத்தில் அருகே காணப்பட்ட வீதி சமிச்சை பாதாகைகள் நேற்று (11.08.2016) இரவு சிலரால் உடைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாதசாரிகள் கடவை , முன்னால் திரும்புதல் போன்ற வீதி சமிச்சைகள் நேற்று (11.08.2016) இரவு சில விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

DSC_0093 DSC_0095 DSC_0096 DSC_0098 DSC_0099 DSC_0107 DSC_0108 DSC_0112 DSC_0113 DSC_0114

உலகில் முதன் முறையாக சபாநாயகராகிய தமிழ்ப் பெண்மணி!!

Thangeswari

உலகில் முதன் முறையாக மலேசியாவில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராகினார்.

நேற்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்கள் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார்.

ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர் ஆனது இதுவே முதல் தடவையாகும்.

வவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து!!

 
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே இன்று (12.08.2016) காலை 8.45 மணியளவில் மோட்டார் சைக்கில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா குருமன்காடு (science hall) க்கு அருகே வவுனியாவிலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றும் குருமன்காட்டிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 news (1) news (2) news (4) news (5) news (6) news (7) news (8)

உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள்!!

Sri Lanka AL OL Exam students sitting Education Photo

 

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை கடந்த வாரம் முதல் ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள 2204 பரீட்சை நிலையங்களில் 315605 மாணவர்கள் குறித்த பரீட்சைக்கு தோற்ற அனுமதி பெற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில் உயர் தரப் பரீட்சை ஆரம்பமான முதல் இதுவரை மாணவர்கள் மேற்கொண்ட மோசடி செயற்பாடுகள் தொடர்பாக இதுவரையில் 48 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சில முறைப்பாடுகள் பரீட்சார்த்திகளின் மோசடிகள் தொடர்பாகவும், பரீட்சை நோக்குநர்களின் நடத்தை தொடர்பானதாகவும் அமைந்துள்ளது. எனவே குறித்த மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பரீட்சைகள் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு 5 ஆண்டுவரை அனைத்து அரசாங்க பரீட்சைகளிலும் பங்குபற்றுவதை தடை செய்வதற்கும், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டத்தில் வாய்ப்பு உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.