கண்ணில் ஏற்படும் கருவளையத்திற்கான வீட்டு சிகிச்சைகள்!!!

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். “நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹோர்மோன்  மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்போகும்.

மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும். வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.

குளிர்ந்த வெள்ளரிக்காய்கள்:

96-Cucumber

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த குளிர்ந்த ஸ்டோபரி :

strawberry

குளிர்ந்த ஸ்டோபரியில் அதிக அளவு அல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த அல்ஃபா  ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த அல்ஃபா  ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்டோபரி தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.

ஒலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:

chilled-tea-bags

இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஒலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மோய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.

 

கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம்

cellphone

மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன்  சார்ஜ் தீர்ந்து off ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும் சார்ஜ் செய்ய மின் வசதி இருக்கும் இடத்தை தேடி ஓடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கையில் பிடித்தபடியே சார்ஜ் செய்ய முடியும்.

‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய காபன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்திய அணிக்கு கடும் கட்டுப்பாடு

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரும் ஜூன் 6ல் துவங்குகிறது. அன்று, இந்திய அணி முதல் போட்டியில், தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. இதற்காக தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.

அணியின் மனேஜராக, கடந்த 2011 உலக கோப்பை வென்ற போது இருந்த ரஞ்சிப் பிஸ்வால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஒன்றரை ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த இவர், எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், உள்ளதை உள்ளபடி அப்படியே அறிக்கையாக கொடுத்துவிடுவாராம்.

கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீஸ் பொது விடுதியில் நடந்த சண்டை குறித்தும், வீரர்களின் நடத்தை குறித்தும், பிஸ்வால் கடுமையான அறிக்கை கொடுத்தார். இதன் பின் தான் இந்திய வீரர்களுக்கு கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன.

‘பார்ட்டிக்கு’ தடை

இதனால், இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுக்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இரவு பார்ட்டிகளுக்கு தடை, நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.

முன் அனுமதி இன்றி தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது. யாரிடம் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. வீரர்களின் மொபைல் எண்கள் முழுவதும் கண்காணிக்கப்படும்.

ஏற்கனவே உள்ளது:

இந்த விதிகள் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும், 2011ல் உலக கோப்பை வென்ற பின், யாரும் இதை ஒழுங்காக பின்பற்றவில்லை. இம்முறை, சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, பிஸ்வாலை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தவிர, இத்தொடருக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிக்கும் இவர் மானேஜராக இருக்க சம்மதித்துள்ளார். ஆனால், அணியுடன் இணைந்து செல்லாமல் தனியாகத் தான் போகப் போகிறாராம்.

அரை இறுதிக்குத் தகுதிபெறுவது நிச்சயம்: அஞ்சலோ மெத்தியூஸ்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்கான மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் இங்கிலாந்து சென்றுள்ளது.

மெத்தியூஸ் அணித்தலைமையை ஏற்றதன் பின்னர் இலங்கை அணி களமிறங்கும் முதலாவது முக்கிய தொடர் இதுவாகும்.
இந்நிலையில் இத்தொடர் குறித்து கருத்துத் தெரிவித்த மெத்தியூஸ்,

தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இம்முறை இலங்கை அணிக்கு உள்ளது.

அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் இணைந்து சிறந்த அணியாக இத் தொடரில் களமிறங்கவுள்ள நாம் ஏனைய அணிகளுக்கு சவாலாக இருப்போம்.

தொடரின் அரையிறுதியே எமது முதல் இலக்கு. குழுநிலைப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதையே எமது முதல் இலக்காக கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணம் 2019

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.

இதுவரை 10 உலகக் கிண்ணத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2010-11ல் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. வரும் 2015ல், 11வது உலக கிண்ணம் தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.

இந்நிலையில், வரும் 2019ல், 12வது உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 5வது முறையாக இங்கிலாந்தில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

முன்னதாக 1975, 79, 83, 99ல் நடந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். ஐ.சி.சி., தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இ.சி.பி.,) தெரிவித்தது.

இது குறித்து இ.சி.பி., தலைமை செயல் அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், இங்கிலாந்தில் வரும் 2019ல் உலகக் கிண்ணத் தொடரை நடத்த இருப்பதில் பெருமை அடைகிறேன்.

ஏற்கனவே நான்கு முறை நடத்தி உள்ளதால் இம்முறையும் சிறப்பாக நடத்தப்படும் என்று நம்புகிறேன். இத்தொடர் மூலம், இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்றார்.

 

ஒவ்வொரு அணியும் குறிப்பிட்டளவு டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும்: ஐ.சி.சி

டெஸ்ட் அந்தஸ்துள்ள ஒவ்வொரு நாடும் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் விளையாட வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளை எதிர்காலத்தில் பாதுகாக்கும் முகமாக இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழுவிற்கு லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக இடம்பெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4 வருடம் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஸ் காலகட்டத்தில், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமெனவும், அதன்படி அந்த 16 வருடக் காலகட்டத்தில் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 16 போட்டிகளில் பங்குபற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் தொடர்களை இரத்துச் செய்து, அவற்றிற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளைக் கொண்ட தொடர்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்தப் பிரேரிப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

செப்டெம்பர் 2009ம் ஆண்டு முதல் செப்டெம்பர் 2013 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் என்பதோடு குறைந்த டெஸ்ட் போட்டிகளாக வங்கதேச அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும்.

ஜிம்பாப்வே அணி 2011ம் ஆண்டிலிருந்தே மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்துள்ள நிலையில், அவ்வணி 8 போட்டிகளில் பங்குபற்றியிருக்கும்.

 

கரீபியன் பிறீமியர் லீக்: ஜமேகாவுக்கு விளையாடுகிறார் முத்தையா முரளிதரன்

கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிறீமியர் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கையின் முத்தையா முரளிதரன் – ஜமைக்கா அணி சார்பாகப் பங்குபற்றவுள்ளார். அவ்வணிக்கான நட்சத்திர வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளார்.

கரீபியர் பிறீமியர் லீக் தொடரின் 6 அணிகளுக்குமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்வீரர்களின் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 6 வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்த அடம் கில்கிறிஸ்ற் உபாதை காரணமாகப் பங்குபற்ற முடியாது போயுள்ளதால், அவருக்குப் பதிலாக சொய்ப் மலிக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அன்ரிகுவா அணியின் உள்ளூர் வீரராக மார்லன் சாமுவேல்ஸூம், வெளிநாட்டு வீரராக றிக்கி பொன்டிங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக விவியன் றிச்சர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பார்படோஸ் அணியின் உள்ளூர் வீரராக கெரான் பொலார்ட்டும், வெளிநாட்டு வீரராக சொய்ப் மலிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக டெஸ்மொன்ட் ஹெய்ன்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கயானா அணியின் உள்ளூர் வீரராக சுனில் நரைனும், வெளிநாட்டு வீரராக மொஹமட் ஹபீஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக றொஜர் ஹார்ப்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜமைக்கா அணியின் உள்ளூர் வீரராக கிறிஸ் கெயிலும், வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரனும், பயிற்றுவிப்பாளராக போல் நிக்ஸனும் நியமிக்கப்படுள்ளனர்.

சென் லூசியாவின் உள்ளூர் வீரராக டெரன் சமியும், வெளிநாட்டு வீரராக ஹேர்ச்சில் கிப்ஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளரான அன்டி றொபேர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோவின் உள்ளூர் வீரராக டுவைன் பிராவோவும், வெளிநாட்டு வீரராக றொஸ் டெய்லரும், பயிற்றுவிப்பாளராக கோர்டன் கிறீனிஜ் உம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவுக்கு திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கும், டெல்லியை சேர்ந்த பேஷன் டிசைனர் தான்யா என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து, இவர்களுடைய திருமணம், நேற்ரு முன் தினம் நாக்பூரில் நடந்தது. திருமணமான கையோடு, உமேஷ் யாதவ், உடனடியாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
umesh

 

எளிய தமிழில் MySQL – பகுதி 3

MySQL-ஐ install செய்தல்

MySQL-ஐ install செய்யும்போது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு.

MySQL-ஐ install செய்வதற்கு நமக்கு அனுமதி இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ன் ஒரு பிரதியை நமது machine-ல் install செய்து கொள்வது நல்லது. இதை மிகவும் கடினமான விஷயமாக எண்ணி வருந்தத் தேவையில்லை. ஏனெனில் BSD, LinuX, Mac OS X, Solaris மற்றும் windows போன்ற பெரும்பாலான platform-ல் இந்த MySQL-ஆனது எளிதாக install செய்யப்படும்.

MySQL server-ஐ அணுகுவதற்கு அனைத்து  permissions-ஐயும் கொண்ட ஒரு  account இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ஐ முதன்முதலில் install செய்யும்போது உருவாக்கப்படும் root account இவ்வாறு அனைத்து permissions-ஐயும் கொண்டதாக அமையும்.

* பின்னர் ஒரு MySQL client தேவை. பொதுவாக MySQL command-line அல்லது MySQL query browser ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து  உதாரணங்களும் MySQL command-line-ஐக் கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளன.

1.3.1 Ubuntu Linux-ல் MySQL-ஐ install செய்தல்

சமீபத்திய உபுண்டு லினக்ஸ் நிறுவும் வழிகளை இங்கு காண்போம். இது debian மற்றும் ubuntu சார்ந்த Linux Mint distribution-களுக்கும் பொருந்தும்.

Terminal-ல் கீழ்வரும் கட்டளையைத் தரவும்.

sudo apt-get install mysql-server mysql-client

இப்போது MySQL-க்குத் தேவையான மென்பொருட்கள் அனைத்தும் repository-ல் இருந்து download ஆகி install செய்யப்படும். இப்போது MySQL-ன் root user-க்கான password கேட்கப்படும். மிகவும் சிக்கலான சொல்லையே password ஆக தர வேண்டும்.

MySQL-ன் செயல்பாடுகளை மேலும் பாதுகாக்க கீழ்வரும் கட்டளையை இயக்கவும்.

sudo mysql_secure_installation

இது பின்வரும் பணிகளைச் செய்கிறது.

1.                  Anonymous users-ஐ நீக்குதல்

2.                  localhost-ல் இருந்து மட்டுமே root-ஐ அனுமதித்தல்

3.                  test database-ஐ நீக்குதல்

மேற்கண்ட கட்டளையைக் கொடுத்த உடன், கீழ்கண்டவாறு வரிசையாக பதில்களைக் கொடுத்து Enter அடிக்கவும்.

By default, a MySQL installation has an anonymous user, allowing anyone to log into MySQL without having to have a user account created for them.  This is intended only for testing, and to make the installation go a bit smoother.  You should remove them before moving into a production environment.

Remove anonymous users? [Y/n] y

… Success!

Normally, root should only be allowed to connect from ‘localhost’.  This ensures that someone cannot guess at the root password from the network.

Disallow root login remotely? [Y/n] y

… Success!

By default, MySQL comes with a database named ‘test’ that anyone can access.  This is also intended only for testing, and should be removed before moving into a production environment.

Remove test database and access to it? [Y/n] y

– Dropping test database

… Success!

– Removing privileges on test database

… Success!

Reloading the privilege tables will ensure that all changes made so far will take effect immediately.


Reload privilege tables now? [Y/n] y

… Success!

Cleaning up…

All done!  If you’ve completed all of the above steps, your MySQL installation should now be secure.

Thanks for using MySQL!

அவ்வளவுதான் MySQL-ஐ நிறுவிவிட்டோம்.

1.3.1.1    Configuration

இப்போது MySQL-ன் பல்வேறு configuration options-ஐப் பற்றிப் பார்ப்போம்.

/etc/mysql என்ற directory-தான் MySQL-ன் config directory ஆகும்.

/etc/mysql/my.cnf 
என்ற file  ஆனது MySQL-ன் மொத்த configuration options-ஐயும் கொண்டுள்ளது.

Log file, port number, ip binding, performance என பல்வேறு options உள்ளன. இதில் சில options பற்றி இங்கே பார்ப்போம்.

port=3306 

இது MySQL server -ஆனது 3306 என்ற port-ல் இயங்குவதைக் குறிக்கிறது.

user=mysql

லினக்ஸில் mysql என்ற user உருவாகி, அதே user-ஆக server இயங்கும். இதனால் லினக்ஸ் server-ன் பாதுகாப்பு அதிகரிக்கிறது.

data dir = /var/lib/mysql

MySQL-ன் database அனைத்தும் இந்த folder-ல் சேமிக்கப்படுகின்றன. Backup செய்யும் போது, இந்த folder-ஐ கண்டிப்பாக backup செய்ய வேண்டும்.

bind-address = 127.0.0.1

எந்த ip address-ல் MySQL server இயங்க வேண்டும் என இங்கே தரலாம்.

log_error = /var/log/mysql/error.log

Configuration அல்லது connection-ல் பிழை இருந்தால் இந்த file-ல் log செய்யப்படுகிறது.

1.3.1.2  Query cache

MySQL server-ல் அடிக்கடி இயங்கும் select queries-ம், results-ம் cache-ல் சேமித்து வைக்கப்படும். இதனால், server-ன் திறனும் வேகமும் அதிகரிக்கிறது. இதற்கான options பின்வருமாறு.

query_cache_limit = 1m

query_cache_size = 16m

இங்கு m என்பது mb ஆகும். நமது RAM-ன் அளவைப் பொறுத்து இதை அதிகரிக்கலாம். உதாரணம்.

query_cache_limit = 2m

query_cache_size=32m

இந்த my.cnf file-ல் எந்த மாற்றம் செய்தாலும், MySQL server-ஐ restart செய்ய வேண்டும்.

MySQL server-ஐ restart செய்தல்

sudo service mysql restart

MySQL server-ஐ stop செய்தல்

sudo service mysql stop

MySQL server-ஐ start செய்தல்

sudo service mysql start

1.3.1.3  MySQL clients

Command line client மட்டுமின்றி GUI வழியாக, MySQL-ஐ பயன்படுத்த பல்வேறு clients உபுண்டு லினக்ஸில்  உள்ளன.

MySQL Work Bench

sudo apt-get install MySQL-workbench

MySQL Navigator

sudo apt-get install MySQL-navigator

Emma

sudo apt-get install emma

MySQL Admin

sudo apt-get install MySQL-admin

PHPMyAdmin

sudo aptitude install phpmyadmin

 

(தொடர்ந்து வரும்)

எளிய தமிழில் MySQL – பகுதி 2

MySQL – இன் வடிவமைப்பு

MySQL-ஆனது பற்பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு மென்பொருள் அமைப்பாகும். பொதுவாக இதனை MySQL server மற்றும் MySQL client என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

MySQL client என்பது நம்மால் பார்த்து பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் ஒரு front end tool ஆகும். அதாவது Windows-ல் இருக்கும்  console prompt மற்றும் GNU/Linux–ல் இருக்கும்  shell prompt போன்றவற்றின் மூலமாக, நாம் SQL மொழியில் commands வழங்கலாம். இந்த commands-ஐத் தான் MySQL server பெற்றுக்கொண்டு அதற்குரிய வேலைகளைச் செய்யத் துவங்கும். MySQL server-ல் என்ன நிகழ்கிறது என்பது பொதுவாக பயனர்களின் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் இந்த MySQL server-தான்  எல்லா வேலைகளையும் செய்து முடித்து result-ஐக் கொடுக்கும்.

எளிய தமிழில் MySQL - பகுதி 2இந்த வரைபடத்தில்   பல்வேறு  MySQL  clients ஆனது ஒரு MySQL  Server வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு MySQL client-வும் பின்வரும் வேலைகளைப் புரிகிறது.

$  Password ஐ சரிபார்த்து  Authentication ஐ தொடங்குதல்

$  நாம் கொடுக்கும் SQL Queries ஐ server-க்கான  Tokens ஆக மாற்றுதல்

$   Tokens-ஐ Server-க்கு வழங்குதல்

$  Compress அல்லது Encrypt செய்யப்பட்ட இணைப்புகளை கண்காணித்தல்

கடைசியாக Server-இடம் இருந்து விடைகளைப் பெற்றுக்கொண்டு அதனை பயனர்களுக்குத் தெரிவித்தல் 

MySQL server ஆனது client இடமிருந்து request-ஐ பெற்றுக்கொண்டு அதற்குரிய response-ஐ திரும்பக்கொடுக்கும். இது Management Layer மற்றும் Storage Engine என்று இரண்டு பெரும் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவைதான் அதிக அளவில் memory, disk மற்றும் network- வுடன் தொடர்பு கொள்கின்றன.

Management Layer ஆனது, MySQL client இடமிருந்து பெரும் request-ஐ வைத்துக்கொண்டு, பின்வரும் வேலைகளைப் புரிகிறது.

$    இணைப்புகளை decrypt அல்லது decode செய்தல்

$    Queries ஐ சரிபார்த்து parse செய்தல்

$    Query Cache -லிருந்து catched queries -ஐ எடுத்தல்

$    தகவல்களை Storage Engine-க்கு அனுப்புதல்

மேலும் disk-க்கான logs-ஐ எழுதுதல் மற்றும் memory-ல் logs-ஐ சேமித்தல் மற்றும் எடுத்தல் போன்ற சில வேலைகளையும் செய்கிறது.

Storage Engine ஆனது databases, tables, indexes -ஐ நிர்வகிக்கின்றது. மேலும் ஒருசில logs மற்றும் சில புள்ளிவிவரங்களையும் நிர்வகிக்கின்றது. இது இவ்வகையான data- வை disk மற்றும் memory-ல் சேமிக்கிறது. மேலும் இதனை Network மூலமாக தொலைவில் உள்ள வேறுசில MySQL server-க்கு அனுப்புதல் போன்ற சில வேலைகளையும்  செய்கிறது.

(தொடர்ந்து வரும்)

 

எளிய தமிழில் MySQL – பகுதி 1

MySQL – ஓர் அறிமுகம்

Database என்பது நமக்கு வேண்டிய data-வை எல்லாம் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுக்கோப்பான வடிவில் சேமிக்க உதவும் ஒரு சாப்ட்வேர் ஆகும்.

SQL(Structured Query Language)  என்பது database-ல் data-வை கையாளுவதற்கு நாம் பயன்படுத்தும் ஒரு கணினி மொழி ஆகும்.  RDBMS என்பது, ஒரு database-இல் பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் data-வை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி அதனை மொத்தமாக  நிர்வாகம் செய்ய உதவும் ஒரு Management software ஆகும்.

MySQL என்பது இவ்வகையான ஒரு RDBMS Software ஆகும். இது SQL மொழியில் மட்டும் அல்லாமல் PHP, PERL, C, C++, JAVA போன்ற பல்வேறு கணினி மொழிகளிலும் இயங்கவல்லது. இது free software வகையைச் சேர்ந்தது மற்றும் GPL எனப்படும் General Public License-வுடன் வரக்கூடியது. எனவே நாம் இதனை எந்தவித கட்டணமும் இன்றி Internet-ல் இருந்து இலவசமாக download செய்து நமது தேவைக்காகப் பயன்படுத்தலாம்.

(தொடர்ந்து வரும்)

 

சூடு பிடிக்குது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்…!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சில முக்கிய தலைகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

பாரீஸின் ரோலன்ட் காரோஸ் அரங்கில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முக்கியமான கிராண்ட்ஸ்லாம் பட்டமான இதை வெல்ல வியர்க்க விறுவிறுக்க வீரர்களும், வீராங்கனைகளும் மோதி வருகின்றனர்.

இரட்டையர் பிரிவில் அதிர்ச்சி முடிவாக அமெரிக்க சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸும், செரீனா வில்லியம்ஸும் தங்களது சுற்றுப் போட்டியில் விளையாடாமலேயே வெளியேறியுள்ளனர். அவர்களது விலகலுக்குக் காரணம் தெரிவிக்கப்படவில்லை.

பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து சில காட்சிகள்..

 

tennis6-600

tennis1

tennis5-600

ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்

சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 3 ந் தேதி முதல் முதல் 7 ந் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது என்றார்.

கேதார கவுரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

அவரவர்கள் சவுகாரியப்படி 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று கேதாரகவுரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் பாரணம் பண்ணி விரதத்தை முடித்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஐபித்து, அர்த்தநாரீஸ்வராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் எந்திரனை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.

பூஜைக்கால முதலில் மஞ்சள் பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாராதணையான பிறகு கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.

அதாவது அம்மியையும் குழவியையும் அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்கும சந்தனம் முதலிய பரிமள திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு புஷ்பஞ்சார்த்தி அதன் எதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்திமாலை புஷ்பஞ்சார்த்தி பூஜை செய்பவர்.

உங்கள் கூகிள் குரோம் உலாவி பாவனையால் மிகப்பெரிய ஆபத்து..!

நீங்கள் கூகிள் குரோம் பயன்படுத்துபவரா? அப்படியானால் இதை அவசியம் படியுங்கள். இன்றைய உலாவியில்(Browser) கூகிள் குரோம் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் இதில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.இந்த நவீன வசதிகளைக் கொண்ட குரோமில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.

அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் இணைய நிலையங்களை(Browsing Center) தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றோம்.நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே நீங்கள்தான் அவதானமாக இருக்கவேண்டும் அதுவும் குறிப்பாக பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச் சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குரோமில் உள்ளது என்பது உங்களிற்கு தெரியுமா?

நீங்கள் மிகவும் கவனமாக வெளியேறிவிடுவீர்கள்.ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிற்கு தெரியாது. நீங்கள் முக்கியமானவர்களிற்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்கலாம், அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்கலாம். இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அதைவிட உங்கள் நண்பர்களிற்கு அல்லது முக்கியமானவர்களிற்கு தவறாக மெயில் அனுப்பலாம். அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்களை தவறாக நினைக்கக் கூடும். இனிமேல் உங்களிற்கு அந்தப் பிரச்சினை இல்லை. நாம் சொல்வது போல் செய்தால் போதும்.

எங்கு சென்று குரோமை பயன்படுத்தினாலும் அதன் “setting option” என்பதை சொடுக்குங்கள்(கிளிக்).அதில் “basic” என்பதற்கு கீழ் இருக்கும் “personal setuff” என்பதை சொடுக்கி “password” என்பதை தெரிவு செய்து “never save passwords”என்பதை தெரிவு செய்யுங்கள்.இறுதியாக உங்கள் வேலைகளை முடித்தபின் “history” கிளிக் செய்து “clear all browsing data” என்பதை தெரிவு செய்யுங்கள்.

இவ்வாறு செய்தால் உங்கள் தகவல்களை இலகுவாக பாதுகாக்க முடியும்.

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் காலமானார்

8-முறை இந்திய தேசிய விருது வென்ற பெங்காலி திரைப்பட இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் தனது 49வயதில் மாரடைப்பால் காலமானார்.

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரிதுபர்னோ கோஸ் தனது பெற்ரோரின் வழியில் தானும் சினிமா துறையில் மோகம் கொண்டவர். ஆரம்ப காலங்களில் விளம்பர படங்கள்மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி, 1994ம் ஆண்டு ஹைரர் அங்தி என்ற பெங்காலி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதரித்தார்.

தொடர்ந்து இவர் இயக்கிய உன்சி ஏப்ரல், தகான், உட்சாப், ரெயின்கோட், தோசர், தி லாஸ்ட் லீயர், அபோகோமென் ஆகிய திரைப்படங்கள் மாற்றுத் திரைப்பட ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. இதுவரை 19 திரைப்படங்களை இயக்கியுள்ள ரிதுபர்னோ அவற்றில் 8 திரைப்படங்களுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார்.

இவர் இயக்கிய எந்த திரைப்படமும் ஏதோ ஒரு துறையில் தேசிய விருது பெற்றுவிடும் என்பதற்காகவே இவரை தேசிய விருது இயக்குனர் என கொல்கத்தா ரசிகர்கள் அழைப்பதுண்டு.

இந்நிலையில் ரிதுபர்னோவின் திடீர் மரணம் பெங்காலி திரைத்துறையினருக்கு தாங்க முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கான சிறப்பான படங்களை இயக்கி பெரும் புகழ் அடைந்தவர் ரிதுபர்னோ. குறிப்பாக 1994ம் ஆண்டு அங்க்டி திரைப்படமும், 1995ம் ஆண்டு உனிஷே ஏப்ரல் திரைப்படமும் சர்வதேச ரீதியில் வரவேற்பை பெற்ற இவரது திரைப்படங்களாகும்.

இதில் தாயினதும், மகளனதும் உறவைச்சொல்லும் உனிஷே ஏப்ரல் திரைப்படத்திற்கு அந்த ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதில் நடித்த தேபாஷிரீ ரோய் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆகவும் திகழ்கிறார்.

2003ம் ஆண்டு வெளிவந்த சோகர் பாலி திரைப்படத்தில் பாலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்ததும், 2004ம் ஆண்டு வெளிவந்த ரெயின்கோட் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்ததும் ரிதுபர்னோ கோஷின் அபாரத்திறமையினால் ஈர்க்கப்பட்டதனால் ஆகும்.

அவரது தீவிர ரசிகர்களும், அவர் படித்தில் நடித்த நடிகர்களும், ‘இவ்வளவு சிறியவயதில் ரிதுபர்னோ இந்த உலகை விட்டுச் செல்வார் என ஒரு போதும் நினைக்கவில்லை’ என்கின்றனர். இவரது இறுதி திரைப்படம் சித்ராங்கதா. 2012 இல் வெளிவந்தது.

இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த ரிதுபர்னோவின் மரணம் இந்திய திரைப்பட உலகுக்கே பெரும் இழப்பாக கருதப்படுகிறது.