இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்தாவிட்டால் 20 வருடங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும்!

smoking

புகைத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனல் அடுத்த 20 வருடங்களில் புகைத்தல் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
புகைத்தல் காரணமாக இலங்கை வருடாந்தம் 20 ஆயிரம் பேர் மரணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்கும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் இரண்டு விசேட பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

சிகரட்டுகளை பொதி செய்யும் பெட்டிகளில் 80 வீதமான பகுதிகள் உள்ளடங்கும் வகையில் புற்றுநோய் தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட வேண்டும் என்று அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த இலங்கை – இந்திய போட்டி !!

sl

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய யூத் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது .இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதிற்குட்பட்ட இந்திய அணி முதன்முதலாக யூத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் எடுத்து 268 ஓட்டங்கள் பின் தங்கியிருந்தது.

நேற்று நடைபெற்ற இறுதி நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 256 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பலோஓன் நிலைக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சமரவிக்ரம 88 ஓட்டங்களும் சுமன்ஸ்ரீ 62 ஓட்டங்களும் பெற்றுக் கொடுத்தனர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் எடுக்க போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

உங்களுடைய கடவுச் சொல் பாதுகாப்பானதா?

password-security

வரும்முன் காப்போம் என்ற பொன்மொழி ஒன்று உண்டு.. இது உடல் நலத்திற்கு மட்டுமல்ல தொழில்நுட்ப உலகத்திற்கும் இது பொருந்தும்.

உங்கள் கணினி கடவுச்சொல்லோ இணையதளங்களின் கடவுச்சொல்லே எதுவாக இருந்தாலும் ஒரு தனிச்சிறப்புடன் கூடியதாக, மற்றவர்கள் யாரும் எளிதில் யூகிக்க முடியாத கடவுச்சொல்லை தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

கடவுச்சொல்லை இவ்வாறு யாரும் யூகிக்க முடியாதவாறு பயன்படுத்தினீர்களானால் யாரும் உங்கள் கணக்கை அவ்வளவு எளிதில் Hack செய்ய முடியாது.

பாஸ்வேர்ட் உருவாக்குவதில் நாம் செய்யும் தவறுகள்

1. பொதுவான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்துவது.
2. நெருங்கியவர்களின் பெயர்களையே கடவுச்சொல்லாக பாவிப்பது.
3. தொடர் எண்கள், பிறந்த நாள்கள், தொலைபேசி எண்கள், வாகனங்களின் எண்கள்
4. வீட்டு விலங்குகளுடைய பெயரை பயன்படுத்துவது,
5. உலக பொது வார்த்தைகளைப் பயன்படுத்துவது,
6. இயற்கை பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்துவது
7. தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது
8. உங்கள் பிறந்த நாளையே கடவுச்சொல்லாகப் பயன்படுத்துவது

இவற்றையெல்லாம் மற்றவர்கள் எளிதாக யூகித்து எந்த ஒரு மென்பொருள் இல்லாமலேயே கூட உங்கள் கணக்கை பயன்படுத்த முடியும்.

பாஸ்வேட் எப்படி அமைய வேண்டும்?

பாஸ்வேட் தனிச்சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதைப் போல எண்ணும் எழுத்தும், சிறப்பு குறியீடுகள் கலந்து ஒரு கடவுச் சொல் அமைந்தால் அதுவே நல்லதொரு கட்டமைப்புக்கொண்ட கடவுச் சொல் ஆகும். உதாரணமாக இவற்றைப் பாருங்கள்..

756rose@abc-1304

இதுபோன்ற கடவுச்சொற்களை நினைவில் வைப்பது சிரமம்தான் என்றாலும் பயன்படுத்த பயன்படுத்த நினைவில் வந்துவிடும். இவற்றை எந்த ஒரு மென்பொருள் துணைகொண்டும் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

உங்கள் கணினியில் உங்களுக்குத் தெரியாமலேயே கூட சிலர் Keyloggers போன்ற மென்பொருள்களை நிறுவி அதன் மூலம் உங்கள் பாஸ்வேட்களை கண்டுபிடிக்க முடியும். keyloggers போன்ற பாஸ்வேட் திருடி அனுப்பும் மென்பொருள்களிலிருந்து நாம் பாஸ்வேடை காப்பது எப்படி என்று பார்ப்போம்.

இதுபோன்ற மென்பொருள்களையும் நாம் ஏமாற்ற முடியும். உதாரணமாக பத்து எழுத்துகள் அடங்கிய கடவுச்சொல்லை நீங்கள் வரிசையாக டைப் செய்யும் போது அந்த மென்பொருள்களை அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக்கொள்ளும். பிறகு மென்பொருள்களை நிறுவியர்களின் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வைக்கும்.

ஆனால் அதே பத்து எழுத்துகள் அடங்கிய கடவுச்சொல்லுக்கு முன்பாகவே அல்லது இடையிலோ அல்லது இறுதியாகவோ கூடுதல் ஒரு சில எழுத்துக்களை டைப் செய்து விட்டு அவற்றை அழித்துவிடுங்கள்..

பத்து எழுத்துகள் அடங்கிய  இந்த 756rose@abc-1304 பாஸ்வேட்டுடன் கூடுதலாக  756rose@abc1304pwshk இவ்வாறு உள்ளிட்டுவிட்டு கூடுதலாக தட்டச்சிட்ட எழுத்துகள் Backspace கொடுத்து ஐந்து எழுத்துக்கள் கூடுதலாக இருந்தால் ஐந்து முறை Backspace கொடுத்து அவற்றை நீக்கிவிடலாம்.

இவ்வாறு செய்யும்போது நாம் உள்ளிட்ட மொத்த எழுத்துகளையும் சேகரித்து பாஸ்வேர்டாக Keylogger யூகிக்கும். ஆனால் உண்மையான கடவுச்சொல்லை யூகிக்கவியலாது.

பாஸ்வேட் பயன்படுத்துவதில் சில எச்சரிக்கைகள்..

Gmail, Facebook, Paypal, போன்ற சாதாரண மின்னஞ்சல் கணக்கிலிருந்து, உங்களுடைய வர்த்தக பணிகளை மேற்கொள்கிற இணைய வங்கி தளங்கள் வரை நிறைய பயனர் கணக்கை வைத்திருப்பீர்கள்.
இவற்றிக்கு அனைத்திற்கும் ஒரே யூசர் நேம், பாஸ்வேட் வைத்திருக்க வேண்டாம்.. ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி யூசர் நேம், பாஸ்வேட் என வைத்துக்கொள்ளுங்கள்.

அதுவும் வங்கிக் கணக்கை உபயோகிக்கும் தளங்களுக்கு மேற்கூறிய சிறப்புக் கடவுச்சொல் கட்டாயம் வேண்டும்.

பண பரிவர்த்தனை செய்யும் தளமாயின் அந்த தளம் பாதுகாப்புக்கு உரியதா என ஒன்றுக்கு பல முறை சோதனை செய்த பிறகே பயன்படுத்துங்கள். பிரபல வங்கித் தளங்களாயின் அதற்கான Security கொடுத்திருப்பார்கள்.

வங்கித்தளங்களைப் போன்றே அப்படிய அச்சு அசலாக போலித்தளங்களும் தற்போது பெருகிவிட்டன. எனவே அந்த தளங்கள் உண்மையானதா என்பதை அறிந்துகொள்ள உங்கள் Browser-ன் Address Bar-ல் https என் ஆரம்பித்திருக்கிறதா என சோதனையிட்டு பிறகே உங்கள் கணக்குப் பற்றிய விபரங்களை அந்த தளத்தில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்குப் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதோடு, உங்கள் பணத்தையும் காக்க முடியும்.

புளொட் சார்பில் வடமாகான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !!

plote

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை முன்னாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மன்னார் மாவட்டத்தில் இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களாவர்.

சாதனையினை விசித்திரமாக வெளிப்படுத்திய பெண் (வீடியோ இணைப்பு)

சாதனை என்ற மூன்றெழுத்து தான் மனிதர்களை எதையும் செய்யத் தூண்டுகிறது. தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்றால் சாதனையை நிறைவேற்ற முடியும். இவ்வகையான சாதனைக்குரிய முயற்சியினை வெளிப்படுத்தும் பெண்ணை இங்குள்ள காணொளியில் காணலாம்.

யு சான்றிதழுக்கு முயற்சிக்கும் தலைவா!!

Thalaivaவிஜய் – அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. தெய்வத் திருமகள், தாண்டவம் படங்களின் இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிடும் படம் என்று சொல்லப்படுவதாலும் பாடல்கள் ஹிட்டாகி இருப்பதாலும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தை ரம்லானுக்கு வெளியிடும் திட்டத்தில் உள்ளது படக்குழு. தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர்.

படத்தைப் பார்த்த சென்சார் போர்ட் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால், யு சான்றிதழ் கிடைத்தால் 30 சதவிகிதம் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் மறுதணிக்கைக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.

காரணம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம். வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினாராம் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான மரியான் படத்துக்கு முதலில் யு/ஏ சான்றிதழ் தரப்பட்டது. அவர்கள் மறுதணிக்கைக்கு அனுப்பியதும் யு சான்றிதழ் கிடைத்தது.

அதுபோல தலைவா படத்திற்கும் யு சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய அனிருத்!

aniruthமிர்ச்சி சிவா – ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்கும் படம் வணக்கம் சென்னை. கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா போன்ற இசை அமைப்பாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்த வந்த சொனி நிறுவனம் முதன்முறையாக அனிருத்தின் பாடல் உரிமையை வாங்கி இருக்கிறது.

அனிருத் ஏற்கெனவே இசை அமைத்திருந்த 3, எதிர்நீச்சல் படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், சொனி நிறுவனத்தின் பார்வை அனிருத் மீது பட்டிருக்கலாம் என்கிறார்கள். கொலவெறி பாடலின் ஹிட்டும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

வணக்கம் சென்னையில் இடம்பெற்றுள்ள ஓ பெண்ணே.. பாடலின் டீஸர் ஒரு மாதத்துக்கு முன்பு வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில் இன்று படத்தின் இசை வெளியிடப்பட்டது.

படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இவற்றில் 5 பாடல்களை அனிருத்தே பாடியுள்ளார். அதுவும் ஆண்ட்ரியாவுடன் இணைந்து அவர் பாடிய எங்கடி பொறந்த பாடல் தான் சூப்பர் ஹிட் என்கிறார்கள்.

அரசியலில் பிரபலமான தமிழ் சினிமா நட்சத்திரங்கள்..!!

cinema

நான் ஹீரோவாக வேண்டும் பின்னர் அரசியல், முதலமைச்சர் இதுதான் இன்றைக்கு சினிமாவில் நடிக்க வருபவர்களின் கனவாக இருக்கிறது. முதலமைச்சர் ஆனவுடன் பிரதமர் ஆகவேண்டும் என்ற கனவும் சேர்ந்தே வருகிறது.

சினிமா நட்சத்திரம் என்பது அரசியல்வாதியாவதற்கான ஒரு தனி தகுதியாக இருக்கிறது. காரணம் சினிமாவில் கிடைக்கும் பிரபலம்தான். ஒரு படத்தில் ஓஹோவென்று பேசப்பட்டுவிட்டால் போதும் மக்களிடம் அறிமுகம் கிடைத்துவிடும்.

அந்த அறிமுகத்தை வைத்து பிரபலமான கட்சியில் சேர்ந்து தனக்கென்று தனி இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் எல்லா சினிமா நட்சத்திரங்களினாலும் அரசியலில் வெற்றிபெற முடியாது. இப்படி சினிமா நட்சத்திரமாக மின்னி அரசியல் தலைவராகவோ, எம்.எல்.ஏ, எம்.பி., என குறிப்பிட்ட பதவியில் உயர்ந்தவர்களைப் பற்றி சற்று பார்போம்.

எம்.ஜி. ராமச்சந்திரன்

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற பெயரை விட எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துதான் மக்கள் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். சினிமா நட்சத்திரமாக இருந்து அண்ணாவின் தம்பியாகி கடைசியில் மக்கள் தலைவராக பொன்மனச் செம்மலாக உயர்ந்தவர். தொடர்ந்து 3 முறை தமிழக முதல்வராக இருந்தார்.

சிவாஜி

திமுகவில் இருந்து காங்கிரஸ் பின்னர் தனிக்கட்சி என பயணித்தாலும் நடிகர் திலகமாக பெற்ற பெயரை அரசியல்வாதியாக சிவாஜியால் வெற்றி பெற முடியவில்லை.

எஸ்.எஸ்.ஆர்

சேடபட்டி சூரியநாரயணத்தேவர் ராஜேந்திரன் சினிமாவில் லட்சிய நடிகர் என்று பெயரெடுத்தவர். நடிகராக இருந்து முதன் முறையாக 1962ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர்.

வி.என். ஜானகி

எம்.ஜி.ஆருடன் நடித்து அவரின் இல்லத்தரசியாக மாறினார். எம்.ஜி.ஆர் மறைவிக்குப் பின்னர் முதல்வர் நாற்காலியை அலங்கரித்தார்.

ஜெயலலிதா

நடிகையின் மகளாக பிறந்து நடிகையாகி பின்னர் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் ஐக்கியமாகி இன்றைக்கு அந்தக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த்

மதுரையில்அரிசி ஆலை நடத்துனரின் மகனாகப் பிறந்து, நடிகராக உயர்ந்து பின்னர் தனக்கென்று தனி கட்சி ஆரம்பித்து எம்.எல்.ஏவாக உயர்ந்தவர். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தினை பெற்றுள்ளார்.

ராமராஜன்

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அடுத்த முதல்வர் என்ற அளவிற்கு பேசப்பட்டவர். கடைசியில் அதிமுகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே அவரால் பெறமுடிந்தது. இப்போதைக்கு கட்சியின் பேச்சாளாராக மட்டுமே இருக்கிறார்.

சரத்குமார்

நாட்டாமை என்றாலே சரத்குமார் என்று கூறும் அளவிற்கு நடித்த அவர் திமுக, அதிமுக என்று மாறி மாறி பயணப்பட்டார். சில காலங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி பதவி வகித்தார். தனிக்கட்சி தொடங்கி இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

டி.ராஜேந்தர்

நடிகராக மட்டுமல்ல இயக்குநராக,இசையமைப்பாளராக பல திறமைகளைக் கொண்ட டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இப்போது லதிமுக தலைவராக இருக்கிறார்.

ரோஜா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஜா. இன்றைக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி இணைந்து பிரச்சார பீரங்கியாக செயல்பட்டு வருகின்றார்.

குஷ்பு

வடநாட்டில் பிறந்து நடிகையாகி இன்றைக்கு தமிழ்நாட்டின் மருமகளாகிவிட்ட குஷ்பு ஐக்கியமாகியுள்ளது திமுகவில். சினிமா பிரபலத்தினால் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூடிய விரைவில் மிகப்பெரிய பதவி ஒன்று வழங்கப்படும் என்று பேசப்படுகிறது.

அதே போல் சினமாவில் பிரபலமானதாலேயே கட்சி ஆரம்பித்து காணாமல் போனவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் பாக்கியராஜ், கார்த்திக் முக்கியமானவர்கள். இப்படி பட்டியலிட்டால் இன்னும் எத்தனையோ நட்சத்திரங்களை கூறலாம்.

எகிப்த் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி!!

egypt

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோவில் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின்போது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக போராட்டம் நடந்துவரும் ரபா அல் அதாவியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள தற்காலிக மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் 20 பேர் வரையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் 177 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தலைநகரின் வீதிகளில் மோர்ஸின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் நேற்றிரவு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த மாதத்தின் முற்பகுதியில் அதிபர் மோர்ஸியை பதவி கவிழ்த்த இராணுவத்துக்கு ஆதரவானவர்கள் தாஹ்ரிர் சதுக்கத்தில் கூடியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு இராணுவத்துக்கு ஆணை வழங்குவதற்காக மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு இராணுவத் தளபதி ஜெனலர் அப்தல் ஃபாட்டா அல் சிஸி கோரியிருந்தார்.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மோர்ஸி ஆதரவாளர்கள் ரபா அல் அதாவியா பள்ளிவாசலை அண்டிய பகுதிகளில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் பள்ளிவாசல் வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் சூளுரைத்திருந்தார்.

மக்கள் மீது வேண்டுமென்றே இராணுவத்தினர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் கூறுகின்றனர்.

-BBC தமிழ்-

எதிர்பாராத தடைகளைத் தகர்க்குமா தலைவா?

thalaivaa

விஜய் படங்களின் மிகப்பெரிய சந்தைகளில் கேரளாவும் ஒன்று. வேற்றுமொழி நடிகர்களில் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்று விஜய்யை அங்குள்ள மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. தலைவா அவரின் முந்தைய சாதனைகளை தாண்டிச் செல்லும் என்ற நம்பிக்கை அங்குள்ளது. ஆனால் ரம்லானுக்கு படம் வெளியாவது எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஓணத்தை அடுத்து மிகப்பெரிய பண்டிகை ரம்லான். ரம்லான் நோன்பு நேரத்தில் சிங்கம் 2 வெளியானது. கேரளா அதிகம் எதிர்பார்த்த தமிழ்ப் படங்களில் சிங்கம் 2 முக்கியமானது. காரணம் சிங்கம் அங்கு பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்தை விளம்பரம் செய்ய சூர்யா கொச்சின் வந்தார்.

முதல் பத்து தினங்களில் கேரளாவில் சிங்கம்2, 3.5 கோடிகள் வசூலித்தது. கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் கிடைத்த வசூல் இது. விநியோகஸ்தர்கள் எதிர்பார்த்த வசூலைவிட இது குறைவு. ரம்லான் நோன்பு காரணமாக மலபார் பகுதியில் படம் சரியாக ஓடவில்லை, அது வசூலில் பிரதிபலித்தது. கேரளா பொக்ஸ் ஒபிஸில் மலபாருக்கு முக்கிய இடம் உண்டு. மொத்த வசூலில் நாற்பது சதவீதம் அந்தப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது.

தலைவா ரம்லானுக்கு வெளியாகிறது. அதேநாள் மலையாளத்தில் நான்கு முக்கிய படங்கள் வெளியாகின்றன. மம்முட்டி நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் கடல் கடந்நு ஒரு மாத்துக்குட்டி,

பிருத்விராஜ் நடித்திருக்கும் ஜீது ஜோசப்பின் மெமரிஸ், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தஹிர் இயக்கியிருக்கும், நீலாகாசம் பச்சக்கடல் சுவந்நபூமி, குஞ்சாகாபோபனை வைத்து லால் ஜோஸ் இயக்கியிருக்கும், புள்ளிப்புலியும் ஆட்டின்குட்டியும். நான்குப் படங்களுமே முக்கியமானவை. அத்துடன் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸும் வெளியாகிறது.

கேரளாவில் 500 க்கும் குறைவான திரையரங்குகளே உள்ளன. அதில் 150 க்கும் மேற்பட்டவை இரண்டாம், மூன்றாம்கட்ட ரிலீஸை நம்பியிருப்பவை. புதிய படங்களை திரையிடுபவை 300 லிருந்து 350 க்குள் இருக்கும். இந்த குறைவான திரையரங்குகளில்தான் தலைவா உள்ளிட்ட ஆறு திரைப்படங்களும் முட்டி மோதியாக வேண்டும்.

இளம் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொடூரனுக்கு 1000 ஆண்டுகள் சிறை!!

jail

அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் வசித்துவந்தவன் ஏரியல் கஸ்ரோ என்ற 53 வயது நபர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டிற்குள் மிச்சேல் நைட் (20), அமெண்டா பெர்ரி (17), கினா டிஜெசஸ் (14) என்ற மூன்று பெண்களை கிளீவ்லாந்து வீதிகளில் கடத்திச் சென்று தனது வீட்டிற்குள் சிறை வைத்திருந்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவர்களை வெளியே விடாமல் அடைத்து வைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டிருந்துள்ளார். அந்தப் பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்தபோது, அவரை கருக்கலையும் வரை அடித்து உதைத்து பட்டினி போட்டுள்ளான்.

கடந்த மே மாதம், இந்தப் பெண்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தபோது தான் இந்தக் கயவனின் சுயரூபம் தெரிந்துள்ளது. அதன்பின்னர் காவல்துறை மற்றப் பெண்களையும், பெர்ரிக்குப் பிறந்த ஆறு வயது சிறுமியையும் விடுவித்தது.

சில மாதங்கள் கழித்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோக்காட்சி ஒன்றில் தோன்றிய அந்த மூன்று பெண்களும் தங்களுக்குத் தனிமை தேவைப்படுவதாகவும் காஸ்ட்ரோ மீதான வழக்கை விரைந்து முடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

காஸ்ட்ரோவைக் கைது செய்த பொலிஸார், அந்நபர் மீது 977 குற்றங்களைப் பதிவு செய்தது. நீதிமன்றத்துடன் அவன் மேற்கொண்ட மனு ஒப்பந்தத்தின்பேரில் அவனுக்கு பிணையில் வரமுடியாதவண்ணம் ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவனது சொத்துகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த ஒப்பந்தம், அவன் மீது மேற்கொண்டு எந்தக் குற்றங்களும் சுமத்தப்படாமலும், மரண தண்டனையிலிருந்தும் காக்கின்றது. பெண்கள் சிறை வைக்கப்பட்டிருந்த வீடு இடிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.

 

இங்கிலாந்தில் 200 அடி உயர மலையில் இருந்து உருளும் போட்டி.!!(படங்கள் )

வெளிநாட்டுக்காரர்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அந்த வகையில் இங்கிலாந்தில் மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டியை விளையாடுகிறார்கள்.

பரிசு என்பதையும் தாண்டி, திரில்லிங்காகவே பலர் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்களாம். ஆபத்துகள் நிறைந்த இப்போட்டியில், வரிசைக்கட்டி கலந்து கொள்கிறார்கள் இவர்கள். பொழுதுபோக்கு, வீரம் என்ற பெயரில் மலையில் இருந்து உருளுகிறார்கள்.

இங்கிலாந்தின் குளோவ் செஸ்டர் பகுதியில் உள்ள கூப்பர் ஹில் குன்று சுமார் 200 அடி உயரம் உடையது. எனவே இந்தக் குன்று தான் போட்டிக்கான சரியான களம் என தேர்ந்தெடுத்துள்ளனர் போட்டியாளர்கள்.

மிகவும் ஆபத்தான போட்டியான இது 1800ம் ஆண்டுகளில் இருந்து விளையாடப் பட்டு வருகிறது. காயம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், கடந்த 2010ம் ஆண்டு இந்தப் போட்டி தடை செய்யப் பட்டது.

அரசு தடை செய்த போதிலும் உருளும் போட்டியில் தீவிர ஆர்வம் கொண்ட மக்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தடையை மீறி திருட்டுத்தனமாக போட்டியை நடத்தி வருகிறார்களாம்.
சமீபத்தில் நடந்தப் போட்டியில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனராம். இருபது பேர் கொண்ட குழுக்களாக 5 முறை இப்போட்டி நடத்தப்பட்டது.

முதல் சுற்றில் 27 வயது அமெரிக்க வாலிபர் ஒருவரும் அடுத்தச் சுற்றில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரும் மூன்றாவது சுற்றில் ஜப்பானியர் ஒருவரும் வெற்றி பெற்றனர். பெண்களுக்காக தனியே இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் சுற்றில் 16 வயது இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றார்.

கடைசி பிரிவு போட்டியில் பலர் படுகாயம் அடைந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

1 2 3 4 5 6 8

இந்தோனேஷியாவில் இலங்கை அகதிகள் தப்பியோட்டம்!!

indo

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் காணாமல் போனதன் மர்மம் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் இணையத்தளம் பாவிப்பவரா நீங்கள் : எச்சரிக்கை!!

girl-at-computer

இணையப்பாவனையானது தற்போது அனேகமானவர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் இணையத்திலேயே தமது நேரம் முழுவதையும் செலவிடுவபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த உளவியலாளரான வைத்தியர் ரிம் ஷார்ப் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று இவ்வாறானவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

அதாவது நீண்ட நேரமாக இணையத்தளத்தை பாவிப்பவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்விற்காக 16 வயதிற்கும், 34 வயதிற்கும் இடைப்பட்ட 1029 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 வீதமானவர்கள் நாள் ஒன்றிற்கு 21 மணித்தியாலங்கள் இணையத்துடன் இருக்கின்றனர் என்றும் இந்த வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் சராசரியாக 18 மணித்தியாலங்கள் இணையத்துடன் இருக்கின்றனர் என்றும் குறித்த ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர மனஉளைச்சல், கவலை, கழுத்துவலி, தூக்க மயக்கம், தூக்கமின்மை போன்றவற்றிற்கும் உள்ளாவதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலை மறுத்த பெண் மீது அசிட் வீச்சு!!

acid

காதலிக்க மறுத்த திருமணமான பெண் மீது அசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான லக்கான் . அதே பகுதியில் வசித்து வரும் பெண் மீனா. மீனாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் லக்கான் அடிக்கடி மீனாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் மீனா அதற்கு சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து வீட்டுக்கு வந்த லக்கான், மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.

மீனா அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த லக்கான், கொலை செய்துவிடுவதாக மீனாவை மிரட்டிவிட்டு சென்றார்.
இந்நிலையில் வீட்டு வேலை செய்து வரும் மீனாவை வழிமறித்த லக்கான் கையில் வைத்திருந்த அசிட்டை மீனா மீது ஊற்றிவிட்டு தப்பியோடினார்.

அதைக் கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீனாவை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மீனா 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த பொலிசார், மீனாவிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தலைமறைவாகி உள்ள லக்கானை பொலிசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

இன்னொரு தடவை காதல் வேண்டாம் : நயன்தாரா!!

nayanthara

காதலில் விழுந்து எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து ரொம்ப களைத்துவிட்டாராம் நயன்தாரா. எனவே இன்னொரு முறை காதலில் விழும் அனுபவம் வேண்டாம் என்கிறார்.

சிம்பு, தனுஷ், பிரபுதேவா, இப்போது ஆர்யா என பலருடனும் கிசுகிசுக்கப்பட்டு பின்னர் வெளிப்படையாக காதல் பேசி கொஞ்ச நாளில் முறித்துக் கொண்டு வெளியில் வந்தவர் நயன்தாரா.

எத்தனை காதல் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் மீண்டும் தனக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் இப்போது நான் தனியாக இருக்கிறேன். எந்த சிக்கலும் இல்லை.

வாழ்க்கை தெளிவாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிறைவான பாத்திரங்கள், பிடித்த படங்களில் நடிக்கிறேன். இன்னொரு முறை என் வாழ்க்கையில் நான் காதலில் விழும் அனுபவத்தை நான் விரும்பவில்லை. அந்த வாழ்க்கை அலுப்பைத்தான் தந்தது. சுதந்திரமாக வாழ்கிறேன். அந்த சுதந்திரத்தை இழக்க மாட்டேன் என்றார்.