வவுனியாவில் விபத்து – இரு இராணுவத்தினர் பலி..!

ACCIDENT_logoநேற்றிரவு வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியோரமாக இருந்த மின்கம்பமொன்றுடன் மோதியமை  காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

சச்சினை அதிரடியாக நீக்கியது இந்திய விமானப்படை..!

Sachinஇந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக இருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் கௌரவப்பதவி சச்சின் டெண்டுல்கருக்கு 2011ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கரை கௌரவப்படுத்துவதன் மூலம் நிறைய இளைஞர்கள் இந்திய விமானப் படையில் சேர்ந்து பணியாற்ற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது எதிர்பார்த்த அளவில் பெரிய பலனை அளிக்காததால் சச்சின் டெண்டுல்கர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவருக்குப் பதிலாக பைலேட்டஸ் ஏர்கிராப்ட் அடிப்படை ட்ரெய்னர் ஒருவரையே விளம்பரத் தூதராக ஐ.ஏ.எஃப். தற்போது நியமித்துள்ளது.

ஒரு விஷயத்திற்கு தூண்டுகோலாக அமைவது என்ன சச்சின் டெண்டுல்கர் கையிலா இருக்கிறது? சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நிறைய இளைஞர்கள் கிரிக்கெட்டிற்கு வருவதுதான் வழக்கம், விமானப்படையில் அவரை கௌரவித்ததற்காக இளைஞர்கள் அதில் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற புளொட் அமைப்பின் வீர மக்கள் தின இறுதிநாள் நிகழ்வு!! (புகைப்படங்கள் இணைப்பு)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பால் வருடா வருடம், நினைவு கூறப்படும் வீர மக்கள் தினத்தை முன்னிட்டு 13.07.2013 அன்று வவுனியாவில் ஆரம்பமாகிய 24வது வீரமக்கள் தின நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவில்லத்தில் மரணித்த அனைத்து இயக்க தலைவர்கள், உறுப்பினர்கள், கழகத் தோழர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு வீரமக்கள் தின இறுதி நாள் நடைபெற்றது.

இதில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலாளர் மாவை சேனாதிராசா,  கூட்டமைப்பின் வவுனியா முன்னாள் நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ இயக்க முக்கியஸ்தர்களுமான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தன், புளொட் முக்கியஸ்தர்கள் ராகவன் (ஆர்ஆர்), சிவநேசன் (பவன்), ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்), பத்மநாதன் (பற்றிக்), புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எப்) உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் வவுனியா நகர பிதாவுமான ஜி.ரி.லிங்கநாதனின் (விசு), முன்னாள் வவுனியா உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா முன்னாள் நகரசபை உறுப்பினர் குமாரகுல சிங்கம் (குமார்) செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (சிவம்), சுதாகரன், பருத்தித்துறை முன்னாள் நகரசபைத் தலைவர் வின்சண்ட் கென்னடி, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், தோழர் டொமினிக் அன்ரன் தோழர் சங்கர் உட்பட புளொட் முக்கியஸ்தர்கள், கழகத் தோழர்களுடன்..

வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள்  கந்தசாமி ஐயா, வவு.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராஜா, நகரசபை உறுப்பினர் செல்லத்துரை, கோட்டக்கல்வி அதிகாரி நடராஜா மாஸ்ரர், முன்னாள் அதிபர் வையாபுரி, முன்னாள் அதிபர் சிவசோதி மாஸ்ரர், முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவானந்தம், முச்சக்கர வாகன சங்கத் தலைவர் ரவி உட்பட பல முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்ச்சியாக முதலில் மாலைதீவுப் புரட்சி நடவடிக்கையில் மரணித்த புளொட் தோழர் கோபியின் தாயார், புளொட் முக்கியஸ்தர் தோழர் ஜெஸ்மின் அவர்களின் துணைவியாரும், புளொட் மகளிர் அமைப்பை சேர்ந்தவருமான தோழர் ஜெயபாலினி ஜெஸ்மின், உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களினால் நினைவுச் சுடர் ஏற்றலுடன்  கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களினால் மலரஞ்சலி செலுத்தப் பட்டதுடன், வீர மக்கள் தின அஞ்சலி நிகழ்ச்சி ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திரு.மகேந்திரராஜா வரவேற்புரை நிகழ்த்தியதுடன், தோழர்.ஜி.ரி.லிங்கநாதனினால் (விசு) தலைமையுரை நிகழ்த்தப்பட்டு புளொட் தலைவர் சித்தார்த்தன், உட்பட புளொட் முக்கியஸ்தர்களினாலும், ஏனைய அமைப்பு பிரதிநிதிகளினாலும், ஊர்ப் பிரமுகர்களினாலும் உரை நிகழ்த்தப்பட்டு தோழர் பவனின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவேறியுள்ளது.

நேற்றைய வீரமக்கள் தின நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் “மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூறும் இத்தினத்தில் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு தினத்தை ஏற்படுத்தி, மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூருவதை விடுத்து, எல்லோரையும் நினைவுகூரும் ஓர் தினத்தை எல்லோருக்கும் பொதுவாக ஓர் தினத்தில் நடாத்த முன்வர வேண்டும்” என்றார்.

தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட்

d004
d005
d016
d015
d014
d013
d024
d020
d019
d018
d025
d026
d029
d031
d032
d033
d034
d036

வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!

Sri_Lanka_Vavuniya_Districtவவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட ஆசிரியர் மாணவன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைக்குமாறு கூறியபின்னர் அம்மாணவனுக்கு கன்னத்தில் கடுமையாக தாக்கியதுடன் கோபம் தீராத காரணத்தால் அம்மாணவனின் முதுகில் குனிய வைத்து பலமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் பாதிப்படைந்த நிலையில் வவுனியாவில் உள்ள தனியார் வைத்திசாலையில் உடனடியாக சிகிச்சைக்கு சென்ற சமயம் தனியார் வைத்தியாலையின் வைத்திய அதிகாரி உடனடியாக பொது வைத்தியசாலையை நாடுமாறு பணித்துள்ளார்.

எனவே மாணவன் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார்.

ஆந்திராவுக்குத் தாவும் சூர்யா!!

suryaபிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்து காசு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மட்டுமே பல்வேறு படங்கள் வேறு மொழிகளில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல தமிழில் வெற்றிபெற்ற படங்களை பிற மொழிகளிலும் ரீமேக் செய்வார்கள். குறிப்பாக, சூர்யா நடித்த படங்கள் தெலுங்கில் ரீமேக் அல்லது டப் செய்யப்பட்டு, ஆந்திராவில் வசூலை வாரிக் குவிக்கும்.

ஆந்திராவுக்கு ஏற்றபடி காரசாரமான படங்களில் சூர்யா நடிப்பதால், அங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனால், நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் சூர்யா.

இதைத் தெரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவின் மேனேஜருக்கு போன் செய்து கால்ஷீட் கேட்டு வருகின்றனர். தற்போது லிங்குசாமி படத்தில் நடிக்க இருக்கும் சூர்யா அதை முடித்துவிட்டு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

2D Entertainment என சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது பற்றி சூர்யா “சில சமயங்களில் நல்ல கதைகளைக் கேட்கும்போது கால்ஷீட் பிரச்னையால் அதில் நடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதற்காக அந்த கதைகளை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதால்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

ஹீரோக்களை ஏமாற்றிய ஹீரோக்கள்!

Simbu

எதுவா இருந்தாலும் பிரண்டுகிட்ட ஷேர் பண்ணிக்கலாம் – இதுதான் நட்பின் இலக்கணம். அப்படி நம்பி ஷேர் பண்ணிய சில ஹீரோக்கள் இப்போது விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் படம் “வாலு” இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் ஜெய்யை அணுகினாராம் விஜய் சந்தர். ஜெய்யிடம் முழுக்கதையையும் சொல்லி, படத்தில் நடிப்பதற்கு சம்மதமும் வாங்கிவிட்டாராம்.

அந்தக் கதையை ஜெய் தன்னுடைய நண்பனான சிம்புவிடம் எதார்த்தமாக சொல்லப்போக சிம்புவுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம். விளைவு ஜெய்யிடம் கூட சொல்லாமல் விஜய் சந்தரை மடக்கிய சிம்பு நான்தான் இந்தக் கதையில் நடிப்பேன் என ஒத்தக்காலில் நின்றாராம்.

வேறு வழியில்லாமல் விஜய் சந்தரும் ஓ.கே. சொல்லியிருக்கிறார்.ஏன்டா சிம்புவிடம் கதை சொன்னோம் என புலம்பித் தவிக்கிறார் ஜெய்.

அதேபோல “ராஜா ராணி”யில் ஹீரோ கேரக்டரை சிவகார்த்திகேயனை மனதில் வைத்துதான் உருவாக்கினாராம் அட்லீ. முதலில் நயன்தாராவை புக் செய்துவிட்டு பின்னர் சிவகார்த்திகேயனிடம் பேசலாம் என நினைத்து, நயன்தாராவிடம் கதை சொன்னார் அட்லீ.

நயன்தாராவுக்கு கதை பிடித்திருக்கிறது. ஆனால், ஹீரோவைத்தான் பிடிக்கவில்லை. இப்ப ஃபீல்டுக்கு வந்தவன் கூட நான் நடிக்கிறதா என்று நினைத்தவர் ஆர்யாவிடம் கதையைச் சொல்லி, இந்தக் கதையில நாம ரெண்டு பேரும் நடிச்சா தான் நல்லா இருக்கும் என்றிருக்கிறார்.

இதுபோதாதா ஆர்யாவுக்கு? அட்லீயைப் பிடித்து என்ன சொன்னாரோ தெரியவில்லை “ராஜா ராணி”யில் ஆர்யா ராஜாவாகிவிட்டார். இந்த விஷயத்தை லேட்டாகத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் நயன்தாரா கூட நடிக்கிற வாய்ப்பு போச்சே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இதுபோலவே பல ஏமாற்று வேலைகள் கோடம்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம்.

நான் ஒன்றும் சும்மா இல்லை குஷ்பு காட்டம்!!

Kushboo

தான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை என்றும், அதனால் தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து விரைவில் குஷ்பு கழற்றிவிடப்படுவார் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

திமுக தலைவர் பதவி விவகாரத்தில் அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் குஷ்புவை தொண்டர்கள் விரட்டி விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒரு செய்தி அது வதந்தி என்று தெரிந்தும் ஒருவர் அதை நான் மறுக்க வேண்டும் என்று கூறி எனக்கு போன் செய்தார்.

ஹலோ, யாரோ எதையோ கூறியது குறித்து என் நேரத்தை வீணடிக்க நான் ஒன்றும் வேலை இல்லாமல் இல்லை. இது ஜனநாயக நாடு. மக்கள் சிந்திக்க, உளற, தங்கள் விருப்பப்படி எழுத அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.

அது குறித்து விளக்கம் கேட்டு என்னிடம் வராதீர்கள். நான் ஒரு பிசியான பெண்மணி என்று தெரிவித்துள்ளார்.

மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!

Director Selvaraghavan Photos Pictures Stillsஇயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.

ஆர்யா நடித்துள்ள “இரண்டாம் உலகம்” பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு முன்பு “இரண்டாம் உலகம்” படப்பணிகளில் இருந்த போது நெஞ்சுவலிப்பதாகக் கூற, பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறி உள்ளனர். அதோடு வயிறு தொடர்பான தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருக்கின்றனர்.

இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள செல்வராகவன் மனைவி, “மிகப்பெரிய அபாயம் எதுவும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

மது, சிகரெட் இரண்டையும் தொடவே கூடாது என மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். “மதுவும், சிகரெட்டும் இல்லாமல் எப்படி அருமையாக இருக்கிறேன் என்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை” என டுவிட்டரில் தட்டியிருக்கிறார் செல்வராகவன்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள செல்வராகவன், மறுபடியும் “இரண்டாம் உலகம்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஓகஸ்ட்டில் ரிலீஸ் செய்யும் வகையில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

விக்ரம் நடிப்பு வியக்கும் ஷங்கர்!!

shankarதமிழ் திரையுலகில் தற்போது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் படம் “ஐ”. அந்நியன் படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் – விக்ரம் இப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் “ஐ” படத்தினைப் பற்றி தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தார் இயக்குனர் ஷங்கர்.

“ஐ” படத்தினைப் பற்றி தற்போது இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பது “ஐ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. விக்ரமின் உடலமைப்பு மாற்றங்கள், கதாப்பாத்திரத்துக்கான ஒப்பனை உள்ளிட்ட விஷயங்களுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால், அந்தக் காத்திருப்பின் முழு பலனும் இப்போது கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.

கடந்த மே மாதம் நியூஸிலாந்தின் வீட்டா (Weta) வொர்க்ஷாப்பையும், அதன் இணை நிறுவனர் ரிச்சட் டெய்லர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் சந்தித்தேன். சிற்பம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபட்டுவரும் ரிச்சட் டெய்லர் மற்றும் அவரது கலைஞர்களின் கலைத் திறமைகளைக் கண்டு வியந்தேன். ரிச்சர்ட் டெய்லர் வர்த்தக ரீதியிலான லாபத்தைவிட படைப்பாற்றலுக்கே முக்கியத்துவம் தருகிறார் என்பது தான் என்னை மிகவும் கவர்ந்தது.

அவர்களுடன் “ஐ” படத்துக்கான வேலைகள் நடைபெற்றது. வீட்டா அண்மையில் பங்குவகித்த படங்களின் விஷுவல்கள், மேக்கப், கலைப் பொருட்கள் முதலியவற்றைக் கண்டு வியப்புற்றேன். எந்திரனுக்காக அமெரிக்காவின் ஸ்டான் வட்ஸன் ஸ்டூடியோவுக்குச் சென்றபோதும் ஏற்பட்ட அதே அனுபவத்தை வீட்டாவும் தந்தனர்.

ஜூனில் பெங்களூரு, மைசூர் மற்றும் சென்னையில் மூன்று வாரங்களில் “ஐ” படப்பிடிப்பு நடந்தது. ஷான் ஃபுட் மற்றும் டேவினா லாமவுன்ட் ஆகியோர் விக்ரமுக்காக செய்த ஒப்பனைகள் கண்களுக்கு விருந்து படைத்தன. விக்ரம் மீண்டும் ஒரு முறை தன்னை மகத்தான நடிகர் என்று நிரூபித்துள்ளார். இப்போது, 75 சதவீத படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும்” என்று ஷங்கர் விவரித்துள்ளார்.

Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்

firefox22

முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனம் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய புதிய வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.

எனவே 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு மேலதிக நீட்சிகளோ அல்லது மூன்றாம் நபர் மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கம் செய்ய கீழே அழுத்துங்கள்..

Windows, Mac & Linux

லிங்குசாமி மீது சீமான் அளித்த புகாரால் சூர்யா கடுப்பு!!

surya1

இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது இயக்குனர் சீமான் இயக்குனர் சங்கத்தில் அளித்த புகார் காரணமாக நடிகர் சூர்யா கடும் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “துருவ நட்சத்திரம்” படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. “துருவ நட்சத்திரம்” பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா நிபந்தனை போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது.

அந்த சூழலில் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.
லிங்கு சொன்ன கதை பிடித்திருந்தால் “துருவ நட்சத்திரம்” படத்திற்கு தந்த கால்ஷீட் திகதிகளை லிங்குசாமி இயக்கப்போகும் படத்திற்கு கொடுத்தார் சூர்யா.

படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருந்த நிலையில்தான் சிக்கல் ஆரம்பமானது..

பிரபல தயாரிப்பாளர் தாணு தனது நிறுவனம் சார்பில் நடிகரும், இயக்குனருமான சீமானிடம் ஒரு கதை கேட்டு படம் தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்திற்கு “பகலவன்” என பேரும் வைத்திருந்தார்கள். ஜெயம்ரவி நாயகனாக நடிக்கயிருந்தார். கதை விவாதம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் திகதியும் முடிவானது.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதையும் “பகலவன்” கதையும் ஒரே கதைதான் என்பது சீமானுக்கு தெரியவந்தது.

கடுப்பான சீமான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் லிங்குசாமியின் மீது புகார் அளித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும் இருவரையும் சமாதானப்படுத்த செயலாளர் ஆர்.கே.செல்வமணியும் சில முக்கிய சங்க நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

புகார் விவரம் வெளியே தெரியாமல் தடுக்கவும் புகாரை மீளப் பெறவும் சீமானிடம் பிரபலங்கள் பலர் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “ஆனந்தம்” படமும், விக்ரமன் இயக்கத்தில் வெளியான “வானத்தைப்போல” படமும் ஒரே கதை என்றும், இதேபோல பிரச்சினை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

என் வாழ்க்கை நீயே.. மலேசிய கலைஞர்களின் முதல் படைப்பு..!

r3“என் வாழ்க்கை நீயே” எனும் புதிய காதல் படைப்பை சிவஷங்கர்  எனும் இளம் இசைக்கலைஞர் 12.07.2013 அன்று  வெளியிட்டுள்ளார்.

Rhythmic R3volutionZ சார்பாக சுதனேஷ் மற்றும் பவித்ரா பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இசையமைப்பாளர் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

வளர்ந்துவரும் இக்கலைஞர்களின் இப்பாடலானது மலேசியாவில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.

 

இசை: சிவஷங்கர்

பாடியோர்: சுதனேஷ் & பவித்ரா

வெளியீடு: Rhythmic R3volutionZ

இப்பாடலின் ஒளிவடிவம் உங்களுக்காக:

ஜார்க்கண்டில் 4 மாணவிகளை கடத்தி கற்பழித்த 20 வாலிபர்களுக்கு 24 மணிநேர கெடு!!

rape

இந்தியாவில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த 20 வாலிபர்கள் 4 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகடியா என்ற மலைவாழ் இனத்தினர் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.

அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு உதவியுடன் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று பகுர் மாவட்டத்தில் உள்ள லிடிபாரா கிராமத்தில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.

மலைவாழ் இன மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக பாடசாலைக்கு அருகிலேயே விடுதி ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் இன மாணவிகள் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு அந்த விடுதிக்குள் சுமார் 20 வாலிபர்கள் திடீரென நுழைந்தனர். விடுதி வார்டனையும், ஆசிரியர்களையும் தாக்கினார்கள். பிறகு அவர்களை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.

அதன் பிறகு 14 வயதுடைய 4 மாணவிகளை அந்த கும்பல் கடத்திச் சென்றது. அருகில் உள்ள காட்டுக்குள் சென்றதும் 20 வாலிபர்களும் அந்த மாணவிகளை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே 4 மாணவிகள் கடத்தப்பட்ட தகவல் பரவியதும் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அருகில் உள்ள காடுகளுக்குள் புகுந்து தேடினார்கள். கிராம மக்கள் திரண்டு வந்ததும் 20 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து 4 மாணவிகளையும் கிராம மக்கள் மீட்டு, மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது ஒரு மாணவி கூறுகையில், ‘‘எங்களை கடத்தியவர்கள் மது அருந்தி இருந்தனர். எங்களை பலாத்காரம் செய்த பிறகு கொல்ல முயன்றனர். நல்ல வேளையாக கிராமத்தினர் வந்ததால் தப்பித்தோம்’’ என்றார்.

இதுபற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் வந்து 4 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சோதனையில் 4 மாணவிகளும் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டமை உறுதியானது.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் அருகில் உள்ள கிராமத்து வாலிபர்கள் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாலிபர்களை பொலிசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் சரண் அடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி!!

SLMCஇலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.இதை அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்றும் அதையடுத்து இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கூட்டத்திலேயே தனித்து போட்டியிடுவது எனும் முடிவு எட்டப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமாக போட்டியிடுவது சாத்தியப்படாது என்று தமது உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே, கட்சி இம்முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் முற்றாக தீர்ந்தபாடில்லை எனும் சூழலில் ஆளும் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவது தங்களது நலன்களை பாதிக்கும் என்று உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அதை கட்சி கவனத்தில் எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் ஒரு அங்கமாக தமது கட்சி இருந்தாலும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த காரணத்தாலேயே தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் ஹஸன் அலி கூறுகிறார்.

எனினும் ஆளும் கூட்டணியிலுள்ள இதர முஸ்லிம் கட்சிகள் தனியாக ஒரு அணி அமைத்து அதன் அடிப்படையில் தேர்தலை சந்திக்க விரும்பினால் அது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாரகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு பிறகே யாரை ஆதரிப்பது என்கிற முடிவு எடுக்கப்படும் எனவும் ஹஸன் அலி தெரிவித்தார்.

-BBC தமிழ்-

தமிழ்நாட்டில் மீண்டும் சாதித் தீயில் சிக்கியுள்ள புது காதல் ஜோடி!!

caste

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியாக இளவரசன் தற்கொலை செய்துகொண்டதோடு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27).

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.

காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட பொலிஸ் அதிகாரி தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர்.

பின்னர் செந்தமிழ்ச்செல்வி செய்தியாளர்களிடம் “எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனக்கும், உடையார்பாளையம் தென்கச்சி பெருமாள்நத்தம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் விமல்ராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம்.

எங்களது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் வீட்டைவிட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்றுவிட்டேன். அவர் என்னை கடந்த மாதம் 25 ம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நானும் என் கணவர் விமல்ராஜும் திருப்பனந்தாள் வடக்குத் தெருவில் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் என்னை விமல்ராஜ் கடத்தி சென்று விட்டதாகக்கூறி என் தந்தை ஜெயங்கொண்டம் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டுதான் விமல்ராஜுடன் வந்து அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கும் என் சமூகத்தை சேர்ந்தவர்களும் கட்சி பிரமுகர்களும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

எங்களை பிரிக்க பார்க்கிறார்கள். எனவேதான் நாங்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறையினரிடம் மனு கொடுக்க வந்தோம். மேலும் பொய் புகார் அடிப்படையில் எனது மாமனார், மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை பொலிசாருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இந்த நிலையில் நானும், எனது கணவரும் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட திருப்பனந்தாள் பொலிஸ் நிலைய எல்லைக்குள் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கியும், நாங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டி இருப்பின் அதனை தாங்கள் உத்தரவுப்படி தங்கள் அதிகார வரம்பில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிட உத்திரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது..!

arrest1இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீசா காலாவதியான நிலையிலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் இலங்கை இளைஞர்களை வேலைக்கமர்த்தியிருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.